சமூகவலை உலகம்

தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் .

2 months 4 weeks ago

முற்றத்து மல்லிகை "அக்குட்டியும் - பிச்சுமணியும்"---

தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள்

*பேச்சு வழக்கில் வெளிப்படும் சிலேடைச் சொற்கள்.

--- ----- ----- ------

நகைச்சுவை தமிழுக்கே உரிய சிறப்பு. அக்குட்டி - பிச்சுமணி என்று அழைக்கப்படும் “Valvai Sulax” -“கஜன் தாஸ்” என்ற இருவரும் தொடர்ச்சியாக, தமது நகைச்சுவை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி வரும் கதாபாத்திரங்கள் யதார்த்தத்தை உணர்த்தி நிற்கிறது.

“இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருவள்ளுவர் வாக்கு. இதன் பொருள், "துன்பம் வரும்போது மனம் தளராமல் சிரிக்க வேண்டும் என்பதாகும்.

ஆகவே, துன்பத்தை வெல்ல மகிழ்ச்சியைவிட சிறந்த வழி வேறில்லை என்ற பொருளில் நகைச்சுவையின் மேன்மை அமைந்துள்ளது.

மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால், எந்த துன்பத்தையும் எளிதாக கடந்து விடலாம் என்று வள்ளுவர் அன்றே கூறிவிட்டார்.

ஆகவே, வள்ளுவர் வாக்கை மையப்படுத்தி துன்பத்தை வெல்ல “மகிழ்ச்சி” ஓர் ஆயுதம் என்பதை அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் நிறுவியுள்ளனர்.

ஈழத் தமிழர்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களில், சிலேடைச் சொற்கள் சில, தூய தமிழில் - சாதாரண பேச்சு மொழியில் இவர்களின் வார்த்தைகளில் இருந்து இவர்களை அறியாமலேயே வெளிப்படுகின்றன.

அதுவும் ஆங்கில கலப்பில்லாத பேச்சு மொழி. அந்த சிலேடைச் சொற்கள் பல கற்பிதங்களை உணர்த்துகிறது.

முகபாவங்கள் கூட வாழ்வியல் அர்த்தங்கள் பலதை தருகின்றன.

அதாவது, ஒரு குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் - சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள், இந்த இரு கலைஞர்களின் முகபாவங்களில் இருந்து வெளிப்படுகின்றன.

இருவரும் வெளிப்படுத்தும் முகபாவங்கள் இயல்பான நகைச்சுவை தன்மை கொண்டது. வாழ்வியல் உண்மைகளும் புடம்போட்டு காண்பிக்கின்றன.

ஆகவே, சமுதாய வாழ்வியல் சீர்திருத்தங்கள் எளிய முறையில் நகைச்சுவை உணர்வுடன் கையாளப்பட்ட வேண்டும் என்பதற்கு அக்குட்டியும் - பிச்சுமணியும் என்ற பாத்திரங்கள் சிறந்த வகிபாகத்தை கொடுத்துள்ளன.

அதுவும் தாயகத்தில் இருந்து ...

யூரியுப் போன்ற சமூக வலைத்தளங்களை பலர் தவறாகப் பயன்படுத்தி பிழையான கருத்தியல்களை சமூகத்தில் விதைத்து வரும் சூழலில், அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் சமூக யதார்த்தங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தி சீர்திருத்தங்களுக்கு வழி வகுப்பது சிறப்பு.

சம்மந்தப்பட்டவர்களை உணர வைத்து திருந்த வழி வகுக்கும் ஏற்பாடு என்று கூடச் சொல்ல முடியும்.

இந்தியக் கலைஞர்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வரும் கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை விடவும் உள்ளூர் கலைஞர்கள் என்று பெருமைப்படக்கூடிய அக்குட்டி - பிச்சுமணி மற்றும் உள்ளூரில் உள்ள ஏனைய நகைச்சுவை கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை ஈழத்தமிழர்கள் முதலில் வரவேற்க வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும்.

எமது வீட்டு முற்றத்து மல்லிகையின் வாசத்தை நுகர பழக வேண்டும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/1457391262/posts/pfbid0KJ3F44wkhyAUbiSbFhAYSNHP8UnKW9H9PxhKi8pUHf7HBQXX7bBsjc6crbUXMFBVl/?

நானும் இவர்களின் காணொளிகளைக் கண்டு கொள்வதில்லை.

இனிமேல் தொடர்ந்து பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்.

ஒரு மாணவியின் மரணமும், நாட்டின் கல்வி முறைக்கு அது விடுத்த செய்தியும்

2 months 4 weeks ago

ஹோமாகமவில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையின் பதினோராம் வகுப்பு மாணவியின் அகால மரணம் இந்த நாட்டின் கல்வி முறை குறித்த ஒரு ஆழமான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பல மருந்து மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான ஒவ்வாமையினால் அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக அறியப்படுகின்றது. பாடசாலையில் ஓர் ஆசிரியரின் செல்வாக்கு காரணமாக தனது மகள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாக அவரது முன்னாள் அதிபரான தந்தை தெரிவித்திருப்பது, இக்கட்டான சூழலில் இருக்கும் பாடசாலை மாணவர்களின் உளவியல் நிலையை ஒரு கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தனது மரணத்திற்கு முன்னர் அந்த மாணவி தான் அனுபவித்த மன அழுத்தத்தைப் பற்றி தனது சகோதரியிடம் பகிர்ந்துகொண்டமை, பாடசாலைகள் குழந்தைகளின் உளநலன் குறித்து எவ்வளவு அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. உண்மையில், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல, தேர்வு மையப்படுத்தப்பட்ட கல்வி முறையால் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயகரமான மன அழுத்தத்தின் ஒரு கொடூரமான எடுத்துக்காட்டு.

இந்தத் துயரமான நிகழ்வின் தாக்கம் தனிப்பட்ட குடும்பத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. தேர்வு மன அழுத்தத்தின் காரணமாக ஒரு குழந்தை தனது உயிரை மாய்த்துக்கொண்டமை, பாடசாலைக் கல்வியின் அடிப்படை நோக்கமே கேள்விக்குறியாகியிருப்பதைக் காட்டுகிறது. இந்தப் போக்கு தொடருமாயின், அது சமூகத்தின் எதிர்கால தலைமுறையின் மனநல ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும். அழகியல் பாடங்கள் புறக்கணிக்கப்பட்டு, அவை வெறும் கூடைப் பாடங்களாக மாற்றப்பட்டதனால், குழந்தைகள் கலை, இலக்கியம், மற்றும் வாசிப்பு இன்பங்களை இழந்து விடுகிறார்கள். இதனால், ஆளுமையையும், படைப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய வயதில், வெறுமனே மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாகவே அவர்கள் உருமாறுகின்றனர். இந்தத் தேர்வு மையப்படுத்தப்பட்ட முறை, குழந்தைகளின் உடல்நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மை, கவனச்சிதறல், மற்றும் பல்வேறு அக்கறையின்மைகளை இது உருவாக்குகின்றது. இந்த எதிர்மறையான விளைவுகள், உலக அளவில் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கைகளுடன் ஒத்திருக்கின்றன.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து சமூகத்தில் பல்வேறு விதமான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இறந்த மாணவியின் தாய் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள், இந்தச் சம்பவம் எவ்வளவு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகின்றன. "இனி ஒருபோதும் இதுபோன்ற பேரழிவுகள் நடக்காத வகையில் கல்வித் துறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்" என அவர் முன்வைத்த கோரிக்கை, பலரின் மனங்களில் எதிரொலித்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும், பொது விவாதங்களிலும் கல்வி முறை குறித்த கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கல்வி நிபுணர்களும், மனநல மருத்துவர்களும் தேர்வு மன அழுத்தம் குறித்து அவ்வப்போது விவாதங்களை நடத்திய போதிலும், ஹோமாகம மாணவியின் மரணம் இந்த விவாதங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. வினாத்தாள்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து ஒருபுறமிருந்தாலும், யதார்த்தத்தில் தேர்வுகளின் கடினத்தன்மை அதிகரித்தே வருகின்றது.

இந்த நிலைமைக்கு அரசியல் தலைவர்களின் எதிர்வினைகள் பெரும்பாலும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த பேச்சுகளிலேயே மையப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த சீர்திருத்தங்கள் இந்த துயரத்தின் அடிப்படைக் காரணத்தை முழுமையாக நிவர்த்தி செய்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. உதாரணத்திற்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டு பாடசாலை இடைவேளைகளோ, அல்லது விரிவுபடுத்தப்பட்ட பாடவேளைகளோ குழந்தைகளின் மன அழுத்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையப் போவதில்லை. புதிய 'மோடியூலர் பை'கள் குறித்து பேசுகின்ற அதேவேளை, வாசிப்புப் பழக்கத்தையும், படைப்பாற்றலையும் வளர்ப்பதற்கான வழிகள் குறித்துப் பேசுவதில்லை. ஒருபுறம் நாட்டின் கல்வி முறையை மாற்றியமைப்பதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் கல்வி முறைக்குள் ஏற்கனவே இருக்கும் அழகியல் பாடங்களைக் குறைத்து, அவற்றை வெறும் பெயரளவுக்கு மட்டுமே வைத்திருப்பது, இந்த அரசியல் பதில்கள் வெறும் கண்துடைப்பிற்கானவையாகவே இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

என்னுடைய பார்வையில், இந்த மாணவியின் மரணம் ஓர் அலறல்; அது நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறைக்கும் விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை. இந்தச் சோகத்திற்கு நேரடியாக ஆசிரியரையோ, பெற்றோரையோ அல்லது பாடசாலையையோ மட்டும் குற்றஞ்சாட்டுவது சரியானதல்ல. மாறாக, பல ஆண்டுகளாகத் தேர்வு மையப்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு வழிவகுத்து, குழந்தைகளுக்கு ஓய்வையும், மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் மறுத்த அரசியல் தலைவர்களும், கல்வித் துறையின் உயர் அதிகாரிகளுமே இதற்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். கல்வி என்பது மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமல்ல, ஆளுமையை வளர்த்துக்கொள்வது, படைப்பாற்றலுடன் சிந்திப்பது, சமூகத்துடன் இணைந்து வாழ்வது, மற்றும் வாழ்வின் அழகியலை ரசிப்பது போன்றவற்றை உள்ளடக்கியது என்பதை நாம் உணர வேண்டும். இன்றைய நிலையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள், இந்த அடிப்படை உண்மையை உணர்ந்து வடிவமைக்கப்பட வேண்டும்.

இந்த அபாயகரமான போக்கைத் தடுக்க, நடைமுறைச் சாத்தியமான சில தீர்வுகளை உடனடியாக நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். முதலாவதாக, பாடசாலைக் கல்வியில் அழகியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், அவை வெறும் கூடைப் பாடங்களாக இல்லாமல், கட்டாயப் பாடங்களாக மாற்றப்பட வேண்டும். இதன் மூலம், குழந்தைகள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வழிகளைப் பெற முடியும். இரண்டாவதாக, பாடசாலைகளில் நூலக வசதிகளை மேம்படுத்தி, புதிய புத்தகங்களை வாங்குவதன் மூலம் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். வெறும் பாடத்திட்டப் புத்தகங்களுக்கு அப்பால் உலகத்தை அறியும் வாய்ப்பை அது உருவாக்கும். மேலும், கடந்த காலத்தில் இருந்ததைப் போன்று, பாடசாலைகளில் மாதாந்த பொது மாணவர் கூட்டங்கள், கலை விழாக்கள், நாடகங்கள் போன்றவற்றை மீண்டும் அறிமுகப்படுத்துவது, குழந்தைகளின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர உதவும். இந்த மாற்றங்கள் தனிநபர்கள், அரசாங்கம், மற்றும் ஆசிரியர்கள் என அனைவராலும் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டு நடவடிக்கைகளாகும்.

ஹோமாகம மாணவியின் அகால மரணம் நாட்டிற்கு அனுப்பிய செய்தி மிகவும் தெளிவானது: நமது கல்வி முறைக்கு ஒரு முழுமையான மறுசீரமைப்பு தேவை. இந்தத் துயர சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளத் தவறினால், இது போன்ற சோகமான நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழலாம். ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மதிப்பெண்களால் மட்டுமே தீர்மானிக்கும் இந்த முறையை கைவிட்டு, ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான ஆற்றலுடன் சமூகத்தில் பங்களிக்கக்கூடிய ஒரு நல்ல தலைமுறையை உருவாக்குவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்குத் தேவையான மனமாற்றத்தையும், நடைமுறை நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான நேரம் இது. கல்வி சீர்திருத்தங்கள் என்பது வெறும் கொள்கைகளை உருவாக்குவது மட்டுமல்ல, அது எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை கட்டமைப்பதற்கான ஒரு பொறுப்பான கடமை என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

https://vellisaram.blogspot.com/2025/08/blog-post_5.html

ஈகை பற்றிய புது விளக்கம்

2 months 4 weeks ago

கோவை புத்தக திருவிழா - தாத்தா - ஈகை பற்றிய புது விளக்கம்

வருடா வருடம் மகனுக்கும் மகளுக்கும் புத்தகத் திருவிழாவில் சுமார் 5000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்த வருடம் மகன் படிக்கச் சென்றிருப்பதால், மகள் கோவை கொடிசீயாவில் நடந்து கொண்டிருந்த புத்தகத் திருவிழா 2025க்கு போக வேண்டுமென்று சொல்லி இருந்தார். ஞாயிற்றுக் கிழமை ஹாஸ்டலுக்குச் சென்று, அவரை அழைத்துக் கொண்டு நேரடியாக புத்தகத் திருவிழாவுக்குச் சென்று விட்டோம்.

இந்த வருடம் புத்தக விற்பனை மந்தமாக இருக்கிறது எனச் சொன்னார்கள். அரங்குகளில் கூட்டம் இல்லை. பள்ளி மாணவர்களை அழைத்து வந்திருந்தார்கள். ஆளுக்கொரு தின்பண்டப் பையைக் கொடுத்து அதைக் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு புத்தக கடைக்குள்ளும் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

மகள் படிப்பதற்கு நல்ல நாவல் பரிந்துரைக்கவும் எனக் கேட்டார். கி.ராஜநாராயணனின் நாவல், சிறுகதை தொகுப்பு ஒன்றினைப் பார்த்தேன். வாங்கிக் கொடுத்தேன்.

முதலில் அகிலனின் சித்திரப்பாவையை எடுத்தேன். அதை விட மண்ணின் வாழ்வியல் தடத்தைப் பதித்த எழுத்துகள் மகளுக்கு தெரிய வேண்டுமென்ற ஆவலில், வாங்கிக் கொடுத்தேன்.

அடுத்து பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மடத்தின் புத்தக் கடைக்குச் சென்று நிவேதிதா பற்றிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்தேன்.

பின்னர் மகள் பல ஆங்கில புத்தகங்களை வாங்கினார். இறுதியில் முத்து காமிக்ஸ் சென்றோம்.

வழமை போல பல புத்தகங்களை வாங்கினார். நான் வீல்சேரில் அமர்ந்திருந்தேன். அப்போது அரசுப் பள்ளி மாணவன் ஒருவன் ஒரு சிறு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கினான். 20 ரூபாய் இருக்கும். அவனிடம் அது என்ன காமிக்ஸ் என்று காட்டச் சொன்னேன்.

”தாத்தா, அப்பாகிட்டே 200 ரூபாய் கேட்டேன். அவர் 100 ரூபாய் தான் கொடுத்தார். காமராஜர் வாழ்க்கை வரலாறு வாங்கலாம்னு வந்தேன். ஆனால் அது விலை அதிகமாக இருக்கு, அதனால இதை வாங்கினேன்” என்றான்.

மகளுக்கு அவன் என்னை தாத்தா என்று சொல்லுகிறானே என ஒரே சந்தோஷம்.

அவனிடம் இங்கே இருக்கும் காமிக்ஸ் புத்தகத்தில் உனக்குப் பிடித்ததை வாங்கிக் கொள் என்றேன். மறுத்தான். மகள் அவனை வற்புறுத்தி ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கிக் கொடுத்தாள். அவனை அழைத்துக் கொண்டு மீனாட்சி புத்தகக் கடைக்குச் சென்று, காமராஜரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எடுத்து அவனிடம் கொடுத்த போது வாங்கவே மாட்டேன் என சொல்லி விட்டான்.

விலை அதிகமாம். அந்த புத்தகத்தின் விலை 400 ரூபாய்.

”ஏற்கனவே காமிக்ஸ் வாங்கிக் கொடுத்திட்டீங்க, இது வேணாம்” என்று மறுத்தான்.

அவனை சரி செய்து புத்தகத்தை வாங்கி அவன் கையில் கொடுத்து விட்டு, ”நல்லா படி” எனச் சொல்லி விட்டு வந்தேன். அவன் மீண்டும் ”நன்றி தாத்தா” என்றான்.

மகளுக்கும், மனைவிக்கும் ஒரே சிரிப்பு.

அப்படியே ஒவ்வொரு புத்தக கடையாக வலம் வந்து கொண்டிருந்த போது, சுப அறவாணனின் மனைவி, அவரின் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் எனச் சொல்லி கேட்டார். அவர் கொடுத்த புத்தகத்தை வாங்கி புரட்டிக் கொண்டிருந்த போது, அருகில் ஒரு பெரியவரும், அவரின் பேத்தியும் கையில் நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தனர்.

அந்த அம்மா என்னிடம் ”அய்யா, இவரைப் பாருங்கள், இந்த புத்தகங்களை சிறைச்சாலை வாசிகளுக்கு படிக்க வாங்கிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

குள்ள உருவம், நரைத்த தலைமுடி, கனத்த கண்ணாடி, அருகில் அவரின் பேத்தி, அவர்கள் இருவரையும் பார்த்தேன். மனம் நெகிழ்ந்தது.

நுழைவாயிலின் ஒரம் சிறைச்சாலை வாசிகளுக்கு புத்தகங்கள் தானம் செய்ய கேட்டு, ஒரு பாக்ஸ் இருந்ததைப் பார்த்தேன்.

நல்ல இதயங்களும், நான்கு பேருக்கு உதவ வேண்டுமென்ற நல்லவர்களும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைத்ததில் மகளுக்கு நிரம்பவும் சந்தோஷம்.

நான் கலீல் ஜிப்ரானின் புத்தகங்கள் சிலவும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஒரு புத்தகமும், தினவு இதழ் ஒன்றையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து விட்டேன்.

அந்த அரசுப் பள்ளி மாணவனைப் பற்றிய நினைவு வந்தது. பசங்க வேலைக்குச் சென்றதும், வருடம் தோறும் கொஞ்சம் பணத்துடன் புத்தக விழாவுக்குச் சென்று பசங்களுக்கு புத்தகங்கள் வாங்கித் தர வேண்டுமெனெ நினைத்துக் கொண்டிருந்த போது, கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் புத்தகத்தைப் பிரித்துப் படித்தேன்.

உன்னைக் காட்டிலும் எனக்கு மிகவும் தேவையானதை எனக்கு கொடுப்பது அல்ல ஈகை, என்னைக் காட்டிலும் உனக்கு மிகவும் தேவையானதை எனக்குத் தருகிறாயே அது தான் ஈகை.”

மண்டையில் சுத்தியலால் தட்டியது போல வலித்தது.

அடச்சே, இது என்ன இப்படி சொல்லி இருக்கிறாரே என்ற எண்ணமும், தொடர்ந்து பல நினைவுகளும் ஊடாடின.

தமிழர் வரலாற்றில் தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று சொல்லி இருக்கிறார்கள். பாத்திரம் அறிந்து தானம் செய் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதை ஏன் சொன்னார்கள் என்பதற்கான காரணங்கள் இருக்கலாம். இவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடும் வார்த்தைகள் கலீல் ஜிப்ரான் சொன்னது.

மகாபாரதத்திலே கர்ணன் தான் செய்த புண்ணியங்களை கூட தானம் செய்திருந்தாலும், அன்னதானம் செய்யாத காரணத்தினாலே, அவனுக்கு சிவலோகத்தில் அனுமதி கிடைக்காமல், வைகுண்டத்திலே அனுமதி கிடைத்தது என்றுச் சொல்வார்கள். தர்மத்தையே பெயராக கொண்ட தர்மத்தில் சிறந்தவன் தர்மன் என்றெல்லாம் படித்திருக்கிறோம்.

இப்படி ஈகையிலும் கூட வகைகள் உள்ளன.

ஆனால் தமிழர்கள் இவை எல்லாவற்றிலும் முன்னுதாரணமாக இருப்பதும், கலீல் ஜிப்ரான் என்ற மேலை நாட்டுக்கார எழுத்தாளரின் வார்த்தைகள் எழுதப்படும் முன்பே, அவர்கள் செயல்படுத்தியதும் நினைவிலாடியது.

தனக்குத் தேவையான தேரை, படர வழியின்றி காற்றில் அலைந்து கொண்டிருந்த முல்லைக் கொடி படர்ந்து தழைக்கக் கொடுத்து விட்டு, நடந்து வந்தவர் பாரி வள்ளல் என்ற தமிழ் மன்னன்.

கர்ணன் என்ற புராண கதைப் பாத்திரம் கூட தமிழ் மன்னனிடம் தோற்று விட்டது அல்லவா?

பாரி வள்ளல் தன்மைக்கு முன்னால் நாமெல்லாம் செய்யும் ஈகை ஈகையா? தனக்குத் தேவையானதை செடிக்கு தானமளித்து விட்டு வரும் அரசனின் அப்போதைய மனநிலை நமக்கு வராது. கணக்கு வழக்குகள் பார்த்துதான் ஈகை செய்வோம். அரசன் செய்வான், நம்மால் முடியுமா? என்று தோன்றும். அதுவல்ல இங்கே காரணம் - அந்த நொடியின் மனநிலை. அவ்வளவுதான்.

* * *

உலகில் சொல்லப்பட்ட எல்லா நாகரீகத்தினையும் விட, உயர்ந்த நாகரீகத்தையும், பண்பாட்டையும் கொண்ட தமிழர்கள் கீழடி நாகரீகத்தை வெளியிட மறுத்து விட்டார்கள் இந்திய ஒன்றிய மோடி அரசு. அதிகாரங்கள் மாறும் போது, தடை செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற அறம் எப்போதும் விழித்திருக்கும்.

யாரும் இங்கே தப்பவே முடியாது. செய்யும் செயலின் பலன்கள் அவரவரைச் சார்ந்தது.

வளமுடன் வாழ்க.

29.07.2025

https://thangavelmanickadevar.blogspot.com/2025/07/blog-post_29.html

நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு.

3 months ago

Nallur-Kandaswamy-Temple-Nallur-Kovil1.j

நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு. ❤️


1917 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய கோயில் அதிகாரியான 4ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் சிந்தையில் முருகப்பெருமானுக்கான தீர்த்தக்கேணியைத் திருப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது.


அதன் பலனால் 1922 – 1923 ஆம் ஆண்டுப் பகுதியில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கான தீர்த்தக்கேணி சற்சதுர வடிவில் சுண்ணாம்புக் கற்களாலும் வெள்ளைக் கல்லாலும் அமைக்கப்பட்டது.
குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையார் காலத்தில் அமைக்கப்பட்ட தீர்த்தக்கேணியானது, கடப்பாக் கற்களைக் கொண்டு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.
குபேர கோபுரவாசல் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கேணித் தீர்த்தத் திருப்பணி இரண்டு வருடங்களில் நிறைவடைந்துள்ளதுடன்,சண்முக தீர்த்தக்கேணி பிரதிஷ்டா கும்பாபிஷேகம் கார்த்திகை உற்சவ தினத்தன்று (15.08.2017 செவ்வாய்கிழமை) நடைபெற்றது.
நல்லூர்க் கந்தசுவாமி பெருங்கோயிலுக்கான ஷண்முக தீர்த்தகேணியை உருவாக்கும் எண்ணம் 4 ஆவது இரகுநாத மாப்பாண முதலியாருக்கு 1917 ஆம் ஆண்டு ஏற்பட்டதுடன், தற்போது அச் சிந்தனையின் நூறாவது (100 ஆவது) வருடத்தில் புதிய திருக்கேணித் திருப்பணி நிறைவு பெற்று தீர்த்த பிரதிஷ்டை இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நிர்வாக உரிமை மாப்பாண முதலியார் குடும்பத்துக்கே உரித்தானது. இவ்வருடத் திருவிழாவானது (2022ஆம் ஆண்டு) மாப்பாண முதலியார் குடும்பத்தினரின் 288ஆவது நிர்வாக வருடமாகும்.


தற்போது மாப்பாண முதலியார் குடும்பத்தின் பரம்பரையில் வந்த குமரேஷ் சயந்தன மாப்பாண முதலியார் கோயில் 11ஆவது அதிகாரியாக நல்லூர் கந்தனுக்கு தன் சேவைகளை செய்து வருகிறார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தில் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்பவர்களுடைய வழிகாட்டலின் கீழ் அடுத்த சந்ததியைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருவது வழமையாகும். தந்தை, மகன் மற்றும் பேரன் என வழி வழியாக முருகனுக்கான சேவையை வழங்கும் பொருட்டு, அவர்கள் சிறுவயது முதலே பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.


சிறு வயது முதல் கிடைத்த தந்தையின் வழிகாட்டலில் வளர்ந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார், வெளியாட்களுடனான தொடர்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காது தெய்வப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனக்கும் முருகனுக்கும் இடையிலான உறவை பிரபலப்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர்.
முருகனுக்குக் கிடைக்கும் ஒரு சதமேனும் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு, முருகன் குடியிருக்கும் கோயில் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவரது காலத்தில் நல்லூர்க் கோயில் பிரமாண்ட வளர்ச்சி பெற்றதுடன், மாப்பாணர் கட்டடப்பாணி என்னும் பெயர் நல்லூருக்குக் கிடைக்கக் காரணமாக விளங்கியவர். அதுமாத்திரமல்லாமல் முருகனுக்கு மிகவும் பிடித்த கோயில் அதிகாரி எனக் குறிப்பிடும் வகையில் கிட்டத்தட்ட ஜம்பது வருடங்களுக்கு மேலாக முருகனுக்குத் தொண்டாற்றி வந்தவர்.


தற்போதைய கோயில் அதிகாரியான குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு தேர்த் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. அவரது மறைவிற்குப் பின்னர் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற குமாரதாஸ் மாப்பாண முதலியார், மிகவும் குறுகிய காலப்பகுதியில் அதாவது 6 – 7 மாதத்தில் பழைய வசந்த மண்டபத்தின் வாசலைப் பெரிதாக்கினார்.


ஒவ்வொரு வருடமும் கொடியேற்றத்திற்கு முன்னர் ஏதாவது ஒரு கோயில் திருப்பணி மேற்கொள்ளும் நடைமுறை அக்காலப் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதுடன்,அந்தப் பாரம்பரியம் இன்றும் நல்லூர்க் கோயிலில் தொடர்வது முருகனின் அருளே.


குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையான நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் நல்லூர்க் கோயிலுக்கு முன்பாகவுள்ள இராஜகோபுரம் மற்றும் சண்முகருக்கு முன்பாக அமைந்துள்ள கோபுரம் ஆகியவற்றின் திருப்பணிகள் வெள்ளைக்கல் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அவரது காலத்தில் அக்கோபுரங்கள் இரண்டும் வியாழவரி வரைக்கு மாத்திரமே நிறைவு செய்யப்பட்டன.
தந்தையார் ஆரம்பித்திருந்த வெள்ளைக்கல் கோபுரத்திருப்பணிகளில் ஒன்றான இராஜகோபுரத் திருப்பணியை ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் பூர்த்தி செய்தார்.
அத்துடன் முருகனின் மனைவியரான வள்ளி தெய்வானையைக் குறிக்கும் வகையில் இராஜகோபுரத்திற்கு அருகில் இரண்டு மணிக்கூட்டுக் கோபுரங்களின் திருப்பணியையும் நிறைவு செய்தார். தந்தையார் விட்டுச் சென்ற சண்முகருக்கான கோபுரத் திருப்பணியை 1966 ஆம் ஆண்டு குமாரதாஸ் மாப்பாண முதலியார் நிறைவு செய்தார்.


தொடர்ந்து வந்த காலப்பகுதியில் கோயில் அமைப்பு ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்பட்டாலும், மூலஸ்தானத்தில் மாத்திரம் மாற்றங்களை ஏற்படுத்தாமல், அதைச்சுற்றியுள்ள பழைய மண்டபங்கள் அனைத்தும் புதிதாக்கப்பட்டன.


ஓவ்வொரு வருடமும் ஒவ்வொரு திருப்பணியை ஆரம்பித்து, அதை அடுத்த திருவிழாவிற்கு முன்னர் நிறைவேற்றும் வழக்கம் உருவானது. இவ்வளர்ச்சிப் படிமுறைகளில் மகா மண்டபம், ருத்திர மண்டபம் என்பன அமைக்கப்பட்டன.
சண்முகப் பெருமானுக்கு சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள நடராஜரைப் போன்று, ஒரு சபை அமைக்கப்பட்டது. ருத்திர மண்டபத் திருப்பணியின் போது, சிறிய கோயிலில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசுவாமிக்கு, விமானத்துடன் கூடிய கோயில் அமைத்துத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது.
1970 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோயில் கட்டடக்கலை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டது. அதாவது வெளி மண்டபத்தை சொக்கட்டான் பந்தல் முறையில் அமைத்து கோயில் அழகுபடுத்தப்பட்டது.


தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஒவ்வொரு திருப்பணிகளும் முருகன் அருளால் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுற்றன. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு கோயிலுக்கான தேர்த் திருப்பணி நிறைவேற்றப்பட்டது.
ஈடுஇணையற்ற முறையில் அமைக்கப்பட்ட, அழகுப் பொக்கிஷமான தேரில் கந்தசுவாமியார் காலங்காலமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் கொடுக்கப் போகிறார் என எண்ணிய காரணத்தால், குறித்த தேரை நீண்ட காலம் பாதுகாக்கும் பொருட்டு தேர்முட்டியை குமாரதாஸ் மாப்பாண முதலியார் அமைத்தார்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் தேரும் மஞ்சமும் இலங்கையின் இருபெரும் கலைப்பொக்கிஷங்கள் ஆகும். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் படிகளுடனான தேர் மண்டபத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது.


குறித்த தேர் மண்டபத்தின் கட்டடக்கலை அமைப்பானது, நல்லூர்க் கோயில் அமைப்பிற்கும் சொக்கட்டான் பந்தல் அமைப்பிற்கும் பொருந்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டது.
நல்லூரில் மேற்கொள்ளப்படும் எந்தத் திருப்பணியையும் மூடிக்கட்டும் வழக்கம் கிடையாது. அனைத்து வேலைகளையும் கோயில் அதிகாரிகள் மேற்பார்வை செய்யும் அதேவேளை, அவற்றை பக்தர்களும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நல்லூரில் பின்பற்றப்படுகின்றது.
கட்டடக்கலை வரைபடங்களுக்கு அப்பால் சென்று, கோயில் வளாகத்திலும் முருகன் முன்னிலையிலும் திருப்பணிகளுக்கான முக்கிய முடிவுகளை கோயில் அதிகாரிகள் எடுக்கும் வழக்கம் உள்ளது. இவ்வழக்கம் உலகில் உள்ள எந்தக் கோயிலிலும் இல்லாத வழக்கம் என்பதுடன், முக்கிய முடிவுகளை முருகனே எடுப்பார் என்பது ஜதீகமாகும்.


கோயில் திருப்பணிகளைக் கோயில் வளாகத்தில் வைத்து நிறைவேற்றுவதை எப்பொழுதும் கோயில் நிர்வாகத்தினர் ஊக்கப்படுத்துபவர்கள். திருப்பணியின் போது பணியாட்கள் பணத்தை மாத்திரம் இலக்கு வைக்காமல், பக்தியை முதன்மைப்படுத்தும் பொருட்டும், கோயில் வளர்ச்சியின் பொருட்டும் வேலைக் கட்டுப்பாடு மற்றும் உடைக்கட்டுப்பாடு என்பவற்றில் சில விதிமுறைகளை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றுபவர்கள்.


ஏழை – பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவரும் திருப்பணியின் பொருட்டு முருகனை பக்தியுடன் நினைந்துருகிக் கொடுக்கும் பணத்துக்கும் பொருட்களுக்கும், அடுத்த கணம் முருகப் பெருமான் அதிபதியாகிறான். தனக்குத் தேவைப்படுகின்ற திருப்பணிகளை வருடா வருடம் நிறைவேற்றும் சர்வ வல்லமை நிரம்பியவன் நல்லூர்க் கந்தன். அதனால்தான் அவன் ஆலயத்திற்கு பெருங்கோயில் என்னும் சிறப்புக் கிடைக்கின்றது.


பக்தர்கள் பக்தியால் உருகி, முருகனுக்கு நேர்த்தி வைத்துக் கொடுக்கும் ஒரு பொட்டுத் தங்கமும் ஒன்று சேர்க்கப்பட்டு, முருகப் பெருமானுக்கான புதியதோர் நகையாக மாற்றம் பெற்று, அழகனை அலங்கரிக்கும் சிறப்பு நல்லூருக்கு மாத்திரம் உரித்தானது. வருடா வருடம் நடைபெறும் மகோற்சவ காலங்களில் புதிய அழகான நகையுடன் அலங்காரக் கந்தனாக தேருக்கு எழுந்தருளும் அவன் அழகைக் காணும் போது, கொடுத்தவனுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் கண்கள் பனித்து, உள்ளம் உருகும்.
வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், தையல்காரர், கொல்லாசாரியார் என அனைவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தயாராகத் தொடங்குவார்கள். நல்லூரில் உற்சவங்கள் அனைத்தும் கண்ணைக் கவரும் வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றாலும், திருவிழாக்களுக்கும் அபிடேகங்களுக்கும் குறைந்த அளவான கட்டணமே உபயகாரர்களிடம் இருந்து பெறப்படுகிறது. ஆயினும் அனைத்துத் திருவிழாக்களும் எவ்வித வேறுபாடுமின்றி நடைபெறுவது நல்லூரின் அழகு.


கோடீஸ்வரர் செய்யும் திருவிழாக்களுக்கும் ஏழை செய்யும் திருவிழாக்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை. பாரம்பரியமும் பழைமையும் மாறாமல் உபயகாரர்களுக்கு திருவிழாக்கள் வழங்கப்பட்டாலும், அவற்றை முற்றுமுழுதாக கோயிலே பொறுப்பேற்று நடத்துவது நல்லூருக்கு மட்டும் உரித்தான சிறப்பு.
நல்லூர் கோயில் நடைமுறைகளை மிகவும் உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு விடயம் மிகவும் தெளிவாகப் புரியும். நல்லூரில் கோடி கோடியாகப் பணம் குவிவது இல்லை.


கோயிலில் திருப்பணி உண்டியல் மற்றும் வெளிமண்டப உண்டியல் என இரண்டு உண்டியல்கள் மாத்திரமே வைக்கப்பட்டுள்ளமையும் இங்குள்ள இன்னுமொரு சிறப்பாகும். ஆகவே ஒரு ரூபா அர்ச்சனையில் இத்தனை பிரமாண்டமான திருப்பணிகளும், வண்ணமயமான திருவிழாக்களும் நடைபெறுவதற்கு இன்றைய காலகட்டத்தில் சாத்தியமாகுமா? என்ற கேள்விக்கு முருகன் மட்டுமே பதில் அறிவான்.


நல்லூரானை மனதால் நெருங்குவதற்கு ஒரு செங்கல்லோ அல்லது ஒரு ரூபா அர்ச்சனையோ போதுமானது. கோயில் வளாகத்தில் அமைந்திருந்த வணிக நிலையங்ளையும் வியாபார நிறுவனங்களையும் 1980 களில் அகற்றி, நல்லூரைச் சுற்றி மிகவும் பிரமாண்ட மணற்பரப்பு வெளி உருவாக்கப்பட்டது. பின்னர் வந்த காலப்பகுதியில் கோயில் உள்வீதி சிறிது சிறிதாகப் பெருப்பிக்கப்பட்டது.


அத்திருப்பணிகளின் போது உள்வீதியின் அமைப்பானது, கோயிலின் ஏனைய கட்டடங்களுக்கும் மண்டபங்களுக்கும் ஒத்துப்போகும் வகையில் உருவாக்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் இருந்து நேரெதிரில் வெளிவீதியை நோக்கியதாக கோயிலுக்கான வாசல் ஒன்று அமைக்கப்பட்டது. யுத்த காலத்தில் ஏற்பட்ட சீமெந்துத் தட்டுப்பாட்டின்போதும் திருப்பணிகள் நடந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


1984 ஆம் ஆண்டு அரசு வீதியின் காணிக்குப் பதிலாக கேணித்திருக்கோயிலுக்கு வெளியில் இருந்த காணி மாற்றீடாக வழங்கப்பட்டு, இரண்டு கோயில்களும் ஒன்றாக்கப்பட்டு கோயில் சுற்று வீதி உருவாக்கப்பட்டு நல்லூர் கோயிலின் அமைப்பை ஒரு கோட்டைக்கு ஒப்பானதாக மாறியது.


2008 ஆம் ஆண்டு சுற்றுக் கோயில்களுக்கு தனித் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டதுடன், சபைகள் அமைக்கப்பட்டு, கோயில்கள் உலோகத் தகட்டால் வேய்ந்து திருப்பணி நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 2008 ஆம் ஆண்டு சண்முகருக்கான இராஜகோபுரத் திருப்பணி நவதானியம் இடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், 2011 ஆம் ஆண்டு இந்திய பேரரசர்கள் கட்டிய பெருந்திருப்பணிக்கு ஒப்பான நல்லூர் இராஜகோபுரக் குடமுழுக்கு இடம்பெற்றது.


முருகன் பார்வை நல்லவற்றில் முடிய வேண்டும் என்பதற்காக சண்முகருக்கு எதிரில் அமைந்திருந்த கோயில் பூந்தோட்டத்தில் அருணகிரிநாதர் ஸ்தாபிக்கப்பட்டார். தெற்கில் அமைக்கப்பட்ட கோபுரத்தை சமநிலைப்படுத்தும் பொருட்டு வடக்கில் ஒரு கோபுரம் கட்டப்பட்டு, திருப்பணி நிறைவேற்றப்பட்டது.

உமாச்சந்திரா பிரகாஷ்., Babu Babugi

வட்ஸ்அப் ஓடிபி மோசடிகள் தொடர்பில் பொதுமகளுக்கு சிஐடி எச்சரிக்கை

3 months ago

Published By: DIGITAL DESK 3

30 JUL, 2025 | 03:51 PM

image

வட்ஸ் அப் பயனர்களை குறி வைத்து சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயனர்கள் ஓடிபி (OTP) எனப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்கள் உள்ளிட்ட எந்த தகவல்களையும் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என சிஐடி எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவரின் மொபைல்போனுக்கு ஓடிபியை குறுந்தகவல்கள் (SMS) ஊடாக அனுப்பி வைப்பார்கள். பின்னர் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து, நமது வட்ஸ்அப்பில் ஒரு செய்தி வரும். அதில் வட்ஸ்அப் கணக்கிற்கான ஆறு இலக்க குறியீடு உங்களது எண்ணுக்கு தவறாக அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அந்த ஓடிபி குறியீட்டை பகிருமாறு மோசடிக்காரர்கள் கேட்பார்கள். எந்த சூழ்நிலையிலும் ஓடிபியை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

ஓடிபியை பகிர்ந்தால், வட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அது சைபர் குற்றவாளிகள் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும். அதன்பிறகு அவர்கள், வட்ஸ் அப்பை பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்து, அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்புவர். அவற்றில் அவசர உதவி, விபத்து செலவுகள், மருத்துவத் தேவைகள் போன்றவற்றிற்காக பண உதவி கோருவர்.

இதனால், தகவல் பெறும் நபர் பணத்தை அனுப்பிவிட்டு, பின்னர் தான் இது ஒரு மோசடி என்பதை உணர்கிறார். நீங்கள் ஓடிபி பெற்றால், அதை யாருடனும் பகிர வேண்டாம். 

இதுபோன்ற நிதி மோசடிகள் தொடர்ந்து இடம்பெறுவதால், பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு சிஐடி வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு ஒன்லைன் கணக்குகளின் OTP எண்கள் அல்லது சரிபார்ப்புக் குறியீடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/221370

கறுப்பு ஜூலை : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா

3 months 1 week ago

கறுப்பு ஜூலை தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல் : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : கொல்லப்பட்ட தமிழர்களின் பல உடல்களை பார்த்தேன் என்கிறார் சட்டத்தரணி  ஸ்ரீநாத் பெரேரா

Published By: RAJEEBAN

23 JUL, 2025 | 12:44 PM

image

சட்டத்தரணி  ஸ்ரீநாத் பெரேரா தமிழ் மக்களிற்கான நீதி அவர்களின் அரசியல் அபிலாஷைகளிற்காக தென்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் ஒருவர்.

வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் இடங்களில் எல்லாம் பார்க்ககூடிய தென்பகுதி முகம் அவர்.

கறுப்புஜூலை குறித்த அவரின் மனப்பதிவுகள்.

srinath_3.jpg

அவ்வேளை நான் சட்டபீட மாணவனாகயிருந்தேன், 24ம் திகதி நாங்கள் சட்டபீடத்தில் இருந்தவேளை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெரும் புகைமண்டலம் எழுந்ததை பார்த்தோம்.

என்ன நடக்கின்றது என்பது எங்களிற்கு தெரியாது,தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

சந்திரஹாசனின் துணைவியார் அவ்வேளை எங்களின்  சிரேஸ்ட விரிவுரையாளர்களில் ஒருவர். அவர் அச்சத்தினால் நடுங்கியது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கின்றது.

நான் அவரிடம் சென்று என்ன பிரச்சினை என கேட்டேன், அதற்கு அவர் தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

அந்த நாட்களில் எங்களின் ஊடகங்களாக செய்தித்தாள்களும் வானொலிகளும் மாத்திரம் காணப்பட்டன, தொலைக்காட்சியின் ஆரம்ப நாட்கள்.

அன்று காலை முதல் நாள்( 23) 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியை வாசித்திருந்தோம்.

அதன் பின்னர் பௌத்தர்கள் கனத்தையில் கூடியது குறித்தும்  சிங்கள காடையர்கள் தமிழர்களின் வீடுகளிற்கு தீ வைத்தது குறித்தும் கேள்விப்பட்டோம். 

எங்களை பல்கலைகழகத்திலிருந்து செல்லுமாறு கேட்டார்கள், பேருந்துகள் இல்லை, நான் எனது நண்பியுடன் காரில்  எனது ஊரான வாதுவை நோக்கி பயணித்தேன்.

காரில் செல்லும் வழியில் நான் வெள்ளவத்தை தெகிவளை பகுதிகளில்  ஏழு எட்டு உடல்களை பார்த்தேன். கடைகள் வீடுகள் எரிவதையும் உடல்களையும் பார்த்தேன் - 

நாங்கள் பயணித்த காரை அவர்கள் நிறுத்தினார்கள், யாராவது தமிழர்கள் இருக்கின்றார்களா என கேட்டார்கள் எங்களுடன் தமிழர்கள் எவரும் பயணிக்கவில்லை.

இராணுவத்தினர் டிரக்குகளில் காணப்பட்டனர், ஆனால் அவர்கள் காடையர்களை தடுப்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

கொழும்பு நான்கிலிருந்து தெகிவளை வரை 100க்கும் வீடுகள் கடைகள் எரிவதை பார்த்தேன்.

ஐக்கியதேசிய கட்சி அமைச்சர் சிறில்மத்தியு இதன் பின்னணியில் இருந்தார்.

எனது நகரான வாதுவையில்  தமிழர்கள் அதிகம் வசிக்கவில்லை, ஆனால் தமிழர் ஒருவரின் சுருட்டுக்கடையிருந்தது. வயதான தமிழ் தம்பதியினர் அந்த கடையை நடத்தினார்கள்.

சிறுவயதிலிருந்தே அவர்களை எனக்கு தெரியும், அப்பாவிகள்  அன்பாக நட்புடன் பழகுபவர்கள்.

அவர் எப்போதும் சாரம்தான் கட்டியிருப்பார்.

பகல் 12மணியளவில் அவரது கடை சிறிதளவு திறந்திருந்தது,

ஆனால் பகல் மூன்று மணியளவில் அந்த சுருட்டுக்கடையை எரித்துவிட்டார்கள் என்ற  தகவல் எனக்கு கிடைத்தது,

அந்த வயதான தமிழ் தம்பதியினர் அங்கிருந்து தப்பியோடி அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இது இனவெறியில்லை இனவெறி கலந்த சூறையாடல். அவ்வாறுதான் சம்பவங்கள் நடந்தன.

அன்று மாலை ஜேஆர் ஜெயவர்த்தன உரையாற்றினார், ஊரடங்கை அறிவித்தார், மூன்று அரசியல் கட்சிகளை தடை செய்தார்.

25ம் திகதி கொழும்பு வெலிக்கடை சிறையில் குட்டிமணி உட்பட தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர் என்பதை அறிந்தோம், அவர்களின் கண்கள் தோண்டப்பட்டன.

ஐக்கியதேசிய ஒரு கட்சியாக கறுப்பு ஜூலையுடன் தொடர்புபட்டிருக்கவில்லை, ஆனால் அந்த கட்சியின் இனவாத அணியின் சிறில்மத்தியு  கறுப்பு ஜூலைக்கு தலைமை வகித்தார்.

மிகவும் திட்டமிடப்பட்ட முறையிலேயே இது இடம்பெற்றது.

வாக்காளர் பட்டியலை வைத்தே தமிழர்களை அவர்களின் சொத்துக்களை தாக்கினார்கள், அது இல்லாமல் எப்படி அவர்களால் தமிழர்களை இலக்குவைத்திருக்க முடியும்.

ஆகவே இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விடயம்,

13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அவர்கள் இவ்வாறான ஒரு கலவரத்தை வன்முறையை முன்னெடுத்திருப்பார்கள்,

நான் கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியில் வசித்து வந்த எனது நண்பியொருவரை கொழும்பு பம்பலப்பிட்டியில் இருந்த அகதிமுகாமிற்கு கொண்டுசென்று அங்கு விட்டுவிட்டு வந்தேன். அவர் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டார். அன்டசன் தொடர்மாடியிலிருந்த  சிங்களவர்கள் அவருக்கு உதவினார்கள்.

அவ்வேளை வடக்கிற்கு தப்பிச்சென்ற தமிழர்கள் ஆயிரக்கணக்கில் பின்னர் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தார்கள்.

தமிழ் புலம்பெயர் சமூகம் என்பது அப்படித்தான் ஆரம்பமானது, 1958 கலவரத்தின் பின்னர் வெளிநாடுகளிற்கு தப்பிச்சென்றவர்களும் உள்ளனர். ஆனால் 1983ம் ஆண்டின் பின்னரே பெருமளவானவர்கள் வெளிநாடுகளிற்கு சென்றார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ச்சியடைவதற்கு கறுப்பு ஜூலையே காரணமாக இருந்தது, பிரிந்து செல்வதை தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றில் இதுவே மிகவும் இருண்ட பக்கம்.

ஆகவே இந்த நாளை நாங்கள் நினைவு கூருகின்றோம்,

இனிமேலும் இரத்தக்களறியில்லை. இனிமேலும் கறுப்பு ஜூலையில்லை என்ற கருபொருளில் கொழும்பில் நாங்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூரவுள்ளோம்.

கறுப்பு ஜூலை என்பது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல், தனித்தனியாக தமிழர்கள் தாக்கப்பட்டாலும் இது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல்.

நான் சிங்களவன் நானும் எனது குழுவினரும்  அந்த நாட்களிற்காக எங்கள் கவலையை வேதனையை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்களை சேர்ந்தவர்களின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிற்காக  வெட்கப்படுகின்றோம்.

https://www.virakesari.lk/article/220703

எழுத்தாளனின் பெயர் சூட்டப்பட்ட வீதி - மாத்தளை மலரன்பனுக்கு கௌரவம்!

3 months 1 week ago

24 JUL, 2025 | 12:47 PM

image

ஒரு எழுத்தாளனின் பெயரை ஒரு வீதிக்கு சூட்டி, அந்த எழுத்தாளனை கௌரவித்த நிகழ்வொன்று அண்மையில் மாத்தளையில் நடைபெற்றுள்ளது.

மாத்தளை மலரன்பன் என்ற எழுத்தாளன் நான்கு முறை அரச சாஹித்திய விருதை வென்றவர். அமைதியான குணப்பண்புடைய இவர் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். 

அவரது எழுத்துப்பணியை கௌரவிக்கும் வகையில் மாத்தளை மாவட்டத்தில் நோர்த் மாத்தளை என்ற இடத்தில் உள்ள அவரது இல்லத்தினை அண்மித்த ஆயுர்வேத மத்திய நிலையத்திற்குச் செல்லும் வீதி “ஆறுமுகம் மலரன்பன் வீதி” எனப் பெயரிடப்பட்டு, எழுத்தாளன் மாத்தளை மலரன்பனுக்கு பாரிய பாராட்டு விழாவும் அண்மையில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் புத்தசாசன சமய விவகார, கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் மத்திய மாகாண ஆளுநர்  பேராசிரியர் சரத் அபயகோன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 

வாழும்போது வாழ்த்தப்படும், அங்கீகரிக்கப்படும் கலைஞர்கள், எழுத்தாளர்களின் பட்டியலில் மாத்தளை மலரன்பனும் இடம்பிடித்துள்ளார். 

Malaranpan_Road-__2_.jpg

Malaranpan_Road-__1_.jpg

Malaranpan_Road-__3_.jpg

https://www.virakesari.lk/article/220802

ஆடி அமாவாசை விரதம். உங்கள் பகுதியில் இன்று காத்தோட்டிக் காய் என்ன விலை.

3 months 1 week ago

maxresdefault.jpg

FB_IMG_1628535460653.jpg

ஆடி அமாவாசை விரதம்.

உங்கள் பகுதியில் இன்று காத்தோட்டிக் காய் என்ன விலை.

Sangaravel Pirabashithitan Piraba

மானிப்பாய் 1 காய் 150 ரூபாய்

Roopa Muraleetharan

வவுனியா ஒரு காய் 200/-

Tharsana Kumar

1kg 4000 ரூபாய் point Pedro

Kandeepan Rajathurai

10,150 Rupees. (London £25 per kg)

Ramalingam Bhaskaran

காத்தோட்டிக்காய் , இதன் சாதாரண விலை 50/=...70/= ஓகே. மேலதிகவிலை மடவேலை? காரணம் ஆடிஅமாவாசை அன்று மட்டுமே நாம் பாவிக்க உள்ளோம். We are not fools like others...in... marketing...

Giritharasharma RN

கிலோ 4600/- மருதனார்மடம்

Sweeththa Suvi Suvi

சாவகச்சேரி ஒரு காய் 500

Devi Sri

எலுமிச்சை போல் உள்ளது இதான் விலை இவ்வளவா

Dhayan Geeve

Kilinochchi poonakary oru kaai 300 ரூபாய்

Rasaiyah Naguleshwaran

கல்மடுவில்400 ரூபாய்

Suventhiny Pulenthirarasa

One Rs 50

Rupan Rupan

திருநெல்வேலி 1kg 10000/=

K.K Shanthirakumar

400 ரூபா

Thulasi Sana

சாவகச்சேரில 1kg 6000Rs

Sarogini Gnanasothiyan

யாழ்ப்பாணத்தில் வியாபாரிகள் பேய்களாக மாறிவருகின்றனர். எல்லாம் அழிவுக்குத்தான்.

1 காய் 500 ரூபாய்

Kulam Kulam

கொழும்பில் ஒரு காய் 15.00 ரூபா.

Chinniah Satheeshkumar

London -எட்டாயிரம் இலங்கை ரூபாய்

Sivabalan Siva

200 வவுனியா

நீங்கா நினைவுகள்

யாழ்ப்பாணம் ஒரு காய் 450/=

Nirojan Niroy

Thellipalai 1kg 6000

Suriya Ruba

400

Panchalingam Thusha

100g 600/=

Sundar Durai

இது என்ன காய்...பார்த்ததில்லை.... தமிழ்நாடு, இந்தியா

Sathees Thevarajah

தவிச்ச முயல் அடிப்பதில் நாங்கள் கெட்டி காரர் தானே???

Sivanuja Kugasooriyar

250

Perampalam Kanagaratnam

தவிச்சமுயல்.

Sangavy Sangavy Sangavy

100

Jeyamani Sivanadarajah

உடுப்பிட்டியில் ஒரு காய் 100/=

நம்ம யாழ்ப்பாணம் 

இன்றைக்கு இவன், நாளைக்கு எத்தனை பேரோ?

3 months 2 weeks ago

518983275_24171336192486458_441522761104

இன்னைக்கு இவன்..

நாளைக்கு எத்தனை பேரோ?

இந்த பையன் மூன்றாண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவனாக இருந்த போது 'சிறுவன்'.

அப்பவே ஸ்கூல் ரவுடியாக ஆசிரியரை எதிர்த்து தம்பி பேசிய வீடியோ படு வைரல்.

அதாவது அந்த ஸ்டைல் பேச்சு என்னென்னா, "ஏறுனா ரயிலு.. இறங்குனா ஜெயிலு.. போட்டா பெயிலு"

அப்ப ஏதாவது பண்ணி இருந்தா சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு போய் இருப்பான். திண்டுக்கல் தம்பி இப்போ மாட்னது 19 வயசுல.

அதுவும் ஏடிஎம்முக்கு கொண்டு போன பணம் 29 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில். ஸோ, நேரடியாக ஜெயில்.. ஒன்னே கால் வயசு தம்பிய ஏமாத்திடிச்சு..

தமிழ்நாடு முழுக்க பள்ளிகளில் இந்த மாதிரி தறுதலை மனநிலையோடு மாணவர்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம், ஒரே நினைப்பு, சட்டம் நம்மளை ஒன்றும் புடுங்கி விட முடியாது. அப்புறம் கைது என்றால் ஏதோ கடைக்கு போய் டீ குடித்துவிட்டு வரும் சமாச்சாரம் என்று நினைக்கிறார்கள்..

இந்த மாதிரி தறுதலைகளுக்கும் இவைகளை வேடிக்கை பார்க்கும் பெற்றோருக்கும் சில விஷயங்கள் புரிவதில்லை.

கைது.. பின்னாடி இன்னான்னா?

ஜூம் பண்ணி பார்ப்போம்.

பல விஷயங்களில் இவர்கள் கைது , அவர்கள் கைது என பேப்பரில், கைது என்பதை செய்தியாக சர்வசாதாரணமாக படித்துவிட்டு கடந்து விடுவீர்கள்.

மற்ற குற்றவாளிகளை விட்டுவிடுங்கள்.

தற்செயலாய் சிக்கும் புதியவர்களின் நிலைமை இருக்கிறதே, அதுதான் இங்கே பெரும்பான்மை. ஆனால் அவர்களில் பலருக்கும் சட்டத்தின் பின்விளைவுகள் என்பது மருந்துக்கும் தெரியாது.

சட்டத்தால் நம்மை தொடக்கூட முடியாது என்று இந்த காலத்து தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் பொதுவெளியில் கெத்து காட்டுகிறார்கள்.

மாஸ் ஹீரோக்களின் பில்டப் சினிமாக்களை மட்டுமே பார்த்துப் பார்த்து கும்பலைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

சாதாரண அடிதடி என்று வைத்துக்கொள்வோம். விசாரணைக்கு என்று காவல் நிலையத்திற்கு கூட்டிக்கொண்டு போவார்கள். காவல் நிலையத்தில் நுழையும்போதே பின்னங்கழுத்தில் ... விழும்.

டூட்டிக்கு புதிதாக வருபவர்கள், என்ன கேசு இது என்று நாலு தட்டு தட்டிவிட்டுத் தான் மற்ற வேலையையே பார்ப்பார்கள்.

அதே மாதிரி, அடுத்த டூட்டிக்கு வரும்போது அக்யூஸ்ட்டை பார்க்க வாய்ப்பு இருக்காது என்று நினைத்து போகும்போது கொஞ்சம் விருந்து வைத்து விட்டு தான் செல்வார்கள்.

சுருக்கமா சொன்னா இருக்கிறவங்க, வர்றவங்க, போறவங்கன்னு எல்லார்கிட்டயும் விழும்.

இவ்வளவு விழுந்தாலும் குடும்பத்தினரும் உறவினர்களும் காவல் நிலையத்திற்கு அருகிலேயே காத்துக் கொண்டிருப்பதால் நிலைமை பற்றி சீரியஸாக பெரிதாய் தெரியாது.

யாரையாவது பிடித்து எப்படியாவது பேசி எதையாவது கொடுத்து வெளியே கொண்டு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே இருக்கும். அதாவது அடித்ததோடு விட்டுடுவாங்க என்ற அசால்ட்டான நம்பிக்கை .

ஆனால் எப்ஐஆர் போட்டு ரிமான்ட் செய்தே ஆகவேண்டும் என்ற சூழல் உருவாகி காவல்நிலையத்தில் பலரும் பேசிக் கொள்ளும் போதுதான், லாக்கப்பில் இருக்கும் பார்ட்டிக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்போதுகூட அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியாது.

நீதிமன்றத்திற்கு அழைத்து கொண்டு செல்லும்போது கூட ஏற்கனவே தெரிந்த காவலர்கள்தான் வருவார்கள். கூடவே குடும்பத்தினரும் உறவினர்களும் வருவார்கள்.

மேஜிஸ்திரேட் ரிமாண்ட் செய்து ஜெயிலுக்காக வேனில் ஏற்றும் வரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அருகில் பார்க்க முடியும்.

இதற்குப் பிறகுதான் சோதனைகள் ஆரம்பிக்கும். வேனில் ஏற்றிய பிறகு குடும்பத்தினர் உறவினர்கள் கட் ஆவார்கள்.

ரிமாண்ட் க்கு பிறகு சகஜமாக பேசிக்கொண்டு கூடவே வரும் காவலர்கள் சென்ட்ரல் ஜெயிலில் ஒப்படைத்த உடன் காணாமல் போய்விடுவார்கள்.

ஜெயில்.. முற்றிலும் புதிய இடம்..

உள்ளே அட்மிஷன் போடுவதற்காக அங்க அடையாளங்களை கேட்கும்போதே விதவிதமாக சீர்வரிசை. புழுவை விட கேவலமாக கருதி அவர்கள் நடத்துகிற விதத்திலேயே ஜென்மம் செத்துப் போய்விடும்.

அதற்கப்புறம் சிறையில் பிளாக் என்கிற வகுப்பு. விதவிதமாக துர்நாற்றங்கள் கலந்து வீசும் அங்கு ஏகப்பட்ட பேருடன் விசாரணைக் கைதி என்ற அந்தஸ்தோடு குடும்பம் நடத்திய ஆக வேண்டும்.

டாய்லெட் காலியாக இருக்கும் நேரம் பார்த்து அதைப் பிடித்து போய் வருவதற்குள்..

மூன்று வேளையும் கியூவில் நின்று தட்டில் வாங்கித் தின்னுவதற்குள்..

கக்கூசை கழுவ விடலாம், துணிகளை துவைக்க விடலாம் தோட்ட வேலை செய்ய விடலாம் இன்னும் என்னென்ன வேலை இருக்கிறதோ அத்தனையையும் செய்யச் சொல்லலாம். வார்டன்கள் சொல்வதை செய்யாவிட்டால் அடுத்தடுத்த கட்ட நெருக்கடிகளுக்கு ஆளாகிக் கொண்டே போகலாம்.

ஜெயிலுக்குப் போன ஓரிரு தினங்கள் தொடர்ந்து குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் பிஸ்கட் பழங்களுடன் வந்து அக்கறையாக பார்ப்பார்கள்..

ஜாமின் கிடைப்பதில் தாமதம் ஆகி உள்ளே இருக்க இருக்க, அக்கறை யோடு வந்து பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களின் வருகை என்பது குறைந்து கொண்டே போகும். ஒரு கட்டத்தில் அடியோடு கூட நின்று போகும்.

ஜாமீன் கிடைத்து வெளியே வரும்வரை ஏண்டா இந்த தவறை செய்தோம் என்று நினைத்து வருந்தாதே தருணமே இருக்க முடியாது.

வாரங்கள் கழித்து மாதங்கள் கழித்து ஜாமீனில் வந்த பிறகு, பட்டதெல்லாம் போதும் என நொந்து போய் சொந்த வேலையை பார்க்க ஆரம்பித்து இருப்பார். அப்படியே ஜெயில் சமாச்சாரத்தையும் மறந்து விடுவார்.

ஆனால் சில ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்திலிருந்து நேரில் ஆஜராகும்படி சம்மன் வரும்.

அப்போது பார்த்தால், ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இருக்கலாம். ஒரு வியாபாரம் ஆரம்பித்து நன்றாக போய்க் கொண்டிருக்கலாம். அல்லது புது மாப்பிள்ளையாக மாமனார் வீட்டில் கெத்து கூட காட்டிக் கொண்டிருக்கலாம்.

எல்லாமே தொலைஞ்சு போச்சு என்று மறந்துவிட்டிருந்தால் இந்த நேரத்தில் பார்த்தா இந்த எழவு வரவேண்டும் என நொந்து போய் தலையில் அடித்துக்கொண்டு உட்காருகிற கட்டம் அது.

குற்றப்பத்திரிகை தாக்கல் விசாரணை என நீதிமன்றங்களுக்கு வருடக்கணக்கில் அலைய நேரிடும்.

உள்ளூரில் வழக்கில் சிக்கி உள்ளூர் நீதிமன்றத்தில் அலைய நேரிட்டால் ஓரளவு சமாளிக்கலாம்.

ஆனால் வெளியூரில் தப்பு செய்துவிட்டு அங்கேயே அங்கேயே மாட்டி அந்த நீதிமன்ற எல்லைக்குள் வழக்கு நடந்தால், சுத்தம்.

ஒவ்வொரு முறையும், அன்றைய தின எல்லா வேலைகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு வழக்குக்காக ஊரு விட்டு ஊரு போய் வரும் வரை நாய் அலைச்சல்தான்.

சென்னையிலிருந்து குற்றாலத்திற்கு குளிக்கப் போய் அங்கு தகராறு செய்துவிட்டு வழக்கு பதிவாகி சென்னையில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தென்காசி நீதிமன்றத்திற்கு இன்றைக்கும் நடப்பவர்கள் பலருண்டு.

இதேபோல நீண்டதூர மாவட்டங்களுக்கு பயணம் செய்யும்போது அங்கு ஏதாவது ஒரு விஷயத்தில் தகராறு வழக்கு பதிவாகி சொந்த ஊருக்கும் தகராறு நடந்த ஊர் நீதிமன்றத்திற்கும் அலையும் பரிதாபங்கள் பற்றிக் கேட்டுப் பாருங்கள். விதவிதமான கண்ணீர் கதைகள் கிடைக்கும்

சரி போகட்டும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து தீர்ப்பு கட்டம். இதற்குப் பிறகு?

வேறென்ன? தண்டனை கொடுத்தால் உள்ளே போக வேண்டியதுதான். விடுதலை என்றால் ஆள விடுங்கடா சாமி என்று புத்தர் ரேஞ்சுக்கும் போகலாம்..

எல்லாமே பழகிவிட்டதால் அடுத்த ரவுண்ட்டையும் பார்த்துவிடலாம் என இன்னும் திமிர் அதிகமாகலாம்.

அப்புறம் வழக்குகளுக்கான செலவு, சமூகம் மற்றும் சொந்த பந்தங்கள் இடையே அவமானம்.. போன்றவை உள்ளூர் வரிகள்..

முக்கிய குறிப்பு.. சொன்னது கொஞ்சம் தான்.. சொல்லாமல் விட்டது தான் அதிகம்..

இதையெல்லாம் வீட்டில் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.. பள்ளிகளில் சொல்லி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை.

சொல்ல வேண்டிய கடமை உள்ளதால்தான் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறோம்.

Ezhumalai Venkatesan

நீர் நிலை ஒன்றில் விழுந்த வாகனத்தில் இருந்து எப்படி தப்பிப்பது.

3 months 2 weeks ago

519548390_24356824977255068_191371777915

நீங்கள் பயணிக்கும் வாகனம் நீர் நிலை ஒன்றில் விழுந்து மூழ்கிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் - நடக்கக்கூடாது 🤲🤲🤲 - முதலில் என்ன செய்வீர்கள்?
அது பற்றிய சில வழிகாட்டல்களையே இங்கு பார்க்கப் போகிறோம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியாது. ஆதலால் நீங்கள் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றத் தவறாதீர்கள்.
♦️நீங்கள் உடனே கதவுகளைத் திறக்க முயற்சித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
ஏனெனில் தண்ணீரின் அழுத்தம் அதனை
திறப்பதை சாத்தியமற்றதாக்குகிவிடும். தப்பிக்கவும் முடியாமல் போகும்.
♦️ஜன்னல்களையும் நீங்கள் பணிக்க முற்படாதீர்கள். ஏனெனில் பாய்ந்து வரும் நீரோட்டத்தில் சிக்கி, உங்களால் தப்பிப்பது மிகவும் கடினமாகும்.
♦️உங்கள் வாகன இருக்கையில் காணப்படும் "ஹெட்ரெஸ்ட்டை" தலைத் தலையாணையை கழற்றி, அதிலுள்ள உலோக முனையை பயன்படுத்தி அல்லது வாகனத்தினுள் காணக்கிடைக்கும் ஏதாவது உடைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி வாகனத்தின் பின்புற கண்ணாடியை உடைக்க முயற்சி செய்யுங்கள். அதுவே நீங்கள் தப்பிக்க இலகுவான வழியாகும்.
♦️ஏன் பின்புறக் கண்ணாடி?
பெரும்பாலான வாகனங்கள் தணீணீரில் மூழ்கும் போது முதலில் பின்புறம் மிதக்கும்
படியாகவே வடிவமைக்கப்படுகின்றன.
♦️ஆதலால் தீங்கள் பின்புற கண்ணாடியால் தப்பிக்க முயற்சிப்பதே மிகவும் எற்றமான மற்றும் பாதுகாப்பான வழியாகும்.

பாதுகாப்பான பயணம் அமைய வாழ்த்துக்கள்.

Imran Farook 

Checked
Tue, 11/04/2025 - 11:47
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed