Aggregator

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு

3 months 1 week ago
பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார அமைச்சு 26 Mar, 2025 | 05:06 PM இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுப்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் அறிவித்துள்ள தடைகள் ஒரு தலைப்பட்சமானவை என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதனால் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சு இலங்கையின் உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களிற்கான பிரிட்டனின் தடைகள் என வெளியிட்ட செய்திக்குறிப்பினை வெளிவிவகார அமைச்சு கருத்தில்கொண்டுள்ளது. பிரிட்டிஸ் அரசாங்கம் நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது இவர்களில் மூவர் இலங்கையின் முன்னாள் இராணுவதளபதிகள் கடற்படை தளபதி. காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள் என்ற அர்ப்பணிப்பு என வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பையும் நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்த அடிப்படையில் இது குறிப்பிட்ட தனிநபர்களின் சொத்துக்களை முடக்குதல்,போக்குவரத்து தடை ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிட்டனின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என நாங்கள் வலியுறுத்தவிரும்புகின்றோம். இவ்வாறன ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவாது மாறாக .இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை குழப்பமானதாக்கும். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பொறிமுறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது,கடந்த காலத்தின் எந்த மனித உரிமை மீறல்களும் உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறை ஊடாகவே கையாளப்படவேண்டும். இலங்கையின் இந்த நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரி;க்கிடம் எடுத்துரைத்துள்ளார். பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார அமைச்சு | Virakesari.lk

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ; விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா

3 months 1 week ago
26 Mar, 2025 | 05:29 PM இழுவலைகளை பயன்படுத்தும் மீன்பிடி முறைமையை படிப்படியாக நிறுத்த முடியும் என்று இராமேஸ்வரம் மாவட்டத்தின் விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்தார். அத்துடன், தொப்புள்கொடி உறவான இந்திய - இலங்கை மீனவர்கள் மீன்பிடித்தொழிலை சுமூகமாக மேற்கொள்வதற்கு இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வவுனியாவில் புதன்கிழமை (26) இடம்பெற்ற இந்திய - இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளது பேச்சுவார்த்தையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்து 5 பேர் கொண்ட குழுவாக நான்கு மாவட்ட இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தினோம். எங்கள் தொப்புள் கொடி உறவுகளுடன் எமது நிறைகுறைகளை பேசியதில் எமக்கு மிக்க மகிழ்ச்சியே. அவர்களுடைய கஷ்ட நிலைகளை எங்களிடம் கூறினார்கள். எங்களுடைய நெருக்கடியான நிலமைகளையும் நாங்கள் கூறினோம். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை இருந்தது. சுமுகமாக நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்த இலங்கை மீனவ சமாசத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக இரண்டு அரசாங்கங்களும் பேச்சுக்களை நடத்தியதன் பின்னர் மீனவர் பிரச்சினை குறித்து பேசப்படவில்லை. 9வருடங்களில் இரண்டு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பாதிப்பை எவ்வாறு நிறுத்துவது என்று பேசப்பட்டது. அவர்களது கோரிக்கை இந்திய இழுமடி வலைகளை முற்றாக நிறுத்த வேண்டும். அதனை நிறுத்தினால் கடல்வளம் பாதுகாக்கப்படும் என்பதாகும். நாங்கள் இந்த இழுவலையை படிப்படியாக குறைப்பதற்கு இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் ஊடாக சம்மதிக்கின்றோம் எனக்கூறினோம். அடுத்த கட்டமாக ஏனைய மாவட்ட மீனவ அமைப்புக்களையும் ஒன்றுதிரட்டி இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் உதவியுடன் இப்பிரச்சினைக்கு பேச்சுக்களை முன்னெடுத்து நல்லதொரு தீர்வை அடுத்த கட்டமாக எட்ட முடியும். வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை அரசாங்கம் தமது சட்டத்தின்படி 6 மாதம், ஒரு வருடம், 2 வருடம் என்று சிறை வைத்துள்ளார்கள். அந்த மீனவர்களை மனிதபிமான முறையில் விடுவிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாகவும் தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளோம். அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின் போது அதனை செய்யலாம் என்று இலங்கை மீனவர்கள் கூறியுள்ளார்கள். நிச்சயமாக இலங்கை, இந்திய அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இதற்கொரு தீர்வை எட்ட வேண்டும். இந்திய - இலங்கை கடற்பரப்பு மிகக் குறைவாக உள்ளது. அதிலும் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியதால் கடற்பரப்பு குறைவாக உள்ளது. அதனால் தான் எல்லை தாண்டும் பிரச்சினை ஏற்படுகிறது. இதில் இந்திய - இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றோம். நிலமையை கருத்தில் கொண்டு இரண்டு அரசாங்கங்களும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அரசியல் தலைவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காக சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அது பற்றி எமக்குத் தெரியாது. எங்களுடைய எண்ணம் கச்ச தீவை மீட்பதல்ல. இரு நாட்டு மீனவர்களும் தொப்புள்கொடி உறவாக அப்பகுதியில் மீன் பிடிக்க வேண்டும். இரு பகுதி மீனவர்களும் பாதிக்காத வகையில் இரு நாட்டு அரசாங்கமும் நல்ல முடிவை எடுக்க வேண்டியது கட்டாயம். அவர்கள் எடுப்பார்களென நாங்கள் நம்புகின்றோம் எனத் தெரிவித்தார். இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ; விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா | Virakesari.lk

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ; விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா

3 months 1 week ago

26 Mar, 2025 | 05:29 PM

image

இழுவலைகளை பயன்படுத்தும் மீன்பிடி முறைமையை படிப்படியாக நிறுத்த முடியும் என்று இராமேஸ்வரம் மாவட்டத்தின் விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்தார்.

அத்துடன், தொப்புள்கொடி உறவான இந்திய - இலங்கை மீனவர்கள் மீன்பிடித்தொழிலை சுமூகமாக மேற்கொள்வதற்கு இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் புதன்கிழமை (26) இடம்பெற்ற இந்திய - இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளது பேச்சுவார்த்தையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்து 5 பேர் கொண்ட குழுவாக நான்கு மாவட்ட இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன்  பேச்சுக்களை நடத்தினோம்.

எங்கள் தொப்புள் கொடி உறவுகளுடன் எமது நிறைகுறைகளை பேசியதில் எமக்கு மிக்க மகிழ்ச்சியே. அவர்களுடைய கஷ்ட நிலைகளை எங்களிடம் கூறினார்கள். எங்களுடைய நெருக்கடியான நிலமைகளையும் நாங்கள் கூறினோம்.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை இருந்தது. சுமுகமாக நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்த இலங்கை மீனவ சமாசத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக இரண்டு அரசாங்கங்களும் பேச்சுக்களை நடத்தியதன் பின்னர் மீனவர் பிரச்சினை குறித்து பேசப்படவில்லை. 9வருடங்களில் இரண்டு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பாதிப்பை எவ்வாறு நிறுத்துவது என்று பேசப்பட்டது. அவர்களது கோரிக்கை இந்திய இழுமடி வலைகளை முற்றாக நிறுத்த வேண்டும். அதனை நிறுத்தினால் கடல்வளம் பாதுகாக்கப்படும் என்பதாகும்.

நாங்கள் இந்த இழுவலையை படிப்படியாக குறைப்பதற்கு இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் ஊடாக சம்மதிக்கின்றோம் எனக்கூறினோம். 

அடுத்த கட்டமாக ஏனைய மாவட்ட மீனவ அமைப்புக்களையும் ஒன்றுதிரட்டி இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் உதவியுடன் இப்பிரச்சினைக்கு பேச்சுக்களை முன்னெடுத்து நல்லதொரு தீர்வை அடுத்த கட்டமாக எட்ட முடியும்.

வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை அரசாங்கம் தமது சட்டத்தின்படி 6 மாதம், ஒரு வருடம், 2 வருடம் என்று சிறை வைத்துள்ளார்கள். அந்த மீனவர்களை மனிதபிமான முறையில் விடுவிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாகவும் தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளோம்.

அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின் போது அதனை செய்யலாம் என்று இலங்கை மீனவர்கள் கூறியுள்ளார்கள். நிச்சயமாக இலங்கை, இந்திய அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இதற்கொரு தீர்வை எட்ட வேண்டும்.

இந்திய - இலங்கை கடற்பரப்பு மிகக் குறைவாக உள்ளது. அதிலும் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியதால் கடற்பரப்பு குறைவாக உள்ளது. அதனால் தான் எல்லை தாண்டும் பிரச்சினை ஏற்படுகிறது.

இதில் இந்திய - இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றோம். நிலமையை கருத்தில் கொண்டு இரண்டு அரசாங்கங்களும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

அரசியல் தலைவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காக சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அது பற்றி எமக்குத் தெரியாது. எங்களுடைய எண்ணம் கச்ச தீவை மீட்பதல்ல.

இரு நாட்டு மீனவர்களும் தொப்புள்கொடி உறவாக அப்பகுதியில் மீன் பிடிக்க வேண்டும். இரு பகுதி மீனவர்களும் பாதிக்காத வகையில் இரு நாட்டு அரசாங்கமும் நல்ல முடிவை எடுக்க வேண்டியது கட்டாயம். அவர்கள் எடுப்பார்களென நாங்கள் நம்புகின்றோம் எனத் தெரிவித்தார்.

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ; விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா | Virakesari.lk

போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேர் கைது

3 months 1 week ago
அண்மைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் லிபரல் 6 புள்ளிகள் கன்சர்வேட்டிவ்வை விட முன்னுக்கு நிற்பதாகவே காட்டுகின்றன. கன்சர்வேட்டிவ் கட்சி, கார்பன் Tax விடயத்தினை மட்டும் அதிகமாக தூக்கிப் பிடித்து கொண்டு இருந்தார்கள். கார்னே வந்த உடனே ஏப்ரல் ஒன்றில் இருந்து அதை நீக்குவதாக அறிவித்த பின் கன்சர்வேட்டிவ் இற்கான வெற்றி வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது. அதுவும் வரும் ஏப்ரல் முதலாம் திகதி, சனம் gas விலையில் ஏற்படப் போகும் சடுதியான விலை குறைவை கண்டபின், முதல் நடந்தவற்றை எல்லாம் மறந்து விடும் என நினைக்கின்றேன். இதை விட, லிபரல் ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிராக காட்டும் எதிர்ப்பை விட கன்சர்வேட்டிவ் காட்டும் எதிர்ப்பு மிக குறைவு. இந்த விடயத்தில் அவர்கள் ஏற்கனவே தோற்று விட்டார்கள் என நினைக்கின்றேன். அத்துடன் வலதுசாரிகளுக்கு எதிரான மனநிலை ட்ரம்ப் அங்கு ஆட்சிக்கு வந்த பின் இங்கு அதிகரித்து, அதுவும் கன்சர்வேட்டிவ் இற்கு எதிரானதாக அமைந்துள்ளது. என்ன நடந்தாலும் நான் கன்சர்வேட்டிவ் இற்குத்தான் வாக்களிப்பேன். இங்கு சுற்றுலா மற்றும் மாணவர் வீசாவில் வந்தவர்களுக்கு குறுக்கு வழிகளில் இந்த தொழில் விசா எடுத்துக் கொடுப்பதன் மூலம் கடந்த சில வருடங்களில் பெருந்தொகை பணத்தை உழைத்த ஒரு கூட்டம் இங்கு உள்ளது. கனடிய அரசு குடியேற்ற விதிகள் மற்றும் மாணவர் வீசாக்களை இறுக்கிய பின், இவர்களின் வருமானம் குறைவடைந்தமையால் மாற்று குறுக்கு வழிகளை தேடுகின்றனர்.

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கும் இடையில் மோதல்

3 months 1 week ago
யோஷிதவுடனான இரவு விடுதி மோதல்: சரணடைந்த 4 சந்தேக நபர்கள்! கொழும்பு, கொம்பனி வீதி பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியின் முன் சனிக்கிழமை (22) இரவு நடந்த கைகலப்பு தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) சரணடைந்துள்ளனர். தற்போது சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, செவ்வாய்க்கிழமை (25) கொம்பனித் வீதி காவல் நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். யோஷித ராஜபக்ஷவுடன் வந்த சில நபர்களுக்கும் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கருத்து வேறுபாடு பாதுகாப்பு காவலர் மீதான தாக்குதலாக மாறியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் முன்னதாக அடையாளம் கண்டுள்ளனர். காயமடைந்த பாதுகாப்பு காவலர் தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். https://athavannews.com/2025/1426503

கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!

3 months 1 week ago

New-Project-349.jpg?resize=750%2C375&ssl

கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!

கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கருணாநிதி மறைந்துவிட்டதால் அவருக்கு பதிலாக திமுக பொருளாளர் டிஆர் பாலுவை மனுதாரராக சேர்க்கவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (25) அனுமதித்தது.

தமிழ்நாட்டுக்கு சொந்தமானது கச்சத்தீவு. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வசம் இருந்தது கச்சத்தீவு. ஆனால் மத்திய அரசு 1974-ம் ஆண்டு இலங்கைக்கு தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை தாரைவார்த்தது.

கச்சத்தீவு தாரைவார்க்கபட்டதால் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உரிமை இருந்த போதும் எல்லை தாண்டிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்தி தற்போதும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

இதனால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நெடுநாள் முழக்கம்.

தமிழ்நாடு சட்டசபையிலும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் கச்சத்தீவு மீட்புக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இறுதியாக விசாரிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது ஜெயலலிதா காலமானார்.

இதனால் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அதேபோல கருணாநிதி மறைந்த நிலையில் அவருக்கு பதில் திமுக பொருளாளர் டிஆர் பாலு தம்மை மனுதாரராக சேர்க்க கோரியிருந்தார்.

இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் நேற்று கச்சத்தீவு வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது கருணாநிதிக்கு பதில் டிஆர் பாலுவை மனுதாரர்களில் ஒருவராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் கச்சத்தீவு மீட்பு தொடர்பான இந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

https://athavannews.com/2025/1426497

கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!

3 months 1 week ago
கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை! கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கருணாநிதி மறைந்துவிட்டதால் அவருக்கு பதிலாக திமுக பொருளாளர் டிஆர் பாலுவை மனுதாரராக சேர்க்கவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (25) அனுமதித்தது. தமிழ்நாட்டுக்கு சொந்தமானது கச்சத்தீவு. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வசம் இருந்தது கச்சத்தீவு. ஆனால் மத்திய அரசு 1974-ம் ஆண்டு இலங்கைக்கு தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை தாரைவார்த்தது. கச்சத்தீவு தாரைவார்க்கபட்டதால் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உரிமை இருந்த போதும் எல்லை தாண்டிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்தி தற்போதும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இதனால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நெடுநாள் முழக்கம். தமிழ்நாடு சட்டசபையிலும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் கச்சத்தீவு மீட்புக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இறுதியாக விசாரிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது ஜெயலலிதா காலமானார். இதனால் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதேபோல கருணாநிதி மறைந்த நிலையில் அவருக்கு பதில் திமுக பொருளாளர் டிஆர் பாலு தம்மை மனுதாரராக சேர்க்க கோரியிருந்தார். இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் நேற்று கச்சத்தீவு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது கருணாநிதிக்கு பதில் டிஆர் பாலுவை மனுதாரர்களில் ஒருவராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கச்சத்தீவு மீட்பு தொடர்பான இந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. https://athavannews.com/2025/1426497

தென் கொரியாவில் மிக மோசமான காட்டுத் தீ; 18 பேர் உயிரிழப்பு!

3 months 1 week ago
தென் கொரியாவில் மிக மோசமான காட்டுத் தீ; 18 பேர் உயிரிழப்பு! தென் கொரியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர் என்று சியோலின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்தானது நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீக்கான சாதனைப் புத்தகங்களை மீண்டும் எழுதுகின்றன என்று தென்கொரியாவின் தற்காலிகத் தலைவர் ஹான் டக்-சூ கூறினார். காட்டுத் தீயினை அடுத்து 23,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் பல பாரம்பரிய கலாச்சார தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்த கோவில் அழிக்கப்பட்டது. புதன்கிழமை (26) நண்பகலுக்குப் பின்னர் உய்சோங் கவுண்டியின் மலைகளில் தீயணைப்பு ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், விபத்துக்கான காரணத்தை விசாரித்து வரும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் சுமார் 5,000 இராணுவ வீரர்களும் பல தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே போல் கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. செவ்வாயன்று (25) தேசிய தீயணைப்பு நிறுவனம், நெருக்கடியை மிக உயர்ந்த தீயணைப்பு நடவடிக்கை நிலைக்கு உயர்த்தியுள்ளதாகக் கூறியது. இந்த ஆண்டு இதுபோன்ற எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறை. தென் கொரியாவில் காட்டுத்தீ ஒப்பீட்டளவில் அரிதானது, மேலும் அது தொடர்பான உயிரிழப்புகள் அரிதானவை. கடந்த சில நாட்களுக்குள் 18 பேரைக் கொன்ற தற்போதைய தீ விபத்துகள், நாட்டின் வரலாற்றில் மிகவும் கொடியவை. சுமார் 17,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன, இது தென் கொரியாவின் வரலாற்றில் பரப்பளவில் மூன்றாவது பெரிய தீ விபத்து ஆகும். உய்சோங் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில், மாகாணத்தின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றான கி.பி 618 இல் கட்டப்பட்ட கவுன்சா கோயில் எரிந்தது. ஜோசோன் வம்சத்தின் (1392-1910) தேசிய புதையலாகக் கருதப்பட்ட ஒரு புத்த கட்டிடக்கலை அமைப்பும் அழிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அனைத்து பணியாளர்களும் உபகரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக தற்காலிகத் தலைவர் ஹான் கூறினார், ஆனால் பலத்த காற்று தொடர்ந்து மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது. தென் கொரியாவில் சராசரியை விட குறைவான மழைப்பொழிவுடன், இயல்பை விட வறண்ட சூழல் நிலவுகிறது. இந்த ஆண்டு ஏற்கனவே 244 காட்டுத்தீ சம்பவங்கள் நடந்துள்ளன – கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 2.4 மடங்கு அதிகம். காட்டுத்தீக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான சட்டவிரோத எரிப்புக்கு எதிரான அமலாக்கத்தை வலுப்படுத்துவதாகவும், தனிநபர் கவனக்குறைவைத் தடுப்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்தது. காட்டுத்தீ முதன்முதலில் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் தென்கிழக்கில் உள்ள சான்சியோங் கவுண்டியில் வெடித்தது. ஆனால் தற்சமயம் அண்டை நகரங்களான உய்சோங், அன்டோங், சியோங்சாங், யோங்யாங் மற்றும் யோங்டியோக் ஆகிய இடங்களுக்கும் பரவியுள்ளது. https://athavannews.com/2025/1426487

தென் கொரியாவில் மிக மோசமான காட்டுத் தீ; 18 பேர் உயிரிழப்பு!

3 months 1 week ago

New-Project-348.jpg?resize=750%2C375&ssl

தென் கொரியாவில் மிக மோசமான காட்டுத் தீ; 18 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர் என்று சியோலின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தானது நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீக்கான சாதனைப் புத்தகங்களை மீண்டும் எழுதுகின்றன என்று தென்கொரியாவின் தற்காலிகத் தலைவர் ஹான் டக்-சூ கூறினார்.

காட்டுத் தீயினை அடுத்து 23,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் பல பாரம்பரிய கலாச்சார தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்த கோவில் அழிக்கப்பட்டது.

Gm7o3pQbAAA-1vr?format=jpg&name=large

Gm7o3pSagAAOTaq?format=jpg&name=large

புதன்கிழமை (26) நண்பகலுக்குப் பின்னர் உய்சோங் கவுண்டியின் மலைகளில் தீயணைப்பு ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், விபத்துக்கான காரணத்தை விசாரித்து வரும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் சுமார் 5,000 இராணுவ வீரர்களும் பல தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதே போல் கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

செவ்வாயன்று (25) தேசிய தீயணைப்பு நிறுவனம், நெருக்கடியை மிக உயர்ந்த தீயணைப்பு நடவடிக்கை நிலைக்கு உயர்த்தியுள்ளதாகக் கூறியது.

இந்த ஆண்டு இதுபோன்ற எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறை.

தென் கொரியாவில் காட்டுத்தீ ஒப்பீட்டளவில் அரிதானது, மேலும் அது தொடர்பான உயிரிழப்புகள் அரிதானவை.

கடந்த சில நாட்களுக்குள் 18 பேரைக் கொன்ற தற்போதைய தீ விபத்துகள், நாட்டின் வரலாற்றில் மிகவும் கொடியவை.

சுமார் 17,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன, இது தென் கொரியாவின் வரலாற்றில் பரப்பளவில் மூன்றாவது பெரிய தீ விபத்து ஆகும்.

உய்சோங் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில், மாகாணத்தின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றான கி.பி 618 இல் கட்டப்பட்ட கவுன்சா கோயில் எரிந்தது.

ஜோசோன் வம்சத்தின் (1392-1910) தேசிய புதையலாகக் கருதப்பட்ட ஒரு புத்த கட்டிடக்கலை அமைப்பும் அழிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அனைத்து பணியாளர்களும் உபகரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக தற்காலிகத் தலைவர் ஹான் கூறினார், ஆனால் பலத்த காற்று தொடர்ந்து மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது.

தென் கொரியாவில் சராசரியை விட குறைவான மழைப்பொழிவுடன், இயல்பை விட வறண்ட சூழல் நிலவுகிறது.

இந்த ஆண்டு ஏற்கனவே 244 காட்டுத்தீ சம்பவங்கள் நடந்துள்ளன – கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 2.4 மடங்கு அதிகம்.

காட்டுத்தீக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான சட்டவிரோத எரிப்புக்கு எதிரான அமலாக்கத்தை வலுப்படுத்துவதாகவும், தனிநபர் கவனக்குறைவைத் தடுப்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்தது.

காட்டுத்தீ முதன்முதலில் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் தென்கிழக்கில் உள்ள சான்சியோங் கவுண்டியில் வெடித்தது.

ஆனால் தற்சமயம் அண்டை நகரங்களான உய்சோங், அன்டோங், சியோங்சாங், யோங்யாங் மற்றும் யோங்டியோக் ஆகிய இடங்களுக்கும் பரவியுள்ளது.

https://athavannews.com/2025/1426487

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு

3 months 1 week ago
ஹரி ஆனந்த சங்கரி... இப்ப வெளியிட்டது ட்ரெய்லர். 😂 அடுத்து வர இருப்பது மெயின் பிக்சர்... கோத்தா, மகிந்த, சரத் வீரசேகரா எல்லாருக்கும் தடை வரும்போது... இன்னும் கதறப் போகிறார்கள். 🤣

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
தெய்வ‌மே நானும் ராஜ‌ஸ்தானை தான் தெரிவு செய்து இருக்கிறேன்...............கே கே ஆர் சிற‌ந்த‌ அணி அதே போல் ராஜ‌ஸ்தானும் ந‌ல்ல‌ அணி திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இர‌ண்டு அணிக‌ளிலும் இருக்கின‌ம் , ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் சொல்வ‌து போல் வெற்றி வாய்ப்பு அதிக‌ம் KKRக்கு தான் 20ஓவ‌ர் விளைட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்.....................விளையாட்டில் வெற்றி தோல்வி ச‌க‌ய‌ம்..........................................

நானும் ஊர்க் காணியும்

3 months 1 week ago
பாவம் நீங்கள். எல்லோரும் உங்களைப்போலத்தான் என நினைக்கும் வெகுளியாக இருக்கிறீர்கள். அதுபோக, வீட்டு ஐயா ஊர்ப்புதினம் பார்ப்பதில்லையோ? இவ்வளவு துணிவாக எழுதுகிறீர்கள் அதனால கேட்டேன்.