1 hour 32 minutes ago
இது எல்லா கட்சிகளிலும் உள்ள ஒரு நிலைதான்.. யாரை விழுத்தி எப்படி உயர்வது எனத் தொடங்கி.. கட்சி மாறுவது வரை..
1 hour 32 minutes ago
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் - அமெரிக்க தூதுவர்
Published By: DIGITAL DESK 3
17 MAY, 2024 | 04:50 PM
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (17) சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கால்நடை உற்பத்திகளை மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும், இயந்திர தொழில்நுட்ப பயன்பாட்டை மக்கள் மயப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது ஆளுநர் தெரிவித்தார்.
காணி விடுவிப்பு, விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் மக்கள் பிரவேசிப்பதற்கான வசதிகள் தொடர்பிலும் அமெரிக்க தூதுவர், ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டார்.
ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான வீதிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றி திறக்கப்படுவதாகவும் ஆளுநர் கூறினார்.
மேலும், வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்ககூடிய கண்காட்சி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம், ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
வடக்கிற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கான ஒத்துழைப்புகளை ஆளுநரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
27 வருடங்களின் பின்னர் அமெரிக்க அமைதி காக்கும் கழகத்தின் ஊடாக இலங்கையில் இலவச ஆங்கில மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் கூறினார்.
https://www.virakesari.lk/article/183799
1 hour 48 minutes ago
Published By: RAJEEBAN
17 MAY, 2024 | 03:49 PM
சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்தின் தாயாரின் வீட்டிற்கு சென்ற சிஐடியினர் விசாரணையில் ஈடுபட்டடுள்ளனர்
திருகோணமலையில் உள்ள தனதுதாயாரின் வீட்டிற்கு சிஐடியினர் சென்று விசாரணைகளில் ஈடுபட்டனர் என ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இன்று காலை 10 மணியளவில் மூன்றாவது தடவையாக எந்த முன் அனுமதியுமின்றி CIDயினர் திருகோணமலையில் உள்ள எனது அம்மாவின் வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டார்கள்.
இங்கு கொழும்பில் இடம்பெறுகின்ற அச்சுறுத்தல்கள் என் சார்ந்தவை அதை கடந்து செல்ல என்னால் முடிகிறது. ஏற்கனவே சென்ற வருடம் இரவு 12 மணிக்கு திருகோணமலை வீட்டைச் சென்று தட்டினார்கள்.
புலானாய்வுப் பிரிவினருக்கு எனது விபரங்கள் முழுமையாகத் தெரிந்தும் தொடர்ச்சியாக எனது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்வதை அனுமதிக்க முடியாது.
என்னைப் பற்றிய என் குடும்பம் பற்றிய விபரங்களை அம்மாவிடம் கேட்டுள்ளனர். எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் இவர்கள் தொடர்ச்சியாக இப்படியான மோசமான அத்துமீறல்/ உரிமை மீறல்களில் ஈடுபடுவதை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்க முடியாது.
வரும் திங்கட்கிழமை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளேன்.
https://www.virakesari.lk/article/183793
1 hour 50 minutes ago
கிழித்தால் குற்றமல்லவா?
2 hours 14 minutes ago
என்ன விலை கொடுத்தாவது அரசாங்கம் அம்மையாரின் விஜயத்தை முடக்க முயற்சி பண்ணும்.
2 hours 23 minutes ago
10 most powerful goals în football......! 😂
2 hours 25 minutes ago
தங்கச்சியின் ஊர் மருதங்கேணி போல இருக்கு.
இங்கு இந்த ஊர் பெயரிலேயே ஒரு கள உறவு இருக்கிறார்.
கல்லோ கல்லோ @Maruthankerny உங்க ஊர் படங்கள் தான் வாங்க சார்.
பாலத்தில் விளக்குகள் எரியவில்லை என்றால் மக்கள் என்னம்மா செய்வார்கள்?
2 hours 27 minutes ago
ஏன் தமிழ் மொழியில் இறைவனை வழிபட்டு செய்ய முடியாது?
உலகயே ஆண்ட மொழிக்கு ஓர் வழிபாட்டு முறை இல்லையா?
பல கேள்விகளுக்கு பதில் பாருங்கள்....
https://www.facebook.com/story.php?story_fbid=7114182321944764&id=100000591990201&mibextid=jmPrMh&rdid=cX0EgcI4VWWyd4jq
மேலுள்ள முகப் புத்தக காணொளியை பார்த்தால் புரிதல் கூடும்.
டென்மார்க் நாட்டிலுள்ள வேல்முருகன் கோயிலில் தமிழில் வழிபாடு நடாத்துவதற்காக, இலங்கையின் திருக்கோணமலையிலிருந்து வந்து வேல்முருகன் கோயிலில் தங்கியிருந்த தம்பிரான் சாமிகள் மீது இரவில் வன்முறைத் தாக்குதல்.
தமிழில் வழிபாடு நடாத்துவதா எனக் கொதித்தெழுந்த ஆரிய அடிமைகளினதும் சாதியத் திமிர் பிடித்தவர்களுமான சிலரின் கைங்காரியமே இது. தமிழில் வழிபாடு நடாத்துவதா எனத் தமிழர் எனச் சொல்லிக் கொள்ளும் சிலருக்கே சினம் வந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர் எனில் என்ன சொல்வது!
இங்கு தமிழ் வழிபாடு மீது தாக்குதல் நடாத்தியவர்கள் மட்டுமல்ல, இதனைக் கண்டும் பேசா மடந்தைகளாக ஐரோப்பாவில் வாழும் அனைத்துத் தமிழருமே இதற்குப் பொறுப்பு. உலகு எங்கும் இந்துத்துவாவும் அதன் உடன்பிறப்பான வன்முறையும் பல்கிப் பெருகுகின்றது . இந்துத்துவா என்பது தமிழரிடையே உள்ள ஏனைய சிறுபான்மை மதங்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மொழியின் உயிருக்கே ஒரு நாள் உலை வைக்கும்.
விழித்துக் கொள் தமிழா!
🙏தமிழா தமிழில் வழிபடு, தமிழால் வழிப்படு🙏
வட்சப் குழுவில் வந்தது, இதன் உண்மைத் தன்மை அறியேன்.
2 hours 32 minutes ago
இந்த தம்பி இப்போ ரொம்பவும் பிரபலமாகிட்டார்.
இணைப்புக்கு நன்றி வாலி.
2 hours 33 minutes ago
வீதியோர சோலார் மின்விளக்குகள் பழுதாகிவிட்டன என நினைக்கிறேன்.
2 hours 36 minutes ago
புலிகள் பதுங்குது என்றால் பாச்சலுக்குத் தான்.
3 hours 39 minutes ago
3 hours 48 minutes ago
"வாயாலே வடை சுடுவார்" ....... செம.......நல்லாயிருக்கு.......! 😂
நன்றி வாலி.........!
3 hours 52 minutes ago
வணக்கம் வாத்தியார்...........!
ஆண் : { கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன் } (2)
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
ஆண் : வாலிபங்கள் ஓடும்
வயதாகக்கூடும் ஆனாலும்
அன்பு மாறாதது மாலையிடும்
சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே
அறியாதது
ஆண் : அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள்
பயில மோகங்கள் ஆரம்பமே
ஆண் : நல்ல மனையாளின்
நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும்
வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே
ஆண் : கூவுகின்ற குயிலைக்
கூட்டுக்குள் வைத்து பாடென்று
சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை
சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால்
ஆடாதம்மா
ஆண் : நாள்தோறும்
ரசிகன் பாராட்டும்
கலைஞன் காவல்கள்
எனக்கில்லையே சோகங்கள்
எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
ஆண் : துக்கம் சில
நேரம் பொங்கி
வரும்போதும் மக்கள்
மனம்போலே பாடுவேன்
கண்ணே என் சோகம்
என்னோடுதான் .......!
--- கல்யாண மாலை ---
3 hours 56 minutes ago
கடவுள் அமைத்து வைத்த மேடை.......! 😍
4 hours 3 minutes ago
4 hours 6 minutes ago
ஆயிரத்தில் ஒரு வசனம். அதுவும் நன்றாக சொன்னீர்கள். 👈🏽 👍🏼
அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படை குணங்களை மாற்றினாலே ஆயிரம் பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும்.
4 hours 21 minutes ago
அறிவு அதிகரிக்க அதிகரிக்க அமைதியையும் இழந்து கொண்டு போகின்றோம். 😢
4 hours 25 minutes ago
வாழ்த்துகள் 💐
6 hours 43 minutes ago
கிழக்குப் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்
போர் நிறைவுற்று 15 ஆண்டுகள் கழிந்தும் நீதி வழங்கப்படாத நிலையில் தமிழரின் உரிமைகள் இலங்கை அரசாலும் அதன் ஆதரவில் இருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தாலும் தொடர்ந்தும் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றன. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசுக்கு பன்னாட்டுச் சமூகம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.
-இவ்வாறு கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:-
திருகோணமலை சேனையூரில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைப் பொலிஸாரின் இந்த அத்துமீறல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடாத்தாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உரிமையை வேண்டிப் போராடிய ஓர் இனத்தின்மீது இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய இனவழிப்பால் இறுதி எட்டு மாதங்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசாலும் அரச படைகளாலும் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் உரிமையிலும் இலங்கை அரசாங்கம் கைவைத்துள்ளது.
தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசை பன்னாட்டுச் சமூகம் கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அழுத்தம் வழங்க வேண்டும் - என்றுள்ளது. (ச)
https://newuthayan.com/article/தமிழரின்_உரிமை_பறிப்பு_சர்வதேசமே_தலையிடுக!
கிளர்ந்தெழ வைக்கும் அடக்குமுறைகள்.
உயிரிழந்த தனது உரித்துடையோரை நினைவேந்துவது ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமை ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டம் கொடூரமான முறையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு பலநாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து 15 ஆண்டுகள் கடந்துபோயுள்ளன. போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளை அஞ்சலித்து நினைவேந்துவதற்கு வழியின்றியே இலங்கையில் தமிழினம் இன்னமும் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
நல்லிணக்கம் ஒற்றுமை என்று பேசும் இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்கத் தயாராக இல்லை. போரில் இறந்த தங்கள் உரித்துடையவர்களை அஞ்சலிப்பதற்கு நினைவில் கொள்வதற்கு தமிழ் மக்களின் முன்னெடுப்புகள் அரசின் ஆதரவுடனேயே அடக்கி ஒடுக்கப்படுகின்றன. தற்போதைய அரசாங்கத்திலும் தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்தவர்கள் பல்வேறு காரணங்களைக் காட்டிக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பலர் அச்சுறுத்தப்படுகின்றனர். பதவி கைக்கு வந்ததும் மக்கள் தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை உள்ளது என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது மௌனமாக இருக்கின்றார். உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் உரிமையை மறுத்து -அதைத் தடுத்து விட்டால், தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடலாம் என்ற பிற்போக் குத்தனமான - அடக்குமுறைச் சிந்தனையுட னேயே தற்போதைய ரணில் அரசாங்கமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இலங்கைத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அனைத்து மக்களும் தங்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறான நிலை பெரும்பான்மை மக்களின் எண்ணப்போக்கிலேயே வாழவேண்டும் என்ற மேலாதிக்கச் சிந்தனை தொடர்ந்தால் ஒருபோதும் இந்தத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை. பெரும்பான்மையினரின் இந்த மேலாதிக்கச் சிந்தனையே பல தசாப்த காலப் போரை ஏற்படுத்தியது. அந்தப் பட்டறிவின் பின்னரும் பெரும்பான்மையினரின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படாதது இந்தத் தீவின் சாபம் என்றே கூறவேண்டும். அடக்கு முறைகளின் மூலம் மக்களின் உணர்வுகளை மழுங் சுடித்துவிடலாம் என்று மேலாதிக்க ஆட்சியாளர்கள் கருதுவார்களேயானால் அவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சும். தொடர்ச்சியான அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும்மக்கள் கிளர்ந்தெழுந்த வரலாறே உலகம் முழுவதும் உள்ளது. சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் அம்மக்களை கிளர்ந்தெழவே வைக்கும். அந்த நிலைமை இலங்கையை மீண்டும் பின்னோக்கியே இழுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
https://newuthayan.com/article/கிளர்ந்தெழ_வைக்கும்_அடக்குமுறைகள்
Checked
Fri, 05/17/2024 - 12:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed