3 months 3 weeks ago
பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,கிரணின் குழந்தைப் பருவ புகைப்படம் கட்டுரை தகவல் முகமது ஜுபைர் பிபிசி உருது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சோகம் நிரம்பிய இந்தக் கதை 17 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் செக்டார் ஜி10இல் உள்ள ஒரு சாலையில் தொடங்கியது. மழை பெய்து கொண்டிருந்தபோது, 10 வயது சிறுமியான கிரண் ஐஸ்கிரீம் தேடி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார். அப்போது கிரணுக்கு ஐஸ்கிரீம் கிடைத்துவிட்டது, ஆனால் அவரது பெற்றோரும், அவரது குழந்தைப் பருவமும், அவரிடமிருந்து வெகு தூரம் சென்றுவிட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கஸூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண். கராச்சியில் உள்ள எதீ மையத்தில், பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் இருந்து பிரிந்து, தனது வாழ்வின் பல கட்டங்களை அவர் கழித்துள்ளார். கிரணின் பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் கண்டுபிடிக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. கிரணின் பெற்றோரும் உடன்பிறந்தவர்களும்கூட, அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார்களோ என ஒரு கட்டத்தில் தோன்றியுள்ளது. ஆனால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, பஞ்சாப் காவல்துறையின் நகரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு கிரண் பற்றிய தகவல் கிடைத்தபோது இந்த ஏமாற்றம் மகிழ்ச்சியாக மாறியது. கிரண் தனது பெற்றோரை சந்தித்தது எப்படி? கிரணின் தந்தை அப்துல் மஜீத் மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் இந்த விஷயத்தை பற்றிப் பேச விரும்பவில்லை. ஆனால், அவர்களின் குடும்பத்துடன் தொடர்புடைய மூத்த நபரான அசாத் முனீர் இது குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். கிரணின் மாமாதான் அசாத் முனீர். கஸூர் மாவட்டத்தில் உள்ள பாக்ரி கிராமத்தில் வசிக்கும் அசாத் முனீர் அந்தச் சம்பவம் குறித்து விவரித்தார். 17 ஆண்டுகளுக்கு முன்பு, கிரணுக்கு 10 வயது இருக்கும்போது, "அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜி10 செக்டாரில் உள்ள என் சகோதரி, அதாவது அவருடைய அத்தை வீட்டில் தங்கியிருந்தார். ஜி-10 பகுதி எங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ளது, அங்குதான் அவர் ஐஸ்கிரீம் வாங்கச் சென்றார். இது 2008இல் நடந்தது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது" என்று நினைவு கூர்ந்தார் அவர். "நீண்ட நேரமாகியும் கிரண் வீடு திரும்பாததால், அவரைத் தேடினோம், ஆனால் அவர் கிடைக்கவில்லை" என்கிறார் அசாத் முனீர். "அப்போது, கிரணை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் கிரண் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை." தான் ஐஸ்கிரீம் வாங்க வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், கனமழையில் வழி தவறிவிட்டதாகவும் கிரண் தெரிவித்தார். தனது வீட்டைத் தேடி நீண்ட நேரம் தெருக்களில் அலைந்ததாகவும், ஆனால் "வீட்டைக் கண்டுபிடிக்க முடியாததால், யாரோ என்னை இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்" என்றும் அவர் கூறுகிறார். "முதலில் நான் இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்தில் தங்க வைக்கப்பட்டேன். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு பில்கீஸ் எதி என்னை கராச்சியில் உள்ள எதி மையத்திற்கு அழைத்துச் சென்றார். நான் அங்கு 17 ஆண்டுகள் தங்கினேன்" என்று கிரண் பகிர்ந்து கொண்டார். கராச்சியில் உள்ள எதி மையத்தைச் சேர்ந்த ஷபானா பைசல், கிரண் 17 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்திற்கு வந்ததாகக் கூறினார். இதுகுறித்துப் பேசுகையில், "யாரோ ஒருவர் அவரை அங்கே விட்டுச் சென்றிருக்கலாம், ஒருவேளை அவர் வழி தவறியிருக்கலாம்" என்று தெரிவித்தார். "அவர் சிறிது காலம் இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்தில் தங்கியிருந்தார். இந்த நேரத்தில், பில்கீஸ் எதி, இஸ்லாமாபாத் எதி மையத்திற்குச் சென்றார். அங்கு கிரண் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கவனித்தார். எனவே அவர் கிரணை கராச்சியில் உள்ள எதி மையத்திற்கு அழைத்துச் சென்றார்." சில காலத்திற்கு முன்பு, பஞ்சாப் காவல்துறையின் நகரப் பாதுகாப்புத் திட்டத்துடன் தொடர்புடைய 'மேரா பியாரா' குழு கராச்சியில் உள்ள எதி மையத்திற்குச் சென்றதாகவும், அவர்கள் கிரணை நேர்காணல் செய்து அவரது உறவினர்களைத் தேடும் பணியை மேற்கொண்டதாகவும் ஷபானா பைசல் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,கிரண் தனது குடும்பத்தினருடன் இருக்கும் குழந்தைப் பருவ புகைப்படம். குடும்பத்தைக் கண்டறிய உதவிய நேர்காணல் லாகூரில் உள்ள "மேரா பியாரா" திட்டத்தின் மூத்த காவல்துறை தகவல் தொடர்பு அதிகாரியாக சித்ரா இக்ரம் உள்ளார். பஞ்சாப் காவல்துறையின் நகரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட "மேரா பியாரா" திட்டம், "காணாமல் போன குழந்தைகளை அவர்களது உறவினர்களுடன் மீண்டும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அவர் விளக்கினார். ஒரு வருடத்திற்கு முன்பு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 51,000 குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். டிஜிட்டல் வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, காவல்துறை ஆதாரங்களும் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், "கைவிடப்பட்ட குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள வெவ்வேறு மையங்களில், எங்கள் குழுக்கள் நேர்காணல் செய்கின்றன. பின்னர் அந்த நேர்காணல்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் உதவியுடன், குழந்தையின் குடும்பத்தினரைத் தேடுகிறோம்," என்றும் சித்ரா இக்ராம் கூறினார். கிரண் விஷயத்திலும் இதேதான் நடந்ததாக அவர் குறிப்பிட்டார். "எங்கள் குழுக்களில் ஒன்று கராச்சியில் உள்ள எதி மையத்திற்குச் சென்று, கிரணையும், கைவிடப்பட்ட மற்ற பிறரையும் நேர்காணல் செய்து தகவல்களைச் சேகரித்தது." "கிரணுக்கு பெரிதாக நினைவில்லை. அவர் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமாபாத்தில் தன் உறவினர்களுடன் தங்கியிருந்தார்." கிரண் தனது தந்தையின் பெயர் அப்துல் மஜித் என்பதையும் அவரது கிராமத்தின் பெயரையும் நினைவில் வைத்திருந்ததாக சித்ரா இக்ரம் கூறினார். "நாங்கள் இந்தத் தகவலை எங்கள் கசூர் அலுவலகத்திற்கு அனுப்பி, கிரணின் உறவினர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டோம்." அதுகுறித்துப் பேசிய கசூரில் உள்ள காவல் துறை தகவல் தொடர்பு அதிகாரி முபாஷ்ஷீர் ஃபயாஸ், "கிரண் குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்தபோது, அதில் கிராமத்தின் பெயரும் தந்தையின் பெயரும் இருந்தது. அது அவரது குடும்பத்தைத் தேடுவதற்கு பெரிய உதவியாக இருந்தது" என்றார். பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,'அப்னா பியாரா' நிகழ்ச்சி மூலம் பகிரப்பட்ட தகவல் 'ஒரே நாளில் பெற்றோரை கண்டுபிடிக்க முடிந்தது' முபாஷ்ஷீர் ஃபயாஸ் அதுகுறித்துக் கூறுகையில், முதலில், "நாங்கள் அந்தப் பகுதியின் கிராம நிர்வாகத் தலைவரையும், அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியோரையும் தொடர்பு கொண்டோம். நாங்கள் அப்துல் மஜித் பற்றி விசாரித்தபோது, அங்கு பல அப்துல் மஜித்கள் இருப்பது தெரிய வந்தது. கிரணின் குழந்தைப் பருவ புகைப்படங்களை சிலருக்குக் காட்டினோம். ஆனால் அவர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை," என்றார். "அப்துல் மஜித் என்ற பெயரில் உள்ள பலரையும் தொடர்பு கொள்வது சாத்தியம் இல்லை. சில நேரங்களில், காவல் நிலையங்களைச் சேர்ந்த பழைய காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் காவல் நிலையங்களில் இருந்து கிடைக்கும் உதவிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயத்திலும், நாங்கள் அந்தப் பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த பழைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டது பேருதவியாக இருந்தது. அப்போது அவர்களில் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கிரண் என்ற பெண் காணாமல் போனதாகவும், அவரைப் பலர் தேடியதாகவும் எங்களிடம் கூறினார்" என்று அவர் கூறினார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தங்களிடம் கூறியதாகவும் முபாஷ்ஷீர் ஃபயாஸ் தெரிவித்தார். "அதைத் தொடர்ந்து, அந்த அதிகாரி கிரண் இருக்கும் பகுதியை அடைய எங்களுக்கு உதவினார். அங்கு நாங்கள் மசூதிகளில் அறிவிப்புகள் வெளியிட ஏற்பாடு செய்தோம். அங்குள்ள முதியவர்களைச் சந்தித்தோம். அங்கிருந்து, அப்துல் மஜித் என்ற ஒருவரின் மகள் 17 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதை அறிந்தோம்" என்று குறிப்பிட்டார். மேலும், "எங்களது கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கத் தொடங்கியது. நாங்கள் அப்துல் மஜித்தை நெருங்கினோம், நாங்கள் அவரது பகுதியை அடைந்ததும், அங்கிருந்த பலருக்கும் கிரண் காணாமல் போனது நினைவுக்கு வந்தது. எங்களை அப்துல் மஜித்தின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்" என்று நடந்ததை விவரித்தார். பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,கிரண் தனது தந்தை மற்றும் சகோதரருடன் ஆனந்த கண்ணீர் அப்துல் மஜீத்திடம் அவரது மகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் உள்படப் பல்வேறு புகைப்படங்களைக் காட்டியதாக முபாஷ்ஷீர் ஃபயாஸ் கூறுகிறார். "அவர்கள் எங்களுக்கு குடும்பத்தினர் இணைந்து எடுத்த புகைப்படத்தையும், கிரணின் அத்தியாவசிய தகவல்களைக் கொண்ட படிவம் பி-ஐயும் காட்டினர்." படிவம் பி என்பது பாகிஸ்தானில் குழந்தை பதிவுச் சான்றிதழ் என்றும் அழைக்கப்படுகிறது. அப்துல் மஜீத்தான் கிரணின் தந்தை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று அவர்கள் கூறினர். அதைத் தொடர்ந்து ஒரு வீடியோ கால் வந்தது, அதில் தந்தை, மகள் மற்றும் பிற உறவினர்கள் கிரணுடன் பேசிவிட்டு கராச்சிக்கு கிளம்பிச் சென்றனர். அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்த பிறகு, கிரண் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். இறுதியில், நவம்பர் 25 அன்று அவர் வீடு திரும்பினார். கிரணின் மாமா அசாத் முனீர், தனது மருமகள் காணாமல் போனது குறித்துப் பேசுகையில், "கிரண் அப்துல் மஜித்தின் மூத்த மகள். இப்போது அவருக்கு கிரண் உள்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர் காணாமல் போனதில் இருந்து, அப்துல் மஜித்தின் கண்களில் எப்போதும் கண்ணீரை கண்டிருக்கிறேன்" என்று கூறுகிறார். மேலும், "அவர் தனது மகளைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம், அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று மட்டும்தான் கேட்பார். அவர் எப்போதும் தனது மகளின் நிலையைப் பற்றி கவலை கொண்டிருந்தார்" என்கிறார். "அவரது மகள் காணாமல் போன துக்கம் அவரை முன்கூட்டியே முதுமை அடையச் செய்துவிட்டதாகக் கூறிய அவர், அப்துல் மஜித் தனது மகளை அடையாளம் கண்டபோது, அதை முதலில் என்னிடம் பகிர்ந்து கொண்டார். முன்பு அவரது கண்களில் சோகக் கண்ணீரை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது ஆனந்த கண்ணீரைக் காண்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார். உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய கிரண், தனது தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களுடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். சமையல், தையல் கலை மற்றும் கல்வி கற்றுக்கொண்ட பிறகு எதி மையத்தில் இருந்து வீடு திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். "கடினமான காலங்களில் அவர்கள் என்னை முன்னேற ஊக்குவித்து, என் மன உறுதியை உயர்த்தினர். அது மிகப்பெரிய விஷயம்" என்கிறார் கிரண். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0k1dnjevjo
3 months 3 weeks ago
28 Nov, 2025 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு பிரதேச செயலாளருக்கு 50 மில்லியன் ரூபா வரையில் செலவழிப்பதற்குரிய நிதி தத்துவங்களை வழங்குவதற்கு மாவட்ட செயலாளர் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும செலவு தொடர்பான சுற்றறிக்கையை சகல மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள செலவு சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரணமளிப்பதற்கு உரிய பண்டங்கள், செயற்பாடுகள் மற்றும் ஆலோசனையற்ற சேவைகளுக்கு உரிய பெறுகை வழிமுறைகள் மற்றும் கையேடு -2024 இல் குறிப்பிடப்பட்டுள்ள 3.1.8 பிரிவுக்கமைய செயற்படுமாறு இதனூடாக அறிவுறுத்தப்படுகிறது. இதற்கமைய பிரதேச செயலாளர் மேற்குறிப்பிட்படப்ட வழிமுறைகள் மற்றும் கையேட்டின் 2.9இன் பிரகாரம் குறிப்பிடப்பட்டுள்ள வரையறையான 50 மில்லியன் ரூபா வரையான பெறுகை நடவடிக்கைகளை எவ்வித தடைகளுமின்றி விரைவாக மேற்கொள்ள முடியும் என பெறுகை ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்படுகிறது. மேற்குறிப்பிட்ட 2 ஆவது பந்தியில் குறித்துரைக்கப்பட்டதற்கமைய செயற்படுவதற்கு பிரதேச செயலாளருக்கு 50 மில்லியன் ரூபா வரையில் செலவழிப்பதற்கு கூடிய வகையில் நிதி தத்துவங்களை வழங்குவதற்கு மாவட்ட செயலாளர் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மேலதிகமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணமளிப்பதற்கு மேலும் செலவழிக்க வேண்டுமாயின் அது குறித்த விபரங்களை மாவட்டச் செயலார்கள் பாதுகாப்பு அமைச்சு, அசர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு விரைவாக அறிவுறுத்தல வேண்டும். இந்த செலவுச் சுற்றறிக்கையின் பிரதிகள் ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர், பெறுகை ஆணைக்குழுவின் தலைவர், அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சின் செயலாளர்,கணக்காய்வாளர் தலைமை அதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231855
3 months 3 weeks ago
இடிந்து விழுந்த மொரகஹகந்த பாலம்! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தின் வேகம் காரணமாக, மாத்தளை - மொரகஹகந்த லக்கல பாலமும் இடிந்து விழுந்துள்ளது. மேலும், முச்சக்கர வண்டிகள், பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வானிலை ஆய்வுத் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பொதுமக்கள் முடிந்தவரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடுவதைத் தவிர்க்கவும் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். https://ibctamil.com/article/vehicles-washed-away-by-floods-1764332891
3 months 3 weeks ago
3 months 3 weeks ago
'மலை சரிந்து எங்கள் கிராமத்தையே புதைத்தது' - இலங்கையில் வெள்ள பாதிப்புகளின் நிலவரம் என்ன? பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள சூறாவளி தாக்கத்தினால் வரலாறு காணாத பெரும் பாதிப்புகளை நாடு எதிர்நோக்கி வருகின்றது. இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாகத் திரட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், சுமார் 1000க்கும் அதிகமான கட்டடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் பாதிப்புகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பாதிப்புகளின் அளவு நொடிக்கு நொடி அதிகரித்து வருகின்றது. மலை சரிந்து எங்கள் கிராமத்தையே புதைத்தது' "மதியம் 1:30 மணியளவில் என் தந்தை எனக்கு போன் செய்தார். மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. இப்போது பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் எங்கள் வீட்டில் கூடியுள்ளனர்" என்று பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார் ரம்போடா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யோஹன் மலக. இவர் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். "ரம்போடா கிராமத்திற்கு மேலே உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மலை சரிந்து விழுந்து எங்கள் கிராமத்தையே புதைத்துவிட்டது" என்று கூறிய அவர், "நுவரெலியா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக செய்தி வந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு, ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் குறைந்தது 10 அல்லது 15 பேர் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள்." படக்குறிப்பு,ரம்போடா கிராமத்திற்கு மேலே உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மலைதான் இடிந்து விழுந்து கிராமத்தையே புதைத்தது என்கிறார் ரம்போடா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யோஹன் மலக. "சில வீடுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இடிந்து விழுந்த வீட்டில் இரண்டு சிறுமிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைக் காப்பாற்றவோ அல்லது வேறு ஏதும் செய்யவோ வழி இல்லை. என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க வழி இல்லை" என்றார் யோஹன் மலக. தொடர்ந்து பேசிய அவர், "இரண்டு அல்லது மூன்று மாதக் குழந்தை உள்பட மூன்று பேர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றனர். குழந்தை இறந்துவிட்டதாக நாங்கள் அறிந்தோம். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வழி இல்லை என்று குடும்பத்தினர் கூறினர். அனைத்து சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன, எங்கும் செல்ல வழி இல்லை, அனைவரும் எங்கள் வீட்டில் சிக்கிக் கொண்டனர். அவரை மீட்க வந்தவர்கள்கூட இன்னும் வந்து சேரவில்லை." "இரண்டு குடும்பங்கள் எங்கும் செல்ல வழியில்லாமல் ஒரு தீவில் சிக்கித் தவிக்கின்றன. இதுவரை வீட்டிலிருந்து நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம் அவர்களைக் காப்பாற்ற வழி இல்லை என்பதுதான்" என்றும் அவர் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார். 10 நாட்களில் 1000 மி.மீ மழை எதிர்வரும் 24 மணிநேரத்தில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் எதிர்பாராத அளவு வெகுவாக அதிகரிக்கக்கூடும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை அண்மித்து வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஆபத்து நிலைமை காணப்படும் பட்சத்தில் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலையையொட்டி, மலையகத்தின் எந்தவொரு பகுதியிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலையகத்தில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகுமாக இருந்தால், மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகளவில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. அதனால், மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மலையகம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளுக்கு சுமார் 500 மி.மீ.க்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் நிறுவனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 நாட்களில் மாத்திரம் 1000 மில்லீமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,Getty Images பேராதனை பல்கலைக் கழகத்திற்கு வரலாறு காணாத பாதிப்பு தெற்காசியாவின் மிக முக்கியமான பல்கலைக் கழகமாகக் கருதப்படும் பேராதனை பல்கலைக் கழகம் வரலாறு காணாத அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளது. பல்கலைக் கழகத்தை அண்மித்து ஊடறுத்துச் செல்லும் மகாவளி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்ததை அடுத்து, பேராதனை பல்கலைக் கழகத்திற்குள் வெள்ள நீர் பிரவேசித்துள்ளது. பல்கலைக் கழகத்தின் மைதானம், பல்கலைக் கழகத்தின் மிக முக்கியமான பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிந்தது. அத்துடன், பல்கலைக் கழகத்தை அண்மித்துள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக் கழக வளாகத்திற்குள் காணப்பட்ட பல மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. அத்துடன், கண்டி நகரின் முக்கியமான பௌத்த விகாரையான கெட்டம்பே விகாரையும் நீரில் மூழ்கியுள்ளது. அதேவேளை, கண்டி நகரில் பல இடங்கள் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கியுள்ளன. மேலும், கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கண்டி மாவட்டத்தின் ஹசலக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. காணாமல் போனோரை மீட்கும் பணிகளில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதுடன், இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் உதவிகளை வழங்கி வருகின்றனர். நுவரெலியா, நாவலபிட்டிய, கெலிஓயா, கம்பளை உள்ளிட்ட பல நகரங்களுக்குள் வெள்ள நீர் உட்பிரவேசித்துள்ளது. இதனால், பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பட மூலாதாரம்,Sri Lanka Air Force படக்குறிப்பு,அநுராதபுரம் கலாவௌ ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து, தென்னை மரமொன்றில் ஏறியிருந்த ஒருவரை விமானப் படையினர் மீட்டனர். மீட்புப் பணிகள் தீவிரம் பொலன்னறுவை மனம்பிட்டிய பாலத்தின் மீது சிக்குண்டிருந்த 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரின் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அநுராதபுரம் கலாவௌ ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து, தென்னை மரமொன்றில் ஏறியிருந்த ஒருவரை விமானப்படையினர் காப்பாற்றியுள்ளனர். மின்சாரம், தொலைபேசி துண்டிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20 வீதமானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. பல்வேறு பகுதிகளில் மின்சார தூண்கள் உடைந்து வீழ்ந்துள்ளமை, மின்சார தூண்களின் ஊடாக வெள்ள நீர் உட்பிரவேசித்துள்ளமை, மண்சரிவு காரணமாக மின்சார தூண்கள் உடைந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களால் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. அத்துடன், மின்சார துண்டிப்பை அடுத்து, பெரும்பாலான பகுதிகளில் கையடக்கத் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினாலும், சில பகுதிகளுக்குள் அவர்களால் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. மின்சார விநியோகத்தை இயலுமான அளவுக்கு விரைவில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். போக்குவரத்து பாதிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான பேருந்து போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ரயில் தண்டவாளங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் ரயில் தண்டவாளங்களுக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், வீதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பேருந்து போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன. முச்சக்கரவண்டி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டு இருப்பதால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, இலங்கைக்கு வரும் சில விமானங்கள் இந்தியாவை நோக்கித் திருப்பி விடுவதற்கும் நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டு இருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyke19yd17o
3 months 3 weeks ago
தொடர்ந்து தகவல்களை தந்து கொன்டிருக்கும் ஏராளன் மற்றும் பிழம்பு ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.
3 months 3 weeks ago
இரஸ்சியாவிற்கு ஐரோப்பிய நாடுகள் மேல் தாக்குதல் செய்யும் எந்தவித நோக்கம் இல்லை எனவும் அவ்வாறு கூறுவது அபத்தாமானது வேணுமென்றால் எழுத்துபூர்வ உறுதிமொழி வழ்ங்கலாம் என புட்டின் அறிவித்துள்ளார், மறுவளமாக ஐரோப்பிய நாடுகள் இரஸ்சியாவினை தாக்குவதற்கு இரகசிய திட்டத்துடன் உள்ளார்கள் என வோல்சிரீர் ஜேர்னல் கூறூகிறது. யதார்த்ததிற்கு புறம்பான ஒரு அச்சுறுத்தல் பிரச்சாரத்தினை மேற்கு கை கொண்டுள்ளது அதற்காக ஊடக தர்மத்திற்கெதிராக தமக்கான கதை உருவாக்கங்கள் மற்றும் சுதந்திர ஊடக மீதான தடை மூலம் ஒரு தேவையற்ற போரினை ஏற்படுத்த விளைகிறார்கள், இதன் மூலம் உலகின் அமைதியின்மைக்கும் பல உயிரழிவிற்கும் காரணமாகின்றனர்.
3 months 3 weeks ago
ரஷ்யாவிற்கு "ஐரோப்பாவைத் தாக்கும் திட்டம் இல்லை" என்பதை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க புடின் முன்வந்துள்ளார். Ulyana Krychkovska, VALENTYNA ROMANENKO — 27 நவம்பர், 16:49 புடின். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 16422 இல் безбород ஐரோப்பாவைத் தாக்கும் நோக்கம் ரஷ்யாவிற்கு இல்லை என்பதை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக கிரெம்ளின் தலைவர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். மூலம்: ரஷ்ய செய்தி நிறுவனமான இன்டர்ஃபாக்ஸ் , நவம்பர் 27 அன்று ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது புடினை மேற்கோள் காட்டி, ஐரோப்பிய பிராவ்தா செய்தி வெளியிட்டுள்ளது. விவரங்கள்: எட்டப்பட்ட எந்தவொரு புரிதலும் "ராஜதந்திர மொழியில் வெளிப்படுத்தப்பட வேண்டும் " என்று புடின் கூறினார். மேற்கோள்: "ரஷ்யா ஐரோப்பாவைத் தாக்கப் போவதில்லை என்று சொல்வது ஒரு விஷயம் - எங்களுக்கு அது அபத்தமாகத் தெரிகிறது, அது உண்மையில் அப்படித்தான். நாங்கள் ஒருபோதும் அப்படி நினைக்கவில்லை, ஆனால் அவர்கள் அதை எங்களிடமிருந்து கேட்க விரும்பினால், சரி, சரி, நாங்கள் அதை எழுத்துப்பூர்வமாக வெளியிடுவோம். எந்த பிரச்சனையும் இல்லை." மேலும் விவரங்கள்: ஐரோப்பாவைத் தாக்க ரஷ்யா தயாராகி வருவதாகப் பகிரங்கமாகக் கூறும் சிலர் ஐரோப்பாவில் இருப்பதாகவும், அத்தகையவர்களை "சரியான மனநிலை இல்லாதவர்கள்" என்றும் புடின் விவரித்தார். மேற்கோள்: "இருப்பினும், இது ஏற்கனவே பொதுமக்களின் மனதில் தூண்டிவிடப்பட்டிருந்தால், அவர்கள் தங்கள் குடிமக்களை பயமுறுத்தியிருந்தால், நாங்கள் அவ்வாறு செய்யப் போவதில்லை என்றும் ஐரோப்பாவை நோக்கி எந்த ஆக்கிரமிப்புத் திட்டங்களும் இல்லை என்றும் கேட்க விரும்பினால், சரி, அவர்கள் விரும்பும் எந்த வழியிலும் இதை அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்." பின்னணி: ஜெர்மனியின் லெப்டினன்ட் ஜெனரல் அலெக்சாண்டர் சோல்ஃப்ராங்க், ரஷ்யா எந்த நேரத்திலும் நேட்டோ பிரதேசத்தின் மீது வரையறுக்கப்பட்ட தாக்குதலை நடத்தும் திறன் கொண்டது என்று முன்னதாகக் கூறினார் . நவம்பர் 27 அன்று, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ரஷ்யாவுடன் போர் ஏற்பட்டால் ஜெர்மனி உருவாக்கிய ஒரு ரகசியத் திட்டத்தின் விவரங்களை வெளியிட்டது . 1,200 பக்க ஆவணம், 800,000 ஜெர்மன், அமெரிக்க மற்றும் பிற நேட்டோ துருப்புக்கள் கிழக்கு நோக்கி முன் வரிசையில் எவ்வாறு நகர்த்தப்படும் என்பதை விரிவாகக் கூறுகிறது. ஸ்வீடிஷ் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் மைக்கேல் கிளாசன் சமீபத்தில், ரஷ்யா விரைவில் நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்பைச் சோதிக்க முயற்சிக்கக்கூடும் என்று கூறினார் . Ukrainska PravdaPutin offers to state in writing that Russia has "no plan...Kremlin leader Vladimir Putin has claimed that Russia is prepared to state in writing that it does not intend to attack Europe.WSJ: ரஷ்யாவுடன் போரிடுவதற்கு ஜெர்மனி ரகசிய திட்டம் வைத்துள்ளது. Iryna Kutielieva, Alona Mazurenko - 27 நவம்பர், 13:15 பெர்லினில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கல் அரசாங்கக் கட்டிடத்தின் மேல் ஜெர்மன் தேசியக் கொடிகள் பறக்கின்றன. புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 7928 - ரஷ்யாவுடன் போர் ஏற்பட்டால் ஜெர்மனி உருவாக்கிய ரகசியத் திட்டத்தின் விவரங்களை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ளது. மூலம்: WSJ ; ஐரோப்பிய பிராவ்தா விவரங்கள்: இந்தத் திட்டம் சுமார் ஒரு டஜன் மூத்த ஜெர்மன் அதிகாரிகளால் வரையப்பட்டது. அதற்கான பணிகள் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 1,200 பக்க ஆவணம், 800,000 ஜெர்மன், அமெரிக்க மற்றும் பிற நேட்டோ துருப்புக்கள் கிழக்கு நோக்கி முன் வரிசையில் எவ்வாறு நகர்த்தப்படும் என்பதை விரிவாகக் கூறுகிறது. இது அவர்கள் பயன்படுத்தும் துறைமுகங்கள், ஆறுகள், ரயில்வேக்கள் மற்றும் சாலைகள் ஆகியவற்றை வரைபடமாக்குகிறது, அத்துடன் அவை எவ்வாறு விநியோகிக்கப்படும் மற்றும் பாதுகாக்கப்படும் என்பதையும் காட்டுகிறது. 2029 ஆம் ஆண்டில் நேட்டோவைத் தாக்க ரஷ்யா தயாராகவும் விருப்பத்துடனும் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஜெர்மன் அதிகாரிகள் முன்னதாகவே கூறியிருந்தனர். ஆனால் தொடர்ச்சியான உளவு சம்பவங்கள், நாசவேலை தாக்குதல்கள் மற்றும் ஐரோப்பிய வான்வெளியில் ஊடுருவல்கள் ஆகியவை அது முன்னதாகவே தாக்குதலுக்குத் தயாராகி வரக்கூடும் என்பதைக் குறிக்கின்றன. உக்ரைனில் ஏற்படக்கூடிய எந்தவொரு போர்நிறுத்தமும், ஐரோப்பாவில் உள்ள நேட்டோ உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரஷ்யாவிற்கு நேரத்தையும் வளங்களையும் விடுவிக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஐரோப்பாவின் மீள்தன்மையை வலுப்படுத்த முடிந்தால், வெற்றியைப் பெறுவது மட்டுமல்லாமல், போரின் சாத்தியக்கூறுகளையும் குறைக்க முடியும் என்று திட்டத்தின் ஆசிரியர்கள் நம்புகின்றனர். "நமது எதிரிகள் நம்மைத் தாக்கினால், அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள் என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதன் மூலம் போரைத் தடுப்பதே குறிக்கோள்" என்று ஒரு மூத்த இராணுவ அதிகாரியும் திட்டத்தின் ஆரம்பகால ஆசிரியர்களில் ஒருவருமான கூறினார். ஜெர்மனியின் இராணுவத் திட்டமிடுபவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தடைகளில் சில அருவமானவை: சிக்கலான கொள்முதல் விதிகள் மற்றும் தரவு பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் மிகவும் அமைதியான சகாப்தத்தில் வரையப்பட்ட பிற விதிமுறைகள். இந்தத் திட்டம் உள்கட்டமைப்பில் குறிப்பாக கவனம் செலுத்துகிறது. நீண்டகால நிதி பற்றாக்குறை காரணமாக 20% மோட்டார் பாதைகளும் கால் பங்கிற்கும் அதிகமான மோட்டார் பாதை பாலங்களும் பழுதுபார்க்கப்பட வேண்டும் என்று பெர்லின் மதிப்பிடுகிறது. ஜெர்மன் துறைமுக கூட்டமைப்பின் கூற்றுப்படி, வட கடல் மற்றும் பால்டிக் கடலில் உள்ள ஜெர்மனியின் துறைமுகங்களுக்கு €15 பில்லியன் முதலீடு தேவைப்படுகிறது, இதில் கப்பல்துறை வலுவூட்டல்கள் போன்ற இரட்டை பயன்பாட்டு மேம்பாடுகளுக்கு €3 பில்லியன் அடங்கும். போர் ஏற்பட்டால் துருப்புக்களின் இயக்க சுதந்திரத்தை இத்தகைய சமச்சீரற்ற தன்மை கட்டுப்படுத்தும். இராணுவத்தின் நடமாட்ட வரைபடத்தில் உள்ள தடைகள் திட்டத்தின் மிகவும் நெருக்கமாகப் பாதுகாக்கப்பட்ட ரகசியங்களில் ஒன்றாகும். அமைதிக்கால சட்ட குறைபாடுகள், திட்டத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றான நாசவேலைகளுக்கு எதிராக ஜெர்மனி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதை கடினமாக்கியுள்ளன. அப்படியிருந்தும், ஜேர்மன் இராணுவம் அதன் முன்னேற்றம் குறித்து ஒரு உற்சாகமான மதிப்பீட்டை வழங்கியுள்ளது. "2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் ஒரு வெற்றுப் பக்கத்துடன் தொடங்கினோம் என்பதைக் கருத்தில் கொண்டு, இன்று நாம் இருக்கும் இடத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது மிகவும் அதிநவீன தயாரிப்பு" என்று திட்டத்தின் அதிகாரியும் இணை ஆசிரியருமான அவர் கூறினார். இருப்பினும், சமீபத்திய மன அழுத்த சோதனைகள், திட்டமும் யதார்த்தமும் ஒன்றிணைவதற்கு முன்பு இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன என்பதைக் காட்டுகின்றன. திட்டமிடுபவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மை அவர்களுக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதுதான். பின்னணி: ஜெர்மனியின் லெப்டினன்ட் ஜெனரல் அலெக்சாண்டர் சோல்ஃப்ராங்க், ரஷ்யா எந்த நேரத்திலும் நேட்டோ பிரதேசத்தின் மீது வரையறுக்கப்பட்ட தாக்குதலை நடத்தும் திறன் கொண்டது என்று முன்னதாகக் கூறினார் . ரஷ்யாவின் கலப்பின நடவடிக்கைகளுக்கு இன்னும் என்ன தீவிரமான பதிலை அளிக்க முடியும் என்பதை ஐரோப்பிய நாடுகள் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளன என்று பொலிட்டிகோ முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது . Ukrainska PravdaWSJ: Germany has secret plan for war with RussiaThe Wall Street Journal has revealed details of a secret plan developed by Germany in the event of war with Russia.
3 months 3 weeks ago
28 Nov, 2025 | 01:05 PM யாழ். காங்கேசன்துறைக்கான புகையிரத சேவை நிறுத்தப்பட்டதால், அநுராதபுரம் புகையிர நிலையத்தில் சுமார் 400 பேர் வரை சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க அநுராதபுரம் நகரசபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அதிக மக்கள் தொகை சிக்கியயுள்ள நிலையில், உணவு, தண்ணீர் மற்றும் தற்காலிக வசதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கும் வரை, சிக்கிய பயணிகள் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரம் புகையிர நிலையத்தில் சிக்கியுள்ள சுமார் 400 பேர்! | Virakesari.lk
3 months 3 weeks ago
கொழும்பில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட மோசமான நிலைமை ஏற்பட கூடும் - நீர்பாசனத் திணைக்களம். 28 Nov, 2025 | 03:29 PM கொழும்பில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட மோசமான நிலைமை ஏற்பட கூடும் என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நாளை சனிக்கிழமை (29) இரவு வேளையில் கொழும்பில் பாரிய வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உடைமைகளை ஆயத்தம் செய்து பாதுகாப்பாக இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. கொழும்பில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட மோசமான நிலைமை ஏற்பட கூடும் - நீர்பாசனத் திணைக்களம் | Virakesari.lk
3 months 3 weeks ago
கிளிநொச்சி மாவட்ட குளங்களில் வெள்ளப்பெருக்கு 28 Nov, 2025 | 04:28 PM தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றன. அத்தோடு கிளிநொச்சி மேற்கு பகுதியில் உள்ள குடமுருட்டி குளம் மாத்திரம் இன்று வெள்ளிக்கிழமை (28) மாலை வரையான தகவலின் படி வான் பாய்கின்றன. இதன் காரணமாக தாழ் நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ளனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தமையால் மக்கள் தொடர்ந்தும் இடமபெயர்ந்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்ட குளங்களில் வெள்ளப்பெருக்கு | Virakesari.lk
3 months 3 weeks ago
கொழும்பில் நங்கூரமிட்டுள்ள விக்ராந்த் மற்றும் உதயகிரி ஆகிய கப்பல்களிலிருந்து இலங்கைக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தது இந்தியா! 28 Nov, 2025 | 05:01 PM இலங்கையில் தற்போதைய கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உருவான கடுமையான பாதிப்பு நிலைமையை முன்னிட்டு, இந்திய அரசு அவசர நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை கப்பல்களான ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant) மற்றும் ஐ.என்.எஸ் உதயகிரி (INS Udaygiri) ஆகியன இலங்கை கடற்படையின் 75 ஆவது நிறைவு ஆண்டை கொண்டாட கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்களை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது பதிவில், “இலங்கையில் நிலவும் அனர்த்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தியா உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. இரண்டு இந்திய கடற்படை கப்பல்கள் நிவாரணப் பொருட்களுடன் கொழும்பில் தரையிறங்கியுள்ளன,” என குறிப்பிட்டுள்ளார். நிவாரணப் பொருட்களில் உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், அவசர மீட்பு உபகரணங்கள், குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரிய நட்புறவை மீண்டும் வலுப்படுத்தும் விதமாக இந்தியாவின் இந்த அவசர உதவி முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் தமது அன்புக்குரியவர்களை இழந்திருக்கும் குடும்பங்களுக்கு அனுதாபத்தை வெளிப்படுத்தியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 'சாகர் பந்து' திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் மற்றும் அவசியமான மனிதாபிமான உதவிகள், அனர்த்த நிவாரணங்களை உடனடியாக அனுப்பிவைத்திருப்பதாக அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாக பலர் உயிரிழந்திருப்பதுடன், பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டோருக்கான அனுதாபத்தையும், இக்கடினமான சூழ்நிலையில் இந்தியாவின் உடன்நிற்பையும் வெளிப்படுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். 'டித்வா சூறாவளி காரணமாக தமது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரித்துக்கொள்கிறேன். அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் துரித மீட்சிக்காகப் பிரார்த்திக்கிறேன்' என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை 'எமது மிகநெருங்கிய அயல்நாட்டுடனான உடன்நிற்பை வெளிப்படுத்தும் வகையில் 'சாகர் பந்து' திட்டத்தின்கீழ் நிவாரணப்பொருட்கள் மற்றும் அவசியமான மனிதாபிமான உதவிகள், அனர்த்த நிவாரணங்களை இந்தியா உடனடியாக அனுப்பிவைத்துள்ளது. இந்நிலைவரம் தீவிரமடையும் பட்சத்தில் அவசியமான மேலதிக உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 'அயலகத்துக்கு முதலிடம் மற்றும் 'விஷன் மகாசாகர்' ஆகிய கொள்கைகளின் பிரகாரம் மிக அவசியமான இத்தருணத்தில் இலங்கையுடன் இந்தியா உடன்நிற்கும் எனவும் பிரதமர் மோடி அப்பதிவில் உறுதியளித்துள்ளார். கொழும்பில் நங்கூரமிட்டுள்ள விக்ராந்த் மற்றும் உதயகிரி ஆகிய கப்பல்களிலிருந்து இலங்கைக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தது இந்தியா! | Virakesari.lk
3 months 3 weeks ago
28 Nov, 2025 | 05:05 PM ( செ.சுபதர்ஷனி) “தித்வா“ சூறாவளியின் தாக்கத்தால் நாடு முழுவதும் பலத்த காற்றும் கனத்த மழையுடனான வானிலை தொடர்வதோடு, நேற்று கொழும்பில் உள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் வீதியில் மரங்கள் வீழ்ந்தமையால் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்த பட்டிருந்தமுதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்ததுடன், தொடரும் வானிலையால் கொழும்பு வரலாறு காணாத மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. வங்காள விரிகுடாவில் இலங்கையின் தென் கிழக்குப் பகுதியை அண்மித்த கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை சூறாவளியாக வலுபெற்று தற்போது நிலப்பகுதியை ஊடறுத்து வடமேற்கு நோக்கி நகர்கின்றது. இந்நிலையில் வியாழக்கிழமை (27) கொழும்பில் பொழிந்த கன மழை மற்றும் கடுங்காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காற்றில் பிரதான வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்திருந்ததுடன், வீடுகள், கடைகள், நிறுவனங்கள் என பலவற்றுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை (28) காலை கொழும்பில் பல பகுதிகளில் மழை நீர் வழிந்தோடமால் தேங்கி வெள்ளம் ஏற்பட்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது. காற்றின் வேகத்தில் அள்ளுண்டு செல்லப்பட்ட தகரங்கள், வர்த்தக நிலையங்களின் பெயர் பலகைகள், பதாதைகள் என பல பொருட்கள் வீதிகளில் காணக்கிடைத்தன. போக்குவரத்துக்கு தடையாக இருந்த பொருட்களை பொலிஸார், இராணுவத்தினர் உடனடியாக செயற்பட்டு அப்புறப்படுத்தியிருந்தனர். அதிகமழை காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்துள்ளமையால் கடவத்தை முதல் கடுவெல வரையிலான அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் கடவத்தை அதிவேக நெடுஞ்சாலையின் வாயில் நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்து மீள் அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு தேசிய வைத்தியசாலையின் 4 ஆம் இலக்க நுழைவாயில் வீதி, எல்விட்டிகள மாவத்த வீதி, ரெஜின வீதி சந்தி, கொட்டாஞ்சேனை மற்றும் பிரேமசிரி கோமதாச மாவத்தை ஆகிய வீதிகளில் போக்குவரத்து தடைபட்டது. வீதிகளில் முறிந்து கிடந்த மரக்கிளைகள் மற்றும் விழுந்துக் கிடந்த மரங்கள் ஆகியவற்றை இராணுவத்தினர் மற்றும் இடர் முகாமைத்துவ பணியாளர்களால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் களணி கங்கையை அன்டிய தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியிருந்தன. வத்தளை, களணி, வெல்லம்பிட்டி, கொலன்னாவ , சேதுவத்தை, தெமட்டகொடை, நவகம்புர மற்றும் அவிசாவல்லை ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவிசாவளையில் உள்ள நீர் மானிப்படி 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்ததுடன், தொடரும் வானிலையால் கொழும்பு வரலாறு காணாத மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. அதனையடுத்து களணி கங்கையை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், நேற்றைய தினம் களணி கங்கையை அன்மித்த அவதானமிக்க பகுதியிலிருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீரற்ற வானிலையால் கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! | Virakesari.lk
3 months 3 weeks ago
28 Nov, 2025 | 05:42 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களினால் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிமடைந்துள்ளன. மலையகத்துக்கான புகையிரத சேவை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் தூர பிரதேச புகையிரத சேவைகள் அனைத்தும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு நேற்று மாலையில் இருந்து களனிவெளி புகையிரத வீதி,பிரதான புகையிரத வீதி (மீரிகம),கரையோர பகுதி(அளுத்கம,காலி,)புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பேருந்து சேவைகள் இவ்வாறான நிலையில் கொழும்பில் இருந்து வடக்கு,கிழக்கு உட்பட தூர பிரதேசங்களுக்குமான பேருந்து சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளநீர் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் இல்லாத பகுதிகளில் மாத்திம் குறுந்தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். புகையிரத சேவைகள் பாதிப்பு நேற்று காலையில் இருந்து சகல புகையிரத வீதிகளின் புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத பாதைகளில் மண்மேடு சரிந்து விழல், மரங்கள் முறிந்து விழுதல் தீவிரமடைந்துள்ளதால் பொது பயணிகளின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் சந்திரசேன பண்டார தெரிவித்துள்ளார். மண்சரிவு அபாயத்தினால் மலையகத்துக்கான புகையிரத சேவை முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.மண்சரிவினால் மலையக புகையிரத பாதைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதைகளை சீர் செய்து மீள சேவையை ஆரம்பிக்கும் தினத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது. காலநிலை இயல்பு நிலைக்கு திரும்பியதன் பின்னரே புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் மறுஅறிவித்தல் விடுக்கும் வரையில் கிழக்கு புகையிரத வீதியில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய தூர பிரதேசங்களுக்கான புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மறுஅறிவித்தல் விடுக்கும் வரையில் புகையிரத பொதுகள் விநியோக சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதம் அவசர அனர்த்த நிலை காரணமாக குருநாகல் புகையிரத நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கிச் சென்ற புகையிரதம் அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக வடக்குக்கான புகையிரத சேவை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அநுதாரபுரம் புகையிரத நிலையத்தில் சுமார் 400 பயணிகள் நேற்று முன்தினம் இரவு இருந்துள்ளதுடன், அநுராதபுரம் நகர சபையின் ஊடாக அவர்களுக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.அதேபோல் குருநாகல் புகையிரத நிலையத்தில் இருந்து அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறுந்தூர புகையிரத சேவைகள் வரையறுக்கப்பட்ட வகையில் ஆரம்பம் அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு நேற்று மாலையில் இருந்து களனிவெளி புகையிரத வீதி,பிரதான புகையிரத வீதி (மீரிகம),கரையோர பகுதி(அளுத்கம,காலி,)புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புத்தளம் புகையிரத வீதி,மற்றும் வடக்கு புகையிரத வீதிக்கான சகல புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொதுபயணிகள் பெரும் சௌகரியம் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பயணம் செய்வதை இயலுமான வகையில் தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பொதுபோக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் பொதுபயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் | Virakesari.lk
3 months 3 weeks ago
இந்த கடினமான சூழ்நிலையில் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி தெரிவிப்பு 28 Nov, 2025 | 03:37 PM "இந்த கடினமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கவும் நாம் அனைவரும் செயற்திறனுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமையில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை (28) முற்பகல் முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை செயற்திறனுடன் முன்னெடுப்பதற்காக தேவைப்பட்டால் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன் போது பரிந்துரைத்ததுடன், அதற்காக முழு ஆதரவையும் வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பணம் தடையல்ல என்று குறிப்பிட்ட, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏற்கனவே அனர்த்த முகாமைத்துவ மாவட்டக் குழுக்களைக் கூட்டியுள்ளதாகத் தெரிவித்ததுடன்,தேவைக்கேற்ப செலவழிக்க மாவட்ட செயலாளர்களுக்கு ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் எந்த சுற்றறிக்கையும் அந்த நிதியை செலவிடுவதை தடுக்காது என்றும், அவ்வாறு ஏதேனும் தடைகள் இருந்தால், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதலுடன் நிதியைச் செலவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், நிவாரணக் குழுக்களுக்கு பிரவேசிக்க முடியாத இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்குத் தேவையான ஹெலிகொப்டர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்களை மீட்பதற்கு தேவைப்பட்டால் ஹெலிகொப்டர் வசதிகளை வழங்க இந்திய உயர் ஸ்தானிகராலயம் இணங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். நிவாரண முகாம்களுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கும், வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கும், வீடுகளுக்கு வெளியே வேறு இடங்களில் உள்ளவர்களுக்கும் சமைத்த உணவு, சுகாதார வசதிகள் உள்ளிட்ட நிவாரண சேவைகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, தமது மாவட்டங்களில் நிவாரண சேவைகள் கிடைக்காத பகுதிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரினார். மேலும், மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் அபாயகர நிலைமைக்கு முகங்கொடுக்கத் தேவையான முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் தமது மாவட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் தேவைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உள்ளிட்ட ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/231823
3 months 3 weeks ago
“டித்வா” புயல் - 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கான விசேட அறிக்கை! 28 Nov, 2025 | 05:21 PM டிட்வா புயல் சற்று தீவிரம் பெறுகின்றது.மிகக்கனமழை, வேகமான காற்று வீசுகை மற்றும் கடல்நீர் உட்புகுதல் தொடர்பான எச்சரிக்கையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ளார். டிட்வா புயலின் வெளி வளையம் வடக்கு மாகாணத்தை தொட்டுள்ளது. இன்று இரவு டிட்வா புயலின் மையம் வட மாகாணத்துக்குள் பிரவேசிக்கும் வாய்ப்புள்ளது. வெளி வளையம் தொட்டிருப்பதனால் படிப்படியாக மழை அதிகரித்து மிகக் கனமழை கிடைக்கும். காற்றின் வேகமும் அதிகரிக்கும். பல குளங்களுக்கு மிக அதிக நீர் வரத்தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும். பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சில குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. மேலும் சில குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளன. ஆகவே குளங்களுக்கு அண்மித்துள்ள மக்களும், தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்களும் மிக அவதானமாக இருப்பது அவசியம். தேவையேற்படின் இருள்வதற்கு முன் பாதுகாப்பான இடங்களுக்கு நகருங்கள். குறிப்பாக யாழ்ப்பாண நகரை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் ஏனைய மக்கள் நிலைமையைப் பொறுத்து இருள்வதற்கு முன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். முக்கியமாக மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்கரையோரங்களில் Storm Charge எனப்படும் கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உட்புகும் அபாயம் உள்ளது. ஆகவே வடக்கு மாகாணக் கடற்கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும். மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணத்திலும் தொடர்ந்த கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231854
3 months 3 weeks ago
சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்! 28 Nov, 2025 | 02:52 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் திட்வா புயல் காரணமாக முள்ளிப்பொத்தானை தம்பலகாமம் பிரதேச வயல் நிலப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை (28) தம்பலகாமம் ஊத்த வாய்க்கால் உடைப்பெடுத்துள்ளதால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியால் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்கிறது. குறித்த ஊத்தை வாய்க்கால் உடைப்பெடுத்ததால் அதனை சூழவுள்ள வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது. முள்ளிப்பொத்தானை,ஜாமியா நகர்,ஈச்சநகர்,பத்தினிபுரம், புதுக்குடியிருப்பு,கோயிலடி உள்ளிட்ட தாழ் நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளது. தம்பலகாமம்,கோயிலடி பகுதியில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களை சேர்ந்த 90 பேர்கள் தி/ஆதிகோனேஸ்வரா மகாவித்தியாலயத்தில் உள்ள இடைத் தங்கல் முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகள் தம்பலகாமம் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 11பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய வகையில் 124 கிராம சேவகர் பிரிவில் இருந்து 5433 குடும்பங்களை சேர்ந்த 16063 நபர்கள் இன்று காலை 11.00 பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231816
3 months 3 weeks ago
இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 தொன் உணவு நன்கொடை! Published By: Digital Desk 1 28 Nov, 2025 | 03:46 PM கொழும்பு துறைமுகத்தில் தற்போது நங்கூரமிடப்பட்டுள்ள இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த், நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, தனது கையிருப்பில் இருந்து 4.5 தொன் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. அத்துடன், கப்பல் கூடாரங்கள், மின்சார மின்விளக்குகள் மற்றும் மின்னூக்கி கேபிள் கம்பிகள் உள்ளிட்ட இரண்டு தொன் பிற நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்கள் லொரிகளில் ஏற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231825
3 months 3 weeks ago
28 Nov, 2025 | 02:24 PM வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார். தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக தெரிவானார். 16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. எம்.கே.சிவாஜிலிங்கத்தை முதன்மை வேட்பாளராக நிறுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிட்டிருந்த போதும், எம்.கே.சிவஜாலிங்கம் நியமன பட்டியல் ஊடாக களமிறங்கியிருந்ததால் உடனடியாக உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை. ஏற்கனவே, தெரிவான சபை உறுப்பினரொருவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு எம்.கே.சிவாஜிலிங்கம் கட்சியால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டார். எம்.கே.சிவாஜிலிங்கம் உறுப்பினராக தெரிவானதும் தற்காலிக காலத்திற்கு செயற்பட்ட தவிசாளர் தவமலர் சுரேந்திரநாதன் தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சா.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர். https://www.virakesari.lk/article/231810
3 months 3 weeks ago
2016ஆம் ஆண்டுக்கு பின் மிக மோசமான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு! 28 Nov, 2025 | 01:24 PM வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெளியீட்டின்படி, தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை 2016ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவாகிய மிக மோசமான வானிலையென குறிப்பிடப்பட்டுள்ளது. திணைக்களம் தெரிவித்துள்ள தகவலின் படி, கடுமையான கனமழை, இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் பல பகுதிகளில் தொடர்ந்து பதிவாகி வருகிறது. இதனால் வீடுகள் சேதமடைதல், மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வீதிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளன என் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அதிகாரிகள் வழங்கும் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம், அடுத்தடுத்து வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து வழங்கி, பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. https://www.virakesari.lk/article/231796
Checked
Fri, 03/20/2026 - 10:44
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed