Aggregator

வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை வௌியீடு!

3 months 1 week ago
வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை வௌியீடு! வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை (28) வௌியிடப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார். இதன்போது ” பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கையினை தாம் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும், குறித்த கணக்கெடுப்புக்கு அமைவாக, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1426579

வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை வௌியீடு!

3 months 1 week ago

private-day-tour-to-kandy-with-pinnawala

வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை வௌியீடு!

வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை (28) வௌியிடப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார்.

இதன்போது ” பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கையினை  தாம் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும், குறித்த  கணக்கெடுப்புக்கு அமைவாக, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தாம்  தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1426579

இராமேஸ்வர மீனவர்கள் 11 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை!

3 months 1 week ago
இராமேஸ்வர மீனவர்கள் 11 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை! எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், நெடுந்தீவு கடப்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் ஆஜர் படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1426589

இராமேஸ்வர மீனவர்கள் 11 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை!

3 months 1 week ago

arrest-1.jpg?resize=670%2C375&ssl=1

இராமேஸ்வர மீனவர்கள் 11 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், நெடுந்தீவு கடப்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளின் பின்னர்,   நீதிமன்றில் ஆஜர் படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1426589

திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்!

3 months 1 week ago
திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்! கரையோரப் புகையிரத மார்க்கத்தின் மொரட்டுவை, எகொடஉயன புகையிரத நிலையத்தில் பயணிகள் மேம்பாலம் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது. எவ்வாறாயினும், பாலம் இடிந்து விழும் போது பாலத்தின் மீது யாரும் நடமாடவில்லை எனவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், மொரட்டுவையில் இருந்து பாணந்துறை வரை செல்லும் புயிரத மார்க்கம் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு பாதை மாத்திரமே இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. தற்போது ரயில்வே துறை தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் ரயில் பாதையின் குறுக்கே இடிந்து விழுந்த பாலத்தின் குப்பைகளை அகற்றும் பணிகளை முன்னெடுத்திருந்தனர். https://athavannews.com/2025/1426557

திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்!

3 months 1 week ago

New-Project-356.jpg?resize=750%2C375&ssl

திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்!

கரையோரப் புகையிரத மார்க்கத்தின் மொரட்டுவை, எகொடஉயன புகையிரத நிலையத்தில் பயணிகள் மேம்பாலம் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது.

எவ்வாறாயினும், பாலம் இடிந்து விழும் போது பாலத்தின் மீது யாரும் நடமாடவில்லை எனவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், மொரட்டுவையில் இருந்து பாணந்துறை வரை செல்லும் புயிரத மார்க்கம் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு பாதை மாத்திரமே இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.

தற்போது ரயில்வே துறை தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் ரயில் பாதையின் குறுக்கே இடிந்து விழுந்த பாலத்தின் குப்பைகளை அகற்றும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

image_3b1e57c655.gif?ssl=1

image_5a5a86a71f.gif?ssl=1

https://athavannews.com/2025/1426557

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

3 months 1 week ago
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல். கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார் கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.70 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடர்ந்திருந்தார் இதேவேளை சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பெப்ரவரி மாதம் பிணை வழங்கியிருந்தது மேலும் இலங்கையில் ரக்பி மேம்பாட்டிற்காக இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட் வழங்கிய 70 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி, சட்டமா அதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426601

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

3 months 1 week ago

namal-slider-2-1.jpg?resize=750%2C375&ss

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்.

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்

கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.70 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடர்ந்திருந்தார்

இதேவேளை சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP)
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பெப்ரவரி மாதம் பிணை வழங்கியிருந்தது

மேலும் இலங்கையில் ரக்பி மேம்பாட்டிற்காக இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட் வழங்கிய 70 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி, சட்டமா அதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426601

மொழி சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்துக்கு ஸ்டாலின் பதிலடி!

3 months 1 week ago

New-Project-367.jpg?resize=750%2C375&ssl

மொழி சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்துக்கு ஸ்டாலின் பதிலடி!

எல்லை நிர்ணயம் மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (27) கடுமையாக விமர்சித்தார்.

ஆதித்யநாத், செய்தி நிறுவனமான ANI-க்கு அளித்த பேட்டியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பிராந்தியம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவுகளைத் தூண்ட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து ஸ்டாலினின் கருத்துக்கள் வந்துள்ளன.

“நாட்டை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இத்தகைய அரசியல் தேசத்தை பலவீனப்படுத்துகிறது,” என்று உத்தரப் பிரதேச முதல்வர் குறித்த பேட்டியில் கூறியிருந்தார்.

எல்லை நிர்ணயம் குறித்த ஸ்டாலினின் கவலைகளையும் அவர் நிராகரித்து, அதை ஒரு “அரசியல் நிகழ்ச்சி நிரல்” என்று அழைத்தார்.

இது குறித்த எக்ஸ் பதிவில் ஸ்டாலின்,

இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டின் நீண்டகால எதிர்ப்பையும், நியாயமான நாடாளுமன்ற தொகுதி எல்லை நிர்ணய செயல்முறைக்கான அதன் கோரிக்கையையும் அவர் ஆதரித்தார்.

இருமொழிக் கொள்கை மற்றும் எல்லை நிர்ணயம் குறித்த மாநிலத்தின் “நியாயமான மற்றும் உறுதியான குரல்” நாடு முழுவதும் வேகம் பெற்று வருவதாகவும், இது பாஜகவை வெளிப்படையாகவே சங்கடப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

“இப்போது மாண்புமிகு யோகி ஆதித்யநாத் வெறுப்பு பற்றி எங்களுக்குப் போதிக்க விரும்புகிறீர்களா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல, இது அரசியல் ரீதியாக மிகவும் மோசமான நகைச்சுவை,” என்று அவர் பதிவிட்டார்.

அதேநேரம், தமிழ்நாடு முதல்வர் தனது கட்சி எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, ஆனால் மொழியியல் திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறது என்று தெளிவுபடுத்தினார்.

“இது வாக்குக்காக கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்” என்றும் ஸ்டாலின் பதிவில் சுட்டிக்காட்டினார்.

முன்மொழியப்பட்ட மும்மொழிக் கொள்கை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக தொடர்ந்து பதட்டங்கள் நிலவுவதைத் தொடர்ந்து இரு மநில முதல்வர்கள் இடையிலான வார்த்தைப் போர் வெடிக்கிறது.

இந்தியை ஒரு ஆதிக்க தேசிய மொழியாக ஊக்குவிக்கும் பாஜகவின் முயற்சிகளை திமுக நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது.

இது இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை அச்சுறுத்துகிறது என்று வாதிடுகிறது.

மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாக நிர்வகித்த தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை எல்லை நிர்ணயம் குறைக்கக்கூடும் என்ற கவலைகளையும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1426631

மொழி சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்துக்கு ஸ்டாலின் பதிலடி!

3 months 1 week ago
மொழி சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்துக்கு ஸ்டாலின் பதிலடி! எல்லை நிர்ணயம் மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (27) கடுமையாக விமர்சித்தார். ஆதித்யநாத், செய்தி நிறுவனமான ANI-க்கு அளித்த பேட்டியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பிராந்தியம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவுகளைத் தூண்ட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து ஸ்டாலினின் கருத்துக்கள் வந்துள்ளன. “நாட்டை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இத்தகைய அரசியல் தேசத்தை பலவீனப்படுத்துகிறது,” என்று உத்தரப் பிரதேச முதல்வர் குறித்த பேட்டியில் கூறியிருந்தார். எல்லை நிர்ணயம் குறித்த ஸ்டாலினின் கவலைகளையும் அவர் நிராகரித்து, அதை ஒரு “அரசியல் நிகழ்ச்சி நிரல்” என்று அழைத்தார். இது குறித்த எக்ஸ் பதிவில் ஸ்டாலின், இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டின் நீண்டகால எதிர்ப்பையும், நியாயமான நாடாளுமன்ற தொகுதி எல்லை நிர்ணய செயல்முறைக்கான அதன் கோரிக்கையையும் அவர் ஆதரித்தார். இருமொழிக் கொள்கை மற்றும் எல்லை நிர்ணயம் குறித்த மாநிலத்தின் “நியாயமான மற்றும் உறுதியான குரல்” நாடு முழுவதும் வேகம் பெற்று வருவதாகவும், இது பாஜகவை வெளிப்படையாகவே சங்கடப்படுத்துவதாகவும் அவர் கூறினார். “இப்போது மாண்புமிகு யோகி ஆதித்யநாத் வெறுப்பு பற்றி எங்களுக்குப் போதிக்க விரும்புகிறீர்களா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல, இது அரசியல் ரீதியாக மிகவும் மோசமான நகைச்சுவை,” என்று அவர் பதிவிட்டார். அதேநேரம், தமிழ்நாடு முதல்வர் தனது கட்சி எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, ஆனால் மொழியியல் திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறது என்று தெளிவுபடுத்தினார். “இது வாக்குக்காக கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்” என்றும் ஸ்டாலின் பதிவில் சுட்டிக்காட்டினார். முன்மொழியப்பட்ட மும்மொழிக் கொள்கை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக தொடர்ந்து பதட்டங்கள் நிலவுவதைத் தொடர்ந்து இரு மநில முதல்வர்கள் இடையிலான வார்த்தைப் போர் வெடிக்கிறது. இந்தியை ஒரு ஆதிக்க தேசிய மொழியாக ஊக்குவிக்கும் பாஜகவின் முயற்சிகளை திமுக நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. இது இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை அச்சுறுத்துகிறது என்று வாதிடுகிறது. மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாக நிர்வகித்த தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை எல்லை நிர்ணயம் குறைக்கக்கூடும் என்ற கவலைகளையும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1426631

காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு

3 months 1 week ago
உயிருடன் இருக்கும் 19 பேரும் அப்பாவித் தமிழர்களா... அல்லது இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய படையினரா? உயிருடன் இருப்பவர்கள் தமிழர்கள் என்றால்... 2024´ல் அறிக்கை சமர்ப்பித்தும், இதுவரை அவர்களின் பெயரை பொதுமக்களுக்கு அறிவிக்காமல் இருப்பது ஏன்? தங்கள் பிள்ளைகளை, வருடக் கணக்காக கண்ணீருடன் தேடிக் கொண்டு இருக்கும் பெற்றோரின் வேதனையை புரியாதவர்களா இவர்கள். ஆசை காட்டி மோசம் செய்யாமல்.. கண்டுபிடித்த 19 பேரின் பெயர்களையும், அவர்கள் இப்போ எங்கே இருக்கின்றார்கள் என்பதையும் வெளியிடுங்கள்.

தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி

3 months 1 week ago
தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை முந்தி இந்தியா 2ஆவது இடம்! 2024 ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 254 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய தேயிலை வாரியம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் இரண்டாவது அதிக தேயிலை ஏற்றுமதியாளராக இந்தியா மாறியுள்ளது. உலக தேயிலை ஏற்றுமதியில் கென்யா முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டாலும், இந்தியா இலங்கையை விஞ்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2024 ஆம் ஆண்டில் கென்யா 500 மில்லியன் கிலோவுக்கு மேல் தேயிலையை ஏற்றுமதி செய்தது. 2023 ஆம் ஆண்டில், இந்தியாவும் இலங்கையும் சுமார் 231 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதியுடன் நேருக்கு நேர் மோதின. ஆனால் 2024 ஆம் ஆண்டில் இந்தியா 24 மில்லியன் கிலோ கூடுதல் ஏற்றுமதியுடன் தீவு நாட்டை முந்தியது. இந்தியாவின் 2024 புள்ளிவிவரங்கள், 2018 ஆம் ஆண்டில் சுமார் 256 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ததைத் தொடர்ந்து இரண்டாவது சிறந்த ஏற்றுமதி இலாபமாகும். இந்தியாவின் 2024 தேயிலை ஏற்றுமதி வருமானம் ₹7,112 கோடி ரூபாவாக இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதி புள்ளிவிவரங்கள் 200-225 மில்லியன் கிலோவாகவே இருந்தன. 2018 ஆம் ஆண்டைத் தவிர, இந்த அற்புதமான வளர்ச்சி தேயிலைத் தொழிலுக்கு 2030 ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் கிலோ என்ற இலக்கை எட்டும் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்தியா சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 1,400 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்கிறது. இதன் வளர்ச்சிக்கு சமீப காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடங்கிய பல்வேறு திட்டங்கள் துணைபுரிந்துள்ளன. https://athavannews.com/2025/1426570

AI தற்கொலை ட்ரோன்களை மேற்பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

3 months 1 week ago
AI தற்கொலை ட்ரோன்களை மேற்பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி! செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தற்கொலை ட்ரோன்களின் சோதனையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்(Kim Jong Un) மேற்பார்வையிட்டார். நிலத்திலும் கடலிலும் பல்வேறு தந்திரோபாய இலக்குகள் மற்றும் எதிரிகளின் செயல்பாடுகளைக் கண்டறியும் திறன் கொண்ட புதிய மேம்படுத்தப்பட்ட உளவு ட்ரோன்களை கிம் ஆய்வு செய்ததாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது. “ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதில் ஆளில்லா உபகரணங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்” என்று மேற்பார்வையின் போது வடகொரியத் தலைவர் கூறியுள்ளார். அணு ஆயுதம் ஏந்திய வடக்கு கொரியா, முதன்முறையாக வான்வழி முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் விமானத்தையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தருணம் இதுவாகும். இது அதன் பழமையான வான் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தக்கூடிய திறன் கொண்டது. நான்கு எஞ்சின்கள் மற்றும் உடற்பகுதியில் பொருத்தப்பட்ட ரேடார் குவிமாடம் கொண்ட ஒரு பெரிய விமானத்தின் கதவை நோக்கி கிம் படிகளில் ஏறி, குறைந்த உயரத்தில் விமானத்தைப் பார்ப்பதை அரசு ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன. வணிக செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி, வட கொரியா ரஷ்ய தயாரிப்பான Il-76 சரக்கு விமானத்தை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் பணிக்காக மாற்றுவதாக ஆய்வாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். அத்தகைய விமானம் வட கொரியாவின் நில அடிப்படையிலான ரேடார் அமைப்புகளை அதிகரிக்க உதவும், அவை சில நேரங்களில் தீபகற்பத்தின் மலைப்பாங்கான நிலப்பரப்பால் வரையறுக்கப்படுகின்றன என்று லண்டனின் சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் செப்டம்பரில் ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. https://athavannews.com/2025/1426615

AI தற்கொலை ட்ரோன்களை மேற்பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

3 months 1 week ago

New-Project-364.jpg?resize=750%2C375&ssl

AI தற்கொலை ட்ரோன்களை மேற்பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தற்கொலை ட்ரோன்களின் சோதனையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்(Kim Jong Un) மேற்பார்வையிட்டார்.

நிலத்திலும் கடலிலும் பல்வேறு தந்திரோபாய இலக்குகள் மற்றும் எதிரிகளின் செயல்பாடுகளைக் கண்டறியும் திறன் கொண்ட புதிய மேம்படுத்தப்பட்ட உளவு ட்ரோன்களை கிம் ஆய்வு செய்ததாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது.

“ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதில் ஆளில்லா உபகரணங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்” என்று மேற்பார்வையின் போது வடகொரியத் தலைவர் கூறியுள்ளார்.

அணு ஆயுதம் ஏந்திய வடக்கு கொரியா, முதன்முறையாக வான்வழி முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் விமானத்தையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தருணம் இதுவாகும்.

இது அதன் பழமையான வான் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தக்கூடிய திறன் கொண்டது.

நான்கு எஞ்சின்கள் மற்றும் உடற்பகுதியில் பொருத்தப்பட்ட ரேடார் குவிமாடம் கொண்ட ஒரு பெரிய விமானத்தின் கதவை நோக்கி கிம் படிகளில் ஏறி, குறைந்த உயரத்தில் விமானத்தைப் பார்ப்பதை அரசு ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.

வணிக செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி, வட கொரியா ரஷ்ய தயாரிப்பான Il-76 சரக்கு விமானத்தை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் பணிக்காக மாற்றுவதாக ஆய்வாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர்.

அத்தகைய விமானம் வட கொரியாவின் நில அடிப்படையிலான ரேடார் அமைப்புகளை அதிகரிக்க உதவும், அவை சில நேரங்களில் தீபகற்பத்தின் மலைப்பாங்கான நிலப்பரப்பால் வரையறுக்கப்படுகின்றன என்று லண்டனின் சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் செப்டம்பரில் ஒரு அறிக்கையில் கூறியிருந்தது.

GnBSZLSbMAASx_7?format=jpg&name=900x900

GnBSZLYbgAArbW0?format=jpg&name=medium

GnBI5EbWQAAW-N2?format=jpg&name=medium

https://athavannews.com/2025/1426615

புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்!

3 months 1 week ago
🎧 யாரை நம்பி நான் பொறந்தேன்..போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே..வாங்கடா வாங்க குளத்திலே தண்ணி இல்லே..கொக்குமில்லே மீனுமில்லே பெட்டியிலே பணமில்லே..பெத்த புள்ளே சொந்தமில்லே நேரமிருக்கு தெளிவாக..நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ..ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்..தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும் யாரை நம்பி நான் பொறந்தேன்..போங்கடா போங்க 👍🔔

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் அரிய வகை கடல் ‘ஆலா பறவை’

3 months 1 week ago
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் அரிய வகை கடல் ‘ஆலா பறவை’ March 27, 2025 10:55 am இராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையையும். இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் ஆறு அரிய வகை கடல் ஆலா பறவை இனங்களின் மிகப் பெரிய இனப்பெருக்க தளம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் ரவீந்திரன், பறவை ஆய்வாளர்கள் பைஜு, மைத்ரி, பேராசிரியர் ரவிச்சந்திரன், உயிரியலாளர் மார்சல் இணைந்த குழுவினர், ராமநாதபுர வனத்துறையின் வன உயிரின பிரிவுடன் இணைந்து தங்களின் தொடர் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர். இது குறித்த ஆய்வறிக்கை ‘journal of threatened taxa’ வில் வெளியாகி உள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை ராமநாதபுரம் வனத்துறையுடன் இணைந்து அம்மாவட்ட பறவை சரணாலயங்களில் பறவைகளின் வருகை, இனப்பெருக்கம், வலசை பறவைகளின் வருகை,எண்ணிக்கை, புதிய வாழ்விட பகுதிகளை கண்டறிவது என பணி செய்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் அனுமன் உப்புகொத்தி, நண்டுண்ணி உள்ளான், ஆழிக் கழுகு, கண்டங்கள் கடந்து வரும் ஆல்பட்ரஸ், ஆர்ட்டிக் ஸ்குவா, பழுப்பு ஆலா, மற்றும் அரிய ஆழ் கடல் பகுதிகளில் மட்டுமே வாழும் பறவை இனங்களை கண்டறிந்து மன்னார் வளைகுடா பகுதியின் அரிய பறவையினங்களை பட்டியல் இட்டு உள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆழ் கடல் பறவையினங்களின் வருகையை பதிவு செய்து கொண்டு இருந்த போது பிரிட்ல்டு ஆலா , சாண்டர்ஸ் ஆலா, சிறிய ஆலா, பெரிய கொண்டை ஆலா மற்றும் ரோஸேட் ஆலா மற்றும் சிறிய பெரிய பழுப்பு ஆலாக்களின் (Bridled Tern, Saunder’s Tern, Little Tern, Greater Crested Tern and Roseate Tern, Brown Noddy) எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகரிப்பது கண்டு அங்குள்ள மணற்திட்டுக்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் இந்திய கிழக்குக் கடற்கரை பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் ஆலா பறவையினங்கள் அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டது. குறிப்பாக மூன்று மற்றும் ஏழாம் மணற்திட்டு பகுதியில் பண்ணிரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான ஆலா பறவைகள் இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது. ஆறு வெவ்வேறு ஆலா பறவை இனங்கள் ஒரே பகுதியை தேர்வு செய்து ஆயிரக்கணக்கில் இனப்பெருக்கம் செய்வது ஒரு அரிய நிகழ்வாகும். ஆனால், இதன் முக்கியத்துவத்தை இப்பகுதியில் உள்ள மீனவர்களோ, கடலோர காவல் படையினரோ அறிந்திருக்க வில்லை. ஆலா பறவைகளின் இனப்பெருக்க காலத்தில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் ஆலா பறவைகளின் முட்டைகள், குஞ்சுகளை திருடிச் செல்வது உள்ளூர் மீனவர்களால் உறுதி செய்யப்பட்டது. இந்த அரிய வகை ஆலா பறவை இனங்களை பாதுகாப்பது குறித்து உள்ளூர் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவற்றை அவர்கள் பில்லுக் குஞ்சி என்று அழைக்கிறார்கள். பொதுவாக ஆலா பறவைகளை கடலில் மீன்கள் அதிகம் இருக்கும் பகுதியை அடையாளம் காட்டும் பறவைகளாக மூத்த மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். நீர்நிலைகளின் நடுவில் மரங்களில் கூடு கட்டும் பறவைகளின் வாழ்விடங்களை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவிக்கிறதோ, அது போல நிலத்தில், மணற்திட்டுகளில் அதிக எண்ணிக்கையில் கூடு கட்டி வாழும் பறவையினங்கள் உள்ள பகுதிகளையும் மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கப் பட்ட சரணாலயப் பகுதிகளாக அறிவித்து இந்தியாவின் பல்லுயிர்த் தன்மையை பாதுகாக்க வேண்டும். https://oruvan.com/rare-seabird-ala-spotted-on-ram-setu-sandbar-connecting-sri-lanka-and-india/

காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு

3 months 1 week ago
காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு March 27, 2025 10:57 am காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16 ஆயிரத்து 966 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 ஆயிரத்து 742 பேர் படையினர் மற்றும் பொலிஸார் என பாதுகாப்பு தரப்பினராக காணாமல் போயுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 6 ஆயிரத்து 449 பேரின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் , 10 ஆயிரத்து 517 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 2000ஆம் ஆண்டிற்கு பின்பு 7 ஆயிரத்து 406 பேரும், 2000ஆம் ஆண்டிற்குப் முன்னர் 9 ஆயிரத்து 560 பேரும் காணாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலே 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல்போன 7ஆயிரத்து 406 பேரில் 6 ஆயிரத்து 449 பேர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளது. நிறைவு பெற்ற விசாரணைகளில் இருந்து 19 பேர் உயிரோடு இருப்பதனையும் கண்டறிந்துள்ளோம். அவர்களது விபரங்களை 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இணைத்துள்ளோம். அவை விரைவில் வெளிவரும். அதேவேளை 2 ஆயிரத்து, 604 பேர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர். 407 பேர் மரணச் சான்றிதழிற்கான சிபார்சை பெற்றுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணத்திற்கு 4ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவித்தார். https://oruvan.com/announcement-that-19-missing-persons-have-been-found/

காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு

3 months 1 week ago

காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு

March 27, 2025 10:57 am

காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார்.

காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம்  ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16 ஆயிரத்து 966 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 ஆயிரத்து 742 பேர் படையினர் மற்றும் பொலிஸார் என பாதுகாப்பு தரப்பினராக காணாமல் போயுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் 6 ஆயிரத்து 449 பேரின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் , 10 ஆயிரத்து 517 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

2000ஆம் ஆண்டிற்கு பின்பு  7 ஆயிரத்து 406 பேரும், 2000ஆம் ஆண்டிற்குப் முன்னர் 9 ஆயிரத்து 560 பேரும் காணாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதிலே 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல்போன 7ஆயிரத்து 406 பேரில் 6 ஆயிரத்து 449 பேர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளது.

நிறைவு பெற்ற விசாரணைகளில் இருந்து 19 பேர் உயிரோடு இருப்பதனையும் கண்டறிந்துள்ளோம். அவர்களது விபரங்களை 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இணைத்துள்ளோம். அவை விரைவில் வெளிவரும்.

அதேவேளை  2 ஆயிரத்து, 604 பேர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை  பெற்றுள்ளனர்.  407 பேர் மரணச் சான்றிதழிற்கான சிபார்சை பெற்றுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட  இடைக்கால நிவாரணத்திற்கு 4ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

https://oruvan.com/announcement-that-19-missing-persons-have-been-found/