தமிழகச் செய்திகள்

இலங்கை கடற்படை மீது பாஜகவும், காங்கிரஸும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - கச்சத்தீவு விவகாரத்தில் பழ.நெடுமாறன் கேள்வி

1 month 2 weeks ago
03 APR, 2024 | 01:22 PM
image
 

சென்னை: கச்சத்தீவு பற்றி பேசும் பாஜகவும் காங்கிரஸும், மீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து விளக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பெருங்கடலில் செல்லும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சரக்குக் கப்பல்கள், பயணிகள் கப்பல்களைத் தாக்கி கொள்ளையடிக்கும் சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து இக்கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் இந்திய கடற்படை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்கு அமெரிக்க அரசு உட்பட பல நாட்டு அரசுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும்தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுத் தள்ளுகிறது. ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு போவது போல, நமது மீனவர்களைப் பிடித்துக் கொண்டு போகிறார்கள்.

நமது மீனவர்களுக்கு சொந்தமான இயந்திரப் படகுகள், மீன்வலைகள் போன்றவை பறிமுதலும், சேதமும் செய்யப்படுகின்றன. மீனவர்கள் பிடித்த மீன்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. 1983-ம் ஆண்டில் இருந்து கடந்த 40 ஆண்டு காலமாக எவ்வித அச்சமுமில்லாமல் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை வேட்டையாடி வருகிறது. ஆனால், அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்திய கடற்படை இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ராமேசுவரத்துக்கு அருகிலுள்ள மண்டபத்தில் இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன. கடற்படையோ, கடலோரக் காவல்படையோ இதுவரை இலங்கை கடற்படைக்கு எதிராக ஒரு சிறுநடவடிக்கைகூட எடுக்கவில்லை.

தயங்குவது ஏன்?: எங்கேயோ இருக்கிற சோமாலியா நாட்டுக் கடற்கொள்ளையர்களிடம் இருந்து உலக நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்தியக் கடற்படை, இலங்கை கொள்ளையர்களிடம் இருந்து நமது மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யத் தயங்குவது ஏன்?

கச்சத் தீவு பிரச்சினையில் பாஜகவும், காங்கிரஸும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் அத்துமீறி நமது மீனவர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் இதுவரை முன்வராதது ஏன் என்பதுகுறித்து மக்களிடம் இரு கட்சிகளும் விளக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/180297

இலங்கைக் கடற்படை எல்லை தாண்டிச் சென்றா கைது செய்கின்றது?!

இந்தியா நினைத்தால் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீண்டும் கைப்பற்ற முடியுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

1 month 2 weeks ago
கச்சத்தீவு

பட மூலாதாரம்,NARENDRA MODI/FACEBOOK

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சத்தீவு பேசுப்பொருளாக மாறியுள்ளது.

''இந்திய மக்கள் குறித்து சிந்திக்காது காங்கிரஸ் கட்சி கச்சத்தீவை இலங்கைக்கு தரைவார்த்தமை குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது" என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் வலைத்தளத்தில் கடந்த 31ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பில் அனைத்து இந்தியர்களும் கோபமடைந்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி தொடர்பில் தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளில் கச்சத்தீவும் ஒன்றாக காணப்படுகின்றது. இலங்கைக்கு மிகவும் தொலைவிலுள்ள தீவாகவும் கச்சத்தீவு காணப்படுகின்றது. தென்னிந்தியாவின் ராமேஸ்வரம் நகருக்கு மிகவும் அண்மித்த இடத்தில் கச்சத்தீவு அமைந்துள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து கச்சத்தீவிற்கு 24 கிலோமீட்டரே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கச்சத்தீவு 63கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்திய மக்களவைத் தேர்தல் சமயத்தில் இதுகுறித்து சர்ச்சை எழுப்பப்பட்டுள்ள நிலையில், கச்சத்தீவை இலங்கையிடமிருந்து இந்தியா மீண்டும் கையகப்படுத்த முடியுமா?

 
கச்சத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ராமேஸ்வரம் நகருக்கு மிக அருகில் கச்சத்தீவு உள்ளது.

கச்சத்தீவை இலங்கைக்கு கையளித்த ஒப்பந்தம்

கச்சத்தீவின் உரிமை தொடர்பான பிரச்னை வரலாற்று ரீதியாகவே காணப்பட்டது. இந்த நிலையில், இலங்கையின் பிரதமராக பதவி வகித்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கும், இந்திய பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்திக்கும் இடையில் 1974ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26ஆம் தேதி ஒப்பந்தத்தின் ஊடாக கச்சத்தீவு இலங்கைக்கு உரித்தானது.

கச்சத்தீவு இந்தியாவின் பகுதி அல்லவெனவும், அது இலங்கையின் ஒரு பகுதி எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கச்சத்தீவு 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு சொந்தமான நிலையில், கச்சத்தீவு உரிமை மற்றும் கச்சத்தீவு கடல் எல்லை தொடர்பான பிரச்னை 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பித்திலிருந்தே இருந்துள்ளது.

கச்சத்தீவின் உரிமை குறித்து 1921ஆம் ஆண்டு இந்திய மற்றும் இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கச்சத்தீவு பிரித்தானிய ஆட்சி காலத்தில் ராமண்டி கட்டுப்பாட்டில் இருந்தது என இந்த கலந்துரையாடலின் போது இந்திய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவு எந்தவொரு காலத்திலும் இந்தியாவிற்கு சொந்தமானதாக இருக்கவில்லை என இலங்கை பிரதிநிதிகள் கூறியுள்ளனர். 1800ஆம் ஆண்டு காலப் பகுதியில் வரையப்பட்ட வரைப்படமொன்றின் ஊடாக கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1860ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது சிவில் நிர்வாகியாக செயற்பட்ட சேர் ஜேம்ஸ் எமர்சன் வெளியிட்ட சிலோன் என்ற புத்தகத்தில் கச்சத்தீவு வரைப்படம் இடம்பெற்றிருந்ததாக தொல்லியல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

1974ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு மற்றும் கச்சத்தீவு கடல் எல்லை தொடர்பான கடற்றொழில் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்திய மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்து வந்தன.

அத்துடன், 1976ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், கச்சத்தீவை அண்மித்து இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதனால், கச்சத்தீவை தமிழக மக்கள் உரித்தாக்கிக் கொள்வது முக்கியமானது என்கின்றார்கள்.

 
கச்சத்தீவு
இந்திய பொதுத் தேர்தல் 2024

இந்தியாவின் பொதுத் தேர்தல் தொடர்பான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஆரம்பிக்கப்படுவதுடன், ஜுன் மாதம் முதலாம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றது.

இந்த தேர்தல் நடைபெறுகின்ற பின்னணியிலேயே கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வெற்றியை உறுதி செய்துக்கொள்வதற்கு கச்சத்தீவு பிரச்னை முக்கியமானது என சர்வதேச அரசியல் தொடர்பான ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழக வாக்காளர்களுக்கு இடையில் காங்கிரஸ் கட்சி குறித்து எதிர்வலைகளை ஏற்படுத்துகின்றமை மற்றும் பாரதிய ஜனதா கட்சி மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றமை ஆகிய நோக்கில் நரேந்திர மோதி கச்சத்தீவு குறித்து பிரச்னையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச உறவுகள் தொடர்பான ஆராய்ச்சியாளரும், ஆலோசகருமான கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா, பிபிசிக்கு தெரிவிக்கின்றார்.

கச்சத்தீவு
கச்சத்தீவை இந்தியா மீண்டும் கையகப்படுத்த முடியுமா?

கச்சத்தீவு ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு உரித்தானாலும், குறித்த தீவின் உரிமை இந்திய அரசியலமைப்பிலிருந்து நீக்கப்படவில்லை என கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா கூறுகின்றார்.

இதன்படி, கச்சத்தீவை இந்தியாவிற்கு உரித்தாக்கிக் கொள்வதற்கான சில வழிமுறைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''முதலாவது, இந்திய அரசாங்கம் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் தீவின் உரிமையை மீண்டும் பிரச்னையின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

அப்படியில்லையென்றால், ராஜதந்திர கலந்துரையாடல்களின் ஊடாக கச்சத்தீவை மீண்டும் இந்தியா உரித்தாக்கிக் கொள்ள முடியும். அது சிக்கலான விடயம். எவ்வாறாயினும், தேர்தலை இலக்காக கொண்டு நரேந்திர மோதி சில பிரச்னைகளை உருவாக்கினாலும், அவை அதே விதத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என எதிர்பார்க்க முடியாது” என அவர் கூறுகின்றார்.

''இந்த இடத்தில் மற்றுமொரு பிரச்னை காணப்படுகின்றது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என்பதனால், அது தொடர்பில் சீனா அவதானம் செலுத்தியுள்ளது. இந்தியாவிற்கு அது அச்சுறுத்தல் என்பதனால், இந்தியா அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது" என்கிறார் அவர்.

 
கச்சத்தீவு
கச்சத்தீவு இலங்கைக்கு உரித்தாவதன் நன்மைகள்

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதன் ஊடாக சில நன்மைகள் கிடைத்துள்ளன என்று கூறுகின்றார் கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா.

“போர் காலத்தில் இந்த பிரதேசத்தில் மீன்பிடிக்கப்படாதமையினால், அங்கு மீன் வளம் மிகுதியாக காணப்படுவது ஒரு முக்கிய நன்மையாகும். அத்துடன், தற்போது நடத்தப்பட்டுள்ள ஆராய்ச்சியின் ஊடாக எரிவாயு அந்த பகுதியில் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

12 கடல் மைல் தொலைவான கடல் எல்லை நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு நன்மையாகும். கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானதாக இருந்தால், அந்தப் பகுதி மன்னாரில் இருந்து கணக்கிடப்படும்” என கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா தெரிவித்தார்.

அப்படியானால், இலங்கைக்கு சொந்தமான ஆராய்ச்சி பெருங்கடலின் பரப்பளவு குறையும்.

 
கச்சத்தீவு
கச்சத்தீவை இந்தியா உரித்தாக்கிக்கொள்வது இலகுவானதா?

கச்சத்தீவை மீண்டும் உரித்தாக்கிக் கொள்வது மிகவும் இலகுவான விடயம் அல்லவென இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

2014ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய சட்டமா அதிபராக இருந்த முகுல் ரோதாகியினால் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்திடம் எழுப்பப்பட்ட கேள்வியை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த 31ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

''கச்சத்தீவு 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதை இன்று எப்படி மீண்டும் எடுப்பது? கச்சத்தீவை மீண்டும் எடுக்க வேண்டும் என்றால், அது போர் ஒன்றின் ஊடாகவே எடுக்க வேண்டும்", என்பதே அந்தச் செய்தி.

இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் துணைத்தூதர் கூறுவது என்ன?

கச்சத்தீவை திரும்ப பெற முடியுமா என்பது குறித்து யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய முன்னாள் இந்திய துணைத்தூதர் நடராஜன் பிபிசி தமிழிடம் பேசினார்.

“இனிமேல் கச்சத்தீவை திரும்ப பெற்றுவிடலாம் என யாராவது சொன்னால் அது சாத்தியமில்லை என்றுதான் அர்த்தம். கச்சத்தீவு வழக்கை பொறுத்தவரை உச்ச நீதிமன்றமே, ‘அது முடிந்த கதை’ என தீர்ப்பை வழங்கி இருக்கிறது. “ என்றார் நடராஜன்.

“கச்சத்தீவை அப்போதைய பிரதமர், இந்திரா காந்தி கொடுத்தார். மாநில அரசு கச்சத்தீவு விவகாரத்தில் எதுவும் செய்திருக்க முடியாது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் முடிவு. இது நல்ல முடிவாக இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு” ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

“கிட்டத்தட்ட ஏழாயிரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்போது புதிதாக இலங்கை அரசு என்ன செய்கிறது என்றால், மீனவர்கள் மீது எப்.ஐஆர். பதிவு செய்கிறது. வழக்கு பதிந்தால், இந்திய மீனவர்கள் வரமாட்டார்கள் என்பதற்காக இலங்கை அரசு இதைச் செய்கிறது. மீனவர்கள் சிறையிலடைக்கப்பட்டால் , வெளியே எடுப்பது சிரமம். அதனால் தான் இந்த ஆண்டு கச்சத் தீவிலிருக்கும் புனித அந்தோணியார் திருவிழாவிற்கு இந்தியா மீனவர்கள் யாரும் போகவில்லை. மேலும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய போராட்டம் சரியானதே” என்றார்.

கூடுதல் தகவல்கள்: சுதாகர், பிபிசி தமிழுக்காக

https://www.bbc.com/tamil/articles/c4n558we7jwo

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை: தாயகம் திரும்பும் முருகன், பயஸ், ஜெயக்குமார்

1 month 2 weeks ago

Published By: VISHNU   02 APR, 2024 | 08:19 PM

image

ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

நாளை காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவ் மூவரும் வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த குறித்த அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த மாதம் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஏனைய மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், 

இதன்படி மூவரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/180279

கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை

1 month 2 weeks ago
கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை 14-27.jpg

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் இருக்கிறது.

கடந்த 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது கச்சத்தீவு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

நீண்ட காலமாக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சித்ரவதை செய்வதும், சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இதையடுத்து கச்சத்தீவை மீண்டும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர.

ஒவ்வொரு பாாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போதும் கச்சத்தீவு விவகாரத்தை தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகள் கையில் எடுத்து பிரசாரம் செய்து வருகிறது.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்து இருக்கிறது.

இந்த நிலையில் சச்சத்தீவு தொடர்பாக அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கான ஆவணங்களை பெற்ற அண்ணாமலை அதில் கூறப்பட்டுள்ள தகவலை பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1969-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை கொடுக்க எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்போது இந்திரா காந்தி இலங்கையுடன் நல்ல நட்புணர்வுடன் இருக்க விரும்பினார். 1968-ம் ஆண்டு அப்போதைய இலங்கை பிரதமர் டட்லி சேனா நாயக்கா இந்திரா காந்தியுடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். 1973-ம் ஆண்டு கொழும்பில் நடந்த வெளியுறவு செயலர் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது.

1974-ம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடி வருவதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எதையும் தரவில்லை என்றும் கேவல் சிங் தெரிவித்தார்.

அந்த சமயம் கச்சத்தீவை இலங்கை உரிமை கோரிய நிலையில் ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது என்ற ஆவணங்களை தமிழக அரசு காட்டவில்லை.

இறுதியாக 1974-ம் ஆண்டு கச்சச்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்ததாக தகவல் அறியும் உரிமை சட்ட பதிலில் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக இருந்த செனாயும் போட்ட ரகசிய ஒப்பந்தம்தான் கச்சத்தீவு. 1948ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1974ம் ஆண்டு கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. எதற்காக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளோம். இதை படித்தால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும். நேரு பிரதமராக இருந்தபோது பைல் நோட்டிங் எழுதுகிறார். இந்த குட்டி தீவுக்கு நான் எந்தவிதமான மரியாதையும் தரப்போவதில்லை. வேறு ஒரு நாட்டிற்கு தர தயாராக இருக்கின்றேன். இது 10-5-1961 ல் நேரு எழுதிய பைல் நோட்டிங்.

முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சனையை தள்ளி போட்டுக்கொண்டே சென்றார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி இன்று வெளியாகி உள்ளது. நாளை இதன் இரண்டாம் பகுதி வெளியாகும் போது கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேசுவோம். நாட்டின் எல்லையை சுருக்கியது காங்கிரஸ் கட்சி.

1960-ல் இருந்து ஒவ்வொரு செங்கல்லாக பிரித்து கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்துவிட்டது. இன்று வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதல் பகுதி மூலம் காங்கிரஸ் எப்படி துரோகம் செய்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாளை வெளியாகும் இரண்டாவது பகுதியில் கலைஞர் கருணாநிதி செய்த துரோகம் என்ன என்பது தெரியும்.

ஆர்ட்டிக்கிள் 6 ன் படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கலாம் என தெரிவிக்கிறது. ஆனால் தற்போது ஆர்ட்டிக்கிள் 6 இல்லாத காரணத்தினால் மீனவர்கள் தற்போது கச்சத்தீவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நாளை மக்களின் பார்வைக்காக இரண்டு பகுதியாக வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் தருகிறோம்.

கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி தாரை வார்த்து கொடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. எனவே மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது எல்லையை நம் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை நாம் சென்றோம்… ராமநாத சுவாமி கோவில் சிவபெருமானுக்கு நெடுந்தீவிலிருந்து பால் கொண்டுவரப்பட்டது. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம். 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டி எல்லாம் சுற்றி இருக்கிறேன். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

 

https://akkinikkunchu.com/?p=272571

பாலாறு அழியப் போகிறதா? கடும் அச்சத்தில் விவசாயிகள் - தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

1 month 2 weeks ago
காணாமல் போகும் பாலாறு
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுஜாதா
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டை வளப்படுத்தும் முக்கிய ஆறுகளுள் ஒன்றான பாலாறு, கழிவுகள் கலந்து முற்றிலும் காணாமல் போகும் அபாயத்தில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் என்ற இடத்தில் தொடங்கும் பாலாறு, அம்மாநிலத்தில் இருந்து 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ கடந்து தமிழகத்தை வந்தடைகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 222 கி.மீ தூரம் ஓடும் பாலாற்றின் மொத்த நீளம் 348 கி.மீ. தமிழ்நாட்டில் பாலாறு, காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் அருகே முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

பாலாற்றினால் தமிழகத்தில் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைகின்றன. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டும் 150 ஏரிகள், நீர் பெற்று அவற்றின் கீழ் 15 ஆயிரத்து 409 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.

பாலாற்றின் துணை நதிகளாக மலட்டாறு, பொன்னையாறு, சேயாறு, கள்ளாறு ஆகிய ஆறுகள் உள்ளன. பாலாற்றில் மொத்தம் 606 ஆற்றுக் கால்வாய்கள் இருப்பதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக (வட ஆற்காடு மாவட்டம்) ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டம்தான் அதிக அளவில் நெற்பயிரிடும் பகுதியாக இருந்தது. மேலும் தென்னை, வாழை, கரும்பு, கேழ்வரகு, பருத்தி உள்ளிட்ட பல பயிர்களும் பயிரிடப்பட்டிருக்கின்றன.

அத்தகைய சிறப்பு வாய்ந்த பாலாற்றில், பல்வேறு கழிவுகள் கலப்பதால் மோசமான நிலையில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். வேலூர் தொகுதி மக்களின் இந்த முக்கியப் பிரச்னை வரப்போகும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா?

 
பாலாற்றில் கலக்கப்படும் கழிவு நீர்
காணாமல் போகும் பாலாறு

பாலாற்றில் கலக்கப்படும் கழிவுகளில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.

குறிப்பாக வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகள், ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள், உதயந்திரம் பேரூராட்சியின் 15 வார்டுகள், ஜாப்ரபாத், கிரிசமுத்திரம், வளையம்பட்டு ஊராட்சிகளின் ஒட்டு மொத்த கழிவுநீரும் பாலாற்றில்தான் விடப்படுகிறது.

இதுமட்டுமின்றி பாலாற்றின் படுகையில் உள்ள மேலும் சில கிராம ஊராட்சிகளில் இருந்தும் நேரடியாக கழிவு நீர் பாலாற்றில் விடப்படுகிறது. இதேபோல குப்பைகள், தோல் கழிவுகள், மருத்துவக் கழிவுகளையும் கொட்ட பாலாற்றைப் பயன்படுத்துவதாக இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இதனால் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அண்மையில் தமிழ்நாடு அரசு நடத்திய புற்றுநோயைக் கண்டறியும் சோதனையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 541 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பாலாற்றில் கொட்டப்படும் கழிவுகளும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அசோகன் கூறுகிறார்.

தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தோல் தொழிற்சாலைகளால் இந்தப் பகுதிகளில் பெண்கள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 
பாலாற்றை நம்பியுள்ள நாலரை லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்
காணாமல் போகும் பாலாறு

தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்கள் எதிர்ப்பைக் கடந்து 22 தடுப்பணைகளை ஆந்திரா அரசு கட்டியுள்ளது. அதையும் தாண்டி பாலாற்றில் தமிழக விவசாயிகளுக்காக ஆர்ப்பரித்து வரக்கூடிய தண்ணீரில் இதுபோன்ற பொருட்கள் கொட்டியும் தீயிட்டுக் கொளுத்துவதாலும் பாலாறு முற்றிலும் மாசடைகிறது என்கின்றனர் இந்தப் பகுதி விவசாயிகள்.

பாலாற்றில் நடக்கும் இந்த விதிமீறல் தொடர்பாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர் அசோகன் பிபிசியிடம் பேசினார்.

“தமிழகத்தில் 222 கி.மீ. பாய்கின்ற பாலாற்றை நம்பி நாலரை லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இருந்தன. ஆனால் இப்போது இந்தப் பகுதியில் விவசாயம் பல மடங்கு குறைந்துவிட்டது."

பாலாற்றில் உள்ள குரோமியம் கழிவுகளை ஆய்வு செய்து எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறியக்கூட இதுவரை நீர்வளத்துறை அமைச்சகம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பாலாற்றில் உள்ள தண்ணீரில் குடிக்க முடியாத அளவிற்கு உப்பு கலந்துள்ளது. அதை சரி செய்ய தமிழக அரசு எப்போது முன் வரும் என்று தெரியவில்லை என்கிறார் அசோகன்.

“சில வருடங்களுக்கு முன்புவரை பாலாற்றில் எப்பொழுதுமே மணலுக்கு அடியில் ஊற்று வந்து கொண்டிருக்கும். ஆனால் இன்று இந்தப் பகுதியில் அதிக மணல் அள்ளப்படுகிறது. இது நிலத்தடி நீரை மேலும் குறைக்கிறது.“

இதனால் தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக விவசாயிகள், பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 
வெற்றிலைக்குப் புகழ்பெற்ற ஆம்பூர்
காணாமல் போகும் பாலாறு
படக்குறிப்பு,

வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு உறுப்பினர் அசோகன்.

நெல் விவசாயம் தவிர, வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் வெற்றிலை விவசாயம் நடந்த நிலங்கள் அனைத்தும் இப்போது வளமிழந்து பயன்பாடில்லாமல் இருப்பதாக ஆம்பூர் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

”இதனால் வீடுகளில் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கையும் குறைந்து, சராசரியாக ஒரு வீட்டில் ஐந்து கால்நடைகள் இருந்த நிலை மாறி வெகு சில வீடுகளில் மட்டுமே கால்நடைகளை மக்கள் வளர்க்கின்றனர்.”

பாலாற்றில் தண்ணீர் மாசடைந்துள்ளதால், புகழ்பெற்ற ஆம்பூர் சீரக சம்பா அரிசி விவசாயமும் தற்போது இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட தேங்காய் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி முதல் செங்கல்பட்டு வரை பாலாற்றின் படுகையில் இருந்த விளைநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது விவசாயம் நடைபெறவில்லை. பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் வணிகப் பயன்பாட்டு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் முல்லை.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அதிக நிதியை ஒதுக்கி பாலாற்றைக் காப்பாற்றவில்லை என்றால் காலப்போக்கில் பாலாறு காணாமல் போய்விடும் என்று எச்சரிக்கிறார் அசோகன்.

அவரது கூற்றுப்படி, பாலாற்றில் 28 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த அளவீடுகளை வைத்துக்கொண்டு இதுவரை 10 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. "இன்னும் அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகளைக் கட்டினால், வெள்ளம் ஏற்படும்போது வரும் தண்ணீரைச் சேமித்து பாலாற்றில் நிலத்தடி நீரை அதிகரிக்க முடியும். அதனால் விவசாயமும் இந்தப் பகுதியில் வளம் பெறும்."

காணாமல் போகும் பாலாறு
தொன்மையான ஆறு

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் முல்லை பிபிசியிடம் பேசியபோது, “பாலாறு இருக்கின்ற ஆறுகளிலேயே மிகவும் தொன்மையானது. பாலாற்றை நம்பித்தான் குடிநீருக்காக இருக்கிறோம். ரயில் நீர் என்று சொல்லி கோடிக்கணக்கான நீரை சதுரங்கப்பட்டணத்திற்குப் பக்கத்தில் இருந்து எடுத்து வருகிறார்கள்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு பாலாற்றில் இருந்துதான் தண்ணீரை உபயோகம் செய்து வருகின்றனர்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பாலாறு. ஒரு லட்சம் முதல் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி அளிக்கிறது. பாலாற்றைப் பாதுகாத்தால் மட்டும்தான் தமிழகத்தின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும். கூட்டுக் குடிநீரை சென்னை வரை எடுத்துக்கொண்டு போனது அனைத்துமே ரசாயனம் கலந்த தண்ணீர். அனைத்து கழிவுகளும் பாலாற்றில் கலக்கப்படுகிறது.

கிருஷ்ணா நீரை ஆந்திர மாநிலத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து வரக்கூடிய உபரி நீரைச் சேமித்து வைப்பதற்காக தற்பொழுது தடுப்பணை கட்டி வருகின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் தமிழகத்திற்கு சுத்தமாக தண்ணீர் வராது.

காவிரிக்கு ஒப்பந்தம் போட்டது போன்று ஆந்திரா அரசுடன் தமிழக அரசு 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட ஒப்பந்தம் போட வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

வாணியம்பாடி நகராட்சியிடம் இந்தப் பிரச்னை தொடர்பாக கருத்து கேட்டபோது, 37 கோடி ரூபாய்க்கு 83 கி.மீ. தொலைவில் 7 இடங்கள் கண்டறியப்பட்டு ஆறு மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை அமைப்பதற்கான இரண்டு ஏக்கர் இடம் வேண்டி மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி தெரிவித்தது.

மேலும் வாகனங்களில் சேமிக்கப்படும் மலக்கழிவுகள் சுத்திகரிக்கப்படுவதற்காக 49 லட்சம் மதிப்பீட்டில் வளையம்பட்டு பகுதியில் 30 எம்எல்சி (Mlc) கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு, 10 எம்எல்சி தற்பொழுது முடிக்கப்பட்டு ஒரு மாத காலத்தில் பயன்பாட்டிற்கு வருவதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போகும் பாலாறு
துரைமுருகனின் பதில்

பாலாற்றில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து பிபிசியிடம் பேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கோபாலகிருஷ்ணன், "நகராட்சிகளுக்கு கழிவுநீரை வெளியேற்ற வேறு வழியில்லாததால் பாலாற்றில் கொட்டுகின்றனர். ஆனால் இப்போது ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் பாதாள சாக்கடை திட்டம் வரவுள்ளது.

ஆம்பூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. வாணியம்பாடியில் இதற்கான பணிகள் பேச்சுவார்த்தை அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மூன்று முறை கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக" கூறினார்.

தோல் கழிவுகள் தொடர்பான கழிவுகளைக் கொட்டும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரச்னையைக் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

"பாலாற்றை மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலரசம்பட்டி, கோவிந்தம்பாடி, செம்பாக்கம், அரும்பருத்தி, பொய்கையில் இறையன்காடு பகுதியில் தடுப்புச் சுவர் கட்டப்பட உள்ளது. கோட்டாறு பகுதி ஆறு தடுப்பணைகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.

அதில் தற்போது வரை மூன்று தடுப்பணைகளின் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள மூன்று தடுப்பணைகளின் பணி நடந்து வருவதாக வேலூர் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன் பிபிசியிடம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாலாறு மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கும் நிதிகளின் அடிப்படையில் பணிகள் நடந்து வருவதாக" தெரிவித்தார்.

காணாமல் போகும் பாலாறு

பாலாறு மேம்பாடு தொடர்பாகப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "பாலாற்றில் மழை அதிகம் பெய்தால் மட்டுமே வெள்ளம் வரும். மற்ற நேரங்களில் பாலாறு, காலியாகத்தான் இருக்கும். தென்பெண்ணையாற்றில் வெள்ளம் வரும்பொழுது, வெள்ளநீர் சாத்தனூருக்குச் சென்று அங்கிருந்து கடலில் கலக்கிறது.

அப்படிப் போகிற வெள்ளத்தின் ஒரு பகுதியை காக்கங்கரை ஏரிக்குக் கொண்டு வந்து அங்கிருந்து கால்வாய் மூலமாகப் பாலாற்றில் சேர்த்து விட்டால் வருடம் முழுவதும் பாலாற்றில் நீர் இருக்கும். இத்திட்டம் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்,” என வாணியம்பாடியில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசினார்.

https://www.bbc.com/tamil/articles/c51mx72mnj8o

தொடர் பின்னடைவுகளை ம.தி.மு.க சந்திக்கக் காரணமான வைகோவின் மோசமான முடிவுகள்

1 month 3 weeks ago
  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன

ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம்.

மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது.

தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது.

வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு
ம.தி.மு.கவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்படுவது ஏன்

தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின.

இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார்.

இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள்.

காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர்.

இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர்.

இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார்.

இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ.

மதிமுகவும் பம்பரச் சின்னமும்
ம.தி.மு.கவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்படுவது ஏன்

ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை.

முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன.

இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர்.

ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது.

மீண்டும் திமுகவுடன் கூட்டணி
ம.தி.மு.கவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்படுவது ஏன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது.

எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது.

கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ.

இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ.

முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ.

ம.தி.மு.கவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்படுவது ஏன்

பட மூலாதாரம்,வைகோ

பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு.

இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ.

அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.

கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ.

வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ.

அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி
ம.தி.மு.கவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்படுவது ஏன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது.

இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது.

கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது.

ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது.

ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன?
ம.தி.மு.கவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்படுவது ஏன்

ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

"வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார்.

கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன்.

அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

"அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

"வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன்.

தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும்.

ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்

மருத்துவமனையை கட்டிக் கொடுக்கும் வரை செங்கல்லை கீழே வைக்க மாட்டேன் – உதயநிதி

1 month 3 weeks ago
1711441778213481-750x375.jpg மருத்துவமனையை கட்டிக் கொடுக்கும் வரை செங்கல்லை கீழே வைக்க மாட்டேன் – உதயநிதி

மத்திய அரசு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுக்கும் வரை செங்கல்லை கீழே வைக்க மாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவதித்துள்ளார்.

திருவண்ணாமலையில், திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுடைய பெண்களுக்கான, வங்கிக் கணக்குகளுக்கு 1000 ரூபாய் நிச்சயம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் முடிந்தவுடன், இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1375113

முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!

1 month 3 weeks ago
news-7.jpg

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தமிழக அரசு சென்னை மேல்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன் தமக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

லண்டனில் உள்ள தமது மகளுடன் வசிப்பதற்காக தாம் விசா பெற போவதாகவும் அதற்கு விண்ணப்பிக்க வேண்டுமாயின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயமாகும் எனவும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தமக்கு உரிய அடையாள அட்டையை வழங்குமாறு மறுவாழ்வு பணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் முருகன் கோரியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று, நீதிபதிகளான ஆர்.சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது. முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தமிழக அரசு சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி இதன்போது தெரிவித்துள்ளார்.

குறித்த மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்காக மத்திய அரசிற்கு நேற்று கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒரு வாரத்திற்குள் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் சட்டத்தரணி மன்றுரைத்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு அனுமதி அளிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதிகள், இலங்கை உயர்ஸ்தானிகரகத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை தேவையில்லை என அறிவித்து முருகனின் மனுவை நிறைவு செய்து உத்தரவிட்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://thinakkural.lk/article/297165

மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?

1 month 3 weeks ago
கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது? விஷம் குடிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டது ஏன்? முழு பின்னணி
கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த் மற்றும் கலைவாணி பன்னீர்செல்வம்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 24 மார்ச் 2024

ஈரோடு மக்களவைத் தொகுதியின் ம.தி.மு.க சிட்டிங் எம்.பி கணேசமூர்த்தி, உடல்நலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகிய இருவருமே மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர். கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்து அவர் என்ன சொன்னார்? கணேசமூர்த்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வைகோ கூறியது என்ன? கணேசமூர்த்தி சாப்பிட்ட விஷம் எப்படிப்பட்டது? விஷ முறிவு மருத்துவர்கள் கூறுவது என்ன?

என்ன நடந்தது?

மதிமுக தொடங்கியது முதலே அதன் மூத்த தலைவராக, கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவுக்கு பக்கபலமாக தொடர்ந்து இருந்து வந்தவர் கணேசமூர்த்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு வழங்கப்பட்ட ஒரே தொகுதியிலும் அவரையே அக்கட்சி நிறுத்தியது. தற்போதைய ஈரோடு தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்திக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்று மார்ச் 24ம் தேதி காலையில் கணேசமூர்த்தி விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவரது உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே சிகிச்சைக்குப் பிறகு, உயர் சிகிச்சைக்காக கணேசமூர்த்தி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வைகோ நேரில் நலம் விசாரித்தார்

கோவையில் எம்.பி. கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் உயிராக நேசித்த, கண்ணின் மணியாக திகழ்ந்த ஆருயிர் சகோதரர் கணேச மூர்த்தி, தியாகராயர் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே தொடர்பில் உள்ளார்.

மாணவர் அணியிலிருந்த அவர், சட்டமன்ற உறுப்பினராகி மக்களின் அன்பை பெற்றார். நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தன்னுடைய கடமைகளை சிறப்பாகவே செய்தார். இம்முறை கட்சியிலே அனைவரும் சேர்ந்து துரை வைகோவை (நாடாளுமன்றம்) அனுப்ப வேண்டும், கணேச மூர்த்திக்கு அடுத்த முறை சான்ஸ் பார்ப்போம் என்றனர்.

நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் ஓட்டெடுப்பு எல்லாம் நடந்தது.

99% அவரை (துரை வைகோ) நிறுத்த வேண்டும் என்றனர். இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர்.

அதன்படியே செய்ய நினைத்தேன். அப்படியே வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்எல்ஏ ஆக்கி விட்டு, அதன் பிறகு தளபதி ஸ்டாலினிடம் கூறி அதைவிட ஒரு பெரிய பதவியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்கலாம் என்று இருந்தேன். அதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என்றேன்.

இத்தனைக்கும் பிறகும் அவர் நன்றாக பேசினார். பிரியமாகவே பேசினார். மகன், மகளிடமும் நன்றாகத் தான் பேசியிருக்கிறார். இன்று காலை 10 நிமிடம் மகளிடம் பேசியிருக்கிறார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவரது பேச்சில் எந்தவித பதற்றமும், சோகத்தில் இருப்பதாக அறிகுறியோ தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினர்.

அதன் பின்னர் தான் அவர் தென்னை மரத்துக்கு போடும் நஞ்சை கலக்கி குடித்திருக்கிரார். அங்கு வந்த கபிலனிடம் 'இதை குடித்து விட்டேன், நான் போய் வருகிறேன்' எனக் கூறியுள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று செய்ய வேண்டிய முதன்மையான முதலுதவிகள் அனைத்தும் செய்து விட்டனர்." என்றார்.

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மருத்துவ தலைமை நிபுணர் என்ன கூறினார்?

கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டிருக்கும் கே எம் சி ஹெச் மருத்துவமனையின் தலைமை மருத்துவ நிபுணரிடம் கணேச மூர்த்தியின் உடல்நிலை குறித்து வைகோ கேட்டறிந்துள்ளார். அப்போது மருத்துவ நிபுணர் பகிர்ந்து கொண்ட தகவல்களாக வைகோ கூறுகையில், "முதலுதவி சரியாக செய்ததால் தான் நாங்கள் இங்கு வைத்து சிகிச்சை அளிக்க முடிகிறது. 50க்கு 50 வாய்ப்புள்ளது. இது மாதிரியான நிலையில் ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம்.

அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றை பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும் போதும் ரத்த அழுத்தம் குறைவதால் அவரை செடேசன் என்ற மயக்க மருந்தில் வைத்திருக்கிறோம். ஆதலால் நம்பிக்கையோடு இருப்போம். 2 நாள் சென்ற பின் எதையும் கூற முடியும். விஷ முறிவுக்கான சிகிச்சையும் எக்கோவும் கொடுக்கப்படுகிறது." என்று தெரிவித்தார்.

துரை வைகோ நேரில் நலம் விசாரித்தார்

கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்ற தகவல் கிடைத்ததும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ உடனே கோவை விரைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கணேசமூர்த்தியை இரவில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்தும், அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும் பதிலளித்தார்.

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

துரை வைகோ, ம.தி.மு.க முதன்மைச் செயலாளர்

‘கணேசமூர்த்தி கவலைக்கிடமாக உள்ளார்’

கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்துப் பேசிய துரை வைகோ, ‘‘நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினர்.

அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். 48 மணி நேரத்திற்கு பின் தான் அவரது உடல் நிலை குறித்து சொல்ல முடியுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,’’ என்றார்.

தேர்தலில் சீட் கிடைக்காததால் தற்கொலை முயற்சியா?

கணேசமூர்த்தியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் துரை வைகோவிடம் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், "கணேசமூர்த்தியை சந்தித்த போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் பேசினேன். தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காதது குறித்து கணேசமூர்த்தி என்னிடம் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லி கணேசமூர்த்திக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். அதற்குள் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது" என்று துரை வைகோ தெரிவித்தார்.

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
தனியார் மருத்துவமனை கூறியது என்ன?

கணேசமூர்த்தியை அவரது உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்தான் முதலில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்குள்ள மருத்துவப் பணியாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "காலை 11 மணிக்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது கணேசமூர்த்தி சுயநினைவுடன்தான் இருந்தார். காலை 10 மணிக்கு அவர் விஷம் குடித்தார் என்று உறவினர்கள் கூறினார்கள். விஷத்தை தண்ணீரில் கலந்து அவர் குடித்துவிட்டதாக உறவினர்கள் கூறினர்.

விஷம் குடித்திருந்ததால் அவரது வயிற்றை மருத்துவமனையில் சுத்தம் செய்தார்கள். அப்போது அவரது இதயத்துடிப்பு வெகுவாக குறைந்துவிட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்" என்று கூறினார்.

விஷ முறிவு சிகிச்சையின் போது என்ன நடக்கும்?

ஒரு மனிதனின் உடலுக்குள் விஷம் நுழைந்தால், மருத்துவர்கள் அந்த விஷத்தை முறிக்க என்னென்ன செய்வார்கள் என விளக்கினார் தடயவியல் துறையின் விஷ முறிவு மேலாண்மை நிபுணர். பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறுகையில்,

“எம்.பி. கணேஷமூர்த்தி உட்கொண்டது மாத்திரையின் ஜெனரிக் பெயர் கிடைத்தால்தான், அதன் பண்புகள், உடலில் கலந்து விஷமாக மாற எடுத்துக் கொள்ளும் நேரம் பற்றி தெரியும். ஆயினும் பொதுவாக விஷமுறிவைப் பொறுத்தவரை நேர மேலாண்மேதான் முக்கியம்” என்றார்.

"ஒருவர் வாய் வழியாகவோ, ஊசி வழியாகவோ, வாய்க்குள் வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல முறைகளில் விஷத்தை உட்கொண்டால் உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம்.

அவர் ஒரு மணி நேரத்துக்குள் மருத்துமனைக்கு அழைத்து வரப்பட்டுவிட்டால், உணவுக்குழாய், குடல் ஆகியவை சுத்தம் செய்யப்படும்.

அதுவே 3 முதல் 4 மணி நேரமாக ஆகியிருந்தால், நோயாளிக்கு ஏற்படும் அறிகுறிகளைப் பொறுத்தே விஷத்தின் மாதிரி அறியப்படும்.

நோயாளிக்கு ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, இருதயத் துடிப்பு குறைவது, சுயநினைவு இழத்தல், வலிப்பு உள்ளிட்டவற்றை வைத்து என்ன மாதிரியான விஷம் என அறிய வாய்ப்பு உண்டு,

சிறுகுடல் 8 மீட்டர் நீளம் கொண்டது. 4 மணி நேரத்துக்கும் மேல் ஆகியிருந்தால் அதில் 6 மீட்டர் அளவுக்கு விஷம் பரவி குடலில் ஓட்டியிருக்கும்.

இதையடுத்து நேரம் ஆக ஆக, அது பெருங்குடல் உள்ளிட்ட பல உறுப்புக்களில் பரவக்கூடும்.

வயிற்றைச் சுத்தம் செய்யும்போது, மெக்கானைஸ்ட் வடிவில் உள்ள சார்கோல் பயன்படுத்தும்போது, வயிற்றின் குடல்பகுதியில் விஷம் ஒட்டிக்கொள்ளாதபடி அகற்ற உதவும்.

இந்த முறை குடலில் ஓட்டியிருக்கும் 70-80% விஷத்தை வெளியேற்ற உதவும்.

அதை விட நேரம் அதிகம் கடந்து விட்டால், கூடிய விரைவில் உரிய மருந்துகளை வைத்து குடலைக் கழுவி சுத்தம் செய்வதோடு பிற வகை சிகிச்சைகளும் பின்பற்றப்படும்.

மலம் மற்றும் சோடா பை கார்பனேட் கொண்டு சிறுநீர் வழியாகவும் விஷத்தை முறித்து உடலில் இருந்து வெளியேற்றப்படும்.

ஒருவேளை சுயநினைவிழந்திருந்தாலோ, விஷமானது ரத்தத்தில் கலந்து இருந்தாலோ, ஹீமோ டயாலிசிஸ், ஹீமோ ஃபில்ட்ரேசன், ஹீமோ பர்ஃப்யூசன் ஆகிய முறைகளில் ரத்தத்தில் இருந்து அகற்றப்படும்." என்று தெரிவித்தார்.

யார் இந்த கணேசமூர்த்தி?

ஈரோட்டைச் சேர்ந்தவரான கணேசமூர்த்தி (77), இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை சட்டம் படித்துள்ளார். விவசாயத்தை அடிப்படைத் தொழிலாக வைத்துள்ள இவர் ம.தி.மு.கவின் மூத்த தலைவர்களுள் ஒருவராக உள்ளார். கணேசமூர்த்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் தி.மு.க கூட்டணியில் அக்கட்சியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது எம்.பியாக உள்ளார்.

பல ஆண்டுகளாக அவர் ம.தி.மு.கவில் இருந்தாலும், இவரின் அரசியல் வாழ்க்கை தி.மு.கவில் இருந்து தான் துவங்கியது. ம.தி.மு.க தொடங்குவதற்கு முன்பு பல ஆண்டுகளாக தி.மு.கவில் இருந்த கணேசமூர்த்திக்கு தி.மு.க மேலிடம் 1984ல் ஈரோடு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியது. அதன்பின், படிப்படியாக அவரது செல்வாக்கு உயர்ந்த நிலையில், தி.மு.க மேலிட உத்தரவுப்படி 1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்பின், 1993ம் ஆண்டு தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறிய போது அவருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.கவில் இருந்து வெளியேறிய கணேசமூர்த்தி, ம.தி.மு.கவில் இணைந்தார். 1998ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பழநி தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
மூன்று முறை எம்.பி!

1998 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப்பின், 2006ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெள்ளகோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையிலும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இவருக்கு 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். இந்தத்தேர்தலில் வெற்றி பெற்ற கணேசமூர்த்திக்கு அதன்பின் நடந்த, 2014 மக்களவை தேர்தலிலும் ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் கணேசமூர்த்தி தோல்வி அடைந்தார்.

அதன்பின், 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும், ஈரோடு தொகுதியில் போட்டியிட ம.தி.மு.கவினர் வாய்ப்பு வழங்கிய நிலையில், அதில் வெற்றி பெற்று தற்போது ‘சிட்டிங்’ எம்.பியாக உள்ளார். மக்களவைத் தேர்தல்களில் எப்போது தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் வைகோ, கணேசமூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்து வந்துள்ளார்.

ஒரு முறை, எம்.எல்.ஏ, மூன்று முறை ஈரோடு எம்.பி பதவியை பெற்றுள்ள கணேசமூர்த்தி, கடந்த 30 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் ம.தி.மு.கவிற்கென தனிச்செல்வாக்கை உருவாக்கியுள்ளார்.

30 ஆண்டுகளாக வைகோவின் தீவிர ஆதரவாளர்!

தேர்தல்களில் வெற்றி ஒருபுறம் இருந்தாலும், ம.தி.மு.க கட்சியில் பொருளாளர் பதவியையும் வகித்து, பல ஆண்டுகளாக வைகோவின் தீவிர ஆதரவாளராக விசுவாசியாக இருக்கிறார்.

ம.தி.மு.கவில் இருந்து பலர் வெளியேறி தி.மு.கவில் இணைந்தபோதும் கூட, 1993 முதல் இன்று வரையில் கணேசமூர்த்தி ம.தி.மு.கவில் வைகோவின் தீவிர ஆதரவாளராகத்தான் வலம் வருகிறார்.

தற்போதைய தேர்தலிலும் கணேசமூர்த்தி, ம.தி.மு.க சார்பில் ஈரோடு தொகுதியி்ல போட்டியிடுவார் என, கணேசமூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தி.மு.கவினர் இந்த முறை ம.தி.மு.கவிற்கு திருச்சி தொகுதியை மட்டுமே ஒதுக்கியதால், கணேசமூர்த்தி மனவிரக்தியில் இருந்ததாக, அந்தக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c723jlpgkxmo

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 3

23 MAR, 2024 | 11:22 AM
image
 

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர். 

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரியும் படகுகளை மீட்கக் கோரியும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. 

மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 800-கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. 

மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்காதபட்சத்தில் ஏப்ரல்-8ல் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/179491

நாமக்கல்: பட்டியலின சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த விவகாரம் - உண்மையில் என்ன நடந்தது?

1 month 3 weeks ago
பட்டியலின சிறுவர்களுக்கு முடி வெட்ட மறுத்த சலூன் கடை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுதாகர் பாலசுந்தரம்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 22 மார்ச் 2024

ஊர் கட்டுபாடு என்னும் பெயரில் தொடரும் சாதிய வன்கொடுமையால் இரண்டு பட்டியலின சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுக்கப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடை உரிமையாளர் உட்பட மூன்று பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள திருமலைப்பட்டி காமராசர் காலணியைச் சேர்ந்தவர் 33 வயதான அருள்பாண்டியன். தனியார் நிறுவன ஊழியரான இவர், தன்னுடைய இரண்டு மகன்கள் மற்றும் மனைவியுடன் இந்த ஊரில் வசித்து வருகிறார்.

கடந்த ஞாயிறன்று, மதியம் 1 மணியளவில், தனது இரு மகன்களையும் முடிவெட்டுவதற்காக தனது ஊருக்கு அருகேயுள்ள தெவ்வாய்பட்டி கிராமத்திலுள்ள சலூன் கடைக்கு அனுப்பியுள்ளார் அருள்பாண்டியன்.

 

அங்கு சென்ற சிறுவர்களிடம், சலூன் கடையின் உரிமையாளர் சிட்டு, கோவிலுக்குப் போவதால், கடையைப் பூட்டுவுள்ளதாகக் கூறி சிறுவர்கள் இருவரையும் திருப்பி அனுப்பியுள்ளார். இந்தத் தகவலை வீட்டுக்குத் திரும்பிய சிறுவர்கள் தனது தந்தையிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அன்று மாலை, அருள்பாண்டியன் தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் சிட்டுவின் முடிவெட்டும் கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது மூடுவதாகக் கூறப்பட்ட கடை திறந்து இருந்தது. கடையின் உரிமையாளர் சிட்டு ஒருவருக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது தனது மகன்களுக்கு முடிவெட்ட வேண்டும் என்று அருள்பாண்டியன் கேட்டபோது, கடை உரிமையாளர் முடிவெட்ட மறுத்துள்ளார்.

“எனது மகனுக்கு முடிவெட்ட வேண்டும் என்று நான் சிட்டுவிடம் கேட்டபோது, உங்களுக்கெல்லாம் முடிவெட்ட முடியாது. ஊர் கட்டுப்பாடு அப்படி இருக்கிறது. மீறி வெட்டினால் பஞ்சாயத்தில் கடையை மூடிவிடுவார்கள் என கடை உரிமையாளர் என்னிடம் சொன்னார்,” என்று பிபிசியிடம் பேசிய அருள்பாண்டியன் தெரிவித்தார்.

 
வழக்குப் பதிவு செய்த காவல்துறை
பட்டியலின சிறுவர்களுக்கு முடி வெட்ட மறுத்த சலூன் கடை

சாதியை முன்வைத்து, சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த விவகாரத்தில், அருள்பாண்டியன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் கடந்த 17ஆம் தேதி புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, சலூன் கடை உரிமையாளர் சிட்டுவை கைது செய்தது.

இவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தல், அவமானப்படுத்தும் நோக்கத்தோடு அவமரியாதை செய்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மேலும் பட்டியிலினத்தவர்களுக்கு முடிவெட்டக்கூடாது என்று கிராமத்தில் கட்டுப்பாடு உள்ளது என்று கூறி சலூன் கடை உரிமையாளரை மிரட்டியதாக இந்த வழக்கில் மேலும் இரண்டும் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிட்டு கைதான நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சமூகத்தினரின் மிரட்டலுக்குப் பயந்து தனது கணவர் முடிவெட்ட மறுத்ததாகவும், இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று சிட்டுவின் மனைவி தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறும்போது, அருள்பாண்டியன் புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவில் இவ்வழக்கு பதியப்பட்டுள்ளது.

அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடிவெட்டக் கூடாது என சலூன் கடை உரிமையாளரை மிரட்டிய ஆதிக்க சாதியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ராஜேஷ்குமார்(35), பால்காரர் செல்வராசு(52) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம மக்களிடம் பேச பிபிசி முயற்சி செய்தது. ஆனால் காவல்துறை கைது நடவடிக்கைக்குப் பயந்து யாரும் பேச முன்வரவில்லை.

 
தொடரும் அவலம்
பட்டியலின சிறுவர்களுக்கு முடி வெட்ட மறுத்த சலூன் கடை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

"சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் நடப்பது வேதனையளிக்கிறது. இன்னொரு மனிதனுடைய சுயமரியாதையை கேவலப்படுத்துவதற்காக சக விளிம்புநிலை சமூகங்களில் இருப்பவர்களையே கருவியாகப் பயன்படுத்துவது இந்த நாடு இன்றும் ஜனநாயகப்படவில்லை என்பதையே காட்டுகிறது," என்றார் பழங்குடியின செயற்பாட்டாளர் வழக்கறிஞர் பாலமுருகன்.

இதுகுறித்துப் பேசிய சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், "இன்றைய காலகட்டத்தில் நேரடியான சாதிய தீண்டாமைகளுக்கு மாற்றாக நவீன தீண்டாமைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற நேரடியான தீண்டாமை வடிவங்கள் தமிழக கிராமங்களில் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.

ஒரு மனிதன் பயன்படுத்திய பொருளை, இடத்தை, கடையை நான் பயன்படுத்த மாட்டேன் எனச் சொல்லி பட்டியிலின மக்களை ஒதுக்கி வைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு விரிவான ஆய்வு மேற்கொண்டு தீண்டாமை கொடுமைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்," என்றார்.

ராசிபுரம் சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய ஆணையர் டாக்டர் ரவிவர்மன் பிபிசியிடம் பேசினார்.

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு முடிவெட்ட மறுப்பது தொடர்பான வழக்குகள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே பதிவாகின்றன. கடந்த மாதம் சேலம் கொளத்தூர் அருகே முடிவெட்டுவது தொடர்பாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில், சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

பட்டியலின சிறுவர்களுக்கு முடி வெட்ட மறுத்த சலூன் கடை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

“காவேரிபுரம் பேருந்து நிறுத்தத்தில் ரமேஷ் என்பவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். அவர் அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு முடிதிருத்தம் செய்வதில்லை என்ற புகார் வந்தது. இதுகுறித்து விசாரணை செய்தபோது உங்களுக்கு வெட்டினால், உயர் சாதியினர் என்னிடம் முடிவெட்ட வர மாட்டார்கள் என்றார் அந்த கடைக்காரர். வேண்டுமென்றால் வழக்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்."

இதுபோல பல ஊர்களின் நடந்தாலும், பெரியளவில் அந்தச் சம்பவங்கள் வெளிவருவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் குறித்துப் புகார் அளித்தால் மட்டுமே தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், நேரடியாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்று ரவிவர்மன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் திருப்பூர், கோயமுத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு நாமக்கல், கரூர், ஒரத்தநாடு, உள்ளிட்ட பகுதியில் அதிகளவில் பட்டியலின மக்களுக்கு முடிவெட்டாமல் புறக்கணிக்கப்படுவதாக தகவல் வருகின்றன. ஆனால் இங்கு யாரும் புகாரளிக்க முன்வருவதில்லை என்றார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடிவெட்ட மறுத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,20,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும். எஃப்.ஐ.ஆர் போட்டவுடன் 25% தொகையும், குற்றப் பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்பு 50% தொகையும், நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் 25% தொகை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ராசிபுரம் விவகாரத்தில், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நேரடியாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியாது. தேர்தல் முடிந்ததும், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டில் இதுவரை முடிவெட்ட மறுத்தல் தொடர்பாக கொளத்தூர் மற்றும் நாமக்கல் என இரு வழக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c970n3765z5o

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில் மக்கள் - பிபிசி கள ஆய்வு

1 month 3 weeks ago
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில் மக்கள்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 21 மார்ச் 2024

சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 600 நாட்களைக் கடந்திருக்கிறது. திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகச் சொல்கிறார்கள் கிராமத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உத்தேசிக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்க்கும் போராட்டம் பெரிய ஊடக கவனம் இன்றி 600 நாட்களைக் கடந்திருக்கிறது. 600வது நாள் போராட்டத்தை கடந்த சனிக்கிழமையன்று ஒப்பாரிப் போராட்டமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் விவசாயிகள்.

சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பரந்தூர். இந்த பரந்தூர் கிராமம் உள்பட அருகில் உள்ள 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகளைக் கையகப்படுத்தி புதிய விமான நிலையத்தை அமைக்க அரசு உத்தேசித்திருக்கிறது.

சென்னை விமான நிலையத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியாது என்பதால் அதற்கு இணையாக ஒரு விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்பது நீண்ட காலமாகவே, கிட்டத்தட்ட 80களில் இருந்தே உத்தேசிக்கப்பட்டு வந்தது. இதற்காக போரூர், ஸ்ரீபெரும்புதூர் என பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டுவந்தன. இறுதியாக தற்போது பரந்தூர் பகுதி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்தத் திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் அறிவிப்புச் செய்யப்பட்டது. பரந்தூரில் அமையவிருக்கும் இந்த புதிய விமான நிலையத்தில் இரண்டு ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்புப் பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் ஆகியவை இடம்பெறும் எனக் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரந்தூர், வளத்தூர், பொடவூர், நல்வாய், தண்டலம், மடப்புரம், தொடரூர், சிங்கிலிபாடி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் நிலங்களில் 4791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 3,466 ஏக்கர் நிலம் நன்செய் விவசாய நிலம். 1,317 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் ஏரி, குளம், குட்டை, கால்வாய்கள் போன்றவை அமைந்துள்ளன.

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இப்பகுதி மக்கள் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இந்தத் திட்டத்திற்காக முழுமையாக கையகப்படுத்தப்படவிருக்கும் ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

 
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில் மக்கள்
"எத்தனை லட்சம் தந்தாலும் வேண்டாம்"

திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஏகனாபுரம் மக்களின் நிம்மதி பறிபோயிருக்கிறது. தினமும் இரவு நேரங்களில் இந்தத் திட்டத்தை எதிர்த்து கூட்டம் நடத்துவது, கிராம பஞ்சாயத்துகளில் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவது, கிராமசபை கூட்டங்களைப் புறக்கணிப்பது என பல வகைகளிலும் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர்.

இருந்தபோதும், இந்தத் திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்வது இவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் 600-ஆவது நாள் போராட்டத்தை, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒப்பாரிப் போராட்டமாக நடத்தினர். போராட்டம் நடந்த சனிக்கிழமையன்று, பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் பெரிய அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

அன்று மட்டுமல்ல, பெரிய அளவில் போராட்டம் நடக்கும் தினங்களில், இந்தப் பகுதி முழுமையாக காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது. இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில்கூடி போராட்டம் நடத்துவது பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. அந்தந்த கிராமங்களிலேயே போராட்டம் நடத்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆனால், இப்பகுதி மக்கள் இந்த விவகாரத்தை அப்படியே விடுவதாக இல்லை. ஏகனாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு இங்கே வெறும் 53 சென்ட் நிலம்தான் இருக்கிறது. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் நெல் தனக்கு வருடம் முழுவதும் போதுமானதாக இருக்கிறது என்கிறார் அவர். அந்த நிலத்தை பிடுங்கிக்கொண்டுவிட்டு, எத்தனை லட்சம் தந்தாலும் அது தனக்கு தேவையில்லை என்கிறார் அவர்.

"இது டெல்டா மாவட்டங்களைப் போல ஆற்றை நம்பியிருக்கும் பாசனப்பகுதி அல்ல. ஏரியில் தண்ணீரை நிரப்பி, அதன்மூலம் விவசாயம் செய்துவருகிறது. அரசின் எந்த உதவியும் இல்லாமல் வாழ்ந்துவருகிறோம். இதை எடுத்துக்கொண்டு அவர்களால் எத்தனை கோடி தர முடியும்?" என்கிறார் அவர்.

 
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில் மக்கள்
படக்குறிப்பு,

கிருஷ்ணமூர்த்தி

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை

பரந்தூரில் உத்தேசிக்கப்பட்டிருக்கும் விமான நிலையத்தைப் பொறுத்தவரை, 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு 2030க்குள் செயல்பாட்டிற்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கிறது. வருடத்திற்கு பத்து கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இந்த விமான நிலையம் திட்டமிடப்படுகிறது.

விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்த நிலையில், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஆகியோர் போராடும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினர்.

அந்தப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், நிலங்களுக்கு இழப்பீடாக நிலத்தின் மதிப்பைப் போல 3.5 மடங்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகள், கவலைகள் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும் என்றும் அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, அதாவது நவம்பர் நான்காம் தேதி பரந்தூர் விமான நிலையம் ஏன் அவசியம் என ஒரு அறிக்கை தமிழக அரசிடமிருந்து வெளியானது.

அடுத்த சில நாட்களில் இந்தத் திட்டம் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இந்தத் திட்டத்திற்கான Techno - Economic ஆய்வு மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியது டிட்கோ நிறுவனம். இதையடுத்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். அரசு மீண்டும் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், அதில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

இதற்குப் பிறகு, பரந்தூரில் விமான நிலையம் வந்தால் இந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற எதிர்ப்புக் குரல் எழுந்த நிலையில், அது குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஒரு நிபுணர் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை இப்போதுவரை வெளியாகவில்லை.

ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் போராட்டத்தைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இதற்குக் காரணம், 908 ஏக்கர் பரப்பளவும் 2,400 பேர் மக்கள் தொகையும் கொண்ட இந்த கிராமம், இந்தத் திட்டத்திற்காக முழுமையாக எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.

 
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில் மக்கள்
அச்சத்தில் கிராம மக்கள்

அரசு எவ்வளவு இழப்பீடு அளித்தாலும் இந்த இடத்தை விட்டுப் போக முடியாது என்கிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ. "நாங்கள் பிறந்த பூமி இது. மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாகச் சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் 13 ஆயிரம் ரூபாய் என வழிகாட்டு மதிப்பீடுகள் சொல்கின்றன. ஆனால், பக்கத்திலேயே ஒரு சதுர அடி நிலம் 4 ஆயிரம் ரூபாய்வரை விற்கிறது. ஆக இழப்பீடு என்பதை எந்த அடிப்படையில் தருவார்கள்?" எனக் கேள்வி எழுப்புகிறார் இளங்கோ.

ஏகனாபுரம் கிராமத்தில் சுமார் 600 வீடுகள் இருக்கின்றன. 800 ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன. 1,700 வாக்காளர்கள் இங்கே இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது இவர்களுக்கு அச்சமளிக்கிறது.

 
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில் மக்கள்
படக்குறிப்பு,

பண்டேரி

தேர்தல் புறக்கணிப்பு

ஏகனாபுரத்தைச் சேர்ந்த பண்டேரிக்கு இங்கே மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து தனக்கு தூக்கமே வருவதில்லை என்கிறார். "நான்கு தலைமுறையாக இந்தப் பகுதியில் நாங்கள் விவசாயம் செய்துவருகிறோம். எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றன. வீட்டை வேறு கடன் வாங்கிக் கட்டிவிட்டோம். நிலத்தையும் வீட்டையும் எடுத்துக்கொண்டால் அம்போவென போய்விடுவோம். இதையே நினைத்துக்கொண்டிருப்பதால் இரவெல்லாம் தூக்கமில்லை. இதுவரை அரசாங்க அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ வந்து எங்களைப் பார்க்கவில்லை. கொரோனா காலகட்டத்தில்கூட நிலமிருந்ததால் பசியில்லாமல் இருநதோம். எங்களை இங்கிருந்து அடித்து விரட்டினாலும் செத்துப் போவோமே தவிர, ஊரைவிட்டுப் போகமாட்டோம்" என்கிறார் அவர்.

இவ்வளவு நாட்களாகப் போராடியும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்காக குரல் கொடுக்கவில்லையே என்ற வருத்தம் இவர்களுக்கு மிகக் கடுமையாக இருக்கிறது. அந்தப் பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கு. செல்வப்பெருந்தகை, இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் என்றாலும், அது தொடர்பாக வேறு எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்கிறார்கள் கிராம மக்கள்.

அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர். பாலு, இதுவரை இந்தப் பக்கமே வரவில்லை என்பது இவர்களை வெகுவாக ஆத்திரப்படுத்தியிருக்கிறது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியிருக்கும் நிலையில், தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலைக்கு இப்பகுதி மக்கள் வந்திருக்கின்றனர்.

"மக்கள் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை இங்குள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கட்சி பேதமற்று சேர்ந்து போராடுகிறோம். எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை எப்போதாவது குரல் கொடுப்பார். போராடத்திற்கு வரமாட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு இந்தப் பகுதிக்கு வந்ததே கிடையாது. ஓட்டுக் கேட்கும்போது, நான் எம்.பியானால் இந்தத் திட்டம் வராது என்று வாக்களித்தார். அப்படிச் சொல்லிவிட்டுப் போனவர்தான். ஒரு அறிக்கைகூட விடவில்லை. மக்களைச் சந்திக்கவும் இல்லை. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கக்கூட வரவில்லை.

இந்த முறை நாங்கள் தேர்தலை முற்றிலுமாக புறக்கணிக்கப்போகிறோம். விவசாயிகளை மதிக்காவிட்டால், விவசாயிகள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு ஏன் தேவைப்படுகிறது? ஜனநாயகத்தை மதிக்காதவர்கள், வாக்காளர்களின் உரிமையை என்ன மதிக்கப்போகிறார்கள்? அதனால் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்" என்கிறார் பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் குழுவின் செயலாளர் சுப்பிரமணியன்.

இந்தப் புதிய விமான நிலையத் திட்டத்தில் 13 கிராமங்களின் நிலம் கையகப்படுத்தப்படும் என்றாலும் ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் ஆகிய மூன்று கிராமங்களில்தான் எதிர்ப்பு தீவிரமாக இருக்கிறது.

 
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில் மக்கள்
படக்குறிப்பு,

சுப்பிரமணியன்

நெல்வாய் கிராமத்தைப் பொறுத்தவரை, சுமார் 900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவிருக்கிறது. இதில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலமாகவும் 300 ஏக்கர் நிலம் அரசின் புறம்போக்கு நிலமாகவும் உள்ளது. இங்கிருக்கும் விவசாயிகளும் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகச் சொல்கிறார்கள்.

"எம்.எல்.ஏ., எம்.பி. என யாரும் இதுவரை இங்கே வந்து கேட்கவில்லை. அரசும் சரி, அரசியல்வாதிகளும் வந்து எதுவும் கேட்கவில்லை. அவர்களாக சர்வே எண்ணை குறிப்பிட்டு, அந்த நிலங்களை எடுக்கப்போகிறோம், ஆட்சேபணை தெரிவியுங்கள் என்கிறார்கள். நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போகிறோம். நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாகத் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்" என்கிறார் நெல்வாயைச் சேர்ந்த விவசாயியான குணசேகரன்.

 
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில் மக்கள்
படக்குறிப்பு,

குணசேகரன்

சிறு அளவில் நிலங்கள் தேவைப்படும் சிறுவள்ளூர், அக்கமாபுரம், பொடவூர் ஆகிய இடங்களில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை, காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு அளித்த விண்ணப்பத்தை டிட்கோ நிறுவனம் திரும்பப்பெற்றிருக்கிறது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் டிட்கோ விண்ணப்பிக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் இருக்கிறது.

ஆகவே, மிகவும் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய சில கிராமங்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கலாம். இங்கு வாக்காளர் எண்ணிக்கை குறைவு என்பதால், தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால், மக்களிடம் தங்கள் கொண்டு சேர்க்க இது உதவும் என நம்புகிறார்கள் இப்பகுதி மக்கள்.

https://www.bbc.com/tamil/articles/cxrzdvevq4wo

'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ - இசையுலகில் எதிர்ப்பு ஏன்?

1 month 3 weeks ago
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதியா?’ - இசையுலகில் எதிர்ப்பு

பட மூலாதாரம்,TM KRISHNA/FACEBOOK

படக்குறிப்பு,

டி.எம். கிருஷ்ணா

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியின் பெருமைக்குரிய சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு சில இசைக் கலைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மியூசிக் அகாடமியை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

சென்னையில் கர்நாடக சங்கீதத்தின் மரியாதைக்குரிய அமைப்பாகத் திகழும் தி மியூசிக் அகாடமி, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசையில் சிறந்த இசைக் கலைஞர்களைத் தேர்வுசெய்து பல்வேறு விருதுகளை வழங்கிவருகிறது.

சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, மியூசிகாலஜிஸ்ட் விருது, நிருத்ய கலாநிதி ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கும் சங்கீத கலா ஆச்சார்யா விருது பேராசிரியர் பரசால ரவி, கீதா ஆச்சார்யா ஆகியோருக்கும் டிடிகே விருது திருவையாறு சகோதரர்கள், ஹெச்.கே. நரசிம்மமூர்த்திக்கும் மியூசிகாலஜிஸ்ட் விருது டாக்டர் மார்க்ரெட் பாஸினுக்கும் நிருத்ய கலாநிதி விருது டாக்டர் நீனா பிரசாதுக்கும் வழங்கப்படுவதாக மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால், சங்கீத கலாநிதி விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கியதை பல கர்நாடக இசைக் கலைஞர்கள் ரசிக்கவில்லை. வயலின் மற்றும் வாய்ப்பாட்டு கலைஞர்களான ரஞ்சனியும் காயத்ரியும் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதைக் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக, தி மியூசிக் அகாடமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அந்தக் கடிதத்தை புதன்கிழமையன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர்.

 
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதியா?’ - இசையுலகில் எதிர்ப்பு

பட மூலாதாரம்,RANJANI-GAYATRI/FACEBOOK

படக்குறிப்பு,

ரஞ்சனி-காயத்ரி

எதிர்ப்புக்கான காரணம்

அந்தக் கடிதத்தில், 2024ஆம் ஆண்டின் மியூசிக் அகாடமியின் மாநாட்டில் இருந்து விலகிக் கொள்வதாகவும் டிசம்பர் 25ஆம் தேதி நடத்த வேண்டிய தங்களுடைய இசை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர். மேலும், "இந்த மாநாட்டிற்கு டி.எம். கிருஷ்ணா தலைமை தாங்குவார் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். கர்நாடக இசை உலகிற்கு அவர் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த சமூகத்தின் உணர்வுகளை அவர் வேண்டுமென்றேயும் மகிழ்ச்சியுடனும் புண்படுத்தியிருக்கிறார். தியாகராஜர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மதிப்பிற்குரிய அடையாளங்களை அவமதித்திருக்கிறார். கர்நாடக இசைக் கலைஞராக இருப்பது அவமானத்திற்குரிய விஷயம் என்பதைப் போன்ற உணர்வை இவரது நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது தவிர, டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் புகழ்ந்துவருவதை கண்டுகொள்ளாமல் விட முடியாது என்றும் கூறியிருந்தனர். "பிராமணர்களை இனப் படுகொலை செய்ய வேண்டுமென வெளிப்படையாக பேசிய, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்திய, சமூகத்தில் மோசமான மொழியைப் பயன்படுத்துவதை சாதாரண விஷயமாக்கிய ஈ.வெ.ரா என்ற பெரியாரை டி.எம். கிருஷ்ணா புகழ்ந்துவருவதை கண்டுகொள்ளாமல் இருப்பது அபாயகரமானது. கலை, கலைஞர்கள், வாக்கேயகாரர்கள், ரசிகர்கள், அமைப்புகள், நம்முடைய வேர், கலாச்சாரம் ஆகியவற்றை மதிக்கும் ஒரு அமைப்பை நாங்கள் நம்புகிறோம். இவற்றையெல்லாம் புதைத்துவிட்டு, இந்த ஆண்டு மாநாட்டில் இணைவது, ஒரு தார்மீக மீறலாக அமைந்துவிடும்" எனக் குறிப்பிட்டனர்.

 
சித்ரவீணா ரவிகிரண்

பட மூலாதாரம்,CHITRAVINA RAVIKIRAN/TWITTER

படக்குறிப்பு,

சித்ரவீணா ரவிகிரண்

மியூசிக் அகாடமியை புறக்கணிக்கும் கர்நாடக இசை உலகம்

இது கர்நாடக இசை உலகிலும் இசை உலகைக் கவனிப்பவர்களிடமும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து பல கலைஞர்கள் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

2017ஆம் ஆண்டில் சங்கீத கலாநிதி விருதைப் பெற்ற சித்ரவீணா ரவிகிரண் அந்த விருதையும் விருதுத் தொகையும் திருப்பி அளிக்கப்போவதாகத் தெரிவித்தார். தவறான தகவல்களின் அடிப்படையில் இசை உலகை பிளவுபடுத்தியதாக டி.எம். கிருஷ்ணா மீது அவர் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

 
சித்ரவீணா ரவிகிரண்

பட மூலாதாரம்,CHITRAVINA RAVIKIRAN/TWITTER

படக்குறிப்பு,

சித்ரவீணா ரவிகிரணின் பதிவு

வாய்ப்பாட்டுக் கலைஞர்களான திருச்சூர் சகோதரர்களும் இந்த ஆண்டு தி மியூசிக் அகாடமியின் விழாவில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தனர்.

 
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதியா?’ - இசையுலகில் எதிர்ப்பு

பட மூலாதாரம்,TRICHUR BROTHERS/TWITTER

படக்குறிப்பு,

திருச்சூர் சகோதரர்களின் கடிதம்

ஹரிகதா சொல்பவரான துஷ்யந்த் ஸ்ரீதரும் மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டு நிகழ்விலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

மியூசிக் அகாடமி விளக்கம்

இந்த நிலையில், ரஞ்சனி - காயத்ரியின் கடிதத்திற்கு தி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி பதிலளித்தார். அந்தக் கடிதத்தில், அவர்களது கடிதம் கிட்டத்தட்ட அவதூறு என்று சொல்லத்தக்க வகையில் இருந்ததாகவும் மூத்த, சக இசைக் கலைஞர் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

"தி மியூசிக் அகாடமியால் 1942ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டுவரும் சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசையின் மிக உயரிய விருது. ஒவ்வொரு ஆண்டும் யாருக்கு விருதை வழங்க வேண்டும் என முடிவுசெய்வது மியூசிக் அகாடமியின் முற்றுரிமை. இசைத் துறையில் குறிப்பிட்ட காலத்திற்கு, தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்ட கலைஞர்களே மிகக் கவனத்துடன் இந்த விருதுக்கு தேர்வுசெய்யப்படுகிறார்கள். மியூசிக் அகாடமியின் நிர்வாகக் குழு இந்த ஆண்டு இந்த விருதுக்கு டி.எம். கிருஷ்ணாவைத் தேர்வுசெய்தது. நீண்ட காலமாக இசையுலகில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டதே தவிர, வேறு புறக் காரணிகள் எங்கள் தேர்வின் மீது தாக்கம் செலுத்தவில்லை.

உங்களுக்குப் பிடிக்காத இசைக் கலைஞர் ஒருவருக்கு விருது அளிக்கப்படுகிறது என்பதால், இந்த ஆண்டு விழாவிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்திருப்பதும் மோசமாக விமர்சிப்பதும் கலைஞர்களுக்கு உரிய பண்பல்ல. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட கடிதத்தை நீங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள். இது மரியாதைக் குறைவானது என்பதோடு உங்கள் கடிதத்தின் நோக்கம் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட இதுபோன்ற கடிதத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பிறகு, அதற்கு பதில் அளிப்பது தேவையில்லைதான். ஆனால், கர்நாடக இசை உலகிற்கு உங்களுடைய பங்களிப்பை மனதில்கொண்டு, இந்த மரியாதையை மறுக்க நான் விரும்பவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதியா?’ - இசையுலகில் எதிர்ப்பு

பட மூலாதாரம்,MADRASMUSICACADEMY/INSTAGRAM

படக்குறிப்பு,

தி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளியின் கடிதம்

யார் இந்த டி.எம். கிருஷ்ணா?

டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்பட்டதற்கு இசைக் கலைஞர்களின் எதிர்ப்பு, அதற்கு தி மியூசிக் அகாடமியின் பதில் என சலசலப்பு எழுந்திருக்கும் நிலையில், புயலின் மையப் புள்ளியான டி.எம். கிருஷ்ணா, விருதுக்கு நன்றி தெரிவித்ததோடு வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவிரும்பவில்லை.

சென்னையில் இசை பாரம்பரியமுடைய ஒரு குடும்பத்தில் பிறந்த டி.எம்.கிருஷ்ணா, சீதாராம ஷர்மா, செங்கல்பட்டு ரங்கநாதன், செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ஆகியோரிடம் சாஸ்த்ரீய சங்கீதத்தைப் பயின்றவர். மிகப் பெரிய கலைஞர்களிடம் பயின்றிருந்தாலும், தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர்.

"கர்நாடக இசை உலகில் உயர்சாதியினரின் ஆதிக்கத்தை உடைத்து, அந்த இசையை எல்லாத் தரப்பினருக்கும் கொண்டுசெல்ல வெண்டும்" என்பது குறித்துத் தொடர்ந்து பேசிவந்தார் டி.எம். கிருஷ்ணா. இதற்காக செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனுடன் சேர்ந்து சென்னை ஊரூர் ஆல்காட் குப்பத்தில் சாஸ்த்ரீய இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். அதேபோல சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவின் பாடல்களை கர்நாடக இசையில் பாடியிருக்கிறார்.

மேலும், எழுத்தாளர் பெருமாள் முருகனின் பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடினார் டி.எம். கிருஷ்ணா. வைக்கம் நிகழ்வின் நூற்றாண்டை ஒட்டி, பெரியார் குறித்து பெருமாள் முருகன் எழுதிய "சிந்திக்கச் சொன்னவர் பெரியார்" என்ற ஒரு பாடலையும் டி.எம். கிருஷ்ணா பாடியிருந்தார்.

பெரியார் குறித்த டி.எம். கிருஷ்ணாவின் இந்த பார்வையே பல கலைஞர்களை ஆத்திரப்படுத்தியிருப்பது அவர்களது குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

மியூசிக் அகாடமி மீதான சர்ச்சை

"டி.எம். கிருஷ்ணாவுக்கு கர்நாடக சங்கீத கலைஞர் என்ற அடிப்படையில் சங்கீத கலாநிதி விருது அளிக்கப்பட்டது. இது இசை சார்ந்த விருது. இதில் அவரது அரசியல் கருத்து தொடர்பான விஷயத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியமே கிடையாது. அவர் எந்த அரசியல் தலைவரை விரும்புகிறார் என்பதை பார்க்க வேண்டியதே இல்லை. இது அவர்களது அறியாமையைத்தான் காட்டுகிறது. டி.எம். கிருஷ்ணா பெரியார் மட்டுமல்ல, அம்பேத்கரையும் பாடியிருக்கிறார். தேவையில்லாத ஒரு சர்ச்சையை ஏற்படுத்த நினைத்து இப்படிச் செய்கிறார்கள்" என்கிறார் பெருமாள் முருகன்.

தி மியூசிக் அகாடமி இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. கர்நாடக இசையுலகின் மிக உயரிய அமைப்பாக விளங்கும் தி மியூசிக் அகாடமியின் துவக்கம் 1927வாக்கில் அமைந்தது. அந்த ஆண்டு சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி வரிசையாக சில இசைக் கச்சேரிகள் நடத்தப்பட்டன. அதற்கு நல்ல வரவேற்பும் கவனிப்பும் இருந்த நிலையில், அதேபோல ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி 1929ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இசை தொடர்பான ஆய்வரங்குகளும் கச்சேரிகளும் நடந்து வருகின்றன. ஆனால், துவக்கப்பட்டதில் இருந்தே, கர்நாடக இசை உலகில் உயர்சாதியினரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருவதாக விமர்சனமும் இந்த அமைப்பின் மீது இருந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தி மியூசிக் அகாடமி எடுத்துள்ள நிலைப்பாடு இசை உலகில் சிலரது எதிர்ப்பைச் சந்தித்தாலும் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

 
நித்யானந்த் ஜெயராமன்

பட மூலாதாரம்,NITYLISTS/INSTAGRAM

படக்குறிப்பு,

நித்யானந்த் ஜெயராமன்

"தனி மனிதர்களின் நிலைப்பாடே முக்கியம்"

"இந்த விவகாரத்தில் நான் மிக முக்கியமானதாகப் பார்ப்பது தனி மனிதர்கள் இதில் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதல்ல. மாறாக, மேட்டுக்குடி அடையாளத்தைப் பெற்ற ஒரு அமைப்பு மிகத் துணிச்சலான முடிவை எடுத்திருப்பதுதான் கவனிக்க வைக்கிறது. இந்த முடிவினால் வரக்கூடிய விளைவை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். டி.எம். கிருஷ்ணாவின் சாதனைகள் ஒரு புறம் இருந்தாலும், தி மியூசிக் அகாடமி இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது மிக முக்கியமானது" என்கிறார் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

2014ஆம் ஆண்டு முதல் டி.எம். கிருஷ்ணாவும் நித்யானந்த் ஜெயராமனும் வேறு சிலருடன் இணைந்து ஊரூர் ஆல்காட் குப்பம் இசை விழாவை நடத்திவருகின்னர். இதுவரை ஐந்து முறை இந்த விழா நடைபெற்றிருக்கிறது.

"கர்நாடக இசை ஒரு தரப்பினரிடம் மட்டும் கேட்கப்படுவதைத் தாண்டி, வேறு காதுகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விழா துவங்கப்பட்டது. அவர்களுடைய குரல்கள், இந்த கலையை, இசையை வலுப்படுத்தும் என நம்பினார் டி.எம். கிருஷ்ணா. அப்போதுதான் சாதாரண மக்களுக்கும் என்னைப் போன்ற கர்நாடக இசையே தெரியாதவர்களுக்கும் அதனை ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது" என்கிறார் அவர்.

டி.எம். கிருஷ்ணா கர்நாடக இசை உலகின் புகழைச் சிதைத்துவிட்டதாகச் சொல்வதை ஏற்க முடியாது என்கிறார் அவர். "ஊரூர் ஆல்காட் குப்பம் மேடையில் அவர் பாடும்போது கிடைக்கும் வரவேற்பை அங்கே வந்து பார்க்க வேண்டும். கிருஷ்ணாவின் முயற்சியால், கர்நாடக இசையை ரசிப்பவர்களின் எண்ணிக்கை மிகப் பெரியதாகியிருக்கிறது" என்கிறார் நித்யானந்த்.

 
பெருமாள் முருகன்
படக்குறிப்பு,

எழுத்தாளர் பெருமாள் முருகன்

”மீடூ-வின் போது ஏன் எதிர்ப்பு இல்லை?”

பெரியார் பிராமணர்களை மோசமாகச் சித்தரித்தார் என்றும் அதனால் அவரை ஏற்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என்று சொல்வது சரியல்ல என்கிறார் பெருமாள் முருகன். "இந்த இசை பிராமணர்களுக்கு மட்டும் சொந்தமான இசையல்ல. எம்.எம். தண்டபாணி தேசிகரைப் போல, மதுரை சோமுவைப் போல பிராமணரல்லாத இசைக் கலைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். கர்நாடக இசை ஏதோ தங்களுடைய சொத்து என கருதி இப்படிச் சொல்வது மிகத் தவறானது" என்கிறார் பெருமாள் முருகன்.

2024ஆம் ஆண்டு கர்நாடக இசை விழாவில் இருந்து பல இசைக் கலைஞர்கள் பின்வாங்குவது, விருதுகளைத் திருப்பி அளிப்பது அந்த அமைப்பிற்கு பின்னடைவாக இருக்குமா?

"நிச்சயமாக இருக்காது. தங்கள் மீது 'Metoo' குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது விருதைத் திரும்பத் தராதவர்கள், இப்போது அந்த முடிவை எடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் இப்போதாவது அந்த முடிவை எடுக்கிறார்களே என சந்தோஷப்பட வேண்டியதுதான். மியூசிக் அகாடமியின் நிலைப்பாட்டால் அதற்கான வரவேற்பு அதிகரிக்கும். ரசிகர்களின் பன்முகத் தன்மையும் மேம்படும்" என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.

இந்த விவகாரத்தில் தி மியூசிக் அகாடமியின் உறுப்பினர்கள் பலர், அகாடமியின் அதிகாரபூர்வ கருத்தைத் தாண்டி எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c2v98z8xgx1o

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் : பிரதமர் மோடியின் கருத்துக்கு ஸ்டாலின் கடும் விசனம்

2 months ago
18 MAR, 2024 | 04:19 PM
image

(எம்.மனோசித்ரா)

கச்சதீவு உரிமையை அடிப்படையாகக் கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் உதாசீனப்படுத்தப்படவில்லை என இலங்கை அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் கச்சதீவு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

கடந்த காலத்தில் தி.மு.க செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,

'தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா?

கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?

அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய் திறக்காதது ஏன்? படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரபூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்?

இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதற்கெல்லாம் பதிலில்லை. தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று பதில் கூறுங்கள் பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை. ஆனால், வழக்கமான பொய்களும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன.

விஷ்வகுரு என மார்தட்டிக்கொள்ளும் பிரதமர் மௌனகுருவாக இருப்பது ஏன்? தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்!' எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/179054

மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை

2 months ago
திருப்பூர்: மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் கைது
திருப்பூர்: மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், குழந்தைகளின் உடல்நலனைப் போல் மனநலனிலும் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

காவல்துறை கூறுவது என்ன?

மன முதிர்ச்சியற்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, பிபிசி தமிழிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, வெள்ளகோவிலில் கோவில் ஒன்றில் கடந்த 9-ம் தேதி இரவு கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட கூட்டத்தில் கச்சேரியைக் காண அந்த 17 வயது சிறுமியை அவரின் தாய் அழைத்து வந்துள்ளார். அச்சிறுமிக்கு மனமுதிர்ச்சி சற்று குறைவு என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறுமியும் நடனமாடிக் கொண்டிருக்க, ’வீட்டுக்குச் செல்லலாம் வா’ என தாய் அழைத்தபோது அவர் உடன் செல்ல மறுத்துள்ளார். நடனத்தின் மீதான ஈடுபாட்டில் பக்கத்து வீட்டுத் தோழிகளுடன் தான் பத்திரமாக வீட்டுக்கு வந்துவிடுவதாகக் கூறியதால் தாயும் அவரை அங்கேயே விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

கச்சேரியின்போது மேடைக்குக் கீழ் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் அச்சிறுமியை நோட்டமிட்டு, வீடியோவும் எடுத்துள்ளனர்.

கலைநிகழ்ச்சிகள் முடிந்து வெகுநேரமாகியும் எல்லோரும் வீடு திரும்பிய பின்பும் தனது மகளைக் காணவில்லை என்பதால், காவல்துறையிலும் இதுகுறித்து முறையிட்டார். முழு மனமுதிர்ச்சி இல்லாத பெண் என்பதால், உடனடியாகக் கண்டுபிடித்துத் தரும்படி போலீசாரிடம் கோரினார்.

இதையடுத்து போலீசாரும் ஒருபுறம் சிறுமியைத் தேடினர். அதிகாலை 3 மணியளவில் யாரோ ஒருவர் அழைத்து வந்தததாக வீடு திரும்பிய சிறுமி மிகவும் களைத்துப் போய் சோர்வுடன் காணப்பட்டிருக்கிறார்.

 
தனக்கு நேரிட்ட கொடுமையை சொல்லக் கூட தெரியாத சிறுமி
திருப்பூர்: மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

சிறுமியின் நிலை கண்டு சந்தேகித்த தாயும், என்ன ஆனது என சிறுமியிடம் கேட்க 6 பேர் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி கூறி இருக்கிறார். தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறோம் என்று கூட சொல்லத் தெரியாத அந்தச் சிறுமியின் பேச்சைக்கேட்டு தாயும் அதிர்ந்து போனார். இதுதொடர்பாக, அச்சிறுமியின் தாய் வெள்ளகோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார், சிசிடிவி காட்சி உதவியுடன் சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றவர்களை அடையாளம் கண்டு இருவரைப் பிடித்தனர்.

இது போக்சோ வழக்கு என்பதால், வெள்ளகோவில் காவலர்களின் வழிகாட்டுதலின்படி, காங்கேயம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்தார் சிறுமியின் தாய். இதையடுத்து போலீசார் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

நடனத்தை யூடியூப்பில் போடுவதாகக் கூறி அழைப்பு

விசாரணையில் பின்வரும் விவரங்கள் தெரியவந்தததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தேர்த் திருவிழா கலைநிகழ்ச்சியில் சிறுமியின் நடனத்தைப் பார்த்த இளைஞர்களில் பிரபாகர், மணிகண்டன் ஆகிய இருவர் சிறுமியை அருகே வருமாறு அழைத்து, “நீ, நன்றாக நடனமாடுகிறாய். உன்னை மட்டும் தனியே நடனம் ஆட வைத்து, அதை யூடியூப்பில் பதிவேற்றினால், நீ விரைவில் பிரபலமாகிவிடுவாய்” எனக் கூறியிருக்கின்றனர். பேசிய இரு இளைஞர்களில் ஒருவர் சிறுமிக்கு ஏற்கனவே பரிச்சயமான டீ மாஸ்டர் என்பதால், சிறுமியும் அவர்களுடன் பைக்கில் சென்றுள்ளார்.

 
கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர்

காட்டுக்குள் சிறுமியை அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், சிறுமியை வீட்டில் விட அழைத்துச் சென்றபோது, அவ்வழியே வந்த அதிமுக நிர்வாகியான கதிர்வேல்சாமியின் மகனும் அதிமுக தொழில்நுட்ப அணி நிர்வாகியுமான தினேஷ் அவர்களைத் தடுத்து நிறுத்தினாராம். நடந்ததை அறிந்த தினேஷும், சிறுமியைத் தங்களிடம் விட்டுவிட்டு செல்லுமாறு கூறி சிறுமியை அழைத்துக் கொண்டனர்.

பின், தினேஷ் சிறுமியைத் தனது காரில் வைத்து கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அவரது நண்பர்களும் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அவ்வழியே காரில் வந்த மேலும் 2 இளைஞர்கள் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அவரை வீட்டின் அருகே இறக்கிவிட்டுச் சென்ற நிலையில்தான் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிக்கியது தெரியவந்தது.

தனக்கு ஏதோ தவறாக நடக்கிறது என்றுகூட அறிந்துகொள்ளும் பக்குவம் அந்த சிறுமிக்கு இருந்திருக்காது என்றும், சிறுமியின் மனமுதிர்ச்சி ஒரு 9 வயது சிறுமியை ஒத்ததாகத்தான் இருக்கும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

இந்த விசாரணைக்குப் பின், 27 முதல் 32 வயதுக்குள் உள்ள பிரபாகர், மணிகண்டன், தமிழ்செல்வன், தினேஷ், பாலசுப்ரமணி, நவீன்குமார், நந்தகுமார், மோகன்குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்களின் மீது ஐபிசி பிரிவு 366, பிரிவு 506 (1), போக்சோ சட்டம் பிரிவு 6-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே திருமணமானவர்கள் ஆவர். அதில் தினேஷ் ஆட்டோ ஃபினான்ஸ் செய்துவருவதும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட காரில் ’ஜெ’ என அதிமுக வண்ணத்தில் நம்பர் பிளேட்டில் எழுதப்பட்டிருந்தது.

எளிதில் இலக்கான மனமுதிர்ச்சியற்ற சிறுமி

சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் மூலனூரில் கொலையாகி ஓராண்டுக்குப் பின்பே அவரது சடலம் மீட்கப்பட்டது. சிறுமி ஒற்றைத் தாயின் அரவணைப்பில் வளரும் மனமுதிர்ச்சியற்ற சிறுமி என்பதும், வயதுக்கு ஏற்ற பக்குவம் இல்லாததையும், சிறுமிக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதையும் நன்கு அறிந்திருந்தார் அந்த டீ மாஸ்டர். சிறுமியின் வாழ்க்கைச் சூழலை சாதகமாக்கிக் கொண்டதாக தெரிகிறது.

 
டிப்ளமோ படிக்கும் சிறுமிக்கு எப்படி மனநலப் பிரச்னை?
மனநலப் பிரச்னை
படக்குறிப்பு,

உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்

இந்தச் சிறுமி பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்து வந்தாலும், அவர் வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்ததும் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்தை அணுகியது பிபிசி தமிழ். இந்தச் சிறுமிக்கு இருப்பது அன்டக்னைஸ்ட் இன்டலெக்சுவல் டிசெபிலிடி (Undiagnosed intellectual disability) என்ற கண்டறியப்படாத அறிவுசார் திறன் குறைபாடு என்றார். இப்படிப்பட்டவர்களில் பலர் பட்டப்படிப்பே படித்திருந்தாலும் வயதுக்கு உரிய அறிவும் பக்குவமும் இருக்காது என்றார். பெரும்பாலும் இதுமாதிரியான சிறுமிகள் தான் பாலியல் கொடூரங்களுக்கு எளிதில் இலக்காகிறார்கள் எனக் கூறினார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

இந்தச் சிறுமிக்கு சமூகத்தில் எப்படிப் பழக வேண்டும் என்பது தெரியாது என்றார். ’சோசியல் ஸ்கில்ஸ் அடாப்டபிலிடி’ (Social skills adaptability) அதாவது, சமூகத்தில் பழகுவதற்கான திறமைகளை கிரகிப்பதில் அவருக்கு ‘மைல்ட் டூ மாடரேட்’ அதாவது லேசானது முதல் மிதமானது வரைதான் அறிவு இருக்கும் என்றார்.

`வளர்ந்தால் சரியாகிவிடும்` என்ற அலட்சியம்

வீட்டில் விளையாட்டுத்தனமாக இருக்கும் பிள்ளைகள் பெரும்பாலும் வளர்ந்தால் சரியாகிவிடும், திருமணமானால் சரியாகிவிடும், சிறுபிள்ளைத்தனம், விளையாட்டுப் பிள்ளை, வெகுளி, வெள்ளந்தி, அனைவரிடமும் சிரிக்கச் சிரிக்க பேசுவார்கள் என்று கூறிக்கொண்டு பெற்றோர் குறிப்பாக கிராமத்தில் வசிக்கும் பெற்றோர் ஏதும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு சமூக பக்குவம் இல்லாமல் போகும்போது, அது ஒரு மனநல பிரச்னை என்பதை அறியாமல் விட்டுவிடுவதும்தான் இதுபோன்ற சிக்கல்களில் அவர்கள் எளிதில் மாட்டிக்கொள்ளக் காரணம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சூசகமான வார்த்தைகளைச் சொல்லி தவறான செயல்களுக்கு அழைக்கும்போது அதனை புரிந்துகொள்வது 17 வயது மனமுதிர்ச்சியற்ற சிறுமிக்கு அது சிரமம்தான்“ எனக் குறிப்பிட்டார்.

 
"உடல் எல்லை, பாலியல் கல்வி மிகமிக அவசியம்"
திருப்பூர்: மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இத்தகைய குழந்தைகள் பொதுவெளிக்குச் செல்வதற்கு முன்பே அவர்களுக்குக் கட்டாயம் பாலியல் கல்வியை பெற்றோர் கற்றுத்தர வேண்டும் என்கிறார் அவர். “இது உன் உடல், யாரும் அதைத் தொட அனுமதிக்கக் கூடாது, இதனால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படக்கூடும்” என்பதை அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என அவர் கூறுகிறார்.

“இதுபோன்ற மன முதிர்ச்சியற்றவர்களுக்கு கண்டிப்பாக சொல்லித்தர வேண்டும். ஏனெனில் இவர்கள் வெளியுலகில் யாருடைய ஆதரவும் இல்லாமல் இயங்க முடியாது எனும்போது அவர்களைப் பெற்றோர் தனித்து விடாது நிழல் போல் காக்க வேண்டும். அல்லது உடல் தொடுதல் எல்லைகளையும், `குட் டச் பேட் டச்`சையும் சொல்லித்தர வேண்டும்” என அதன் அவசியத்தை தெளிவுபடுத்தினார் சித்ரா அரவிந்த்.

பெற்றோர்கள் கவனத்திற்கு

குழந்தைகளுக்கு அறிவுசார் குறைபாடு வருகிறது என்பதை எப்படி அறிந்துகொள்ளலாம் எனவும் அவர் படிநிலைகளை விளக்கினார்.

  • குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ற மைல்ஸ்டோன்களை அடையாதது
  • நடப்பது, பேசுவது ஆகியவற்றைத் தாமதமாக செய்வது
  • அதிக கோபமும், சமூகத்தில் பழகும் முறைகளைத் தெரியாதிருப்பது
  • பொருட்களைக் கையாள்வதில் சிரமம் (ஃபைன் மோட்டார் ஸ்கில்ஸ்)
  • கல்வியில் பின்தங்கியிருப்பது
  • போதிய மனநல விழிப்புணர்ச்சி இல்லாததால், பெற்றோர் இதனை கண்டுகொள்ளாது விட்டுவிடுகிறார்கள்.

`ரிஸ்கி பாபுலேசன்` (எளிதில் ஆபத்துக்கு இலக்காகுபவர்கள்) என இவர்களை அடையாளப்படுத்துவதால் பாலியல் கல்வி அளிப்பது கட்டாயம் என மீண்டும் அறிவுறுத்தினார் சித்ரா அரவிந்த்.

”நிழல் போல் இருந்து பெற்றோர் காக்க வேண்டும்”

மனப் பக்குவம், சமூகத்தில் செயல்படும் விதங்கள், பாலியல் ரீதியிலான நடத்தைகளைக் கற்றுக் கொடுத்தும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், பெற்றோர் நிழல் போல் உடன் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றார். யாரையும் நம்பி விடக்கூடாது என்றும் இதுபற்றி முதலில் பெற்றோர் விழிப்படைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

“குழந்தைக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் பெற்றோர், அதுவே மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு மனநல மருத்துவரை அணுகுவதில்லை. அதை நிராகரித்துவிடுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே தயங்காமல், சமூகம் என்ன சொல்லும் என நினைக்காமல் தைரியமாக மனநல நிபுணர்களை அணுகவேண்டியது அவசியம்” எனக் கூறினார்.

 
IQ பரிசோதனையின் அவசியம்
திருப்பூர்: மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிறந்ததும் குழந்தையைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் குழந்தைக்கு ஏதும் பிரச்னை இருந்தால் கண்டறிந்துவிடுவார்கள். 3 அல்லது 5 வயதுக்கு மேல் அல்லது எந்த வயதிலும் கூட இத்தகைய குழந்தைகளுக்கு IQ பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களின் மனநலம் பற்றி அறிந்துகொள்ளலாம். இது தலைமை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பெற்று பயனடையலாம்.

இன்டலெக்சுவல் அதாவது அறிவாற்றல் எனப்படுவது காரணம் அறிதல், பிரச்னைகளை தீர்த்தல், கல்வி கற்றல், திட்டமிடுதல், யோசித்தல், நீதி காணுதல், அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளுதல் என்ற படிநிலைகளின் கீழ் அறியப்படும். இவற்றை சரியாக பின்பற்றாத குழந்தைகள் அறிவுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளாக அறியப்படுபவர்கள்.

சில குழந்தைகள் வளர்ந்த பின்பும் கூட குளிப்பது, உடை அணிந்து கொள்வது, சாப்பிடுவது, வழக்கமான பணிகளை செய்வது, அடிப்படையாக சமைப்பது, துவைப்பது, போக்குவரத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றில் குறைகள் இருக்கலாம்.

சில குழந்தைகளுக்கு புதிதாக கற்றுக்கொள்ளுதல் திறன்களை வளர்த்தல் பெரியளவு வழிகாட்டுதல் இன்றி தானாகவே செயல் திறன்களை மேற்கொள்வது ஆகியவற்றில் சிரமம் இருக்கலாம்.

10 வயது குழந்தை 5 வயது குழந்தையை போல் பேசுவது இதற்கு உதாரணம்.

லேசான அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 52-55 முதல் 70)
  • 5 முதல் 6 வகுப்புக்கு மேல் படிப்பில் சிரமம்
  • பேசுவது தாமதம் ஆகலாம். ஆனால் கற்றுக்கொண்ட பின் பிறருடன் தொடர்புகொண்டு பேசுவது மேம்படலாம்.
  • தன்னை தானே பார்த்துக் கொள்வது பராமரித்துக்கொள்வதில் முழுமையான சுதந்திரம் இருக்கும்.
  • படித்தல் மற்றும் எழுதலில் சிரமம் இருக்கும்.
  • சமூகத்தில் பக்குவமின்மை இருக்கும்.
  • திருமணம், குழந்தை வளர்ப்பு, பெற்றோராக கடமை ஆற்றும் பொறுப்புகளில் இயலாமை இருக்கும்.
மிதமான அறிவு திறன் குறைபாடு (IQ மதிப்பு 35 - 42 முதல் 52 – 55)
  • 2-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதில் சிரமம்
  • மொழியை புரிந்துகொள்வதில் மெதுவாக செயல்படுவார்கள்.
  • பேசுவதிலும் பழகுவதிலும் குறைந்த திறன் இருக்கும்.
  • சாதாரணமாக படித்தல், எழுதுதல், எண்ணுதல் சாத்தியமாக இருக்கும்.
  • தனித்து சுதந்திரமாக வாழ்வது, இயங்குவதில் சிரமம்.
  • ஏற்கனவே தெரிந்த இடங்களுக்கு மட்டும்தான் சிரமம் இன்றி பயணிக்க முடியும்.
தீவிர அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 22-25 முதல் 35 – 40)
  • பேசுவதிலும் ’மோட்டார் டெவலப்மென்ட்’ என்ற பொருட்களை கையாளுவதில் சிரமம் இருக்கும்
  • பாதுகாப்பான சூழலில் மருத்துவ உதவியோடு தான் வாழ முடியும்.
  • வெகு சில வார்த்தைகள் மட்டுமே புரியும்.
ஆழமான அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 22-25 க்கு கீழ்)
  • பிறர் என்ன சொல்கிறார்கள் என்று புரியாது.
  • நரம்பு குறைபாட்டால் அசாதாரணமாக இருப்பார்கள்.
  • சுதந்திரமாக செயல்படுவது சாத்தியமில்லை.
  • எப்போதும் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டியது அவசியம்.
அறிவுசார் குறைபாடு வரக் காரணம் என்ன?

மரபணு, கர்ப்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், அம்மை, மூளைக்காய்ச்சல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற உடல்நல குறைபாடுகள் இதற்கு காரணமாக அமையலாம்.

குறிப்பாக, பெண்கள் கருவுற்றிருக்கும் போது அவர்களுக்கு மன உளைச்சல்களைக் கொடுக்கும் போதும், அவர்களின் மன நலன் பாதிக்கப்பட்டால் கருவில் இருக்கும் குழந்தையின் மனநலனும் பாதிக்கப்படக்கூடும்.

104 என்ற எண்ணில் இலசவ மனநல ஆலோசனை

குழந்தைகளை மனநல மருத்துவர்களுக்கு அழைத்துச் செல்வதில் ஏதும் தடைகள் இருந்தால், 24 மணிநேரமும் செயல்படும் 104 என்ற அரசின் மருத்துவ மற்றும் மனநல ஆலோசனை மைய எண்ணை அழைத்து, தங்களின் பிரச்னைகளைக் கூறவேண்டும். எவ்வளவு நேரமாயினும் மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு உங்களுக்கான வழிகாட்டு முறைகளை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பகிர்வார்கள்.

மருத்துவர்கள் அறிவுறுத்தல்களை எழுதி வைத்துக்கொண்டு பின்பற்றி, அவர்கள் சொல்லும் காலகட்டத்துக்குப் பின் மீண்டும் 104 என்ற எண்ணை அழைத்து அதே மருத்துவரின் பெயரைச் சொல்லி பேச வேண்டும் எனக் கூறினால் அவர்கள் இணைப்பை வழங்குவார்கள். எத்தகைய சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள், மன சங்கடங்களையும் தயக்கமின்றி பகிர்ந்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம்.

https://www.bbc.com/tamil/articles/cqqwe1gld15o

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர தமிழ்நாடு அரசு முடிவு - புதிய கல்வி கொள்கைக்கு திமுக எதிர்ப்பு என்ன ஆகும்?

2 months ago
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம்: 'ஆர்வம்' காட்டும் திமுக, 'நெருக்கடி தரும்' மத்திய அரசு - முழு பின்னணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 17 மார்ச் 2024, 03:00 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பிஎம் ஸ்ரீ பள்ளிகளை 2024-2025 கல்வியாண்டுக்குள் தொடங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்து மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் திமுக தலைமையிலான அரசு, அதன் அடிப்படையில் செயல்படும் பி.எம்.ஸ்ரீ மாதிரிப் பள்ளிகள் திட்டத்தில் இணைய விரும்புவது ஏன் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழ்நாடு அரசின் முடிவிற்கு மத்திய கல்வி அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் புதிய கல்விக்கொள்கை 2020ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என மத்திய அரசு கூறுகிறது.

இதுதொடர்பாக, மத்திய கல்வித்துறை அமைச்சகம் சனிக்கிழமை (மார்ச் 16) தன் ட்விட்டர் பக்கத்தில், “பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முக்கிய முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது புதிய கல்விக் கொள்கை-2020இன் படி அமைந்த முன்மாதிரி பள்ளிகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2024-25 கல்வியாண்டுக்குள் தமிழ்நாடு அரசு கையெழுத்திடும் என்றும் தமிழ்நாடு அரசுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கும் இடையேயான இந்த ஒப்பந்தம், வலுவான மத்திய-மாநில உறவுகளைக் குறிப்பதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காக இதைத் தாங்கள் மனமார வரவேற்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் திமுக அரசு ’ஆர்வம்’ காட்டுவது ஏன்? மத்திய அரசின் நெருக்கடி காரணமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மார்ச் 15 அன்று எழுதிய கடிதமும் அப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், “தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வமாக உள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்படும். அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அடுத்த கல்வியாண்டுக்குள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று மற்றும் நான்காம் நிதி தவணைகளை வழங்குமாறும் மத்திய அரசிடம் அதில் கோரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தேசிய கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் போன்றவற்றை வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் திமுக அரசு ’ஆர்வம்’ காட்டுவது ஏன்? மத்திய அரசு நெருக்கடி அளிக்கிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

திமுக எதிர்ப்பு

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அப்போது, புதிய கல்விக் கொள்கைக்கு திமுக உட்பட தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கை வேத கலாசாரத்தை திணிப்பதாகவும் சமூக நீதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுகிறது, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்தப் பார்க்கிறார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த விமர்சனம் தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநில கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு தயாரித்து வருகிறது. அதை ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு உருவாக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் கல்வியாளர்களைச் சந்தித்திருக்கிறோம். ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துகளை அறிந்துதான் மாநில கல்விக் கொள்கையைத் தயாரித்திருக்கிறோம். அதைச் சார்ந்துதான் எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்படும்" என்றார்.

அதோடு, மத்திய கல்வி அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு மூன்றாவது மற்றும் நான்காவது தவணையான ரூ. 1,200 கோடியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திஇருப்பதாகவும், அப்போது பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என மத்திய அரசு கூறியதாகவும் தெரிவித்த அன்பில் மகேஷ், "முதலமைச்சரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினோம்" எனக் கூறினார்.

அவரது கூற்றின்படி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதில் எவற்றையெல்லாம் ஏற்கலாம், ஏற்க வேண்டாம் என்பது குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்படும். "அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் நமக்கு ஏற்காத விஷயங்களை எடுத்து சொல்வோம்," என்றார்.

மேலும், குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வந்து அவர்களுக்கு மன உளைச்சலைத் தரும் புதிய கல்விக் கொள்கையை திமுக எப்போதும் எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 
பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது என்ன?
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பட மூலாதாரம்,ANBIL MAHESH POYYAMOZHI

படக்குறிப்பு,

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பி.எம். ஸ்கூல்ஸ் ஆஃப் ரைசிங் இந்தியா என்பதன் சுருக்கமே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள். இந்தியா முழுவதிலும் 14,500 பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இப்பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றி, அப்பள்ளிகள் அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகளை வழிநடத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பள்ளிகள் இருக்கும் என புதிய கல்விக் கொள்கை-2020இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட மத்திய/மாநில/யூனியன் அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படும். உயர்தர கல்வி, பாதுகாப்பான சூழல், பரவலான கற்றல் அனுபவங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் பள்ளிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பள்ளிகளாக உருவாக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பயணடைவார்கள் என, 2022ஆம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவரை ஒடிசா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் கையெழுத்திடவில்லை என, பிடிஐ செய்தி முகமையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் என்ன பிரச்னை?
பிரின்ஸ் கஜேந்திரபாபு
படக்குறிப்பு,

பிரின்ஸ் கஜேந்திரபாபு

இப்பள்ளிகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார்.

பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் என்ன பிரச்னை என்ற கேள்விக்கு, "எல்லோருக்கும் சமமான கற்றல் வாய்ப்பைத்தான் கொடுக்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் சமத்துவக் கோட்பாட்டைத்தான் பேசுகிறது," என்று பதிலளித்தார்.

"பிஎம் ஸ்ரீ பள்ளிகள் மட்டும்தான் சிறந்த பள்ளிகளாக இருக்க வேண்டுமா? சிறந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கு மட்டும்தான் இருப்பார்களா? இந்தக் குறிப்பிட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் அங்கிருக்கும் அனைத்து வசதிகளையும் அனுபவிப்பார்கள் என்று சொன்னால், மற்ற பள்ளிகளில் இத்தகைய வசதிகள் வேண்டாமா?"

"ஒரு சிலருக்கு மட்டும் சிறந்த கல்வி வாய்ப்பைக் கொடுப்பேன் என்று சொன்னால், அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதா?" என பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வியெழுப்புகிறார்.

ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளதா?

பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கான இணையதளத்தில், அப்பள்ளிகளுக்கென நிர்வாக அமைப்பை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எந்தெந்த பள்ளிகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பதை மாநில அரசு அடையாளம் கண்டு கூற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சில படிநிலைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

"ஏற்கெனவே தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடையாளம் கண்டுள்ளது. இந்த மாதிரிப் பள்ளிகள் 2 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன," என்றார் பிரின்ஸ்.

 
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் திமுக அரசு ’ஆர்வம்’ காட்டுவது ஏன்? மத்திய அரசின் நெருக்கடி காரணமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதற்கான அமைப்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதன் உறுப்பினர் செயலாளராக உள்ளதாகவும் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார். இந்நிலையில், இப்போது கடைசியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட உள்ளதாக அவர் விமர்சிக்கிறார்.

"அடுத்த கல்வியாண்டுக்குள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என அரசின் தலைமைச் செயலாளர் கூறுவதை எப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியும்?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக்கு தான் இத்தகைய கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்கிறது. அப்படியிருக்கையில், "அமைச்சரவை முடிவு எடுக்காத ஒரு விஷயம் குறித்து தலைமைச் செயலாளர் எப்படி முடிவு எடுத்தார்? இதுகுறித்து முதலமைச்சர் விளக்கம் கூற வேண்டும்" என வலியுறுத்துகிறார்.

நிதியுதவி அளிக்காமல் நெருக்கடி கொடுக்கின்றனர் என்பது நியாயமான அணுகுமுறை அல்ல என்றும் அவர் கூறுகிறார். "கருணாநிதி சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார். இப்போது திமுக அரசு கொண்டு வரும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் அரசமைப்பு சட்டத்திற்கு மட்டுமல்ல, கருணாநிதியின் சமச்சீர் கோட்பாட்டுக்கும் எதிரானது," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

தமிழ்நாட்டுக்கென மாநில கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் குழு ஒன்றை 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமைத்தது.

இதிலும் தமிழ்நாடு அரசு மீது சர்ச்சை எழுந்தது. தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன் மே, 2023இல் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

முதலமைச்சரின் செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். எனினும் அக்குற்றச்சாட்டுகளை அந்த நேரத்தில் உதயச்சந்திரன் மறுத்திருந்தார்.

 
'எப்போதும் எதிர்ப்போம்'
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் திமுக அரசு ’ஆர்வம்’ காட்டுவது ஏன்? மத்திய அரசு நெருக்கடி அளிக்கிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் சல்மா கூறுகையில், ”ஆய்வு செய்து எது தேவையோ அதை மட்டும் செயல்படுத்துவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

குலக்கல்வியை ஊக்குவிப்பதாக புதிய கல்விக் கொள்கையை முதலமைச்சர் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அனைவரும் சமம், எல்லோரும் படிக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி. அதற்காகத்தான் திமுக குரல் கொடுத்து வருகிறது. அதனால் இதில் சந்தேகங்களுக்கு இடமில்லை,” எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு எல்லா வகையிலும் நெருக்கடி அளிப்பதாகவும் நிதியில்தான் முதலில் கை வைப்பதாகவும் அவர் கூறினார்.

'திமுக அரசியல் செய்கிறது'

திமுக எல்லா விவகாரங்களிலும் இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.

பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "தலைமைச் செயலாளரின் கடிதத்தில், இத்திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் இப்படிச் சொல்கிறார். அப்படியென்றால் திமுக அரசு இதை வைத்து அரசியல் செய்கிறது. இப்படித்தான் நீட் தேர்வு உள்ளிட்ட எல்லா விவகாரங்களிலும் திமுக இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் தொடக்கம் வேண்டும் என்பதால்தான் சில பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளனர்" என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c720lexrg49o

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2 months ago
சென்னையில் 2025 ஜூனில் 2-ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
16 MAR, 2024 | 12:34 PM
image

தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது.

தமிழ் மொழி; தொன்மை – தனித்தன்மை – பொதுமைப் பண்பு - பண்பாடு – உயர்ந்த சிந்தனை – இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.

தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். வளம்பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

கழக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளாக தமிழக அரசு தனிப்பெரும் நிலையில் தகுதிவாய்ந்த தமிழறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்குவதோடு, நாடறிந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதும், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளை நுண்மையோடு பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து, அதன் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது தமிழ்ப் பண்பாட்டின் மணிமகுடங்களாகும்.

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினைச் செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24 நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் கழக அரசின் முயற்சிகளாகும்.

மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அயலகத் தமிழர் தினமாக ஜனவரி-12-ஆம் நாளினை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக 2024-ஆம் ஆண்டு அயலகத் தமிழர் மாநாட்டினை வெற்றியோடு நடத்தியதும், பார்போற்றும் வகையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தியதும்; தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம்.

“இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/178854

திமுகவின் 'முத்தமிழ் முருகன்' மாநாடு அறிவிப்பு: இந்து வாக்குகளை கவரும் 'அரசியல் தந்திரமா'?

2 months ago
மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தமிழ்நாட்டில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்திருப்பது, பாஜகவிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. பாஜக மட்டுமல்லாமல், ‘முருகன் தமிழர்களின் இறைவன்’ என்ற முழக்கத்தைத் தொடர்ந்து முன்வைத்து வரும் நாம் தமிழர் கட்சியும் இதை விமர்சித்துள்ளது. இந்து வாக்குகளை கவர்வதற்காகன ’அரசியல் தந்திரம்’ என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. என்ன சர்ச்சை?

அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஜூன் அல்லது ஜூலையில் வெகுவிமரிசையாக நடைபெறும். உலகளவில் இருக்கும் முருக பக்தர்கள், முருக கோவில்களைப் பராமரிப்பவர்களை தமிழகத்திற்கு அழைத்து இரண்டு நாட்கள் மாநாடு நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் கண்காட்சிகள், கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே தமிழ்நாடு பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக பொதுச் செயலாளர் ஆர். சீனிவாசன், “முதலில் பாஜக மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்களாக காட்டிக்கொண்டு ‘ஸ்டிக்கர்’ ஒட்டியது. முருகனை தமிழ்நாட்டுக்கு மட்டும் சுருக்கிவிட முடியாது. அவரை உலகம் முழுவதிலும் வழிபடுகின்றனர். இத்தகைய சூழ்ச்சிகளில் தமிழ்நாட்டு மக்கள் சிக்க மாட்டார்கள்,” எனத் தெரிவித்திருந்தார்.

இம்மாநாட்டை நடத்துவதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் ஆட்சி அமைத்ததில் இருந்தே முருகன் கோவில்களுக்காகப் பலவித திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வந்ததாகவும் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.

”திருச்செந்தூர் முருகன் கோவிலைப் புணரமைக்க தமிழக அரசு ரூ.300 கோடி நிதி ஒதுக்கியுள்ளது” என்றும் அவர் கூறினார். இதையொட்டித்தான் தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது.

'அரசியல் ஆதாயம்'

முருகனுக்கு மாநாடு நடத்துவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், "இது நிச்சயம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான்," என்று விமர்சித்தார்.

தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்குக்கூட முதலமைச்சர் வாழ்த்து கூறியதில்லை. முருகனுக்கு முக்கிய நிகழ்வான தைப்பூசத்திற்குக்கூட வாழ்த்து கூறியதில்லை.

அப்படியிருக்கும்போது, இப்போது முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? சனாதனம் குறித்துப் பேசிய உதயநிதிக்கு எந்தவித கண்டிப்பும் தெரிவிக்காத முதல்வர் இதை நடத்துவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

 
'பாஜகவின் ஏ டீமா?'
சீமான்

பட மூலாதாரம்,@SEEMANOFFICIAL

'முப்பாட்டன் முருகன்', 'குறிஞ்சி தந்த தலைவன்', 'இன மூதாதை' என முருகன் 'தமிழ்க்கடவுள்', 'தமிழர்களுக்கான கடவுள்' என்ற வாதத்தை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது நாம் தமிழர் கட்சி. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் அக்கட்சி சார்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகன் 'இந்து கடவுள் அல்ல, தமிழர் கடவுள்' என்பது அக்கட்சியின் வாதம்.

இம்மாநாடு தொடர்பாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பிபிசி தமிழிடம் பேசுகையில், "திராவிடத்தை விடுத்து, தமிழர்களின் கடவுளைக் கொண்டாடினால்தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என்ற புரிதல் திமுகவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறது.

நாங்கள் முருகனைக் கொண்டாடியதற்கு எங்களை பாஜக 'பி டீம்' என்றனர். இந்துத்துவத்திற்கும் வேலுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால், எங்களை நோக்கி ஆர்.எஸ்.எஸ்-இன் இன்னொரு அமைப்பு என்றனர். இப்போது இவர்கள் பாஜகவின் ‘ஏ’ டீமா?" என்றார்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஜூன் அல்லது ஜூலை மாதம் நடக்கவிருக்கும் மாநாடு குறித்து இப்போதே திமுக அறிவித்திருப்பது, தேர்தல் லாபத்திற்காகத்தான் என்றார் அவர். "இது அக்கட்சியின் அரசியல் உத்தி எனச் சொல்வதைவிட தந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்," எனக் கூறுகிறார் காளியம்மாள்.

 
'பாஜகவுக்கு பயம்'
கருணாநிதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த விமர்சனங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "அறநிலையத்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தான் இவை. இந்து சமய விதிகளுக்கு உட்பட்டு கோவில் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்தான். அதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வியெழுப்புகிறார்.

மேலும், "நாங்கள் முருகன் குறித்துப் பேசினால் பாஜகவுக்கு ஏன் கோபம் வருகிறது? அவர்கள் இதை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறார்கள் போல. அதனால் பயப்படுகிறார்கள் என நினைக்கிறேன்.

திமுகவின் கொள்கைகளைத் தெரிந்துகொள்ளாமல் பாஜக பேசுகிறது. இதற்கும் இந்துத்துவத்திற்கும் சம்பந்தமில்லை. எல்லா மதங்களுக்கும் அமைப்பு இருக்கிறது," என்றார்.

முஸ்லிம்கள் நலன்களுக்கென வக்பு வாரியம் இருப்பதையும் ஆர்.எஸ். பாரதி சுட்டிக்காட்டினார்.

 
முருகனும் தமிழக அரசியல் கட்சிகளும்
`முத்தமிழ் முருகன்` மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்த திமுக - பாஜக, நாம் தமிழர் விமர்சிப்பது ஏன்?

பட மூலாதாரம்,L MURUGAN TWITTER

படக்குறிப்பு,

எல். முருகன் வேல் யாத்திரை சென்றபோது

முருகனை முன்வைத்து யாத்திரை செல்வதோ, முருகனைக் கொண்டாடுவதோ தமிழக அரசியல் கட்சிகளுக்குப் புதிதல்ல.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, 2020ஆம் ஆண்டு இறுதியில் அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவரும் தற்போதைய மத்திய இணையமைச்சருமான எல். முருகன், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை முருகனின் அறுபடை கோவில்களை மையமாக வைத்து ‘வேல் யாத்திரை நடத்தினார்.

அதேபோன்று, 2021ஆம் ஆண்டு ஜனவரியில், திமுக நடத்திய மக்கள் கிராமசபைக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் பரிசாக அளிக்கப்பட்டது. இதை, தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும் தங்களின் வேல் யாத்திரை வெற்றி பெற்றதை இது காட்டுவதாகவும் எல். முருகன் அப்போது தெரிவித்திருந்தார்.

பாஜக தவிர்த்து ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்டதை அதிமுகவும் விமர்சித்தது.

''உண்மையான பிரார்த்தனை செய்யவேண்டும். நாம் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்பவர்கள். ஸ்டாலின் வெளியில் பேசுவது ஒன்றாகவும், உள்ளே நினைப்பது ஒன்றாகவும் இருப்பதால், அவர் வேலை கையில் எடுத்தாலும், முருகனின் அருள் அவருக்குக் கிடைக்காது,'' என, எடப்பாடி பழனிசாமி அப்போது தெரிவித்திருந்தார்.

இத்தகைய விமர்சனங்களுக்கு அச்சமயத்தில் பிபிசியிடம் பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "தமிழ்நாட்டில் முதலில் வேலுக்காக யாத்திரை நடத்தியவர் கலைஞர் கருணாநிதிதான். 1982இல் திருத்தணி கோவில் வேல் காணவில்லை என்பதை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஏற்க மறுத்தார்.

திருச்செந்தூர் கோவில் வேல் மீட்கப்பட வேண்டும், திருடப்பட்ட வேல் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபயணம் சென்றவர் கருணாநிதி. இறுதியில், வேல் கண்டறிய அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை எம்ஜிஆர் வெளியிடவில்லை. கலைஞர் தனது திறமையால் அந்த அறிக்கையை வெளியில் கொண்டு வந்தார்,'' எனத் தெரிவித்தார்.

`முத்தமிழ் முருகன்` மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்த திமுக - பாஜக, நாம் தமிழர் விமர்சிப்பது ஏன்?
தமிழ் கலாசாரத்தில் முருகன்

இம்மாநாட்டை பாஜகவின் இந்துத்துவ அரசியலுடன் பொருத்திப் பார்ப்பது பொதுபுத்தியால் விளைந்தது என்கிறார், மூத்த பத்திரிகையாளரும் 'கருணாநிதி - எ லைஃப்' உள்ளிட்ட புத்தகத்தின் ஆசிரியருமான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

"பெரியாருடன் 1930களில் முதல் மொழிப்போரிலிருந்து உடன் இருந்தவர் மறைமலை அடிகளார். அவர் சைவ அறிஞர். தமிழ் மெய்யியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் திருமூலரும் வள்ளலாரும்தான் இருக்கின்றனர். தமிழ் மரபில் இங்கிருக்கும் முதன்மை இசை வடிவம் காவடி சிந்துதான். இது 2,000 ஆண்டுகால மரபின் நீட்சி. முருகனுக்கு மாநாடு எடுப்பதை இதனுடன் தான் பொருத்திப் பார்க்க வேண்டும்" என்றார்.

முருகன் தமிழ் கலாசாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஒரு கருப்பொருள் எனக் கூறும் பன்னீர்செல்வன், முக்கிய இசை வடிவமான 'காவடிச் சிந்து' பாடல்களில் அதிகமான பாடல்கள் முருகனுக்காக பாடப்பட்டுள்ளதை உதாரணமாகக் காட்டினார். "முருகன் தமிழ் கலாசாரத்தின் அடையாளம்" என்றார் அவர்.

"சமபந்தியும் சாதி மறுப்பு திருமணமும்தான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை. முருகனுக்கும் குறத்திக்குமான உறவு சாதி மறுப்பைத்தான் பேசுகிறது. அதேபோன்று, இந்த இரண்டையும் பாஜக எங்கே பேசுகிறது" என அவர் கேள்வி எழுப்பினார்.

திருவாரூர் தேரைச் சரிசெய்து இயக்கியது, கோவில்களில் அதிகமான குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நடத்தியது போன்றவற்றையும் குறிப்பிட்ட பன்னீர்செல்வன், இந்து சமய அறநிலையத்துறையே நீதிக்கட்சியின் நோக்கங்களுள் ஒன்றுதான் என்றார்.

பாஜக இதுகுறித்துப் பேசுவது பெரிய விஷயமாக பார்க்கப்படுவதெல்லாம் இந்த தேர்தல் வரைதான் என்றும் சிறிய தோல்வி ஏற்பட்டாலும் அக்கட்சியின் இத்தகைய பேச்சுகள் மக்கள் களத்தில் எடுபடாது என்றும் அவர் கூறினார்.

 
திமுகவும் கடவுளும்
சி.என். அண்ணாதுரை

பட மூலாதாரம்,TWITTER

பெரியார் 1950களில் விநாயகர் சிலைகளை உடைத்தபோது, திராவிடர் கழகத்தின் வழிவந்த திமுக தலைவர் அண்ணா, "பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்" என்றார்.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பதுதான் கடவுள் குறித்த திமுகவின் நிலைப்பாடாக அண்ணா கூறியது.

"கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது" என 'பராசக்தி' திரைப்படத்தில் வசனம் எழுதினார் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி.

தற்போது, "இந்துக்களுக்கு எதிரானது திமுக" என்ற வாதத்திற்கு எதிராக அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பலமுறை கருத்து தெரிவித்துள்ளார்.

"எங்கள் கட்சியில் 90% இந்துக்களே உள்ளனர். கோவில்களுக்குச் சென்று வழிபடுவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். திமுக இந்து விரோத கட்சி அல்ல" என்றார்.

தங்கள் குடும்பத்தினர் கோவில்களுக்குச் செல்வது அவர்களின் தனியுரிமை சார்ந்தது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c0jx8y85j3zo

அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு

2 months ago
அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு
March 15, 2024
 

அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59 ஆயிரத்து 500 பேர் முகாம்களில் உள்ளனர்.

இந்த முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெறஉரிமையில்லை என உத்தரவு பிறப் பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், அதை குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

 

https://www.ilakku.org/அகதி-முகாமில்-பிறந்தோருக/

 

முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை

2 months ago

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் என்ற ஸ்ரீஹரன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் நாளைய தினம்(13) இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்னை மேல்நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

முருகன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் 

சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி முருகனின் மனைவியான நளினி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முருகன் , ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை | Santhan Death Rajiv Gandhi Murder India Srilanka

தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு மதியம் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகிய இவர்கள் 2022ஆம் ஆண்டளவில் விடுதலையாகியமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/santhan-death-rajiv-gandhi-murder-india-srilanka-1710243159

Checked
Sun, 05/19/2024 - 00:35
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed