Aggregator

நா. ஆணையாளர் செம்மணியில் அஞ்சலி செலுத்தியது தவறு; விமல் வீரவன்ச கடும் கோபம்

6 days 3 hours ago

நா. ஆணையாளர் செம்மணியில் அஞ்சலி செலுத்தியது தவறு; விமல் வீரவன்ச கடும் கோபம்

IMG-20250625-WA0188-780x450.jpg

விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை கொண்ட குழுக்களின் தேவையின்படி அறிக்கையை தயாரித்து அதன்மூலம் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுக்கும் நோக்கத்திலேயே ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தந்தார் என்று தேசிய சுதந்திர முன்னணி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே வீரவன்ச இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இவ்வாறான மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் இலங்கை வருகின்றார் என்றால் அது இலங்கை தொடர்பில் தீர்மானமிக்க தீர்மானங்களை எடுக்க முன்னரானதாகவே இருக்கும். எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் நியாயத்தை காட்டுவதற்காகவே வருகை தருக்கின்றனர். நாங்கள் இலங்கை சென்றோம், அங்குள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடினோம் அதன்படி அறிக்கையை வெளியிடுகின்றோம் என்று கூறும் வகையிலேயே வருகின்றனர்.

இவ்வாறுதான் 2013ஆம் ஆண்டில் நவநீதம்பிள்ளை வருகை தந்தார். அவர் பிரிவினைவாத நிலைப்பாடுகளை கொண்டவர்களை மட்டுமே சந்தித்தார். பின்னர் செயிட் அல் ஹுசேன் இலங்கை வந்தார். அவரும் சகல தரப்பினருடனும் பேசவில்லை. இனவாத பிரிவினைவாத குழுவினரை சந்தித்து இறுதியில் அவர்களுக்கு தேவையானவாறே அறிக்கையை தயாரித்தார். அதேபோன்ற சம்பிரதாயத்தை பின்பற்றியே வோல்கர் டேர்க் வந்துள்ளார்.

அவர் யாழ்ப்பாணத்திற்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்படியென்றால் இவர் எப்படி நடுநிலையானவராக இருந்திருக்க முடியும். வடக்கில் இறந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் உடல்கள் இல்லையா? அவர்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் இல்லையா? அவர் செம்மணியில் உள்ள புதைகுழியென்று கூறப்படும் இடத்திற்கு சென்றிருந்தார். அங்கே விடுதலைப் புலிகளின் கொடிகளுடனேயே அங்கிருந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவ்விடத்திற்கு சென்று ஆணையாளர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், மத நிகழ்விலும் கலந்துகொண்டார்.

மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்திருந்த போது அவரை சந்திப்பதற்காக பல்வேறு தரப்பினரும் அனுமதி கோரினர். முன்னாள் இராணுவ பிரதானியொருவரும் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தார். வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அந்த இராணுவ பிரதானி அவரை சந்திக்க கோரியிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோன்று சில சட்டத்தரணிகள் குழுவும் கோரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் தேசிய அமைப்புகள் சிலவும் அவரை சந்திக்க கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

எனினும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தின் நிலைப்பாட்டுடன் இப்போதும் செயற்படும் தரப்பினருடன் மட்டுமே சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்படி ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் தேவையின்படி தயாரிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தை நெருக்குவதற்காகவே இலங்கை வருகை தந்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

அதேபோன்று ஜே.வி.பி செயலாளர் ரில்வின் சில்வாவையும் ஆணையாளர் சந்தித்துள்ளார். இதன்படி விடுதலைப் புலி ஆதரவு குழுக்களுக்கு மேலதிகமாக ஜே.வி.பி செயலாளரை சந்தித்துள்ளார். அங்கே என்ன பேசியுள்ளார் என்று தெரியவில்லை.

இதேவேளை செம்மணி புதைக்குழியில் உள்ள மனித எலும்புகூடுகள் யாருடையது என்று இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. சிலவேளை அவை விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாகவோ, இராணுவத்தினருடையதோ, யுத்தத்தில் இறந்த விடுதலைப்புலிகளினதோ அல்லது பொலிஸாரினதோ எலும்புகூடுகளாக இருக்கலாம். அவை யாருடையது என்று உறுதிப்படுத்தப்படாதிருக்கையில் அது தமிழ் மக்களுடையது என்றும், இது மனித உரிமை குற்றம் என்றும் கூறி அது தொடர்பான பரிந்துரைகளுக்கு முயற்சிக்கப்படுகின்றது.

அதேபோன்று உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பிலும் கூறப்படுகின்றது. ஆனால் தெற்கு ஆபிரிகா ஆணைக்குழு போன்றது அல்ல. யுத்தத்திற்கு உத்தரவிட்ட அதிகாரிகளை சிக்க வைப்பதற்கான ஆணைக்குழுவாகவே இருக்கும். அத்துடன் சுயாதீன குற்றப்பத்திரிகை அலுவலகமும் அவ்வாறே இருக்கப் போகின்றது.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகை இதனை அடிப்படையாக கொண்டதாகவே இருந்துள்ளது. அவர் நடுநிலைதாரிகளை சந்திக்காது விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களையே சந்தித்துள்ளார். இதன்படி அறிக்கைகள் தயாரிக்கப்படும். இங்கு வந்து அவருக்கு உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான கடமை கிடையாது. அதனை இந்த அரசாங்கத்தால் தடுக்க முடியாது போயுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சுயாதீனமாக இங்கே செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அவரின் விஜயம் தொடர்பிலோ, அவர் கூறிய விடயங்கள் தொடர்பிலோ அரசாங்கம் எதுவும் கூறாமல் இருப்பது ஏன் என்றும் புரியவில்லை என்றார்.


https://akkinikkunchu.com/?p=330752

காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து

6 days 4 hours ago
மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே புதிய வர்த்தமானியை வெளியிட்டிருக்கிறது அரசு - எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை 29 JUN, 2025 | 09:39 AM (நா.தனுஜா) காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவற்றை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட 2430 இலக்க வர்த்தமானி அறிவித்தல், அரசாங்கத்தினால் வெள்ளிக்கிழமை (27) இரவு வெளியிடப்பட்ட 2443 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இரத்துச்செய்யப்பட்டுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட 28.03.2025 ஆம் திகதியிடப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக சுமந்திரனால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில், அவ்வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து நேற்று முன்தினம் இரவு காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 27.06.2025 ஆம் திகதியிடப்பட்ட 2443 இலக்க வர்த்தமானியில், 'இவ்வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைபடப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளையும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்குப் போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதையும் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானத்துக்கு அமைவாக 28.03.2025 ஆம் திகதியிடப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கேசரியிடம் கருத்து வெளியிட்ட சுமந்திரன், காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்கு போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதைக் கருத்திற்கொண்டு அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கான கொள்கைத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதானது, மீண்டும் இவ்வாறானதொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியப்பாடு உண்டு என்பதையே காண்பிக்கிறது என சுமந்திரன் விசனம் வெளியிட்டார். மேலும் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின்கீழ் இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படுவதைத் தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், ஆகவே எதிர்வருங்காலத்தில் அரசாங்கம் மீண்டும் இத்தகைய வர்த்தமானியை வெளியிடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/218699

செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என சோமரத்ன ராஜபக்ச குற்றம்சாட்டிய இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் உயர் பதவிகளில் - ரஜீவ்காந்

6 days 4 hours ago
செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என சோமரத்ன ராஜபக்ச குற்றம்சாட்டிய இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் உயர் பதவிகளில் - ரஜீவ்காந் Published By: RAJEEBAN 29 JUN, 2025 | 11:25 AM கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல்வல்லுறவு படுகொலை குற்றவாளி சோமரத்ன ராஜபக்ச தனது வாக்குமூலத்தில் செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என குறிப்பிட்ட இராணுவஅதிகாரிகளில் பலர் இன்னமும் உயர்பதவிகளை வகிக்கின்றனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் இவர்களிற்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையில் இன்று பேசுபொருளாக இருக்கின்ற விடயம் செம்மணி படுகொலைகள் மற்றும் அதன் அகழ்வு பணிகள். உங்களிற்கு தெரியும் 1996ம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி என்கின்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அவரது குடும்பத்தவர்கள் அயல்வீட்டுக்காரர் என பலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச நேரடியாக சாட்சியம் வழங்கினார். இந்த கொலைகளின் பின்னர் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் இந்த கொலையுடன் தொடர்புபட்ட அந்த குற்றவாளி,நேரடியாக இராணுவதரப்பை நோக்கி குற்றம் சுமத்துகின்றார். இதேபோல 500 முதல் 600 வரையிலான நபர்களை நாங்கள் இங்கே கொன்று புதை;திருக்கின்றோம் , இதனை செய்யுமாறு எங்களிற்கு அன்று கூறியவர்கள் அன்று அந்த இடத்திலிருந்த உயர் அதிகாரிகள் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இவர்களின் கைதுகளின் பின்னர் அந்த உயரதிகாரிகள் தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறவில்லை.அன்று அங்கு கடமையாற்றியவர்கள் இருந்தவர்கள் எல்லாம் இன்றும் இராணுவத்தில் இருக்கின்றார்கள். சிலர் இராணுவத்தின் பெரிய பதவிகளை பெற்றிருக்கின்றார்கள் அவ்வேளை பொறுப்பதிகாரிகள் தரத்தில் இருந்தவர்கள் தொடர்ந்தும் அப்படியே இருக்கின்றனர். அன்று இலங்கையின் முப்படை தளபதியாகயிருந்த சந்திரிகா குமாரதுங்க இன்றும் இங்கு நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார். எனவே இவற்றிற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் மேல் உடனடியாக தீவிரமான விசாரணையொன்றை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். https://www.virakesari.lk/article/218748

செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என சோமரத்ன ராஜபக்ச குற்றம்சாட்டிய இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் உயர் பதவிகளில் - ரஜீவ்காந்

6 days 4 hours ago

செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என சோமரத்ன ராஜபக்ச குற்றம்சாட்டிய இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் உயர் பதவிகளில் - ரஜீவ்காந்

Published By: RAJEEBAN

29 JUN, 2025 | 11:25 AM

image

கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல்வல்லுறவு படுகொலை குற்றவாளி சோமரத்ன ராஜபக்ச தனது வாக்குமூலத்தில் செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என குறிப்பிட்ட இராணுவஅதிகாரிகளில் பலர் இன்னமும் உயர்பதவிகளை வகிக்கின்றனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந்  இவர்களிற்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது  இலங்கையில் இன்று பேசுபொருளாக இருக்கின்ற விடயம் செம்மணி படுகொலைகள் மற்றும் அதன் அகழ்வு பணிகள்.

உங்களிற்கு தெரியும் 1996ம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி என்கின்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அவரது குடும்பத்தவர்கள் அயல்வீட்டுக்காரர் என பலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச நேரடியாக சாட்சியம் வழங்கினார்.

இந்த கொலைகளின் பின்னர் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் இந்த கொலையுடன் தொடர்புபட்ட அந்த குற்றவாளி,நேரடியாக இராணுவதரப்பை நோக்கி குற்றம் சுமத்துகின்றார்.

இதேபோல 500 முதல் 600 வரையிலான நபர்களை நாங்கள் இங்கே கொன்று புதை;திருக்கின்றோம் , இதனை செய்யுமாறு எங்களிற்கு அன்று கூறியவர்கள் அன்று அந்த இடத்திலிருந்த உயர் அதிகாரிகள் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்.

எனவே இவர்களின் கைதுகளின் பின்னர் அந்த உயரதிகாரிகள் தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறவில்லை.அன்று அங்கு கடமையாற்றியவர்கள் இருந்தவர்கள் எல்லாம் இன்றும் இராணுவத்தில் இருக்கின்றார்கள். சிலர் இராணுவத்தின் பெரிய பதவிகளை பெற்றிருக்கின்றார்கள் அவ்வேளை பொறுப்பதிகாரிகள் தரத்தில் இருந்தவர்கள் தொடர்ந்தும் அப்படியே இருக்கின்றனர்.

அன்று இலங்கையின் முப்படை தளபதியாகயிருந்த சந்திரிகா குமாரதுங்க இன்றும் இங்கு நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

எனவே இவற்றிற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் மேல் உடனடியாக தீவிரமான விசாரணையொன்றை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.

https://www.virakesari.lk/article/218748

பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் - சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து

6 days 4 hours ago
பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் - சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து 29 JUN, 2025 | 10:48 AM பிரிட்டனின் கிளாஸ்டன்பரியில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் ராப் பாடகர் பொப் வைலான் மற்றும் அயர்லாந்தின் ராப் குழுவான நீகப் ஆகியோர் இஸ்ரேலிய படையினருக்கு மரணம் என மேடையில் கருத்து தெரிவித்தமை குறித்து ஆராய்ந்துவருவதாக சமர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிபிசியில் நேரடியாக ஒலிபரப்பான இசைநிகழ்ச்சியில் பொப்வைலான் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என தெரிவித்தமை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ராப் இசைகலைஞர் பொப்வைலான் சுதந்திரம் சுதந்திர பாலஸ்தீனம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோசமிட்டுள்ளார். சில கருத்துக்கள் "ஆழ்ந்த புண்படுத்தும் வகையில்" இருப்பதாக பிபிசி செய்தித் தொடர்பாளர் மேலும் "மிகவும் வலுவான மற்றும் பாரபட்சமான மொழி" குறித்து திரையில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தொகுப்பு பிபிசி ஐபிளேயரில் மீண்டும் பார்க்க கிடைக்காதுஎன அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிய தூதரகம் "ஆழ்ந்த எரிச்சலூட்டும் மற்றும் வெறுப்பூட்டும் சொல்லாட்சிகளால் மிகவும் வருத்தமடைந்ததாக" பதிவிட்டுள்ளது.: "கிளாஸ்டன்பரி விழா அதன் கலைஞர்களிடமிருந்து வெறுப்பூட்டும் பேச்சு அல்லது வன்முறையைத் தூண்டுவதை மன்னிக்காது."என குறிப்பிட்டுள்ளது. பாப் வைலனின் நிகழ்ச்சிக்குப் பிறகு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கலாச்சாரச் செயலாளர் லிசா நந்தி பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவியிடம் அவசர விளக்கம் கோருவதாகக் கூறினார். பிபிசி ஐபிளேயரில் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யாத முடிவை வரவேற்பதாக அரசாங்கம் மேலும் கூறியது பாப் வைலன் மற்றும் நீகேப்பின் தொகுப்புகளைத் தொடர்ந்து வெஸ்ட் ஹோல்ட்ஸ் மேடையில் செயல்களால் கூறப்பட்ட கருத்துகளின் காட்சிகளை மதிப்பாய்வு செய்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. "குற்றவியல் விசாரணை தேவைப்படும் ஏதேனும் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாமா என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகளால் காட்சிகள் மதிப்பிடப்படும்" என்று காவல்துறை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/218740

பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் - சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து

6 days 4 hours ago

பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் - சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து

29 JUN, 2025 | 10:48 AM

image

பிரிட்டனின் கிளாஸ்டன்பரியில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் ராப் பாடகர் பொப் வைலான் மற்றும் அயர்லாந்தின் ராப் குழுவான நீகப் ஆகியோர்  இஸ்ரேலிய படையினருக்கு மரணம் என மேடையில் கருத்து தெரிவித்தமை குறித்து ஆராய்ந்துவருவதாக சமர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிபிசியில் நேரடியாக ஒலிபரப்பான இசைநிகழ்ச்சியில் பொப்வைலான் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என தெரிவித்தமை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ராப் இசைகலைஞர் பொப்வைலான் சுதந்திரம் சுதந்திர பாலஸ்தீனம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோசமிட்டுள்ளார்.

சில கருத்துக்கள் "ஆழ்ந்த புண்படுத்தும் வகையில்" இருப்பதாக பிபிசி செய்தித் தொடர்பாளர் மேலும் "மிகவும் வலுவான மற்றும் பாரபட்சமான மொழி" குறித்து திரையில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தொகுப்பு பிபிசி ஐபிளேயரில் மீண்டும் பார்க்க கிடைக்காதுஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய தூதரகம் "ஆழ்ந்த எரிச்சலூட்டும் மற்றும் வெறுப்பூட்டும் சொல்லாட்சிகளால் மிகவும் வருத்தமடைந்ததாக" பதிவிட்டுள்ளது.: "கிளாஸ்டன்பரி விழா அதன் கலைஞர்களிடமிருந்து வெறுப்பூட்டும் பேச்சு அல்லது வன்முறையைத் தூண்டுவதை மன்னிக்காது."என குறிப்பிட்டுள்ளது.

பாப் வைலனின் நிகழ்ச்சிக்குப் பிறகு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கலாச்சாரச் செயலாளர் லிசா நந்தி பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவியிடம் அவசர விளக்கம் கோருவதாகக் கூறினார்.

பிபிசி ஐபிளேயரில் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யாத முடிவை வரவேற்பதாக அரசாங்கம் மேலும் கூறியது பாப் வைலன் மற்றும் நீகேப்பின் தொகுப்புகளைத் தொடர்ந்து வெஸ்ட் ஹோல்ட்ஸ் மேடையில் செயல்களால் கூறப்பட்ட கருத்துகளின் காட்சிகளை மதிப்பாய்வு செய்வதாக  காவல்துறை தெரிவித்துள்ளது.

"குற்றவியல் விசாரணை தேவைப்படும் ஏதேனும் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாமா என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகளால் காட்சிகள் மதிப்பிடப்படும்" என்று  காவல்துறை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/218740

காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து

6 days 4 hours ago
காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து 29 June 2025 வட மாகாணத்திலுள்ள உரிமை கோரப்படாத 5,941 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானியை அறிவித்தலை ரத்து செய்வதாக நேற்று முன்தினம் வர்த்தமானி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, முன்னைய வர்த்தமானி அறிவித்தல் அரசின் கொள்கை முடிவுக்கு அமைய, ரத்து செய்யப்படுவதாக புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காணிகள் உள்ள பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும், இந்தக் காணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உரிமை கோருபவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, 3 மாத அவகாசத்துடன், கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடை முறைப்படுத்துவதற்கு எதிராக, நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவும் வழங்கியிருந்தது. இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவின் பிரகாரம் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறான பின்னணியிலேயே குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் புதிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யப்பட்டதை தாம் வரவேற்கின்றபோது, இந்த வர்த்தமானி அறிவித்தல் போதுமான கால அவகாசம் வழங்குவதாகக் கூறி ரத்து செய்யப்படுவதையிட்டு அதிருப்தி அடைவதாக, இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/408704/gazette-notification-regarding-land-acquisition-cancelled

காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து

6 days 4 hours ago

காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து

29 June 2025

1751174207_6394842_hirunews.jpg

வட மாகாணத்திலுள்ள உரிமை கோரப்படாத 5,941 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானியை அறிவித்தலை ரத்து செய்வதாக நேற்று முன்தினம் வர்த்தமானி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, முன்னைய வர்த்தமானி அறிவித்தல் அரசின் கொள்கை முடிவுக்கு அமைய, ரத்து செய்யப்படுவதாக புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த காணிகள் உள்ள பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும், இந்தக் காணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உரிமை கோருபவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனிடையே, 3 மாத அவகாசத்துடன், கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடை முறைப்படுத்துவதற்கு எதிராக, நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவும் வழங்கியிருந்தது. 

இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவின் பிரகாரம் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. 

அவ்வாறான பின்னணியிலேயே குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் புதிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியாகியுள்ளது. 

எவ்வாறாயினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யப்பட்டதை தாம் வரவேற்கின்றபோது, இந்த வர்த்தமானி அறிவித்தல் போதுமான கால அவகாசம் வழங்குவதாகக் கூறி ரத்து செய்யப்படுவதையிட்டு அதிருப்தி அடைவதாக, இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

https://hirunews.lk/tm/408704/gazette-notification-regarding-land-acquisition-cancelled

வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்!

6 days 4 hours ago
அரசியல் அலசல் பகுதியில் இணைப்பதுதான் சரியென்று நினைக்கின்றேன். ஆனால் அதிகம் இணைத்தால் பார்வையாளர்கள் சுருங்கிவிடுகின்றார்கள்! இனிமேல் கவனம் எடுக்கின்றேன்😊

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்ய மீண்டும் தடை!

6 days 5 hours ago

16a93fb0-63d1-4ef8-a1bf-0ff06cdadf29.jpe

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்ய மீண்டும் தடை!

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் ராணுவத்தினரால் மீண்டும் இன்று(28) முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உட்குதியில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அதனால் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது என தெரிவித்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்ட ஆலயத்திற்குள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் கடந்த 6 மாத காலத்திற்கு முன்னர் அறிவித்திருந்தனர்.

இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக நேற்று முன்தினம்(26) முதல் மக்கள் சென்று வழிபடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினர் கடந்த வருடத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த ஆலயத்தினை சுத்தம் செய்துள்ளனர்.

பின்னர் இராணுவத்தின் வாகனத்தினூடாக கோவில் நிர்வாகத்தினரை மாத்திரம் அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் குறித்த பாதையினை விடுவித்து மக்கள் சிலர் வழிபாடுகளில் ஈடுபட்டு, வந்தனர்.

இந்த நிலையில் இன்று வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலயத்திற்கு சென்ற மக்களை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உட்குதியில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதால் வழிபட முடியாது என தெரிவித்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதை மூடப்பட்டு முட்கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்ததுடன் இராணுவத்தினர் கடமையிலும் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.

இதன்போது ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்த வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.சுகிர்தன், செயலாளர், ஆலயத்தின் தலைவர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வருகைதந்திருந்த நிலையில் திரும்பிச் சென்றுள்ளனர்.

9cd2a7d4-4b4e-4f10-9be4-14c4f56d3efe.jpe

0d980da5-4d8f-4650-b376-c534e82213c9.jpe

https://athavannews.com/2025/1437462

இலங்கையின் பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் தமிழகத்தில் கைது!

6 days 5 hours ago

New-Project-372.jpg?resize=600%2C300&ssl

இலங்கையின் பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் தமிழகத்தில் கைது!

இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து இந்திய கடலோர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (28) நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட வேளையிலே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மூவரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் 46,000 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டதுடன் அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தனரெனவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 34, 43 மற்றும் 33 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 https://athavannews.com/2025/1437448

செம்மணிப் புதைகுழி வேதனை....முகப்புத்தகத்தில் பிரதி பண்ணப்பட்டது

6 days 5 hours ago
முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில், அடுத்த டக்கிளஸ் அருண் சித்தாத், தனது பெண் கூட்டாளியுடன் சென்று, அந்தப் பெண்ணின் தந்தையுடன் நாலாயிரம் பேரை புலிகள் அங்கு தடுத்து வைத்து கொலை செய்து அங்கு புதைத்ததாகவும் அதை தேடி அகழப்போவதாக ஒரு நகைச்சுவை நாடகம் நடத்தியுள்ளார். ம் இத்தனை ஆண்டுகள் இவர்களை தேட, புதைகுழியை அடையாளம் காட்ட, முறைப்பாடு செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் போரை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று சொன்னவர் இவரின் கடவுள் மஹிந்தா. அவரிடம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை? விகாரைக்கு வக்காலத்து வாங்குவது, மஹிந்தவின் எதிரணியை குழப்ப புகுந்து அடிவாங்குவது, இப்போ, எஜமானரை காக்க புது நாடகத்துடன் வந்துள்ளார். அந்தப்பெண் கேக்கிறாள் செம்மணி புதைகுழி தோண்டலாம் இது தோண்டக்கூடாதோ என்கிறாள். ஆனால் நாடகத்திற்கான பயிற்சி போதாது, நடிக்கத்தெரியவில்லை. ஒரு பெண், அருண் சித்தாத் கமராக்காரனாம் (மீடியாக்காரன். காமராவோ வேறு எதுவுமோ அவரிடம் காணப்படவில்லை)என்று மூவர் புதை குழி தோண்ட வந்தனராம். குழி தோண்ட வந்தாரோ அல்லது பெண்ணை கடத்திவந்து அகப்பட்டுக்கொண்டாரோ தெரியவில்லை. தகப்பனையும் நாலாயிரம்பேரையும் புலிகள் கடத்தும்போது இவளுக்கு ஆறு வயதாம். தொண்ணூறாம் ஆண்டு நடந்ததாம். சுண்ணாகத்தில் புலிகள் அலுவலகத்தில் போய் விசாரித்தனராம். அப்போ எதிரில் நின்றவர் கேட்டார், நீங்கள் சொல்லும் காலப்பகுதியில் இந்தியன் இராணுவந்தான் இங்கிருந்தது, புலிகளுக்கு எங்கும் அலுவலகம் திறந்து காரியமாற்றும் சூழ்நிலை இருக்கவில்லை. உங்களுக்கு யார் சொன்னது இங்கு புலிகள் அவர்களை தடுத்து வைத்து கொலை செய்து புதைத்ததாக என்று கேட்க, யாரோ சொன்னார்களாம். அந்த யாரையோ கூட்டி வாருங்கள் அல்லது தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் என்று கேட்டபோது, தொலைபேசி இலக்கம் தெரியாதாம், அவர்கள் வந்து சாட்சி சொல்ல அவர்களுக்கு பயமாம். யாருக்கு பயம், ஏன் பயம்? இப்படி இழிதொழில் செய்து பிழைக்கும் கூட்டத்தை விட, இவர் சொல்லும் தொழிலேதும் குறைவானதல்ல. இவரது செயலே, இந்த இழிதொழிலே இவரை ஒதுக்குவதற்கு போதுமானது. சந்திரகாந்தனுக்கு வக்காலத்து வாங்கபோய் கம்மன்பில அவரை மீள முடியா விசாரணைக்கு வழிவகுத்து பல கொலை கொள்ளை வெளிவர காரணமானார். அதுபோல் இவரும் முன்வந்துள்ளார். இவருக்கு, தன்னை சமுதாயத்தில் அடக்கி வைத்தார்களாம் அதற்கு பழிவாங்க இனத்தை அழிக்க இவர் எடுத்த வழிமுறை இது. வடிவாக இவரின் முகத்தைப்பாருங்கள், டக்கிலஸின் சாயல் அடிக்கிறது. இன்னொரு கோசத்தோடு சிங்கள பிக்கு கூட்டம் வெகு விரைவில் இவர் காட்டிய இடத்திற்குவந்திறங்குமென்று எதிர்பார்க்கலாம்.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 05

6 days 8 hours ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 05 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 05 / 'அசோகன் என்பவன் யார்? மத்திய இந்தியாவில் உள்ள உஜ்ஜயினிக்கு, தந்தை பிந்துசாரர் ஆட்சியில் இருந்தபோது, பேரரசரின் பிரதிநிதியாக அசோகன் அனுப்பப்பட்டார். அங்கு விதிஷாவில் உள்ளூர் தொழிலதிபரின் அழகான மகள் மகாதேவி சாக்ய குமாரி மீது அசோகன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். அவள் வணிகர் சாதியைச் சேர்ந்தவள். மகிந்த என்ற மகனையும் சங்கமித்தா என்ற மகளையும் பெற்றெடுத்தார். அசோகன், தீபவம்சம் 6 - 22 இன் படி தனது நூறு சகோதரர்களையும், மகாவம்சம் 5 - 20 இன் படி தொண்ணூற்றொன்பது சகோதரர்களையும் அரியணை ஏறுவதற்கான போரில் கொன்றார். என்றாலும் பல வரலாற்று அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். ஒரு சில கொலைகள் ஒருவேளை நடந்து இருக்கலாம்?, ஆனால் நூறு ஆக முடியாது என்கின்றனர். மன்னன் அசோகர் முடிசூடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புத்த மதத்திற்கு மாறியதாகக் கூறப்படுகிறது; தீபவம்சம் 6-18 பார்க்கவும். இது அசோகரின் பெரும்பாறைக் கல்வெட்டு 13 உடன் நேரடியாக முரண்படுகிறது. அந்த ஆணையில் : 'தேவர்களின் பிரியமான பியாதாசி [பியதசி / Piyadasi.], முடிசூட்டுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்தை வென்றார் என்று வரலாற்று குறிப்பு பதியப்பட்டுள்ளது. [It reads, in part: “Beloved-of-the-Gods, King Piyadasi, conquered the Kalingas eight years after his coronation. One hundred and fifty thousand were deported, one hundred thousand were killed and many more died (from other causes)]. கலிங்கத்தை வெற்றி பெற்ற பிறகு, கடவுளுக்குப் பிரியமான அசோகன், தம்மத்தின் [தம்மம் என்பது புத்தரின் போதனைகளைக் குறிக்கும் ஒரு பௌத்தக் கோட்பாடு] மீது வலுவான விருப்பத்தை உணர்ந்தார். முடிசூட்டப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான், தம்மத்தை நோக்கி உணர ஆரம்பித்ததாக அசோகன், தானே கூறுகிறார். இருப்பினும், தீபவம்சம், 6-18, முடிசூட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என்று, அசோகனின் கூற்றுக்கு மாறாக, கூறுகிறது? அவருடைய பிள்ளைகளான மகிந்தவும் சங்கமித்தமும் கூட கற்பனையான பாத்திரங்கள் என்று பல வரலாற்று அறிஞர்கள் நம்புகிறார்கள். மொகாலிபுத்த தீசர் கூட ஒரு கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரமாக இருக்க வேண்டும்?; பிரம்மாவின் உலகத்தில் இருந்து எவரும் வந்திருக்க முடியாது, அப்படி ஏதாவது ஒரு உலகம் இருந்தால் தானே! மகிந்த மற்றும் சங்கமித்தா, அவர்களின் தாய் தேவி மற்றும் மொகாலிபுத்த தீசர் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் அவர்கள் பிறந்த இடத்தில் உள்ள இந்திய ஆதாரங்களில், இதுவரை ஒன்றுமே இல்லை. அசோக மன்னன் பாறைகள் மற்றும் தூண்கள் மீதான தனது ஆணைகளுக்கு மிகவும் பிரபலமானவர், ஆனால் இந்த மூன்று நூல்களிலும் இந்த ஆணைகள் குறித்து ஒன்றுமே இல்லை. கலிங்கப் போரின் கொலைகளும் பயங்கரமான விளைவுகளும் அவரது வாழ்விலும் ஆட்சியிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கலிங்கர்கள் அவருடைய இரத்த உறவுகள் இல்லாத போதிலும், அவரது மன வருத்தம் பதின்மூன்றாவது பாறை ஆணையில் பொறிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், அசோகன் தனது நூறு சகோதரர்களைக் கொன்றதற்கு கட்டாயம் அவர் வருத்தம் தெரிவித்திருக்க மாட்டாரா? என்று உங்களை கேட்கத் தோன்றுகிறது. Part: 05 / 'Who is Asoka?' The Emperor Asoka married a woman of no royal blood, Devi, when he was in Ujjain as sub king; she belonged to merchant caste. She gave birth to a son Mahinda and a daughter Sanghamitta. Asoka, as per the chronicles, murdered his one hundred brothers, as per the Dipavamsa 6 – 22, and ninety-nine brothers as per the Mahavamsa 5 - 20, to ascend the throne. Many scholars dispute this. A few killings would have taken place, but could not be hundred. It is claimed that the King Asoka converted to Buddhism three years after his coronation; see Dipavamsa 6-18. This is in direct conflict with the Asoka’s Major Rock Edict 13. It is stated in that Edict: ‘Beloved of the Gods King Piyadasi, conquered the Kalingas eight years after his coronation. After the Kalingas had been conquered, Beloved of the Gods came to feel strong inclination towards the Dhamma. Asoka says that he started feeling towards Dhamma eight years after his coronation, however, the Dipavamsa, 6-18, states that it was three years after the coronation. Many scholars believe that his children Mahinda and Sanghamitta are fictitious characters. Even Moggaliputta Tissa too must be an invented character; no one could have descended from Brahma’s world, if at all there is any such world! There are no references to Mahinda and Sanghamitta, their mother Devi and Moggaliputta Tissa in the Indian sources in their birthplace. The king Asoka is very famous for his edicts on rocks and pillars, but all the three chronicles are silent on these edicts. The killings and the terrible consequence of the Kalinga war is a watershed event in his life and reign. The Kalingas were not his blood relations. His remorse is etched on the Thirteenth Rock Edict, which is still being heard by many. Would not Asoka have expressed remorse of his previous killing of his one hundred brothers? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 06 தொடரும் / Will Follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 05

6 days 8 hours ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 05

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 05 / 'அசோகன் என்பவன் யார்?

மத்திய இந்தியாவில் உள்ள உஜ்ஜயினிக்கு, தந்தை பிந்துசாரர் ஆட்சியில் இருந்தபோது, பேரரசரின் பிரதிநிதியாக அசோகன் அனுப்பப்பட்டார். அங்கு விதிஷாவில் உள்ளூர் தொழிலதிபரின் அழகான மகள் மகாதேவி சாக்ய குமாரி மீது அசோகன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். அவள் வணிகர் சாதியைச் சேர்ந்தவள். மகிந்த என்ற மகனையும் சங்கமித்தா என்ற மகளையும் பெற்றெடுத்தார். அசோகன், தீபவம்சம் 6 - 22 இன் படி தனது நூறு சகோதரர்களையும், மகாவம்சம் 5 - 20 இன் படி தொண்ணூற்றொன்பது சகோதரர்களையும் அரியணை ஏறுவதற்கான போரில் கொன்றார். என்றாலும் பல வரலாற்று அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். ஒரு சில கொலைகள் ஒருவேளை நடந்து இருக்கலாம்?, ஆனால் நூறு ஆக முடியாது என்கின்றனர். மன்னன் அசோகர் முடிசூடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புத்த மதத்திற்கு மாறியதாகக் கூறப்படுகிறது; தீபவம்சம் 6-18 பார்க்கவும். இது அசோகரின் பெரும்பாறைக் கல்வெட்டு 13 உடன் நேரடியாக முரண்படுகிறது. அந்த ஆணையில் : 'தேவர்களின் பிரியமான பியாதாசி [பியதசி / Piyadasi.], முடிசூட்டுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்தை வென்றார் என்று வரலாற்று குறிப்பு பதியப்பட்டுள்ளது. [It reads, in part: “Beloved-of-the-Gods, King Piyadasi, conquered the Kalingas eight years after his coronation. One hundred and fifty thousand were deported, one hundred thousand were killed and many more died (from other causes)]. கலிங்கத்தை வெற்றி பெற்ற பிறகு, கடவுளுக்குப் பிரியமான அசோகன், தம்மத்தின் [தம்மம் என்பது புத்தரின் போதனைகளைக் குறிக்கும் ஒரு பௌத்தக் கோட்பாடு] மீது வலுவான விருப்பத்தை உணர்ந்தார். முடிசூட்டப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான், தம்மத்தை நோக்கி உணர ஆரம்பித்ததாக அசோகன், தானே கூறுகிறார். இருப்பினும், தீபவம்சம், 6-18, முடிசூட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என்று, அசோகனின் கூற்றுக்கு மாறாக, கூறுகிறது? அவருடைய பிள்ளைகளான மகிந்தவும் சங்கமித்தமும் கூட கற்பனையான பாத்திரங்கள் என்று பல வரலாற்று அறிஞர்கள் நம்புகிறார்கள். மொகாலிபுத்த தீசர் கூட ஒரு கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரமாக இருக்க வேண்டும்?; பிரம்மாவின் உலகத்தில் இருந்து எவரும் வந்திருக்க முடியாது, அப்படி ஏதாவது ஒரு உலகம் இருந்தால் தானே! மகிந்த மற்றும் சங்கமித்தா, அவர்களின் தாய் தேவி மற்றும் மொகாலிபுத்த தீசர் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் அவர்கள் பிறந்த இடத்தில் உள்ள இந்திய ஆதாரங்களில், இதுவரை ஒன்றுமே இல்லை. அசோக மன்னன் பாறைகள் மற்றும் தூண்கள் மீதான தனது ஆணைகளுக்கு மிகவும் பிரபலமானவர், ஆனால் இந்த மூன்று நூல்களிலும் இந்த ஆணைகள் குறித்து ஒன்றுமே இல்லை. கலிங்கப் போரின் கொலைகளும் பயங்கரமான விளைவுகளும் அவரது வாழ்விலும் ஆட்சியிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கலிங்கர்கள் அவருடைய இரத்த உறவுகள் இல்லாத போதிலும், அவரது மன வருத்தம் பதின்மூன்றாவது பாறை ஆணையில் பொறிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், அசோகன் தனது நூறு சகோதரர்களைக் கொன்றதற்கு கட்டாயம் அவர் வருத்தம் தெரிவித்திருக்க மாட்டாரா? என்று உங்களை கேட்கத் தோன்றுகிறது.

Part: 05 / 'Who is Asoka?'

The Emperor Asoka married a woman of no royal blood, Devi, when he was in Ujjain as sub king; she belonged to merchant caste. She gave birth to a son Mahinda and a daughter Sanghamitta. Asoka, as per the chronicles, murdered his one hundred brothers, as per the Dipavamsa 6 – 22, and ninety-nine brothers as per the Mahavamsa 5 - 20, to ascend the throne. Many scholars dispute this. A few killings would have taken place, but could not be hundred. It is claimed that the King Asoka converted to Buddhism three years after his coronation; see Dipavamsa 6-18. This is in direct conflict with the Asoka’s Major Rock Edict 13. It is stated in that Edict: ‘Beloved of the Gods King Piyadasi, conquered the Kalingas eight years after his coronation. After the Kalingas had been conquered, Beloved of the Gods came to feel strong inclination towards the Dhamma. Asoka says that he started feeling towards Dhamma eight years after his coronation, however, the Dipavamsa, 6-18, states that it was three years after the coronation. Many scholars believe that his children Mahinda and Sanghamitta are fictitious characters. Even Moggaliputta Tissa too must be an invented character; no one could have descended from Brahma’s world, if at all there is any such world! There are no references to Mahinda and Sanghamitta, their mother Devi and Moggaliputta Tissa in the Indian sources in their birthplace. The king Asoka is very famous for his edicts on rocks and pillars, but all the three chronicles are silent on these edicts. The killings and the terrible consequence of the Kalinga war is a watershed event in his life and reign. The Kalingas were not his blood relations. His remorse is etched on the Thirteenth Rock Edict, which is still being heard by many. Would not Asoka have expressed remorse of his previous killing of his one hundred brothers?

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 06 தொடரும் / Will Follow

514322945_10229809923295055_765012965722

514162415_10229809923335056_429698083921


வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்!

6 days 9 hours ago
ஜி செய்திகள் பகுதியில் இப்போ அதிகம் கட்டுரைகளை இணைக்கிறீர்கள். கவனத்தில் எடுக்கவும். உங்களுக்கே ரிப்போர்ட் அடிக்க முடியவில்லை😂