விளையாட்டுத் திடல்

ஓய்வை அறிவித்தார் டிரென்ட் போல்ட்

1 day 16 hours ago
T20 போட்டிக்கு மத்தியில் விசேட அறிப்பை வௌியிட்ட பிரபல வீரர்!

T20 போட்டிக்கு மத்தியில் விசேட அறிப்பை வௌியிட்ட பிரபல வீரர்!

இதுவே தனது இறுதி இருபதுக்கு 20  ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி என நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், அறிவித்துள்ளார்.

தற்போது 34 வயதாகும் போல்ட், உகாண்டாவுக்கு எதிரான போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.

"இது எனது கடைசி டி20 உலகக் கிண்ண போட்டி..." என்று போல்ட் கூறினார்.

இதன்படி, திங்கட்கிழமை பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டி அவரது கடைசி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும்.

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய நியூசிலாந்து அணி தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamil.adaderana.lk/news.php?nid=188820

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

1 day 20 hours ago
new-draft-constitution-for-the-Sri-Lanka இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு.

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தைத் தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இலங்கை கிரிக்கெட் சபை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு
கடந்த வருடம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் இறுதி அறிக்கையே இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை உப குழுவில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,
தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர்.

அந்த அறிக்கையில் இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த அமைச்சரவை உப குழு அறிக்கையை மையப்படுத்தி, அமைச்சரவையினால் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய யாப்புக்கான சட்டமூலத்தை தயாரிக்க நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறியின் தலைமையில், இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1388038

யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்

2 days 11 hours ago
16245243746397-800x445.jpg
 
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
 

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் ஆரம்பமாகின்றது.

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு பிறகு, உலக கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் போட்டித் தொடரான யூரோ கிண்ண தொடராகும். உதைப்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் பெரும்பான்மையான அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.

இந்தப் போட்டித் தொடரில் நடப்பு சம்பியன் இத்தாலி உட்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன. கூடவே ஜெர்மனி, இத்தாலி, இஙகிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் என முன்னாள் உலக சம்பியன்களும் களம் காணுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தலா 4 அணிகள் கொண்ட 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று இன்று முதல் ஜூன் 26ஆம் திகதி வரை நடைபெறும். தொடர்ந்து சுற்று-16 ஜூன் 29 முதல் ஜூலை 2ஆம் திகதி வரையிலும், காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5, 6 திதிகளிலும் நடைடபெறவுள்ளன.

மேலும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 9 ஆம் 10ஆம் திகதிகளில் நடத்தப்பட்டு இறுதி ஆட்டம் ஜூலை 14ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஜெர்மனியில் உள்ள பெர்லின், முனிக், டோர்ட்மண்ட், ஹாம்பர்க், ஃபிரங்க்பர்ட் உட்பட 10 நகரங்களில் நடைபெற உள்ளன.

இன்று நள்ளிரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://uthayam.lk/2024/06/14/யூரோ-கிண்ண-கால்பந்துப்-ப/

மானிப்பாய் மகளிர் சதுரங்கத்தில் சாதனை

3 days 16 hours ago

(ஆதவன்)

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைக்ளுக்கு இடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் முதலாம் இடம்பெற்று மானிப்பாய் மகளிர் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தைத் தனதாக்கியுள்ளது.


இரண்டாமிடத்தை மகாஜனக் கல்லூரியும், மூன்றாம் இடத்தை ஸ்கந்தவரோதயக் கல்லூரியும், நான்காம் இடத்தை இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன. (ச)

மானிப்பாய் மகளிர் சதுரங்கத்தில் சாதனை (newuthayan.com)

ஜஸ்பிரித் பும்ரா: தோல்வியை ஆச்சரிய வெற்றியாக மாற்றும் மந்திர பந்துவீச்சாளர்

4 days 20 hours ago
ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சஞ்சய் கிஷோர்
  • பதவி,மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர், பிபிசி ஹிந்தி
  • 11 ஜூன் 2024

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியது. டி20யில் இந்தியா இதுவரை இல்லாத மிகக் குறைந்த ஸ்கோரைப் பெற்ற போதிலும் வெற்றி பெற்றது. அதேசமயம் பாகிஸ்தான் அந்த சிறிய இலக்கை கூட துரத்த முடியாமல் தோல்வியுற்றது.

கடினமான 22 யார்டு ஆடுகளத்தில், 22 வீரர்களுக்கு மத்தியில், இந்த ஆச்சரிய வெற்றிக்கும் எதிரணியின் எதிர்பாராத தோல்விக்கும் ஒருவர் தான் காரணம் : அது `ஜஸ்பிரித் பும்ரா’.

பாகிஸ்தானுக்கு எதிராக பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பாதை அமைத்து கொடுத்தார்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். பும்ரா வீசிய 24 பந்துகளில் 15 பந்துகள் `டாட் பால்கள்’ ஆனது.

குறைந்த ஓவர்களை கொண்ட டி20 கிரிக்கெட்டில், இந்த டாட் பால்களின் மதிப்பு விக்கெட் எடுப்பதற்கு சமம் என்றே சொல்ல வேண்டும். இதனை ரவிச்சந்திரன் அஷ்வினை விட வேறு யாராலும் தெளிவாக விளக்க முடியாது.

போட்டிக்குப் பிறகு, ரவிச்சந்திரன் அஷ்வின் எக்ஸ் தளத்தில் ஒரு நீண்ட பதிவை பகிர்ந்தார்: “டி20யில் விக்கெட்டுகளை எடுப்பது ஒரு கொடுங்கனவு போன்றது. இதை நான் சொல்லும் போதெல்லாம் மக்கள் என்னைக் கேலி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். டி20யில் விக்கெட்டுகளை வீழ்த்தலாம். இது பும்ராவை போன்று பந்துவீச்சாளரின் சொந்த திறனைப் பொறுத்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“பொதுவாக பந்துவீச்சாளர்கள் தவறான நேரத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்பார்கள். அடுத்த ஓவரில் சக பந்துவீச்சாளர்களால் அழுத்தத்தை உருவாக்க முடியாது. மெதுவாக ஆனால் நிச்சயமாக, போட்டியின் போக்கை சுயநலமற்ற பந்துவீச்சாளர்கள் தீர்மானிக்கிறார்கள்." என்றும் அஷ்வின் பதிவிட்டிருக்கிறார்.

 
"விக்கெட்டுகளை பெறுவது இறுதி இலக்கு அல்ல"
ஜஸ்பிரித் பும்ரா: போட்டிகளை மாற்றியமைக்கும் `ஆபத்தான பந்துவீச்சாளர்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்பிரித் பும்ரா பேசிய வார்த்தைகள் அஷ்வினின் கூற்றை எதிரொலித்தது. பும்ராவின் எண்ணங்கள் எவ்வளவு முதிர்ச்சியடைந்தவை என்பதையும் அவர் எவ்வளவு வியூகமாக பந்து வீசுகிறார் என்பதையும் அவரின் பேச்சு பிரதிபலிக்கிறது.

பும்ரா பேசுகையில், "போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும் போது பந்துவீச்சாளராக நாம் பொறுமை இழந்து விடக்கூடும். பந்து வீசுபவர்கள் முழு பலத்துடன் சிறந்த பந்தை வீச முயற்சிப்பார்கள். ஆனால் நான் அப்படிச் செய்யாமல் இருக்க முயற்சித்தேன். நாங்கள் விளையாடத் தொடங்கியதும், ஸ்விங் மற்றும் சீம் குறைந்துவிட்டது.

அத்தகைய சூழ்நிலையில் நாம் துல்லியமாக வியூகம் வகுக்க வேண்டும். ஏனென்றால், பந்துவீச்சில் மாயம் செய்து விடலாம் என்று நினைத்து அவசரம் காட்டினால், எதிரணிக்கு ரன்களை எடுப்பது எளிதாகிவிடும், மேலும் அவர்கள் இலக்குக்கு ஏற்ப பேட் செய்து வென்றுவிடுவர்.

எனவே, நாம் வேகம் காட்டாமல் நிதானமாக செயல்பட வேண்டும். ஆம், அழுத்தத்தை அதிகரித்து, பெரிய பவுண்டரி லைனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆடுகளத்தில் இருக்கும் சூழலை நம் நன்மைக்காக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். அதைத்தான் செய்து நாங்கள் செய்தோம். முதலில் அழுத்தத்தை உருவாக்கினோம், அதன்பின்னர் அனைவரும் விக்கெட்டுகளைப் பெற்றோம்.” என்றார்.

கடினமான நியூயார்க் ஆடுகளம்
ஜஸ்பிரித் பும்ரா: போட்டிகளை மாற்றியமைக்கும் `ஆபத்தான பந்துவீச்சாளர்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் (Nassau County International Cricket Stadium) எதிர்பாராத விதமாக மிகவும் கடினமாக இருந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஆட்டத்துக்கு நடுவே மழை பெய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ஓவர்களில் ஆல் அவுட்டானது. .

ரிஷப் பந்த் 42 ரன்களும், அக்சர் படேல் 20 ரன்களும், ரோஹித் சர்மா 13 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, ஹாரிஸ் ரஃப் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஆமிர் 2 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிடி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

எதிரணிக்கு குறைந்த இலக்கு என்று கவலைப்படாத பும்ரா

"சிறு வயதில் இருந்தே பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று ஜஸ்பிரித் பும்ரா கூறுகிறார். பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படும் போது, அவர்களுக்கு உள்ளிருந்து மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும்.

பாகிஸ்தானுக்கு 120 ரன்கள் மட்டுமே இலக்காக இருந்தது, ஆனால் அது பும்ராவின் நோக்கத்தில் எந்த பதற்றத்தையும் விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று தோன்றியது.

பும்ராவின் பந்துவீச்சில், ஃபைன் லெக்கில் ரிஸ்வானின் கேட்சை ஷிவம் துபே தவறவிட்ட போது பாகிஸ்தான் 17 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரிஸ்வான் 7 ரன்களில் இருந்தார். ஐந்தாவது ஓவரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமை (13) அவுட் செய்து பும்ரா முதல் விக்கெட்டை கைப்பற்றினார். 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் ஆக இருந்தது. 13வது ஓவரில் 73 ரன் எடுத்திருந்த பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.

 
திருப்புமுனையாக அமைந்த ரிஸ்வானின் விக்கெட்

முகமது ரிஸ்வான் உறுதியாக நின்று விளையாடி கொண்டிருந்தார். அவர் 43 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார், போட்டி பாகிஸ்தானுக்குச் சாதகமாகப் போவதாகத் தோன்றியது. அதன் பின்னர் 15வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச வந்தார்.

பும்ராவின் முதல் பந்து நல்ல லென்த்தில் வீசப்பட்டது. பந்து பவுன்ஸாகி மேலெழுந்ததும், ரிஸ்வானை தடுமாற வைத்து விக்கெட்டை வீழ்த்தியது. ரிஸ்வான் அவுட் ஆனவுடன் ஆட்டம் தலைகீழாக மாறியது.

இறுதியில் பாகிஸ்தானுக்கு 18 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. சிராஜின் ஓவரில் இமாத் மற்றும் இஃப்திகார் 9 ரன்கள் எடுத்தனர், இலக்கு 12 பந்துகளில் 21 ரன்கள், ஆனால் பும்ரா 19வது ஓவரின் கடைசி பந்தில் இஃப்திகாரை (5) அவுட்டாக்கியது மட்டுமல்லாமல், மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால், கடைசி ஓவரில் பாகிஸ்தான் 18 ரன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கின் சமநிலை முக்கியம்

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆச்சரியமான வெற்றிக்குப் பிறகு, வாட்ஸ்அப் குழுவில் எனது சீனியர் ஒருவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது - “நல்லது, நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையிலான நல்ல போட்டியைப் பார்க்க முடிந்தது. ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதால் போட்டியின் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

போட்டிக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ரா இதேபோன்ற கருத்தை ட்வீட் செய்தார், “பந்துவீச்சுக்கும் பேட்டிங்கிற்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் போது மட்டுமே எனக்கு போட்டி மீது ஆர்வம் இருக்கும். பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தால், எனக்கு அந்த போட்டியை பார்க்க விருப்பமில்லாமல் நான் டிவியை அணைக்க விரும்புகிறேன். “ என்று பதிவிட்டிருந்தார்.

`வெல் டன்’ என்று சொன்ன முன்னாள் கிரிக்கெட் வீரர்
ஜஸ்பிரித் பும்ரா: போட்டிகளை மாற்றியமைக்கும் `ஆபத்தான பந்துவீச்சாளர்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

பும்ராவின் சிறப்பான ஆட்டத்திற்கு முன்னாள் வீரர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ட்விட்டரில், “இந்திய ஊடகங்கள் விராட் கோலி போன்றவர்கள் மீது ஆர்வம் காட்டுகின்றன. தொடர்ந்து பேட்ஸ்மேன்களை பாராட்டுகின்றனர். ஜஸ்பிரித் பும்ரா எந்த ஆரவாரமும் இல்லாமல் தனித்து வெற்றி பெற்றார். பும்ரா தற்போது இந்திய அணியின் சிறந்த வீரர்.

முகமது கைஃப் எக்ஸ் தளத்தில் , "ஜஸ்பிரித் பும்ரா ஆகச் சிறந்த ஆட்டத்தின் வெற்றியாளர்- எந்த வடிவத்திலும் எந்த சூழ்நிலையிலும் உலகின் எந்த மூலையில் ஆட்டம் நடந்தாலும் அவர் வெற்றியாளர் தான்”

வீரேந்திர சேவாக் கூறுகையில், "தோல்வியை வெற்றியாக மாற்றக்கூடியவர் பும்ரா. என்ன ஒரு அபாரமான ஆட்டம். இந்த நியூயார்க் வெற்றி சிறப்பு வாய்ந்தது" என்று கூறினார்.

 
விமர்சகர்களுக்கு தகுந்த பதிலடி

ஒரு வருடத்திற்கு முன்பு ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்தபோது தனது எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பிய விமர்சகர்களை அமைதிப்படுத்தினார். முதுகு அறுவை சிகிச்சை காரணமாக, அவர் 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உட்பட பல முக்கியமான போட்டிகளில் விளையாடவில்லை.

அவர் கடந்த ஆண்டு அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட ஆரம்பித்தார். ஆசிய கோப்பை மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை 2024 இல் சிறப்பாக விளையாடினார்.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பும்ரா, "ஒரு வருடத்திற்கு முன்பு இதே நபர்கள் தான் நான் மீண்டும் விளையாட முடியாது, என் கேரியர் முடிந்துவிட்டது என்று சொன்னார்கள், இப்போது அவர்களின் கேள்வி மாறிவிட்டது" என்று கூறினார்.

சிறப்பாக விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

கேப்டன் ரோஹித் ஷர்மா பும்ராவை பாராட்டினார், "பும்ரா அற்புதமாக விளையாடி வருகிறார், அவரின் திறனை நாங்கள் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம், அதைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்த உலகக்கோப்பை முடியும் வரை அவர் இந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் பந்து வீச்சில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.

ஜஸ்பிரித் பும்ரா: போட்டிகளை மாற்றியமைக்கும் `ஆபத்தான பந்துவீச்சாளர்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறுகிய காலத்தில் பெரிய சாதனைகள்

ஜஸ்பிரித் பும்ரா குறுகிய காலத்தில் பெரிய சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. ஒரு நாள் சர்வதேச (ODI) கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எட்டிய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் இவர்.

கிரிக்கெட்டின் அனைத்து மூன்று ஃபார்மட்டிலும் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை எட்டிய முதல் பந்து வீச்சாளர் பும்ரா.

பும்ரா 2013 இல் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸுடன் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கினார். அணியை ஐந்து முறை சாம்பியனாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். 2019 ஆம் ஆண்டில், அவர் ஐசிசி ஒரு நாள் போட்டியின் ஆண்டின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பும்ரா தனது முதல் ஐபிஎல் போட்டியில் விராட் கோலியையும், தனது முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தையும், முதல் டி20யில் டேவிட் வார்னரையும், முதல் டெஸ்டில் ஏபி டி வில்லியர்ஸையும் வீழ்த்தியுள்ளார்.

 
`ஆபத்தான பந்துவீச்சாளர்’
ஜஸ்பிரித் பும்ரா: போட்டிகளை மாற்றியமைக்கும் `ஆபத்தான பந்துவீச்சாளர்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 வயதான ஜஸ்பிரித் பும்ரா, அவரது வழக்கத்திற்கு மாறான அதிரடி பந்துவீச்சு மற்றும் திறமையால், உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

பந்து அவரின் கையை விட்டு வெளியேறினால், அதன் போக்கை பேட்ஸ்மேன்கள் கணிப்பது கடினம். ஐபிஎல் போட்டியின் போது, லசித் மலிங்கா துல்லியமான யார்க்கர்களை வீசுவதில் திறமை வாய்ந்தவராக பார்க்கப்பட்டார். அவரின் டெத் ஓவர்களை விளையாடுவது எந்த பேட்ஸ்மேனுக்கும் எளிதானது அல்ல.

நிஜத்தில் பந்துவீச்சு அவ்வளவு வேகமாக இல்லாத போதும், பேட்ஸ்மேன்களுக்கு மிக வேகமாக பந்து வீசப்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குவது அவரது தனித்துவமான பாணி.

ஆல்-ரவுண்டர் பென் கட்டிங் ஒரு இணையதளத்தில் அளித்த பேட்டியில், "பந்தின் வேகத்தை மதிப்பிடுவது பேட்டிங்கின் முக்கிய பகுதியாகும். சிறந்த வீரர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவது அவசரப்படாத அவர்களின் திறமை தான்” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cw44g4ywynjo

தேசிய மட்டத்தில் சிறந்த தமிழ் வீராங்கனையாக திகழ்வேன் - கிரிக்கெட் வீராங்கனை சயிந்தினி !

1 week ago
09 JUN, 2024 | 08:14 PM
image
 

நான் தேசிய மட்டத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக திகழ வேண்டும் என்று அவா இருக்கின்ற போதும் எனது வீட்டின் பொருளாதார சிக்கலால் கைகூடுமோ என்ற அச்சம் இருக்கின்றது, இருந்தும் உதவிகள் கிடைக்குமாயின்  வட மாகாணத்துக்கு ஒரு தமிழ் பெண்மணியாக புகழை ஈட்டிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது என தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இலங்கையின் வன்பந்து கிரிக்கெட் கழக மட்டத்தில் விளையாடி வரும் பேசாலை மன்.சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி இவ்வாறு தெரிவித்தார்.  

பேசாலை மன்னார் சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி வன்பந்து துடுப்பாட்ட வீராங்கனையாக வட மாகாணத்தில் முதல் பெண்மணியாக தெரிவு செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையின் கழக மட்ட கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் மாணவி சயிந்தினி ஊடகத்துக்கு மேலும் தெரிவிக்கையில் ,  

எனக்கு கல்வியும், கிரிக்கெட் விளையாட்டும் இரு கண்கள். தேசிய மட்டத்தில் விளையாடுவதற்கு இப்பொழுது வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் வீரர்கள் தெரிவாகும் சூழ்நிலை உருவாகி வருகின்றது.

இந்த நிலையில் வடக்கிலிருந்து நான் முதல் பெண்மணியாக கிரிக்கெட் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது எனக்கு பெருமையாக இருக்கின்றது.

நான் இப்பொழுது மன்னார் பேசாலை சென்.பற்றிமா ம.ம.வித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தர வகுப்பில் கற்று வருகின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் இப்பரீட்சையில் தோற்ற இருக்கின்றேன்.

இதன் பின் நான் கொழும்பில் தங்கியிருந்து சிறந்த பயிற்ச்சிகளை பெறுவதற்கு ஆவலாக இருக்கின்றேன். இருந்தும் எங்கள் வீட்டின் பொருளாதாரம் இதற்கு ஒரு தடையாக இருக்குமோ என்ற அச்சமும் இருக்கின்றது.

இந்த முயற்சிக்கு எனக்கு உதவிகள் கிடைக்குமாயின்  எனது பாடசாலைக்கும் , மாவட்டத்துக்கும் , மாகாணத்துக்கும் பெருமையை ஈட்டிக் கொடுக்கும் கனவை நனவாக்கிக் கொள்வேன்.

சக வீராங்கனைகளுடன் கொழும்பில் நான் பயிற்சி பெறும்போது நான் மட்டுமே தமிழ் பெண்மணி. எனக்கு அவர்களின் மொழியை புரிந்துகொள்ள முடியாது. இதனால் எனக்கு ஆரம்பத்தில்  பெரும் அச்சமாகக் காணப்பட்டது.

இருந்தும் எங்களுக்குள் மொழி புரிந்துணர்வு இல்லாதபோதும் அவர்கள் எனக்கு காட்டிய அன்பும் பாசமும் எனது அச்சத்தை தற்பொழுது தளர்த்தியுள்ளது.

எனக்கு இப்பொழுது சிங்கள மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவா ஏற்பட்டுள்ளது. நான் இதற்கான முயற்சியை நான் முன்னெடுக்க இருக்கின்றேன்.

உண்மையில் நான் இந்த கிரிக்கெட் விளையாட்டுக்குள் உட்புகுவதற்கு எனது பயிற்றுவிப்பாளர் ரி.பிறேமன் டயஸ் அண்ணா , பெனட் சேர் , ரூபன் சேர் , கொலின்றா ரீச்சர் எனது பாடசாலை பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாவட்ட மாகாண விளையாட்டு அதிகாரிகள் லங்கா சேர் . றொகான் சேர் . செல்வா சேர் , சுரேஸ் சேர் போன்ற பலரின் முயற்சியே இன்று நான் இந்த நிலையில் இருக்கின்றேன்.  

உண்மையில் பாடசாலை நிர்வாகம் மற்றும் எனது பெற்றோர் இவர்களின் ஒத்துழைப்பு இருந்திருக்காவிடில் நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/185677

ல‌சித் ம‌லிங்கா போல் ப‌ந்து வீசும் த‌மிழ் சிறுவ‌ன்

1 week 3 days ago

 

 

ல‌சித் ம‌லிங்கா இந்த‌ த‌மிழ் சிறுவ‌னுக்கு ப‌யிற்ச்சி அளித்தால் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு இந்த‌ த‌மிழ் சிறுவ‌னுக்கு

ந‌ல்லா யோக்க‌ர் ப‌ந்து மிக‌வும் வேக‌மாக‌ போடுகிறார்........................................................

ரியல் மெட்றிட் கழகத்தில் இணைகிறார் கிலியான் எம்பாப்பே

1 week 5 days ago

Published By: DIGITAL DESK 7   04 JUN, 2024 | 05:28 PM

image

(நெவில் அன்தனி)

ரியல் மெட்றிட் கழகத்தில் பிரான்ஸ் தேசிய வீரர் 25 வயதான கிலியான் எம்பாப்பே இணையவுள்ளார்.

ஐரோப்பா சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் 15ஆவது சம்பியன் படத்தை வென்ற சூட்டோடு ரியல் மெட்றிட்  கழகம், உலகின் தலைசிறந்த முன்கள கால்பந்தாட்ட வீரரான கிலியான் எம்பாப்பேயுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

ரியல் மெட்றிட் கழகத்தில் எம்பாப்வே இணைவார் என நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ரியல் மெட்றிட் கழக முகாமைத்துவம் அடுத்த வாரம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்ஜி என சுருக்கமாக அழைக்கப்படும் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கால்பந்தாட்ட கழகத்துடன் கிலியான் எம்பாப்பே செய்துகொண்ட 4 வருட ஒப்பந்தம் இந்த வருடம் ஜூன் மாதம் 30ஆம் திகதி முடிவடைகிறது.

எனவே அவர் இலவச இடமாற்றத்தின் அடிப்படையில் ரியல் மெட்றிடில் இணையவுள்ளார்.

பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்திலிருந்து விலகி ரியல் மெட்றிட் கழகத்தில் இணையவுள்ளதாக கடந்த பெப்ரவரி மாதம் அவர் வாய்மொழிமூலம் தெரிவித்திருந்தார்.

ரியல் மெட்றிட் கழகத்துடனான ஒப்பந்தத்தில் இப்போது கைச்சாத்திட்டுள்ள எம்பாப்வே, ஜூலை 1ஆம் திகதிக்குப் பின்னர் அக் கழகத்துடன் இணைந்துகொள்வார்.

லா லிகா கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வீரர்களுக்கான இடமாற்றக் காலம் ஜூலை 1ஆம் திகதி ஆரம்பமாகிறது.

2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான பிரான்ஸ் அணியில் இடம்பெற்ற எம்பாப்பே, 2017ஆம் ஆண்டு மொனாக்கோ கழகத்திலிருந்து கடன் அடிப்படையில் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் அணியில் இணைந்தார்.

எனினும் 2018இலிருந்தே உத்தியோகபூர்வ ஒப்பந்த அடிப்படையில் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்திதிற்காக விளையாடிவந்தார்.

அக் கழகத்தில் விளையாட ஆரம்பித்த பின்னர் 256 கோல்களைப் போட்டுள்ள எம்பாப்பே, அக் கழகத்திற்காக அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராவார்.

ரியல் மெட்றிட் கழகத்தில் 2029வரை 5 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ள எம்பாப்பே, ஒரு பருவ காலத்தில் 15 மில்லியன் யூரோக்களை சம்பாத்திக்கவுள்ளார். அதனைவிட ஊக்கத் தொகையாக 150 மில்லியன் யூரோக்களைப் பெறவுள்ளார்.

kylian_embape.jpg

https://www.virakesari.lk/article/185318

பிரக்ஞானந்தா: சொந்த நாட்டில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இந்திய இளம் செஸ் வீரர்

2 weeks 2 days ago
பிரக்ஞானந்தா- இந்தியாவின் சதுரங்க இளம் மேதை

பட மூலாதாரம்,FIDE

28 செப்டெம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 30 மே 2024

நார்வே நாட்டில் நடந்து வரும் செஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வரும் இந்திய செஸ் வீரரான பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை நேற்று நடந்த போட்டியில் வீழ்த்தினார்.

இதற்கு முன்பாக கார்ல்சனை சில முறை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தாலும், ’கிளாசிக்கல் கேம்’ என்று செஸ் விளையாட்டில் அழைக்கப்படும் முறையில் முதல் முறையாக கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். செஸ் விளையாட்டில் கிளாசிக்கல் கேம் என்பது மற்ற விளையாட்டு முறைகளை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டு விளையாடுவது.

இதற்கு முன்பாக ரேபிட், பிளிட்ஸ் போன்ற சதுரங்க ஆட்ட முறையில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, வெற்றியை தன் வசமாக்கி, நார்வே செஸ் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

தோல்வியடைந்த கார்ல்சன், புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

யார் இந்த ‘பிரக்’
பிரக்ஞானந்தா

பட மூலாதாரம்,FIDE

சதுரங்கம் என்றாலே, இது வரை நம் எல்லார் நினைவுக்கும் வரும் பெயர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தாக இருந்தது. தற்போது நினைவுக்கு வரும் பெயர் பிரக் என்றழைக்கப்படும் பிரக்ஞானந்தா.

18 வயதான பிரக்ஞானந்தா, சமீபத்தில் அசர்பைஜானில் நடைபெற்ற சதுரங்க உலக கோப்பை போட்டியில் பங்கேற்றதன் மூலம், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் உலகின் இளம் வீரரானார்.

2002ம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் உலக கோப்பையை வென்ற பிறகு, இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கு பெற்ற இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

பிரக்ஞானந்தா தனது ஏழாவது வயதில் ஏழு வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார்.

தனது பத்தாவது வயதில் சதுரங்க வரலாற்றில், இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் வீரரானார். இரண்டு ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டில், உலகின் அப்போதைய இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

கனடாவில் இந்தாண்டு நடைபெற்ற கேண்டிடேட்ஸ் டோர்னமண்ட் போட்டியில் பங்கேற்ற மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றவர் பிரக்ஞானந்தா.

பிரக்ஞானந்தா- இந்தியாவின் சதுரங்க இளம் மேதை

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,தனது பத்தாவது வயதில் சதுரங்க வரலாற்றில், இண்டர்நேஷ்னல் மாஸ்டர் பட்டம் இளம் வீரரானார்.  
எளிமையான குடும்ப பின்னணி

சென்னை பாடி பகுதியில் வசிப்பவர் பிரக்ஞானந்தா. மிக எளிமையான குடும்ப பின்னணி கொண்டவர். அவர் பத்து வயதில் இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெறும் வரை, அவரது பெற்றோர்கள் கடன் வாங்கியே போட்டிகளுக்கு அனுப்ப வேண்டியிருந்தது.

வீட்டில் சதுரங்கம் சொல்லிக் கொடுக்க சதுரங்க வீரர்கள் யாரும் கிடையாது. சிறு வயதில் அவரது மூத்த சகோதரி வைஷாலி சதுரங்கம் விளையாட தொடங்கினார். அதை பார்த்து ஆர்வம் கொண்ட பிரக்ஞானந்தா, தானும் சதுரங்கம் ஆட தொடங்கினார். சதுரங்கத்தின் மேல் கொண்ட ஆர்வமும், அவரது திறமையும் அவர் இளம் வயதிலேயே பல உயரங்களை தொட காரணமாக இருந்துள்ளன.

பிரக்ஞானந்தா- இந்தியாவின் சதுரங்க இளம் மேதை

பட மூலாதாரம்,RAMESH BABU

படக்குறிப்பு,பிரக்ஞானந்தா தனது ஏழாவது வயதில் ஏழு வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார்.  

ஆன்லைனில் துரிதமாக விளையாடும் ஏர்திங்க்ஸ் என்ற போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை கடந்த ஆண்டு வென்றார். இதன் மூலம் நார்வே கிராண்ட் மாஸ்டரான 32 வயதான கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் ஆனார்.

உலக கோப்பை போட்டியில் அவர் கார்ல்சனிடம் தோல்வியை தழுவினாலும், அவரது அசாத்திய ஆட்டத்தால் பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் சதுரங்கம் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கத்தில் வெற்றி பெற்ற போது, சதுரங்கம் குறித்த பேச்சும் முக்கியத்துவமும் எப்படி அதிகரித்ததோ அதேபோன்ற நிலை தற்போது உள்ளது.

பிரக்ஞானந்தாவும் விஸ்வநாதன் ஆனந்தை முன்மாதிரியாக கொண்டே சதுரங்கம் விளையாட தொடங்கினார். விஸ்வநாதன் ஆனந்த் பிரக்ஞானந்தாவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறார் என்கிறார் பிரக்ஞானந்தாவின் பயிற்றுநர் ஆர் பி ரமேஷ். “அவர்கள் இருவரும் தொடர்பிலேயே இருக்கிறார்கள். விஸ்வநாதன் ஆனந்த் பிரக்ஞானந்தாவுக்கு தொடர்ந்து ஊக்கமளித்தும் வழிகாட்டியும் வருகிறார்” என்கிறார் அவர்.

பிரக்ஞானந்தா- இந்தியாவின் சதுரங்க இளம் மேதை

பட மூலாதாரம்,FIDE

படக்குறிப்பு,மேக்னஸ் கார்ல்சனை ஆன்லைன் துரித சதுரங்கப் போட்டியில் வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா.  

ரமேஷ் இந்திய சதுரங்க அணியின் பயிற்றுநராக 12 ஆண்டுகள் இருந்துள்ளார். காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர். அரசு நிறுவனத்தில் வேலை பார்த்த அவர், அந்த பணியை விட்டுவிட்டு, 2008ம் ஆண்டு சதுரங்கப் பயிற்சி பள்ளியை தொடங்கினார்.

பிரக்ஞானந்தாவின் தந்தை கூட்டுறவு வங்கி மேலாளர், அவரது தாய் வீட்டையும் குடும்பத்தையும் பராமரித்து வருகிறார். பிரக்ஞானந்தாவுடன் ஒவ்வொரு போட்டிக்கும் உடன் சென்று அவருக்கு பிடித்தமான தமிழ்நாட்டு உணவுகளை சமைத்து தருகிறார்.

உலக கோப்பையில் பங்கேற்றதுடன் அடுத்ததாக சீனாவில் நடைபெறும் ஆசிய செஸ் போட்டிகளில் பத்து பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக சதுரங்கத்தில் தங்கம் வென்று கொடுக்கும் முனைப்பில் பிரக்ஞானந்தா இருக்கிறார்.

பிரக்ஞானந்தா சதுரங்கத்தில் தீவிர கவனம் செலுத்துவதால் பொதுவாக இந்த வயதில் இருக்கும் இளைஞர்களுக்கான சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதில்லை என்கிறார் அவரது பயிற்றுநர் ரமேஷ். “இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்காது. பிரக்ஞானந்தாவுக்கு சதுரங்கம் தான் முக்கியம். எனவே அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்” என்றார்.

பிரக்ஞானந்தா- இந்தியாவின் சதுரங்க இளம் மேதை

பட மூலாதாரம்,FIDE

படக்குறிப்பு,போட்டிகளுக்காக வெளிநாடுகள் செல்லும் போது பிரக்ஞானந்தாவுக்கு பிடித்த தமிழ்நாட்டு உணவுகளை அவரது தாயார் சமைத்து தருகிறார்.  

சதுரங்கம் தான் பிரக்ஞானந்தாவின் உயிர் என்றாலும் நண்பர்களுடன் அவ்வப்போது டேபிள் டென்னில் மற்றும் கிரிக்கெட் விளையாடுவதும் உண்டு. பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சிப் பக்கம் திரும்பாத பிரக்ஞானந்தா, எப்போதாவது தொலைக்காட்சி பார்த்தால், அதில் தமிழ் நகைச்சுவை நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக மாதத்தில் 15 நாட்கள் வெளிநாடுகளில் போட்டிகளுக்காக சென்று வந்தார் பிரக்ஞானந்தா. பள்ளியில் வழக்கமான வகுப்புகளிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகளை மட்டும் நேரடியாக எழுதினார்.

பிரக்ஞானந்தா- இந்தியாவின் சதுரங்க இளம் மேதை

பட மூலாதாரம்,FIDE

படக்குறிப்பு,அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள காண்டிடேட்ஸ் டோர்னமண்ட் போட்டியில் பங்கேற்கும் மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றவர் பிரக்ஞானந்தா.  

கடந்த பத்து ஆண்டுகளாக பிரக்ஞானந்தாவுக்கு பயிற்சி அளித்து வரும் ரமேஷ், இத்தனை ஆண்டுகளில் பிரக்ஞானந்தா அபார வளர்ச்சி அடைந்துள்ளார் என்கிறார். “கடுமையாக உழைக்கும் பிரக்ஞானந்தா, மிகவும் மேம்பட்டுள்ளார். அவரது திறமைகளை காணும் போது இது ஆச்சர்யமான விசயமே இல்லை” என்கிறார்.

உலகக்கோப்பையில் தோல்வியுற்றாலும் பிரக்ஞானந்தா உற்சாகத்துடனே இருந்து வருகிறார். இந்த போட்டியில் உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நபர்களை தோற்கடித்து விட்டு இந்த வயதில் இறுதிச் சுற்றில் இடம் பெற்றதே மிகப்பெரிய மைல்கல் என்கிறார் பயிற்றுநர் ரமேஷ். “அவருக்கு, வெற்றி, புகழ், பணம் இவற்றை விட சதுரங்க ஆட்டமே மிகவும் பிடித்தமானது. அவர் இப்போது தான் ஆட்டத்தை தொடங்கியுள்ளார். அவர் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது” என்கிறார் பயிற்றுநர் ரமேஷ்.

https://www.bbc.com/tamil/articles/c0j3jlk72v7o

பங்களாதேஷைவிட வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை ஐக்கிய அமெரிக்காவுக்கு இருந்தது - பயிற்றுநர் ஸ்டுவர்ட் லோ

2 weeks 2 days ago

Published By: VISHNU   27 MAY, 2024 | 07:58 PM

image

(நெவில் அன்தனி)

டெக்சாஸில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை வெல்ல வேண்டும் என்ற வேட்iகை பங்களாதேஷைவிட அமெரிக்க அணிக்கு  இருந்ததாக அணியின் தலைமைப் பயிற்றுநர் ஸ்டுவர்ட் லோ தெரிவித்துள்ளார்.

முதல் தடவையாக ஐசிசி முழு உறுப்பு நாடொன்றின் அணிக்கு எதிராக இருதரப்பு சர்வதேச ரி20 தொடரில் விளையாடிய ஐக்கிய அமெரிக்கா, முதல் இரண்டு போட்டிகளில் பங்களாதேஷை வெற்றிகொண்டு தொடரை கைப்பற்றியது.

முதல் இரண்டு போட்டிகளில் ஐக்கிய அமெரிக்கா முறையே 5 விக்கெட்களாலும் 6 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றிருந்தது.

எனினும் கடைசிப் போட்டியில் பங்களாதேஷ் அபாரமாக விளையாடி 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

எனினும் தொடரை 2 - 1 ஆட்டக் கணக்கில் ஐக்கிய அமெரிக்கா தனதாக்கிக்கொண்டது.

கடைசிப் போட்டிக்குப் பின்னர் கருத்து வெளியிட்டு ஸ்டுவர்ட் லோ, 'முதல் இரண்டு போட்டிகளில் எங்களுக்கு அதிக வைராக்கியமும் ஆர்வமும் இருந்தது. எதிரணியை விட நாங்கள் சற்று அதிகமாக திறமையை வெளிப்படுத்த விரும்பினோம். ஆனால், கடைசிப்  போட்டி   எங்களுக்கு பாதகமாக அமைந்துவிட்டது. நாங்கள் ஆசுவாசமாக விளையாடினோம் போலும். பங்களாதேஷ்  திறமையாக விளையாடியதுடன் இந்த உற்சாகத்துடன் உலகக் கிண்ணத்தை எதிர்கொள்ளும்' என்றார்.

'பங்களாதேஷுடனான இந்தத் தொடர் எமது அணியை உலகக் கிண்ணத்திற்கு தயார்படுத்த பெரிதும் உதவியது. வெறுமனே வலைகளில் பயிற்சி பெறுவதைவிட இவ்வாறான போட்டிகளில் விளையாடுவது மிகவும் நல்லது. ஒற்றைப் போட்டிகளில் எதுவும் நிகழலாம். அப்படித்தான் உலகக் கிண்ணப் போட்டியும் அமையும். யாரும் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாக போட்டியில் பங்குபற்ற முடியாது' என அவர் மேலும் குறி;ப்பிட்டார்.

முதல் இரண்டு போட்டிகளிலும் அதி சிறந்த வீரர்களுடன் விளையாடிய ஐக்கிய அமெரிக்கா, கடைசிப் போட்டியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது.

அணித் தலைவர் மொனாங்க் படேல், ஆரம்ப வீரர் ஸ்டீவன் டெய்லர், சகலதுறை வீரர் ஹர்மீத் சிங், வேகப்பந்து வீச்சாளர் அலி கான் ஆகிய பிரதான வீரர்களுக்கு ஓய்வு அளித்ததன் மூலம் மற்றைய வீரர்களின் திறமையை அமெரிக்கா பரீட்சித்துப் பார்த்தது.

ஆனால், கடைசிப் போட்டியில் முஸ்தாபிஸுர் ரஹ்மான் மிகத் திறமையாக பந்துவீசி 6 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து பங்களாதேஷுக்கு உற்சாகம் கொடுக்கும் வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

எவ்வாறாயினும் பங்களாதேஷை எந்த வகையிலும் ஸ்டுவர்ட் லோ குறைத்து மதிப்பிடவில்லை.

மாறாக, உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் மீண்டுவரக்கூடிய அணி என அவர் கூறினார்.

இதேவேளை, மத்திய வரிசையில் ஏற்பட்ட சரிவே மூன்றாவது போட்டியில் பங்களாதேஷிடம் அமெரிக்கா தோல்வி அடைய காரணம் என மொனாங்க் பட்டேலுக்கு பதிலாக அமெரிக்க அணித் தலைவராக விளையாடிய ஆரோன் ஜோன்ஸ் தெரிவித்தார்.

'எமது அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 46 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், ஆரம்ப வீரர்கள் ஆட்டம் இழந்ததும் எல்லாம் எமக்கு பாதகமாக அமைந்துவிட்டது' என்றார் ஆரோன் ஜோன்ஸ்.

'எமது அணி சிறந்ததாகும். அதனை உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான பங்களாதேஷுக்கு எதிராக வெளிப்படுத்தினோம். பாகிஸ்தானையோ அல்லது இந்தியாவையோ நாங்கள் வெற்றிகொண்டால் அதனை தலைகீழ் முடிவு என நான் கூறமாட்டேன். குறிப்பிட்ட நாளில் நாங்கள் திறமையாக விளையாடினோம் என்றே கூறுவேன். இது கிரிக்கெட்டில் நிகழக்கூடியது. ஏனெனில் பெரிய அணிகளும் தோல்வி அடையலாம்' என அவர் மேலும் கூறினார்.

https://www.virakesari.lk/article/184646

சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற இரத்தினபுரி இளைஞர்!

2 weeks 4 days ago
WhatsApp-Image-2024-05-29-at-12.46.00-2. சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற இரத்தினபுரி இளைஞர்!

இரத்தினபுரி, கஹாவத்த பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் எனும் 27 வயதுடைய இளைஞர், மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று  சாதனை படைத்துள்ளார்.

25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை மலேசியாவில், சர்வதேச சிலம்பம் போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், கட்டார், மலேசியா, டுபாய், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 600 இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.

இப் போட்டியில், இலங்கை சார்பாக கலந்து கொண்டிருந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் தங்கப்பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெறுமை சேர்த்துள்ளார்.

இரத்தினபுரி, கஹாவத்த, கட்டங்கி பகுதியைச் சேர்ந்த இவர், மலேசியாவுக்கு தொழில் நிமித்தமாக சென்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1384793

இலங்கையில் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற லைக்கா ஞானம் அறக்கட்டளை திட்டம் : ஜூலையில் பிரம்மாண்ட போட்டி: 55 நகரங்களிலிருந்து 440 அணிகள்

2 weeks 6 days ago
27 MAY, 2024 | 03:59 PM
image

லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து (FFSL) நாட்டின் காற்பந்துதுறையில் ஒரு புதிய மைல்கல்லை அடையும் முயற்சியாக 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டித் தொடர் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

IMG_4997.jpg

IMG_4999.jpg

இந்தப் போட்டிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் திங்கட்கிழமை (27 ) இடம்பெற்றது.

நிகழ்வில் லைக்கா குழுமத்தின்  ஸ்தாபகத் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான அல்லிராஜா சுபாஸ்கரன், லைக்கா ஹெல்த்தின் தலைவரும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான பிரேமா சுபாஸ்கரன், லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி, இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் மற்றும் லைக்கா குழுமத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

IMG_5019.jpg

இவ்விடயம் தொடர்பாக லைக்கா ஞானம் அறக்கட்டளையுடன் இணைந்து இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஆசியப் பிராந்தியத்தில் காற்பந்துத்துறையினை உயர்தரத்தில் வலுப்படுத்தும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொழில்முறை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை இணைத்துக்கொண்டு இளம் வீரர்கள் தேசிய அணியை அடைய தெளிவான பாதையை வழங்குவதை குறித்த செயற்றிட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தில் நாடளாவிய ரீதியில் 55 நகரங்களில் இருந்து 19 வயதிற்குட்பட்ட 440 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், குறித்த சுற்றுப்போட்டியில் முதற்கட்டத்தில் 11,000 வீரர்கள், 2,500 விளையாட்டுக் கழகங்களின் அதிகாரிகள், 1,000க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் பங்குபெறவுள்ளனர்.

போட்டியின் இறுதிக் கட்டம் 24 மாவட்ட அணிகளில் முடிவடைவதுடன், சிறந்த அணிகள் தங்கள் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இறுதிக்கிண்ணத்திற்காக மோதவுள்ளன.

IMG_5038.jpg

குறித்த காற்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கவுள்ளதுடன், இதற்கு தேசிய மற்றும் சர்வதேச அனுசரணையாளர்கள் அனுசரணை வழங்குகின்றனர்.

லைக்கா குழுமத்தின் நிறுவனரும்,  தலைவருமான, அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன்  ஆகியோரால் 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லைக்கா ஞானம் அறக்கட்டளையானது இலங்கையின் இளைஞர் யுவதிகளை காற்ப்பந்தாட்டத்துறையில் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை காற்பந்தாட்டச் சம்மேளனத்துடன் தற்போது கைகோர்த்துள்ளது.

IMG_5015.jpg

IMG_5008.jpg

இச்செயற்திட்டத்தின்  ஊடாக லைக்கா ஞானம் அறக்கட்டளையானது அனைத்து சமூகத்தினருக்கும் காற்பந்து விளையாட்டை நீண்ட காலத்திற்கு ஊக்குவிப்பதற்கு உறுதிபூண்டுள்ளது.

லைக்கா ஞானம் அறக்கட்டளையானது, சுகாதாரம், கல்வி, விவசாயம், இளைஞர் வலுவூட்டல், மற்றும் சமூக மேம்பாடு போன்ற முக்கியமான துறைகளில் கவனம் செலுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் சமூக வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

குறித்த காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை நடத்துவதற்கு பிரதான பங்காளராக லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விளங்குவதுடன், ஊடக மற்றும் தனியார் அனுசரணை நிறுவனங்களும் இணைந்து கொண்டுள்ளன” எனக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை  அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.

IMG_5052.jpg

சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.

(படப்பிடிப்பு எஸ். சுஜீவகுமார்)

https://www.virakesari.lk/article/184617

விமல் யோகநாதன் - இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் முதல் தமிழ் தொழில்முறை வீரர்

1 month ago

Published By: RAJEEBAN   16 MAY, 2024 | 04:35 PM

image
 

18 வயது விமல் யோகநாதன் சமீபத்தில் பான்ஸ்லி  கழகத்தில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்- இதன் மூலம் இங்கிலாந்து கால்பாந்தாட்ட அணிகளில் விளையாடும் முதலாவது தமிழ் தொழில்சார் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தனது பயணம் குறித்து தமிழ் கார்டியனுடன் அவர் தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.

wimal_5.jpeg

வேல்ஸின் சிறிய கிராமத்திலிருந்து விமல் யோகநாதன் படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக முன்னேறிச் சென்றுள்ளார்.

இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகப்பெரிய நாள், கடந்த பத்துவருடங்களாக உழைத்த உழைப்பின் உச்சக்கட்டம் இது வரவிருக்கும் ஒரு நீண்டவாழ்க்கையின் ஆரம்பம்  நான் இது குறித்து பெருமைப்படுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹோலிவெல் லெய்சர்  நிலையத்தின் உள்ளரங்கில் கால்பந்து விளையாடும் போது நான்குவயது சிறுவன், பின்னர் பிரெஸ்டேடைன் லிவர்பூல் அக்கடமிகளுக்கு விளையாடினான், தற்போது  பார்ன்ஸ்லி அணிக்காக தனது முதலாவது தொழில்முறை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளான்.

wimal_7.jpeg

விமல் தனது பெற்றோரிடமிருந்து கிடைத்த ஆதரவு குறித்து இவ்வாறு தெரிவித்தான்.

அவர்கள் அற்புதமான ஆதரவை வழங்கினார்கள், கடந்த பத்து பதினொரு வருடங்களாக அவர்கள் நாளாந்தம் என்னை பயிற்சிகளிற்காக பயிற்சிகள் இடம்பெறும் பகுதிகளிற்கு வாகனத்தில் அழைத்து சென்றார்கள் நான் விளையாடும் போதெல்லாம் சமூகமளித்தார்கள் என அவன் தெரிவித்தான்.

wimal_6.jpeg

சிறுவயதில் தனது தாயார் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு எப்படி தன்னை பயிற்சிகள் இடம்பெறும் இடங்களிற்கு இழுத்துச்சென்றார் என்பதையும் நினைவு கூர்ந்தான் விமல்.

விமலிற்கு கால்பந்தாட்டம் மிகவும் பிடித்தமான விடயமாக காணப்பட்டது, ஆனால் அவனிற்குள் இருந்த நான்கு வயது சிறுவன் பயிற்சிகள் உடற்பயிற்சிகள் போன்றவற்றை விரும்பவில்லை.

பெற்றோர் என்னை இழுத்துக்கொண்டு சென்றது நினைவிலிருக்கின்றது, ஆனால் கால்பந்தாட்டத்தில் ஈடுபடத்தொடங்கியதும் நான் அதனை நேசிக்கத் தொடங்கினேன் என அவன் தெரிவித்தான்.

கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பநாட்களில் விங்கெர் ஸ்டிரைக்கராக விளையாடிய விமல் தற்போது பார்ன்ஸ்லியில்  மிட்பீல்ட் விளையாடுகின்றார்.

அவர் தனது பயிற்சிகள் தொடர்பில் பின்பற்றிய ஒழுக்க நெறி, மீள்எழுச்சிதன்மை, மனவலிமை ஆகியவை திறமையுள்ள பல வீரர்களின் வாழ்க்கையில் பின்னடைவை ஏற்படுத்திய விடயங்களை இவர் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு உதவியுள்ளன.

இவர்   லிவர்பூலில் இருந்து விடுவிக்கப்பட்டதை  இவ்வாறுநினைவுகூர்ந்தார்.

wimal_3.jpeg

ஏழு வயது முதல் எனது வாழ்க்கையில் நான் அறிந்திருந்த தெரிந்திருந்த ஒரே விடயம் அதுதான் - அங்கு செல்வது பயிற்சி பெறுவதும் - அதனை இழந்ததும் அந்த நாட்கள் மிகவும் கடினமானவையாக காணப்பட்டன என அவர்தெரிவிக்கின்றார்.

பேர்ன்லேயில் சில காலம் விளையாடிய விமல் பின்னர் பார்ன்ஸ்யில் இணைந்து கொண்டார் அந்த கழகம் மே 2023 இல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான வரலாற்றுப்புகழ்மிக்க தொழில்சார் மேம்பாட்டு கிண்ணத்தை  வெல்வதற்கு காரணமானார்.

தன்னுடைய மீள்எழுச்சி தன்மை எங்கிருந்து வருகின்றது என்பது குறித்து  அவர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கின்றார்.

நான் கடினமாக முயற்சி செய்யவேண்டும் அவ்வளவுதான் - இருட்டின் இறுதியில்ஒளியிருக்கும் என்கின்றார் அவர்.

2023 இல் லீக் கப் போட்டியில் பார்ன்ஸ்லே அணியும் டிரன்மெரே அணியும் மோதியவேளை -விமல்  தனது முதல்தொழில்சார் போட்டியில் விளையாடியவேளை அந்த வெளிச்சத்தின் சில நொடிகளை அவதானிக்க முடிந்தது.

அதன் பின்னர் அவர் பிரதான அணிக்காக பல தடவைகள் விளையாடியுள்ளார்.

விமல் மீது அணியின் பயிற்றுவிப்பாளர் நெய்ல் கொலின்ஸ் வைத்துள்ள நம்பிக்கையை  இது வெளிப்படுத்தியுள்ளது.

பயிற்சியாளர்கள் சகவீரர்கள் உட்பட அனைவரும் நான் வளர்ச்சியின்  அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு எனக்கு  சிறந்த ஆதரவை வழங்கிவருகின்றனர், இது ஒரு சிறந்த அனுபவம்,  பிரதான அணியின் வீரர்கள் அனைவரும் நான் அணிக்குள் ஒன்றிணைவதற்கு உதவியாக இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

wimal_4.jpeg

பான்ஸ்லியின்    இடைக்கால கால்பந்து இயக்குநரான பொபி ஹொசல் விமலை பாராட்டியுள்ளார்.

கழகத்தின் 18 முதல் 21 வயதினருக்கான அணியின் நட்சத்திர வீரர் என விமலை பாராட்டியுள்ள அவர் யோகநாதனின் ஆக்ரோசமான விளையாட்டு பாணியை பாராட்டியுள்ளார். அவரது சிறந்த மனோநிலையை பாராட்டியுள்ள அவர் எப்போதும் கற்றுக்கொள்வதற்கும் தன்னை வளர்த்துக்கொள்வதற்குமான விருப்பத்தை  அவர் வெளிப்படுத்துகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்

tamil guardian

https://www.virakesari.lk/article/183707

இலங்கையுடனான டெஸ்ட் தொடருடன் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் ஓய்வு!

1 month ago
13 MAY, 2024 | 05:22 PM
image
 

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுநரான பிரண்டன் மெக்கல்லம் ஜேம்ஸ் அண்டர்சனுடன்  கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டிருந்ததாக இங்கிலாந்தின் 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டுள்ளது.

2025-26ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கு புதிய வேகப்பந்துவீச்சாளர்களை கண்டறியும் பணியில் இங்கிலாந்து அணி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜேம்ஸ் அண்டர்சனிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய சுற்றுப் பயணத்தின் முடிவில் அவர் தனது 700ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி 700 விக்கெட் மைல்கல்லை எட்டிய உலகின் மூன்றாவது வீரரானார்.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று போட்டிகள் கொண்ட போட்டித் தொடரில் இங்கிலாந்து பங்கேற்கவுள்ளது. அத்துடன், ஆகஸ்ட் மாதம் இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இதன் முதல் போட்டி அண்டர்சனின் சொந்த ஊர் மைதானமான ஓல்ட் டிரபோர்ட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டி அவரின் பிரியாவிடை போட்டியாக அமையும் என 'தி கார்டியன்' குறிப்பிட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் கால்பதித்த ஜேம்ஸ் அண்டர்சன், 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுக்களை வீழ்த்தி  அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 

இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

https://www.virakesari.lk/article/183426

யாழ்ப்பாணத்தில் பிறந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த முதல் தமிழர் - யார் இந்த விஜயகாந்த்?

1 month ago
T20 உலகக் கோப்பை இலங்கை குழாமில், முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர் இடம்பிடிப்பு

பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH

படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த்
10 மே 2024, 07:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் மேலதிக வீரர்களில் (மாற்று வீரர்கள் பட்டியல்) ஒருவராக தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக நேற்றைய தினம் முதல் தடவையாக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியை இதற்கு முன்னர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் பிறந்து யாழ்ப்பாணத்திலேயே வளர்ந்த ஒருவர் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் தடவையாகும்.

இருபதுக்கு இருபது உலகக் கோப்பை இலங்கை அணி

ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார். உபத் தலைவராக சரித் அசலங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குசல் மென்டீஸ், பெத்தும் நிஷாங்க, சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மேத்யூஸ், கமிது மென்டீஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, மகீஸ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

இலங்ங்கை அணியின் மேலதிக வீரர்களாக அசித்த பெர்ணான்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக்க ராஜபக்ஷ மற்றும் ஜனித்த லியனகே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

 
T20 உலகக் கோப்பை இலங்கை குழாமில், முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர் இடம்பிடிப்பு

பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH

படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த்
விஜயகாந்த் வியாஸ்காந்த் யார்?

யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி பிறந்தார் விஜயகாந்த் வியாஸ்காந்த்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், சிறு வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டியுள்ளார்.

சுழல் பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த், தனது பந்து வீச்சின் ஊடாக பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

இதனூடாக இலங்கையில் நடாத்தப்படும் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் ஜப்னா கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, 2020ம் ஆண்டு விளையாடினார்.

இதுவே அவரது முதலாவது இருபதுக்கு இருபது போட்டியாக அமைந்திருந்தது.

அதன்பின்னர் 2023ம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் சட்டோகிரம் சாலஞ்சர்சு அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார்.

விஜயகாந்த் வியாஸ்காந்த், 2024 சர்வதேச லீக் இருபதுக்கு இருபது சுற்றில் எம்ஐ எமிரேட்சு அணிக்காக விளையாடி, தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்திருந்தார்.

அதனையடுத்து, இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளுக்கான சந்தர்ப்பம் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு கிடைத்திருந்தது.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஐத்ராபாத் அணிக்காக விஜயகாந்த் வியாஸ்காந்த் தேர்வு செய்யப்பட்டு, விளையாடி வருகின்றார். சன்ரைசஸ் ஐத்ராபாத் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய வனிந்து ஹசரங்க உபாதைக்குள்ளாகி விலகியதால் அந்த இடத்தை விஜயகாந்த் வியாஸ்காந்த் நிரப்பியுள்ளார்.

 
இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழர்கள்
T20 உலகக் கோப்பை இலங்கை குழாமில், முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர் இடம்பிடிப்பு

பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH

படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த்

இலங்கை அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னர் மகாதேவன் சதாசிவம் உள்ளிட்டோர் விளையாடியிருந்த போதிலும், இலங்கை அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கப் பெற்றதன் பின்னர் சில வீரர்களே விளையாடியுள்ளனர்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, சர்வதேச ரீதியில் பல சாதனைகளை படைத்த தமிழ் வீரராக முத்தையா முரளிதரன் காணப்படுகின்றார்.

அத்துடன், 1983ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி வினோதன் ஜோன் விளையாடியுள்ளார்.

மேலும், ரசல் அர்னால்ட் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றுமொரு தமிழ் வீரராக காணப்படுகின்றார்.

முத்தையா முரளிதரன் மலையகத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், வினோதன் ஜோன் மற்றும் ரசல் அர்னால்ட் ஆகியோர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என கூறப்படுகின்றது.

எனினும், யாழ்ப்பாணத்தில் பிறந்து, யாழ்ப்பாணத்தில் வளர்ந்து, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாவது வீரராக விஜயகாந்த் வியாஸ்காந்த் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cq5n7098gzyo

களுத்தற, நிகம்போ அணிகளை வீழ்த்திய ஜெவ்னா, கண்டி அணிகள் அரை இறுதியில் மோதவுள்ளன

1 month 1 week ago
05 MAY, 2024 | 05:27 AM
image

(நெவில் அன்தனி)

லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா புட்போல் கப் (இலங்கை கால்பந்தாட்ட கிண்ணம்) நொக் அவுட் போட்டி மூலம் தேசிய மற்றும் முன்னாள் தேசிய வீரர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்களை இலங்கையில் சுமார் இரண்டரை வருடங்களின் பின்னர்  உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டியில்  காணக்கிடைத்தது.

லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப்பின் ஸதாபகரும் எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான சய்வ் யூசுப்பின் தனி முயற்சியாலும் சொந்த அனுசரணையாலும் இலங்கையில்   உள்ளூர்  கால்பந்தாட்டம் மீண்டும் மலர்ந்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

எட்டு அணிகள் பங்குபற்றும் இந்த நொக் அவுட் கால்பந்தாட்டத்தின் முதல் இரண்டு கால் இறுதிப் போட்டிகளில் களுத்தற, நிகம்போ அணிகளை வீழ்த்திய ஜெவ்னா, கண்டி அணிகள் முதலாவது அரை இறுதியில் மோதவுள்ளன.

சிட்டி புட்போல் திடலில் சனிக்கிழமை (05) நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் களுத்தற எவ்.சி. அணியிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட ஜெவ்னா எவ்.சி. அணி கடைசிக் கட்டத்தில் அன்தனி டிலக்சன் போட்ட கோலின் உதவியுடன் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

போட்டியின் 11ஆவது நிமிடத்தில் மொஹமத் ஹஸ்மீர் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு களுத்தற எவ்.சி.யை முன்னிலையில் இட்டார்.

சற்று நேரத்திற்குப் பின்னர் களுத்தற வீரர் மோஹமத் ரஹுமான் கோல் போட எடுத்த முயற்சி வீண்போனது.

இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஹஸ்மீரின் மற்றொரு முயற்சி கைகூடாமல் போனதுடன் அடுத்த நிமிடமே மறுபுறத்தில் அன்தனி டிலக்சன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி. சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார்.

இடைவேளை முடிந்த பின்னர் போட்டியின் 68ஆவது நிமிடத்தில் முன்னாள் தேசிய வீரர் செபமாலைநாயகம் ஞானரூபன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி.யை முன்னிலையில் இட்டார்.

போட்டியின் 68ஆவது நிமிடத்தில் ஜெவ்னா எவ்.சி. கோல்காப்பாளரின் கவனக்குறைவைப் பயன்படுத்தி மொஹமத் அஸ்மீர் கோல் நிலையை 2 - 2 என களுத்தற சார்பாக சமப்படுத்தினார்.

எவ்வாறாயினும் முழு நேரத்திற்கு ஒரு நிமிடம் இருந்தபோது அன்தனி டிலக்சன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி.யின் வெற்றியை உறுதிசெய்தார்.

வெற்றிபெற்ற ஜெவ்னா எவ்.சி. அணியில் செபமாலைநாயகம் ஜூட் சுபன் (தலைவர்), அவரது மூத்த சகோதரர் செபமாலைநாயகம் ஞானரூபன்,  அன்தனி   ஜெரின்சன், அன்தனி டிலக்சன், தர்மகுலநாதன் கஜகோபன், தியாகமூர்த்தி ஆர்த்திகன், பரமேஸ்வரன் பகலவன், விக்ணேஸ்வரராஜா கஜநாதன், நேசராசா அன்தனி ரமேஷ், சிவநேசன் மதிவதனன், ஜெயராசா தில்லைக்காந்தன், செலஸ்டீன் சிந்துஜன், அமலேஸ்வரன் அருள் ஜோசப், விஜயகுமார் விக்னேஷ், செபமாலைராசா ஜெயராஜ், வின்சன் கீதன் ஆகியோர் இடம்பெற்றனர். 

பயிற்றுநர்: ரட்னம் ஜஸ்மின்.

கண்டி  எவ்.சி. கோல் மழை பொழிந்து

நிகம்போ எவ்.சி.யை வீழ்த்தியது

கிட்டத்தட்ட தேசிய அணியாகக் காட்சி கொடுத்த கண்டி எவ்.சி. இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் கோல் மழை பொழிந்து 9 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நிகம்போ எவ்.சி.யை துவம்சம் செய்தது.

அசிக்கூர் ரஹ்மானை தலைவராகக் கொண்ட கண்டி எவ்.சி. அணியில் மூவரைத் தவிர மற்றைய அனைவரும் தேசிய வீரர்களாவர்.

கண்டி எவ்.சி. அணியின் பலத்திற்கு ஈடுகொடுப்பதில் நிகம்போ எவ்.சி. சிரமத்தை எதிர்கொண்டது. போதாக்குறைக்கு 32ஆவது நிமிடத்திலிருந்து நிகம்போ எவ்.சி. 10 வீரர்களுடன் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டது,

இப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கண்டி எவ்.சி. போட்டியின் 5ஆவது நிமிடத்தில் இப்ராஹிம் ஜிமோ போட்ட கோல் மூலம் முன்னிலை அடைந்தது.

போட்டியின் 32ஆவது நிமிடத்தில் 2ஆவது மஞ்சள் அட்டைக்கு இலக்கான என்.ஜே. பெர்னாண்டோ சிவப்பு அட்டையுடன் களம் விட்டகன்றார். அவர் ஒரு பெனல்டியை வழங்கிவிட்டே வேளியேறினார்.

அந்தப் பெனல்டியை மொஹமத் ஆக்கிப் பைஸர் கோல் ஆக்கினார்.

இடைவேளையின்போது கண்டி எவ்.சி. 2 - 0 என முன்னிலை வகித்தது.

இடைவேளைக்குப் பின்னர் சீரான இடைவெளியில் கண்டி எவ்.சி. கோல்களைப் போட்ட வண்ணம் இருந்தது.

மொஹமத் பஸால் (52 நி.), ஷெனால் சந்தேஷ் (59 நி.), ஆக்கிப் பைஸர் (64 நி.), இப்ராஹிம் ஜிமோ (81 நி.), அசிக்கூர் ரஹுமான் (82 நி., 90+6 நி.), மொஹமத் ரினாஸ் (90 நி.) ஆகியோர் கோல் மழை பொழிந்தனர்.

https://www.virakesari.lk/article/182705

ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இருபாலாரிலும் இந்தோனேசியாவின் ரொஹ்மாலியா உலக சாதனை

1 month 2 weeks ago

Published By: VISHNU

26 APR, 2024 | 08:26 PM
image

(நெவில் அன்தனி)

மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார்.

17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார்.

பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார்.

மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர்.

ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும்.

https://www.virakesari.lk/article/182055

பெண்கள் மட்டும் லண்டன் மரதன்: ஜெப்ச்சேர்ச்சேர் உலக சாதனை

1 month 3 weeks ago

Published By: VISHNU   22 APR, 2024 | 08:13 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய இராச்சியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லண்டன் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 16 நிமிடங்கள், 16 செக்கன்களில் நிறைவு செய்த ஒலிம்பிக் சம்பியன் கென்ய வீராங்கனை பெரெஸ் ஜெப்ச்சேர்ச்சேர், பெண்கள் மட்டும் (London Marathon Women's only) உலக சாதனையை நிலைநாட்டினார்.

london_marathon_peres_jipchirchir_world_

அப் போட்டியில் எதியோப்பியாவின் உலக சாதனையாளர் டிக்ஸ்ட் அசேஃபா முதல் தடவையாக லண்டன் மரதனில் வெற்றிபெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஏழு வருடங்கள் நீடித்த பெண்கள் மட்டும் உலக சாதனையை பெரெஸ் செப்ச்சேர்ச்சேர் முறியடித்து பெரும் புகழ்பெற்றார். 

london_women_marathon.png

லண்டன் மரதனின் பெரும் பகுதியில் கடுமையான போட்டி நிலவியது. ஆனால், கடைசி கட்டத்தில் முன்னிலை அடைந்த ஜெப்ச்சேர்சேர், 7 வருடங்களுக்கு முன்னர் மேரி கெய்ட்டானியினால் நிலைநாட்டப்பட்ட 2:17.01 என்ற பெண்கள் மட்டும் சாதனையை முறிடியத்தார்.

லண்டன் மரதனில் எதியோப்பிய வீராங்கனை டிக்ஸ்ட் அசேஃபா (2:16.24) இரண்டாம் இடத்தையும் கென்ய வீராங்கனை ஜொய்ஸ்லின் ஜெப்கோஸ்கெய் (2:16.24) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

ஆண்களுக்கான லண்டன் மரதன் ஓட்டம்

ஆண்களுக்கான லண்டன் மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி மாதம் கார் விபத்தில் பலியான முன்னாள் மரதன் உலக சாதனையாளர் கென்யாவின் கெல்வின் கிப்டுமுக்கு கௌரவஞ்சலி செலுத்தப்பட்டது.

london_marathon_alexander_mutiso_munyao.

ஆண்களுக்கான லண்டன் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 04 நிமிடங்கள், 15 செக்கன்களில் நிறைவுசெய்த மற்றொரு கென்யரான 27 வயதுடைய அலெக்ஸாண்டர் முட்டிசோ முனியாஓ வெற்றிபெற்றார்.

ஆனால் அவருக்கு வெற்றி இலகுவாக அமையவில்லை.

எதியோப்பியாவைச் செர்ந்த 41 வயதான கெனெனிசா பெக்கெலிடம் கடும் சவாலை முனியாஓ எதிர்கொண்டார்.

மூன்று தடவைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை சுவீகத்தவரும் 5 தடவைகள் உலக சம்பியனுமான பெக்கெலி இதுவரை லண்டன் மரதனில் வெற்றிபெற்றதில்லை.

ஆனால், தன்னைவிட 14 வயது குறைந்த முனியாஓவுக்கு கடும் சவாலாக விளங்கினார்.

முனியாஓவைவிட 14 செக்கன்கள் வித்தியாசத்திலேயே பெக்கெல் (2:04.15) இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

அப் போட்டியில் பெரிய பிரித்தானியாவைச் செர்ந்த எமில் கெயாரெஸ் (2:06.46) மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

https://www.virakesari.lk/article/181716

குகேஷ்: சதுரங்கத்தை பொழுதுபோக்காகத் தொடங்கி வரலாறு படைத்திருக்கும் தமிழ்நாட்டின் இளம் வீரர்

1 month 3 weeks ago
குகேஷ்

பட மூலாதாரம்,FIDE

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 22 செப்டெம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் 17 வயதான சதுரங்க கிராண்ட் மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான மிக இளைய போட்டியாளர் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்பட்டு மறுபகிர்வு செய்யப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற ‘தி கேண்டிடேட்’ போட்டியில் பெற்ற வெற்றி மூலம் சாதனைப் பயணத்தைத் தொடங்கினார் குகேஷ். ஆதன்பிறகு, டொராண்டோவில் நடந்த இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் போட்டியை ‘டிரா’ செய்தார்.

இருப்பினும், இறுதி முடிவுக்காக, அமெரிக்காவின் ஃபாபியானோ கருவானா மற்றும் ரஷ்யாவின் இயான் நெபோம்னியாச்சி ஆகியோர் விளையாடிய ஆட்டத்தின் முடிவுக்காக குகேஷ் காத்திருக்க வேண்டியிருந்தது.

இந்தப் போட்டி ‘டிரா’வில் முடிவடைந்த பின்னர், உலக செஸ் சாம்பியன்ஷிப்பிற்கான இளைய போட்டியாளராகத் தேர்வானார் குகேஷ்.

இந்திய சதுரங்க அரங்கில் ஒலிக்கும் முக்கியப் பெயர்களில் ஒன்று குகேஷ். சென்னையைச் சேர்ந்த 17 வயதான குகேஷ் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சதுரங்கம் ஆடி வருகிறார்.

குடும்பத்தில் சதுரங்கம் சொல்லித் தரவோ, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவோ சதுரங்க வீரர்கள் யாரும் இல்லை. சதுரங்கத்தின் மீது இயல்பாக உருவான தனது ஆர்வத்தின் காரணமாக தற்போது சர்வதேச அரங்குகளை எட்டியுள்ளார்.

பள்ளி மாணவரான குகேஷ் இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் என கூறிக் கொள்வதில் அவரது பெற்றோர்கள் மிகவும் பெருமை கொள்கின்றனர்.

 
சென்னை செஸ் வீரர் குகேஷ்
படக்குறிப்பு,கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் முதல்முறையாகக் கிடைத்தது.
பொழுதுபோக்காக ஆரம்பித்த விளையாட்டு

வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ். சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை நகர்வுகள், விதிகளை இப்படித்தான் அவர் கற்றுக் கொண்டார்.

தந்தை தன் அன்றாடப் பணியை முடித்து வரும் வரை பள்ளியில் தனியாக அமர்ந்திருக்க வேண்டாம் என்பதற்காக சதுரங்கப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஓரிரு மாதங்களிலேயே அவருக்கு இருக்கும் சதுரங்க ஆர்வத்தை அவரது பயிற்சியாளர் அறிந்து கொண்டார். அவரை சிறப்புப் பயிற்சிகளுக்கு அனுப்ப பெற்றோரிடம் வலியுறுத்தினார்.

அவரது ஆர்வம் சதுரங்கத்தில் அதிகரிக்கவே, அதிக நேரத்தை சதுரங்கம் ஆடுவதில் செலவழித்தார். அவரது பெற்றோர்களும் பள்ளியும் குகேஷின் ஆர்வத்தை அங்கீகரித்து அதற்கான ஒத்துழைப்பை வழங்கினர்.

“வார இறுதி நாட்களில் சதுரங்கப் போட்டி எங்கு நடைபெற்றாலும் அதில் பங்கேற்று வெற்றி பெற்றுவிடுவார். அந்தப் போட்டிகளுக்காகவே காத்திருப்பார். அவர் பெறும் ஒவ்வொரு பரிசுக்கும் அவரை மேடையில் ஏற்றி, பள்ளி அவரை ஊக்கப்படுத்தியது,” என்கிறார் குகேஷின் தந்தை ரஜினிகாந்த்.

 
சென்னை செஸ் வீரர் குகேஷ்
படக்குறிப்பு,குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார்.
மகனுக்காக பணியை கைவிட்ட தந்தை

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் அவருக்கு முதல்முறையாக கிடைத்தது. அது குகேஷை மிகவும் ஊக்கப்படுத்தியது என்கிறார் அவரது தந்தை.

குகேஷ் உடன் போட்டிகளில் விளையாடுபவர்கள் அவரைவிட வயதில் மூத்தவர்களாகவும், அதிக ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும் "குகேஷ் தனது ஆர்வம் மற்றும் திறமையின் காரணமாக போட்டிகளை எளிதாக வெல்ல முடிந்தது,” என்கிறார் ரஜினிகாந்த்.

குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார். சதுரங்கத்தில் குகேஷின் ஆர்வம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, கடந்த 2017ஆம் ஆண்டு தனது மருத்துவர் பணியைக் கைவிட்டார்.

“எல்லா நாடுகளுக்கும் குகேஷை பத்திரமாக அழைத்துச் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்வது குகேஷின் தந்தைதான். இதற்காகத் தனது பணியைக்கூட கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் நிறுத்திவிட்டார்.

"நான் குகேஷுக்கு தேவையான உளரீதியான ஆதரவைத் தருகிறேன்,” என்கிறார் குகேஷின் தாய் பத்மகுமாரி. மருத்துவரான அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

 
சென்னை செஸ் வீரர் குகேஷ்
ஹாட்ரிக் வெற்றி

கடந்த 2015ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நேஷனல் ஸ்கூல்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ். 2015ஆம் ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து அந்தப் பட்டத்தை வென்றார்.

குகேஷ் தற்போது இந்தியாவில் முதல் இடத்திலும் உலகத்தில் எட்டாவது இடத்திலும் உள்ளார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலோ தரவரிசையில் 2750 புள்ளிகளை கடந்த இளம் சதுரங்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவ்வளவு போட்டிகளை எதிர்கொண்டு, பதக்கங்களை பெற்று வரும் சென்னையைச் சேர்ந்த குகேஷ்-இன் குடும்பத்தில் இவரே முதல் சதுரங்க வீரர்.

“எனக்கு சதுரங்கம் தெரியாது. மிக அடிப்படையாக அதைப் பற்றி சில விஷயங்கள் தெரியும். இப்போதும்கூட எனக்கு அதைப் பற்றி தெரியாது. அவை எல்லாம் குகேஷும் அவரது பயிற்சியாளரும்தான் பேசிக் கொள்வார்கள். நான் அவரை போட்டிகளுக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பேன்,” என்கிறார் குகேஷின் தந்தை.

 
சென்னை செஸ் வீரர் குகேஷ்
படக்குறிப்பு,சதுரங்கத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதலிடத்தில் இருந்தவர் குகேஷ்.
நிறைவேறிய கனவு

சதுரங்க வீரர்கள் அனைவருக்கும் இருக்கும் கனவு கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது. குகேஷுக்கு இந்த கனவு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேறியது.

அவர், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அது மட்டுமல்லாமல், சதுரங்க வரலாற்றில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார்.

சதுரங்கத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதலிடத்தில் இருந்தவர் குகேஷ். ஆனால் சதுரங்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தால் தற்போது தினசரி பாடங்களைக் கற்பதில் இருந்து சற்று விலக்கு பெற்றுள்ளார்.

குகேஷின் இன்னொரு முகம்

போட்டிகளின்போது, பொதுவெளியில் காணப்படும் குகேஷுக்கு மற்றொரு முகம் இருக்கிறது என குகேஷை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் அவரது தந்தை.

“வெளியில் காணப்படுவது மிகவும் சாதுவான, அமைதியான குகேஷ். ஆனால், உண்மையில் அவன் மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புத் தனம் செய்து கொண்டு, விளையாட்டாக வீட்டில் இருப்பவர்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் சிறுவன்,” என்று கூறும் அவரது தந்தை, சதுரங்கப் போட்டிகளுக்குத் தயாராகும் நேரத்தில், குகேஷ் யாரிடமும் பேசமாட்டார்,” என்றும் தெரிவித்தார்.

போட்டிகளுக்குத் தயாராகும்போது தனது பயிற்சியாளரிடம் மட்டுமே குகேஷ் பேசுவார். “அவர் அருகில் அமர்ந்து நான் செல்ஃபோனில்கூட யாரிடமும் பேசமாட்டேன். அதுகூட அவரது கவனத்தை சிதறடிக்கும். அவரும் அதை விரும்ப மாட்டார்.

போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும்போது, போட்டிக்கு முன், சில வார்த்தைகள் தொலைபேசியில் தன் தாயிடம் பேசுவார். நான் கூடவே இருப்பதால் எனக்கு அதுகூட கிடைக்காது,” என பெருமையும் சிரிப்பும் கலந்து தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் குகேஷுன் தந்தை.

முதலில் உள்ளூர், வெளிமாநிலங்களில், தேசிய அளவில் என போட்டிகளில் பங்கேற்று வந்த குகேஷ், வெகு சீக்கிரமே சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற ஆரம்பித்தார்.

 
சென்னை செஸ் வீரர் குகேஷ்
படக்குறிப்பு,2023ஆம் ஆண்டு எலைட் நார்வே போட்டிகள் உட்பட 10 ஓபன் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார்.
குகேஷ் குவித்துள்ள பதக்கங்கள்

ஸ்பெயினில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அவர் உலக சாம்பியன் பட்டம் வென்றது அவரது சதுரங்க பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல். அதற்கு முன்பாக, 2016ஆம் ஆண்டில் காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

ஐரோப்பிய கிளப் கோப்பை எனப்படும் சதுரங்க வீரர்கள் முக்கியமாக கருதும் போட்டிகளில் 2021ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் போட்டிகளின் போது, மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டுள்ளார்.

குகேஷ் தனது வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் போட்டிகளில் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் ஓபன் போட்டிகளிலும் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.

பிரான்ஸில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் ஓபன் போட்டிகள், 2021ஆம் ஆண்டு நார்வே மாஸ்டர்ஸ் போட்டிகள், 2022ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற சாம்பியன் மெனார்கா போட்டிகள், 2023ஆம் ஆண்டு எலைட் நார்வே போட்டிகள் உட்பட 10 ஓபன் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார்.

இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும்போது சக போட்டியாளர்கள் இடையே மிகவும் ஆரோக்கியமான போட்டி நிலவும் எனக் குறிப்பிடுகிறார் அவரது தந்தை ரஜினிகாந்த்.

“போட்டிகளில் பங்கேற்கும் முன் அவ்வளவாகப் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் போட்டிகள் முடிந்த பிறகு, அனைத்து பிள்ளைகளும் ஒரே அறையில் குழுமி இரவெல்லாம் ஆட்டம் போடுவார்கள். எனினும் போட்டியின்போது நண்பரின் மீது கருணையே காட்டமாட்டார்கள்,” என்று புன்னகைக்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/cndedlg48k8o

எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி?

1 month 3 weeks ago

எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி?

ராஜன் குறை கிருஷ்ணன்

spacer.png

எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன். 

ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம். 

தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது.

அதிநாயக பிம்பமான நாயகன்

இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது. 

அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம். 

சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள்.

ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.   

சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன. 

இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.   

 

 
அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண்

இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார்.

ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர். 

கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும்.

மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும். 

விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன. 

கணியன் பூங்குன்றனின் குரல்

சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது. 

நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.   

விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு. 

 

https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni

Checked
Mon, 06/17/2024 - 07:18
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed