புதிய பதிவுகள்2

குருந்தூர் மலையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு நடைப்பயண யாத்திரை

15 hours 20 minutes ago
குருந்தூர் மலையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு நடைப்பயண யாத்திரை செ.தி.பெருமாள் முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து பௌத்த துறவிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ள விசேட நடைப்பயண யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 14.03.2026 அன்று முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையிலிருந்து இந்த யாத்திரை ஆரம்பமானது. ஹிறிகத்பவன் வெவ உப நிதாலங்கார பௌத்த மதகுருவின் தலைமையில், 6 பௌத்த துறவிகள் மற்றும் 10 பேர் அடங்கிய சிவில் சமூகத்தினர் இந்த ஆன்மீக நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர். நீண்ட தூர நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள இக்குழுவினர், நேற்று (16) இரவு நுவரெலியா மாவட்டம், அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரிவன்எளிய பௌத்த விகாரையில் தங்கியிருந்தனர். இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு, சிவனொளிபாத மலை அடிவாரத்தில் உள்ள 'கிரீன் வீவ்' விடுதியை வந்தடைந்தனர். இன்று தங்கியிருக்கும் இடத்திலிருந்து நாளை (18 ஆம் திகதி) அதிகாலை வேளையில் சிவனொளிபாத மலை உச்சிக்குச் சென்று மலையடிச் சுவட்டைத் தரிசனம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவிலிருந்து நுவரெலியா வரையான இந்த நீண்ட நெடிய ஆன்மீகப் பயணம் அப்பகுதி மக்களிடையே அவதானத்தைப் பெற்றுள்ளது https://www.tamilmirror.lk/மலையகம்/குருந்தூர்-மலையிலிருந்து-சிவனொளிபாத-மலைக்கு-நடைப்பயண-யாத்திரை/76-374042

காபூல் வைத்தியசாலை மீது வான்வழித் தாக்குதல்: 400 பேர் பலி

15 hours 23 minutes ago
காபூல் வைத்தியசாலை மீது வான்வழித் தாக்குதல்: 400 பேர் பலி Mar 17, 2026 - 09:41 AM ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு வைத்தியசாலை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது. கடந்த மாத இறுதியில் தொடங்கிய மோதலின் தீவிரமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் எல்லை தாண்டிய மோதல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இரு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் ஆசிய பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு தலீபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இதன்படி கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் எந்த பொதுமக்களின் தளங்களையும் தாக்கவில்லை என்று கூறி, பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்தது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானின் துணை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பித்ரத் தனது எக்ஸ் வலைதளத்தில், “உள்ளூர் நேரப்படி இரவு 9.00 மணியளவில் காபூலில் உள்ள வைத்தியசாலை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. 2,000 படுக்கைகள் கொண்ட வசதியின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டது. இறப்பு எண்ணிக்கை இதுவரை 400 பேரை எட்டியுள்ளது, அதே நேரத்தில் சுமார் 250 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. காபூலின் முக்கியப் பகுதிகளான ஷார்-இ-நாவ் மற்றும் வஜீர் அக்பர் கான் ஆகிய இடங்களில் இரவு நேரத்தில் மிகப்பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலிருந்து கரும்புகை வெளியேறியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தலீபான் அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இது குறித்து கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ஒருமுறை ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சையில் இருந்த நோயாளிகள். இந்த செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய செயலை, ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துக் கொள்கைகளுக்கும் எதிரானது. இது ஒரு மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல் என்று கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், இக்குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள பாகிஸ்தான் தகவல் அமைச்சகம், தங்களது தாக்குதல்கள் காபூல் மற்றும் நங்கர்ஹார் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகளை மட்டுமே இலக்கு வைத்ததாக கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாகக் கூறி, இந்தத் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் இந்த சம்பவத்தை நியாயப்படுத்தி உள்ளது. இதனிடையே மறுவாழ்வு வைத்தியசாலை கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmmu3h978000a356p12qaf41a

யாழில் வீதி விபத்து: அண்ணனும் தங்கையும் உயிரிழப்பு

15 hours 24 minutes ago
யாழ்ப்பாணத்தில் துயர விபத்து – சகோதரர்கள் உயிரிழப்பு adminMarch 16, 2026 யாழ்ப்பாண பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து கொழும்புத்துறை பகுதியை அண்மித்த இடத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள் மணியந்தோட்டப் பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (24) மற்றும் அவரது சகோதரி டிலக்ஸி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல்துறை தகவலின்படி, இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது பவுசர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://globaltamilnews.net/2026/230561/

யாழில் வீதி விபத்து: அண்ணனும் தங்கையும் உயிரிழப்பு

15 hours 28 minutes ago
யாழில் வீதி விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு Published By: Vishnu 17 Mar, 2026 | 05:46 AM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/241149

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

18 hours ago
ஒரு நோபல் தானே சும்மா பேச்சுக்காவது கையில் திணிச்சுப்போட்டு போயிருக்கலாம் இப்ப பாருங்கோ பயல் ஒவ்வொருவரையும் திருவோடு எந்த வைக்காமல் ஓயமாட்டான். அமெரிக்கன் பாடம் படிக்கனும் என்றால் நாமளும் சேர்ந்து காய்வது காலத்தின் கட்டாயம்

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

18 hours 18 minutes ago
ஓம். முன்பும் இந்த அமைப்பு தமது இல்லை என கல்லூரி சொன்ன நியாபகம். அண்ணாமலை விடயம் மட்டும் அல்ல, அதற்கு முன்பும் பலது பிழைத்துள்ளது. எல்லாருமே கருத்து திணிப்புத்தான். தவிர மக்கள் நல்லா பொய் சொல்லுவார்கள் பூத்துக்குள் போய் தமது கைவரிசையை காட்டுவார்கள்😂 விஜை நடித்த படங்களில் பலதும் மொக்கைதான் அதிலும் அதி மொக்கையான படம் என்றால் பத்திரிதான். வசீகரா நல்ல நகைச்சுவை. ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி ஓம் சக்தி பரா சக்தி சஞ்சைக்கு திரிஷா சித்தி

நாட்டுப்பற்று.....

18 hours 42 minutes ago
ஒரு தோட்டாவுக்கு இருக்கும் சக்தியைவிட ஒரு வாக்கிற்கு அதிக சக்தி இருப்பதாக சொல்கிறார்கள். இஸ்ரேல் அவுஸ் போன்ற நாடுகளில் வாக்களிக்காவிட்டால் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன். அமெரிக்காவில் இளம் சந்ததியினர் வாக்கு செலுத்துவது மிகமிக குறைவு.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

18 hours 45 minutes ago
அது உண்மையான லாயெலா கருத்துக்கணிப்பில்லையாமே ...? அந்த கருத்துக்கணிப்பை விட்ட ஆள் கடும் திருவன் ...இவர் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வார் இல்லையென்றால் நான் என் நிறுவனத்தை மூடிவிட்டு போவேன் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்று அடிச்சுவிட்டு இன்றுவரை கடையை சாத்தாமல் போணி பண்ணுகிறார்

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்

19 hours 48 minutes ago
வடக்கு கிழக்கில் முன்பு போர்க்காலத்தில் எரிபொருள் தடை இருந்தது. அக்காலத்தில் எங்கட சனம் துவிச்சக்கரவண்டியில்தான் பெரும்பாலும் வேலைக்கு சென்றார்கள். இப்ப?

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

20 hours 5 minutes ago
நாங்கள் எல்லோரும் ஒயில் விலையில் மினகெட்டு கொண்டு நிக்கிறம். ஆனால் உரத்துக்கு பெரிய தட்டுப்பாடு வரும் போல இருக்கு. அதுவும் வட அரைக்கோளத்தில் பயிரிடும் காலம் வருகிறது. சில வாரங்கள்தான் இடைவெளி. தவறினால் உணவுக்கு தட்டுப்பாடு வரலாம்.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

22 hours 6 minutes ago
அப்பு விஜய்! உனக்கேன் தேவையில்லாத அரசியல் வேலை? என்ன திறமை இருக்கிறது உன்னிடம்? நடிகன் என்று பார்த்தால் எந்த நடிப்புமே பெரிதாக எடுபடவில்லை.மூன்று பாடல் மூன்று சண்டை என பொழுது போக்கு படங்களில் நடித்தவன் நீ.சமூகத்திற்கு நல்லதை சொன்ன கதைப்படங்களும் இல்லை. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என்ற படங்கள் பாடல்களுக்காவே ஓடியவை.கில்லி திரைப்படம் கூட பிரகாஜ்ராஜின் நடிப்பிற்க்காகவும் அவரின் வசனங்களுக்காகவும் திரிஷா கவர்ச்சிக்காகவும் பாடல்களுக்காவும் ஓடியவை என சொல்கிறார்கள். உங்களது சமகால நடிகரான அஜித்.👈 அவர் ஒவ்வொரு படங்களுக்கும் எடுக்கும் முயற்சிகளை பார்.கமலகாசனைப்போல் அவரும் நடிப்பு அரக்கன்.அஜித்திற்கு ரசிகர் மன்றம் இல்லையாகினும் தன்னை சந்திக்க வரும் ரசிகளிர்களிடம் பண்பாகவும் அன்பாகவும் கட்டுப்பாடாகவுமே நடந்து கொள்கிறார்.ஒரு சம்பவத்தில் அவரது ரசிகர் விசில் அடித்ததிற்கே கண்டிப்பான பார்வையை காட்டியவர்.அவர் நடிகர் என்ற வட்டத்தை விட்டு வெளி வந்து உலகளாவிய ரீதியிலும் கார் பந்தய போட்டியில் முன்னணி வகிக்கின்றார்.குடும்பம் பிள்ளைகள் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார்.அந்த மன நிலையும் நடிகர் விஜய் ஆகிய உங்களுக்கு அறவே இல்லை. பிள்ளைகள் தனி வழி. மனைவி தனியே.சொந்த பிள்ளையின் பட்டமளிப்பு விழாவிற்கூட போகவில்லை. அப்படி இருக்கிறது உங்கள் குடும்ப பாசம்.ஒருவேளை நீங்கள் நடித்த அந்த கலியாண எக்ரிமென்ட் படம் போல் வாழ்க்கையாய் இருக்குமோ?😋சினிமா வசனங்களை உங்கள் அரசியலுக்காக எழுதி வைத்து அரசியல் மேடைகளில் படிக்கின்றீர்கள்..இது உங்களிடம் சொந்தமாக எதுவுமே இல்லை என்பதை காட்டுகின்றது.சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😂 நீங்கள் நடிகன் என்ற முறையில் அஜித்தை பார்த்தாவது குடும்பவாழ்க்கை என்னவென்பதை பார்த்து திருந்தியிருக்கலாம்.பெற்ற பிள்ளை தனியே பட்டமளிப்பு விழாவில்....தந்தையோ ரகசிய காதலியுடன் ஒரே வர்ண உடையுடன் உல்லாச கண்கவர் காட்சியளிப்புகள். இந்த சித்திரத்தில் நாட்டுக்கு தலைவன் ஆக ஆசை.😛 அரசியல் என்று பார்த்தால்...அங்கேயும் பூச்சியம் தான். இரண்டரை மணி நேர திரைப்படத்தில் வரும் காட்சி கானங்கள் வரலாறுகள் போல் நிஜ அரசியலிலும் நிஜ வாழ்க்கையிலும் காட்சிப்படுத்த முனைகின்றீர்கள்.மீண்டும் சொல்கிறேன் சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😎 நீங்கள் அரசியலுக்கு வந்து எவ்வளவு காலம்? உங்கள் அரசியல் அனுபவங்கள் என்னென்ன? அரசியலுக்காக பொது மக்களை சந்தித்து பேசியிருக்கின்றீர்களா? பத்திரிக்கையாளர் சந்திப்புகளையாவது நடத்தியிருக்கின்றீர்களா? பனையூரில் இருந்து கொண்டு பத்து பனங்கொட்டையாவது தானம் செய்திருக்கின்றீர்களா? அல்லது தாட்டிருக்கின்றீர்களா? உங்கள் அரசியல் பிரச்சாரத்தை காணவந்த மக்கள், ரசிகர்கள் பலியாகி இருக்கின்றார்களே. உங்களுக்காக வந்தவர்களை ஒரு தடவையாவது போய் சந்தித்திருக்கின்றீகளா? நீங்கள் அந்த மரண பழியை வேறு யார் மேலேயும் சுமத்தினாலும் உங்களை பார்க்க வந்தவர்கள் தானே பலியாகியிருக்கின்றார்கள்.உலக சம்பிரதாயத்திற்காகவது போய் நலம்/துக்கம் விசாரித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் நாட்டுக்கு தலைவன் எனும் சிந்தனை கோமாளித்தனத்தை விட மோசமானது. உங்களை சுற்றி வரும் ரசிகர்கூட்டங்களை வைத்து கணக்கு பண்ணும் விஜய் அவர்களே! நீங்கள் எப்படியோ அதே போல் தான் உங்கள் ரசிகர் பட்டாளமும் வாக்காள பெருமக்களும் என்பதை அவர்களது பகிரங்க பேட்டிகள் சொல்லி நிற்கின்றன. பார்க்கவே கேவலமாக இருக்கின்றது.பொது வெளியில் மனைவி படுக்கை என போட்டி போட்டுக்கொண்டு பேட்டி கொடுக்கின்றார்கள். இதுதான் உங்கள் முதல்வர் கனவுக்கான சித்திரங்கள்....! சிபிஐ க்கு விசாரணைக்கு சென்றுவிட்டு வெளியே வரும்போது ஏதோ விண்வெளியில் ஆராய்ச்சி செய்து விட்டு வந்தவர் போல் கொடுக்கும் பூமழை பிலிங்.....அது விஜய் அண்ணாவால் மட்டுமே முடியும்.அத பார்த்து ஒட்டோ ஓட்டுனர்களும் டாக்ஸி றைவர்களும் பூரித்து பொங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. இன்னும் வரும்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

22 hours 12 minutes ago
எனக்கு தமிழ் நாட்டு அரசியலில் எப்போதும் ஒரே நிலைதான் அண்ணை. அங்கே, அவர்களின் உள்ளூர் அரசியலுக்குள் எம்மை இழுத்து - தமிழ் நாட்டில் எமக்கு எதிரிகளை யார் உருவாக்கினாலும் அவர்களை நான் எதிர்பேன். அந்த வகையில் எனக்கு தமிழ் நாட்டு அரசியலில் சீமான் மட்டுமே எதிரி. அந்த நிலைப்பாட்டில் இருந்து நான் எப்போதும் மாறவில்லை. @வாத்தியார்ண்ணா சீமான் 15% எடுப்பார் என பந்தயம் கட்டி உள்ளார். மிச்சம் ஒருத்தருக்கும் சீமானை நம்பி பந்தயம் கட்ட கூட பயம். ஆனால் தமிழ் நாட்டில் மாற்றம் வருது எண்டு ஆரூடம் சொல்லுவினம்😂 அப்ப நீங்கள் இன்னும் 5 ஆண்டு காலம் திமுக அரசை அனுபவிக்க ஆயத்தமா😂

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

23 hours 48 minutes ago
இந்த விளக்கத்தை உடனே ஏன் கொடுக்கவில்லை; யார்காதில் பூச் சுத்துகிறார்கள். விஜையின் எதிர்பார்ப்புக்கு எடப்பாடி இறங்கிவர மாட்டார். 70 தொகுதிகள் துணை முதல்வர் பதவி எல்லாம் பேராசை.அதிமுக ஆகக்குறைந்தது 160 தொகுகளுக்கு குறையாமல்போட்டியிட வேண்டும்.மிகுதி 64 தொகுதிகளில் பாமாவுக்கு 10 தொகுதிகளுக்கு குறையாமல் கொடுத்தேயாக வேண்டும்.தென்மாவட்ட வாக்குகளுக்காக தினகரக்கும்8-10 கொடுக்க வேண்டும்.வாசனின் தமாகாங்கிரசுக்கு 6 சிறிய கட்சிகளுக்க தலா1 படி 3-4 வரும் மகுதி 34 இல் தான் பாஜக விஜய் எல்லாம். விஜையைக்காட்டி வாசனைச்சமாளிக்கலாம் குறைக்கலாம். ஆனால் பாமகவின் தொகுதி ஒதுக்கீட்டில்கைவைக்க முடியாது. அந்தக் கூட்டணியில்அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி பாமகதான். ஆகவே எடப்பாடியார் விஜை வருவதை விரும்ப மாட்டார். (விஜைக்காக காத்திருந்து அவர்களின் டீல் சரிவராமல்தான் எடப்பாடியார் ஒருவருடத்துக்கு முன்பே பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.விஜைக்காக இறங்கிவரமாட்டார். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை பாஜகதான் உள் ஒதுக்குpடாக விஜைக்கு கொடுக்க வேண்டும். அது விஜைக்கு திருப்தியாக இருக்காது. ஆகலவ தனித்து களம்காண வேண்டியதுதான். சிலவேளைகளில் தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்து கம்னியூஸ்ட்டுகள் வேல் முருகன் பாமக ஐயா அணி சேர்ந்து மக்கள்நலக்கூட்டணி2:0 வரலாம்.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

23 hours 50 minutes ago
தமிழ்நாட்டு தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று IANS நடத்திய கருத்து கணிப்பில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 40 % வரை பெற்று வெற்றி பெறும் என்றும் திமுக 38 % விஜய் கட்சி 15 % வரை என்றும் தெரிவித்துள்ளது. https://www.oneindia.com/chennai/tamil-nadu-election-poll-pre-poll-survey-who-will-win-the-elections-matrize-predictions-out-8028131.html
Checked
Tue, 03/17/2026 - 19:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed