| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 558 online users. » 0 Member(s) | 555 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,454
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,648
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,542
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| புதுமையான புகைப்படங்கள் |
|
Posted by: தூயா - 04-03-2005, 04:29 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (268)
|
 |
தூயாவின் கணனியை பார்க்க விரும்பினால்??
<img src='http://img226.exs.cx/img226/2738/image0011zc.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img226.exs.cx/img226/1646/image0031ao.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img226.exs.cx/img226/4218/image0043vm.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img226.exs.cx/img226/9333/image0050ut.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img233.exs.cx/img233/5843/untitled7mh.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img233.exs.cx/img233/7/untitled18yh.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| நிழல்களின் நிஜங்கள் |
|
Posted by: தூயா - 04-03-2005, 04:07 PM - Forum: சினிமா
- Replies (39)
|
 |
பார்க்க கொஞ்சம் பயமா தான் இருக்கு.சரி நீங்களும் பார்த்து பயப்பிடுங்கோ!!!!
<img src='http://img120.exs.cx/img120/640/celeb10yf.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/2493/celeb95yv.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/9619/celeb80ik.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/5161/celeb75mg.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/5821/celeb66tg.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/1963/celeb57qn.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/3108/celeb49bn.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/6803/celeb39lv.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/5601/celeb20lv.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img120.exs.cx/img120/640/celeb10yf.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| þô§À¡! ¿¡õ!! |
|
Posted by: Magaathma - 04-03-2005, 01:22 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (40)
|
 |
<img src='http://www.gopinath.de/yalhindu1.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.gopinath.de/yalhindu2.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.gopinath.de/yalhindu3.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| அரசுக்கு எதிராக யாழ் முல்லையில் ஏப்.6-ல் பிரமாண்ட பேரணிகள் |
|
Posted by: sompery - 04-03-2005, 12:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணத்திலும்ää முல்லைத்தீவிலும் பேரணிகள் நடைபெறவுள்ளன.
மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றியம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
கிழக்கில் போராளிகள் மீதும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் படுகொலைகளையும் கண்டித்து நல்லூர் கோட்ட பொது அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து யாழ். நகரில் நல்லூர் ஆலய முன்றலில் பேரணி ஆரம்பித்து போர் நிறுத்த கண்காணிப்புக்குழு அலுவலகம் வரை சென்று மனு கையளிப்புடன் முடிவடையவுள்ளது.
குடாநாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள அவர்களுடைய இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இப்பேரணியில் வலியுறுத்தப்படும்.
முல்லை மாவட்ட மக்கள் நடத்தும் கண்டனப்பேரணி புதுக்குடியிருப்புää ஒட்டிசுட்டான் ஐயனார் கோவிலடிää பரந்தன் வீதியில் ஆகிய இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் ஆரம்பித்து புதுக்குடியிருப்புச் சந்தியை வந்தடைந்ததும் கண்டனக்கூட்டமும் மனு கையளிப்பும் நடைபெறும்.
புதுக்குடியிருப்பு தேசிய எழுச்;சிப் பேரவை செயலாளர் வீ.கனகசுந்தரம் சுவாமி தலைமையில் இந்த பேரணி நடைபெறும்.
முல்லைத்தீவில் அரசின் தமிழர் விரோத செயற்பாடுகளைக் கண்டித்தும் பல கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் முன்வைத்தும் பேரணி நடத்தப்பட உள்ளது.
|
|
|
| சோமவன்ச |
|
Posted by: spyder12uk - 04-03-2005, 11:23 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (1)
|
 |
"...இச் சோமவன்ச வேறு யாருமில்லை. இன்றைய ஜே.வி.பியின் தலைவர்; சவடால் மன்னன், மார்க்சியத்தை தெருப்புழுதிக்குள் வீசி நாசமாக்கிய மன வக்கிரக்காரன். மார்க்சை இரண்டாம் தடவை கொன்றவன். ...."
வரலாற்றில் சில அபூர்வமான தருணங்கள் வாய்ப்பதுண்டு. அத்தருணங்களில் வரலாற்றின் பாய்ச்சலைத் தடுக்கும் சக்திகளே அதனை தூண்டும் கருவிகளாக மாறிவிடும். ஒரு விடுதலை அமைப்பினை அழிப்பதாகக் கருதி எதிரியே அவ்வமைப்பு மீதமாக நிறைவேறப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்வதற்கு தகுந்த வாய்ப்பினை வழங்கிவிடக்கூடும்.
எனவே விடுதலைப்புலிகள் தமது இலக்கினை அடைய எடுக்கும் முயற்சிகளை தாமே தடுத்து நிறுத்தி வருகின்றோம் என மார்பு தட்டும் ஜே.வி.பியே விடுதலைக்கான மிகுதி நிகழ்ச்சி நிரலையும்; ப10ரணப்படுத்த எமக்கு உதவக்கூடும். மார்ச் மாதம் இரண்டாம் திகதி கொழும்பு விகாரமா தேவி வெளியரங்கில் ஜே.வி.பியின் முன்னணி அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய அமைப் பால் (PNM-PATRIOTIC NATIONAL MOVEMENT) பெருமெடுப்பில் எதிர்ப்பியக்கமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2005: மீள் குடியேற்றவாத எதிர்ப்பியக்க ஆண்டு என்கிற இவ்வியக்கம் வெளிநாட்டவர் மீதான கடுமையும் காழ்ப்புணர்ச்சியும் மிக்க பரப்புரையை தீவிரமாக செய்யத்தொடங்கியுள்ளது.
போர்த்துக்கேயர் வருகையின் 500வது ஆண்டு நிறைவின் ஆண்டாக 2005ஐப் பிரகடனம் செய்தது. குடியேற்றவாதம்ää ஏகாதிபத்தியம் என்பவற்றிற்கெதிரான எதிர்ப்பினைத் தேசியவாதமும் முற்போக்கும் கலந்த கலவையாக்கி அதனடிப்படையில் தமிழர் மீதான காழ்ப்பைää வெறுப்பினை விதைக்கும் நிகழ்ச்சியை மறைத்து ஜே.வி.பியினர் போடும் ஆட்டம் எல்லா எல்லைகளையும் தாண்டி விட்டது. இது கண்டு அம்மையாரே அதிர்ந்து போயிருப்பதாகத் தெரிகின்றது. இன்று சிறிலங்காவிலே ஜக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் எல்லா ஆயுதங்களையும் ஜே.வி.பியிடம் பறிகொடுத்து அம்மணமாக நிற்கின்றன. தொடக்கத்தில் வி.ஜே.பி இந்தியாவில் வெறித்தனமாக செயற்பட்டது போலää தலிபான்களின் அடிப்படை வாதப்போக்கின் நிழல்போல ஜே.வி.பி செயற்படுவது இப்போது பலராலும் மிகக்கவலையோடு அவதானிக்கப்பட்டு வரப்படுகின்றது. எனவே கடந்த இரண்டாம் திகதியன்று இந்நிகழ்ச்சியில் விமல் வீரவன்ச உதிர்த்த வரலாற்று வாசகங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
'1505 ஆம் ஆண்டு கடற்கொந்தழிப்புக் காரணமாக போர்த்துக்கேயரான லொறன்சோத அல்மேய்தா இலங்கை வந்தடைந்தார். இன்று கடல்கோள் காரணமாக உதவி வழங்கும் போர்வையில் எம் நாட்டினை அடிமைப்படுத்த பலர் வந்துள்ளனர்." 'இன்று சூல்கெய்ம் கண்டி சென்று மகாநாயக்கர்களை வணங்குகின்றார். சிங்களப் பிரதேசங்களுக்கு வருகை தருகின்றார். இவை யாவும் அன்பின் விளைவல்ல. இவையாவும் நஞ்சு. இதுபோலத்தான் அன்று யோன் டொய்லி என்கிற ஆங்கிலேயர் கண்டி சென்று மகாநாயக்கர்களைச் சந்தித்தார்... சிறி விக்கிரமராயசிங்கனோடு பழகி அவனை மதுவருந்தப் பழக்கினார்ää பின் கழுத்தறுத்தார். கண்டியை அன்று காட்டிக்கொடுத்த டொய்லியின் வேலையைத்தான் இன்று அரச சார்பற்ற அமைப்புக்கள் செய்து வருகின்றன." 'பௌத்த இராச்சியத்தை அழித்துவிட்டு தமிழ்க்; கிறிஸ்தவ தமிழீழத்தை உருவாக்கவே சர்வதேசமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அதற்கான நிகழ்ச்சி நிரலை இங்கு செயற்படுத்தி வருகின்றன."
விமல் கூறிய இன்னொரு விடயத்தினை கவனத்தில் நாம் கொள்ளவேண்டும். 'விரைவில் மீட்கப்படாத பகுதிகளும் மீட்கப்பட்டுவிடும். சுனாமியின் பின் 5ää6 நாட்கள் புலிகள் காணாமல் போயிருந்தார்கள். இந்த அரசாங்கம்தான் அவர்களுக்கு மூச்சு வழங்கியது." (தினக்குரல் 04-03-2005)
பிறக்கும்போதே அழிவதற்கான சாபத்தோடு பிறந்தவர்கள் என கதைகளிற்றான் வாசித்துள்ளோம். கருவிலேயே தன்னையே கருவறுப்பதற்கான கருக்களைக் கொண்டு பிறந்த ஒரு விசித்திர முற்போக்கு(?) அமைப்பொன்றினை இப்போது தான் காண்கிறோம். 1505 ஆம்; ஆண்டிற்கு முன் செல்வோம்; அழிக்கப்பட்;ட 250 விகாரைகள் உட்பட அனைத்திற்கும் நட்டஈடு போர்த்துக்கேயரிடம் கோருவோம் என்கிற இக்கருத்துக்கள் உண்மையிலேயே மிக ஆழமான அருத்தங்களை கொண்டவை. உண்மையிலே எமது விடுதலையின் ஆதார நிலைப்பாடுகளும்;ää தார்மீக வலுக்களும் இவ்வாதங்களிலுள்ளன. 1505 முன்னுள்ள நிலைக்கு சென்றால் தமிழ் ராச்சியமும் தமிழ்மக்களின் பண்பாட்டுää பொருண்மிய மரபுகளுமல்லவா முதலில் மீட்கப்படவேண்டும். போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட 500 ஆலயங்களுக்கும் சேர்த்து அல்லவா நட்டஈடு கோரப்படவேண்டும். கிக்கடுவை சிறி சுமங்கல தேரரின் நாட்டுப்பற்று பற்றி வீரவன்ச பேசும்போது சங்கிலி மன்னன் பற்றியும் அல்லவா அவர் பேசவேண்டும்? ஏன் இவை நிகழவில்லை? சிறிலங்காவின்;; முழுமையான நாசத்திற்குக்காரணமாகப் போகும் இக்காரணம் பற்றி இத்தீவில் கவலைப்படுவர் யார்?
எமது முழுக்கவனமும் நிகழ்காலத்தில் ஜே.வி.பி இழைத்து வரும் மாபெரும் தவறு பற்றியதாகவே உள்ளது. ஜே.வி.பி ஏலவே இழைத்த தொடர் தவற்றின் மூன்றாவதும் இறுதியுமாக போகும் இத்தவறு இவ்வுலகின் மனிதநேயமிக்கோரால்ää விடுதலையுணர்வு கொண்டோரால்ää முற்போக்காளரால் ஒருபோதும் மன்னிக்கப்பட முடியாததான பெரும் அவலம் நிரம்பிய நினைவுகளாகப் போகின்றன. ஏனெனில் மிகச்சரியானää மிக நீதியான சமூகக் காரணங்களோடு ஒரு மாற்றம் நடப்பதற்கான அகப்ää புறச்சூழல் தோற்றம் பெற்ற காலகட்டத்திலே ஜே.வி.பி தோற்றம் பெற்றது. சுதந்திரம் பெற்ற மறுகணமே ஏழைச் சிங்கள மக்களை ஏய்த்;து அவர்கள் வளமான வாழ்வைப்பறித்த சிங்கள ஆளும் மேட்டுக் குடிக்கெதிராக முழு இளைஞர் தொகையில் 76 விழுக்காடு கிராமங்களில் வாழ்ந்த ஏழை விவசாயää பாட்டாளிகளின் மைந்தர்கள் கிளர்ந்ததை எவரும் எவ்வாறு பிழையென சொல்ல முடியும்? எனவே தனது முதலாவது கிளர்ச்சியை நடத்த முன்னரே சிறைப்பிடிக்கப்பட்ட றோகன விஜேயவீரா குற்றவியல் நீதி ஆணைக் குழுவின் முன் பேசினார். (மொன்காடா கோட்டை தாக்குதலின் பொழுது சிறையாகியிருந்த பிடல் நீதிமன்றில் வரலாறு என்னை விடுவிக்கும் எனப் பேசியதன் சாயலில்) இங்கே நடப்பது என்னவென்றால் ஒரு சமூக வருக்கத்தின் பிரதிநிதி இன்னொரு வருக்க பிரதிநிதி நோக்கி உரையாடுவதுதான். ஒடுக்கு முறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளான வருக்கத்தின் பிரதிநிதி ஒடுக்கும் சுரண்டும் வருக்கப்பிரதிநிதி நோக்கி விளிப்பதுதான். 'நானொரு மார்க்சியவாதி@ நானொரு நவீன போல் சுவிச்; நானொரு பாட்டாளி வருக்கப் புரட்சியாளன்." எத்தகைய உயரிய வார்த்தைகள்? இவற்றினை உச்சரிக்க தன்னும் இவருக்குத் தகுதியிருந்ததா. இவையாவுமே உண்மையாகவிருந்தால் இத்தீவில் இருநாடுகள் அருகருகே அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும்? றோகண உயிருடன் வாழ்ந்திருப்பார்ää ஒரு புரட்சியாளனாக அவர் உலகால் போற்றப்பட்டிருப்பார்?
ஆனால் நடந்ததென்ன? 1971 ஏப்பிரலில் நடைபெற்றிருக்க வேண்டிய புரட்சி கிளர்ச்சியாகியது. அரசையே கைப்பற்றத்திட்ட மிட்ட ஆயுதப்புரட்சி 53 இராணுவத்தினரை 37 பொலிசுக்காரரை கொன்று 35 காவல் நிலைகளைச் சிலமணிநேரம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததோடு முடிவிற்கு வந்தது. இங்கேயொரு குறிப்பினை வாசகர்களுக்கு சொல்லவேண்டும். ஜே.வி.பியினர் நிறைவேற்றாத புரட்சி தோற்றதற்கு என்ன காரணமென்பதை ஆராய்வதோ அவர்களது இராணுவச் செயற்பாட்டினை விமர்சிப்பதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் எத்தனை மோசமான இராணுவத் திட்டமிடலடிப்படையில் செயற்பட்டுத்தோற்ற இவர்கள் இன்று எல்லாவற்றிற்கும் பிறர்மீது குறிப்பாக தமிழ்பேசும் மக்கள் மீதே பெரும் பழிசுமத்துவது எவ்வகையிலும் ஏற்கமுடியாதது. புரட்சியை நடத்த வேண்டிய புரட்சித்தலைவர் புரட்சிக்கு முன்னரே கைதாகி விடுகின்றார். புரட்சிக்கான இறுதி ஆயத்தங்களைச் செய்ய 1971 மார்ச்சில் மாவட்டங்களுக்குப் பயணித்த ரோகண அம்பாறையில் வைத்துக் கைதாகி யாழ்ப்பாணச் சிறைக்குள் தள்ளப்படுகின்றார்.
இந்நிலையில் வித்தியோதயப் பல்கலைக்கழக விகாரையில் கூடிய ஏனைய தலைவர்கள் ஏப்ரல் 5ல்;; சகல காவல்நிலையங்களையும் தாக்க முடிவெடுத்தனர். அரசைக் கைப்பற்றும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. தகவல் பரிமாற கருவிகளற்ற நிலையில் தொடர்புகளை ஏற்படுத்துவதிலேற்பட்ட தவறு காரணமாக இரவு தாக்கப்பட வேண்டிய வெல்லவாய காவல்நிலையம் அதிகாலை 5.20க்கு தாக்கப்பட்டது. மொனறாகலை ஜே.வி.பியினருக்கு தாக்குதலைத் தொடங்குமாறு உத்தரவு தந்தி வழியே வழங்கப்பட்டது. புகழ்பெற்ற இத்தந்தி 'ஜே.வி.பி அப்புகாமி இறந்துவிட்டார். இறுதிச் சடங்கு 5" என்றமைந்தது. இதனை தவறுதலாக விளங்கி அதிகாலையிலேயே தாக்குதல் ஒரு பொலிசு நிலையம் மீது நிகழ்த்தப்பட்டது. எனவே பொலிஸ் தலைமைப்பீடம் விழிப்படைந்தது. இங்கு நகை என்னவென்றால் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கான முன்னறிவிப்பு கிடைத்த நிலையிலும் பொலிசுக்காரர்களால் தங்களை முற்றாகப்பாதுகாக்க முடியாமல் போனதுதான். இவ்வாறாக ஒரு தந்தியால் புரட்சி கிளர்ச்சியான கதையிது.
மிகுதிக்கதையையும் மீண்டும் இங்கே நினைவுபடுத்திவிடுகின்றோம். கொழும்;பு அரசினையும் கைப்பற்றத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. பிரதான இராணுவ முகாமான பனாகொடையைத் தாக்க 800 மாணவர்கள் 25பேர் கொண்ட குழுக்களாகப்பிரிக்கப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டிருந்தனர். பனாகொடை முகாம் பற்றிய வரைபடமும் கையில் இருந்தது. ஆனால் தாக்குதல் நிகழ்த்தப்படவேயில்லை. ஏனெனில் தாக்குதல்காரர்கள் பனாகொடைப் பக்கம் செல்லவேயில்லை. அது போலத்தான் கட்டுநாயக்கா தளம் மீதான தாக்குதலும் நடக்கவேயில்லை. அதுபோலவே கொழும்பை கைப்பற்றவும் பெருந்திட்டமொன்று வகுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சென்று விஜேவீரவை மீட்கும் திட்டமும் தோல்வி கண்டது. நாட்டின் பிரதம மந்திரியான சிறிமாவைக் கடத்துவது அல்லது கொல்வதென்றும் திட்டமிருந்தது. இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் சோமவன்ச அமரசிங்க. நீர்ப்பாசனத்திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளரான இவர் 5ம்திகதி இரவே கைதானார். ஊடரங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் தாக்குதலுக்குப் பொறுப்பானோர் நகரமுடியவில்லை. இச் சோமவன்ச வேறு யாருமில்லை. இன்றைய ஜே.வி.பியின் தலைவர்; சவடால் மன்னன்; மார்க்சியத்தை தெருப்புழுதிக்குள் வீசி நாசமாக்கிய மன வக்கிரக்காரன். மார்க்சை இரண்டாம் தடவை கொன்றவன்.
எனவே ஜே.வி.பியினரின் முதற்புரட்சி இவ்வாறு இடை நடுவில் முடிந்தது. இதற்கு ஜே.வி.பியினரின் திறனற்ற இராணுவ மூலோபாயங்கள் உத்திகள் மட்டுமா காரணம்? விடுதலைää புரட்சி போன்ற உயரிய கருத்தமைவுகளை இவர்கள் புரிந்து கொண்டவிதம் அவர்கள் இவற்றினை அபத்தமாக கையாண்டமை எல்லாமே அவர்கள் செய்யக்கிளம்பிய புரட்சிக்கே எதிரானவை. மாற்றத்தினைக் கொண்டு வர தடையான மாறாத நிலைப்பாடுகள்ää இயங்கியல் என்னும் சமூக அசைவியக்கத்தினை பின்தள்ளும் காரணிகள்.
எனவே மார்க்சைää ஏங்கல்சை லெனினைää கரைத்துக்குடித்து சேயைää பிடலை மோசமாக மனதில் உருவகப்படுத்திய றோகணவிக்கு மிக மோசமாகச் சுறண்டப்பட்ட ஏழைப்பாட்டாளியானää மலையக மக்கள் இந்தியாவின் விரிவாக்கக் கைக்கூலிகளாகத் தெரிந்தனர். மலையக மக்களை முன்னனிப்படையாகக் கருதிய சண்முகதாசன் ஒரு இனவாதி. ஒடுக்குமுறைக்குட்பட்ட தமிழ்மக்கள் கிள்ளுக்கீரைகள். இவை யாவற்றினையும் விட 1970களில் தமிழ் இளைஞர் மனதிலே கனன்று கொண்டிருந்த விடுதலைத்தீயை அடையாளம் காண முடியாத அகக்குருடர்கள் இவர்கள்.
இவர்கள் எவ்வாறு புரட்சி செய்வது? ஒருபொழுதும் முடியாது என்பதற்கு நெறி கெட்டு அலங்கோலமாகிய 2வது(?) புரட்சியே இன்னொரு சான்று-
சுட்டது விடுதலைப்புலிகள் மாசி-பங்குனி மாத ஏடு
|
|
|
| தமிழ்ஊடக பங்களிப்பு |
|
Posted by: thamilvanan - 04-03-2005, 08:16 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (9)
|
 |
புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கையில் தமிழ் ஊடகங்களின் பங்களிப்பும் ஊடகங்களுக்கான சமூகத்தின் பங்களிப்பும் என்ற விடயமாக சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இன்று ஒட்டுமொத்தமான தமிழ் ஊடகங்களும் ( தமிழீழ புலம்பெயர் ஊடகங்களை மட்டும் கருதுகிறேன்) தமிழ் மக்களுக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவுமே செயற்பட்டு கொண்டிருக்கின்றன.
புலம்பெயர் தமிழர்களின் எதிர்கால சந்ததி தமிழ் மறந்த ஒரு நிலை ஏற்பட கூடாதென்பதற்காக தமிழ்ச் சமூகம் சிந்தித்து செயற்படவேண்டும். இதற்காக செய்யக்கூடியவை என்ன? தமிழ் ஊடகங்களாக இன்று இயங்கி வரும் முக்கியமாக தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பது முக்கியமானதாகும். தனியே வியாபார நோக்கத்துடன் செயற்படுகின்ற தொலைக்காட்சிகளாக தமிழீழ சார்பு தொலைக்காட்சிகள் இல்லை என்பதை யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
எனவே தொலைக்காட்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் எமது பிள்ளைகளை தமிழ் சமூகத்தின் பிள்ளைகளாக, தமிழ் இனம் என்ற உணர்வுடன் வளருவார்கள். தமது பிள்ளைகள் ஒழுக்கநெறியுடன் வாழவேண்டும் என கருதும் பெற்றோர் தாம் தமிழ் சமூகத்தின் அங்கம் என்பதையும் அதனை ஊட்டுவதன் மூலமும் நமது சமூகத்துக்கு ஏற்ற பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். தமிழ் நிகழ்ச்சிகளை பார்ப்பதன் மூலமும் தமது நாட்டின் நிகழ்வுகளை செய்திகள் மூலம் அறிந்து கொள்வதன் மூலமும் தமிழர்களாக வாழுவார்கள்.
தொலைக்காட்சிகள் பார்ப்பது கூடாது என்று கூறிய காலம் போய் இப்போது இவன் என்ன தொலைக்காட்சிகளை பார்ப்பதை ஊக்குவிக்கிறானா எனவும் சிலர் எண்ணக்கூடும். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டிலோ அல்லது தமிழீழத்திலோ இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
எனவே நமது புலம்பெயர் தமிழர்கள் சமூகத்துக்கு பங்களிப்பு என்ற ரீதியில் தொலைக்காட்சிகளையோ வானொலிகளையோ பத்திரிகைகளையோ ஊக்குவிக்கும் முகமாக அவற்றுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும்.
|
|
|
| சிறீலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது |
|
Posted by: Mathan - 04-02-2005, 11:26 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
சிறீலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது
இந்த மாதத்துடன் சிறீலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவெடுத்துவிட்டதாக சிறீலங்கா அதிபர் சந்திரிகா அறிவித்துள்ளார்.
கொள்கை முரண்பாடுகள் வலுத்துள்ளதால்ää தொடர்ந்தும் ஜே.வி.பி.யுடன் இணைந்து நாடாளுமன்றத்தைக் கொண்டுசெல்ல முடியாதுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதினம்
|
|
|
| உதவி |
|
Posted by: MEERA - 04-02-2005, 08:32 PM - Forum: கணினி
- Replies (12)
|
 |
பாமினியில் ரைப் செய்து விட்டு பிரின்ட் செய்தால் தமிழ் எழுத்துக்கள் சரியாக வரவில்லை ஏன்?
யாரவது உதவுங்கள்..
|
|
|
| அதிரடிப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் |
|
Posted by: eelapirean - 04-02-2005, 05:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
அதிரடிப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அகதி முகாம்களில் தொடர்ந்தும் வாழ முடியாது
கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் மக்கள் முறையீடு
அகதி முகாமுக்குள் இரவு நேரங்களில் வரும் விசேட அதிரடிப் படையினர் ஆபாசமான ஆங்கிலப் படங்களை போட்டு விட்டு இங்குள்ள பெண்களுடன் தகாத முறையில் நடக்க முற்படுவதுடன் மக்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். எனவே இவர்களிடமிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்.
இவ்வாறு நேற்று முன்தினம் வியாழக்கிழமை மண்டானை அகதி முகாமை பார்வையிடச் சென்ற தமிழ்க் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் முறையிட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் உட்பட பல போராளிகள் மண்டானை அகதிமுகாமில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அம் முகாமிலுள்ள மக்கள் விசேட அதிரடிப் படையினரின் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருவதனால் அவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான க.தங்கேஸ்வரிஇ க.கனகசபைஇ எஸ்.ஜெயானந்த மூர்த்திஇ பா.அரியநேத்திரன் ஆகியோர் சென்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அகதிமுகாமிலுள்ள மக்கள் மேலும் கூறியதாவது;
எமக்கு உதவி செய்ய வந்த குயிலின்பன் உட்பட இன்னும் சில போராளிகளை எமது முகாம் பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினர் மிக மோசமாகத் தாக்கினர். விசேட அதிரடிப் படையினரின் தாக்குதலை நாம் தடுக்கச் சென்ற போது எம்மை நோக்கி துப்பாக்கிகளை நீட்டி சுடுவோம் என மிரட்டினார்கள்.
அத்துடன் போராளிகள் வந்த ஹபிக்கப்' வாகனத்தினுள்ளே கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை வைத்துவிட்டு விசேட அதிரடிப் படையினர் புகைப்படம் எடுத்தனர். இதனை நாங்கள் கண்காணிப்புக் குழுவினரிடம் தெரியப்படுத்தியுள்ளோம். விசேட அதிரடிப் படையினரால் நாங்கள் பல இன்னல்களை அனுபவிக்கிறோம்.
இரவில் அகதிமுகாமில் அதிரடிப் படையினர் மோசமான ஆங்கிலப் படங்களை போட்டுக் காண்பிக்கின்றனர். இதேநேரம் பெண்களுடனும் தவறாக நடக்க முற்படுகின்றனர். சில பெண்களுக்கு இடுப்புப் பட்டிகளால் அடித்துமுள்ளனர். அத்துடன் இரவு வேளைகளில் திடீரென அகதிமுகாமுக்குள் நுழையும் அதிரடிப் படையினர் பெண்கள் படுத்துறங்கும் பகுதிகளில் ஹலைற்' அடித்துப் பார்க்கின்றனர். இவர்களால் பெண்கள் பீதியடைந்துள்ளனர்.
இரவு 8 மணிக்குப் பின்னர் அகதிமுகாமிலிருந்து ஒருவரும் வெளியே செல்ல முடியாது. அவ்வாறு செல்வதாயின் படையினரிடம் பதிவு செய்து விட்டே சென்று விட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி விட வேண்டும்.
எமது முகாமுக்கு தண்ணீர் வருவதை கொஞ்ச நாட்களாக அதிரடிப் படையினர் தடுத்தனர். தற்போது தண்ணீர் வருகின்ற போதும் அது எமக்கு போதாமலுள்ளது. குயிலின்பன் மற்றும் போராளிகள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் எமக்கு தருவதற்கென சிங்கள மக்கள் இரு லொறிகளில் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்தனர். அதைக் கூட அதிரடிப் படையினர் திருப்பி அனுப்பி விட்டனர்.
முகாமிலிருந்து மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பாடசாலைக்கு செல்ல முடியாமலுள்ளனர். போக்குவரத்து வசதிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரே மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு இரு தடவைகள் மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். கூட்டுறவு சங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் தரம் கெட்டவையாகவுள்ளன. இவற்றில் புழுக்கள் காணப்படுகின்றன.
எனவேஇ விசேட அதிரடிப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் இம் முகாமில் எம்மால் தொடர்ந்தும் வாழ முடியாது. இம் முகாமின் பொறுப்பை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் எமக்கு நிரந்தர குடியிருப்புகளை அமைத்துத் தாருங்கள் என முறையிட்டனர்.
மக்களின் பிரச்சினைகள் குறித்து தாம் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
சுட்டது தினகுரல்
|
|
|
|