Aggregator

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை அழிப்பதற்கு இஸ்ரேல் பாலியல் வன்முறையை பயன்படுத்துகின்றது - ஐநா

3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 14 MAR, 2025 | 01:56 PM காசா மருத்துவமனையின் மகப்பேறு வோட்கள் ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் ஒரு இனப்படுகொலை செயல் என ஐநா தெரிவித்துள்ளது. காசாவின் பெண்களிற்கு மருத்துவசதிகளை வழங்கும் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலை இனப்படுகொலை நடவடிக்கைகளிற்கு சமனானது என தெரிவித்துள்ள ஐநா பாலஸ்தீன பிரதேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றை அழிப்பதற்கும் இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீன ஆணைக்குழு மேற்கொண்ட 49 பக்க அறிக்கை ஐநாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காசா மருத்துவமனைகளில் மகப்போறு வோர்ட்கள் மற்றும் பெண்களிற்கு சுகாதார சேவைகளை வழங்கும் ஏனைய நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து விரிவான விபரங்களை அந்த அறிக்கையில் காணமுடிகின்றது. ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் அழிக்கப்பட்டமை காசாவிற்குள் மருந்துகள் உணவுபொருட்கள் நுழைவதற்கு அனுமதிமறுக்கப்பட்டமை காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் இனப்பெருக்க திறனை ஒரு பகுதியாக அழித்துவிட்டது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ரோம் சட்டம் மற்றும் இனப்படுகொலைசமவாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் இரண்டுவகையான இனப்படுகொலைகளாகும்.ஒன்று பாலஸ்தீனியர்களை உடல்ரீதியாக அழிப்பதற்கு திட்டமிட்டு அவர்களின் வாழ்க்கை முறை வேண்டுமென்றே திட்டமிட்டு பாதிப்புகளை ஏற்படுத்துதல் மற்றையது பிறப்பை தடுப்பதற்காக திட்டமிட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என மனித உரிமை பேரவை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் பொது இடங்களில் நிர்ப்பந்தப்படுத்தி ஆடைகளை களைதல் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்முறை அச்சுறுத்தல் ,உட்பட சிலவகையான பாலியல் மற்றும் பாலினஅடிப்படையிலான வன்முறைகளை தங்களின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர் என ஐநாவின்அறிக்கை தெரிவித்துள்ளது. பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அடிப்படையிலான சித்திரவதைகள்போன்ற இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தும் பாலியல்வன்முறையின் வடிவங்களை பயன்படுத்துகின்றது இது யுத்த குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு சமனாது என ஐநா தெரிவித்தள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் நிகழ்த்தப்படும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான குற்றங்களின் பரவல் மற்றும் தீவிரம் பாலஸ்தீன மக்களை சீர்குலைக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் ஒடுக்கவும்அழிக்கவும் இஸ்ரேல் அதிகளவில் பாலியல் வன்முறையை ஒரு போர் வடிவமாக பயன்படுத்துகின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அரசியல் மற்றும் இராணுவத்தலைமை பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு வெளிப்படையான உத்தரவுகளை அல்லது மறைமுகமான ஊக்கத்தை வழங்கியுள்ளது என ஐநாவின் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/209179

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை அழிப்பதற்கு இஸ்ரேல் பாலியல் வன்முறையை பயன்படுத்துகின்றது - ஐநா

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN

14 MAR, 2025 | 01:56 PM

image

காசா மருத்துவமனையின் மகப்பேறு வோட்கள் ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் ஒரு இனப்படுகொலை செயல் என ஐநா தெரிவித்துள்ளது.

காசாவின் பெண்களிற்கு மருத்துவசதிகளை வழங்கும் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலை இனப்படுகொலை நடவடிக்கைகளிற்கு சமனானது என தெரிவித்துள்ள ஐநா பாலஸ்தீன  பிரதேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றை அழிப்பதற்கும் இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீன ஆணைக்குழு மேற்கொண்ட 49 பக்க அறிக்கை ஐநாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

palestine_women_2025.jpg

காசா மருத்துவமனைகளில் மகப்போறு வோர்ட்கள் மற்றும் பெண்களிற்கு சுகாதார சேவைகளை வழங்கும் ஏனைய நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து விரிவான விபரங்களை அந்த அறிக்கையில் காணமுடிகின்றது.

ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் அழிக்கப்பட்டமை காசாவிற்குள் மருந்துகள் உணவுபொருட்கள் நுழைவதற்கு அனுமதிமறுக்கப்பட்டமை  காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் இனப்பெருக்க திறனை ஒரு பகுதியாக அழித்துவிட்டது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ரோம் சட்டம் மற்றும் இனப்படுகொலைசமவாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் இரண்டுவகையான இனப்படுகொலைகளாகும்.ஒன்று பாலஸ்தீனியர்களை உடல்ரீதியாக அழிப்பதற்கு திட்டமிட்டு அவர்களின் வாழ்க்கை முறை வேண்டுமென்றே திட்டமிட்டு பாதிப்புகளை ஏற்படுத்துதல் மற்றையது பிறப்பை தடுப்பதற்காக திட்டமிட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என மனித உரிமை பேரவை  தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் பொது இடங்களில் நிர்ப்பந்தப்படுத்தி ஆடைகளை களைதல் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்முறை அச்சுறுத்தல் ,உட்பட சிலவகையான பாலியல் மற்றும் பாலினஅடிப்படையிலான வன்முறைகளை தங்களின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர் என ஐநாவின்அறிக்கை தெரிவித்துள்ளது.

பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அடிப்படையிலான சித்திரவதைகள்போன்ற இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தும் பாலியல்வன்முறையின் வடிவங்களை  பயன்படுத்துகின்றது இது யுத்த குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு சமனாது என ஐநா தெரிவித்தள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் நிகழ்த்தப்படும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான குற்றங்களின் பரவல் மற்றும் தீவிரம் பாலஸ்தீன மக்களை சீர்குலைக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் ஒடுக்கவும்அழிக்கவும் இஸ்ரேல் அதிகளவில் பாலியல் வன்முறையை  ஒரு போர் வடிவமாக பயன்படுத்துகின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் அரசியல் மற்றும் இராணுவத்தலைமை பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு வெளிப்படையான உத்தரவுகளை அல்லது மறைமுகமான ஊக்கத்தை வழங்கியுள்ளது என ஐநாவின் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/209179

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும் தடைகளை உடைக்கப்படும் - பிரதமர்

3 months 2 weeks ago
Published By: VISHNU 15 MAR, 2025 | 02:46 AM (எம்.மனோசித்ரா) தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை உணர்ந்து, பொருளாதாரத்தில் பெண்கள் முழுமையாகப் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் தடைகளை உடைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் மகத்தான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழு பங்களிப்பையும் மட்டுப்படுத்தியுள்ளன. பெண்கள் வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களாக முன்னேறக்கூடிய ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் இந்தத் தடைகளை உடைக்க எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. பெண் தொழில்முனைவோருக்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலமும், குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்களின் பொருளாதார பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் மாற்றுத்திறனாளி சேவைகள் போன்ற துறைகளை வலுப்படுத்துவதன் மூலமும் பெண்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/209242

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும் தடைகளை உடைக்கப்படும் - பிரதமர்

3 months 2 weeks ago

Published By: VISHNU

15 MAR, 2025 | 02:46 AM

image

(எம்.மனோசித்ரா)

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை உணர்ந்து, பொருளாதாரத்தில் பெண்கள் முழுமையாகப் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் தடைகளை உடைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் மகத்தான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழு பங்களிப்பையும் மட்டுப்படுத்தியுள்ளன.

பெண்கள் வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களாக முன்னேறக்கூடிய ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் இந்தத் தடைகளை உடைக்க எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

பெண் தொழில்முனைவோருக்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலமும், குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்களின் பொருளாதார பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் மாற்றுத்திறனாளி சேவைகள் போன்ற துறைகளை வலுப்படுத்துவதன் மூலமும் பெண்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/209242

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

3 months 2 weeks ago
சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - எப்போது திரும்புவார்? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,சர்வதேச விண்வெளி நிலையத்தில் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) புதிய குழுவினரை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு செலுத்தியுள்ளது. இந்த இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் மட்டுமே தங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, அவர்கள் 9 மாதங்களுக்கும் மேலாக தங்க நேரிட்டது. "புட்ச் மற்றும் சுனிதா ஆகிய இருவரும் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளனர். அவர்களை மீண்டும் அழைத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று நாசாவின் வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் கூறினார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய குழுவினர் சென்ற 2 நாட்களில் சுனிதா மற்றும் புட்ச் பூமிக்கு தங்களது பயணத்தை தொடங்குவார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ், விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து இவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர். அவர்களுக்குப் பதிலாக, ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிகளைத் தொடர்வார்கள். தமிழ்நாடு பட்ஜெட் 2025: 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப், டேப்14 மார்ச் 2025 உதகை, கொடைக்கானலில் ஏப்ரல் 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் - ஒரு நாளில் எவ்வளவு வாகனங்களுக்கு இனி அனுமதி?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA இவ்விரு குழுக்களுக்கான பணிப்பரிமாற்றம் 2 நாட்கள் நீடிக்கும். அதன் பிறகு பழைய குழுவினர் பூமிக்குத் திரும்பும் பயணத்தை மேற்கொள்வார்கள். ஆனால், பூமியில் பாதுகாப்பான மறு நுழைவுக்கான சூழ்நிலைக்காகக் காத்திருக்க நேரிட்டால், இன்னும் சிறிது தாமதம் ஏற்படலாம் என்று சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தின் மேலாளர் டானா வெய்கல் கூறினார். "வானிலை ஒத்துழைக்க வேண்டும், அது சாதகமாக இல்லாவிட்டால், அந்த நேரம் வரும் வரையில் நாங்கள் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்வோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த வாரமே விண்வெளி வீரர்கள் தங்களின் பணிகளை கைமாற்றத் தொடங்கிவிட்டதாக வெய்கல் விளக்கினார். "சுனிதா, விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவ்சினினிடம் தனது பணிகளை ஒப்படைத்தார்." என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,NASA விண்வெளி நிலையத்தில் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக விண்வெளி வீரர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். சுனிதா வில்லியம்ஸ் அதை தனது "மகிழ்ச்சியான இடம்" என்று விவரித்தார். ஆனால் திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சிமியோன் பார்பர், தனிப்பட்ட முறையில் சில பாதிப்புகள் இருந்திருக்கும் என்று பிபிசி செய்தியிடம் கூறினார். "ஒரு வாரம் நீடிக்கும் ஒரு வேலைப் பயணத்திற்கு நீங்கள் அனுப்பப்படும் போது, அது ஒரு வருடத்தின் சிறந்த பகுதியை எடுக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை," என்று அவர் கூறினார். "விண்வெளியில் இவ்வளவு நீண்ட காலம் தங்கியிருப்பது குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்திருக்கும், அவர்கள் வீட்டில் பல விஷயங்களை அவர் தவறவிட்டிருப்பார்." என்றார் அவர். ஸ்பேஸ்எக்ஸின் போட்டியாளரான போயிங் விண்வெளி நிறுவனத்தின் ஸ்டார்லைனர் என்ற சோதனை விண்கலத்தில் புட்ச் மற்றும் சுனிதா, ஜூன் 2024 தொடக்கத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். விண்கலத்தின் மேம்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் அதனை ஏவுதல் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் போது சிக்கல்கள் இருந்ததால் ஸ்டார்லைனரை ஏவும் பணி பல ஆண்டுகள் தாமதமானது. பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவதற்கு விண்கலத்தின் வேகத்தை குறைக்க தேவைப்படும் ஸ்டார்லைனரின் சில த்ரஸ்டர்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் உந்துவிசை அமைப்பில் ஹீலியம் வாயு கசிவு ஆகியவை அவர்களின் இருப்பை விண்வெளியில் அதிகப்படுத்தியது. இதையடுத்து புட்ச் மற்றும் சுனிதாவை ஸ்டார்லைனரில் கொண்டு வருவதில் ஒரு சிறிய ஆபத்தை கூட அனுமதிக்க கூடாது என்று நாசா முடிவு செய்தது. இதையடுத்து, ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூலில் புட்ச் மற்றும் சுனிதாவை மீண்டும் பூமிக்கு அழைத்து வர தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சர்வதேச விண்வெளி நிலைய பணியாளர்குழு சுழற்சியின் போது இதைச் செய்வதே சிறந்த வழி என்று நாசா முடிவு செய்தது. தமிழில் ரூபாயை குறிக்க 'ரூ' பயன்படுத்தப்பட ஆரம்பித்தது எப்போது?- ஓலைச் சுவடியில் எப்படி எழுதப்பட்டுள்ளது?14 மார்ச் 2025 யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீடித்த அமைதியை ஏற்படுத்துவதில் உள்ள முக்கிய சவால்கள் என்னென்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA "போயிங்கிற்கு கஷ்டம்தான்" புட்ச் மற்றும் சுனிதாவை ஸ்டார்லைனரில் பூமிக்கு அழைத்து வருவது பாதுகாப்பானதாக இருந்திருக்கும் என்று போயிங் நிறுவனம் தொடர்ந்து வாதிட்டு வருகிறது. அதற்கு பதிலாக ஒரு போட்டியாளரான ஸ்பேஸ்எக்ஸின் காப்ஸ்யூலைப் பயன்படுத்துவதற்கான முடிவு குறித்து அந்நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ளது. இது போயிங்கிற்கு "தர்மசங்கடமாக" இருக்கும் என்று டாக்டர் பார்பர் கூறுகிறார். "விண்வெளிக்கு அழைத்துச் சென்ற விண்வெளி வீரர்கள் ஒரு போட்டியாளரின் விண்கலத்தில் திரும்பி வருவதைப் பார்ப்பது போயிங்கிற்கு கஷ்டம்தான்." என்றார் அவர். பட மூலாதாரம்,NASA டிரம்ப், மஸ்க் குற்றச்சாட்டிற்கு நாசா மறுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஈலோன் மஸ்க் ஆகிய இருவரும் கடந்த பிப்ரவரியில் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த கூட்டு நேர்காணலில், புட்ச் மற்றும் சுனிதாவை முன்பே வீட்டிற்கு அழைத்து வந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். "அவர்கள் விண்வெளியில் விடப்பட்டனர்" என்று டிரம்ப் கூறுகிறார். நெறியாளர் சீன் ஹானிட்டி, "அவர்கள் 8 நாட்கள் மட்டுமே அங்கே இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கிட்டத்தட்ட 300 நாட்களாக அங்கே இருக்கிறார்கள்" என்று என்று குறிப்பிட்டார். அதற்கு டிரம்ப் ஒரே வார்த்தையில், "பைடன்" என்று பதிலளித்தார்: "அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அங்கேயே விடப்பட்டனர்." என்று மஸ்க் கூறினார். இந்த கூற்றை நாசாவின் வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச் மறுக்கிறார். "நாங்கள் பல்வேறு வாய்ப்புகளை பரிசீலித்தோம், ஒட்டுமொத்தமாக எது சிறந்தது என்பதைப் பார்க்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துச் செயல்பட்டோம்,," என்று அவர் கூறினார். கொலம்பியா விண்கல விபத்தில் இருந்து நாசா கற்றுக்கொண்ட பாடம் என்ன? ராஜேந்திர சோழன் சிற்றன்னை நினைவாகக் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை மீட்புக் குழுவின் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்ன? "நாசா சரியான முடிவை எடுத்துள்ளது" லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தின் விண்வெளித்துறை தலைவரும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஐரோப்பிய கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றியவருமான டாக்டர் லிப்பி ஜாக்சன், இந்த முடிவை ஆதரித்துள்ளார். "புட்ச் மற்றும் சுனிதாவின் நல்வாழ்வு எப்போதும் அனைவரின் மனதிலும் பிரதானமாக இருந்திருக்கும். ஏனெனில் அவர்கள் முன்னிருந்த சூழ்நிலைகளை எவ்வாறு சிறப்பாகச் சமாளிப்பது என்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன," என்று அவர் கூறினார். "தொழில்நுட்பம் மற்றும் சரியான நிகழ்ச்சி நிரல் காரணங்களுக்காக, நாசா அந்த முடிவுகளை எடுத்தது. மேலும் புட்ச் மற்றும் சுனியைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் சரியான தீர்வையும் நாசா கண்டுபிடித்தது. சர்வதேச விண்வளி நிலையத்தின் சக பணியாளர்களுடன் சேர்ந்து அவர்கள் பூமிக்குத் திரும்புவதைப் பார்க்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று லிப்பி ஜாக்சன் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c3vw732lyyro

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை மாற்றுங்கள் ; இராதாகிருஸ்ணன் எம்பி கோரிக்கை

3 months 2 weeks ago
14 MAR, 2025 | 04:32 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்கு புதிதாக மின்னிணைப்பை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு அந்த தோட்ட முகாமையாளரின் சிபாரிசு கடிதத்தை பெற வேண்டும். இலங்கை மின்சார சபைக்கு தோட்ட முகாமையாளர் ஏன் கடிதம் வழங்க வேண்டும். இந்த முறைமையை மாற்றுங்களெனன மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பெருந்தோட்ட பகுதியில் 10 பேச்சர்ஸ் காணியில் தனி வீட்டினை நிர்மாணிப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சபையில் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறேன். பெருந்தோட்ட பகுதிகள் 22 தோட்ட கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஒருசில தோட்டங்களில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் ஏதுமில்லை. பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பெருந்தோட்டங்களை பாதுகாக்க வேண்டுமாயின் அப்பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாக்க வேண்டும். 50 ஆண்டுகாலத்துக்கே பெருந்தோட்டங்கள் தோட்ட கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. மிகுதி 20 ஆண்டுகளில் இந்த தோட்ட கம்பனிகள் எந்த தோட்டங்களையும் அபிவிருத்தி செய்யபோவதில்லை. 50 ஆண்டுகால குத்தகையை நீடிப்பதா அல்லது இரத்துச் செய்வதா என்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். 20 ஆண்டுகளுக்கு பிறகு தோட்டத்தொழில்துறை முழுமையாக கைவிடப்படும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு தோட்ட கம்பனிகள் செயற்படுகின்றன. ஆகவே தோட்ட கம்பனிகளுடன் அரசாங்கம் நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். பெருந்தோட்டங்களை அரசாங்கத்தினால் நிர்வகிக்க முடியாது. ஆகவே குத்தகை வழங்கல் தொடர்பில் தோட்ட நிறுவனங்களுடன் அரசாங்கம் விரைவாக பேச வேண்டும். பெருந்தோட்டங்களில் தற்போது தோட்ட நிர்வாகிகள் தான் ஆங்கிலேயர்களை போன்று ஆதிக்கம் கொள்கிறார்கள். தோட்ட மக்களின் நலன்கருதி எந்த திட்டங்களையும் தோட்ட கம்பனிகள் மேற்கொள்வதில்லை. பொகவந்தலாவலை பகுதியில் உள்ள பொகவான தோட்டத்தில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள வீதியை அந்த தோட்ட முகாமையாளர் மறித்துள்ளார். இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துங்கள். தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்கு புதிதாக மின்னிணைப்பை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு அந்த தோட்ட முகாமையாளரின் சிபாரிசு கடிதத்தை பெற வேண்டும்.இலங்கை மின்சார சபைக்கு தோட்ட முகாமையாளர் ஏன் கடிதம் வழங்க வேண்டும்.இந்த முறைமையை மாற்றுங்கள். தோட்ட முதலாளிமார் சம்மேளம் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே 1700 ரூபா சம்பளத்தை வழங்க முடியும். இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பெருந்தோட்ட பகுதிகளில் 64,740 தனி வீடுகள், 70,444 தனி லயன் அறைகள், 65,279 இரட்டை லயன் அறைகள் மற்றும் 10,891 தற்காலிக வீடுகள் காணப்படுகின்றன. பெருந்தோட்டத்துறைகளில் 10 பேச்சர்ஸ் காணியுடன் தனி வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய முன்னெடுக்கப்படும் கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை பெருந்தோட்ட பகுதியில் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/209192

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை மாற்றுங்கள் ; இராதாகிருஸ்ணன் எம்பி கோரிக்கை

3 months 2 weeks ago

14 MAR, 2025 | 04:32 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்கு புதிதாக மின்னிணைப்பை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு அந்த தோட்ட முகாமையாளரின் சிபாரிசு கடிதத்தை பெற வேண்டும். இலங்கை மின்சார  சபைக்கு தோட்ட முகாமையாளர் ஏன் கடிதம் வழங்க வேண்டும். இந்த முறைமையை மாற்றுங்களெனன மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை  (14) நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்   பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பெருந்தோட்ட பகுதியில் 10 பேச்சர்ஸ் காணியில் தனி வீட்டினை நிர்மாணிப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சபையில்  உறுதிப்படுத்தியதை வரவேற்கிறேன். 

பெருந்தோட்ட பகுதிகள் 22 தோட்ட கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.  ஒருசில தோட்டங்களில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் ஏதுமில்லை.

பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பெருந்தோட்டங்களை பாதுகாக்க வேண்டுமாயின் அப்பிரதேசங்களில் வாழும் மக்களை  பாதுகாக்க வேண்டும். 

50 ஆண்டுகாலத்துக்கே பெருந்தோட்டங்கள்  தோட்ட கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. மிகுதி 20 ஆண்டுகளில் இந்த தோட்ட கம்பனிகள் எந்த தோட்டங்களையும் அபிவிருத்தி செய்யபோவதில்லை.

 50 ஆண்டுகால குத்தகையை நீடிப்பதா அல்லது  இரத்துச் செய்வதா என்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.  

20 ஆண்டுகளுக்கு பிறகு தோட்டத்தொழில்துறை முழுமையாக கைவிடப்படும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு தோட்ட கம்பனிகள் செயற்படுகின்றன. ஆகவே  தோட்ட  கம்பனிகளுடன்   அரசாங்கம் நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

பெருந்தோட்டங்களை அரசாங்கத்தினால் நிர்வகிக்க முடியாது. ஆகவே  குத்தகை வழங்கல் தொடர்பில் தோட்ட நிறுவனங்களுடன் அரசாங்கம் விரைவாக பேச வேண்டும்.

பெருந்தோட்டங்களில் தற்போது  தோட்ட நிர்வாகிகள் தான்  ஆங்கிலேயர்களை  போன்று   ஆதிக்கம் கொள்கிறார்கள். தோட்ட மக்களின் நலன்கருதி  எந்த திட்டங்களையும்  தோட்ட கம்பனிகள் மேற்கொள்வதில்லை.

பொகவந்தலாவலை பகுதியில் உள்ள பொகவான தோட்டத்தில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள வீதியை அந்த தோட்ட முகாமையாளர்  மறித்துள்ளார். இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது. 

ஆகவே  இவ்விடயம் தொடர்பில்  கவனம்  செலுத்துங்கள்.  தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்கு புதிதாக மின்னிணைப்பை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு அந்த தோட்ட முகாமையாளரின் சிபாரிசு கடிதத்தை பெற வேண்டும்.இலங்கை மின்சார  சபைக்கு தோட்ட முகாமையாளர் ஏன் கடிதம் வழங்க வேண்டும்.இந்த முறைமையை மாற்றுங்கள்.

தோட்ட முதலாளிமார் சம்மேளம் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே 1700  ரூபா சம்பளத்தை வழங்க முடியும். இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

பெருந்தோட்ட பகுதிகளில் 64,740 தனி வீடுகள், 70,444  தனி லயன் அறைகள், 65,279 இரட்டை  லயன் அறைகள் மற்றும் 10,891  தற்காலிக வீடுகள் காணப்படுகின்றன.  

பெருந்தோட்டத்துறைகளில்  10 பேச்சர்ஸ் காணியுடன்  தனி வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாதிபதியின்  எண்ணக்கருவுக்கு அமைய  முன்னெடுக்கப்படும் கிளின் ஸ்ரீ லங்கா  செயற்திட்டத்தை பெருந்தோட்ட பகுதியில் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/209192

ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னை நினைவாகக் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை

3 months 2 weeks ago
படக்குறிப்பு, ''இந்த நிலவறை அமைப்பு 14-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டதாக இருக்கலாம்'' கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 14 மார்ச் 2025 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவுக்காக நடந்த சீரமைப்பு பணியின் போது ஒரு பாதாள அறை வெளிப்பட்டது. பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்ன? தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சோழர்கால மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் (பஞ்சவன்மாதேவி ஈஸ்வரம்) உள்ளது. இந்த பழமை வாய்ந்த சோழர் கால கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவிலை தூய்மைப்படுத்தி தளம் சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. குடமுழுக்கு விழா பணிகள் படக்குறிப்பு, பட்டீஸ்வரத்தில் உள்ள சோழர்கால மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் கடந்த திங்கள்கிழமை (10-03-2025) பிரகாரப் பகுதியில் தளம் போடும் பணி செய்து கொண்டிருந்த பணியாளர்கள் மண்வெட்டி கடப்பாரை கொண்டு தரையில் குத்தியபோது வித்தியாசமான ஓசை கேட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் தட்டிய போது எழுந்த ஓசை மாறுபடவே பணிகளை உடனடியாக நிறுத்தினர். கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவியிடம் தகவலைக் கூறி அவரையும் அழைத்து வந்து தரையைத் தோண்டினர். ''அப்போது அப்பகுதி உள்வாங்கியது. பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்த பொருட்களை அகற்றியபோது அங்கு கருங்கல்லில் கட்டப்பட்டு மூடப்பட்ட பாதாள அறை வெளிப்பட்டது.'' என்றார் இக்கோவிலின் செயல் அலுவலர் நிர்மலா தேவி. ''விரைவில் பாதாள அறையின் உள்ளே இறங்கி ஆய்வு மேற்கொள்ளப்படும்" எனவும் அவர் கூறினார். மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் தகவல் தரப்பட்டுள்ளதாகவும், வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் வந்து பார்வையிட்டதாகவும் நிர்மலா தேவி பிபிசி தமிழிடம் கூறினார். படக்குறிப்பு, கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு சீரமைக்கும் பணி நடைபெறுகிறது பிபிசி தமிழிடம் பேசிய விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், "இக்கோவில் ராஜராஜசோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவி என்பவரின் பள்ளிப்படை கோயிலாகும்" என்று கூறினார். "பஞ்சவன்மாதேவி தனது கணவரான ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் மீது அதீத பாசம் கொண்டு அவரை தனது சொந்த மகனாக வளர்த்து வந்தார். அந்த அளவற்ற பாசத்தின் வெளிப்பாடாக தனது சிற்றன்னையின் நினைவாக (பஞ்சவன் மாதேவி ஈஸ்வரம்) மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோயிலை ராஜேந்திரசோழன் கட்டியதாக கூறிய பேராசிரியர் ரமேஷ் தொடர்ந்து கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ரகசிய பாதாள அறை குறித்து விவரித்தார். பாதாள நிலவறை படக்குறிப்பு,"இந்த பாதாள அறை எதிரிகள் படையெடுப்புகளின்போது விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்" "கோவிலில் தற்போது வெளிப்பட்டுள்ள பாதாள அறை தரைப்பகுதி மட்டத்திலிருந்து சுமார் 8 அடி ஆழத்தில் உள்ளது. இதன் நீளம் 15 அடியாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் கண்டறியப்பட்டுள்ள இந்த பாதாள அறை எதிரிகள் படையெடுப்புகளின் போது விக்கிரகங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்" என்கிறார் பேராசிரியர் ரமேஷ். இந்த நிலவறை அமைப்பு 14-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். "தொல்லியல்துறையினர் ஆய்விற்கு பின்பு, பாதாள அறையில் உள்ள மண்ணை வெளியே எடுத்தால் தான் அறையில் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளதா? இது எதுவரை செல்கின்றது உள்ளிட்ட பிற தகவல்கள் தெரியவரும்" என்றார் பேராசிரியர் ரமேஷ். பள்ளிப்படை என்றால் என்ன? படக்குறிப்பு, ராஜேந்திர சோழனின், ஏழாம் ஆட்சியாண்டில் ( கி.பி .1021) கட்டப்பட்ட இந்த கோவில் கருவறை பகுதியில் மிகப்பெரிய கல்வெட்டு காணப்படுகிறது ''பள்ளிப்படை என்பது சைவ சடங்குகளின்படி, இறந்தவரின் அஸ்தி புதைக்கப்பட்ட இடத்தின் மேல் சிவலிங்கம் வைத்து வழிபடுவதாகும். பள்ளிப்படையை மிக நெருக்கமான, நேசிக்கப்பட்ட ஒருவர் இறந்து விட்டால் அவர்களுக்காக கட்டப்படும் கோவில் என்றும் கூறலாம்'' என்கிறார் பேராசிரியர் ரமேஷ்‌. ''ராஜேந்திர சோழனின், ஏழாம் ஆட்சியாண்டில் ( கி.பி .1021) கட்டப்பட்ட இந்த கோவில் கருவறை பகுதியில் மிகப்பெரிய கல்வெட்டு காணப்படுகிறது. கோவிலில் பூஜைகள் தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்றதை இந்த கல்வெட்டு மிக விரிவாக தெரிவிக்கின்றது" என்கிறார் ரமேஷ். தொடர்ந்து பேசிய அவர், "தினமும் பூஜை நடத்துவதற்காக ஓதுவார்கள், மேளம் வாசிப்பவர்கள், சைவ பிராமணர் ஒருவர், கணக்கு வழக்குகளைப் பார்ப்பவர் ஒருவர், பொருளாளர் ஒருவர், காவலர் ஒருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பணிகள், கொடுக்க வேண்டிய ஊதியம் ஆகியவை இந்த கோவிலில் அமைந்துள்ள கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது" என்றார். ராஜேந்திரன் மற்றும் அவரது சிற்றன்னை பிறந்த நட்சத்திரமான திருவாதிரை நாளில் விஷேசப் பூஜை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது சாமிக்குப் படைக்க வேண்டிய உணவு வகைகள் என்ன என்பது கல்வெட்டில் கூறப்பட்டு இருக்கிறது என்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார். படக்குறிப்பு,கருவறையின் அர்த்தமண்டபத்தில் உள்ள நந்தியும் கல்தூணும் பழுவேட்டரையர்களின் கலைப்பாணியில் அமைந்த படைப்பாகும் பழுவேட்டரையர் மகள் பிபிசி தமிழிடம் பேசிய கல்வெட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன், "சோழ மன்னர்கள் வரிசையில் முதலாம் ராஜராஜனின் மனைவியே பஞ்சவன்மாதேவி. இவர் சேர குறுநில மன்னர்களுள் ஒருவராகிய பழுவேட்டரையரின் மகள். திருச்சி மாவட்டம் உடையார்குடி தாலுகாவில் உள்ள பழுவூரே இவரின் ஊராகும். இந்த கோயில், பஞ்சவன்மாதேவி மறைந்த பிறகு, ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் தன் சிற்றன்னைக்காக கட்டிய பள்ளிப்படை கோவிலாகும்'' என்றார். "பழுவேட்டரையரின் மகள் என்பதால் பஞ்சவன்மாதேவி பிறந்த மண்ணின் கலைத்திறன் இக்கோவிலில் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோவில் கடந்த காலங்களில் 'பஞ்சவன் மாதேவிஈஸ்வரம்' என்று அழைக்கப்பட்டது" என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2er47rzekvo

ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..

3 months 2 weeks ago
சித்திரவதை செய்து படுகொலை செய்ய உதவிய ரணில்,இனப்படுகொலை செய்த ராஜபக்சாக்கள்,தொழிற்சாலைகள் எரித்து இனக்கலவரங்களை தூண்டி சோசலிசம் வளர்த்த கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியாகவும் பிரதமர்களாகவும் இருக்கும் நாட்டின் ... கிராமத்திலிருந்து போனவான் பாராளுமன்றத்தில் உளறுவதால் படித்த யாழ்ப்பாணத்தானின் மானம் போகுது என் அழுவது கொஞ்சம் ஒவர்.... தலைவரின் பெயரை தன் சுயநல அரசியலுக்கு பயன் படுத்தும் பொழுதே வைத்தியர் பைத்தியம் என புரிந்திருக்க வேணும் ..