புதிய பதிவுகள்2

டூசைன்ட் லூவெர்ச்சர்: பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்து புரட்சி செய்த 'கருப்பு நெப்போலியன்'

1 day 1 hour ago
பட மூலாதாரம்,PUBLIC DOMAIN படக்குறிப்பு,19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வரையப்பட்ட ஒரு ஓவியத்தில் டூசைன்ட் லூவெர்ச்சர். கட்டுரை தகவல் எழுதியவர், எடிசன் வீகா பதவி, பிபிசி செய்திகள், பிரேசில் 14 ஏப்ரல் 2024 டூசைன்ட் லூவெர்ச்சர், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு நம்ப முடியாத சாதனையைச் செய்தார். ஒரு முன்னாள் அடிமையாகவும், அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மகனாகவும், அவர் ஒரு வெற்றிகரமான புரட்சிக்குக் காரணமாக இருந்தார். பிராந்தியத்தில் உள்ள அனைத்து அடிமைகளையும் விடுவிக்க அந்தப் புரட்சி வழிவகுத்தது. அமெரிக்காவில் அவ்வாறு நடந்தது அதுவே முதல் முறை. இந்தச் செயல்முறை அடிமைத்தனத்தில் இருந்து காலனியை மீட்டெடுத்து, அதற்கு சுதந்திரம் வழங்கியது. லத்தீன் அமெரிக்காவின் முதல் சுதந்திர நாடாக அந்த காலனி மாறியது. இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புரட்சிக்குக் காரணமாக இருந்தவர்தான், டூசைன்ட் லூவெர்ச்சர் (1743-1803). அவர் ‘ஹைதியன் புரட்சி’ (Haitian revolution) என்று அழைக்கப்படும் புரட்சியின் முக்கியத் தலைவராக இருந்தார். பின்னர் செயின்ட்-டொமிங்கு என்ற அந்த பிரெஞ்சு காலனியின் ஆளுநரானார். இந்த பிரெஞ்சு காலனிதான் சுதந்திரத்திற்குப் பிறகு ஹைதி என்று அழைக்கப்பட்டது. புரட்சி தொடங்கியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹைதிய விடுதலை இயக்கப் புரட்சி மிகப்பெரிய அடிமைக் கிளர்ச்சியாகக் கருதப்படுகிறது. இந்தப் புரட்சியின்போது, அடிமை ஆட்சி பிரதேசம் முழுவதும் ஒழிக்கப்பட்டது. அடிமைகளின் கிளர்ச்சி ஆகஸ்ட் 22, 1791இல் தொடங்கியது. அவர்கள் அடிமைத்தனத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். மெஸ்டிசோஸ், பிரஞ்சு, ஸ்பானிஷ், பிரிட்டிஷ் மற்றும் தீவின் பிற மக்களிடம் இருந்து சிறிது சிறிதாக ஆதரவுகளைத் திரட்டினர். புரட்சியாளர்கள் ஒரு தந்திரமாக, ஏராளமான கரும்பு வயல்களுக்கு தீ வைத்தனர். பண்டைய ரோமில் ஸ்பார்டகஸ் (கி.மு.109- கி.மு.71) நடத்திய புரட்சிக்கு (ஆனால் அது தோல்வியில் முடிந்தது) பிறகு ஹைதிய விடுதலை இயக்கப் புரட்சி மிகப்பெரிய அடிமைக் கிளர்ச்சியாகக் கருதப்படுகிறது. உடனடி விளைவாக, இது மற்ற அமெரிக்க காலனிகளின் அடிமை பிரபுத்துவங்களிலும் மற்றும் ஐரோப்பிய காலனித்துவ பெருநகரங்களிலும் ஓர் அச்சத்தைத் தூண்டியது. மோதலின் தொடக்கத்தில் இருந்தே லூவெர்ச்சர் ஒரு தலைவராகச் செயல்பட்டார். அவர் மக்களிடையே தாக்கம் செலுத்தக் கூடியவராகவும், கிளர்ச்சியாளர்களுக்கு கட்டளையிடுவதில் திறமையானவராகவும் இருந்தார். நன்கு கற்றறிந்தவர், 1789 புரட்சிக்குப் பிறகு பிரான்ஸ் எதிர்கொண்ட சிக்கலான வரலாற்றுத் தருணத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. தங்கள் இனம் சுதந்திரத்தை அடைவதற்கான சிறந்த தருணம் அதுதான் என்பதைப் புரிந்துகொண்டார். ‘கருப்பு நெப்போலியன்’ என்ற புனைப்பெயர் பிரெஞ்சு அரசியல்வாதியும் எழுத்தாளருமான ஃபிராங்கோயிஸ்-ரெனே டி சாட்யூப்ரியாண்ட் என்பவர் தனது ‘மெமோயர்ஸ் ஃப்ரம் பியோண்ட் தி கிரேவ்’ என்ற புத்தகத்தில் (1848இல் வெளியிடப்பட்டது) உருவாக்கப்பட்டது. தான் 1833இல் எழுதிய ஒரு கடிதத்தில் (அவரது புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது) சாட்யூப்ரியாண்ட், “கறுப்பு நெப்போலியன் டூசைன்ட் லூவெர்ச்சர், வெள்ளை நெப்போலியனால் கொல்லப்பட்டார் " என்று குறிப்பிட்டார். லூவெர்ச்சரை பற்றி ஒரு புத்தகத்தை எழுதிய பிரெஞ்சு வரலாற்றாசிரியர் ஜீன் லூயிஸ் டொனாடியூ, ஜீன் ஆஃப்ரிக் ஊடகத்திடம் பேசியபோது, "கருப்பு மற்றும் வெள்ளை நெப்போலியன்கள், இருவருமே லட்சியவாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள். நெப்போலியன் போனபார்ட் தன்னை 'நிரந்தர தலைவராக' அறிவித்துக் கொள்வதற்கு முன்பாகவே டூசைன்ட் லூவெர்ச்சர் தன்னை ‘நிரந்தர ஆளுநராக’ அறிவித்துக் கொண்டார்" என்று கூறினார். வெற்றிகரமான புரட்சி பட மூலாதாரம்,PUBLIC DOMAIN படக்குறிப்பு,ஹைதிய புரட்சியின் ஓர் அத்தியாயம் ஓவியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. “டூசைன்ட் லூவெர்ச்சர் ஒரு சிறிய, சில சலுகைகளை மட்டுமே பெற்ற ஒரு சாதியைச் சேர்ந்தவர்" என்று வரலாற்றாசிரியர் சிஎல்ஆர் ஜேம்ஸ் தனது ‘தி பிளாக் ஜேகோபின்ஸ்' (The Black Jacobins, 1938) புத்தகத்தில் கூறுகிறார். "அவரது தந்தை, ஒரு சிறிய ஆப்பிரிக்க குழுவின் தலைவரின் மகனாக இருந்தார். போரில் பிடிபட்டார், ஒரு அடிமையாக விற்கப்பட்டு, அடிமைக் கப்பலில் பயணம் செய்தார். ஒரு குடியேற்றவாசியால் அவர் விலைக்கு வாங்கப்பட்டார். இந்தக் கறுப்பின மனிதர் ஓர் அசாதாரண நபர் என்பதை அந்த முதலாளி உணர்ந்தார். தோட்டத்தில் அவருக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஐந்து அடிமைகளைப் பயன்படுத்தி ஒரு நிலத்தைப் பயிரிட்டார். பின்னர் அவர் ஒரு கத்தோலிக்கராக மாறினார். பின்னர் திருமணம் செய்துகொண்டார். டூசைன்ட் அவருக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் மூத்தவர்," என்று ஜேம்ஸ் கூறுகிறார். பிரான்சுவா டொமினிக் டூசைன்ட் என்ற பெயருடன் அவர் பிறந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு லூவெர்ச்சர் என்ற குடும்பப்பெயர் சேர்க்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாசாரத்தின் தேசிய அருங்காட்சியகத்தின் தகவல்படி, அவர் 1776இல் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அடிமை உழைப்பு மூலம் தனது காபி தோட்டத்தில் ஓரளவு செல்வத்தைப் பெற்றார். கடந்த 1791ஆம் ஆண்டில், செயிண்ட்-டோமிங்குவின் அடிமை மக்களிடையே ஒரு புரட்சி உருவானது. தொடக்கத்தில் லூவெர்ச்சர் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு எதிராகத்தான் இருந்தார். ஆனால் பின்னர் அவர் தனது மனதை மாற்றிக்கொண்டு பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தினார். "ஹைதியன் புரட்சி வெற்றியடைந்தது என்பதை இங்கு முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம். அவர் மிகவும் வெற்றிகரமான தலைவராக இருந்தார், அவர் அமெரிக்காவின் முதல் அடிமைத்தன ஒழிப்பு புரட்சியை முன்னெடுத்தார் மற்றும் ஹைதியின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்தார். எடுத்துக்காட்டாக, பிரேசிலிலோ அல்லது தெற்கு அமெரிக்காவிலோ இதுபோன்ற ஏதாவது நடக்கலாம் என்று அஞ்சும் அமெரிக்காவின் அடிமைகளை வைத்திருக்கும் அனைத்து உயரடுக்குகளுக்கும் ஹைதி ஓர் உண்மையான எச்சரிக்கையாக மாறியது," என்று சாவோ பாவுலோ நகரின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான அலெக்ஸாண்ட்ரே மார்குசி விளக்கினார். அவரைப் பொறுத்தவரை, இந்த அச்சத்தின் காரணமாக "ஹைதி தொடர்ச்சியான சர்வதேச புறக்கணிப்புகளைச் சந்தித்தது. இது போருக்குப் பிந்தைய பொருளாதார மீட்சியைத் தடுத்தது. நாட்டின் பொருளாதார சிக்கல்களை விளக்குவதற்கு இது ஓரளவு உதவுகிறது," என்று வரலாற்றாசிரியர் கூறினார். மிகப்பெரிய மேற்கத்திய படைகளுக்கு எதிராக பட மூலாதாரம்,PUBLIC DOMAIN படக்குறிப்பு,'கருப்பு நெப்போலியன்' டூசைன்ட் லூவெர்ச்சர். "புரட்சிகர செயல்முறை வெற்றி பெற்றது. 1794ஆம் ஆண்டில், பிரெஞ்சு புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில், பிரான்ஸ் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அடிமைத்தனத்தை ஒழித்தது. ஆனால் இது நடந்தபோது, ஹைதியில் உள்ள கறுப்பின ஆப்பிரிக்க தொழிலாளர்கள் ஏற்கெனவே சுதந்திரமாக இருந்தனர். மேலும் அவர்கள் லூவர்ச்சரின் தலைமையின் கீழ் துல்லியமாக விடுவிக்கப்பட்டனர்,” என்று பிரேசிலில் உள்ள மெக்கென்சி பிரஸ்பைடிரியன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான வரலாற்றாசிரியரும் சமூகவியலாளருமான வெஸ்லி சந்தனா கூறினார். “1793 மற்றும் 1794க்கு இடையில் அனைவரும் சுதந்திரமாக இருந்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அடிமைத்தனம் முடிந்துவிட்டது என்று பிரெஞ்சு பெருநகரம் அறிவிக்கத் தேவை இருக்கவில்லை. அதற்கு முன்பே அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர லூவர்ச்சர்ரால் முடிந்தது,” என்று அவர் கூறினார். அதாவது லூவெர்ச்சரின் மரணத்திற்குப் பிறகு, ஹைதியின் சுதந்திரம் 1804இல் மட்டுமே அடையப்பட்டது. முழு செயல்முறையும் அவர் தலைமையில் ஒரு புரட்சிகர தருணம் என்று சந்தனா நினைவு கூர்ந்தார். பிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொள்ள விரும்பும் உள்ளூர் பணக்கார வெள்ளையர்களின் உதவியையும் அவர் நாடினார். வரலாற்றாசிரியர் லூயிஸ் ஜெரால்டோ சில்வா, ஃபெடரல் யுனிவர்சிட்டி ஆஃப் பரானாவின் பேராசிரியர், "வரலாற்றில் பின்னோக்கிப் பார்ப்பது மூலம், அந்த நிகழ்வுகளால் அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு என்ன பாதிப்பு என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவாது," என்று சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "புரட்சி வெற்றி பெற்றது. லூவெர்ச்சர் அந்தக் காலத்தின் மிகப்பெரிய மேற்கத்திய படைகளான பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களை எதிர்கொண்டார். முடிந்தவரை ஹிஸ்பானியோலாவின் பண்டைய தீவின் மேற்குப் பகுதியில் பெருநகரத்தின் அதிகாரத்தை மீட்டெடுக்க பிரான்ஸ் முயன்றது. அடிமை வர்த்தகம் மற்றும் அடிமைத்தனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான ஒரு தோல்வியுற்ற முயற்சியும் அதில் இருந்தது" என்று கூறுகிறார். மேலும், "மலேரியா, காலரா, கரீபியனின் மோசமான வெப்பம் ஆகியவற்றின் காரணமாக, சக்திவாய்ந்த பிரெஞ்சு ராணுவம் கறுப்பர் இன மக்களிடம் போரில் தோற்றது" என்று அவர் விவரித்தார். இன்றைய ஹைதி பட மூலாதாரம்,GETTY IMAGES "இன்று ஹைதி ஏழ்மையான மற்றும் வளர்ச்சியடையாத நாடு என்பதற்குக் காரணம் அங்கிருக்கும் மோசமான அரசாங்கம், திடீர் அதிகார மாற்றங்களுடன் போராளிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்தான். மேற்கத்திய தப்பெண்ணங்கள் மற்றும் இனவெறி காரணமல்ல,” என்று வரலாற்றாசிரியர் சில்வா விளக்குகிறார். "ஹைதியின் தற்போதைய சூழ்நிலையும் முதலாளித்துவ வளர்ச்சியின் மோசமான சமத்துவமின்மையுடன் தொடர்புடையது," என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், "ஹைதியின் இன்றைய பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் சரிவு அப்போதைய ஹைதியின் வலிமையையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கவில்லை. இதே ஹைதிதான் ஜனவரி 1804இல், அமெரிக்காவிற்குப் பிறகு புதிய உலகின் இரண்டாவது அரசமைப்பு குடியரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது என்பது மிகவும் முக்கியமானது,” என்று சில்வா கூறுகிறார். அப்போது அனைத்து குடிமக்களும் கறுப்பர்களாக இருக்கும் உலகின் முதல் மற்றும் ஒரே குடியரசாக இருந்தது ஹைதி. "கருப்பின இயக்கத்தின் பார்வையில், புரட்சி மற்றும் லூவெர்ச்சர் இரண்டும் மிக முக்கியமான வரலாற்று குறியீடுகள். எனவே அது பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலேயர்களின் அனைத்து வகையான படையெடுப்புகளையும் அல்லது அதிகாரத்தைப் பராமரிக்கும் அளவையும் அகற்றும் அளவிற்கு வெற்றி பெற்றது,” என்று கூறுகிறார் சமூகவியலாளர் பாலோ நிக்கோலி ராமிரெஸ். "எதிர்ப்பின் அடிப்படையில், இதுவொரு வெற்றிதான். இருப்பினும், முன்னாள் கறுப்பின அடிமைகளின் புரட்சியாக இருந்ததால், தப்பெண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தியது. இன்றும் ஹைதியில் அது நிலவுகிறது என்பது தெளிவாகிறது. இதனால் ஹைதி புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டது. இது எண்ணற்ற சமூக பிரச்னைகளை ஏற்படுத்துகிறது," என்று அவர் குறிப்பிட்டார். புரட்சி ஏற்பட்டபோது, "ஹைதி மற்ற நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாக மாறியது," என்று சமூகவியலாளர் பாலோ கூறுகிறார். "இந்த விதி முழு கண்டத்திற்கும் பொருந்தும். இது அடிமட்டத்தில் இருந்து வந்த ஒரு புரட்சி. இன்றுவரை ஒரு குறிப்பிட்ட வழியில், ஹைதியில் முதலீடு செய்வதில் பல நாடுகள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் அந்த நாட்டில் அதிகாரம் செலுத்துபவர்கள் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஒருவகையில், அவர்கள் லூவர்ச்சரின் வாரிசுகள்,” என்று அவர் கூறுகிறார். கருப்பு நெப்போலியனின் மறைவு பட மூலாதாரம்,PUBLIC DOMAIN படக்குறிப்பு,லூவெர்ச்சர் சிறையில் இறந்ததை சித்தரிக்கும் ஓவியம். “லூவெர்ச்சர் ஹைதியில் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதிலும், ஆப்பிரிக்காவிலும் சுதந்திரம் மற்றும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சின்னமாக மாறினார் என்று மார்குசி கூறுகிறார். "ஆப்பிரிக்காவில் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அவரது உருவம் மற்ற இடங்களில் விடுதலை இயக்கங்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய ஒரு கறுப்பினத் தலைவரின் உதாரணமாக நினைவுகூரப்பட்டது," என்று வரலாற்றாசிரியர் கூறினார். "இவை அனைத்தும் அவரது உருவத்தைச் சுற்றி ஒரு கட்டுக்கதையை உருவாக்குவதன் ஒரு பகுதி. ஆனால் அதை முழுமையாக நம்பாமல் இருப்பதும் முக்கியம். அடிமைத்தனம் இல்லாத ஹைதியை அவர் கற்பனை செய்தார். ஆனால் அவரது அரசியல் திட்டம் நாட்டின் நில உடைமையாளர்களின் நலன்களுடன் இணக்கமாக இருந்தது. இது உண்மையில் புரட்சிகர செயல்பாட்டின்போது இந்த உயரடுக்கினருடன் கூட்டணியைத் தக்கவைக்க அவரை அனுமதித்த ஒரு காரணியாகும்," என்று மார்குசி விளக்கினார். ஓர் உதாரணம் என்னவென்றால், வரலாற்றாசிரியர் நினைவு கூர்ந்தபடி, ஹைதியில் அவர் உருவாக்க உதவிய ஒரு விவசாய சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. "நிலம் தொடர்ந்து பெரிய நில உரிமையாளர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும், மேலும் பெரும்பான்மையான மக்கள் கூலித் தொழிலாளர்களாக இருப்பார்கள்," என்று அவர் விவரித்தார். "ஹைதியின் செல்வமும் பொருளாதார வளர்ச்சியும் பெரிய விவசாய ஏற்றுமதி இருப்புகளைப் பராமரிப்பதைச் சார்ந்துள்ளது என்று அவர் நம்பினார், இது சுதந்திர ஹைதியில் பல சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடர உதவியது," என்று அவர் கூறினார். கடந்த 1802ஆம் ஆண்டில், அப்போதைய பிரெஞ்சு தூதர் நெப்போலியன் போனபார்டே (1769-1821) தனது மைத்துனரான ஜெனரல் சார்லஸ் லெக்லெர்க்கை (1772-1802) ஹிஸ்பானியோலா தீவுக்கு அனுப்பினார். காலனியின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்து அடிமைத்தனத்தை மீண்டும் நிலைநாட்டுவதே அவரது இலக்காக இருந்தது. பின்னர் செயின்ட்-டோமிங்குவின் ஆளுநராக இருந்த லூவெர்ச்சரை பதவி நீக்கம் செய்ய ஜெனரல் திட்டமிட்டார். அவர் அதைவிட அதிகமாகச் சாதித்தார். தலைவர் லூவெர்ச்சரையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்து பிரான்சுக்கு அனுப்பினார். ஏப்ரல் 7, 1803இல் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட லூவெர்ச்சர் சிறையில் இறந்தார். ஹைதியின் பிற தலைவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹைதியில் உள்ள லூவெர்ச்சரின் சிலை. கரீபியன் தீவுகளில், அவரது ஆதரவாளர்கள் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போர் தொடுத்தனர். பல தோல்விகள் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பிறகு, அதே ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய துருப்புகள் வெளியேறின. ஜனவரி 1, 1804இல் ஹைதி ஒரு சுதந்திர நாடானது, இருப்பினும் பிரான்சின் அங்கீகாரம் 21 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வந்தது. வரலாற்றாசிரியர் சந்தனா, “வரலாற்றில் ஹைதி என்பது அமெரிக்காவில் நடந்த அரசியல் புரட்சியின் ஒரு ஆகச் சிறந்த குறிப்பு," என்று கூறுகிறார். "லூவெர்ச்சர் ஒரு மிக முக்கியமான அரசியல் தலைவராக இருந்தார், பல இயக்கங்களை ஊக்குவிப்பதற்கும், செல்வாக்கு செலுத்துவதற்கும் பொறுப்பானவர். அவரது தலைமை, போராடுவதற்கான அவரது திறன் மற்றும் அவரது துணிச்சலுக்காக அவர் நினைவுகூரப்படுகிறார்," என்று அவர் கூறினார். "அவரது உருவம் இன்றும் ஹைதியில் எதிர்ப்பின் அடையாளமாக, ஒரு தேசிய அடையாளமாக எதிரொலிக்கிறது" என்று ராமிரெஸ் கூறுகிறார். இருப்பினும், லூவெர்ச்சர் ஒரு தனிப் போராளி அல்ல என்பதையும், புரட்சியில் பல ஹீரோக்கள் இருந்தனர் என்பதையும் நிபுணர்கள் கூறுகிறார்கள். "அவர் மட்டுமல்ல, ஓகேய், ரேமண்ட், கிறிஸ்டோபே, டெஸ்ஸாலின்ஸ் போன்ற தலைவர்களும்கூட சமகால ஹைதியில் மதிக்கப்படுகிறார்கள். இந்த நபர்களுக்கு சிலைகள், ஓவியங்கள் மற்றும் பல்வேறு நினைவுச் சின்னங்கள் உள்ளன. ஹைதிய புரட்சியின் வலிமையையும் அர்த்தத்தையும் மேற்குலகம் புரிந்து கொள்ளவில்லை, பார்க்கவும் இல்லை. ஆனால் இந்த நினைவுச் சின்னங்கள் ஹைதியர்களுக்கு பெருமை சேர்க்கிறது,” என்று சில்வா கூறுகிறார். “லூவெர்ச்சரை அமெரிக்காவின் மிகப் பெரிய கறுப்பினப் புரட்சியாளராகக் குறிப்பிடுவது தனிமனிதனையும் அவர் வாழ்ந்த சமூகத்தையும் புரிந்துகொள்ள உதவுவதைவிட அதிகமான பிரச்னைகளை, கட்டுக்கதைகளை உருவாக்குகிறது," என்று வரலாற்றாசிரியர் சில்வா கருத்து தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை புரட்சியாளர் லூவெர்ச்சர், மற்ற மனிதர்களைப் போலவே, சாதாரணமான ஒரு நபர். நமக்கு இருக்கும் கவலைகள், மகிழ்ச்சிகள், உணர்ச்சிகள் என அனைத்தும் அவருக்கும் இருந்தன. ஹைதிய புரட்சியின் வெற்றியில் லூவெர்ச்சரின் செல்வாக்கையும் மார்குசி ஒப்பிட்டுப் பார்க்கிறார், “ஒரு ராணுவ மற்றும் ராஜதந்திரத் தலைவராக அவரது தனிப்பட்ட பங்கை மீறிய தொடர்ச்சியான காரணிகளால் இது வெற்றிகரமாக இருந்தது. வெற்றிக்குக் காரணமாக முக்கியமான பல முன்னாள் அடிமைப் போராளித் தலைவர்களும் இருந்தனர், ஆனால் வரலாற்றில் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்" என்று வரலாற்றாசிரியர் நினைவு கூர்ந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2jd8zye9jvo

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2024

1 day 2 hours ago
இன்னும் நான்கு நாட்கள்தான் உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு முன்னர் குறைந்தது பத்துப் பேராவது கலந்துகொண்டால்தான் போட்டி யாழ்களத்தில் நடக்கும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.😀 @suvy, @ஏராளன், @Eppothum Thamizhan, @MEERA, @தமிழ் சிறி, @kalyani, @சுவைப்பிரியன், @வாதவூரான், @வாத்தியார், @nunavilan, @பிரபா, @Ahasthiyan, @புலவர், @நீர்வேலியான், @நந்தன், @முதல்வன், @nilmini, @ஈழப்பிரியன், @நிலாமதி, @குமாரசாமி, @goshan_che, @கறுப்பி, @Kandiah57

கடவுள் இருக்கிறாரா.............?

1 day 2 hours ago
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி வெங்காயங்களுக்கே வரமுடியும். யார் அல்லது எது கடவுள் என்ற வரைவிலக்கணத்தைச் சரியாகக் கூறாமல் அவர், அவள் அல்லது அது இருக்கிறதா? என்று எப்படிக் கூறமுடியும்? பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரன் என்கிறது திருவாசகம். ஆக, கடவுள் இருக்கிறாரா? அல்லது கடவுளில் நாமிருக்கிறோமா என்ற கேள்வியே மிகச் சரியானது. நாமிருப்பதால் நம்மில் கடவுள் இருக்கிறார் என்பதே சரியான விடையாகும்.

சிறுகதை 'மகிழ்' - சோம.அழகு

1 day 2 hours ago
மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய, 'மகிழ்' என்று தலைப்பிட்ட சிறுகதையை இங்கே மீள்பதிவு செய்கிறேன். அரசியல் சமூகம் மகிழ் ! -------சோம. அழகு உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு மிடறுக்கும் சற்றும் சளைத்ததல்ல இது!) வந்து மெத்திருக்கையில் கால் நீட்டி அமர்ந்தாள் உவனது உவள். தரையில் விரவியும் சிதறியும் கிடந்த சாமான்களுக்கு நடுவில் உவர்களது இரண்டரை வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்துக் கொண்டே தனது கோப்பையைக் காலி செய்தாள். முந்தைய நாள் உவனுக்கும் தனக்கும் இடையில் துவங்கிய வேகத்தில் மின்னலென முடிந்த உரையாடல் நினைவிற்கு வந்தது. அதன் விதை விழுந்தது மூன்று மாதங்களுக்கு முன். மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென விளையாட்டாக உவன் கேட்டான், “நாம இன்னொரு கொழந்த பெத்துக்கலாமா?” “என் உடம்பு ஒத்துழைக்கணுமே” என்றவள் சட்டென கேட்டாள் “நாம ஏன் ஒரு குழந்தைய தத்தெடுக்கக் கூடாது?” உவள் விளையாட்டாக அல்லாமல் நிஜமாகத்தான் கேட்கிறாள் என்பதை உணராமல் “ஹாஹா… எனக்கு என் பிள்ளைதான் வேணும்” என்று சிரித்தவாறே சொல்லிச் சென்றான். உவளையும் அறியாமல் ரொம்ப மெனக்கெடாமல் அவ்வளவு பெரிய விஷயம் மிகச் சாதாரணமாக வெளிப்பட்டது முதலே அவ்வெண்ணம் உவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் பிறகு அது குறித்து உவன் கூற சாத்தியமுள்ள எல்லா வகையான காரணங்களையும் மனதினுள் போட்டு அலசி ஆராய்ந்து அதற்கெதிரான சரியான வாதத்தை முன்வைத்து உவனை சம்மதிக்க வைக்கும் வழிமுறைகளை ஆராயத் துவங்கினாள். “என்னதான் இருந்தாலும் சொந்தப் பிள்ளை மாதிரி வராது” – “இதெல்லாம் மனசு சம்பந்தப்பட்டது. ஒரு குழந்தையின் மீது ஊற்றெடுக்கும் அன்புக்கு வரைவிலக்கணம் ஏது? பெற்றோர்களாவதற்குக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அதனால் தத்தெடுக்கலாம். குழந்தை பெற்றுக் கொள்வதாலேயே பெற்றோர்கள் என்பதும் இல்லை. ஆம் எனில் அநாதை இல்லங்களே இருக்காதே.” “ஏன் தத்தெடுக்கணும்னு எண்ணம் வந்துச்சு உனக்கு?” – “இன்னொரு குழந்தை வேணும்னு முடிவு பண்ணிட்டோம். அதை அர்த்தமுள்ளதா ஆக்கலாம்னு… யாருமே இல்லாம போன சக உயிருக்கு ஒரு அழகான குடும்பத்தைக் குடுக்கலாமே… இது சமூகத்துல பெரிய மாற்றத்தை ஒண்ணும் கொண்டு வரப் போறதில்லதான். Just one less orphan in the world is all we can do” இப்படியாகப் பல பல தருக்கங்களை மனதளவில் தயார் செய்து வைத்திருந்தவள் முந்தைய நாள் மெதுவாக உவனிடம், “ப்பா… ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கலாம்னு எனக்கு தோணீட்டே இருக்கு” என்றதற்கு “எனக்குத் தோணல” என்று ‘எனக்கு’ல் அழுத்தம் வைத்துத் திருத்தமாக உடனே வந்து விழுந்தது மறுமொழி. “அதான் ஏன்?” என்று கேட்கும் முன்னரே வலுக்கட்டாயமாக ஒரு அலைபேசி அழைப்பில் தன்னை இணைத்துக் கொண்டான் உவன். அனைத்துத் தயாரிப்புகளும் தவிடுபொடியாயின. கற்பனையில் நிகழ்ந்த ஒத்திகை உரையாடல்கள் யாவும் ஒரு வாய்ப்பு கூட பெறாததால் பாவம்போல் உவளையே பார்த்துக் கொண்டிருந்தன. அதைப் பற்றித்தான் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறாள். பேச்சுவார்த்தைக்கு வந்தால்தானே ஒப்புக்கொள்ள வைக்க முடியும். முதல் அடியே சறுக்குகிறதே! இன்று எப்படியும் விடுவதாயில்லை. பிடித்து வைத்தாவது கேட்டு விடுவது என உறுதி பூண்டவாறே மீண்டும் எல்லாவற்றையும் தன் மனதில் ஓட்டியபடி ஆயத்தமானாள். உவன் உவளைப் போல அப்படி ஒன்றும் பிடிவாதக்காரன் இல்லை. அதனால் எப்படியும் உவனை சம்மதிக்க வைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் கனவு காணத் துவங்கினாள். இப்போது உவள் கண்களுக்குத் தன் மகளுடன் இன்னொரு குழந்தையும் சேர்ந்து அங்கே விளையாடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது கண்டு பூரித்துப் போனாள். இரண்டு செல்வங்களையும் அள்ளிக் கொஞ்சிக் கொண்டாள். காலியாக இருக்கும் ஒரு கை சீக்கிரமே நிரம்பப் போகும் உவகை உவளை ஆட்கொண்டது. அப்போதிருந்த மகிழ்ச்சியான மனநிலையில் அக்குழந்தைக்குப் பெயர் கூட வைத்துவிட்டாள் – ‘மகிழ்’. எவ்விதத் தயக்கமும் இன்றி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள, தனது நியாயங்களை முழுதாகப் புரிந்து கொள்ள, ஒரே விஷயத்திற்கு ஆயிரம் முறை உடைந்து போய் புலம்பித் தீர்த்தாலும் கொஞ்சமும் சலிக்காமல் ஒவ்வொரு முறையும் முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதலளிக்க தானும் தங்கையும் எப்படி ஒருவருக்கொருவர் இருக்கிறோமோ அதே போல் தன் மகளுக்கும் ஒரு சகோதரனோ சகோதரியோ வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? வரத்தான் போகிறார்கள். அப்பாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அன்னாரது முற்போக்கான கொள்கைகளையும் சிந்தனையோட்டத்தையும் வைத்து எளிதில் சொல்லலாம் – தத்தெடுக்கும் முடிவை மனமுவந்து வரவேற்பார்கள். அவர்களின் ஆளுமை அப்படி. அம்மா எதையுமே பெரிதாக எதிர்க்க மாட்டாள். ‘இது சரியா வருமா?’ என அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே குழந்தையைக் கொண்டு போய்க் காண்பித்தால் போதும். எல்லாவற்றையும் மறந்து அப்படியே உச்சி முகர்ந்து கொஞ்சித் தீர்த்து அன்பைப் பொழிவாள். தங்கையிடம் ஏற்கெனவே இதைப் பற்றிச் சொன்ன போது, “செம டா… Can’t wait to meet my next niece/nephew” என்று குதூகலித்தாள். இவ்வாறாக நிஜமாகவே ஒரு குழந்தையைத் தத்தெடுத்துவிட்ட உணர்வில் மிதந்தாள் உவள். மாலை வீடு திரும்பிய உவனுக்கு நல்ல இஞ்சித் தேநீர் இட்டுத் தந்தாள். வாழ்க்கையில் ஏதாவது ஒரு கெட்ட பழக்கமேனும் வேண்டுமல்லவா? அதன் பொருட்டு டீ, காபி பழக்கத்தைக் கைவசம் வைத்திருந்தான். ஓய்வான அமைதியான மனநிலையில் உவன் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டு மெல்ல அருகில் சென்று சம்மணமிட்டு அமர்ந்தாள். “ப்பா…” “ம்ம்..?” – அலைபேசியில் இருந்து கண்களை அகற்றாமலேயே உவளிடம் கேட்டான். நெளிய வைக்கும் அமைதியைச் சுற்றிலும் படர விட்டு உவனது கைகள் காலியாகி கண்களில் தன் பிம்பம் நிறையும் வரை காத்திருந்தாள். உவளது இந்த மௌனம் இடும் ஆணை உவனுக்கு ரொம்பவே பரிச்சயம் ஆதலால் அலைபேசியைக் கீழே வைத்து விட்டு உவளைப் பார்த்து கேட்டான்… “சொல்லுடா மா…” “கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறத முழுசா கேளுங்களேன்… உங்க காரணத்தையும் தெரிஞ்சுக்க விரும்புறேன். உங்களுக்கு ஏன் தத்தெடுக்க வேண்டாம்ணு தோணுது?” தொடர்ந்து தான் யோசித்து வைத்தவற்றையெல்லாம் கூறினாள். சிறிது நேரம் ஆழமாக உவளை உற்று நோக்கி பின்பு கூறினான். “என்னோட எண்ணம் சரின்னு சொல்லமாட்டேன். ஆனா எதார்த்தத்துக்குப் பக்கத்துல நின்னு சொல்றேன். புதுசா வர்ற குழந்தையையும் நம்ம பாப்பாவையும் ஒரே மாதிரி நினைக்க முடியுமான்னு தெரியல…” “ஒருவேளை நமக்கு பாப்பா பொறக்காம போயிருந்தா…?” “கண்டிப்பா தத்தெடுத்துருப்போம். அப்போ ஒப்பீடுங்குற பேச்சுக்கே இடம் இல்லையே! அப்போ நம்ம உலகமே அந்த குழந்தைதான்னு ஆகும்போது மொத்த அன்பையும் அதுகிட்ட தான் காமிப்போம்.” “அது இப்போ அப்பிடிதான் பா இருக்கும். கொழந்தைன்னு வந்து நம்மளோடதுன்னு ஆன பிறகு எல்லாமே மாறிடும்” “ஒருவேளை மாறலன்னா…. எப்பவும் ஒரு சின்ன வித்தியாசம் ஆழ் மனசுல நம்மளையும் அறியாம இருந்துட்டே இருக்குமோன்னு பயமா இருக்கு. ஏதோ ஒரு சூழல்ல அது லேசா எட்டிப் பார்த்தா கூட என்னை என்னாலயே மன்னிக்க முடியாது. பாவம் அந்தப் பிஞ்சு என்ன பாடு படும்? நம்மள விடு… சுத்தி இருக்கவங்க எப்படி அணுகுவாங்கன்னு நெனச்சு பாத்தியா?” “அப்பா அம்மால்லாம் சந்தோஷமா….” – உவள் முடிக்கும் முன்னரே குறுக்கிட்டான். “அத்தை மாமா எவ்ளோ பரந்துபட்ட பார்வை உள்ளவங்கன்னு எனக்குத் தெரியும். என்ன பிரச்சனைனா நம்மள சுத்தி இருக்குறது அவங்க மட்டும் இல்ல” “ஊருக்காக வாழ முடியுமா?” “கொழந்தைய வீட்டுக்குள்ளயேவா வச்சு வளர்க்க முடியும்? வெளிய எங்கயாவது… உதாரணமா ஒரு விசேஷ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகும் போது எல்லாரும் பாப்பாவைப் பாக்குற மாதிரியே அந்தக் குழந்தையையும் பார்ப்பாங்கன்னு சொல்ல முடியாது. பாப்பாவை மட்டும் தூக்கிக் கொஞ்சி அந்தக் குழந்தைய ரெண்டாந்தரமா நடத்துனா அந்தக் குழந்தை பரிதவிச்சுப் போய்டாதா? பாவம்… அதுக்கு என்ன நடக்குதுன்னு கூடப் புரியாது. ஊருக்குப் பாடமா எடுக்க முடியும்? இதுல வேற சில சில்லரைங்க நேரிடையாவோ நாசூக்காவோ அந்தக் குழந்தைக்கு அரைகுறையா விவரம் தெரிய ஆரம்பிக்குற வயசுல ‘தத்துப்பிள்ளை’ அது இதுன்னு உளறி வச்சா…? அப்படிப்பட்ட ஜென்மங்களும் நம்மளச் சுத்தி இருக்குல்ல?” “அதுக்கு அப்புறம் நாம உரிமையா நல்லதுக்குக் கண்டிச்சாலும் குழந்தைக்கும் நம்மளுக்கும் வித்தியாசமாதான் தெரியும், இல்ல?” “அதுக்குதான் சொல்றேன். நீயே யோசிச்சுப் பாரு மா…” என்றபடி உவள் கரங்களைப் பற்றினான். குழந்தை ஏதோ கேட்டு அழ ஆரம்பிக்கவும் “நீ உட்காரு… நான் பாத்துக்குறேன்” என்றபடி எழுந்து சென்றான். தன்னுள் எழ வாய்ப்பிருக்கும் பாரபட்சம் குறித்துப் பொய் சொல்கிறான், மனதறிந்து அல்ல. அக்குழந்தையையும் தன்னுயிராகவே சீராட்டுவான். பிறரைச் சார்ந்து உவனுள் எழும் மனத்தடையைப் பற்றி உவள் யோசிக்கவே இல்லை. இது இன்னொரு மனமும் அதன் உணர்வுகளும் சம்பந்தப்பட்டது. விட்டால் எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு ஆதரவற்ற அவ்வாழ்க்கைக்குப் பழகி அதன் போக்கில் வளர இருக்கும் ஒரு குழந்தையைக் கூட்டி வந்து புண்படும் சூழலுக்கு ஆளாக்கிவிடக் கூடாது. இந்தக் கரிசனமும் அக்கறையும் புரிந்தாலும் சமாதானமளிப்பதாக இல்லை உவளுக்கு. முன்பின் பார்த்திராத அந்தக் குழந்தைக்காகவும் உலகையே எதிர்க்கத் துணிவும் முனிவும் கொண்டாள். ஆனால் உவனது நியாயங்களில் தானாக விளங்கி நின்ற நிலைப்பாட்டில் உவளது பகற்கனவில் உவளை நோக்கி ஓடி வந்த அக்குழந்தை இப்போது அப்படியே பின்னோக்கிச் சென்றது. ஒளியாகத் தெரிந்த அதன் முகத்தை உவள் சரியாகக் கூடப் பார்த்திருக்கவில்லை. ஏனோ அழுகை வருவது போல் நெஞ்சம் இறுகித் தொண்டை கட்ட ஆரம்பித்தது. “மகிழ்…” என ஆசையாக ஒரு முறை விளித்தாள். “அம்மா” என்று கேட்டது உவளுக்கு மட்டும், உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து. இரண்டாம் முறையாகச் சிலிர்த்தாள். நன்றி 'திண்ணை' இணைய தளம்.

யாழில் மீண்டும் கொரோனா! ஒருவர் உயிரிழப்பு

1 day 2 hours ago
http://athavannews.com/wp-content/uploads/2024/01/1572229620-dead-body-2-650x375.jpg யாழில் மீண்டும் கொரோனா! ஒருவர் உயிரிழப்பு. யாழ் மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர் கொரோனாத் தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையைப் பெறுவதற்காக வருகை வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378123

பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா

1 day 8 hours ago
விசுகர் தொடருங்கோ...அதுக்காக அன்ய்ஹநாட்டில் பாலும் தேனூம் ஓடுது என்று எழுதாதையுங்கோ....பிறகு யாழில்.. 13 பக்கம் ஓடலாம்... சும்மா சிரிப்பதற்காக மட்டுமே...கோசான்ஜி கோபிக்க வேண்டாம்..

இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்

1 day 9 hours ago
சும்மா இஸ்ரேலை புகழ்ந்து தள்ளாமல்...... பலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பது யார் என்ற கேள்விகளுக்கு விடையளியுங்கள்.

இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்

1 day 9 hours ago
முஸ்லிம் மத வெறி காரணமாக ஈரான் வெற்றி அடைய வேண்டும் மற்றவர்கள் அழிக்கபட வேண்டும் என்ற அவர்கள் இலக்கில் அவர்கள் களிப்படைவதற்காக உலகின் மிக பெரிய தாக்குதலை நிகழ்த்திய ஈரான்+ இஸ்ரேல் முக்கிய விமான நிலையங்கள் தகர்ப்பு + ஈரான் பக்கம் முழுமையாக நின்றது ரஷ்யா + இப்படியாக உண்மைகள் அற்ற செய்திகள் கொண்ட காணொளி தயாரிப்பு அவ்வளவே விஷயம்.

இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்

1 day 9 hours ago
ஒரு பில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனிதர்கள் எனும் வகைக்குள் அடங்கவில்லையா? மேற்குலகில் வெள்ளைகள் அதிகம் இருப்பதால் அவர்களுக்கு சார்பாக மேற்று ஊடகங்கள் எழுதுகின்றன என்ற கூற்றுக்கு என்ன பதில் உங்களிடம் உண்டு??
Checked
Tue, 04/16/2024 - 05:14
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed