புதிய பதிவுகள்2

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
ரணிலுக்கு வீட்டு உணவுகளை கொடுக்க அனுமதி - சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் 23 AUG, 2025 | 03:10 PM சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/223192

தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?

1 month ago
ஸ்டாலின் பலமற்ற தலைவர் என்று இலகுவாக அப்புறப்படுத்தி ஆளலாம் என்று விஜய் கணக்கு போடுகிறார். ஆனால் ஸ்டாலின் மிகவும் சுயநலமான நரி.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
அப்போ ரணில் தவறு செய்தார் என்பதை ஏற்றுக்கொள்கிறார் இவர். அப்போ மக்கள் சிறிய தவறு செய்தாலும் வாழ்நாள் எல்லாம் சிறையில் வைத்து கண்ணை பிடுங்கி அடித்து சித்திரவதை செய்யலாமென்கிறார் இப்போ ரணிலை வைத்து இவர்கள் கைது செய்யப்படலாம். அனுரா அரசியல் பழிவாங்கல் செய்கிறார் என்றால்; இவர்களும் பழிவாங்கியவர்கள் என்பதை ஒத்துக்கொள்கிறார். சரி.... அவர் அரசியல் பழிவாங்கல் செய்தால், அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யுங்கள் நீதிமன்றத்தில் நம்பிக்கை இருந்தால். இல்லையென்றால், இந்த நீதிமன்றத்தில் தானே போர்க்குற்ற விசாரணை செய்வோமென எப்படி அடம் பிடித்தீர்கள்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
அரசியல் வாதிகள் செய்யும் சிறிய குற்றங்களுக்காக அவர்களை சிறையில் அடைப்பது தவறு - மகிந்த சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட மகிந்த ராஜபக்ஷ சிறிய குற்றங்களுக்காக அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பது குறித்து வருத்தப்படுவதாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும், இதுபோன்ற செயல்கள் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை என்றும் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் இன்னும் தன்னை நேசிக்கிறார்கள் என்றும் கூறினார். "நாங்கள் மக்களை நேசிக்கிறோம். அதனால், மக்கள் நம்மை நேசிக்கிறார்கள்... என கூறினார். நம்ம யாழ்ப்பாணம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ரணில்! சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்திரைக்கப்பட்டுள்ளது. அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் வழங்கிய பரிந்துரைக்கு அமைய அவர் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1444376

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
ரணிலை சந்தித்த சஜித் ஊடகங்களுக்கு கருது தெரிவித்தார்! சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்திருந்த நிலையில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் முன்கூட்டியே கணித்திருக்கின்றமை நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளார். இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சட்டத்தை அமுல்படுத்தும் முறை சரியானது என்று நாட்டு மக்கள் நம்ப வேண்டும். சட்டத்தை அமுல்படுத்துவதும், அது குறித்து மக்கள் கொண்டுள்ள புரிதலும் மிகவும் முக்கியம். சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிடுவதால் குறித்த செயல்பாட்டில் ஒரு தீவிரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நாட்டின் சட்டத்தை அமுல்படுத்துவது வெளிப்படையானதாகவும், அரசியல் சாராததாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும், அது அதே முறையில் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், மூன்றாம் தரப்பினர் வெளியே வந்து இதுதான் நடக்கிறது என்று கூறுவது உண்மையில் சட்டவிரோதமானது. அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். நான் அவரைச் சந்தித்தேன். அவர் நலமாக இருக்கிறார். மேலும், அவரது உடல்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். மருந்துகள் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444350

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
ரணிலை சந்திக்க வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ! சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவு சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்றையதினம் (22) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் சிறைச்சாலைக்கு சென்று அவரை சந்தித்து வருகின்றனர். https://athavannews.com/2025/1444344

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
ஊழலை ஒழிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ரணிலைவிடப் பெரும் ஊழல்வாதிகள் சுனாமி நிதியிலிருந்து போர்விமானக் கொள்வனவு என்று இதனைச் சுட்டிய ஊடகவியலாளர் ல.விக்ரமதுங்க போன்றவர்களையே கொலைசெய்தவர்களெனப் பலர் வெளியே. தையிட்டி முதல் மட்டக்களப்பு மேய்சல்தரை வரையான பல்கிப்பெருகியதும் அவசரமாகத் தீர்வுகாண வேண்டிய விடயங்கள் குறித்து அனுர அரசுக்கு அக்கறையில்லை. ரணிலின் கைதுசெய்து அதனை ஒரு பேசுபொருளாக்கி உலகிடம் தானொரு உழலற்ற அரசை நடாத்துவதாகப் படம் காட்டும் அடையாள நடவடிக்கைகள். அனுர அரசிடம் நேர்மையிருந்தால் செம்மணியை அனைத்துலக நிபுணர்களை அழைத்து விசாரணை செய்துகாட்ட முடியுமா? எனவே, சிங்கள அரசியல்வதிகள் தமக்கிடையே குத்துப்பட்டாலும் இனமென்று வந்தால் ஒன்றாகி நிற்பவர்கள். தமிழினத்தை அழிப்பதில் மாற்றுக்கருத்தற்றோர். இந்தக் கைதால் தமிழருக்கு எந்த நன்மையாவது உண்டா? இனப்படுகொலையின் பங்காளிகள் ஒருவன் ஊழலுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளான். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
ஜே. ஆர். ஜெயவர்தனவின் மருமகனும், கை சுத்தமானவர் என்று போலி பிம்பத்துடன் வலம் வந்த ரணிலை கையில் விலங்கிட்டு கைது செய்ததன் மூலம்... முன்னாள் அதி உத்தம ஜனாதிபதியை சிறைக் கட்டிலில் படுக்க வைத்ததை அனுரா அரசு தனது சாதனையாக கருதலாம். இந்தச் சம்பவம் இலங்கை வரலாற்றில் என்றும் நினைவில் கொள்ளக் கூடிய சம்பவமாகவே இருக்கும். ரணிலின் வாழ்க்கையில் பல வெற்றிகள், பதவிகள் போன்றவவை அவர் எதிர்பார்க்காத அளவிற்கு ஆச்சரியமூட்டும் வகையிலேயே அமைந்து இருந்தது. அதே போல் இந்தக் கைதும்.. அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அனுரா... இந்தக் கைதின் மூலம் நடைபெற இருக்கும் மாகாண சபைத் தேர்தல் வெற்றிக்கு (வாக்கு) மூலதனம் இட்டுள்ளார் என்றே நான் நினைக்கின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
ஆம்.... மகிந்த, கோத்தா எல்லாம் பேட்டை ரவுடிகள். அவர்களில் கை வைப்பது.... சொந்த செலவில் சூனியம் வைப்பதற்கு சமன் என்று அனுரா தரப்பு ஏற்கெனவே கணக்குப் போட்டு வைத்திருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆக மிஞ்சினால் ... மைத்திரியையும் ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பந்தமாக உள்ளே தூக்கி வைத்து.... அந்தப் பயத்தில் மகிந்த, கோத்தாவை நுனிக் கதிரையில் உட்கார வைக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள ரணிலை சந்திக்க சஜித் வருகை! சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார். இதேவேளை, இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் மெகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்தனமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நேற்று (22) இரவு முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சிறைச்சாலையை அடைந்த போதிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது. அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsசிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள ரணிலை சந்திக்க சஜித் வருகை!சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார். இதேவேளை, இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜ
Checked
Tue, 09/30/2025 - 03:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed