| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 377 online users. » 0 Member(s) | 374 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,005
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,029
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,495
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,250
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,527
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,734
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,259
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,881
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,931
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,188
|
|
|
| பொங்கியெழும் மக்கள் படை. |
|
Posted by: iruvizhi - 04-24-2006, 08:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
<b>பழிவாங்கும் படலத்தைத் தொடருவோம் - திருமலை பொங்கியெழும் மக்கள் படை.</b>
<b>திருகோணமலை மாவட்டத்தில் காலம் காலமாக சிங்கள இன வெறியர்களால் மேற்கொண்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைகள் காரணமாக பெரும் தொகையான மக்களை இழந்து பெருநிலப்பரப்புக்களை இழந்து தமிழ் மக்கள் துயரங்களில் வாழ்ந்தவேளை இத்துயர் நீக்க தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய விடுதலைப் போரும் அதைத்தொடர்ந்து வந்த சமாதான சூழலும் ஓரளவு நிலைகளை மாற்றியிருந்த போது மீண்டும் சிங்கள ஆக்கிரமிப்புத் சிந்தனை திருமலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் வடிவமாகவே பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் தமிழ் பற்றாளர்கள் அழிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்தன, இதனை நேரடியாகச் சிறீலங்கா படைகளே செய்து முடித்தனர். எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுமை காத்திருக்கும் இவ்வேளை நடவடிக்கைளிற்குப் பதிலடியாக பொங்கியெழும் மக்கள் படையாகிய நாம் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளோம்.
இவ்வேளை தாக்குதல் நடத்தியவர்களை தாக்கமுடியாத கையாலாகாத் தனமாக சிறீலங்கா படைகளும், சிங்களவர்களும் இணைந்து தமிழ் மக்கள் மீது ஓர் இன அழிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்கள்.
இதனைப் பெருமையுடன் பார்த்திருந்த நாம் திருமலை நகர், துவரங்காடு, கன்னியா, சீனன்குடா, என்று விரிந்து வந்த தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் பாரதிபுரம், கிளிவெட்டி என்று பரவத்தொடங்கியுள்ளார்கள். நாளாந்தம் தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் தமிழ்ப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதும் தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதும், அழிக்கபடுவதும் தொடர்கிறது.
எனவே பொறுமை காத்த பொங்கியெழும் மக்கள் படையணியாகிய நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டி மொறவேவா( தமிழர்கள் வாழ்ந்த முதலிக்குளம்) பழிதீர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டோம். இனிவரும் நாட்களில் தமிழர்கள் கொல்லப்பட்டால் அதற்கு பழிவாங்கும் படலத்தை தொடரவுள்ளோம். உயிர்கள் பெறுமதியானவை ஆனால் சாவுதான் சாவை நிறுத்துமெனில் நாம் அதைச் செய்யத் தயங்கப் போவதுமில்லை இது எதிரிகளுக்கு இறுதி எச்சரிக்கை.</b>
<b>"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"</b>
<b>பொங்கியெழும் மக்கள் படை,
திருமலை மாவட்டம். </b>
<img src='http://img251.imageshack.us/img251/7162/trincomakalpadaiarilai17iw.jpg' border='0' alt='user posted image'>
தகவல்: பதிவு புள்ளி கோம் www.pathivu.com[/img]
|
|
|
| யாழில் பயணிகள் பேரூந்து மீது படையினர் துப்பாக்கி சூடு |
|
Posted by: Nitharsan - 04-24-2006, 07:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கனகம்புளியடியில் நேற்று மாலை 7.15 மணியளவில் சிறிலங்கா படையினர். பயணிகள் பேரூந்து மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளனர்.
நேற்று மாலை 7.15 மணியளவில் கனகம் புளியடி சந்தியில் வைத்து பயணிகள் பேரூந்து மீது சிறிலங்கா படையினர் துப்பாக்கி சூடு நடாத்தினர். இதில் குறைந்தத இரு பொது மக்கள் பலியாகியிருப்பார்கள் என்று அறியப்படுகின்றது. முழமையான சேத விபரங்களை எம்மால் இது வரையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
இச்சம்பவம் நேற்று மாலை 5.00 மணியளவில் படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்தி ஒரு படையினர் கொல்லப்பட்ட மீசாலையில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் நடைபெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் மீது பேரூந்திலிருந்து துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்ட பின்னரே தாம் சுட்டதாக படையினர் இது பற்றி தெரிவிக்கிறது.
மேலதிக விபரங்கள் எதுவும் இது வரை கிடைக்கபெறவில்லை
http://worldtamilpress.com/index.php?optio...d=209&Itemid=27
|
|
|
| புலிகளின் காவல் அரண்மீது தாக்குதல் 3 போராளிகள் படுகாயம் |
|
Posted by: mayooran - 04-24-2006, 06:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மட்டக்களப்பு வவுணதீவு விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அரணைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் விடுதலைப்புலிகள் உறுப்பினர் மூவர் படுமடைந்துள்ளனர். மட்டக்களப்பு வவுணதீவு விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அரணைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் விடுதலைப்புலிகள் உறுப்பினர் மூவர் படுமடைந்துள்ளனர். அத்தோடு வீதியில் சென்று கொண்டிருந்த வயது முதிந்த பெண் ஒருவரும் படுகாயமடைந்தார்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான மங்கிகட்டு சந்தியில் முன்னரங்கக் காவலரண் அமைக்கும் பணியில் விடுதலைப்புலி போராளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம் பெற்றது. சுமார் எண்பதுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் ஊடுருவித் தாக்குதல் நடாத்தினர். இதன் போது படுகாயமடைந்த போராளியை மீட்பதற்கு விடுதலைபுலிகளும் பதில் தாக்குதல் நடாத்திய போது தாக்குதல் சுமார் 45 நிமிடம் இடம் பெற்றது.
அத்துடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி நோக்கி எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் விடுதலைப்புலிகள் தெரியப்படுத்திய போது சம்பந்தப்பட்ட இடத்திற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவர் நேரடியாக வந்து தாக்குதல் இடம்பெற்ற இடத்தையும் பார்வையிட்டு சென்றனர்.
இந்த நடவடிக்கை பாரிய போர் நிறுத்த மீறல் என விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதே போன்று சிறிலங்கா இராணுவத்தினர் வவுணதீவு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் ஊடுருவி பல முறைகள் தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
sankathi.
|
|
|
| செய்தியில் திருத்தம் |
|
Posted by: malaravan - 04-24-2006, 05:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வவுனியா மாவட்டம் வேப்பங்குளம் பகுதியில் கடந்த சனியிரவு 8.00 மணியளவில் இராணுவத்தினரின் உளவுத்துறையைச்சேர்ந்த நால்வரால் தமிழ் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வேப்பங்குளம் பகுதியில் மடுமாதா களஞ்சியம் என்ற வணிக நிலையத்தை நடத்திவரும் பற்குணராஜா இராஜபத்மன் (வயது 31) என்பவராவார். இவரின் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக 17.04.2006 அன்று நடைபெற்ற கிளைமோர் தாக்குதலின் பின் தன்னை இராணுவ உளவுத்துறையைச்சேர்ந்த நால்வர் தொடருவதாகவும், தனக்கு என்ன நடைபெறப்போகின்றது என்பது பற்றித்தெரியாதென்றும் தனது நெருங்கியவர்களுடன் தொலைபேசியில் சொல்லியுள்ளார்.
மரணமான அன்றும் இதுவிடயமாக தனது நண்பர்களுடன் கதைத்துள்ளார். இவரின் கொலை நடைபெற்ற இடத்திலிருந்து பதினைந்து மீற்றர்து}ரத்திலும், எழுபத்தைந்து மீற்றர் து}ரத்திலும், இராணுவ காவல் நிலைகளும், நு}ற்றியம்பது மீற்றர் து}ரத்தில் இராணுவ முகாமும் அமைந்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்த் தேசிய நிகழ்வுகளில் ஏற்பாட்டாளராக செயற்பட்டு வந்தவர் மற்றும் கடந்த மாவீரர் நாளில் வவுனியாவில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது அதற்கெதிராக படையினர் செயற்பட்டபோது படையினருடன் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
மலரவன்
www.tamilkural.com
|
|
|
| பொதுமக்கள் மீது படையினர் துப்பாக்கிச்சூடு. இருவர் பலி |
|
Posted by: yarlmohan - 04-24-2006, 04:23 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
SLA soldiers fire at civilian bus in Jaffna
[TamilNet, April 24, 2006 15:27 GMT]
Sri Lanka Army (SLA) soldiers opened fire at a civilian bus at Kanakappuliyady junction around 7:15 p.m. Monday. At least 2 civilian passengers were killed, according to initial reports from civilians sources in the area. Exact casualty details are not available at the moment. The attack on the civilian bus has taken place 2 km from the Claymore explosion site at Sarasalai-Meesalai border where a SLA soldier was killed around 5:00 p.m.
SLA sources claimed their troopers shot at the bus after gunshots were fired at them from the bus.
|
|
|
| ஈபிடிபி உறுப்பினர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு. |
|
Posted by: Vasan - 04-24-2006, 02:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
பிஸ்டலுடன் வந்த ஈபிடிபி உறுப்பினர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு.
இருபாலை சந்தியில் நேற்று இடம் பெற்ற துப்பாகிகச் சூட்டிற்கு காரணமாக இருந்தவர் எனக் கருதப்படும் ஓருவர் துப்பாக்கியுடன் இருபாலைப் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளார்.
இன்று நன்பகல் 2.00 மணியளவில் குறிப்பிட்டவர் துப்பாக்கிச் சூடு இடம் பெற்ற இடத்திற்கு சையிக்கிளில் தனது காதலியிடம் செல்வதற்காக வந்துள்ளார்.
குறிப்பிட்டவர் வருவதை அவதானித்தவர்கள் நேற்றை தினம் இவர் போன்று ஒருவரே குறிப்பிட்ட ஆட்டோ சாரதியின் மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு மோட்டார் சையிக்கிளில் தப்பிச் சென்றவர் என இனம் கண்டுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து சென்றவர்கள் தனது காதலியிடம் சென்றவரை பின் தொடாந்து சென்று பொல்லினால் தாக்கியுள்ளார்கள். இவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுக்க முற்பட்டதைத் தொடர்ந்து சென்றவர்கள் அவரை கட்டிப்பிடித்ததுடன் அவருக்கு உரிய மரியாதையையும் கொடுத்துள்ளார்கள.;
இவரிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் ஈ.பி.டி.பி.யின் அடையாள அட்டை என்பவற்றையும் கைப்பற்றியுள்ளார்கள் எனவும் தெரிய வருகின்றது
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
|
|
|
| சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள். |
|
Posted by: Birundan - 04-24-2006, 01:34 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
உங்கள் தொலைக் காட்சியில் தெரியும் நிகழ்ச்சிகள் தரக்குறைவாக இருந்தால், அதற்கான பெரும் பொறுப்பு சன் குழுமத்தைச் சாரும். மாற்றத்தை தோற்றுவிக்கச் செய்யும் ஆற்றலைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், வணிக நோக்கமும், கட்சி சார்பும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல், மக்களுக்கு நல்லது என்றுபடக் கூடிய நிகழ்ச்சிகளாக அளிக்காதது அவர்களின் தோல்வியே.
இரவு 9.30 மணி நிகழ்ச்சிதான் மிகப் பிரபலமானதாம். இந்தியில், இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் மக்களைக் கவரும் வண்ணம் தொடராக்கிக் காட்டியது போல, தமிழின் காவியங்களைக் காட்ட ஏன் சன் டிவி முன் வரவில்லை. தேவைப்பட்டால், வணிகம்தான் முக்கியம் என்பது, மற்ற நேரங்களில் தமிழனின் பெருமை என்பது என்று இரட்டைப் பேச்சுதானே அவர்களுக்கு வருகிறது.
திருக்குறள் கதைகள் என்று ஒரு மெகாத் தொடர் ஆரம்பிக்கலாம். 1330 பகுதிகள் ஓட்டலாம். பழைய பள்ளிக் குழந்தைகளுக்கான கதைகாளாக இல்லாமல் இன்றைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறள் எப்படி பொருந்துகிறது என்று திறமையான கலைஞர்களைப் பயன்படுத்தி தொடர் எடுத்து, வாழ்வியல் நூலான திருக்குறள் காட்டும் வழிக்கு ஒரு மறுமலர்ச்சி உருவாக்கலாம்.
ஐம்பெருங்காப்பியங்கள் என்று தமிழரின் வரலாறு பாடும் காப்பியங்களை ஒளிவடிவாக்கலாம். சிலப்பதிகாரமும், மணிமேகலையும், சீவக சிந்தாமணியும், வேட்டி/ஜிப்பா போட்ட தமிழ் "அறிஞர்களால்" மட்டுமே நினைக்கப்படாமல், கடைக்கோடித் தமிழனுக்கும் அவை கூறும் கருத்துக்கள் போய்ச் சேரச் செய்யலாம்.
இதையெல்லாம் செய்ய நிறைய செலவாகும், வணிக வெற்றி கிடைக்காது என்று முயற்சி கூடச் செய்ய மாட்டார்கள் இவர்கள். ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் இவர்களுக்கு இந்தப் பொறுப்பு கண்டிப்பாக உண்டு. வணிக வெற்றி இவர்கள் நினைத்தால் தானாகக் கிடைத்து விடும். "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திருக்குறளின் 1330 குறள்களும் காட்சி வடிவில்" என்ற கனைப்புடன் விளம்பரங்கள், சரியான நேர ஒளிபரப்பு, தரமான திரைக்கதை, உயர்தர படமாக்கம் என்று இருந்தால தமிழர்கள் பார்க்க மாட்டேன் என்று கண்ணை மூடிக் கொள்ளவா போகிறார்கள்.
சரி தற்கால இலக்கியத்தை, வாழ்வியல் நூல்களை எடுத்துக் கொள்வோம். பாரதியின், பாரதி தாசனின் எத்தனை ஆக்கங்கள் சன் டிவியில் "சித்தி" போல திரை வடிவம் பெற வைக்க முடியும்.
இதை எல்லாம் செய்தால் தமிழின் பெருமை உலகெங்கும் பெருகும். எப்படி?
ஒரு தமிழ் தொழில் நிறுவனம், வலிமை பெற்று தேசிய அளவில், உலக அளவில் பெரிதாகினால் நமக்கெல்லாம் பெருமைதானே. தனது சொந்த ஊரில் ஆதிக்கம் செலுத்தினால்தான் பிற இடங்களில் போக வலு கிடைக்கும். சன் டிவி, உலகைப் பிடிக்குமளவு வளரும் வாய்ப்பு இருக்கிறது.
இதற்கான எனது சில பரிந்துரைகள் (காசா பணமா, பரிந்துரைத்து வைப்போம்!)
1. தொலைக் காட்சியின் பெயரை சூரியன் தொலைக்காட்சி என்று மாற்றுகிறோம்.
2. நிறுவனத்தின் அலுவலகத்தை அண்ணா அறிவாலயத்திலிருந்து, நடுநிலையான இடத்துக்கு மாற்றுகிறோம்.
3. திமுக சார்பு நிலையில் இருந்து வந்த எமது செய்தி அறிக்கைகள், செய்தி அலசல்கள் நடுநிலைக்கு மாறுகின்றன.
4. எமது நிறுவனத்தில் கட்சி சார்பாக இருப்பவர்கள், திமுக கட்சி சார்பில் தொடங்கப்படும் உதயசூரியன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மாற ஊக்குவிக்கப்படுவார்கள்.
5. கேபிள் வினியோகம், மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒன்றற்கு ஒன்று தனித்து செயல்படுமாறு அமைப்புகளை ஏற்படுத்துகிறோம்.
6. உலகத் தரத்தில் இயல்பு மொழியில் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவோம்.
7. சுமங்கலி நிறுவனத்தில் புதிய ஓடைகளை சேர்ப்பதிலும், இருக்கும் ஓடைகளை வழங்குவதிலும், வெளிப்படையான ஒரு முறையைக் கடைபிடிப்போம்
Thanks>http://masivakumar.blogspot.com/
|
|
|
| அறிவித்தல் |
|
Posted by: yarlmohan - 04-24-2006, 09:18 AM - Forum: களம் பற்றி
- Replies (3)
|
 |
முன்கூட்டியே அறிவித்தபடி களம் update செய்யப்பட்டுள்ளது. Update செய்யப்பட்டுக்கொண்டிருப்பதால் மறு அறிவித்தல் வரை கருத்துக்கள் எதனையும் வைக்க வேண்டாமென்று கேட்டிருந்தேன். எனினும் அக்காலப்பகுதயில் சுமார் 5 கருத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன. அக்கருத்துக்களும், அக்காலப்பகுதியில் அனுப்பப்பட்ட தனிமடல்களும் இங்கு பதிவில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தற்போதுமுதல் உங்கள் கருத்துக்களைப் பதிந்து கொள்ள முடியும்.
அங்கத்துவர்கள் அனைவரும் "என்னை தன்னிச்சையாக எப்போதும் உள்நுழைய அனுமதிக்கவும்" என்பதை தெரிவு செய்திருந்தாலும் புதிதாக login செய்ய வேண்டியும் இருக்கும் என்பதையும் அறியத் தருகின்றோம்.
அத்துடன் கருத்துகளத்தின் வேகம் முன்னரைவிட சற்றுக்குறைவானதாக இருக்கலாம். இக்குறைபாடு இம்மாத முடிவுவரை இருக்கும்.
|
|
|
| உலகத்தமிழர் இயக்க காரியாலயம் கனடிய பாதுகாப்பு துறையினரால் சே |
|
Posted by: RaMa - 04-24-2006, 01:40 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (1)
|
 |
கனடாவில் பெரும் கட்டமைப்பைக் கொண்ட தமிழர் அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தின் ரொரன்ரோ தலைமை செயலகம் கனடிய காவல்துறையினரால் சோதனைக்குள்ளானது.
அண்மையில் கனடாவில் விடுதலைப்புலிகளின் தடையை அடுத்து கனடிய காவல் துறையினர்மும்முரமாக தமது சோதனை நடவடிக்கைகளை தமிழ் தேசிய ஆதரவு அமைப்புக்கள் மீது ஆரம்பித்துள்ளனர். அவர் தங்கள் சோதனை நடவடிக்கையின் பொது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்த அமைப்புக்களுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதா? என்பதை அறிவதிலே மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தடைச் சட்டம் அமுலுக்கு வந்த பின் தமிழர் அமைப்பொன்று சோதனையிடப்படுவது இது இரண்டாவது தடவையாகும். இதற்க்கு முன்னர் கடந்த 16ம் திகதி கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள உலகத்தமிழர் இயக்க காரியாலயம் சோதனைக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இச் சோதனை நடவடிக்கை பற்றி பொது மக்கள் சிலரிடம் கருத்து கேட்ட போது, இப்படியான செயற்பாடுகள் மூலம், தமிழ் மக்கள் தங்கள் தேசத்தின் மீது வைத்திருக்கும் பற்றுதியை யாரும் குலைக்க முடியாது என்றும், இச் செயற்பாடுகளின் மூலம் கனடிய அரசானது கனடியத் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றது எனவும் தெரிவித்தனர்.
இதே வேளை இந்த சோதனை நடவடிக்கை காரணமாக உலகத்தமிழர் இயக்கத்தின் ரொரன்ரோ கிளையின் செயற்பாடுகள் எதிர்வரும் 25 ம் திகதி செவ்வாய் கிழமை வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டும் செவ்வாய்க்கிழமையிலிருந்து வழமையான சேவைகளினை கனேடியத் தமிழ் மக்களிற்கு வழங்கப்படும் எனவும் உலகத்தமிழர் இயக்கம் (ஒன்ராரியே) அறிவித்துள்ளது
|
|
|
|