Aggregator

ஒரு தலை ராகம்

3 months 2 weeks ago
ஒரு தலை ராகம் .......................... ஒரு மன மாற்றத்திற்காக அறையை இருட்டாக்கி, முறுக்கு டப்பாவை கையில் வைத்துக்கொண்டு, வசதியாக சாய்ந்தபடி, மனதிற்கு பிடித்த படம் யூ ட்யூபில் பார்க்கத் தொடங்கினேன்... 1980 ல் வெளி வந்த டி.ராஜேந்தரின் படம்... கதாநாயகி ரூபா அற்புதமான தேர்வு...மிகக் குறைந்த வசனம்தான் அவருக்கு படம் நெடுகிலும்... பேசமுடியாத வசனங்களை பேசும் கண்களால் அப்படியே நம்முன் கொட்டுகிறார்... அந்த அகன்ற கரிய விழிகள்தான் எத்தனை உணர்வுகளை படம் முழுதும் பேசிக் கொண்டே போகிறது...படம் முழுவதிற்கும் இரு முறை தான் சிரித்திரிப்பார்... அவர் கட்டியிருந்த அத்தனை காட்டன் சேலைகளும் அவ்வளவு அழகு... கதாநாயகன் சங்கர் அந்த காலத்தில் எங்களுக்கெல்லாம் ஹீரோ. இந்தத் திரைப்படம் வெளி வந்த உடன் எத்தனை இளம்பெண்கள் அவர் மேல் காதற்வயப்பட்டார்கள் என நன்கறிவேன்... சோகத்தை வெளிக் காண்பிக்கும் நடிப்பில் பின்னி எடுக்கிறார்... ஆனால் அந்த கால பெல்பாட்டமும், காதை மறைத்த தலை முடி அலங்காரமும், நெஞ்சில் பேன்ட்டை டக் இன் செய்யும் விதம்தான் கொஞ்சம் சிரிப்பு மூட்டியது... ஒவ்வொரு நடிகரும், நடிகையும், சந்திரசேகராகட்டும், உஷாவாகட்டும், ரவீந்தராகட்டும், தியாகுவாகட்டும், தன் கதாபாத்திரத்தை செவ்வனே செதுக்கியிருந்தார்கள்... 80 களில் இருபாலார் படிக்கும் கல்லூரியை அப்படியே கண்முன் நிறுத்தினார்கள்... எனக்கு நான் படித்த சிவகங்கை மன்னர் கல்லூரி, எங்கள் தோழிகள், கூட படித்த மாணவர்கள் என நினைவு சுழற்றி அடித்துக் கொண்டே இருந்தது.. வசனங்கள்...நோ சான்ஸ்...அவ்வளவு அருமை...இப்போதைய பெரும்பான்மையான படங்களில் தேவையில்லாத நேரத்தில் வண்டி வண்டியாக நடிகர்கள் வசனம் பேசுகிறார்களே? கதாநாயகன் கோவிலில் பக்கத்தில் நிற்கிறான்.. அவனுடன் பேச முடியாத நிலை..தங்கை அருகிலிருக்கிறாள்...எண்ணெய் கிண்ணத்தை தவற விடுகிறாள்... " எண்ணயவே (என்னய) கொட்டிட்டேன்...திருப்பி அள்ள முடியல" என்கிறாள் அவன் உணரும் வகையில்... நாயகிடம் நாயகன் என்னைக் காதலிக்கிறாயா எனக் கேட்க பதிலுரைக்காமல் மவுனமாக அங்கிருந்து அகல்கிறாள்... அவன், அவள் , தோழி என மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒன்றிருக்கையில் தோழியிடம் அவன் சொல்கிறான்" கேட்காத கேள்விக்கு நீங்க பதில் சொல்றீங்க...கேட்ட கேள்விக்கே சிலர் பதில் சொல்ல மாட்டேங்கறாங்க" அப்போது சுழற்றி சுழற்றி ரூபாவின் விழிகள் நர்த்தனமாடும் பாருங்கள்...மிக அழகு அக்காட்சி, வசனம் அத்தனையும்... இறுதி காட்சி...நாயகி நாயகனிடம் தன் மனதிற்குள் பொத்தி வைத்திருந்த காதலைப் பேசித் தீர்க்க வேண்டுமென நெடும் போராட்டத்திற்கு பின் கல்லூரி முடிந்த மறுநாள் முடிவெடுத்து கிளம்புகிறாள்.. அவள் மிகவும் அக்கறையுடன் தன்னை அலங்கரித்து கொள்வதை கவலை கலந்த வெறுப்புடன் தாய் பார்க்கிறாள்.. நாயகியின் அம்மா " காலைல எழுந்திரிச்ச, குளிச்ச, பேசாம போய்ட்ருக்க? எங்க போற?" "பேசத்தான் போறேன்" நாயகி.. "என்னடி உளர்ற?" அம்மா "உளறலம்மா இப்பத்தான் நிதானமா பேசறேன்" நாயகி.. இந்த இடத்தில் என்னையும் மீறி வசன அபாரத்திற்கு கரங்கொட்டி மகிழ்ந்தேன்... வசன கர்த்தாக்கள் படத்தை நகர்த்தும் விதம்தான் படத்திற்கு அழகூட்டும் என்பேன் நான்... பாட்டுக்கள் அத்தனையும் தேனினிமை.... என்ன பொருட்சுவை... என்ன காட்சிப் பொருத்தம்... "ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்" வாசமில்லா மலரிது பாடலில்.. "கிணற்றுக்குள் வாழும் தவளையை போல மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி" கடவுள் வாழும் கோவிலிலே பாடலில்.. 'வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்.. வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்" குழந்தை பாடும் தாலாட்டு பாடலில்.. மிகைப்படுத்தப் பட்ட சண்டைக் காட்சிகள் இல்லை... அபத்தமான வசனங்கள் இல்லை... நகைச்சுவை என்ற பெயரில் முகஞ்சுளிக்க வைக்கும் தனித்தடம் இல்லை... அழகு, யதார்த்தம், இயல்பு, இவையன்றி வேறேதும் இல்லை... ஆனால் படம் முடிந்த வுடன் மனம் முழுதும் சோகம் கவ்வியது.. 80 களில் பட்டையை கிளப்பிய படம்...200 நாட்கள் தாண்டி ஓடிய படம்... Hats off ராஜேந்தர் சார்... இதே போல் இன்னுமொரு அழகான படம் கொடுங்களேன்... Lakshmi RS

ஒரு தலை ராகம்

3 months 2 weeks ago

ஒரு தலை ராகம்

..........................

ஒரு மன மாற்றத்திற்காக அறையை இருட்டாக்கி, முறுக்கு டப்பாவை கையில் வைத்துக்கொண்டு, வசதியாக சாய்ந்தபடி, மனதிற்கு பிடித்த படம் யூ ட்யூபில் பார்க்கத் தொடங்கினேன்...

1980 ல் வெளி வந்த டி.ராஜேந்தரின் படம்...

கதாநாயகி ரூபா அற்புதமான தேர்வு...மிகக் குறைந்த வசனம்தான் அவருக்கு படம் நெடுகிலும்... பேசமுடியாத வசனங்களை பேசும் கண்களால் அப்படியே நம்முன் கொட்டுகிறார்... அந்த அகன்ற கரிய விழிகள்தான் எத்தனை உணர்வுகளை படம் முழுதும் பேசிக் கொண்டே போகிறது...படம் முழுவதிற்கும் இரு முறை தான் சிரித்திரிப்பார்...

அவர் கட்டியிருந்த அத்தனை காட்டன் சேலைகளும் அவ்வளவு அழகு...

கதாநாயகன் சங்கர் அந்த காலத்தில் எங்களுக்கெல்லாம் ஹீரோ.

இந்தத் திரைப்படம் வெளி வந்த உடன் எத்தனை இளம்பெண்கள் அவர் மேல் காதற்வயப்பட்டார்கள் என நன்கறிவேன்...

சோகத்தை வெளிக் காண்பிக்கும் நடிப்பில் பின்னி எடுக்கிறார்... ஆனால் அந்த கால பெல்பாட்டமும், காதை மறைத்த தலை முடி அலங்காரமும், நெஞ்சில் பேன்ட்டை டக் இன் செய்யும் விதம்தான் கொஞ்சம் சிரிப்பு மூட்டியது...

ஒவ்வொரு நடிகரும், நடிகையும், சந்திரசேகராகட்டும், உஷாவாகட்டும், ரவீந்தராகட்டும், தியாகுவாகட்டும், தன் கதாபாத்திரத்தை செவ்வனே செதுக்கியிருந்தார்கள்...

80 களில் இருபாலார் படிக்கும் கல்லூரியை அப்படியே கண்முன் நிறுத்தினார்கள்...

எனக்கு நான் படித்த சிவகங்கை மன்னர் கல்லூரி, எங்கள் தோழிகள், கூட படித்த மாணவர்கள் என நினைவு சுழற்றி அடித்துக் கொண்டே இருந்தது..

வசனங்கள்...நோ சான்ஸ்...அவ்வளவு அருமை...இப்போதைய பெரும்பான்மையான படங்களில் தேவையில்லாத நேரத்தில் வண்டி வண்டியாக நடிகர்கள் வசனம் பேசுகிறார்களே?

கதாநாயகன் கோவிலில் பக்கத்தில் நிற்கிறான்.. அவனுடன் பேச முடியாத நிலை..தங்கை அருகிலிருக்கிறாள்...எண்ணெய் கிண்ணத்தை தவற விடுகிறாள்...

" எண்ணயவே (என்னய) கொட்டிட்டேன்...திருப்பி அள்ள முடியல" என்கிறாள் அவன் உணரும் வகையில்...

நாயகிடம் நாயகன் என்னைக் காதலிக்கிறாயா எனக் கேட்க பதிலுரைக்காமல் மவுனமாக அங்கிருந்து அகல்கிறாள்... அவன், அவள் , தோழி என மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒன்றிருக்கையில் தோழியிடம் அவன் சொல்கிறான்" கேட்காத கேள்விக்கு நீங்க பதில் சொல்றீங்க...கேட்ட கேள்விக்கே சிலர் பதில் சொல்ல மாட்டேங்கறாங்க" அப்போது சுழற்றி சுழற்றி ரூபாவின் விழிகள் நர்த்தனமாடும் பாருங்கள்...மிக அழகு அக்காட்சி, வசனம் அத்தனையும்...

இறுதி காட்சி...நாயகி நாயகனிடம் தன் மனதிற்குள் பொத்தி வைத்திருந்த காதலைப் பேசித் தீர்க்க வேண்டுமென நெடும் போராட்டத்திற்கு பின் கல்லூரி முடிந்த மறுநாள் முடிவெடுத்து கிளம்புகிறாள்..

அவள் மிகவும் அக்கறையுடன் தன்னை அலங்கரித்து கொள்வதை கவலை கலந்த வெறுப்புடன் தாய் பார்க்கிறாள்..

நாயகியின் அம்மா

" காலைல எழுந்திரிச்ச, குளிச்ச, பேசாம போய்ட்ருக்க? எங்க போற?"

"பேசத்தான் போறேன்" நாயகி..

"என்னடி உளர்ற?" அம்மா

"உளறலம்மா இப்பத்தான் நிதானமா பேசறேன்" நாயகி..

இந்த இடத்தில் என்னையும் மீறி வசன அபாரத்திற்கு கரங்கொட்டி மகிழ்ந்தேன்...

வசன கர்த்தாக்கள் படத்தை நகர்த்தும் விதம்தான் படத்திற்கு அழகூட்டும் என்பேன் நான்...

பாட்டுக்கள் அத்தனையும் தேனினிமை....

என்ன பொருட்சுவை... என்ன காட்சிப் பொருத்தம்...

"ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்

அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்" வாசமில்லா மலரிது பாடலில்..

"கிணற்றுக்குள் வாழும் தவளையை போல மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி" கடவுள் வாழும் கோவிலிலே பாடலில்..

'வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்..

வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்" குழந்தை பாடும் தாலாட்டு பாடலில்..

மிகைப்படுத்தப் பட்ட சண்டைக் காட்சிகள் இல்லை...

அபத்தமான வசனங்கள் இல்லை...

நகைச்சுவை என்ற பெயரில் முகஞ்சுளிக்க வைக்கும் தனித்தடம் இல்லை...

அழகு, யதார்த்தம், இயல்பு, இவையன்றி வேறேதும் இல்லை...

ஆனால் படம் முடிந்த வுடன் மனம் முழுதும் சோகம் கவ்வியது..

80 களில் பட்டையை கிளப்பிய படம்...200 நாட்கள் தாண்டி ஓடிய படம்...

Hats off ராஜேந்தர் சார்...

இதே போல் இன்னுமொரு அழகான படம் கொடுங்களேன்...

May be an image of 5 people and people smiling


Lakshmi RS 


பதின்ம வயது கர்ப்பம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் - மகப்பேற்று வைத்திய நிபுணர் ரகுராம் !

3 months 2 weeks ago
அதாவது மருத்துவர் சொல்லுறார் அந்த வயசில கலவியில் ஈடுபடுலாம் கர்ப்பம் வேண்டாம் என்று ....பாதுகாப்பான கலவி... நீங்கள் அம்மம்மாவின் வயசையும் அறிந்து வைத்திருக்கின்றீர்கள் பலே கில்லாடி😅

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு எந்த வகையில் நியாயம் - ஞானமுத்து சிறிநேசன்

3 months 2 weeks ago
நீங்கள் பகிடி விடுறீயல் ...சிறிலங்கா தேசிய இராணுவத்தை வடக்கில் இருந்து அரைவாசியாக குறைத்தால் தெற்கில் வீட்டுக்கு,அல்லது கிராமத்துக்கு ஒர் பதாள உலக குழு உருவாகிவிடும் ....ஆகவே வடக்கை இராணுவ கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு தெற்கில் ஜனநாயகத்தை மலரச்செய்ய வேண்டும் ...அதற்கு பாதுகாப்பு செலவு அதிகமாக தேவைப்படும்..

இலங்கை மின் திட்டம்; வதந்திகளுக்கு அதானி நிறுவனம் முற்றுப்புள்ளி!

3 months 2 weeks ago
மோடி வர முதல் ஏதாவது செய்திகளை போடத்தானே வேணும்...அப்பதானே ஊடகம் இருக்கு என்று தெரியும் ... அதுசரி அப்ப இனி ஆதவனின் செய்திகளை நம்பி கருத்து எழுத வேண்டிய அவசியமில்லை போல..🤣

மனம்பேரி, இசைப்பிரியா படுகொலைகள் தொடர்பில் சபையில் கொதித்தெழுந்த சிறீதரன் எம்.பி.

3 months 2 weeks ago
சிங்கள தேசிய இனமாக இருந்தால் மட்டுமே பாராளுமன்றில் சபாநாயகர் அழுதபடி அறிக்கை சமர்பிப்பார்...ஏனைய தேசிய இனங்களின் படுகொலைகள் பயங்கரவாதிகள் என்ற குற்றசாட்டுடன் பாராளுமன்றில் கூரையில் தூக்கி வீசப்பட்டுவிடும்... உள்ளக பொறிமுறையுடாக தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்ற‌ அறிக்கையை நம்பவைப்பதற்கு இந்த நாடகம்(பட்டலந்த விவகாரம்)

“சுய இன்பத்தில் பெண்கள் ஈடுபடுவது குற்றம் அல்ல”

3 months 2 weeks ago
🤣 இந்திய கோவில் சிற்பங்களிலேயே இருக்கு என எங்கோ பார்த்த நினைவு. மனிதன்/மனிசி பாசையை கண்டுபிடிக்க முதலே இதை கண்டு பிடித்திருப்பார்கள்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இதில யாரை கொப்பி அடித்தால் நல்லம் என யோசிக்க கூட நேரம் இல்லை அண்ணை - டக்கெண்டு பாத்தான் - நீங்கள் எப்படியும் ஒரு திறமான இடத்தை, தேர்ந்து, ஆராய்ந்துதான் சரக்கை இறக்கி இருப்பியள் - அப்ப நானும் அதே ஓடரை போட்டு விட்டேன்🤣.

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பொதுத் திட்டங்களை வகுக்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

3 months 2 weeks ago
போர் நடக்கும் பொழுதும் பொது மன்னிப்பு,போர் முடிவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பொது மன்னிப்பு ... சிறிலங்கா குடிமக்கள் அனைவருக்கும் இராணுவ பயிற்சி கொடுத்து போட்டு .... இராணுவ படை,,கஞ்சா படை ஆட்கள் தேவை என விளம்பர படுத்துங்கோ

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

3 months 2 weeks ago
மெத்தப் பெரிய உபகாரம், ஐயனே... என்னால் படிமங்களை எல்லாம் பதிவிடக் கூடியதாக உள்ளது... எனினும், வெளியில் உள்ள "Format" ஐ அப்படியே எடுத்து யாழிற்குள் ஒட்டும் அமைப்பு இன்னும் சரியாகவில்லை. எழுத்துக்களுக்கு நிறம் தீட்ட முடியவில்லை. மற்றது அந்த "search" தொடர்பில் கூறியிருப்பதும் வேலை செய்யவில்லை. நேரம் கிடைக்கும் போது சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்

3 months 2 weeks ago
பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.காரணம் என்ன?சிக்கலான விதிமுறைகளா? அல்லது விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட பிழைகளா? உள்ளூராட்சி என்பது பாமரர்களும் வேட்பாளராகும் தேர்தல் அதற்கு எறு;ற வகையில் விண்ணப்ப விதிகள் இருக்க வேண்டும.