Aggregator
இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ; விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா
இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ; விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா
26 Mar, 2025 | 05:29 PM
இழுவலைகளை பயன்படுத்தும் மீன்பிடி முறைமையை படிப்படியாக நிறுத்த முடியும் என்று இராமேஸ்வரம் மாவட்டத்தின் விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்தார்.
அத்துடன், தொப்புள்கொடி உறவான இந்திய - இலங்கை மீனவர்கள் மீன்பிடித்தொழிலை சுமூகமாக மேற்கொள்வதற்கு இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வவுனியாவில் புதன்கிழமை (26) இடம்பெற்ற இந்திய - இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளது பேச்சுவார்த்தையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்து 5 பேர் கொண்ட குழுவாக நான்கு மாவட்ட இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தினோம்.
எங்கள் தொப்புள் கொடி உறவுகளுடன் எமது நிறைகுறைகளை பேசியதில் எமக்கு மிக்க மகிழ்ச்சியே. அவர்களுடைய கஷ்ட நிலைகளை எங்களிடம் கூறினார்கள். எங்களுடைய நெருக்கடியான நிலமைகளையும் நாங்கள் கூறினோம்.
இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை இருந்தது. சுமுகமாக நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்த இலங்கை மீனவ சமாசத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக இரண்டு அரசாங்கங்களும் பேச்சுக்களை நடத்தியதன் பின்னர் மீனவர் பிரச்சினை குறித்து பேசப்படவில்லை. 9வருடங்களில் இரண்டு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தப் பாதிப்பை எவ்வாறு நிறுத்துவது என்று பேசப்பட்டது. அவர்களது கோரிக்கை இந்திய இழுமடி வலைகளை முற்றாக நிறுத்த வேண்டும். அதனை நிறுத்தினால் கடல்வளம் பாதுகாக்கப்படும் என்பதாகும்.
நாங்கள் இந்த இழுவலையை படிப்படியாக குறைப்பதற்கு இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் ஊடாக சம்மதிக்கின்றோம் எனக்கூறினோம்.
அடுத்த கட்டமாக ஏனைய மாவட்ட மீனவ அமைப்புக்களையும் ஒன்றுதிரட்டி இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் உதவியுடன் இப்பிரச்சினைக்கு பேச்சுக்களை முன்னெடுத்து நல்லதொரு தீர்வை அடுத்த கட்டமாக எட்ட முடியும்.
வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை அரசாங்கம் தமது சட்டத்தின்படி 6 மாதம், ஒரு வருடம், 2 வருடம் என்று சிறை வைத்துள்ளார்கள். அந்த மீனவர்களை மனிதபிமான முறையில் விடுவிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாகவும் தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளோம்.
அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின் போது அதனை செய்யலாம் என்று இலங்கை மீனவர்கள் கூறியுள்ளார்கள். நிச்சயமாக இலங்கை, இந்திய அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இதற்கொரு தீர்வை எட்ட வேண்டும்.
இந்திய - இலங்கை கடற்பரப்பு மிகக் குறைவாக உள்ளது. அதிலும் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியதால் கடற்பரப்பு குறைவாக உள்ளது. அதனால் தான் எல்லை தாண்டும் பிரச்சினை ஏற்படுகிறது.
இதில் இந்திய - இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றோம். நிலமையை கருத்தில் கொண்டு இரண்டு அரசாங்கங்களும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
அரசியல் தலைவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காக சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அது பற்றி எமக்குத் தெரியாது. எங்களுடைய எண்ணம் கச்ச தீவை மீட்பதல்ல.
இரு நாட்டு மீனவர்களும் தொப்புள்கொடி உறவாக அப்பகுதியில் மீன் பிடிக்க வேண்டும். இரு பகுதி மீனவர்களும் பாதிக்காத வகையில் இரு நாட்டு அரசாங்கமும் நல்ல முடிவை எடுக்க வேண்டியது கட்டாயம். அவர்கள் எடுப்பார்களென நாங்கள் நம்புகின்றோம் எனத் தெரிவித்தார்.
இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ; விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா | Virakesari.lk
போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேர் கைது
யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கும் இடையில் மோதல்
கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!
கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!
கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கருணாநிதி மறைந்துவிட்டதால் அவருக்கு பதிலாக திமுக பொருளாளர் டிஆர் பாலுவை மனுதாரராக சேர்க்கவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (25) அனுமதித்தது.
தமிழ்நாட்டுக்கு சொந்தமானது கச்சத்தீவு. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வசம் இருந்தது கச்சத்தீவு. ஆனால் மத்திய அரசு 1974-ம் ஆண்டு இலங்கைக்கு தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை தாரைவார்த்தது.
கச்சத்தீவு தாரைவார்க்கபட்டதால் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உரிமை இருந்த போதும் எல்லை தாண்டிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்தி தற்போதும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.
இதனால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நெடுநாள் முழக்கம்.
தமிழ்நாடு சட்டசபையிலும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் கச்சத்தீவு மீட்புக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இறுதியாக விசாரிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது ஜெயலலிதா காலமானார்.
இதனால் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
அதேபோல கருணாநிதி மறைந்த நிலையில் அவருக்கு பதில் திமுக பொருளாளர் டிஆர் பாலு தம்மை மனுதாரராக சேர்க்க கோரியிருந்தார்.
இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் நேற்று கச்சத்தீவு வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது கருணாநிதிக்கு பதில் டிஆர் பாலுவை மனுதாரர்களில் ஒருவராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் கச்சத்தீவு மீட்பு தொடர்பான இந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!
தென் கொரியாவில் மிக மோசமான காட்டுத் தீ; 18 பேர் உயிரிழப்பு!
தென் கொரியாவில் மிக மோசமான காட்டுத் தீ; 18 பேர் உயிரிழப்பு!
தென் கொரியாவில் மிக மோசமான காட்டுத் தீ; 18 பேர் உயிரிழப்பு!
தென் கொரியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர் என்று சியோலின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தானது நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீக்கான சாதனைப் புத்தகங்களை மீண்டும் எழுதுகின்றன என்று தென்கொரியாவின் தற்காலிகத் தலைவர் ஹான் டக்-சூ கூறினார்.
காட்டுத் தீயினை அடுத்து 23,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பல பாரம்பரிய கலாச்சார தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்த கோவில் அழிக்கப்பட்டது.
புதன்கிழமை (26) நண்பகலுக்குப் பின்னர் உய்சோங் கவுண்டியின் மலைகளில் தீயணைப்பு ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், விபத்துக்கான காரணத்தை விசாரித்து வரும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் சுமார் 5,000 இராணுவ வீரர்களும் பல தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதே போல் கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
செவ்வாயன்று (25) தேசிய தீயணைப்பு நிறுவனம், நெருக்கடியை மிக உயர்ந்த தீயணைப்பு நடவடிக்கை நிலைக்கு உயர்த்தியுள்ளதாகக் கூறியது.
இந்த ஆண்டு இதுபோன்ற எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறை.
தென் கொரியாவில் காட்டுத்தீ ஒப்பீட்டளவில் அரிதானது, மேலும் அது தொடர்பான உயிரிழப்புகள் அரிதானவை.
கடந்த சில நாட்களுக்குள் 18 பேரைக் கொன்ற தற்போதைய தீ விபத்துகள், நாட்டின் வரலாற்றில் மிகவும் கொடியவை.
சுமார் 17,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன, இது தென் கொரியாவின் வரலாற்றில் பரப்பளவில் மூன்றாவது பெரிய தீ விபத்து ஆகும்.
உய்சோங் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில், மாகாணத்தின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றான கி.பி 618 இல் கட்டப்பட்ட கவுன்சா கோயில் எரிந்தது.
ஜோசோன் வம்சத்தின் (1392-1910) தேசிய புதையலாகக் கருதப்பட்ட ஒரு புத்த கட்டிடக்கலை அமைப்பும் அழிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அனைத்து பணியாளர்களும் உபகரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக தற்காலிகத் தலைவர் ஹான் கூறினார், ஆனால் பலத்த காற்று தொடர்ந்து மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது.
தென் கொரியாவில் சராசரியை விட குறைவான மழைப்பொழிவுடன், இயல்பை விட வறண்ட சூழல் நிலவுகிறது.
இந்த ஆண்டு ஏற்கனவே 244 காட்டுத்தீ சம்பவங்கள் நடந்துள்ளன – கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 2.4 மடங்கு அதிகம்.
காட்டுத்தீக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான சட்டவிரோத எரிப்புக்கு எதிரான அமலாக்கத்தை வலுப்படுத்துவதாகவும், தனிநபர் கவனக்குறைவைத் தடுப்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்தது.
காட்டுத்தீ முதன்முதலில் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் தென்கிழக்கில் உள்ள சான்சியோங் கவுண்டியில் வெடித்தது.
ஆனால் தற்சமயம் அண்டை நகரங்களான உய்சோங், அன்டோங், சியோங்சாங், யோங்யாங் மற்றும் யோங்டியோக் ஆகிய இடங்களுக்கும் பரவியுள்ளது.