Aggregator

தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

11 hours 56 minutes ago

Published By: VISHNU

04 JUL, 2025 | 09:22 PM

image

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

1000373926.jpg

குறித்த சம்பவமானது 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததாக தெரியவந்துள்ளது.

கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/219209

ஜனாதிபதி நிதியத்திற்கு லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து 100 மில்லியன் ரூபா நன்கொடை

11 hours 59 minutes ago
Published By: DIGITAL DESK 2 04 JUL, 2025 | 08:54 PM லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று வெள்ளிக்கிழமை (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார். இந்த நன்கொடை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/219203

ஜனாதிபதி நிதியத்திற்கு லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து 100 மில்லியன் ரூபா நன்கொடை

11 hours 59 minutes ago

Published By: DIGITAL DESK 2

04 JUL, 2025 | 08:54 PM

image

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று வெள்ளிக்கிழமை (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.

இந்த நன்கொடை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக  வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-07-04_at_16.54.13.jp

https://www.virakesari.lk/article/219203

தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளாக அமையாத கூட்டணி ஆட்சி 2026இல் அமைய வாய்ப்புள்ளதா?

12 hours 29 minutes ago

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,TNDIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து 58 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்று வரையிலும் தமிழ்நாட்டை திமுக அல்லது அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்துள்ளன.

மாநிலத்தில் ஒரு ஆட்சி அமைவதற்குப் பல சாத்தியங்கள் உள்ளன. ஒரு அரசியல் கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறலாம், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மையைப் பெறலாம், ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம்.

தமிழ்நாட்டில் இவை அனைத்துமே நடந்துள்ளன. ஆனால் எல்லா சமயங்களிலும் திமுக, அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளன. கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றது இல்லை.

தற்போதைய அரசியல் சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி ஆட்சி தொடர்பான விவாதங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கை அறிவிப்புக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு பற்றிப் பேசியிருந்தார். மேலும் அவர், திமுக, பாஜக என இருதரப்பிலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், தவெக தலைமையிலான கூட்டணி உருவாக்கப்படும் எனவும் இன்று கூறியுள்ளார்.

தற்போது பல்வேறு கட்சிகளும் தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைவது பற்றிப் பேசி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் இதுநாள் வரை இருந்த நிலையை மாற்றுமா?

தமிழ்நாடு அரசியலும் கூட்டணி ஆட்சியும்

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1967 தொடங்கி 2021 வரை தமிழ்நாட்டில் 13 முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன.

தமிழ்நாட்டில் 1952, 1957 மற்றும் 1962 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி செய்தது. 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வென்றது. 138 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சி அமைத்தது.

கடந்த 1967இல் தொடங்கி 2021 வரை தமிழ்நாட்டில் 13 முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் ஒரு முறை மட்டுமே ஆளும் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இல்லாமல் இருந்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதில் திமுக 96 இடங்களில் வென்றிருந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் பாமக முறையே 34 மற்றும் 18 இடங்களில் வென்றிருந்தன. திமுக ஆட்சி அமைத்தது.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றது, அதிமுக 150 இடங்களைப் பிடித்திருந்தது. அப்போது கூட்டணி அரசாங்கம் பற்றித் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகப் பேசியிருந்த அதிமுக தலைவர் தம்பிதுரை, "தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பதால் கூட்டணி அரசு அமைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றார்.

அப்போது கூட்டணி ஆட்சி தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்திருந்த அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, "ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களில் வெல்வோம். அது எங்களுடைய அரசாகவும் இருக்கலாம் அல்லது கூட்டணி அரசாகவும் இருக்கலாம்" எனக் கூறியிருந்தார்.

கூட்டணி ஆட்சி பற்றி பிற கட்சிகள் என்ன சொல்கின்றன?

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமித் ஷா

சமீபத்தில் அதிமுக கூட்டணி பற்றிப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையின் கீழ் பாஜக இருப்பதால் அதிமுகவை சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பார்" எனத் தெரிவித்திருந்தார்.

அமித் ஷாவின் கருத்து விவாதப் பொருளான நிலையில், அதுகுறித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்" என்றும், தங்கள் கூட்டணியை எந்தக் காலத்திலும் பிளவுபடுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார். மேலும், "கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள்" எனத் தெரிவித்தார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி ஆட்சியை வரவேற்பதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாகப் பேசிய அவர், "கூட்டணி ஆட்சி என்பதை வரவேற்கிறோம். அதிகாரப் பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொண்டு சேர்க்கும்" என்றார்.

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,THIRUMA OFFICIAL FACEBOOK PAGE

படக்குறிப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்

கூட்டணி ஆட்சி தேவை என்பதில் விசிக தெளிவாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அப்போது, "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் நிலைப்பாடு. ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்றில்லாமல் சிறிய சிறிய கட்சிகளும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்கிற நோக்கம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

"கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களின் வாக்குகள் இல்லாமல் திமுக எம்.எல்.ஏக்களின் வாக்குகளை வைத்தே முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அளவுக்கு திமுக கூட்டணி வெற்றி பெறும். அதில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும். கூட்டணி அரசு என்கிற நோக்கம் எங்களுக்கு இல்லை. அது சரியாக வருமா என்று பார்த்தால் பலரும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் தி.மு.க-வுக்கு அதன் பெருமை வந்து சேரும். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க கூறுகிறது. அவர்களே கூறும்போது, தமிழ்நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி சொல்லக்கூடாதா?" எனக் கூறியிருந்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் நிலைப்பாடு மாறுமா?

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,X/EZHIL CAROLINE

படக்குறிப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின்

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான சல்மா.

அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்தக் கூட்டணியில் அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி திமுகதான். பெரும்பான்மை பலம் உள்ள கட்சி என்கிற அடிப்படையில்தான் திமுக ஆட்சி அமைக்கிறது. தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கு நிலையான ஆட்சிதான் காரணமாக இருந்துள்ளது. எனவே ஆட்சியில் பங்கு என்பதற்கான தேவை எழுந்ததில்லை. அதற்கான கோரிக்கை வருகிறபோது தலைவர்கள் அதைப் பேசி முடிவெடுப்பார்கள்," என்றார்.

ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கை நியாயமானது மட்டுமல்ல, மிகவும் காலதாமதமானது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தி விடுவது என்பது வெறும் கொள்கை முழக்கமாக இருந்துவிடக்கூடாது. அனைத்து தரப்பினரையும் மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதற்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதே சரியாக இருக்கும். அதைத்தான் விசிக கூறி வருகிறது. இரண்டு கட்சிகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்கிற நிலை மாற வேண்டும்" என்றார்.

ஒரு கூட்டணியின் வெற்றியில் அனைத்துக் கட்சிகளுக்கும் பங்குள்ளது என்னும்போது அதை அங்கீகரிக்க வேண்டும் என்கிறார் எழில் கரோலின். "தனித்துப் போட்டியிட்டு ஒரு கட்சி வெற்றி பெறக்கூடிய சூழல் தமிழ்நாட்டில் இப்போது இல்லை. இந்தச் சூழலைப் புரிந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகம், கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் அதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.

கூட்டணி அரசால் நிலையான ஆட்சியைத் தர முடியாதா?

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,GETTY IMAGES

கூட்டணி அரசு அமைந்தால் நிர்வாகம் தடைபடும் என்பது தேவையற்ற அச்சம் என்று கூறிய எழில் கரோலின், "மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லையா? அதனால் நிர்வாகம் தடைபட்டுவிட்டதா? தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைந்தது இல்லை. அந்த அனுபவமே இல்லாமல் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நிர்வாகம் தடைபடும் என்பது தேவையற்ற கவலை. இட ஒதுக்கீடு, மாநில உரிமை என எதை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலான திட்டங்கள், கொள்கைகளில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்துதான் உள்ளது என்னும்போது அச்சம் அவசியமற்றது" என்றார்.

இதை ஒத்த கருத்தையே கூறும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, கூட்டணி ஆட்சிக்கான கட்டாயம் உருவாகிவிட்டதாகக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தற்போது உள்ள சூழ்நிலையில் எந்தக் கட்சியாலும் தனித்து நின்று வெற்றி பெற முடியாது. அதுதான் எதார்த்தம். கூட்டணியின் வெற்றியில் அனைவருக்கும் பங்கு உள்ளது. தமிழ்நாட்டில் பல முறை நெருக்கமான போட்டியைக் கண்டுள்ளோம்."

"சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. ஒரு கட்சிக்கு 2% தான் வாக்கு வங்கி இருக்கிறது எனக் கூறி புறந்தள்ளிவிட முடியாது. கூட்டணியின் வெற்றிக்கு அவர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கலாம். புள்ளி விவரங்களையும் கடந்து கூட்டணி ஆட்சி அமைவதுதான் சமநிலையை உருவாக்கும்" என்று கூறினார்.

திமுக, அதிமுக நிலைப்பாடு என்ன?

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம்,X/SASI REKHA ADMK

படக்குறிப்பு, அதிமுக ஆட்சிதான் அமையும் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சசிரேகா

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை எத்தனைக் கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் அதிமுகவின் ஆட்சிதான் அமையும் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சசிரேகா.

"பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கேள்விகளுக்கு தெளிவாகப் பதில் அளித்துவிட்டார். அதிமுகதான் ஆட்சி அமைக்கும் எனக் கூறிவிட்டார். 31 வருட அதிமுக ஆட்சியில் அப்படித்தான் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும்."

கூட்டணிக் கட்சிகளுக்கு ஆசை இருக்கலாம் என்றாலும், பெரிய கட்சி எது என்பதே முக்கியம் என்கிறார் சசிரேகா. மேலும், "கூட்டணிக்கு யார் தலைமை ஏற்கிறார்கள், எந்தச் சின்னத்திற்கு வாக்கு அளிக்கிறார்கள், யார் முதல்வர் முகமாக உள்ளார் என்பதும் முக்கியம்.

அதன் அடிப்படையில் பார்த்தால் அதிமுகதான் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிமுக தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை அதே நிலைப்பாடுதான், இனியும் அது தொடரும்," என்றார்.

தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆட்சி, திமுக, அதிமுக, பாஜக, தவெக

பட மூலாதாரம், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

படக்குறிப்பு, தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்நாட்டில் இதுநாள் வரை தொங்கு சட்டசபை அமைந்தது இல்லை. எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் எப்போதுமே பெரும்பான்மை இடம் கிடைத்துள்ளது. மக்களின் தேர்வும் அதுவாகவே இருந்து வருகிறது" என்றார்.

கடந்து 1979 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் 38 இடங்களில் வென்றது. அடுத்து உடனே 1980இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சரிபாதி இடங்களில் திமுக, காங்கிரஸ் போட்டியிட்டன. ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, அப்போது திமுக தோல்வியுற்றது என்று கடந்த கால முடிவுகளைக் குறிப்பிட்டுப் பேசினார் ரவிந்திரன்.

அதோடு, 2006 தேர்தல் பற்றி விவரித்த அவர், "அப்போது திமுக சிறுபான்மை அரசாக இருந்தது என்கிற கருத்து உள்ளது. ஆனால் திமுக கூட்டணி அப்போது 169 இடங்களில் வென்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்ததால்தான் திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற முடியவில்லை" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr4ww6genzno

தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளாக அமையாத கூட்டணி ஆட்சி 2026இல் அமைய வாய்ப்புள்ளதா?

12 hours 29 minutes ago
பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து 58 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்று வரையிலும் தமிழ்நாட்டை திமுக அல்லது அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்துள்ளன. மாநிலத்தில் ஒரு ஆட்சி அமைவதற்குப் பல சாத்தியங்கள் உள்ளன. ஒரு அரசியல் கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறலாம், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மையைப் பெறலாம், ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம். தமிழ்நாட்டில் இவை அனைத்துமே நடந்துள்ளன. ஆனால் எல்லா சமயங்களிலும் திமுக, அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளன. கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றது இல்லை. தற்போதைய அரசியல் சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி ஆட்சி தொடர்பான விவாதங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கை அறிவிப்புக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு பற்றிப் பேசியிருந்தார். மேலும் அவர், திமுக, பாஜக என இருதரப்பிலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், தவெக தலைமையிலான கூட்டணி உருவாக்கப்படும் எனவும் இன்று கூறியுள்ளார். தற்போது பல்வேறு கட்சிகளும் தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைவது பற்றிப் பேசி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் இதுநாள் வரை இருந்த நிலையை மாற்றுமா? தமிழ்நாடு அரசியலும் கூட்டணி ஆட்சியும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1967 தொடங்கி 2021 வரை தமிழ்நாட்டில் 13 முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் 1952, 1957 மற்றும் 1962 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி செய்தது. 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வென்றது. 138 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சி அமைத்தது. கடந்த 1967இல் தொடங்கி 2021 வரை தமிழ்நாட்டில் 13 முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் ஒரு முறை மட்டுமே ஆளும் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இல்லாமல் இருந்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதில் திமுக 96 இடங்களில் வென்றிருந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் பாமக முறையே 34 மற்றும் 18 இடங்களில் வென்றிருந்தன. திமுக ஆட்சி அமைத்தது. கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றது, அதிமுக 150 இடங்களைப் பிடித்திருந்தது. அப்போது கூட்டணி அரசாங்கம் பற்றித் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகப் பேசியிருந்த அதிமுக தலைவர் தம்பிதுரை, "தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பதால் கூட்டணி அரசு அமைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றார். அப்போது கூட்டணி ஆட்சி தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்திருந்த அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, "ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களில் வெல்வோம். அது எங்களுடைய அரசாகவும் இருக்கலாம் அல்லது கூட்டணி அரசாகவும் இருக்கலாம்" எனக் கூறியிருந்தார். கூட்டணி ஆட்சி பற்றி பிற கட்சிகள் என்ன சொல்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமித் ஷா சமீபத்தில் அதிமுக கூட்டணி பற்றிப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையின் கீழ் பாஜக இருப்பதால் அதிமுகவை சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பார்" எனத் தெரிவித்திருந்தார். அமித் ஷாவின் கருத்து விவாதப் பொருளான நிலையில், அதுகுறித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்" என்றும், தங்கள் கூட்டணியை எந்தக் காலத்திலும் பிளவுபடுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார். மேலும், "கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள்" எனத் தெரிவித்தார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி ஆட்சியை வரவேற்பதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாகப் பேசிய அவர், "கூட்டணி ஆட்சி என்பதை வரவேற்கிறோம். அதிகாரப் பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொண்டு சேர்க்கும்" என்றார். பட மூலாதாரம்,THIRUMA OFFICIAL FACEBOOK PAGE படக்குறிப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட்டணி ஆட்சி தேவை என்பதில் விசிக தெளிவாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்போது, "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் நிலைப்பாடு. ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்றில்லாமல் சிறிய சிறிய கட்சிகளும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்கிற நோக்கம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார். "கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களின் வாக்குகள் இல்லாமல் திமுக எம்.எல்.ஏக்களின் வாக்குகளை வைத்தே முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அளவுக்கு திமுக கூட்டணி வெற்றி பெறும். அதில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும். கூட்டணி அரசு என்கிற நோக்கம் எங்களுக்கு இல்லை. அது சரியாக வருமா என்று பார்த்தால் பலரும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்" எனத் தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் தி.மு.க-வுக்கு அதன் பெருமை வந்து சேரும். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க கூறுகிறது. அவர்களே கூறும்போது, தமிழ்நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி சொல்லக்கூடாதா?" எனக் கூறியிருந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நிலைப்பாடு மாறுமா? பட மூலாதாரம்,X/EZHIL CAROLINE படக்குறிப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான சல்மா. அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்தக் கூட்டணியில் அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி திமுகதான். பெரும்பான்மை பலம் உள்ள கட்சி என்கிற அடிப்படையில்தான் திமுக ஆட்சி அமைக்கிறது. தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கு நிலையான ஆட்சிதான் காரணமாக இருந்துள்ளது. எனவே ஆட்சியில் பங்கு என்பதற்கான தேவை எழுந்ததில்லை. அதற்கான கோரிக்கை வருகிறபோது தலைவர்கள் அதைப் பேசி முடிவெடுப்பார்கள்," என்றார். ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கை நியாயமானது மட்டுமல்ல, மிகவும் காலதாமதமானது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தி விடுவது என்பது வெறும் கொள்கை முழக்கமாக இருந்துவிடக்கூடாது. அனைத்து தரப்பினரையும் மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதற்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதே சரியாக இருக்கும். அதைத்தான் விசிக கூறி வருகிறது. இரண்டு கட்சிகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்கிற நிலை மாற வேண்டும்" என்றார். ஒரு கூட்டணியின் வெற்றியில் அனைத்துக் கட்சிகளுக்கும் பங்குள்ளது என்னும்போது அதை அங்கீகரிக்க வேண்டும் என்கிறார் எழில் கரோலின். "தனித்துப் போட்டியிட்டு ஒரு கட்சி வெற்றி பெறக்கூடிய சூழல் தமிழ்நாட்டில் இப்போது இல்லை. இந்தச் சூழலைப் புரிந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகம், கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் அதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று தெரிவித்தார். கூட்டணி அரசால் நிலையான ஆட்சியைத் தர முடியாதா? பட மூலாதாரம்,GETTY IMAGES கூட்டணி அரசு அமைந்தால் நிர்வாகம் தடைபடும் என்பது தேவையற்ற அச்சம் என்று கூறிய எழில் கரோலின், "மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லையா? அதனால் நிர்வாகம் தடைபட்டுவிட்டதா? தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைந்தது இல்லை. அந்த அனுபவமே இல்லாமல் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நிர்வாகம் தடைபடும் என்பது தேவையற்ற கவலை. இட ஒதுக்கீடு, மாநில உரிமை என எதை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலான திட்டங்கள், கொள்கைகளில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்துதான் உள்ளது என்னும்போது அச்சம் அவசியமற்றது" என்றார். இதை ஒத்த கருத்தையே கூறும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, கூட்டணி ஆட்சிக்கான கட்டாயம் உருவாகிவிட்டதாகக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தற்போது உள்ள சூழ்நிலையில் எந்தக் கட்சியாலும் தனித்து நின்று வெற்றி பெற முடியாது. அதுதான் எதார்த்தம். கூட்டணியின் வெற்றியில் அனைவருக்கும் பங்கு உள்ளது. தமிழ்நாட்டில் பல முறை நெருக்கமான போட்டியைக் கண்டுள்ளோம்." "சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. ஒரு கட்சிக்கு 2% தான் வாக்கு வங்கி இருக்கிறது எனக் கூறி புறந்தள்ளிவிட முடியாது. கூட்டணியின் வெற்றிக்கு அவர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கலாம். புள்ளி விவரங்களையும் கடந்து கூட்டணி ஆட்சி அமைவதுதான் சமநிலையை உருவாக்கும்" என்று கூறினார். திமுக, அதிமுக நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,X/SASI REKHA ADMK படக்குறிப்பு, அதிமுக ஆட்சிதான் அமையும் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சசிரேகா பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை எத்தனைக் கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் அதிமுகவின் ஆட்சிதான் அமையும் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சசிரேகா. "பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கேள்விகளுக்கு தெளிவாகப் பதில் அளித்துவிட்டார். அதிமுகதான் ஆட்சி அமைக்கும் எனக் கூறிவிட்டார். 31 வருட அதிமுக ஆட்சியில் அப்படித்தான் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும்." கூட்டணிக் கட்சிகளுக்கு ஆசை இருக்கலாம் என்றாலும், பெரிய கட்சி எது என்பதே முக்கியம் என்கிறார் சசிரேகா. மேலும், "கூட்டணிக்கு யார் தலைமை ஏற்கிறார்கள், எந்தச் சின்னத்திற்கு வாக்கு அளிக்கிறார்கள், யார் முதல்வர் முகமாக உள்ளார் என்பதும் முக்கியம். அதன் அடிப்படையில் பார்த்தால் அதிமுகதான் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிமுக தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை அதே நிலைப்பாடுதான், இனியும் அது தொடரும்," என்றார். பட மூலாதாரம், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் படக்குறிப்பு, தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்நாட்டில் இதுநாள் வரை தொங்கு சட்டசபை அமைந்தது இல்லை. எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் எப்போதுமே பெரும்பான்மை இடம் கிடைத்துள்ளது. மக்களின் தேர்வும் அதுவாகவே இருந்து வருகிறது" என்றார். கடந்து 1979 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் 38 இடங்களில் வென்றது. அடுத்து உடனே 1980இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சரிபாதி இடங்களில் திமுக, காங்கிரஸ் போட்டியிட்டன. ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, அப்போது திமுக தோல்வியுற்றது என்று கடந்த கால முடிவுகளைக் குறிப்பிட்டுப் பேசினார் ரவிந்திரன். அதோடு, 2006 தேர்தல் பற்றி விவரித்த அவர், "அப்போது திமுக சிறுபான்மை அரசாக இருந்தது என்கிற கருத்து உள்ளது. ஆனால் திமுக கூட்டணி அப்போது 169 இடங்களில் வென்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்ததால்தான் திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற முடியவில்லை" என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr4ww6genzno

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

12 hours 40 minutes ago
என்ன இருந்தாலும்.... நல்ல கூறைச் சீலை வாங்கிறதெண்டதால், இந்தியாவுக்குத் தான் போகவேணும். அதுதான்... குமாரசாமி அண்ணை தன்னுடைய கொள்கையில் இருந்து U-Turn அடித்து, இந்தியாவை புகழ்ந்து தள்ளினவர் போலை இருக்கு. 😂 ஸ்ராலின் தான் வாறாரு... செம பகிடி 🤣. குதிரைக்கு கொம்பு முளைக்காததும் நல்லதுக்குத்தான். 😂

பயந்தாங்கொள்ளி

12 hours 54 minutes ago
இன்று தான் நேரம் கிடைத்தது ஆறுதலாக வாசிக்க. உங்கள் எழுத்து நடை தனித்துவமானது. முதல் இரண்டு பந்திகளில் சொல்லப்பட்ட விடயங்களை தனித்து பார்க்கையிலும், மூன்றாம் பந்தியுடன் சேர்த்து பார்க்கையிலும் வெவ்வேறு வாசிப்பனுவங்களைத் தருகின்றது. மாதுளை பற்றிய விடயமும் அவ்வாறே. எல்லாவற்றையும் சேர்த்து வாசிக்கும் போது நல்லதொரு கதையை அனுபவத்தை வாசித்த உணர்வு வருகின்றது. --- எல்லாரும் ஒரு விதத்தில் பயந்தாங்கொள்ளிகள் தான். வாழ்க்கை முழுதும் ஏதோ ஒன்றிற்காக அஞ்சியபடியே தான் வாழ்கின்றோம். அறத்துக்கு, மற்றவர்களின் திட்டுக்கு, அரசுக்கு, அதன் சட்டங்களுக்கு, தெருவில் திடீரென அணையும் மின் விளக்குகளுக்கு, தனிமைக்கு, பெருங் கூட்டம் ஒன்றில் விடப்படுவதற்கு.. எல்லாவற்றையும் விட தவறு ஒன்று செய்து விட்டு, அதை மீட்டிப் பார்க்கும் போது மனசு கேட்கும் கேள்விகளுக்கு... என்று பயந்தபடிதான் வாழ்கின்றோம். மரணம் ஒன்று மட்டுமே பயமற்றது. எல்லா பயத்திலும் இருந்து விடுவிப்பது.

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

12 hours 56 minutes ago
கு சா அண்ணைக்கு இந்தியன் ஹொலிடே விசாவில் ஏதோ சிக்கல் என நினைக்கிறேன்🤣. திடீரென ஒரு நாள் ரஸ்யா உக்ரேனில் நடக்கும் விதமும், இந்தியா இலங்கை தமிழர் விடயத்தில் நடந்த விதமும் சரிதான் என எழுதினவர் 🤣. நல்லகாலம் தமிழ்நாடு அரசுக்கு இந்த பவர் இல்லை, இல்லாட்டில் இங்க கனபேர் “ஸ்டாலிந்தான் வாறாரு, விடியல் தரப்போறாரு” எண்டு எழுத வேண்டி வந்திருக்கும்😂.

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது

13 hours 17 minutes ago
சோளத்தில்... பலகோடி லஞ்சம் (25 மில்லியன்) மோசடியில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (04) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (04) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Vaanam.lk

'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?

13 hours 54 minutes ago
ரிதன்யாவின் மரணம் – மாமியார் கைது. திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் தொழிலதிபரான அண்ணா துரை. இவருடைய மகள் ரிதன்யா. 27 வயதான ரிதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 28-ந் திகதி காருக்குள் விஷம் குடித்து ரிதன்யா தன் உயிரை மாய்த்துக்கொண்டார். தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி தனது மரணத்திற்கு தனது கணவர், மாமனார், மாமியார் காரணம் என உருக்கமாக பேசிய குரல் பதிவொன்று அனுப்பி இருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சேவூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கவின்குமார், ஈஸ்வர மூர்த்தியை கைது செய்தனர். இதையடுத்து மாமியார் சித்ராதேவி உடல் நலக்குறைவு காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் விடுவிக்கப்பட்டிருந்தார். கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி இருவரும் தங்களை பிணையில் விடுவிக்க அனுமதிக்கு மாறு திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை வரும் 7-ம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ரா தேவியை தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர். சேயூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ரிதன்யாவின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து மாமியார் சித்ரா தேவியை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsரிதன்யாவின் மரணம் - மாமியார் கைதுதிருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் தொழிலதிபரான அண்ணா துரை. இவருடைய மகள் ரிதன்யா. 27 வயதான ரிதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கு...

பறந்து போ விமர்சனம்: மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு... நம்மையும் பறக்க அழைக்கும் ராமின் உலகம்!

14 hours ago
சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன. அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார். பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் இந்தத் தனிமையால், பெற்றோரின் மீது பிடிப்பின்மையும், குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் அன்புக்கு வருகின்றன. இந்நிலையில், அலுவல் நிமித்தமாக குளோரி கோவை செல்ல, எதிர்பாராத தருணத்தில், கோகுலும் அன்பும் ஒரு சின்ன பைக் ரைடுக்குக் கிளம்புகிறார்கள். இந்தப் பயணத்தில் பெற்றோருக்குள்ளும், அன்புக்குள்ளும் நிகழும் நேர்மறை மாற்றங்களே ராம் இயக்கியிருக்கும் 'பறந்து போ'. தன் வழக்கமான அப்பாவித்தனமான மேனரிஸத்தோடும், ஒன் லைன் கவுன்ட்டர் காமெடிகளோடும் உலாவும் சிவா, ஆங்காங்கே வரும் உணர்வுபூர்வமான தருணங்களையும் முதிர்ச்சியுடன் அணுகி, தன் கதாபாத்திரத்தை அழுத்தமாகப் பதிய வைக்கிறார். சிவாவின் கவுன்ட்டர்களைக் கதையிலிருந்து விலக வைக்காத வகையில், நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். மகன் மீதான பாசம், கணவன் மீதான காதல், பொருளாதாரம் கொடுக்கும் அழுத்தம், தங்கை மீதான ஏக்கம் என உணர்வுகளின் வெளியில் பறக்கும் குளோரி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் கிரேஸ் ஆண்டனி. இறுதிக்காட்சியில் லூட்டியடித்து சிரிப்பலைகளையும் அள்ளுகிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் சிறிது மீறினாலும், ஓவர்டோஸ் மோடுக்குப் போய்விடும் அன்பு கதாபாத்திற்குத் தேவையான கச்சிதமான நடிப்பை மிதுல் ரயானிடமிருந்து வாங்கியிருக்கிறார் இயக்குநர். நகைச்சுவை தாண்டி, எமோஷனல் காட்சிகளிலும் நம் அன்பைப் பெறுகிறார் இந்த அன்பு! அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் குறைந்த திரை நேரத்திலும் கவனிக்க வைக்கிறார்கள். விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். பயணங்களில் நிலவியலையும், எமோஷனல் தருணங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பீல் குட் மீட்டரிலிருந்து விலகாமல் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம். இதற்கு மதி வி.எஸ்-ஸின் படத்தொகுப்பும் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறது. ஆங்காங்கே வரும் 'டிரோன் ஷாட்'களும் இந்தப் பறத்தலுக்குச் சிறகை வீசியிருக்கின்றன. சந்தோஷ் தயாநிதி இசையில் மதன் கார்க்கி வரிகளில் குழந்தைகளின் உலகத்தையும், அவர்களின் பார்வையையும் பேசும் பாடல்கள் குழந்தைகளின் மொழியிலேயே படம் நெடுகிலும் திரைக்கதையோடு பிணைந்து, கதைக்கருவிற்குக் கைகொடுத்திருக்கின்றன. இப்பாடல்களுக்கு இடையில் ஆங்காங்கே தென்படும் மேகக்கூட்டம் போல் வரும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் குறையில்லை. Parandhu Po review | பறந்து போ விமர்சனம் சமகால குழந்தைகளின் உலகம், அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், அவற்றைப் பெற்றோர்கள் அணுகும் முறையிலிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றை எமோஷனலாகவும், காமெடியாகவும் பேசியபடி தொடங்குகிறது திரைக்கதை. அச்சிக்கல்களுக்கான தீர்வுகளைச் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்கள், கிளைக்கதைகளின் உதவியோடு விவாதிக்கிறது திரைக்கதை. பரபரப்பு, திருப்பங்கள் இல்லாமல், நேர்க்கோட்டில் நிதானமாகப் பயணிக்கும் திரைக்கதை, காமெடி, எமோஷன் என மாறி, மாறி வந்தாலும் அழுத்தமாகவே நகர்கிறது.சிறுவனின் சேட்டைகள், அதனால் அல்லாடும் தந்தை எனக் காட்சிகள் வரிசைக்கட்டுகின்றன. இவற்றில், சிறுவனின் சேட்டைகளில் அதீத தன்மை எட்டிப்பார்க்காத வகையில், நியாயமான காரணங்களும் அக்காட்சிகளினூடே இடம்பெற்றிருக்கின்றன. இயக்குநர் ராமின் 'அன்பு சூழ்' உலகமும், மனிதர்களும் திகட்டாத வகையில் கச்சிதமான அளவில் 'நின்றுவிடுவது' படத்திற்குப் பலம். கோகுலின் தந்தை, கோகுல், அன்பு என மூன்று தலைமுறையினருக்குள் நடக்கும் உரையாடல் காட்சி கலகலப்பு! காக்ரோச் எனத் தன்னை அறிமுக செய்துகொள்ளும் குட்டிக் குழந்தையிடமிருந்து பெறப்பட்ட நடிப்பில் க்யூட்னஸ் ஓவர் லோடட்! தண்ணீர் கேன்கள் இருக்கும் கைப்பையை வைத்துக்கொண்டு, அதைத் திறந்துகூடப் பார்க்காமல், தாகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிவா, ஆண்களின் அவசரகதி உலகைப் பிரதிபலிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் அதே சமயம், சில காட்சிகளில் எதார்த்தத்தை மீறும் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். இறுதிக்காட்சியானது அதன் சுவாரஸ்ய எல்லையை மீறி, மலை ஏறிக்கொண்டே போவது அயற்சியை வர வைக்கிறது. இறுதிக்காட்சியில் ஈழைநோய் உள்ள குளோரியிடம், இன்ஹேலரைத் தூக்கிப் போடச் சொன்னதைத் தவிர்த்திருக்கலாம். கிராம வாழ்க்கையைப் புனிதப்படுத்துவது போல நீட்டி முழக்கினாலும், இறுதியில் அதையும் விமர்சனத்திற்குள்ளாக்கியது சிறப்பு! நவீன பொருளாதார சூழலும், நகரமயமாக்கலும் தரும் அதீத அழுத்தங்களால் பெற்றோர் மீது திணிக்கப்படும் சுமைகள்... அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் குழந்தைகள் என்ற பிரச்னையை பீல் குட் படமாக உரையாடி, நம்மையும் குழந்தைகளின் உலகில் பறக்கவிட்டிருக்கிறது இந்த 'பறந்து போ'. Parandhu Po review; பறந்து போ விமர்சனம்; மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் ராம்; பறந்து போ எப்படி இருக்கு?

பறந்து போ விமர்சனம்: மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு... நம்மையும் பறக்க அழைக்கும் ராமின் உலகம்!

14 hours ago

சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன.

அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார்.

பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார்.

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

இந்தத் தனிமையால், பெற்றோரின் மீது பிடிப்பின்மையும், குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் அன்புக்கு வருகின்றன.

இந்நிலையில், அலுவல் நிமித்தமாக குளோரி கோவை செல்ல, எதிர்பாராத தருணத்தில், கோகுலும் அன்பும் ஒரு சின்ன பைக் ரைடுக்குக் கிளம்புகிறார்கள்.

இந்தப் பயணத்தில் பெற்றோருக்குள்ளும், அன்புக்குள்ளும் நிகழும் நேர்மறை மாற்றங்களே ராம் இயக்கியிருக்கும் 'பறந்து போ'.

தன் வழக்கமான அப்பாவித்தனமான மேனரிஸத்தோடும், ஒன் லைன் கவுன்ட்டர் காமெடிகளோடும் உலாவும் சிவா, ஆங்காங்கே வரும் உணர்வுபூர்வமான தருணங்களையும் முதிர்ச்சியுடன் அணுகி, தன் கதாபாத்திரத்தை அழுத்தமாகப் பதிய வைக்கிறார்.

சிவாவின் கவுன்ட்டர்களைக் கதையிலிருந்து விலக வைக்காத வகையில், நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர்.

மகன் மீதான பாசம், கணவன் மீதான காதல், பொருளாதாரம் கொடுக்கும் அழுத்தம், தங்கை மீதான ஏக்கம் என உணர்வுகளின் வெளியில் பறக்கும் குளோரி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் கிரேஸ் ஆண்டனி. இறுதிக்காட்சியில் லூட்டியடித்து சிரிப்பலைகளையும் அள்ளுகிறார்.

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

சிறிது மீறினாலும், ஓவர்டோஸ் மோடுக்குப் போய்விடும் அன்பு கதாபாத்திற்குத் தேவையான கச்சிதமான நடிப்பை மிதுல் ரயானிடமிருந்து வாங்கியிருக்கிறார் இயக்குநர். நகைச்சுவை தாண்டி, எமோஷனல் காட்சிகளிலும் நம் அன்பைப் பெறுகிறார் இந்த அன்பு!

அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் குறைந்த திரை நேரத்திலும் கவனிக்க வைக்கிறார்கள். விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

பயணங்களில் நிலவியலையும், எமோஷனல் தருணங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பீல் குட் மீட்டரிலிருந்து விலகாமல் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்.

இதற்கு மதி வி.எஸ்-ஸின் படத்தொகுப்பும் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறது. ஆங்காங்கே வரும் 'டிரோன் ஷாட்'களும் இந்தப் பறத்தலுக்குச் சிறகை வீசியிருக்கின்றன.

சந்தோஷ் தயாநிதி இசையில் மதன் கார்க்கி வரிகளில் குழந்தைகளின் உலகத்தையும், அவர்களின் பார்வையையும் பேசும் பாடல்கள் குழந்தைகளின் மொழியிலேயே படம் நெடுகிலும் திரைக்கதையோடு பிணைந்து, கதைக்கருவிற்குக் கைகொடுத்திருக்கின்றன.

இப்பாடல்களுக்கு இடையில் ஆங்காங்கே தென்படும் மேகக்கூட்டம் போல் வரும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் குறையில்லை.

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

சமகால குழந்தைகளின் உலகம், அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், அவற்றைப் பெற்றோர்கள் அணுகும் முறையிலிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றை எமோஷனலாகவும், காமெடியாகவும் பேசியபடி தொடங்குகிறது திரைக்கதை.

அச்சிக்கல்களுக்கான தீர்வுகளைச் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்கள், கிளைக்கதைகளின் உதவியோடு விவாதிக்கிறது திரைக்கதை.

பரபரப்பு, திருப்பங்கள் இல்லாமல், நேர்க்கோட்டில் நிதானமாகப் பயணிக்கும் திரைக்கதை, காமெடி, எமோஷன் என மாறி, மாறி வந்தாலும் அழுத்தமாகவே நகர்கிறது.சிறுவனின் சேட்டைகள், அதனால் அல்லாடும் தந்தை எனக் காட்சிகள் வரிசைக்கட்டுகின்றன. இவற்றில், சிறுவனின் சேட்டைகளில் அதீத தன்மை எட்டிப்பார்க்காத வகையில், நியாயமான காரணங்களும் அக்காட்சிகளினூடே இடம்பெற்றிருக்கின்றன.

இயக்குநர் ராமின் 'அன்பு சூழ்' உலகமும், மனிதர்களும் திகட்டாத வகையில் கச்சிதமான அளவில் 'நின்றுவிடுவது' படத்திற்குப் பலம்.

கோகுலின் தந்தை, கோகுல், அன்பு என மூன்று தலைமுறையினருக்குள் நடக்கும் உரையாடல் காட்சி கலகலப்பு!

காக்ரோச் எனத் தன்னை அறிமுக செய்துகொள்ளும் குட்டிக் குழந்தையிடமிருந்து பெறப்பட்ட நடிப்பில் க்யூட்னஸ் ஓவர் லோடட்!

தண்ணீர் கேன்கள் இருக்கும் கைப்பையை வைத்துக்கொண்டு, அதைத் திறந்துகூடப் பார்க்காமல், தாகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிவா, ஆண்களின் அவசரகதி உலகைப் பிரதிபலிக்கிறார்.

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

அதே சமயம், சில காட்சிகளில் எதார்த்தத்தை மீறும் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். இறுதிக்காட்சியானது அதன் சுவாரஸ்ய எல்லையை மீறி, மலை ஏறிக்கொண்டே போவது அயற்சியை வர வைக்கிறது.

இறுதிக்காட்சியில் ஈழைநோய் உள்ள குளோரியிடம், இன்ஹேலரைத் தூக்கிப் போடச் சொன்னதைத் தவிர்த்திருக்கலாம். கிராம வாழ்க்கையைப் புனிதப்படுத்துவது போல நீட்டி முழக்கினாலும், இறுதியில் அதையும் விமர்சனத்திற்குள்ளாக்கியது சிறப்பு!

நவீன பொருளாதார சூழலும், நகரமயமாக்கலும் தரும் அதீத அழுத்தங்களால் பெற்றோர் மீது திணிக்கப்படும் சுமைகள்... அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் குழந்தைகள் என்ற பிரச்னையை பீல் குட் படமாக உரையாடி, நம்மையும் குழந்தைகளின் உலகில் பறக்கவிட்டிருக்கிறது இந்த 'பறந்து போ'.

Parandhu Po review; பறந்து போ விமர்சனம்; மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் ராம்; பறந்து போ எப்படி இருக்கு?

3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி?

14 hours 1 minute ago
சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம். மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்ப்பவர் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சொந்த வீடு வாங்குவதற்காக சேமிக்கிறார். தொடர்ந்து வாடகை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பமே சொந்த வீடு கனவில் இருக்கிறது. மனைவி சாந்தி (தேவயாணி) முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பார்த்து வரும் மகன் பிரபு (சித்தார்த்) கல்லூரி முடிந்து ஓர் ஆலையில் வேலைக்கு செல்கிறார். அண்ணனை பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைப்பதற்காக அரசு பள்ளியில் படிக்கும் மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்). இப்படி வாழ்நாள் முழுக்க ‘அட்ஜஸ்ட்’ செய்து வாழும் இந்த குடும்பத்தின் சொந்த வீடு கனவு நனவானதா என்பதே ‘3பிஹெச்கே’ படத்தின் திரைக்கதை. ‘8 தோட்டாக்கள்’ மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷின் மூன்றாவது படம். மிக எளிமையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை முடிந்தவரை அலுப்பு தட்டாமல் பல இடங்களில் நெகிழ வைத்தும், சுவாரஸ்யத்துடனும் தந்திருக்கிறார். படத்தின் முதல் காட்சியிலேயே தேவையற்ற அறிமுகங்கள் இன்றி கார்த்தியின் வாய்ஸ் ஓவரில் ‘சிம்பிள்’ ஆக கதைக்குள் நுழைந்த விதம் சிறப்பு. அடுத்த காட்சிகளில் கதையின் முக்கிய நோக்கம், கதாபாத்திரங்களின் தன்மைகள் ஆகியவை ஆடியன்ஸின் மனதில் பதிந்து விடுகிறது. இதுவே படத்துடன் மிக இலகுவாக ஒன்றவைத்து விடுகிறது. லேசாக பிசகினாலும் சீரியல் போல ஆகிவிடக் கூடிய கதைக்களத்தில் கடைசி வரை நெளியவிடாமல் வைத்திருப்பது நடிகர்களின் நடிப்பு. படத்தின் ஹீரோ சந்தேகமே இன்றி சரத்குமார்தான். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக மிக இயல்பான நடிப்பு. சொந்த வீடு கனவை எப்போதும் சுமந்து திரியும்போதும், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள முதலில் தயங்கி, பின்னர் காலத்தின் கட்டாயத்தால் வேறு வழியின்றி மாற்றத்துக்கு தயாராகும் காட்சிகளில் மனதை கவர்ந்து விடுகிறார். முதல் முழுக்க சரத்குமார் ஆதிக்கம் என்றால் இரண்டாம் பாதி முழுக்க சித்தார்த்துக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. அவரும் தன் கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார். பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் எல்லாம் உடலை குறுக்கி நம்பகத்தன்மையை கூட்டியிருக்கிறார். ஒவ்வொரு பருவத்திலும் அவரது முகத்திலும், நடிப்பிலும் காட்டும் வெரைட்டி ரசிக்க வைக்கிறது. ’குட் நைட்’ படத்துக்குப் பிறகு மீதா ரகுநாத்துக்கு இது முக்கியமான கதாபாத்திரம். அண்ணனுக்காக தன்னுடைய தேவைகளை குறைத்து கொள்ளும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார். கன்னடத்தில் ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு பி’ படத்தில் நடித்த சைத்ரா மற்றொரு ஆச்சர்யம். சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார். படத்தில் தேவயாணி கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே கணவருக்கு ஆறுதல் சொல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். படத்தின் இன்னொரு பலம் அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை. நெகிழ வைக்கும் காட்சிகளுக்கு அவரது இசை பெரிதும் கைகொடுத்திருக்கிறது. பாடல்களில் ‘கனவெல்லாம்’, ‘துள்ளும் நெஞ்சம்’ பாடல்கள் சிறப்பு. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸின் ஒளிப்பதிவு நேர்த்தி. மிடில் கிளாஸ் குடும்பத்தினர் அனைவருக்குமே சொந்த வீடு கனவு இருக்கும்தான். ஆனால் அதற்காக சொந்த வீடு இல்லையென்றால் வாழவே முடியாது என்பதைப் போல குடும்பத்தில் உள்ள அனைவரும் அழுது வடிந்துகொண்டே இருப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஒரு காட்சியில் தன் தம்பி சுப்பு பஞ்சுவிடம் சென்று வீடு வாங்க கடன் கேட்கிறார் சரத்குமார். அப்போது ஓர் இடத்தில் சொந்த வீடு தான் மரியாதை என்று ஒரு வசனம் வருகிறது. கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவதில் அப்படி என்ன மரியாதை? அதே போல தன்னுடைய கனவை எந்நேரமும் தன் மகன் சித்தார்த் மீது திணித்துக் கொண்டே இருக்கிறார் சரத்குமார். இரண்டாம் பாதியில் அதை அவர் உணர்வதை போன்ற காட்சிகளை இன்னும் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லி இருக்கலாம். பெற்றோரின் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத துறையை தேர்வு செய்து படித்து, அந்த துறையிலேயே வேலைக்கு செல்லும் சித்தார்த் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் உதறிவிட்டு வீட்டிலேயே தனக்கு பிடித்த துறையை படித்து வேலைக்கு செல்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். அந்த காட்சிகளில் எந்தவொரு அழுத்தமும் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சி இழுத்துக் கொண்டே போவதைப் போன்ற உணர்வை தவிர்த்திருக்கலாம். மேற்சொன்ன சில குறைகளை தாண்டி எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமல் மிடில் கிளாஸ் குடும்பங்கள் படும் சிரமங்களை, கனவை நிறைவேற்ற சந்திக்கும் போராட்டங்களை நெகிழ்ச்சியுடன் காட்சிப்படுத்திய விதத்தில் இந்த ‘3பிஹெச்கே’வை வரவேற்கலாம். 3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி? | 3BHK Movie review - hindutamil.in

3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி?

14 hours 1 minute ago

1368096.jpg

சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம்.

மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்ப்பவர் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சொந்த வீடு வாங்குவதற்காக சேமிக்கிறார். தொடர்ந்து வாடகை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பமே சொந்த வீடு கனவில் இருக்கிறது.

மனைவி சாந்தி (தேவயாணி) முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பார்த்து வரும் மகன் பிரபு (சித்தார்த்) கல்லூரி முடிந்து ஓர் ஆலையில் வேலைக்கு செல்கிறார். அண்ணனை பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைப்பதற்காக அரசு பள்ளியில் படிக்கும் மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்). இப்படி வாழ்நாள் முழுக்க ‘அட்ஜஸ்ட்’ செய்து வாழும் இந்த குடும்பத்தின் சொந்த வீடு கனவு நனவானதா என்பதே ‘3பிஹெச்கே’ படத்தின் திரைக்கதை.

‘8 தோட்டாக்கள்’ மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷின் மூன்றாவது படம். மிக எளிமையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை முடிந்தவரை அலுப்பு தட்டாமல் பல இடங்களில் நெகிழ வைத்தும், சுவாரஸ்யத்துடனும் தந்திருக்கிறார். படத்தின் முதல் காட்சியிலேயே தேவையற்ற அறிமுகங்கள் இன்றி கார்த்தியின் வாய்ஸ் ஓவரில் ‘சிம்பிள்’ ஆக கதைக்குள் நுழைந்த விதம் சிறப்பு. அடுத்த காட்சிகளில் கதையின் முக்கிய நோக்கம், கதாபாத்திரங்களின் தன்மைகள் ஆகியவை ஆடியன்ஸின் மனதில் பதிந்து விடுகிறது. இதுவே படத்துடன் மிக இலகுவாக ஒன்றவைத்து விடுகிறது.

லேசாக பிசகினாலும் சீரியல் போல ஆகிவிடக் கூடிய கதைக்களத்தில் கடைசி வரை நெளியவிடாமல் வைத்திருப்பது நடிகர்களின் நடிப்பு. படத்தின் ஹீரோ சந்தேகமே இன்றி சரத்குமார்தான். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக மிக இயல்பான நடிப்பு. சொந்த வீடு கனவை எப்போதும் சுமந்து திரியும்போதும், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள முதலில் தயங்கி, பின்னர் காலத்தின் கட்டாயத்தால் வேறு வழியின்றி மாற்றத்துக்கு தயாராகும் காட்சிகளில் மனதை கவர்ந்து விடுகிறார்.

17516041881138.jpg

முதல் முழுக்க சரத்குமார் ஆதிக்கம் என்றால் இரண்டாம் பாதி முழுக்க சித்தார்த்துக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. அவரும் தன் கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார். பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் எல்லாம் உடலை குறுக்கி நம்பகத்தன்மையை கூட்டியிருக்கிறார். ஒவ்வொரு பருவத்திலும் அவரது முகத்திலும், நடிப்பிலும் காட்டும் வெரைட்டி ரசிக்க வைக்கிறது.

’குட் நைட்’ படத்துக்குப் பிறகு மீதா ரகுநாத்துக்கு இது முக்கியமான கதாபாத்திரம். அண்ணனுக்காக தன்னுடைய தேவைகளை குறைத்து கொள்ளும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார். கன்னடத்தில் ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு பி’ படத்தில் நடித்த சைத்ரா மற்றொரு ஆச்சர்யம். சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார். படத்தில் தேவயாணி கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே கணவருக்கு ஆறுதல் சொல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

படத்தின் இன்னொரு பலம் அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை. நெகிழ வைக்கும் காட்சிகளுக்கு அவரது இசை பெரிதும் கைகொடுத்திருக்கிறது. பாடல்களில் ‘கனவெல்லாம்’, ‘துள்ளும் நெஞ்சம்’ பாடல்கள் சிறப்பு. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸின் ஒளிப்பதிவு நேர்த்தி.

மிடில் கிளாஸ் குடும்பத்தினர் அனைவருக்குமே சொந்த வீடு கனவு இருக்கும்தான். ஆனால் அதற்காக சொந்த வீடு இல்லையென்றால் வாழவே முடியாது என்பதைப் போல குடும்பத்தில் உள்ள அனைவரும் அழுது வடிந்துகொண்டே இருப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஒரு காட்சியில் தன் தம்பி சுப்பு பஞ்சுவிடம் சென்று வீடு வாங்க கடன் கேட்கிறார் சரத்குமார். அப்போது ஓர் இடத்தில் சொந்த வீடு தான் மரியாதை என்று ஒரு வசனம் வருகிறது. கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவதில் அப்படி என்ன மரியாதை?

அதே போல தன்னுடைய கனவை எந்நேரமும் தன் மகன் சித்தார்த் மீது திணித்துக் கொண்டே இருக்கிறார் சரத்குமார். இரண்டாம் பாதியில் அதை அவர் உணர்வதை போன்ற காட்சிகளை இன்னும் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லி இருக்கலாம். பெற்றோரின் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத துறையை தேர்வு செய்து படித்து, அந்த துறையிலேயே வேலைக்கு செல்லும் சித்தார்த் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் உதறிவிட்டு வீட்டிலேயே தனக்கு பிடித்த துறையை படித்து வேலைக்கு செல்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். அந்த காட்சிகளில் எந்தவொரு அழுத்தமும் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சி இழுத்துக் கொண்டே போவதைப் போன்ற உணர்வை தவிர்த்திருக்கலாம்.

மேற்சொன்ன சில குறைகளை தாண்டி எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமல் மிடில் கிளாஸ் குடும்பங்கள் படும் சிரமங்களை, கனவை நிறைவேற்ற சந்திக்கும் போராட்டங்களை நெகிழ்ச்சியுடன் காட்சிப்படுத்திய விதத்தில் இந்த ‘3பிஹெச்கே’வை வரவேற்கலாம்.

3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி? | 3BHK Movie review - hindutamil.in

'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?

14 hours 3 minutes ago
■2 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட திருமணம், ■நகை, கார் என்று 3 கோடி ரூபாய் வரதட்சணை., ■5 கோடி ரூபாயை அந்த பெண்ணின் வங்கி கணக்கில் fixed deposit செய்தாலே 7% க்கு வட்டி கிடைத்து இருக்கும் அதாவது குறைந்தது மாதம் 3 லட்சம் ரூபாய் வருவாய்., ■இதை வைத்து அந்த பெண் 7 தலைமுறைக்கு உக்காந்து சாப்பிட முடியும்., ■ஆக இந்த திருமணத்திலும் பெண் நல்லா வாழனும் என்பதை விட பெற்றோரின் கௌரவம் தான் பிரதானமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.! ■பெற்றோரின் கௌரவத்துக்கு பணத்தாசை பிடித்த மிருகங்களிடம் சிக்கி பலியான பெண்ணுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். உண்மை உரைகல்

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

14 hours 10 minutes ago
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி, கிரிமினல் மூளை வேலை செய்யும். 😂 @satan @குமாரசாமி, @விசுகு ஆகியோர் என்ன மாதிரியான பிளான் போட்டு வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்கும் தெரியாது. சில வேளை அவர்கள் நசுக்கிடாமல் போய் கொத்துரொட்டி சாப்பிட்டு வாற ஆட்களாகவும் இருக்கலாம். 🤣

பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லாமையால் மாணவன் கவனயீர்ப்பு போராட்டம்!

14 hours 31 minutes ago
அழைத்து செல்லாமைக்கான காரணம் என்ன என பாடசாலையிடம் கேட்க வேண்டும் என வீரகேசரிக்கு தோணவில்லை போலும்🤣.