புதிய பதிவுகள்2

"நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் செம்மணியில் ஆரம்பம்!

1 month ago
23 AUG, 2025 | 02:16 PM (எம்.நியூட்டன்) ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் சனிக்கிழமை (23) யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி "நீதியின் ஓலம்" எனும், கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டம் காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது. மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமான குறித்த நிகழ்வில் நிகழ்வின் வடக்கின் ஏற்பாடுக்குழு இணைபாளர் ஜெயசித்திரா போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கையெழுத்து பெறும் நிகழ்வு ஆரமிக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படும். இந்த கையொப்பப் போராட்டத்தி ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223185

சிறுவர் பாதுகாப்பு வாரம் - சிறுவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வு நடைபவனி

1 month ago
நுவரெலியாவில் குழந்தை துஷ்பிரயோகம், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி 23 AUG, 2025 | 01:25 PM நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பாடசாலை குழந்தைகளும் பெற்றோர்களும் இணைந்து சனிக்கிழமை (23) நுவரெலியா நகரில் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நுவரெலியா நகர வீதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. குழந்தை துஷ்பிரயோகத்தை முற்றிலுமாக ஒழிக்கவும், குழந்தை துஷ்பிரயோகத்தை எதிர்க்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் விளம்பரப் பலகைகள், பதாகைகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தி பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த பேரணியை சுற்றுச்சூழல் மற்றும் எல்லா இடங்களிலும் வாழும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளின் பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223179

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

1 month ago
நிகழ்படங்கள் சிங்களவர் மற்றும் முஸ்லிம்களின் வாக்குமூலங்கள் இலங்கை சோனகர்கள் எவ்வாறு தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் சிங்களவருக்கு ஆதரவாக புலனாய்வு சேவை உட்பட்ட பணிகள் செய்தனர் என்று சிறிலங்காக் கடற்படையின் கலக்கூட்டக் சேர்ப்பர் (Admiral of the Fleet) வசந்த குமார் ஜயதேவ கரண்ணகொட விளக்குகிறார் நெறியற்ற முறையில் தமிழருக்கு எதிராக நீதியரசரை மாற்றிய ஹிஸ்புல்லா: https://eelam.tv/watch/_wZrFz5e44nxn1BY.html

சுவர் முகம் - ஷோபாசக்தி

1 month ago
நான் கடைசி மூன்று பந்துகளையும் மேலும் இருமுறை படித்தேன், விளங்கிக் கொண்டதை சரி பார்ப்பதற்காக . .......! 😀 கதை நிஜமோ அன்றி நிஜம் போலுமோ ஆனால் நன்றாக இருக்கின்றது . ......!

கர்நாடகா: பெண்கள் உட்பட 100 உடல்களை புதைத்ததாக கூறும் நபர் - எழும் கேள்விகள் என்ன?

1 month ago
தர்மஸ்தலா: 100க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை, கொலை என புகார் அளித்தவர் கைது - காரணம் என்ன? பட மூலாதாரம், ANUSH KOTTARY/BBC படக்குறிப்பு, வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, புகார்தாரரை அவர் உடலை அடக்கம் செய்ததாகக் கூறும் 17 இடங்களுக்கு அழைத்துச் சென்றது. கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி இந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கர்நாடகாவில் தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, கோவில் நகரமான தர்மஸ்தலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்களை சட்டவிரோதமாக அடக்கம் செய்ததாகக் கூறிய முன்னாள் துப்புரவுத் தொழிலாளியை கைது செய்துள்ளது. பொய் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நபர் கைது செய்யப்பட்டதாக சிறப்பு விசாரணைக் குழு வட்டாரங்கள் பிபிசி இந்தியிடம் தெரிவித்தன. மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபர், அங்கிருந்து பத்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த முன்னாள் துப்புரவுப் பணியாளர் காவல்துறை முன் புகார்தாரராகவும் சாட்சியாகவும் ஆஜரானார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 183 இன் கீழ் சாட்சியம் அளித்த பிறகு, சாட்சி பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தனது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த, இந்த முன்னாள் துப்புரவு பணியாளர் ஒரு மண்டை ஓடு மற்றும் எலும்புகளின் எச்சங்களை நீதிபதி முன் சமர்ப்பித்தார். இதன் மூலம், துப்புரவு பணியாளர் தனது கூற்றுகளை உண்மை என்று நிரூபிக்க முயன்றார். காவல்துறையில் அளித்த புகாரை நியாயப்படுத்த, 1995 முதல் 2014 வரை இறந்த உடல்களை அடக்கம் செய்த இடத்திற்கு தான் சென்றதாக அந்த நபர் கூறியிருந்தார். மேலும் தனது மனசாட்சியைத் திருப்திப்படுத்த இதைச் செய்ததாகவும் அவர் கூறினார். பொய் சாட்சியம் அளிப்பதற்கு என்ன தண்டனை? பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, புகார்தாரர் தலை முதல் கால் வரை கருப்பு நிற உடையணிந்து சாட்சியமளிக்க நீதிபதி முன் ஆஜரானார். கடந்த சில நாட்களாக நடந்த தீவிர விசாரணைக்குப் பிறகு, சிறப்பு விசாரணைக் குழு அந்த நபரைக் கைது செய்துள்ளது. "அவர் கொண்டு வந்த மண்டை ஓடு மற்றும் எலும்பின் எச்சங்கள், அவர் உடல்களை புதைத்ததாகக் கூறிய இடங்களிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல"என்று ஒரு அதிகாரி கூறினார். அந்த நபர் பெண்ணுடையது எனக் கூறிய மண்டை ஓடு, உண்மையில் ஒரு ஆணுடையது. துப்புரவுப் பணியாளர்கள் ஆதாரமாக கொண்டு வந்த அந்த மண்டை ஓட்டின் தடயவியல் பரிசோதனையில், அது ஆணுடையது என்பது உறுதியாகியுள்ளது என மற்றொரு அதிகாரி குறிப்பிட்டார். "நீதித்துறை நடவடிக்கையில் தெரிந்தே பொய்யான சாட்சியத்தை அளிப்பவர் அல்லது விசாரணையின் போது பயன்படுத்தக்கூடிய வகையில் பொய்யான சாட்சியங்களைத் தயாரிப்பவர், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் பெறலாம்" என இந்திய நீதிச் சட்டத்தின் பிரிவு 229 இன் கீழ் உள்ள விதி கூறுகிறது. "துணைப்பிரிவு (1) இல் குறிப்பிடப்பட்ட வழக்குகளைத் தவிர, வேறு எந்த வழக்கிலும் யாராவது தெரிந்தே பொய்யான சாட்சியத்தை அளித்தாலோ அல்லது உருவாக்கினாலோ, அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்" இந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஜூலை 3ஆம் தேதி தர்மஸ்தாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது தலை முதல் கால் வரை மூடப்பட்ட வகையில் அவர் உடை அணிந்திருந்தார். பின்னர், அவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 183 இன் கீழ் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். புகார்தாரராகவும், சாட்சியாகவும் இருந்த அவரை , அவர் உடல்களை புதைத்ததாகக் கூறிய 17 இடங்களுக்கு எஸ்ஐடி (SIT) குழு அழைத்துச் சென்றது. அந்த இடங்களில் ஆறாவது மற்றும் பதினொன்றாவது இடங்களுக்கு அருகில் 'சில எலும்புக்கூடு எச்சங்கள்' கண்டுபிடிக்கப்பட்டன. 13வது இடத்தில் நிலத்துக்கு அடியில் ஆய்வு செய்ய நிலத்தில் ஊடுருவும் ரேடார் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை. பாஜக என்ன சொல்கிறது? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி கோவில் கடந்த வாரத்தில், எதிர்க்கட்சியான பாஜக பெங்களூருவிலிருந்து தர்மஸ்தலா வரை பேரணி நடத்தி, "இந்து மதத் தலத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரம்" எனக் கூறி தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, பிற தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து, ஸ்ரீ க்ஷேத்ர மஞ்சுநாதசுவாமி கோவிலின் அதிகாரியையும், ராஜ்யசபா எம்பி வீரேந்திர ஹெக்டேயையும் சந்தித்து, தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். பிபிசியிடமும் ஒரு செய்தி நிறுவனத்திடமும் பேசிய வீரேந்திர ஹெக்டே, புகார்தாரரும் சாட்சியுமான அந்த நபரின் குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாதவை என்றும், மக்களின் நலனுக்காக பல துறைகளில் சிறப்பான சேவையை வழங்கிய அமைப்பின் நற்பெயரை களங்கப்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்றும் கூறினார். அரசாங்கம், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது என இந்த வாரம் சட்டமன்றத்தில் பேசியபோது தெரிவித்த மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, "விசாரணைக்குப் பிறகு, புகார்தாரரும் சாட்சியுமான அந்த நபர் குறிப்பிட்ட இடங்களில் எப்போது தோண்டத் தொடங்குவது என்பதை சிறப்பு புலனாய்வு குழு தான் முடிவு செய்யும்" என்றும் கூறினார். ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஜி. பரமேஸ்வரா, சிறப்பு விசாரணை குழுவின் பணி விசாரணை முடியும் வரை தொடரும் என்றார். மேலும், "இது ஒரு சதித்திட்டமாக இருந்தாலும், விசாரணை முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார். வழக்கின் பின்னணி பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கர்நாடகாவின் தர்மஸ்தலத்தில் சட்டவிரோதமாக உடல்கள் புதைக்கப்படுவதாகக் கூறி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஜூலை 3-ஆம் தேதி, அடையாளம் தெரியாத ஒருவர், 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலா என்ற புனிதத் தலத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்தபோது, ஒரு செல்வாக்கு மிக்க குடும்பம் மற்றும் அவர்களது ஊழியர்களின் உத்தரவின்படி நூற்றுக்கணக்கான உடல்களை புதைத்ததாகக் கூறினார். பல பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவர்களது உடல்களைப் புதைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். அப்போது, தனது மேலதிகாரிகள் கொலை மிரட்டல் விடுத்ததால் தான் இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்ததாக புகார் அளித்தவர் கூறினார். ஜூலை 19-ஆம் தேதி, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது. புகார்தாரரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட 13 இடங்களில் தோண்டும் பணியை அந்த குழு மேற்கொண்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg3z032jx4o

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
ரணிலை கைதுசெய்து பிணை வழங்குவதை எதிர்த்தமையானது முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது : எம்.ஏ.சுமந்திரன் 23 AUG, 2025 | 04:34 PM பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஆனால் நீதிமன்றில் முன்வைத்த குற்றத்துக்காக ரணில் விக்ரமசிங்கவை ஒரு வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்தமை என்பது, முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது என்றும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்திலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/223206

சிரிக்கலாம் வாங்க

1 month ago
இதுதான் சார் நேற்று எனக்கும் நடந்தது . .......... ! இருவர்ணத்தில் இனிய பாடல்கள் பகுதியில் " பொன்னை விரும்பும் பூமியிலே " பதிந்திருந்தேன் அது "பொண்ணை " என்று ஆட்டொ ஸ்பெல்லிங்கில வந்துட்டுது . ........ நான் கவனிக்கவில்லை ......... அதை சகோதரி நிலாமதி கண்டுபிடிச்சு பொன் என்றால் தங்கம் , பொண் என்றால் பெண் என்று விளக்கம் குடுக்க பிரியன் ஓடிவந்து லைக் குடுக்க ஒரே பேஜாராய் போயிட்டுது சிறியர் . .......! 😂 சும்மா பகிடிக்கு , நீங்கள் தப்பா எடுத்துக்க வேண்டாம் ........! 😀

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை வைத்தியர்கள் தீர்மானித்தனர். இதனையடுத்து, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியுடன் ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு தற்போது மாற்றப்பட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Kalmunaiwin

சிறுவர் பாதுகாப்பு வாரம் - சிறுவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வு நடைபவனி

1 month ago
சிறுவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி முல்லைத்தீவில் விழிப்புணர்வு நடைபவனி 23 AUG, 2025 | 11:18 AM முல்லைத்தீவு முத்தையன்கட்டு - ஜீவநகர் கிராமத்தில் பொது நோக்கு மண்டபத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை (22) சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு "நாம் சிறுவர் எம்மை காப்பீர்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணியினை முத்தையன்கட்டுகுளம் கிராம சேவையாளர் பவிதா ஆரம்பித்து வைத்திருந்தார். முத்தையன்கட்டு ஜீவநகர் பொதுநோக்கு மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பித்த குறித்த பேரணியானது நடைபவனியாக சென்று ஜீவநகர் சமாதான சுவிஷேச தேவாலயத்தில் நிறைவு பெற்றிருந்தது. ஜெபஆலயமிஷன் திருச்சபையின் கீழ் இயங்கும் பெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றிருந்தது. சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை கொடு, சிறுவர்களை பாதுகாப்போம் , சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மன்னிப்பு இல்லை, குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக நாம் நமது நிகழ்காலத்தை தியாகம் செய்வோம், அமர்த்தாதே அமர்த்தாதே சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, சிறுவர்களுக்கான சிறுவர் நேயமுள்ளதும் பாதுகாப்பு மிக்கதுமான சூழலொன்றை கட்டியெழுப்புவோம், வன்முறைகளில் இருந்து சிறுவர்களை நாம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு பதாதைகள் தாங்கிய விழிப்புணர்வு பதாதைகளுடன் நடைபவனி இடம்பெற்றிருந்தது. குறித்த பேரணியில் முத்தையன்கட்டுகுளம் கிராம சேவையாளர் பவிதா, வெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் இயக்குனர் காலேப் மற்றும் உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/223160

ஒரு விநாடிக்கு 3.2 கி.மீ. பாயும்: அமெரிக்காவையே அச்சுறுத்தும் ரஷ்ய ஏவுகணை - சீனா என்ன செய்கிறது?

1 month ago
பட மூலாதாரம், EPA-EFE/KCNA கட்டுரை தகவல் ஃப்ராங்க் கார்ட்னர் பாதுகாப்பு செய்தியாளர் 23 ஆகஸ்ட் 2025, 02:50 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பெய்ஜிங்கில் அணிவகுப்பு மைதானத்தில் இலையுதிர்கால வெயிலில் பளபளக்க, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ ஏவுகணைகள் ராட்சத லாரிகளின் வரிசையில் மக்கள் கூட்டத்தைக் கடந்து மெதுவாக நகர்ந்தன. 11 மீட்டர் நீளமும் 15 டன் எடையும் கொண்ட ஊசி-கூர்மையான உருவம் ஒவ்வொன்றிலும் "டி.எஃப்-17" (DF-17) என்ற எழுத்துகளும் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன. சீனா அப்போதுதான் தனது டாங்ஃபெங் ஹைபர்சோனிக் ஏவுகணை இருப்பை உலகிற்கு அறிவித்தது. அது அக்டோபர் 1, 2019 அன்று தேசிய தின அணிவகுப்பில் நடந்தது. இந்த ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை அமெரிக்கா ஏற்கனவே அறிந்திருந்தது, ஆனால் அதன் பின்னர் சீனா அவற்றை மேம்படுத்துவதில் முன்னேறியுள்ளது. அவை வேகமாக செல்லக்கூடியவை, அவற்றை இலகுவாக இயக்கலாம் - ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும் அவை, வலிமையான ஆயுதங்கள் என்பதால் போர்கள் நடத்தப்படும் முறையை மாற்றக்கூடும். அதனால்தான் அவற்றை உருவாக்குவதில் உலகளாவிய போட்டி சூடுபிடித்து வருகிறது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, 2019-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் DF-17 ஹைபர்சோனிக் ஏவுகணையை சீனா அறிமுகப்படுத்தியது. "இது அரசுகளுக்கு இடையில் நாம் காணும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியின் ஒரு கூறு மட்டுமே" என்று புவிசார் மூலோபாய சிந்தனைக் குழுவின் தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் வில்லியம் ஃப்ரீர் கூறுகிறார். "[இது] பனிப்போருக்குப் பிறகு நம்மிடம் இல்லாத ஒன்று." ரஷ்யா, சீனா, அமெரிக்கா இடையே ஒரு உலகளாவிய போட்டி ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தில் சீனாவின் முன்னேற்றங்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்த ஊகங்களை பெய்ஜிங் அணிவகுப்பு எழுப்பியது. இன்று ஹைபர்சோனிக் ஏவுகணைகளில் சீனா முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து ரஷ்யா உள்ளது. அமெரிக்காவும் முன்னேறி வருகிறது, பிரிட்டனிடம் எதுவும் இல்லை. பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிறரிடமிருந்து அதன் நிதியுதவியில் சிலவற்றைப் பெற்ற புவிசார் மூலோபாய சிந்தனைக் குழுவைச் சேர்ந்த ஃப்ரீர், சீனாவும் ரஷ்யாவும் முன்னணியில் இருப்பதற்கான காரணம் மிக எளிமையானது என்கிறார். "சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டங்களில் நிறைய பணத்தை முதலீடு செய்ய அவர்கள் முடிவு செய்தனர்." இதற்கிடையில், இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில், பல மேற்கத்திய நாடுகள் உள்நாட்டில் ஜிஹாதிகளால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாதம் மற்றும் வெளிநாடுகளில் கிளர்ச்சி எதிர்ப்பு போர்கள் இரண்டையும் எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தின. அப்போது, ஒரு நவீன, அதிநவீன எதிரிக்கு எதிராக போராட வேண்டிய வாய்ப்பு தொலைதூர ஒன்றாகத் தோன்றியது. பட மூலாதாரம், SHUTTERSTOCK "அதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால், சீனா ஒரு ராணுவ சக்தியாக உருவெடுத்ததை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்" என்று 2020 -ல் பிரிட்டனின் ரகசிய புலனாய்வு சேவையின் தலைவராக ஓய்வு பெற்ற உடனேயே சர் அலெக்ஸ் யங்கர் ஒப்புக்கொண்டார். மற்ற நாடுகளும் முன்னேறி வருகின்றன. இஸ்ரேலிடம் ஆரோ 3 (Arrow 3) என்ற ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளது, இது ஒரு இடைமறிப்பு கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தன்னிடம் ஹைபர்சோனிக் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறிய இரான், ஜூன் மாதம் இஸ்ரேல் மீது 12 நாள் போரின் போது ஹைபர்சோனிக் ஏவுகணையை ஏவியதாகக் கூறியது. (அந்த ஆயுதம் உண்மையில் மிக அதிக வேகத்தில் பயணித்தது, ஆனால் இது ஒரு உண்மையான ஹைபர்சோனிக் ஏவுகணை என்று கூறும் அளவு பறக்கும் போது இலகுவாக இயங்கியதாக கருதப்படவில்லை). இதற்கிடையில், வட கொரியா 2021 முதல் தனது சொந்த ஏவுகணைகளை உருவாக்குவதில் பணியாற்றி வருகிறது. தன்னிடம் ஒரு சாத்தியமான ஆயுதம் இருப்பதாக அந்த நாடு கூறுகிறது. பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளைப் போலவே அமெரிக்காவும் பிரிட்டனும் இப்போது ஹைபர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கின்றன. பட மூலாதாரம், MORTEZA NIKOUBAZL/NURPHOTO VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஜூன மாதம் நடைபெற்ற 12 நாள் போரில் ஹைபர்சோனிக் ஏவுகணையை இஸ்ரேல் மீது ஏவியதாக இரான் கூறியது. அமெரிக்கா தனது தடுப்பு சக்தியை வலுப்படுத்தி வருவதாக தெரிகிறது, அமெரிக்கா "டார்க் ஈகிள்" ஹைபர்சோனிக் ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, டார்க் ஈகிள் "ராணுவம் மற்றும் நாட்டின் சக்தியையும் உறுதியையும் நினைவுப்படுத்துகிறது. ஏனெனில் இது ராணுவம் மற்றும் கடற்படையின் ஹைபர்சோனிக் ஆயுத முயற்சிகளின் வீரியத்தை பிரதிபலிக்கிறது". ஆனால் சீனாவும் ரஷ்யாவும் தற்போது வெகு தொலைவில் முன்னேறியுள்ளன - இது ஒரு கவலைக்குரிய விஷயமே என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். அதிவேகம் மற்றும் கணிக்க முடியாத போக்கு ஹைபர்சோனிக் என்றால் மேக் 5 (Mach 5) அல்லது அதற்கும் அதிகமான வேகமான வேகத்தில் பயணிக்கும் ஒன்று. (அதாவது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அல்லது மணிக்கு 3,858 மைல் பயணிக்கக் கூடியது.) இதனால் தான் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை விட வேறுபட்டதாக உள்ளது. சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட சற்றே அதிகமாக (மணிக்கு 767 மைல்) மட்டுமே பயணிக்கும். ஹைபர்சோனிக் ஏவுகணைகள் அத்தகைய அச்சுறுத்தலாகக் கருதப்படுவதற்கான காரணங்களில் ஒன்று அவற்றின் வேகம். இன்றுவரை மிக வேகமானது ரஷ்யாவின் - அவன்கார்ட் - மேக் 27 (தோராயமாக 20,700 மைல்) வேகத்தை எட்ட முடியும் என்று கூறப்படுகிறது - இருப்பினும் மேக் 12 (9,200 மைல்) என்ற வேகமே பெரும்பாலான இடங்களில் குறிப்பிடப்படுகிறது. இது வினாடிக்கு இரண்டு மைல்களுக்கு (அதாவது விநாடிக்கு 3.2 கி.மீ.) சமம். இருப்பினும், முற்றிலும் அழிக்கும் சக்தியைப் பொறுத்தவரை, ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சூப்பர்சோனிக் அல்லது சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டவை அல்ல என்று ஃப்ரீர் கூறுகிறார். "அவற்றைக் கண்டறிவது, கண்காணிப்பது மற்றும் இடைமறிப்பதில் உள்ள சிரமம்தான் உண்மையில் இந்த ஏவுகணைகளை மற்றவைகளிலிருந்து வேறுபடுத்துகிறது." பட மூலாதாரம், REUTERS அடிப்படையில் இரண்டு வகையான ஹைபர்சோனிக் ஏவுகணைகள் உள்ளன: பூஸ்ட்-கிளைட் ஏவுகணைகள் (சீனாவில் உள்ள டி.எஃப் -17 போன்றவை) பூமியின் வளிமண்டலத்தை நோக்கியும் சில நேரங்களில் மேலேயும் உந்தி செல்ல ஒரு ராக்கெட்டை நம்பியுள்ளன. அங்கிருந்து அவை இந்த நம்பமுடியாத வேகத்தில் கீழே வருகின்றன. மிகவும் கணிக்கக்கூடிய வளைவில் (பரவளைய வளைவு) பயணிக்கும் மிகவும் பொதுவான பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் போலல்லாமல், ஹைபர்சோனிக் கிளைட் வாகனங்கள் ஒழுங்கற்ற வழியில் நகர முடியும், பறக்கும் போதும் தங்கள் இலக்கை அவற்றை இயக்க முடியும். பின்னர் ஹைபர்சோனிக் க்ரூயிஸ் ஏவுகணைகள் உள்ளன, அவை உயரம் குறைவாக, எதிரிகளால் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ரேடார் வீச்சுக்கு வெளியே இருக்க முயற்சிக்கின்றன. ராக்கெட் பூஸ்டரைப் பயன்படுத்தி அவை இதேபோல் ஏவப்பட்டு துரிதப்படுத்தப்படுகின்றன, பின்னர் அவை ஹைபர்சோனிக் வேகத்தை அடைந்தவுடன், அவை "ஸ்கிராம்ஜெட் என்ஜின்" எனப்படும் ஒரு அமைப்பை செயல்படுத்துகின்றன, அது பறக்கும் போது காற்றை எடுத்து, அதன் இலக்கை நோக்கி உந்துகிறது. இவை "இரட்டை பயன்பாட்டு ஆயுதங்கள்", அதாவது அவற்றிலிருந்து அணு ஆயுதங்களையும் செலுத்தலாம், அல்லது வழக்கமான உயர் வெடிபொருள் கொண்ட ஆயுதங்களையும் செலுத்தலாம். ஆனால் இந்த ஆயுதங்களுக்கு வேகத்தை விட வேறு சில விசயங்களும் உள்ளன. ஓர் ஏவுகணை ராணுவ தரங்களின் அடிப்படையில் உண்மையிலேயே "ஹைபர்சோனிக்" என்று வகைப்படுத்தப்படுவதற்கு, அது பறக்கும் போது இயக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும். அதாவது, அதன் இலக்கை நோக்கி அதீத வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அதை ஏவிய ராணுவத்தினர் நினைத்தால் அந்த ஏவுகணையை திடீரென கணிக்க முடியாத வகையில் பாதையை மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும். இது இடைமறிப்பதை மிகவும் கடினமாக்கும். ஹைபர்சோனிக் ஏவுகணைகளைக் கண்டறிய பெரும்பாலான, நிலத்தில் நிறுவப்பட்டுள்ள ரேடார்களால் முடியாது. "ரேடாரின் வீச்சுக்கு வெளியே பறப்பதன் மூலம் அவை முன்கூட்டியே கண்டறிவதைத் தவிர்க்க முடியும் மற்றும் அவற்றின் இறுதி கட்டத்தில் சென்சார்களில் மட்டுமே தோன்றக்கூடும். இது அந்த ஏவுகணை இடைமறிக்கப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது" என்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தில் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தின் ஆராய்ச்சி கூட்டாளர் பாட்ரிக்ஜா பாசில்சிக் கூறுகிறார். இந்த மையம் அமெரிக்க அரசாங்க நிறுவனங்களிடமிருந்தும் பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்களிடமிருந்து அதன் நிதியுதவியில் சிலவற்றைப் பெற்றுள்ளது. இதற்கான பதில், மேற்கத்திய நாடுகளின் வான்வெளி அடிப்படையிலான சென்சார்களை வலுப்படுத்துவதாகும், இது தரையில் உள்ள ரேடார்களின் வரம்புகளை சமாளிக்கும் என்று அவர் நம்புகிறார். பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, நவம்பர் 2024 இல் கியவ் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹைபர்சோனிக் ஏவுகணை சிர்கானின் எச்சங்களை மக்கள் பார்க்கிறார்கள். நிகழ்நேர போர் சூழ்நிலையில், குறிவைக்கப்படும் நாட்டின் முன் ஒரு பயங்கரமான கேள்வியும் உள்ளது: இது அணுசக்தி தாக்குதலா அல்லது வழக்கமான தாக்குதலா? "ஹைபர்சோனிக் ஏவுகணைகள் போரின் தன்மையை மாற்றவில்லை, நீங்கள் செயல்படக்கூடிய வேகத்தை மாற்றியுள்ளது" என்று முன்னாள் ராயல் கடற்படை தளபதியும் விமான போர் எதிர்ப்பு நிபுணருமான டாம் ஷார்ப் கூறுகிறார். "சில அடிப்படை விசயங்கள் - உங்கள் எதிரியைக் கண்காணிக்க வேண்டும், அவர்களை சுட வேண்டும், பின்னர் நகரும் இலக்கை நோக்கி ஏவுகணையை கையாள வேண்டும் -இவை முந்தைய ஏவுகணைகளிலிருந்து வேறுபட்டதல்ல, அது பாலிஸ்டிக் ஏவுகணைகளானாலும் சரி, சூப்பர்சோனிக் அல்லது சப்சோனிக் ஆனாலும் சரி" என்கிறார் ஷார்பு. "அதேபோல், குறிவைக்கப்படும் நாடு உள்வரும் ஹைபர்சோனிக் ஏவுகணையை கண்காணித்து அழிக்க வேண்டும் என்கிற தேவை இப்போதும் மாறப்படவில்லை, ஆனால் இப்போது உங்களுக்கு குறைந்த நேரமே உள்ளது". இந்த தொழில்நுட்பம் வாஷிங்டனை கவலையடையச் செய்கிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சி சேவை வெளியிட்ட ஓர் அறிக்கை, "ஹைபர்சோனிக் ஆயுதங்களைக் கண்டறிந்து பின்தொடர நிலப்பரப்பு மற்றும் தற்போதைய வான்வெளி அடிப்படையிலான சென்சார் கட்டமைப்புகள் இரண்டுமே போதுமானதாக இல்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்." என எச்சரிக்கிறது. இன்னும் சில வல்லுநர்கள் ஹைபர்சோனிக் ஏவுகணையை சுற்றியுள்ள சில விசயங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று நம்புகிறார்கள். கூடுதலாக மிகைப்படுத்துகிறார்களா? ராயல் யுனைடெட் சேவை நிறுவனத்தின் பாதுகாப்பு சிந்தனைக் குழுவைச் சேர்ந்த டாக்டர் சித்தார்த் கௌஷல், இவை அவசியம் போக்கை மாற்றியமைக்கக் கூடியவை அல்ல என்று நினைக்கிறார். "வேகமும் இலகுவாக இயக்கப்படக் கூடிய திறனும் இவற்றை உயர் மதிப்பு இலக்குகளை தாக்குவதற்கான எளிதான தேர்வுகளாக்குகின்றன. தாக்குதல் சமயத்தில் அவற்றின் இயக்க ஆற்றல் கடினமான, மிக ஆழமாக புதைக்கப்பட்ட இலக்குகளை குறிவைக்க பயனுள்ள வழிமுறையாக அமைகிறது, இந்த இலக்குகளை முன்பு பெரும்பாலான வழக்கமான ஆயுதங்களால் அழிப்பது கடினமாக இருந்தது." என்று கௌஷல் கூறுகிறார். ஆனால் அவை ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அல்லது அதற்கு மேல் பயணித்தாலும், அவற்றை எதிர்த்து தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன - அவற்றில் சில "திறனுள்ளவை" என்று ஷார்ப் வாதிடுகிறார். முதலாவது, கண்காணிப்பையும் கண்டறிதலையும் மிகவும் கடினமாக்குவது. "ஏவுகணைகள் தங்கள் நிலையைப் பாதுகாக்க பெரும் முயற்சிகளை எடுக்கலாம்," என்று அவர் கூறுகிறார். "வணிக செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கும் தெளிவற்ற செயற்கைக்கோள் படம் சில நிமிடங்கள் பழையதாக இருந்தால் போதும், அதை நம்பி இலக்கு வைக்கப் பயன்படாது." "குறிவைக்கப் பயன்படுத்துவதற்கு போதுமான அளவு நிகழ்நேர, துல்லியமான செயற்கைக்கோள் படங்களைப் பெறுவது கடினமானது மற்றும் விலை உயர்ந்தது." என்கிறார். ஆனால் செயற்கை நுண்ணறிவும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் காலப்போக்கில் இதை மாற்றக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். படக்குறிப்பு, ஆதாரம் : பாதுகாப்பு உளவு நிறுவனம், ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு ரஷ்யா அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கை ரஷ்யாவும் சீனாவும் இந்த ஆயுதங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருப்பது உண்மைதான். "சீன ஹைபர்சோனிக் திட்டங்கள்...கவர்ச்சிகரமானதாகவும் அதே நேரம் கவலைக்குரியவையாகவும் உள்ளன என்று நான் நினைக்கிறேன்," என்று ஃப்ரீர் கூறுகிறார். ஆனால் "ரஷ்யர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எதைக் கூறினாலும் அதுகுறித்து நாம் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." என்றும் சொல்கிறார். நவம்பர் 2024-ல், ரஷ்யா யுக்ரேனின் நிப்ரோவில் உள்ள ஒரு தொழிற்சாலை தளத்தில் சோதனைக்காக நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது, அதை நேரடி சோதனைக் களமாகப் பயன்படுத்தியது. இந்த ஏவுகணை மேக் 11 (அல்லது மணிக்கு 8,439 மைல்) ஹைபர்சோனிக் வேகத்தில் பயணித்ததாக யுக்ரேன் தெரிவித்தது, இந்த ஏவுகணைக்கு 'ஒரெஷ்னிக்' என்று பெயரிடப்பட்டது, இது ரஷ்ய மொழியில் ஹேசல் மரம் (Hazel tree/ஜாதி பத்திரி மரம்) என்பதாகும். ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆயுதம் மேக் 10 வேகத்தில் பயணித்ததாக கூறினார். ஏவுகணை இலக்கை நெருங்கியதும் அதன் ஆயுத முனை பல தனித்தனி பாகங்களாக பிரிந்து சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருத்தாக தகவல் கிடைத்துள்ளது. இவை ஒவ்வொன்றும் தனித்தனி இலக்குகளை கொண்டிருந்தன. இது பனிப்போர் காலத்து நடைமுறையாகும். அது சோதனை என்பதால், அப்போது அவற்றில் செயலற்ற எரிபொருள்களே இருந்தன. அது தரையிறங்கியதைக் கேட்ட ஒருவரிடம் பேசிய போது, " அது மிக சத்தமாக இல்லை, ஆனால் பல இடங்களை அது தாக்கியிருந்தது: 6 ஏவுகணை முனைகள் தனித்தனி இலக்குகளில் விழுந்தன. ஆனால் அவை செயலற்றவையாக இருந்ததால், அதனால் ஏற்பட்ட சேதம், யுக்ரேன் நகரங்களில் ரஷ்யாவின் இரவுக் குண்டுவீச்சால் ஏற்படும் சேதத்தை விட மிக அதிகமாக இல்லை. ஐரோப்பாவைப் பொறுத்தவரை, நேட்டோ நாடுகளுக்கு நிலவும் அச்சுறுத்தல் பிரதானமாக ரஷ்யாவின் ஏவுகணைகளால் ஏற்படுகிறது. அவற்றில் சில ஏவுகணைகள் ரஷ்யாவின் பால்டிக் கடற்கரையில் உள்ள காலினின்கிராட் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இம்முறை முழு உயர் வெடிகுண்டுகளை ஏற்றி புதின் கியவ் நகரத்தின் மீது ஒரெஷ்னிக் மூலம் தாக்குதல் நடத்த உத்தரவிட்டால் என்னவாகும்? ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆயுதம் தொடர் உற்பத்தி செய்யப்பட போவதாகவும், இலக்குகளை "தூளாக்கும்" திறன் தங்களிடம் உண்டு என்றும் கூறினார். ரஷ்யாவிடம் ஹைபர்சோனிக் வேகத்தில் பயணிக்கும் பிற ஏவுகணைகளும் உள்ளன. புதின் தனது வான்படையின் கின்ஜால் (Kinzhal) ஏவுகணைகளைப் பற்றி அதிகம் பேசினார், அவை மிக வேகமாக செல்லும் அவற்றை இடைமறிப்பது சாத்தியமில்லை என்று கூறினார். அதன்பின், அவர் அவற்றில் பலவற்றை யுக்ரேன் மீது ஏவியுள்ளார் - ஆனால் கின்ஜால் உண்மையில் ஹைபர்சோனிக் அல்லாமல் இருக்கலாம் என்றும், பலவும் இடைமறிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஹைபர்சோனிக் ஏவுகணைத் துறையில் சீனாவும் ரஷ்யாவும் மற்ற நாடுகளை விஞ்சி உள்ளன. மேற்கத்திய நாடுகளுக்குக் கவலை தருவது ரஷ்யாவின் அதிவேகமான, மிக இலகுவாக இயக்கப்படக்கூடிய ஆயுதமான அவன்கார்ட் ஆகும். 2018 -ல் வேறு ஐந்து 'சூப்பர் ஆயுதங்களுடன்' அறிமுகமானது, அதனை புதின் தடுக்க முடியாதது என்று கூறினார். டாக்டர் சித்தார்த் கௌஷல் அதன் முதன்மையான பங்கு உண்மையில் "அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்பு முறைகளை விஞ்சுவதுதான்" என்று கூறுகிறார். "ரஷ்யாவின் அரசு ஆயுதத் திட்டங்கள் அவன்கார்ட் போன்ற அமைப்புகளை உற்பத்தி செய்யும் திறன் ரஷ்யாவிடம் போதிய அளவு இல்லை என்பதையும் காட்டுகின்றன," என்று அவர் வாதிடுகிறார். மேற்கு பசிபிக்கில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே மூலோபாய மேலாதிக்கத்திற்கான போட்டி தீவிரமடைந்து வருவதால், சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் கிடங்கின் பெருக்கம் தென் சீனக் கடல் மற்றும் அதற்கு அப்பால் அமெரிக்க கடற்படை நிலைப்பாட்டிற்கு தீவிரமான அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது. சீனாவிடம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹைபர்சோனிக் ஆயுதக் கிடங்கு உள்ளது. 2024-ன் பிற்பகுதியில், சீனா தனது சமீபத்திய ஹைபர்சோனிக் கிளைட் வாகனமான GDF-600ஐ வெளியிட்டது. 1,200 கிலோ பேலோடுடன், இது துணை ஆயுதங்களைச் சுமந்து மேக் 7 (மணிக்கு 5,370 மைல்) வேகத்தை எட்ட முடியும். பிரிட்டனின் அவசர முயற்சியில் வெற்றி பிரிட்டன் இந்தப் பந்தயத்தில் பின்தங்கியுள்ளது, குறிப்பாக அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து அணு ஆயுத நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றாக இருப்பதால் இது குறிப்பிடத்தக்க பிரச்னையாகிறது. ஆனால் தாமதமாக முயன்றாலும், அது விரைந்து எட்டிப்பிடிக்க முயற்சி செய்கிறது, அல்லது குறைந்தபட்சம் பந்தயத்தில் சேர முயற்சி செய்கிறது. ஏப்ரலில், பாதுகாப்பு அமைச்சகமும் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகமும் ஒரு முக்கிய சோதனைத் திட்டத்தின் வெற்றிகரமான முடிவுக்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் "ஒரு முக்கிய தருணத்தை" எட்டியுள்ளனர் என்று அறிவித்தன. பிரிட்டனின் உந்துசக்திச் சோதனை பிரிட்டிஷ் அரசு, தொழில்துறை மற்றும் அமெரிக்க அரசு ஆகியவற்றுக்கு இடையேயான மூன்று தரப்பு ஒத்துழைப்பின் விளைவாகும். ஆறு வாரங்களில் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள நாசா லாங்லே ஆராய்ச்சி மையத்தில் மொத்தம் 233 "வெற்றிகரமான நிலையான சோதனை ஓட்டங்கள்" மேற்கொள்ளப்பட்டன. பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி இதை "ஒரு மைல்கல் தருணம்" என்று அழைத்தார். ஆனால் இந்த ஆயுதம் தயாராக இன்னும் பல ஆண்டுகள் ஆகும். பட மூலாதாரம், REUTERS/VALENTYN OGIRENKO படக்குறிப்பு, ரஷ்யாவின் 'கின்ஜால்' ஏவுகணை உண்மையில் ஹைபர்சோனிக் திறன் கொண்டதாக இருக்காது, அவற்றில் பல யுக்ரேனின் தடுப்பு‌ அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஹைபர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்குவதுடன், மேற்கத்திய நாடுகள் அவற்றிற்கு எதிரான வலுவான பாதுகாப்பையும் உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஃப்ரீர் வாதிடுகிறார். "ஏவுகணைப் போர் என்று வரும்போது, இது ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் பற்றியது. நீங்கள் சேதத்தைக் குறைக்கவும் முடிய வேண்டும், அதே நேரத்தில் எதிரியின் ஏவுதள அமைப்புகளைத் தாக்கும் திறனும் கொண்டிருக்க வேண்டும்." "உங்களுக்கு இரண்டு கைகளும் இருந்தால், நீங்கள் ஒரு அளவிற்கு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த் தாக்குதல் நடத்தவும் முடிந்தால்... அப்போது ஒரு எதிரி மோதலைத் தொடங்க முயற்சிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு." எனினும், இந்த நேரத்தில் நாம் எந்த அளவிற்குக் கவலைப்பட வேண்டும் என்பது குறித்து டாம் ஷார்ப் இன்னும் எச்சரிக்கையாக உள்ளார். அவர், "ஹைபர்சோனிக்ஸ் குறித்த முக்கிய விஷயம், இந்தச் சமன்பாட்டின் இரு பக்கங்களும் ஒன்றைப் போலவே மற்றொன்றும் கடினமானவை - இரண்டும் இன்னும் கச்சிதமாக வடிவம் பெறவில்லை" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgypz9j564o
Checked
Tue, 09/30/2025 - 03:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed