Aggregator
செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு
ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தலுக்கு அனுமதி!
ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தலுக்கு அனுமதி!
ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தலுக்கு அனுமதி!
நாடு முழுவதும் ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டாய சீட் பெல்ட் பயன்பாடு குறித்த பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தைத் தொடர்ந்து, கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கூறிய அவர்,
இந்த முன்மொழிவுக்கு இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தற்போது, குருநாகல் மற்றும் அனுராதபுரம் இடையே மட்டுமே ஆன்லைன் அபராதம் செலுத்தும் முறை உள்ளது.
இப்போது, அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் மொபைல் சாதனங்களை வழங்குகிறோம்.
இதனால் இந்த ஆண்டு முதல், போக்குவரத்து அபராதங்களை மொபைல் போன்கள் மூலம் எங்கிருந்தும் செலுத்த முடியும் – என்றும் கூறினார்.
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 138,241 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் காட்டுகின்றன.
இது 2024 ஜூன் மாதத்தில் வந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 21.8% அதிகமாகும்.
SLTDA வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி,
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் இருந்து மொத்தம் 37,934 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 27.4% ஆகும்.
மேலும், இங்கிலாந்திலிருந்து 11,628 பேரும், சீனாவிலிருந்து 8,804 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,299 பேரும், பாகிஸ்தானியர் 6,833 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,168,044 ஆக உள்ளது.
அவர்களில், 241,994 பேர் இந்தியாவிலிருந்தும், 112,312 பேர் ரஷ்யாவிலிருந்தும், 107,902 பேர் இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ளனர் என்று SLTDA குறிப்பிட்டது.
இலங்கையின் நான்காவது மதிப்பாய்வை அங்கீகரித்த IMF நிர்வாகக் குழு!
இலங்கையின் நான்காவது மதிப்பாய்வை அங்கீகரித்த IMF நிர்வாகக் குழு!
இலங்கையின் நான்காவது மதிப்பாய்வை அங்கீகரித்த IMF நிர்வாகக் குழு!
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது.
அதன்படி, இலங்கை இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் சுமார் 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெறும்.
இதன் மூலம் இதுவரை வழங்கப்பட்ட மொத்த IMF நிதி உதவி சுமார் 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையின் நான்காவது மதிப்பாய்வை மதிப்பிடுவதற்காக IMF இன் நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை கூடியது.
48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் நான்காவது மதிப்பாய்வை IMF நிர்வாகக் குழு நிறைவு செய்ததாக இலங்கைக்கான IMF திட்டத்தின் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ இதன்போது உறுதிப்படுத்தினார்.
பின்னணி
உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற மிக அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு கூட நிதியளிக்க அந்நிய செலாவணி தீர்ந்து போன பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கை IMF இடமிருந்து 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு பொதியை பெற்றது.
2022 ஆம் ஆண்டில் அமெரிக்க வரி அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, இலங்கை அதன் முன்னோடியில்லாத நெருக்கடிக்குப் பின்னர் முதல் முழு ஆண்டு பொருளாதார விரிவாக்கத்தைப் பதிவு செய்தது.
2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் பொருளாதாரம் 5.4 சதவீதம் வளர்ச்சியடைந்தது, இது முழு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 5.0 சதவீதமாகக் கொண்டு வந்தது, இது 2023 இல் 2.3 சதவீத சுருக்கத்துடன் காணப்பட்டது.
இலங்கையின் மோசமான பொருளாதார செயல்திறன் 2022 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீதம் சுருங்கியது.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல மாதங்களாக ஏற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையானது வீதி ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது.
இது இறுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்தது.
அவரை அடுத்து ஜனாதிபதியாக பெறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க வரிகளை இரட்டிப்பாக்கினார், மானியங்களைக் குறைத்தார், விலைகளை உயர்த்தினார் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை ஓரளவு மேம்படுத்தினார்.
எனினும், 2024 செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார்.
பின்னர் பதவியேற்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய நிர்வாகம், பிணை எடுப்புக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் மற்றும் வருவாயை உயர்த்துவதில் உறுதியாக இருப்பதாக IMF இடம் தெரிவித்தது.
கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் EFF இன் கீழ் இலங்கையின் திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வு குறித்து ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க இந்து ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள்!
அமெரிக்க இந்து ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள்!
அமெரிக்க இந்து ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள்!
கடந்த ஜூன் மாதத்தில் பல இரவுகளில் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் ஸ்பானிஷ் ஃபோர்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளன.
இதனால், ஆலயத்தின் கட்டிடத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சந்தேகத்திற்குரிய வெறுப்பு குற்றமாக நம்பப்படுகிறது.
இரவு நேரங்களில் பக்தர்களும் மற்றவர்களும் உள்ளே இருந்ததால், கட்டிடம் மற்றும் அருகிலுள்ள சொத்துக்களை குறிவைத்து கிட்டத்தட்ட 20 முதல் 30 தோட்டாக்கள் வளாகத்தில் சுடப்பட்டன.
இது ஆயிரக்கணக்கான டொலர்கள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை இந்தியா கண்டித்துள்ளது மற்றும் விரைவான நடவடிக்கையை கோரியுள்ளது.
60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!
60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!
60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!
தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.
மேலும், நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பு இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க தயாராகி வரும் நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக இப்பகுதியை பேரழிவிற்கு உட்படுத்திய தற்போதைய மோதலில் ஒரு திருப்புமுனையாகும்.
இது குறித்து ட்ரூத் சமூக ஊடகத் தளத்தில் ட்ரம்ப் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,
எனது பிரதிநிதிகள் இன்று (செவ்வாயன்று) காசா போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலியர்களுடன் நீண்ட மற்றும் பயனுள்ள சந்திப்பை நடத்தினர்.
இதன்போது 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
அந்த நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவோம்.
சமாதானத்தை ஏற்படுத்த கடுமையாக உழைத்த கட்டார் மற்றும் எகிப்தியர்கள் இந்த இறுதி திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.
இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒப்பந்தம் இல்லையென்றால் நிலமை மோசமடையும் என்றார்.
டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு, ஜனவரி 19 அன்று தொடங்கிய முந்தைய போர் நிறுத்தம் மார்ச் வரை நீடித்தது.
ஹமாஸ் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டி, இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியபோது விரோதப் போக்கு மீண்டும் தொடங்கியது.
அப்போதிருந்து, பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலின் மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் உயர் மட்ட விவாதங்களுக்காக வொஷிங்டனில் உள்ளார்.
அவரது நிகழ்ச்சி நிரலில் காஸா போர் நிறுத்தம், ஈரான் மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகள் அடங்கும்.
டெர்மர், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.
இதற்கிடையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இஸ்ரேலிய அறிக்கைகளின்படி, 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான போராளிகள் எல்லை தாண்டிய ஒரு கொடிய தாக்குதலை நடத்தியபோது போர் வெடித்தது.
அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
அப்போதிருந்து, இஸ்ரேலின் இராணுவ பதில் காசாவிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Northern Uni இன் துணைவேந்தராக நாளை முதல் பணியாற்றவுள்ள புகழ் பெற்ற பெண் பேராசிரியர்!
முதல் மறைமுக கரும்புலி "தியாகசீலம்" அன்பு
எமது இனத்தின் முதல் மறைமுக கரும்புலி "தியாகசீலம்" அன்பு ஆவார்.
இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவராவார். அன்னாரை பகைவர் வன்புணர்ந்ததால் தன்னை அந்நிலைக்கு இட்டவரின் தலையை அழிக்க தன்னுயிரை போக்க வேண்டும் என்ற உறுதியெடுத்து கரும்புலியானார்.
இவர் இலக்கொன்றினை இரண்டாம் ஈழப்போரில் அழித்து வீரகாவியமானார்.
ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்
(2024ம் ஆண்டு ஓகஸ்டில் நான் எழுதிய பதிவின் மீள்வெளியீடு)