| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 1334 online users. » 0 Member(s) | 1332 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 2,957
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 9,903
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,448
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,233
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,511
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,509
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,215
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,650
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,914
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,158
|
|
|
| தாரகி என்னும் தாரகை மறைந்து ஓராண்டுகள்... |
|
Posted by: narathar - 04-29-2006, 05:10 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (3)
|
 |
தாரகி என்னும் தாரகை மறைந்து ஓராண்டுகள்...
இதுவரை ஈடு செய்யப்பட முடியாமல் இருக்கும் தமிழ்த் தேசியத்தின் பேரிழப்பு...
அறிவின் இழப்பு - பேராசிரியர் கா.சிவத்தம்பி
Friday, 28 April 2006
--------------------------------------------------------------------------------
சிவராமின் எழுத்துக்கள் தமிழர் நிலைப்பட்ட களநிலைவரங்களைக் காட்டுவதாகாதா என்ற குற்றச்சாட்டு கூறப்பட்தெனினும், அந்த எழுத்துக்கள் இந்தப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த மிகப்பெரிய அளவில் உதவியுள்ளன. இக் கட்டத்தில் முக்கியமான வினாவினைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய பணியொன்றினை ஆற்றிய வேறு எந்தப் பத்திரிகையாளர் உள்ளனர் என்பதே அந்த வினாவாகும். அதற்கான பதில் மிகக் குறுகியது- வேறு ஒருவரும் இல்லை. இன்று அவனில்லை. அந்த இல்லாமை நன்கு புரிகிறது.
தர்மரட்ணம் சிவராம் மறைந்த பொழுது அவறைப் பற்றி ஆங்கில, சிங்கள தினசரிகளிலும் வாரப் பதிப்புகளிலும் வெளிவந்த அஞ்சலிகள் ஈழத்துத் தமிழ் உலகை பெருத்த ஆச்சரியத்துக்குள் தள்ளின. தன்னுடைய ஆங்கில எழுத்துகள் மூலம் எந்த அரசியல் நிலைபாடுகளுக்கெதிராக எழுதினானோ அந்த நிலைப்பாடு சார்ந்தவர்கள் அத்தனை பத்திரிகையாளர்களும் அவனது மானிடச் சிறப்பினையையும் கருத்து நேர்மையையும் எழுத்து வன்மையையும் வாய்விட்டு, மனம்விட்டு பாராட்டினர். அந்த புகழ்ச்சிகளைக் கண்ட, கேள்வியுற்ற அவனை தமது இரகசிய குரலில் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்த பலர் வாய்மூடி மௌனிகளாகியதும் எனக்குத் தெரியும்.
சிவராம் பருந்து போன்றவன், அவன் உயர உயர மேலே மேலே பறப்பவன். அதற்கான ஆற்றல் கொண்டவன். காகங்களுக்கு பருந்து மீது பொறாமை. பல தடைகளில் முதுகுக்கு பின்னால் "கரைதல்"களும் இருந்தன. ஆனால், தன் மறைவோடு ஜோதியாக மேற்கிளம்பிய அவன் தன் சிறப்புகளையும் ஆற்றல்களையும் யாவரும் உணரச் செய்தான்.
ஒரு வகையிற் சிவராமின் மரணம் மூலம்தான், அவனை நாம் மீள் கண்டு பிடிப்புச் செய்தோம்.
சிவராம் வாழ்ந்த பொழுது நாம் உணராதிருந்த ஒன்று அவனது ஒரு வருட காலத்து மறைவு பளிச்சென புகட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் புதிய அதிகார மையங்கள் ஏற்பட்டதன் பின்னரும் இலங்கைத் தமிழர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பல உண்மையில் இந்த பிரச்சினைகள் பல. உண்மையில் இலங்கை நிலைப்பட்ட, தென்னாசிய நிலைப்பாட்டில் ஆசிய நிலைபட்ட, ஐரோப்பிய நிலைபட்ட, அமெரிக்கா நிலைபட்ட அரசியற் சிக்கற்பாடுகளை நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள முடியவுமில்லை. அவற்றை புரிந்து கொள்ளும் முறையில் எழுதக் கூடியவருமில்லை. மிஞ்சிப் போனால் தமிழர் பலங்களை ஒளிபாய்ச்சி காட்டும் விமர்சனங்கள் முன்னர் வருவதுண்டு. இப்பொழுது அதுவுமில்லை.
இதற்கும் மேலாக கடந்த சில மாதங்களுள் போரியல் நிலையே மாறியுள்ளது. படையினரின் நிலைப்பாடு மாத்திரமல்லாமல், கையாளப்படும் உத்திகளும், முறை வழிகளும் கூட மாறிவிட்டன. இவற்றினுடைய போரியல் விளக்கங்களை தெரியாதவர்களாகவே இருக்கின்றோம்.
இப்படியானவற்றை விளக்கும் திறன் சிவராமிடத்திலிருந்தது. இன்று அவனில்லை. அந்த இல்லாமை நன்கு புரிகின்றது.
இந்த பின்புலத்தில் சிந்திக்கும் பொழுதுதான் சிவராமென்ற சிந்தனையாளனின் முக்கியத்துவம் புலனாகின்றது. சிவராம், `தராக்கி' என்ற புனைப்பெயருடன் ஆங்கிலத்தில் 1970 களின் பிற்கூற்றில் எழுதத் தொடங்கினான். ஆங்கிலத்தில் இந்த இதழியல் எழுத்து முயற்சியினை தொடங்குவதற்கு முன்னர் அவன் புளொட் இயக்கத்தின் உயர் நிலை அங்கத்தவர்களின் ஒருவனாக இருந்தான். அந் நாட்களில் தாரகை என தனக்கு வைத்துக் கொண்ட பெயரையே ஆங்கிலத்திற்கு பயன்படுத்தத் தொடங்க அது தராக்கி என உச்சரிக்கப்படலாயிற்று.
1970களின் பிற்கூற்றின் 78 - 79 என நம்புகிறேன். இலங்கை முதன் முதலாக தீவிரவாத தமிழ் இளைஞர்களின் இயக்க ஆற்றல்களையும் அவற்றின் வழியாக வருகின்ற அரசியற் சாத்தியப்பாடுகளையும் முழு நிலையாக உணரத் தொடங்கிய காலமாகும். பாடசாலை பையன்களின் சிறு பிள்ளை விளையாட்டுத் தனம் என்ற வகையிலேயே அந்த எழுச்சியை ஜெ.ஆர். ஜயவர்த்தன முதல் ஜே.என். திக்ஷிட் வரை பலர் பார்த்த காலமது. அந்த காலகட்டத்திலேதான் "த ஜலன்ட்" பத்திரிகையில் ஞாயிறு வாரப் பதிப்புகளில் தமிழ் உரிமைப் போர் பற்றி, பிரதானமாக போரியல் பின்புலம் பற்றி தராக்கி எழுதத் தொடங்கியிருந்தான். அந் நாட்களில் மேர்வின் டி சில்வா அரசியற் செல்வாக்குமிக்க Lanka Guardian என்ற சஞ்சிகையை நடத்தி வந்தார். சிவராம் Lanka Guardian இல் இளைஞர் இயக்கங்களில் போரியல் அம்சங்களைப் பற்றி மாத்திரமல்லாது, தமிழரின் போரியற் பண்புகள் பற்றி ஒரு நீண்ட கட்டுரைத் தொடரை எழுதினான். புறநானூறு முதல் எட்கார் தேர்ஸ்ட்டனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற காலனித்துவ காலப் பகுதி வரையுள்ள சகல முக்கிய சான்றுகளையும் பயன்படுத்தி, தமிழரின் போராடும் பண்பு பற்றி விரிவாக எழுதியிருந்தான். தமிழர் வரலாறு அவ்வாறு புதிதான ஒரு வாசிப்பைப் பெற்றதும், அரசியல்வாதிகள் அரசியற் விமர்சகர்கள், அரசியல் மாணவர்கள் எனப் பல்வேறு நிலைபட்டவர்கள் அவற்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
இன்னொரு நிலையில் கூறுவதானால் தமிழர் போராட்ட உணர்வுகள் பற்றிய கொள்கை நிலைப்பட்ட, பிரயோக நிலைப்பட்ட ஆய்வினை ஏறத்தாழ சர்வதேச போரியல் பின்புலத்தில் எடுத்துக் கூறும் தனது திறனை அக் கட்டுரைகள் மூலம் சிவராம் காட்டினான்.
சமூக விஞ்ஞானிகள் சங்க ஒருங்குகூடல் என்று நினைக்கிறேன். குமாரி ஜயவர்த்தன, சாள்ஸ் அபயசேகர, நியூட்டன் குணசிங்க போன்றவர்களுடன் கருத்துப் பரிமாறிக் கொண்டிருக்கும் பொழுது வடக்கில் தொடங்கியிருந்த போர்பற்றி மேர்வின் டி சில்வா கூறிய ஒரு குறிப்புரை என் கவனத்தை உடனடியாக ஈர்த்தது. "சிவராமின் கட்டுரைகளை வாசிக்கும் பொழுதுதான் இந்த போராட்டத்தின் ஆழ, அகலம் குறிப்பாக, அதன் அரசியல் ஆழம் புரிகிறது என்ற கருத்துப்பட மேர்வின் டி சில்வா கூறினார்.
2005 இல் சிவராம் காலமான பொழுது அவறைப் பற்றி தமிழர்கள் அல்லாத அரசியல் விமர்சகர்கள் எழுதியபொழுது இந்த அம்சத்தையே வற்புறுத்தினர் என்று கூறலாம். அதாவது, ஈழத் தமிழர் உரிமைப் போராடத்தின் நியாயப்பாடுகளை அந்த போராட்டத்திலே சம்பந்தப்பட்டுள்ள போரியல் முறைமைகளை சிவராம் எழுதியதுபோன்று, வேறெவருமே தமிழர்கள் அல்லாதவர்கள் விளங்கும்படி எழுதவில்லை என்பதைக் கூறினர். சிவராமின் எழுத்து வெறுமனே தமிழர் நிலைப்பாட்டின் ஆங்கில மொழி எடுத்துக் கூறலாக அமையாது, உலகளாவிய உரிமை போராட்டங்களை, உரிமை போராட்டங்களுக்குரிய போரியற் பின்புலத்தில் எடுத்துக் கூறினான். மேலும், சற்று குறிப்பாகக் கூறினால் ஈழத் தமிழர் போராட்டத்தையும் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் போரியல் முறைமைகளையும் குறிப்பாக, அதன் தலைமையையும் இந்த வட்டத்தினுள் வைத்து ஆராய்ந்தானெனவும் அந்த நோக்குக்கு ஒரு சர்வதேச வலுவிருந்தது.
இவ்வாறு எழுதுவதனால் தமிழர் நிலைபட்ட கள நிலைவரங்களை காட்டுவதாகாதா என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டதெனினும், அந்த எழுத்துகள் இந்த போராட்டத்தை சர்வதேசமயப்படுத்த மிகப்பெரிய அளவில் உதவியுள்ளன என்பது இப்பொழுது தெரியவருகின்றது.
இக்கட்டத்தில் ஒரு முக்கியமான வினாவினை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகின்றது. இத்தகைய பணியொன்றினை ஆற்றிய வேறு எந்த பத்திரிகையாளர் உள்ளனர் என்பதே அந்த வினவாகும். இதற்கான பதில் மிகக் குறுகியது. வேறொருவரும் இல்லை.
இந்த எழுத்தினுள்ளே ஒரு செல்நெறியிருந்தது. அது அந்த போராட்டத்தின் சில குறைபாடுகளை அதிகம் அழுத்திக் கூறாமையேயாகும். சிவராம் என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் என்னுடைய ஒரு இளம் நண்பர், சிவராமிடத்து அந்த வினாவைக் கேட்டார். சிவராம் சொன்னார், இந்த குறைபாடு எனக்குத் தெரியும். ஆனால், அதை எழுதுவதன் மூலம் இந்த உரிமைப் போராட்டம் தோற்கடிக்கப்படத் தக்கது என்பதை எடுத்துக் கூற விரும்பவில்லை எனச் சொன்னான். உனது நிலைப்பாட்டில் இது ஒரு முரண்பாடாக இல்லையா என நான் கேட்டேன். ஓரளவு முரண்பாடு உள்ளதுதான். ஆனால், நான் அதனுள்ளிருந்து வெளிவர விரும்பவில்லை என்று சொன்னான்.
சிவராமை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும் என்றாலும், அந்த கணத்திலேதான் மகாபாரதத்துக் கர்ணனிலும் பார்க்க பெரியவனாக உண்மையான ஒரு வீமனாக என் கண் முன்னே நின்றான். இந்தப் புலமை நேர்மை, பச்சோந்திகளிடம் கிடைக்காத ஒன்று.
சிவராமினுடைய இந்த எழுத்தாற்றல்கள் சிவராமை இலங்கையிலுள்ள பல வெளிநாட்டு தூதுவராலயங்களின் விருப்புமிக்க விருந்தினனாக்கிற்று. வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில் தொடங்கிய விருந்துபசாரங்கள் பின்னர் வெளியே அவ்வத் தலைநகரங்களிலேயே நடைபெற்றன. இலங்கை பற்றி ஆர்வங் கொண்டிருந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகள், அவ்வமைச்சுகளின் ஆலோசகர்கள், சிவராமை சந்திப்பதை தமது முக்கிய நிகழ்ச்சி நிரல்களுள் ஒன்றாக வைத்திருந்தனர். சென்ற வருடம் மே மாதத்தில் ஜப்பான் செல்லவிருந்தான் என்ற தகவல் எனக்கு பின்னர்தான் தெரியவந்தது.
இப்பொழுதுதான் புலனாகின்றது, சிவராம் தன் போக்கில் ஈழத்து உரிமைப் போராட்டத்தில் ஒரு அரசியல் தூதுவனாக விளங்கினான் என்பது.
சிவராமை அறிந்திருத்தல் என்பது சிக்கல்கள் பல நிறைந்த ஒரு விடயமாகும். உண்மையில் சென்ற வாரந்தான் ஒரு இளம் நண்பர் சிவராம் என்னைப் பற்றி தன்னிடத்தில் கூறியிருந்ததை என்னிடத்துக் கூறினார். இப்படியெல்லாம் நினைத்திருந்தானா என்பதை நினைக்கும்பொழுது கண்ணீர் தாரையாக ஓடாவிட்டால், நான் மனிதனல்லன் என்பது கருத்து. எனக்கும் சிவராமுக்கும் 1978 முதல் தொடர்பிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்தபொழுது (1978) இல் சேர்ந்த முதல் இரண்டு மாதங்களில் பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கில சிறப்பு நிலை மாணவன் என்ற வகையில் தமிழ் ஆராய்ச்சி சம்பந்தமான பல வினாக்களை, ஏறத்தாழ 7,8 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தில் எழுதியிருந்தான். சர்வதேச இலக்கிய, வரலாற்றியல் ஆய்வு மொழிகளைப் பயன்படுத்தி அந்த வினாக்களை அமைத்திருந்தான். கடிதத்தை வாசித்துக் கொண்டிருந்த எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் எனது அறைக்கு வெளியே வந்தேன்.
அப்போது கைலாசபதி மாடிப்படி நோக்கி ஏறிவந்தார். இந்தப் பையனை உனக்குத் தெரியுமா எப்படி எழுதுகிறான் பார் என்று சொல்லிக் கொண்டே கடிதத்தை கைலாசபதியிடம் நீட்டினேன். எனக்கும் ஒரு கடிதம் வந்தது என்று கைலாசபதி சொன்னார். இருவருமே வியப்புடன் பேசிக் கொண்டோம்.
அப்பொழுது எனக்கு நேரடியாக சிவராமைத் தெரியாது. பின்னர் ஒரு தடவை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாக ஞாபகம். பின்னர் உண்மையில் தராக்கி என்ற நிலையில்தான் என்னுடன் பழக்கமேற்பட்டது. தமிழர் வரலாறு பற்றிய தன்னுடைய வினாக்களுக்கு வேண்டிய பதில்களுக்கான தரவுகள் பற்றி அறிவதற்கு என்னோடு உரையாடுவான். 1984- 88 காலத்தில் பிரஜைகள் குழு வேலை காரணமாக கிளாலி கஷ்டங்களுக்கிடையேயும் நான் மாதாமாதம் கொழும்புக்கு வருவேன். சிவராமிடமிருந்து அரசியற் புதினங்களையும் அவன் வியாக்கியானங்களையும் அறிந்து கொள்வதே எனது பசியாகவிருந்தது. சிவராம் என்னை பல தடவைகளிலே மிக மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறான். நீங்கள் இந்த அரசியலில் இறங்க வேண்டாம். உங்கள் தமிழ் வட்டத்தினுள் நின்று கொள்ளுங்கள். நீங்கள் அதன் மூலம் ஆற்றவேண்டிய பணிகள் பல உள்ளன என்று சற்று கோபமாகவே கூறுவான். வேறு சிலரும் அப்படிக் கூறுவது வழக்கம். ஆனால் அந்த குரலிலிருந்த உண்மையும், நேர்மையும் அந்த குரலுக்குரியவன் மறைந்ததன் பின்னர்தான் தெரியவருகின்றது.
சிவராம் அதிகம் பேச மாட்டார். மற்றவர்களை பேச வைக்கும் ஆற்றல் அவனிடமிருந்தது. அவனுடைய நட்புகளும் தொடர்புகளும் பல. அவற்றையெல்லாம் வலக்கை, இடக்கைக்கு தெரியாத முறையிலேதான் வைத்திருந்தான். மரணத்தின் பொழுதுதான் அந்த உண்மைகள் தெரியவந்தன. அவன் மறைந்து ஒரு மாதத்தின் பின்னர் எனக்கு தெரிந்த இளம் சிங்கள மாக்ஸிய சிந்தனையாளரொருவர் என்னிடம் சொன்னார் `அன்று என்னைச் சந்திக்கத்தான் பம்பலப்பிட்டியின் அந்த மதுச்சாலைக்கு சிவராம் வந்திருந்தார்' என்று.
அவனுடைய அறிவாழம் மிகப்பெரியது. பின்நவீனத்துவம் பற்றி நான் எழுதிக் கொண்டிருந்தபொழுது, அந்த விவாத இறுதியில் ஒரு நாள் சொன்னேன். இதில் இந்தனை நாட்களை செலவழித்ததன் நியாயப்பாடு இப்பொழுது சரியோ என்று எனக்கு விளங்கவில்லையென்றேன். அப்பொழுதுதான் பின்நவீனத்துவம் பற்றி தனது மெய்யியல் நிலைப்பாடுகளை என்னிடம் எடுத்துக் கூறினான். இதை, முன்னரேயே ஏன் என்னிடம் பேசவில்லை என்று கேட்டேன்.
அவன் சிரித்துக் கொண்டான். அவனைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும் கிச்டெக்கர் என்ற அமெரிக்க ஆய்வாளர் சொன்னார், சிவராம் ஏறத்தாழ நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே நிறைய விவாதித்திருந்தார். அடப்பாவி அந்த புத்தகங்களை வாங்குவதற்கு நான் சிரமப்பட்டபோது கூட என்னிடம் பேசவில்லையே என்று கூறினேன். அவன் மேலும் சிரித்தான்.
TK
http://www.sooriyan.com/index.php?option=c...id=3075&Itemid=
|
|
|
| உதவி....தேவை....... |
|
Posted by: thaiman.ch - 04-28-2006, 12:53 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (1)
|
 |
அனதை;து கழக உறவுகளிற்கும் வணக்கம்
நான் சென்ற வருடம் சுவிஸ் வீடமைப்பு திட்டம் சம்மந்தமாக சுவிஸ் அரசாங்கத்தினால் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றிருந்தேன்.
அங்கு நான் நிறை முக்கிய புள்ளிகளை சந்திக்க முடிந்தது. அதே நேரத்தில் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள சுவிஸ் பிரமுகர்களையும் சந்திக்க முடிந்தது. எனக்கு கிடைத்த ஒய்வு நேரங்களில் எனது சொந்த விடயங்களை பார்க்க முடிந்தது. வெளிநாடுகளில் புலிகளிற்கு இருக்கும் ஆதரவு அங்கு குறைவாக இருந்தது. இது பற்றி நான் சவிஸ் நாட்டு எம்பசியில் சமாதான தூதுவராக வேலை செய்பவருடன் உரையாடினேன். நான் (தாயக)விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளன். எனக்கும் அவரிற்கும் இடையே 4 மணி நேரம் கருத்து வேறு பாடு நடந்தது. அவர் சமாதானத்தால் அமைதியாக வாழ முடியும் என்று சொன்னார். நான் அதற்கு இலங்கை அரசாங்கம் சம்மதிக்க மாட்டது என்று சொன்னன்.
புலிகள் சமாதானம் மூலம் தீர்வு கிடைப்பதை பெரிதும் விரும்ப மாட்டார்கள் ஏனென்றால் அதன் பின் அவர்களுடைய நிலமை கேள்விக்குறி ஆகிவிடும் என்பதனால். புலிகள் வேறு எந்த அமைப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சர்வதேச நாடுகள் எல்லாம் இலங்கயை நோக்கியே உள்ளது. புலிகள் ஆயுத போராட்டத்தை விட்டு சமாதானப்பேச்சுக்களில் ஆர்வம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்.
நான் அதற்கு இந்திய இராணும் பண்ணியதற்கு சர்வதேசம் ஒன்று பண்ணவில்லையே என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்னார் அப்பொழுது விடுதலைப்போராட்டம் சர்வதேச அளவில் ஈர்க்கப்படவில்லை என்றார்.
அவர் 1984ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வசித்து வருபவர். அன்று தொடக்கம் இன்று வரை நடந்த அனைத்தையும் (முக்கியமாக புலிகளின் கொலைகள் பற்றி) சொன்னார். எனக்கு இந்த கேள்விகளிற்கு பதில் சொல்லமுடியவில்லை. இருந்த போதும் ஏதோ சமாளித்தேன். அமெரிக்கா ஈராக்கில் எத்தனை கேவலமான விடயங்களை செய்தது என்று.
நான் இதன் பின் திருகோணமலை கட்டளைத்தளபதி சொர்ணம் (மலையாள நடிகர் மோகன்லால் மாதிரி இருந்தார்) அவர்களை சந்தித்து இதே கேள்விகளிற்கு அவரிடம் விடை கேட்டேன். அவர் சொன்னார், கியுபா நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அங்கே காஸ்ரோ 5தடவை தேர்தலில் போட்டி போட்டிருக்கிறார் 5 தடவையும் அவரே வென்றிருக்கிறார். அங்கு வேறு கட்சிகள் இல்லையா? இருக்கின்றது. ஆனால் மக்கள் செல்வாக்கு ஒரே ஒருவருக்கு தான் கிடைக்கிறது. அதே போல் மக்கள் எம்மை ஆதரிக்கும் வரை எமது தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் என்று சொன்னார்.
இருந்த போதும் நான் சுவிசிற்கு வந்த பின்னர் கொஞ்சம் வேற ஊடகங்களையும் பார்ததன். உதரணமாக ரிபிசி. அது இன்டர்நெட்ல இலவசம் என்டதால கேட்கமுடிந்தது. சில நேரம் சிரிப்பாவும் இருக்கும் அதை கேட்க. ஜனநாயகம் என்டு சொல்லீனம் ஆனா அதில எப்ப பாத்தாலும் அங்க கொண்டார்கள் இங்க கொண்டார்கள் என்டு தான் வருது. புலிகளை தவிர மற்ற எல்லாரையும் அவையள் ஆதரிக்கிற மாதிரி இருக்கு.
என்னுடைய கேள்வி என்னவென்றால். என்னிடம் மேலே சுவிஸ் பிரமுகரால் கேட்கப்பட்ட கேள்விகளிற்கும் அவரை போன்று சிந்திப்பவர்களிற்கும் நான் எப்படி பதில் கூறுவது?
முக்கிய குறிப்பு: நான் இப்படி எல்லாம் கேட்டுட்டன் என்டு என்னை உழவாளி என்டு நினைச்சிடாதீங்கப்பா
|
|
|
| விடுதலைப் புலிகளின் விரிவான அறிக்கை |
|
Posted by: kurukaalapoovan - 04-28-2006, 09:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
உதவி வழங்கும் இணைத் தலமை நாடுகள் மற்றும் ஏனைய தேச சமூகத்தின் கவனத்திற்கு, 24 மாசி 2006 ஜெனிவா-1 இன்பின்னர் நேற்று 27-சித்திரை 2006 வரை சிறீலங்கா அரசபடைகளாலும் அவர்களது மேற்பார்வையிலுள்ள கைக்கூலிகளாலும் நடத்தப்பட்ட 103 இனபடுகொலைகள் பற்றிய விடுதலைப் புலிகளின் விரிவான அறிக்கை.
http://www.ltteps.org/mainpages/images/200..._HQ_of_LTTE.pdf
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17950
கண்காணிப்புக் குழுவும் ஒவ்வொரு சம்பவம் நடந்தபின்னரும் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகிறார்கள் முடிந்தளவு விசாரணை நடத்துகிறார்கள் குறிப்புகள் எடுக்கிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள். இவற்றை எல்லாம் தொகுத்து ஒரு அறிக்கையாக ஏன் விட யோசிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு சம்பவத்தையும் யார் செய்தார்கள் என்று தீர்ப்பு வழங்கத்தேவையில்லை, தமது ஊகங்களையும் போடத்தேவையில்லை, தமது அவதானிப்புகளை, தடையங்களை, விசாரித்த சாட்சியங்கள் தந்த தகவல் என்பவற்றை உள்ளதை உள்ளவாறே நடந்தவை பற்றிய கால அட்டவணையை அடிப்படையாக கொண்ட ஆவணமாக (incident report in chronological order)வெளியிட்டால் என்ன?
|
|
|
| கொழும்பு தாக்குதலை மேற்கொண்டவர் நிஜ கர்ப்பிணி? |
|
Posted by: Mathan - 04-28-2006, 08:06 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (6)
|
 |
Tamil suicide bomber who targeted Sri Lanka top general was pregnant, investigator says
DILIP GANGULY , Associated Press, Fri 28th Apr 05:30GMT. The Tamil bomber who blew herself up targeting Sri Lanka's top general was pregnant and that helped her to conceal explosives and get inside army headquarters for a maternity check, an investigator says.
The brazen attack Tuesday triggered tit-for-tat military action by government troops and the rebels that has pushed Sri Lanka close to civil war after a tense four-year cease-fire.
The bomber has been identified as Anoja Kugenthirasah, 21, from the northern government-held garrison town of Vavuniya on the frontier of territory held by Tamil Tiger rebels and was believed to be a member of the insurgents' dreaded Black Tigers suicide squad, the investigator said.
The investigator, who cited hospital records in his account of results so far of the probe, spoke on condition of anonymity because he was not authorized to talk to the media.
Government Media Minister Anura Priyadarshana Yapa said he was aware of the initial findings, but that ``cannot make comment until the investigation is over.''
On Tuesday, the bomber apparently targeted the car of Lt. Gen. Sarath Fonseka, Sri Lanka's army commander, inside Colombo's heavily fortified military headquarters.
The attack killed 10 people and wounded 27, including Fonseka, who suffered serious abdominal injuries and on Friday was in an intensive care unit where doctors described his condition as stable.
The suicide bombing led the Sri Lankan government to carry out air strikes on rebel bases in the northeast. The rebels hit back by exploding anti-personnel mines. The new violence has threatened to finally shatter a Norway-brokered peace deal on this tropical island of 19 million people that has been battered for months by sporadic violence.
Fonseka, a battle-hardened soldier with 35 years in the infantry, was appointed to the top post after President Mahinda Rajapakse took office in November.
On Dec. 4, the Tigers carried out the first major attack since the 2002 cease-fire, killing 12 navy sailors and unleashing dozens of rebel attacks, mainly using anti-personnel mines.
Sri Lanka's military at first exercized restraint, but Fonseka convinced Rajapakse that retaliation was needed and the military began to return fire when attacked. He also convinced the government that the 120,000-strong army needed to modernize its weapons after a four-year period of relative neglect since the cease-fire.
Fonseka clearly had become a formidable enemy for the Tamil Tigers.
So, the planning started.
The bomber had fake identification showing she was the wife of a clerk working for the Sri Lankan army, the investigator said, citing hospital records. Those records also showed she was pregnant, the investigator said.
Every Tuesday, the military hospital inside the headquarters holds a maternity clinic. She had attended the clinic on three preceding Tuesdays, the hospital records show, according to the investigator.
She also came to be known with the guards and learned the routine of Fonseka, who generally went home for lunch around 1:30 p.m., the investigator said.
This past Tuesday, the bomber got inside the army garrison a half-hour ahead of the clinic and stood in front of the hospital, which is beside the road that Fonseka takes to come out of the headquarters.
As his car approached, she came closer, and was shouted at by one of Fonseka's motor cycle escorts who ordered her to get away, the investigator said. She detonated the bomb shortly afterward.
Five of Fonseka's escorts were killed.
The Black Tigers are renowned for their skill at deploying suicide bombers against military, economic and civilian targets.
Victims have included former Sri Lankan President Ranasinghe Premadasa, former Indian Prime Minister Rajiv Gandhi, and numerous Sri Lankan ministers and senior politicians.
Another former president, Chandrika Kumaratunga, narrowly survived a suicide attack in 1999, but lost one eye in the blast.
The first Black Tigers suicide attack was on July 5, 1987, when a rebel known as Captain Miller drove a truckload of explosives into a military camp and detonated them, killing 40 soldiers.
Since then, 240 other rebels have blown themselves up.
|
|
|
| யாழ்கள எழுத்தாளர்கள் யாராவது உதவு செய்வீர்களா? |
|
Posted by: கந்தப்பு - 04-28-2006, 06:27 AM - Forum: நிகழ்வுகள்
- Replies (5)
|
 |
சிட்னியில் 5ல் இருந்து 10 நிமிட தெருக்குத்து அல்லது சிறு நாடகம் நடத்த கதை தேவை. நகைச்சுவையுடன் போராட்ட சம்பந்தமான விடயமும் இருக்கவேண்டும். மக்களுக்கு இந்த தெருக்குத்தின் மூலம் போராட்ட சம்பந்தமான விடயங்கள் தெரியவேண்டும். யாழ்கள எழுத்தாளர்கள் யாராவது உதவு செய்வீர்களா?
|
|
|
| ஜெயதேவனின் நேர்மை! |
|
Posted by: ஜெயதேவன் - 04-27-2006, 10:32 PM - Forum: புலம்
- Replies (3)
|
 |
லண்டனில் ஈழபதீஸ்வரன் ஆலயத்தின் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. ஈழபதீஸ்வர ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்திருப்பதையும், கோயிலை வைத்து மக்களை ஏமாற்றுவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது.
இந்த செய்தி லண்டனில் வாழும் சில நண்பர்களால் சில நாட்களக்கு முன்பே மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த செய்தியை இணையத்தளத்தில் பிரசுரித்து ஜெயதேவனின் இந்த செய்கையை கண்டிக்கும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால் அது குறித்து எந்த செய்தியும் என்னுடைய தளத்தில் வராததால் அவர்கள் சிறிது குழப்பம் அடைந்திருப்பார்கள்.
இந்த விடயத்தில் ஜெயதேவனை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? மற்ற விடயங்களில் எப்படியோ, ஈழபதீஸ்வரன் ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்ததிலும், அதை வைத்து அவர் மக்களை ஏமாற்றுவதிலும் அவர் நேர்மையாகவே நடந்து கொண்டிருக்கிறார்.
ஆலயம் என்பது ஒரு மக்களின் மூட நம்பிக்கைகளை மூலதனமாக்கும் ஒரு வர்த்தக நிறுவனம். அந்த வகையில் ஜெயதேவன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்து வைத்திருப்பது எந்த விதத்திலும் தவறல்ல. பகுத்தறிவாளர்கள் செய்யும் பிரச்சாரத்தை அவர் சட்டரீதியாக செய்திருக்கிறார். அத்துடன் கோயில் என்கின்ற கம்பனியை உருவாக்குவதன் காரணமே மக்களை ஏமாற்றி, அவர்களின் அறிவை மழுங்கடித்து, மூட நம்பிக்கைகளை விற்பனை செய்து அதன் மூலம் பணம் ஈட்டுவதற்காகத்தான். ஆகவே ஒரு கோயிலை வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றாது விட்டால்தான் தவறு. அந்த வகையில் கோயிலை வைத்திருக்கின்ற ஒருவரை மக்களை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினால், உண்மையில் அது ஒரு பெரும் முரண்பாடு ஆகும்.
கோயில் என்பது பொதுச் சொத்து அல்ல. எந்த ஒரு கோயிலும் பொதுச் சொத்தாக இருந்ததும் இல்லை. ஆகக் குறைந்தது எல்லோருக்கும் நன்மை பயக்கின்ற ஒன்றாகக் கூட இருந்ததில்லை. கோயில் என்கின்ற கம்பனி மூலம் நன்மை அடைகின்றவர்கள் தனியார்களே. ஒரு போதும் பொதுமக்கள் அல்ல. ஆகவே கோயில் என்பது தனியார் சொத்துத்தான். இவ்வாறு எல்லாம் சிந்திக்கையில், இந்த விடயங்களையும் சரியாகச் செய்து வருகின்ற ஜெயதேவனை பாராட்டவும் தோன்றுகிறது. வாழ்க ஜெயதேவனின் பகுத்தறிவுச் சிந்தனை.
ஆனால் இந்த ஈழபதீஸ்வரன் கம்பனியை உருவாக்கியதன் நோக்கம், ஈழத்தில் பசித்திருக்கும் வயிறுகளுக்கு உணவு கொடுக்கத்தான் என்பதை மறந்து, ஜெயதேவன் தன்னுடைய வயிற்றை வளர்த்து வருவதுதான் பெரும் தவறு. யாரிடம் ஒப்படைத்தால் இந்த கம்பனியின் வருவாய் ஈழ மக்களிடம் போய்ச் சேருமோ, அவர்களிடம் ஒப்படைப்பதுதான் சரியான செயலாக இருக்கும்.
ஆனால் ஜெயதேவன் தமிழீழத்தையும், தமிழீழ மக்களையும மறந்து நீண்ட நாட்களாகி விட்டது. தற்பொழுது அவர் செய்கின்ற "வேலையால்" வருகின்ற வருமானமும், ஈழபதீஸ்வரன் கம்பனியில் எங்களின் இளிச்சவாய்த் தமிழர்கள் கொட்டுகின்ற பணமும் ஜெயதேவனின் கண்களை மறைக்கும் வரை, அவர் இந்த கம்பனியை மீண்டும் தமிழீழத்திற்காக ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. சட்டரீதியாகவும் இந்தக் கம்பனியை பெறமுடியாது என்றே நினைக்கிறேன். அதனாலேயே ஆர்ப்பாட்டங்கள் மூலம் சிலர் முயற்சிக்கின்றார்கள். ஆனால் ஆர்ப்பட்டங்களால் ஜெயதேவனின் மனதை மாற்ற முடியாத அளவிற்கு, அவரது தற்போதைய வருமானம் பெரிதாக இருக்கின்றது.
இதில் இன்னும் ஒன்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜெயதேவனின் பின்னணி ஏறக்குறைய அம்பலப்படத்தப்பட்டு விட்ட ஒன்று. ஆனால் அதன் பிறகும் ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு சென்று, ஜெயதேவனுக்கு வருவாய் தேடிக் கொடுக்கும் எம் மக்களை என்னவென்று சொல்வது? அவர்களை யார் கண்டிப்பது? என்னைக் கேட்டால் ஜெயதேவனை விட ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு செல்லும் மக்களே குற்றவாளிகள் என்பேன்.
ஆகவே எமது மக்களை விழிப்படைய வைக்கும் வழியைப் பார்ப்போம். கோயில்களில் வீணாகக் கொட்டுகின்ற பணத்தை, தமிழீழத்திற்கு கொடுக்கும் அறிவை உருவாக்குவோம். இதுவே ஜெயதேவன் என்கின்ற தனியார் பணம் ஈட்டுவதை தடுப்பதற்கும், ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு போகின்ற பணத்தை தமிழீழ மக்கள் பெறுவதற்கும் சரியான வழியாக இருக்கும். பரப்புரைகள் மூலம் எமது மக்கள் திருந்தவில்லை என்றால், ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு போட்டியாக இன்னுமொரு கம்பனியை திறந்து, கட்டுக் கதைகள் மூலம் விளம்பரம் செய்து, பக்தகோடிகளை புதிய கம்பனிக்கு வரச் செய்ய வேண்டியதுதான். தற்போதைக்கு இதை விட வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை.
-வி.சபேசன் (27.04.06)
http://www.webeelam.com/
|
|
|
| Mass protest against Undiyalaan |
|
Posted by: ஜெயதேவன் - 04-27-2006, 10:27 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
[b][size=18]A temple is not a money making machine. If Undiyalaan wants to buy three houses in London and several other properties across the world, he should get a job.
Huge protest against Undiyalaan will be held with special police permission and protection.
Time:: From 11 am till 1 pm
Date:: Friday, 28 April 2006
Place:: Outside the Eelapatheeswarar Aalayam Limited, Union Road, Wembley, Middlesex. HA0 4AU
How to get there:: Tube - Wembley Central by Metropolitan or Bakerloo, Bus - 79 - 83 - 92 - 182 - 224 Car: A406 ring road and then towards Wembley at Hangerlane or A404
Contact:: Rajan - 07751717097
|
|
|
| ஐரோப்பிய தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறுக...... |
|
Posted by: AJeevan - 04-27-2006, 10:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
<img src='http://www.bharat-rakshak.com/NAVY/Images/Delhi12.jpg' border='0' alt='user posted image'>[size=15]
ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள தமிழர்கள்
தற்போது சிறீலங்காவில் அல்லது தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்தால் <b>28.04.2006</b> ம் திகதிக்கு முன்னர்
சிறீலங்காவை விட்டு வெளியேறுமாறு IBC அறிவிப்பொன்று கூறுகிறது................
<b>பயண தேவைகளுக்காக குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள நாட்டுத் தூதரங்களுடன் தொடர்பு கொள்க.</b>
இதுபற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால் இணையுங்கள்.
நன்றி: http://www.ibctamil.co.uk/[/color]
|
|
|
|