| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 362 online users. » 0 Member(s) | 359 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,324
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,645
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,079
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,506
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241
|
|
|
| "புதினத்திற்கு" என்ன நடந்தது |
|
Posted by: Nellaiyan - 12-26-2004, 10:19 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
தற்போது "புதினம்" இணையத்தளம் பார்க்க முடியாமலுள்ளது. இணையத்தை திறக்க முற்படுகையில் கீழ்வரும் செய்திதான் வருகின்றது.
account suspended
Your account has been suspended. We have sent you an email explaining why. This email should also contain information on how you can unsuspend your account.
|
|
|
| LTTE to declare National Emergency |
|
Posted by: Vaanampaadi - 12-26-2004, 09:43 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (12)
|
 |
LTTE to declare National Emergency
[TamilNet, December 26, 2004 14:34 GMT]
To cope with the unprecedented destruction of life and property in the coastal areas of NorthEast brought about by the tsunamic waves that hit the coastal towns Sunday, the Liberation Tigers are planning to declare National Emergency to set up procedures in motion to obtain relief assistance from International Agencies, sources close to the LTTE in Vanni said.
Leader of LTTE's Political Wing, S.P.Thamilchelvan, speaking to TamilNet said: "This is the first time Tamil people in our areas have witnessed such large scale disaster. We have recovered more than 800 bodies from the coastal shores along the the NorthEast. We are just starting to enter interior of buildings to continue the relief effort .
"Our cadres and volunteers from the Tamil Rehabilitation Organization and other civil groups are working round the clock to assist the wounded and to provide shelter to those whose houses have been washed away by the tidal waters.
"I sincerely hope that the Internation Community will respond with the necessary financial and material relief to assist our people," he added.
|
|
|
| LTTE appeals for International Assistance |
|
Posted by: Vaanampaadi - 12-26-2004, 09:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
LTTE appeals for International Assistance
[TamilNet, December 26, 2004 17:00 GMT]
The political wing of the Liberation Tigers appealed for international assistance in providing relief to the people affected by the tsunami waves Sunday. "We appeal to the international community to provide the wherewithal to meet with the exigencies and to avoid a humanitarian crisis. The human disaster and the tragedy the survivors face are unprecedented and need immediate and effective humanitarian intervention. We therefore solicit the support of the Donor nations, UN agencies and INGOs to consolidate their efforts and ensure that the assistance reach the needy in time," the appeal said.
Full text of the appeal follows:
This is an urgent appeal to the international community and the donor nations for immediate intervention in providing relief to the disaster-affected areas in the Northeast. Tens of thousands of people have been swallowed by the surge and thousands have suffered major injuries. The medical institutions in the Northeast are full of the injured. Tens of thousands of people who’s dwellings and entire belongings have been swept away by the sudden tidal surge, are now displaced and seeking refuge in public buildings in safer places. It is ironical that this tragedy had befallen on a people who suffered the brutality of a war for two decades and are continuing to exist without realizing the basic dividends of peace, normalcy.
Civilian based organizations (CBOs) Local NGOs headed by TRO, community workers and local youths assisted and guided by the LTTE are working round the clock in medical evacuation, transport of displaced to safer places and providing emergency relief measures. Financial and logistical constraints notwithstanding, the relief teams are working very hard to provide maximum relief. The affected people primarily are in need of clothing, blankets, mats and cooked food. Lack of transport facilities is also seriously impeding the expeditious relief activities. Heavy influx of the displaced in public buildings where basic sanitation facilities are not available, it is feared, may create serious health hazard and epidemics.
Tidal waves having receded, though the panic of recurrence continues, this displaced population cannot continue to live in public buildings and therefore, it is inevitable that they be provided with the necessary assistance to rebuild their lives.
We appeal to the international community to provide the wherewithal to meet with the exigencies and to avoid a humanitarian crisis. The human disaster and the tragedy the survivors face are unprecedented and need immediate and effective humanitarian intervention. We therefore solicit the support of the Donor nations, UN agencies and INGOs to consolidate their efforts and ensure that the assistance reach the needy in time.
|
|
|
| பிந்திய விபரங்கள் |
|
Posted by: Vaanampaadi - 12-26-2004, 08:47 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (10)
|
 |
பிந்திய விபரங்கள்
மட்டக்களப்பு வைத்தியசாலையில் 300 சடலங்கள்
வாழைச்சேனை வைத்தியசாலையில் 80 சடலங்கள்
திருமலையில் 150 சடலங்கள்
மூதூரில் 200 இற்கு மேற்பட்ட சடலங்கள
அம்பாறையில் 600 சடலங்கள்
அம்பாந்தோட்டையில் 600 சடலங்கள் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3000 பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. நிந்தவூரில் அரபுக்கல்லூரி மாணவர்கள் 45 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அம்பாந்தோட்டையில் பஸ் வண்டியில் சென்றவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். சந்தையில் கூடியிருந்தவர்கள் 2000 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. பொத்துவிலுடனான தொடர்பு அருகம்பை பாலம் உடைந்ததால் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் காடுகளினூடாக பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். உல்லாச பயணிகள் பலரும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரிய குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
முல்லைத்தீவிலும் பலத்த சேதங்களும் உயிரழிவும் ஏற்பட்டிருக்கிறது. விபரங்கள் தெரியவில்லை. யாழில் செம்பியன்பற்றுää தாளையடி ஆகிய பகுதிகளில் உயிரழிவுகள் ஏற்பட்டுள்ளன. மக்களின் உடைமைகள் வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. எங்கும் சோகமும்ää அவலமும் காணப்படுகிறது. ஜனாதிபதி தனது விஜயத்தை ரத்துச் செய்துவிட்டு நாடு திரும்புகிறார். தேசிய அனர்த்த செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் பெருமளவு பெண்களும்ää குழந்தைகளும்ää வயோதிபர்களும் உயிரிழந்துள்ளார்கள்.
முப்படையினரும் பொலிசாரும் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கீரிமலை பகுதியில் இறந்தவர்களுக்கு கிரியை செய்ய சென்றவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
26.12.2004
கல்முனையில் மையவாடியையும் வெள்ளம் மூடியுள்ளது
கல்முனையில் மையவாடியையும் வெள்ளம் மூடியுள்ளதால் சடலங்களை அடக்கம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
மட்டக்களப்பு நாவலடி
மட்டக்களப்பு நாவலடி கிராமத்தில் சுமார் 300 மீனவர் குடும்பங்கள் வாழ்ந்தன. அதில் பெரும்பாலான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு தொடர்ந்து சடலங்கள் வந்தவண்ணமுள்ளன.
மாத்தறை
மாத்தறையில் 200 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
26.12.2004
தொடரும் அனர்த்தங்கள்
சடலங்கள் ஆங்காங்கே வீதிகளில் சிதறிக்கிடப்பதாகவும்ää பல பிரதேசங்களில் இன்னும் மீட்புப்பணி ஆரம்பிக்க முடியாது இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகரை போன்ற பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் சில இடங்களில் சடலங்களை தமது தோள்களில் காவிச்செல்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில்
பருத்தித்துறையில் 42 சடலங்கள் வலவெட்டித்துறையில் 06 சடலங்கள் சாவக்கச்சேரியில் 26 சடலங்கள; யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
கிண்ணியா
கிண்ணியா வைத்தியசாலையில் முற்றாக சேதமடைந்துள்ளது. ஊழியர்களும்ää நோயாளிகளும் இறந்துள்ளனர். 300 சடலங்கள் கிண்ணியா பாடசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள்
இலங்கைக்கு அவசர உதவிகளை செய்யுமாறு இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது
26.12.2004
மட்டக்களப்பு வைத்தியசாலையில் சடலங்கள்
மட்டக்களப்பு வைத்தியசாலையில் 300க்கு மேற்பட்ட சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சடலங்கள் வந்த வண்ணமிருக்கின்றன. காயமடைந்தவர்கள் தொகை கணக்கற்றது. மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளில் சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 600க்கு மேற்பட்டோர் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில். நூற்றுக்கு மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காத்தான்குடியில் 45க்கு மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சடலங்களை அடக்கம் செய்வதற்காக மக்கள் பள்ளிவாசல்களில் கூடி நிற்கின்றனர்.
வவுனியா வைத்தியசாலையில் 10க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமலையில் 150க்கு மேற்பட்டவர்களின் சடலங்களும் மூதூரில் 150 சடலங்களும் காலி ஆஸ்பத்திரியில் 100 சடலங்களும் இதுவரை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அம்பாறை மாவட்ட சேதவிபரங்கள் தெரியவில்லை. கணக்கெடுப்பு நடத்த முடியாத நிலை மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்படுமென மக்கள் எச்சரிக்கைபடுத்தப்பட்டுள்ளனர். மக்களை உயரமான இடங்களுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியே இந்தியாவிலும்ää இலங்கையிலும் தென்னாசிய பிராந்தியத்தில் கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தியதென கூறப்படுகிறது. 8.5 ரிஜ்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக புவி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரிசாää கேரளம் தமிழகத்திலும் பல நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர்.
இலங்கை அரசு அனர்த்தங்கள் தொடர்பான பணிக்கென விஷேட குழு ஒன்றை அமர்ததியுள்ளது. முப்படையினரும்ää பொலிசாரும் அவசர பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பிரதமருக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரமாண்டமான அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
மக்கள் சமைத்த உணவை பெறுவதும் கடினமாகியுள்ளது.
கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் 150 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கில் மின்சாரம் தொலை தொடர்புகள் முற்றாக சீர்குலைந்துள்ளன.
26.12.2004
தாங்கமுடியாத துயரம்
பெரும் கடல் பெருக்கினால் குறிப்பாக கிழக்கிலும் நாடுபூராவும் பதட்டம் நிலவுகிறது. பலர் தமது உற்றார் உறவினர்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மூதூரில் ஆறு கிராமங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன.
மட்டு அம்பாறை கரையோரக் கிராமங்கள் எல்லாமே ஏதோவொரு அளவில் ;பாதிக்கப்பட்டுள்ளன
பொத்துவிலிருந்து திருமலை வரை இப்பாதிப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.
பலநூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பல கிராமங்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.
மூதுர் வாகரை நாவலடி கல்லடி மருதமுனை அக்கரைபற்று கழுதாவளை கிண்ணியா பொத்துவில் புதூர் என பலபிரதேசங்கள் பேரனர்த்தத்தை சந்தித்துள்ளன. கிண்ணியாவில் ஆஸ்பத்திரி நீரில் மூழ்கியதால் அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் மரணித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிää ஒரிசாவிலும் பலநூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்h. கிழக்காசியாவில் இந்தோனேசியா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பூகம்பத்தினால் இலங்கை இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் ஆகியவற்றில் இந்த கடல் பெருக்கு ஏறப்பட்டுள்ளது மாலை தீவு மூன்றில் இரண்டுபகுதி கடலில் மூழ்கி உள்ளது
யாழ்நாகர்கோயில் பகுதிகளிலும் பலர் இடம்பெயாந்;துள்ளனர். வல்வெட்டித்துறை நாகர்கோவில் பகுதிகளிலும் உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. காயமடைந்தவர்கள் பலர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய இலங்கை மீனவர்கள் பலநூற்றுக்கணக்கானோரை காணவில்லை. சென்னையிலும் அதன் சுற்றுபுறங்களிலும் நில நடுக்கமும் உணரப்பட்டது. பல உயிர்களும் உடைமைகளும் கடலினால் காவு கொள்ளப்பட்டுவிட்டன
பிரதமர் தலைமையில் அவசரமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் நடைபெறுகிறது. அவசர நிலைதோற்றுவிக்கப்படலாம்
தங்காலை காலி அம்பாந்தோட்டை மாத்தறை போன்ற பகுதிகளும் நீரில் மூழ்கி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சடலங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்று தெரியவில்லை எங்கும் மரண ஓலம். எமது நகரங்களும் கிராமங்களும் பேய்க் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.
முல்லைதீவு யாழ்வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் பலத்த சேதமேற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் நிகழந்துள்ளன. சடலங்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளன. தாளையடிப்பகுதியில் இன்னும் பல உடல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது
உயிரிழப்புக்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது
மட்டக்களப்பு திருமலை கிண்ணியா காலி மாத்தறை அம்பாந்தோட்டை தங்காலை வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கான சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது.
|
|
|
| கண்ணெதிரே கடல் அனர்த்தத்தினால் 1200 சிறுவர்கள் பலி. |
|
Posted by: Vaanampaadi - 12-26-2004, 07:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
கண்ணெதிரே கடல் அனர்த்தத்தினால் 1200 சிறுவர்கள் பலி.
ஞாயிற்றுக்கிழமை 26 டிசெம்பர் 2004 நடேசன்
இயற்கையின் அனர்த்த்தினால் தமிழீழத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் சுமார் 1200 சிறுவர்கள் கொடுமையான முறையில் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 5000 சிறுவர்கள் வரை பாதிக்கப்பட்டு அல்லது படுகாயங்களுக்கு உட்பட்டிருக்கலாமென்று தெரியவருகிறது. இன்று விடுமுறை தினமாகையால் சிறுவர்கள் வீடுகளில் இருந்ததாலும் அதிகாலை நேரம் என்பதனாலேயே இவ்வளவு இழப்புகள் எற்பட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதேநேரம் அனைத்துச் செய்திகளும் இலங்கை அரச தரப்பால் இருட்டடிப்புப் செய்யப்பட்டுள்ளதுடன் தென்னிலங்கையில் இழப்புகளைக் குறைத்து வெளியிட்டு வருவதாகவும் அறியமுடிகிறது.
சிறுவர்கள் தொடர்பாக கரிசனையுடன் நடந்துகொள்வதாக சிறுவர் உரிமைகளில் கவனமுள்ளவர்களாகவும் அறிக்கைகளை வெளியிட்டு வரும் யுனிசெவ் மற்றும் யுஎன்;ஏச்சிஆர் போன்ற அமைப்புகள் தமிழீழப் பிரதேசங்களில் எந்தவித உதவிகளையும் இதுவரை வழங்கவும் இல்லை வழங்க முன்வரவுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: நிதர்சனம்
|
|
|
| இந்தியா உதவி: இந்திய கப்பல்கள் விரைவு |
|
Posted by: Vaanampaadi - 12-26-2004, 07:18 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (9)
|
 |
இலங்கையில் 1,300 பேர் பலி: இந்திய கப்பல்கள் விரைவு
கொழும்பு:
நிலநடுக்கம் காரணமாக உருவான கடல் கொந்தளிப்பில் இலங்கையில் 1,297 பேர் பலியாகிவிட்டனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்தியா மருத்துவ உதவி அளிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு உதவ 5 இந்திய கடற்படைக் கப்பல்கள் விரைந்துள்ளன.
தென்னிந்தியாவில் சென்னை, ஆந்திராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வங்காள விரிகுடாவில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் இந்தோனிஷியாவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தால் இலங்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உள்ளே புகுந்தது. தலைநகர் கொழும்புவில் பாதி கடல்நீரால் சூழப்பட்டுள்ளது. ஏராளமானோர் வீடிழந்தனர்.
குறைந்தது 1,297 பேர் இறந்திருப்பார்கள் என்றும், இன்னும் முழு விவரம் கிடைக்கப் பெறவில்லை என்றும் இலங்கைப் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவின் அலுவலக அதிகாரி லலித் வீரசிங்கே தெரிவித்தார்
. முன்னதாக காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், கடலலையில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர் தந்து உதவுமாறு இந்தியாவிற்கு ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் முட்டூர் என்ற கிராமத்தில் மட்டும் குறைந்தது 200 பேர் பலியானார்கள் என்றும், திரிகோணமலையில் 14 பேர் பலியானார்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியா உதவி:
கடல் கொந்தளிப்பு காரணமாக இலங்கையில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்த மன்மோகன் சிங், இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மீட்புப் பணிகளில் இந்திய கடற்படை உதவி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து 5 இந்திய போர்க் கப்பல்கள் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ, நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு விரைந்தன. விசாகபட்டிணம், கொச்சின், மும்பையில் இருந்து கிளம்பிய இந்தக் கப்பல்கள் இலங்கையின் திரிகோணமலை மற்றும் கலீ துறைமுகங்களுக்குச் செல்லும்.
இந்தக் கப்பல்களில் மீட்புப் பணிக்கு உதவும் ஹெலிகாப்டர்களும் உள்ளன.
300 கைதிகள் தப்பிப்பு:
இதற்கிடையே தெற்கு இலங்கை, மடாராவில் உள்ள சிறைச்சாலை கடல் கொந்தளிப்பு காரணமாக இடிந்ததில் அதில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் குறைந்தது 300 பேர் தப்பிச் சென்றுவிட்டனர்.
சிறைச்சாலை இடிந்ததில் யாராவது பலியானார்களா என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை.
|
|
|
| நிலநடுக்கம்,கடல்கொந்தளிப்பு - தமிழகத்திலும் பலத்த சேதம்...! |
|
Posted by: kuruvikal - 12-26-2004, 04:19 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (7)
|
 |
<span style='color:red'><b>தமிழகத்தில் நிலநடுக்கம் கடல் கொந்தளிப்பால் பேரழிவு: 3,000 பேர் பலி!!</b>
தமிழகத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாபெரும் கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட ராட்சத அலைகளிலும் 3,000க்கும் அதிகமானோர் அடித்துச் செல்லப்பட்டு பலியாகிவிட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்களைக் காணவில்லை.
இன்று காலை 6 மணியளவில் இந்தோனேசியாவில் பயங்கர பூகம்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும் மிகப் பெரிய நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து பெரும் அளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் தெற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில் ராட்சத அலைகள் எழுந்து தரைப் பகுதிகளுக்குள் நுழைந்தன. தமிழகம், ஆந்திரா, கேரளா, அந்தமான் தீவுகள், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பலியாகிவிட்டனர்.
இதில் தமிழகத்தில் 3,000க்கும் அதிகமானவர்களும் பிற மாநிலங்களில் சுமார் 700 பேரும் பலியாகியுள்ளனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளுக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 8.5 என்ற அளவுக்கு மாபெரும் பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உள்பட தெற்கு ஆசியா முழுவதும் நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து 50 முதல் 100 மீட்டர் வரை உயர்ந்த அலைகளால் கடல் நீர் ஊர்களுக்குள் புகுந்தது.
இந்தோனேஷியாவின் அருகே கடலில் காலை 6 மணியளவில் ஏற்பட்ட பூகம்பத்தின் தாக்கம் காரணமாக காலை 8.45 மணியளவில் தமிழக கடல் பகுதியில் அலைகளின் சீற்றம் திடீரென அதிகரித்தது. திடீரென 50 முதல் 100 மீட்டர் உயரத்துக்கு எழுந்த அலைகள் பயங்கர ஓசையுடன் கரைப் பகுதிகளுக்குள் புகுந்தன.
தமிழகத்தில் வரலாறு காணாத சேதம்: 3,000 பேர் பலி
இதில் கன்னியாகுமரியில் இருந்து மேற்கு வங்கம் வரையும் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. இதில் தமிழகம் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சென்னை நகரமும் கடலூரும் தான் இதனால் மிக அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.
100 மீட்டர் எழுந்த ராட்சச அலைகளால் தமிழகம் முழுவதும் சுமார் 3,000க்கும் மேற்பட்டவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பலியாகிவிட்டனர்.
நாகப்பட்டிணத்தில் மட்டும் 2,000 பேர் பலி:
உடல்கள் மீட்கப்பட்டதை வைத்து எண்ணிக்கை பார்த்தால் நாகப்பட்டினத்தில் 2,000 பேரும், கடலூர் மாவட்டத்தில் 200 பேர் பலியாகிவிட்டனர். சென்னையில் 150 பேரும், கல்பாக்கத்தில் 15 பேரும், கன்னியாகுமரியில் 150 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 48 பேரும் திருவள்ளூர், தூத்துக்குடியில் தலா பலரும் பலியாகியுள்ளனர்.
ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சென்னையில் நிலநடுக்கம்:
தமிழகத்தில் கடலுக்குள் மையம் கொண்டிருந்த நில நடுக்கத்தை தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் முழவதும் உணர முடிந்தது. இன்று அதிகாலை சென்னை நகரின் மையப் பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர்.
சென்னை நகரின் மையப் பகுதிகளான நுங்கம்பாக்கம், தி.நகர், வள்ளுவர் கோட்டம், மாம்பலம், அண்ணா நகர், முகப்பேரி, அம்பத்தூர், வில்லிவாக்கம், விரும்பாக்கம், மயிலாப்பூர், நந்தனம், பாண்டிபஜார், எழும்பூர், மந்தைவெளி, திருவான்மியூர், திருமங்கலம், பிராட்வே, தண்டையார்பேட்டை, துரைப்பாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 6.30 மணியளவில் மூன்று முறை அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது.
சுமார் 15 விநாடிகளே நீடித்த இந்த நில நடுக்கத்தால், வீடுகளில் இருந்த கட்டில்கள் ஆடின, கதவுகளும் ஆடியுள்ளன. இதனால் பீதியடைந்த மக்கள், குழந்தைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதையடுத்து 2 மணி நேத்தில் சென்னை உள்பட தமிழக கடலோரங்கள் முழுவதுமே கடல் கொந்தக்க ஆரம்பித்தது. சென்னை கடற்கரைச் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தவர்கள் ஆங்காங்கே காரை விட்டு, விட்டு ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ராட்சச அலைகளில் பல கார்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.
கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை அலைகள் அள்ளி 500 மீட்டருக்கு அப்பால் வீசின. கடலோரங்களில் இருந்த மீனவர் குப்பங்கள் அலைகளால் கபளீகரம் செய்யப்பட்டன.
நில நடுக்கத்தை தொடர்ந்து கடல் கொந்தளிப்பு:
கடலோரப் பகுதிகளான பட்டினப்பாக்கம், திருவான்மியூர், திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், எண்ணூர், ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் கடல் நீர் மணல் பரப்பையும் தாண்டி வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
திருவல்லிக்கேணி பகுதியில் மெரீனா கடற்கரையில் கடல் நீர் புகுந்து காமராஜர் சாலை வரை வந்ததால் அப்பகுதியில் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
நில அதிர்ச்சியின் அளவு குறித்து எதுவும் உடனடியாக தெரியவரவில்லை.
சென்னையில்...
சென்னையில் அயோத்தியா குப்பம், எண்ணூர், சீனிவாஸ் குப்பம் ஆகிய பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. கடற்கரைச் சாலையில் இருந்த பஸ் நிறுத்தங்கள் எல்லாமே அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டன.
எண்ணூர் துறைமுகத்தில் இருந்த மீன்பிடி கப்பல்கள் அலைகளால் தரையில் தூக்கி வீசப்பட்டன.
திருவாரூர், நாகை, வேளாங்கண்ணியிலும்..
சென்னையில் ஏற்பட்டதைப் போலவே திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட சில ஊர்களில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள், கட்டில், கதவு ஆகியவை ஆடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதேபோல நாகை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நில நடுக்கம் காணப்பட்டது. வேளாங்காண்ணி பகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
குமரி முதல் சென்னை வரை...
தமிழகத்தில் குமரி முதல் சென்னை வரையிலான கடலோரப் பகுதிகள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன.
நெல்லை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான இடிந்தகரை, உவரி, கூத்தங்குளம், தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் கொந்தளிப்பு அதிகமாக காணப்பட்டது.
இதேபோல, திருவாரூர், நாகப்பட்டனம், கடலூர், காரைக்கால், புதுவை மற்றும் சென்னை நகரின் கடலோரப் பகுதிகளிலும் கடல் கொந்தளிப்பு அதிகம் இருந்தது.
ராட்சத அலைகள் அவ்வப்போது எழுந்து ஊருக்குள் புகுவதால் கடல் நீர் அதிக அளவில் ஊர்களுக்குள் புகுந்து வருகிறது. கடல் சீற்றம் அதிகம் இருப்பதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
கடலோர மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு மீட்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.
கடல் கொந்தளிப்பில் நாகப்பட்டினம் காரைக்கால் இடையிலான மதகடி பாலம் தகர்ந்து போனது. இதனால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் தரைமட்டமானது.
கடற்படையினர், போலீசார், கடலோர காவல் படையினரும் ஆயிரக்கணக்கான பொது மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 10 நிமிடங்களில் ராட்சச அலைகள் வந்துவிட்டுப் போனதில் இவ்வளவு பயங்கரமான சேதம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் பள்ளிகள், கல்லூரிகள், கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருத்துவ உதவிகளை மாவட்ட நிர்வாகங்கள் வழங்கி வருகின்றன. </span>
that'stamil.com
|
|
|
| இந்தியபெருங்கடலில்இன்றுகாலை 6.40 மணிக்குமிகபயங்கரநிலநடுக்கம் |
|
Posted by: aathipan - 12-26-2004, 11:31 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
இந்திய பெருங் கடலில் இன்று அதிகாலை 6.40 மணிக்கு மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுமித்ரா தீவு அருகில் தோன்றிய இந்த நில நடுக்கம் ரிக்டேர் ஸ்கேல் அளவுப்படி 8.1 அளவுக்கு பதிவானது.
கடலுக்கு அடியில் தோன்றிய நிலநடுக்கம் மிக பெரிய அதிர்வை தென்ஆசியா பகுதியில் ஏற்படுத்தியது. இதன் விளைவாக இந்தியா-இலங்கை, இந்தோனேசியா உள்பட பல நாடுகளில் பேரழிவு ஏற்பட்டது. தென் இந்தியாவில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு பேரழிவு ஏற்பட்டது.
காலை 6.35 மணிக்கு சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் குலுங்கின. மக்கள் அலறியடித்து ஓடினார்கள். 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் சென்னை மக்கள் இடையே பீதி ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அதிர்வுகள் உண்டாகின. இதனால் இந்திய பெருங்கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடல் தண்ணீர் சுமார் 50 மீட்டர் முதல் 100 மீட்டர் வரை கொந்தளித்தது.
தமிழ்நாட்டில் சென்னை முதல் குமரிமுனை வரை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் ஊருக்குள் கடல் தண்ணீர் புகுந்தது. சென்னை, விசாகப்பட்டினம், நெல்லூர், தூத்துக்குடி துறைமுகங்களில் கடல் தண்ணீர் பல அடி உயரத்துக்கு எழுந்தது.
சென்னையில் கல்பாக்கம், எண்ணூர், தண்டையார் பேட்டை, திருவொற்றிïர், காசிமேடு, துறைமுகம் , மெரீனா கடற்கரை, சாந்தோம், பட்டினம்பாக்கம், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மிïர், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங் கேணி, கோவளம், பழவேற்காடு பகுதிகளில் கடல் கொந்தளிப்பு கடுமையாக இருந்தது. கடல் தண்ணீர் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊருக்குள் புகுந்தது.
இதனால் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடல் தண்ணீரில் பல்லாயிரக்கணக்கான குடிசைகள் அடித்துச்செல்லப்பட்டன.
மெரீனா கடற்கரையில் சீறி பாய்ந்த கடல் தண்ணீரை கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். உயிர் பிழைக்க மெயின்ரோட்டுக்கு ஓடினார்கள். கடல் தண்ணீர் அவர்களை துரத்தி மூழ்கடித்தது.
மெரீனா கடல் பகுதியில் பொங்கிய கடலின் சீற்றம் காரணமாக கடல் தண்ணீர் மெயின் ரோடு வரை வந்து விட்டது. மெரீனா கடற்கரையே காணாமல் போய் விட்டது போல கடல் தண்ணீர் நிறைந்திருந்தது.
எம்.ஜி.ஆர். அண்ணா சமாதிகளும் கடல்தண்ணீரில் மிதந்தன. அயோத்தியாகுப்பம் பகுதியில் இருந்த குடிசைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.பல குடிசைகள் கடல் தண்ணீர் புகுந்த வேகத்தில் காணாமல் போய் விட்டன.
பட்டினப்பாக்கம், எலியாட்ஸ் கடற்கரை, வெட்டு வாங்கேணி, உள்ளிட்ட கடலோர ஊர்கள் அனைத்திலும் கடல் தண்ணீர் புகுந்தது. கடல் சீற்றத்தின் இந்த எதிர்பாராத தாக்குதலால் கடலோர பகுதிகளில் வசித்து வந்த மக்கள் நிலை குலைந்து போனார்கள்.
கடல் தண்ணீர் சீற்றத்துக்கு குடிசைவாசிகளால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஏராள மான குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானவர்களை கடல் தண்ணீர் அடித்துச் சென்று விட்டது.
கடலோர பகுதி மக்களின் உடைமைகள் அனைத்தும் கடல் தண்ணீரோடு தண்ணீராக போய் விட்டது. அதிகாலை நேரத்தில் குடிசைக்குள் மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் நூற்றுக்கணக்கானவர்கள் கடல் தண்ணீரில் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
கடல் அலைகள் ஆர்ப்பரித்து வந்ததால் கூவம் ஆற்றுக்குள் கடல்தண்ணீர் வெள்ளம்போல பெருக் கெடுத்து ஓடி வந்தது. இதனால் சென்னை நகருக்குள் பல மைல் தூரத்துக்கு கடல் தண்ணீர் புகுந்தது.
இதனால் சென்னைக்குள் கடல்தண்ணீர் மளமள வென்று வருவதாக மக்கள் மத்தியில் பீதி பரவியது. இதையடுத்து கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டைவிட்டு குடும்பம், குடும்பமாக வெளியேறினார்கள்.
பல இடங்களில் மக்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு உயிர்ப்பிழைக்க ஓடிய காட்சி பரிதாபமாக இருந்தது.
ஈஞ்சம்பாக்கம் அருகில் உள்ள வெட்டுவாங்கேணியில் கடலோரத்தில் சுமார் 5 ஆயிரம்குடிசைகள் இருந்தன. அந்த குடிசைகள் அனைத்தையும் கடல்தண்ணீர் அடித்துச் சென்றது.
கடல் அலை ஒரு பனை உயரத்துக்கு தண்ணீர் சிறி எழுந்து வந்ததால் 5 ஆயிரம் குடிசைகளும் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.
சென்னையில் கடலோர பகுதிகளில் இருந்த குடிசைகளும் தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அந்த குடிசைகளில் வாழ்ந்த ஏழை எளியவர்கள் எல்லாரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
ஆயிரக்கணக்கானவர்களை காணவில்லை. சாவு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. 10 மணிக்கு கிடைத்த முதல் தகவல்படி கடல் தண்ணீரில் மூழ்கி சுமார் 100 பேர் வரை பலியாகி விட்டது தெரிந்துள்ளது.
கடலோர பகுதிகளில் காணாமல் போனவர்களை உறவினர்கள் தேடி அலைவது பரிதாபமாக இருந்தது. குடிசை வாழ்மக்கள் கண்ணீரும் கம்ப லையுமாக அங்கும் இங்கும் ஓடினார்கள்.
கடலோர குடிசை பகுதிகளில் மக்களின் அழுகை குரல் கேட்ட வண்ணம் உள்ளது. முழுமையான தண்ணீர் வடிந்த பிறகே இந்த நில நடுக்கம் எத்தனை உயிர்களை சாவு கொண்டது என்பது தெரிய வரும்.
கடலூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித் துள்ளது. புதுச்சேரி, வேளாங் கண்ணி, நாகை, திருவாரூர், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சென்னையில் சாவு எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு பல்லாயிணரக்கில் இருக்கும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
பழைய மகாபலிபுரம் சாலையில் கேளம்பாக்கம், பையனூர், திருபோரூர், ஆலத்தூர், நாவலூர் ஆகிய ஊர்களில் கடல் தண்ணீர் புகுந்து மக்கள் வீட்டை விட்டு காலி செய்து விட்டனர். அங்கு கடல் தண்ணீர் மீண்டும் மீண்டும் கொந்தளித்து ஊருக்குள் வந்தபடி இருந்தது.
கோவளத்தில் ஊரே காலியாகி விட்டது. மக்கள் மூட்டை மூச்சுகளுடன் வெளியாகி விட்டனர். பழவேற்காடு பகுதியில் 25 மீனவ கிராமங்கள் கடல் தண்ணீரில் மூழ்கி விட்டன.
லைட்ஹவுஸ் குப்பம், தாங்கள்திருபுழம் பகுதிகள் கடலுக்குள் மூழ்கி உள்ளன. அந்த ஊர்களில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். அவர்களை படகு மூலம் மீட்கிறார்கள்.
கடலோர மாவட்டங்களில் தண்ணீரில் மூழ்கி இருப்பவர் களை மீட்க கடலோர காவல் படையும், ராணுவமும் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள் ளது. ஹெலிகாப்டர்கள் கடலோரங்களில் தாழ்வாக பறந்து தண்ணீரில் தத்தளிப் பவர்களை மீட்கிறார்கள்.
மெரீனா கடற்கரையில் நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை. அவர்களை தேடி உறவினர்கள் கண்ணீர் மூழ்க அலைந்தனர்.
மெரீனா கடற்கரையில் தண்ணீர் ஊருக்குள் வந்து விட்டது என்பதை அறிந்ததும் திருவல்லிக்கேணி, மயி லாப்பூரைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் வேடிக்கை பார்க்க திரண்டனர். திடீரென ஏற்பட்ட மற்றொரு கடல் கொந்தளிப்பு அவர்களையும் இழுத்து சென்றது.
இதனால் சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 10-30 மணிக்கு சென்னை பெரிய ஆஸ்பத்திரிக்கு 45 பிணங்கள் கொண்டு வரப்பட்டன. காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
|
|
|
|