2 months 2 weeks ago
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வில் 04 எலும்புக்கூடுகள் அடையாளம்! யாழ் – அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 50 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இன்று 13வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் மேலும் 4 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 13வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இன்றைய தினமும் 4 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்தோடு இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்ததோடு இதுவரை முழூமையாக 50 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1438530
2 months 2 weeks ago
Published By: VISHNU 08 JUL, 2025 | 09:30 PM செம்மணி விடயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அச்சுறுத்தல், குறித்த மயானத்தின் நிர்வாகசபை உறுப்பினரான திரு.கிருபாகரன் தெரிவித்துள்ளார். 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மர்ம வாகனம் செம்மணியை நோட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அந்த செய்திகள் முற்றும் முழுதாக உண்மை. அந்த மர்ம வாகனமானது எனது வீட்டு அருகாமையிலும் வந்திருந்தது. வழக்காளியான என்னை அச்சுறுத்துவதே இதன் நோக்கமாகும். வழக்கு தொடர்பாக 1995 - 2000 வரையான காலப்பகுதியில் இங்கே கடுமையான செய்தி தணிக்கைகள் இருந்த நிலையில் நீதிமன்ற செயற்பாடுகளும் பொலிஸ் செயல்பாடுகளும் இல்லாது நிர்வாக ரீதியான செயல்பாடுகள் அனைத்தும் இராணுவத்தின் வசம் இருந்ததால் மக்கள் தாமாக முன்வந்து எந்த சாட்சியங்களையும் பதியவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் நான் இந்த விடயத்தை இன்று கையில் எடுத்ததால் அரியாலை பகுதியில் இருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்கள் தமது சாட்சியங்களை எனக்கு தந்து கொண்டிருக்கின்ற நிலையிலே இந்த சாட்சியங்களை அச்சுறுத்துகின்ற அல்லது இந்த சாட்சியங்கள் சாட்சி கூற வருவதை தடுப்பதாக இந்த செயல்பாடு காணப்படுகிறது. அதாவது 1998ஆம் ஆண்டு முதலாவது குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச வழங்கிய புதைகுழிகள் தொடர்பான அறிக்கையிலே, பதினைந்தாவது புதைக்குழியாக குறிப்பிடப்பட்ட ஏ-9 வீதி, பொன்னம்பலம் சந்திக்கு அருகாமையில் இருக்கின்ற இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கின்ற கிணற்றிலிருந்து அகழ்வு இடம் பெற்றது. அதற்குப் பின்னால் இப்போதும் இராணுவ முகாம் இருக்கின்றது. அந்த இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணிக்குள் தான் அந்த மர்ம வாகனம் சென்றது. இதனை நான் அவதானித்தேன். நான் வசிக்கின்ற வீட்டுக்கான வீதியானது எனது வீட்டுடனேயே முடிவடைகின்றது. ஆகையால் வேறொரு வாகனம் அந்த ஒழுங்கைக்கு வருவதற்கான அவசியம் இல்லை. இரண்டு வாகனங்கள் இவ்வாறு வந்திருந்தது. இதனை நேரில் கண்ட ஒருவர் எனக்கு தெரிவித்திருக்கின்றார். ஆகவே எவ்வாறான அச்சுறுத்தல்கள், எவ்வாறான செயற்பாடுகள் நடந்தாலும் இந்த வழக்கில் நான் உறுதியாக இருக்கின்றேன். மக்களும் உறுதியாக தமது சாட்சியங்களை தருகின்றார்கள். இதன்மூலம் பல உண்மைகள் வெளிவருகின்றன. அதனை நாங்கள் நீதிமன்ற செயற்பாட்டுக்கு சமர்ப்பித்து தொடர்ந்து தமிழ் மக்களுக்கான நீதிக்கான அனைத்து செயல்பாடுகளையும் முன்னெடுப்பேன் என்றார். https://www.virakesari.lk/article/219522
2 months 2 weeks ago
எலான் மாஸ்க் நம்பக்கூடிய ஒருவரா? நேரத்திற்கு நேரம் ஒவ்வொரு போக்கில் செல்கின்றார்.
2 months 2 weeks ago
சாதரண மக்களின் வாழ்க்கையை விட நடிகர் நடிகைகளின் வாழ்க்கை மிகவும் துன்பமானது . எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாமல் ஏமாந்து போவார்கள். சொத்து ஏமாற்றி பறிக்கப்படும் நடிகர்கள் குடி போதையில் தள்ளாடுவார்கள் வேறு கெடடவை எல்லாம் தொற்றிக் கொள்ளும். இறுதிக் காலம் மிக கஷ்ட்டப்பட்டு போவார்கள். எல்லாருக்கும் ஒரு சீசனுக்கு தான் வருமானம். புத்தியாக முதலிட தப்பிக்க கொள்ள லாம் காலத்தால் அழியாத இன்னிசைப்பாடலகளில். இதுவும் ஒன்று ! என்ன வரிகள், என்ன குரல் இனிமை. இப்படிப்பட்ட பாடல்களை கேட்டு விட்டு , இன்று எதையோ இழந்து நிற்பது போல் உணர்வு.
2 months 2 weeks ago
இதிலென்ன மர்மம் இருக்கிறது???
2 months 2 weeks ago
ஓபாமாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் டிரம்ப் ஐயாவுக்கு ஏன் கொடுக்கமுடியாது? ஓபாமா சமாதானத்திற்காக எதனை சாதித்தார்? இப்போது அவரது துணைவியாரே அவரை வறுத்து எடுக்கின்றார்.
2 months 2 weeks ago
அமெரிக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வார்கள். ரஷ்யாவில் பொதுவாக மாடியிலிருந்து தவறுதலாக யன்னலூடாக விழுந்து செத்துப் போவார்கள். இப்போது ரஷ்யர்களும் முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள்..................
2 months 2 weeks ago
"பனையின் கீழ் இருந்து பால் குடித்தது போல் " கண்ணதாசன் போன்றவர்கள் எந்தப் பெண்களையும் நல்ல மனத்துடன் பாராட்டினாலும் கூட அது சரியாக சமூகத்தில் எடுபடாது கவிஞரே ..........! 😂
2 months 2 weeks ago
பணமும் பதவியும் பத்தும் செய்யும் பாதாளம் வரையும் பாயும் . ........ ! 😁
2 months 2 weeks ago
உதென்ன செத்தகிளிக்குப் புதுசே!
2 months 2 weeks ago
சண்டித்தனம் பண்ணி….. சமாதானத்துக்கான நோபல் பரிசு எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா வந்து நிற்குது. 😂 🤣
2 months 2 weeks ago
உண்மையில் உங்கள் கருத்தில் உங்களுக்கே தெளிவின்மை தெரிகிறது. ஈழவிடுதலை போராட்டம் சார்ந்து சத்யராஜ் எப்பொழுதுமே தெளிவாக இருப்பவர். அவரது கடவுள் மறுப்பு கொள்கையால் திராவிடத்தை பிடித்து தொங்க வேண்டிவருவதால் அவர் திராவிட கட்சிகளை ஆதரிப்பது தெளிவு. அது எமக்கு தேவையில்லை என்பது என் நிலைப்பாடு. இவ்வாறு ஒவ்வொருவராக தீக்குளித்து நிரூபிக்க தொடங்கினால் நாம் கூட...?
2 months 2 weeks ago
கட்டாயம் குடுப்பினம். குடிக்காட்டில் அடுத்த மூண்டு வருசத்துக்கு நோபல் பரிசு கமிட்டி காலம் தள்ளேலாது 😁
2 months 2 weeks ago
எல்லாப் பக்கம் இருந்தும்… ஒரே நச்சரிப்பு வரும் போது, நோபல் பரிசு ட்ரம்புக்கு கிடைக்கும் போல்தான் இருக்கு. போதாக் குறைக்கு… ட்ரம்பும், தனக்கு நோபல் பரிசு வேண்டும் என்று வாய் விட்டு கேட்ட பிறகு… நோபல் பரிசு கமிட்டிக்கு வேறை வழி இல்லை என நினைக்கின்றேன். 😂
2 months 2 weeks ago
எலானின் பழைய சரித்திரங்களைக் கிண்டி ஏதாவது குற்றங்கள் கண்டு பிடித்தால் நாடு கடத்தலாம்.
2 months 2 weeks ago
தம்பி இப்போ சர்வதேச விசாரணைக் குழுவில் உள்ளார். ஆனபடியால் கருத்துக்களை தெரிவிக்க மாட்டார்.
2 months 2 weeks ago
விருப்பமில்லாத வரவுசெலவு திட்டம் நிறைவேறியது போல நோபல் பரிசும் விருப்பமில்லா விட்டாலும் கொடுக்க வேண்டி வரலாம்.
2 months 2 weeks ago
வீடு கட்டி கொடுப்போம். ஆனால் படித்து வேலை பார்க்க விட மாட்டோம்.
2 months 2 weeks ago
யார் இவர்?
2 months 2 weeks ago
புதைகுழி அகழ்வுகள் இந்த அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதே பெரிய விடயம். மக்களின் சக்தி இங்குதான் வெளிப்பட வேண்டும். சர்வதேச மேற்பார்வையுடன் முழுமையான விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என யாழ் பொதுமக்கள் அரசியல் மயப்படுத்தப் படாத மாபெரும் பேரணி ஒன்றைச் செய்ய வேண்டும்.
Checked
Sat, 09/27/2025 - 03:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed