Aggregator

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும்; சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை

3 months 2 weeks ago

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியைசச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி தேர்தலைப் பொறுத்த வரை வடக்கு – கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோளாக இருக்கிறது.

ஜனநாயக தமழ் தேசியக் கூட்டணி பெரும்பாலன சபைளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உள்ளூராட்சி சபை அதிகாரம் என்பது வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் தங்களை தாங்கள் ஆளக் கூடிய வகையில் வாக்களிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள 300, 400 கிலோ மீற்றரில் இருக்கும் தேசிய சக்திகளிடம் கையளிக்காமல் உங்களுடன் இருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் கையளிக்க வேண்டும்.

அதன் மூலமே வடக்கு – கிழக்கின் இருப்பை தக்க வைக்க முடியும் எனத் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/316288

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பொதுத் திட்டங்களை வகுக்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 20 MAR, 2025 | 08:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இராணுவத்தில் இருந்து விலகியவர்கள் அனைவரும் பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முறையற்றது. சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பொது திட்டங்களை வகுக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை ஏற்றுமதியை இலக்காகக் கொண்டுள்ளதா அல்லது சேவை மற்றும் இறக்குமதி இலக்காகக் கொண்டுள்ளதா என்பதை அறிய முடியவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட நிலையில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் காலங்களில் 7 முதல் 8 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்வதாக குறிப்பிடப்படுகிறது. வரி அதிகரிப்பின் ஊடாக மாத்திரமே அரச வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இருப்பினும் அதற்குரிய சிறந்த திட்டங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவு ஒதுக்கீடுகள் மற்றும் அரச செலவுகளை அரசாங்கம் குறைத்துள்ளது. இது தேசிய பொருளாதாரத்துக்கு எவ்வாறு பங்களிப்பு செலுத்தும் என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும். தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் பொருளாதார கட்டமைப்புக்குள் உட்படுத்திக் கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் தற்போது விளங்கிக்கொண்டுள்ளது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தலைத்தூக்கியதை தொடர்ந்து இராணுவம் மற்றும் பொலிஸ் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தில் இருப்பவர்களில் எவரேனும் முறையற்ற வகையில் செயற்பட்டிருக்கலாம். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள். அதனை விடுத்து ஒட்டுமொத்த இராணுவத்தையும், பொலிஸாரையும் குற்றஞ்சாட்ட வேண்டாம். இராணுவத்தில் இருந்து விலகியவர்கள் அனைவரும் பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முறையற்றது. சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பொது திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/209776

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பொதுத் திட்டங்களை வகுக்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 2 20 MAR, 2025 | 08:41 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இராணுவத்தில் இருந்து விலகியவர்கள் அனைவரும் பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முறையற்றது. சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பொது திட்டங்களை வகுக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை ஏற்றுமதியை இலக்காகக் கொண்டுள்ளதா அல்லது சேவை  மற்றும் இறக்குமதி இலக்காகக் கொண்டுள்ளதா என்பதை அறிய முடியவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட நிலையில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.

பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் காலங்களில் 7 முதல் 8 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்வதாக குறிப்பிடப்படுகிறது. வரி  அதிகரிப்பின் ஊடாக மாத்திரமே அரச வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இருப்பினும்  அதற்குரிய   சிறந்த திட்டங்கள் ஏதும்  முன்வைக்கப்படவில்லை

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவு ஒதுக்கீடுகள் மற்றும் அரச செலவுகளை  அரசாங்கம் குறைத்துள்ளது. இது தேசிய பொருளாதாரத்துக்கு எவ்வாறு  பங்களிப்பு செலுத்தும் என்பதை அரசாங்கம்  தெளிவுப்படுத்த வேண்டும். தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் பொருளாதார கட்டமைப்புக்குள் உட்படுத்திக் கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் தற்போது விளங்கிக்கொண்டுள்ளது.

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தலைத்தூக்கியதை தொடர்ந்து இராணுவம் மற்றும் பொலிஸ் தொடர்பில் விசேட  கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  இராணுவத்தில் இருப்பவர்களில் எவரேனும்  முறையற்ற வகையில் செயற்பட்டிருக்கலாம். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள். அதனை விடுத்து ஒட்டுமொத்த இராணுவத்தையும், பொலிஸாரையும் குற்றஞ்சாட்ட வேண்டாம்.

இராணுவத்தில் இருந்து விலகியவர்கள் அனைவரும் பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முறையற்றது. சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு  பொது மன்னிப்பு வழங்குவதற்கான பொது திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/209776

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

3 months 2 weeks ago

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,NASA

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சாரதா வி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களைக் கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூமி வந்தடைந்தனர்.

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலத்தில் மொத்தம் 17 மணிநேரம் அவர்கள் பயணம் செய்துள்ளனர்.

ஆனால், ரஷ்யாவின் 'சோயுஸ்' விண்கலனால், அதே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு மூன்று மணிநேரத்தில் பூமிக்கு வந்தடைய முடியும்.

ஒரே இடத்திலிருந்து புறப்படும் இரண்டு விண்கலன்களுக்கு இடையே பயண நேரத்தில் ஏன் 14 மணி நேர வித்தியாசம் உள்ளது?

விண்கலன் பூமிக்குத் திரும்பும் நேரத்தை எவை தீர்மானிக்கின்றன?

விண்வெளிப் பயணங்கள் இயற்பியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டவை. விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது, விண்கலன்கள் விண்வெளியில் இருந்து நேரடியாகக் கீழே இறங்கி விடுவதில்லை.

அவர்கள் மெதுவாக வர வேண்டும், பத்திரமாகத் தரையிறங்க வேண்டும். இதற்குத் தேவையான நேரம் என்பது விண்கலத்தின் வடிவம், தரையிறங்கப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பொருத்து அமையும்.

டிராகன் மற்றும் சோயுஸ் விண்கலன்கள் இருவேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறுவது முதல் தரையிறங்குவதை வரை வெவ்வேறு கால அவகாசங்களை இரு விண்கலன்களும் கொண்டுள்ளன.

சோயுஸ் விண்கலன் எந்தக் கோணத்தில் பூமிக்கு திரும்பும்?

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,NASA

ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் 1960களில் வடிவமைக்கப்பட்டது. விண்வெளி வீரர்களை விரைவாக பூமிக்குக் கொண்டு வரும் சிறிய கடினமான விண்கலன் வடிவத்தைக் கொண்டது. இதில் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் மூன்று பேர் மட்டுமே பயணம் செய்யலாம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிறகு, அந்த விண்கலன் செங்குத்தான பாதையில் பூமியை நோக்கிப் பயணிக்கும். அதன் மூலம், மூன்றே மணிநேரத்தில் விண்வெளி வீரர்களை பூமியில் தரையிறக்கிவிடும்.

"கஜகஸ்தானில் உள்ள புல்வெளிப் பரப்பில் தரையிறங்குவது மிகவும் விரைவாக மூன்றரை மணிநேரத்துக்கு உள்ளாக நடைபெறும் நிகழ்வு," என்று ஐரோப்பிய விண்வெளி மையம் சோயுஸ் விண்கலன் குறித்துக் கூறுகிறது.

சோயுஸ் விண்கலனில் உள்ள மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகள் பூமிக்குள் நுழையும்போது எரிந்துவிடும். ஒரு பகுதி மட்டுமே தரையிறங்கும். தரையிறங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக நான்கு பாராசூட்கள் விரியும்.

முதலில் இரண்டு பாராசூட்கள் விரியும். பிறகு பெரிதாக உள்ள மூன்றாவது பாராசூட் விரியும். இதன் மூலம் விண்கலனின் வேகம் நொடிக்கு 230 மீட்டர் என்பதில் இருந்து நொடிக்கு 80 மீட்டர் என்று குறையும்.

கடைசியாக நான்காவது பாராசூட் விரியும். இது மூன்றாவது பாராசூட்டைவிட 40 மடங்கு பெரியது. விண்கலன் நேராகத் தரையிறங்கும் வகையில் அதன் சாய்வு சரி செய்யப்படும். மேலும் விண்கலனின் வேகம் நொடிக்கு 7.3 மீட்டராகக் குறைக்கப்படும்.

இருப்பினும், இதுவும் தரையிறங்கப் பாதுகாப்பற்ற அதிக வேகம்தான். அதைக் குறைப்பதற்காக, தரையிறங்குவதற்கு ஒரு நொடி முன்பாக, விண்கலனின் அடிப்பகுதியில் இரண்டு இயந்திரங்கள் எரியத் தொடங்கும். இவை விண்கலனின் வேகத்தை மேலும் குறைக்கும்.

சோயுஸ் விண்கலன் தரையிறங்கும்போது என்ன ஆகும்?

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலன் கடலில் இறங்கிய காட்சி

சோயுஸ் தனது இயந்திரங்களை எரியூட்டி வேகத்தைக் குறைத்து, பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகுகிறது. பிறகு பூமியின் வளிமண்டலத்துக்குள் செங்குத்தான கோணத்தில் நுழையும்.

செங்குத்தாக உள்ளே நுழையும்போது, காற்றின் எதிர்ப்புவிசை காரணமாக அதிவேகமாக வந்து கொண்டிருக்கும் விண்கலனின் வேகம் குறைக்கப்படும்.

இந்தச் செயல் அதிக வெப்பம் மற்றும் விசைகளை விண்கலத்தின் மீது உருவாக்கும். இந்த வெப்பத்திலிருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாக்க வெப்பப் பாதுகாப்பான் உதவும். ஆனால் அந்தப் பாதுகாப்பான்கள் ஈர்ப்பு விசையைவிடப் பல மடங்கு வலுவான சக்தியை எதிர்கொள்ளும்.

வளிமண்டலம், விண்கலனின் வேகத்தைக் குறைத்த பிறகு, சோயுஸ் தனது பாராசூட்களை விரிக்கத் தொடங்கும். இது விண்கலனின் வேகத்தை மேலும் குறைக்கும். சோயுஸ் விண்கலனைப் பொறுத்தவரை, அதன் சாதகமான அம்சம் அதன் வேகம். விண்வெளி கதிர்வீச்சு மற்றும் குறைந்த ஈர்ப்பு விசையின் தாக்கத்தை விண்வெளி வீரர்கள் குறைவான நேரமே அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால், அதன் தரையிறக்கம் மிகக் கடுமையாக இருக்கும்.

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,EUROPEAN SPACE AGENCY

படக்குறிப்பு, சோயுஸ் விண்கலன் தரையிறங்கும் நிகழ்வு

டிராகன் விண்கலன் எந்தக் கோணத்தில் பூமிக்கு திரும்பும்?

ஏழு பேரை ஏற்றிச் செல்லும் வகையிலான டிராகன் விண்கலம் தரையிறங்குவதில் வேறு மாதிரியான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. பூமிக்குத் திரும்பும்போது வேகமான, செங்குத்தான பயணத்திற்குப் பதிலாக, மெதுவாக, படிப்படியான பயணத்தை அது மேற்கொள்கிறது.

பாதுகாப்பு மற்றும் வசதியை முன்னிலைப்படுத்தி, பூமிக்குத் திரும்பும் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிராகன் விண்கலன் தனது சுற்றுவட்டப் பாதையைச் சரி செய்ய மட்டுமே பல மணிநேரம் எடுத்துக் கொள்ளும். டிராகன் விண்கலனில் உள்ள 16 டிராகோ த்ரஸ்டர்கள் எனும் இயந்திரங்கள் இதைச் செய்யும். இதனால் திட்டத்தைக் கட்டுப்படுத்துவோர் தரையிறங்குதலின்போது சீரான நிலைமைகள் இருப்பதை உறுதிசெய்ய உதவுகிறது.

சோயுஸ் விண்கலன் போலன்றி, டிராகன் விண்கலன் பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும்போது சாய்வான கோணத்தில் இருக்கும். இதனால், வளிமண்டலத்தை எதிர்கொள்ளும்போது உருவாகும் வெப்பம் பரவலாகவும், நீண்ட நேரமும் கிடைக்கும். இதன் மூலம் விண்வெளி வீரர்கள் மீதான தாக்கம் குறைவாக இருக்கும். அதோடு, விண்கலன் தனது வேகத்தை மெதுவாகக் குறைத்துக் கொள்ளும்.

வளிமண்டலத்திற்குள் நுழைந்த பிறகு விண்கலனை நிலையாக வைத்துக் கொள்ள இரண்டு பெரிய பாராசூட்கள் உள்ளன. இது தவிர, தரையிறங்குவதற்கு முன்பாக விண்கலனின் வேகத்தைக் குறைக்க நான்கு பாராசூட்கள் உள்ளன.

தரையிறங்குதல் உத்தியில் உள்ள வேறுபாடுகள் என்ன?

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,NASA

சோயுஸ் விண்கலன் நிலபரப்பில் தரையிறங்கும், ஆனால் ட்ராகன் கடல் மீது தரையிறங்கும். சோயுஸ் வழக்கமாக ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள கஜகஸ்தான் நாட்டின் பரந்த புல்வெளிகளில் தரையிறங்கும்.

டிராகன், கடலின் நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திற்கு அருகிலுள்ள கடல் பரப்பில் தரையிறங்கும்.

நிலத்தில் அல்லாமல் நீரில் தரையிறங்குவதற்கு அதிக ஏற்பாடுகள் தேவைப்படும். கடலில் இருந்து விண்கலனையும் விண்வெளி வீரர்களையும் மீட்பதற்கு நிறைய ஏற்பாடுகள் தேவை.

தண்ணீரில் விண்கலன் எங்கு தரையிறங்கும் என்று கணிக்கப்படுகிறதோ அதற்கு அருகில் படகுகளில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அவர்கள் விண்கலனுக்கு அருகில் வந்து, விண்கலன் மீது ஏதேனும் நச்சுக் கதிர்கள் இருக்கின்றனவா என்று சோதனை செய்ய வேண்டும். பிறகு விண்கலனை அருகிலுள்ள மீட்புத் தளத்திற்குக் கொண்டு சென்று, அங்கு வைத்து விண்வெளி வீரர்களை வெளியே கொண்டுவர வேண்டும். தரையிறங்கும் இடத்தின் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முடியும் என்பதே இதன் சாதகமான அம்சம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cedl4635d19o

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களைக் கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூமி வந்தடைந்தனர். அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலத்தில் மொத்தம் 17 மணிநேரம் அவர்கள் பயணம் செய்துள்ளனர். ஆனால், ரஷ்யாவின் 'சோயுஸ்' விண்கலனால், அதே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு மூன்று மணிநேரத்தில் பூமிக்கு வந்தடைய முடியும். ஒரே இடத்திலிருந்து புறப்படும் இரண்டு விண்கலன்களுக்கு இடையே பயண நேரத்தில் ஏன் 14 மணி நேர வித்தியாசம் உள்ளது? விண்கலன் பூமிக்குத் திரும்பும் நேரத்தை எவை தீர்மானிக்கின்றன? விண்வெளிப் பயணங்கள் இயற்பியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டவை. விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது, விண்கலன்கள் விண்வெளியில் இருந்து நேரடியாகக் கீழே இறங்கி விடுவதில்லை. அவர்கள் மெதுவாக வர வேண்டும், பத்திரமாகத் தரையிறங்க வேண்டும். இதற்குத் தேவையான நேரம் என்பது விண்கலத்தின் வடிவம், தரையிறங்கப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பொருத்து அமையும். டிராகன் மற்றும் சோயுஸ் விண்கலன்கள் இருவேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறுவது முதல் தரையிறங்குவதை வரை வெவ்வேறு கால அவகாசங்களை இரு விண்கலன்களும் கொண்டுள்ளன. சுனிதா வில்லியம்ஸின் விண்கலத்தைச் சுற்றி வலம் வந்த டால்பின்கள் சுனிதா வில்லியம்ஸ் பயணித்த டிராகன் விண்கலம் திடீரென 7 நிமிடங்கள் பூமியுடன் தொடர்பை இழந்தது ஏன்? சுனிதா வில்லியம்ஸ்: 'விண்வெளியில் எப்போதும் பதற்றம், குறைவான தூக்கம்' - 12 ஆண்டுகளுக்கு முன் என்ன கூறினார்? பத்திரமாக பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் - கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன? சோயுஸ் விண்கலன் எந்தக் கோணத்தில் பூமிக்கு திரும்பும்? பட மூலாதாரம்,NASA ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் 1960களில் வடிவமைக்கப்பட்டது. விண்வெளி வீரர்களை விரைவாக பூமிக்குக் கொண்டு வரும் சிறிய கடினமான விண்கலன் வடிவத்தைக் கொண்டது. இதில் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் மூன்று பேர் மட்டுமே பயணம் செய்யலாம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிறகு, அந்த விண்கலன் செங்குத்தான பாதையில் பூமியை நோக்கிப் பயணிக்கும். அதன் மூலம், மூன்றே மணிநேரத்தில் விண்வெளி வீரர்களை பூமியில் தரையிறக்கிவிடும். "கஜகஸ்தானில் உள்ள புல்வெளிப் பரப்பில் தரையிறங்குவது மிகவும் விரைவாக மூன்றரை மணிநேரத்துக்கு உள்ளாக நடைபெறும் நிகழ்வு," என்று ஐரோப்பிய விண்வெளி மையம் சோயுஸ் விண்கலன் குறித்துக் கூறுகிறது. சோயுஸ் விண்கலனில் உள்ள மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகள் பூமிக்குள் நுழையும்போது எரிந்துவிடும். ஒரு பகுதி மட்டுமே தரையிறங்கும். தரையிறங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக நான்கு பாராசூட்கள் விரியும். முதலில் இரண்டு பாராசூட்கள் விரியும். பிறகு பெரிதாக உள்ள மூன்றாவது பாராசூட் விரியும். இதன் மூலம் விண்கலனின் வேகம் நொடிக்கு 230 மீட்டர் என்பதில் இருந்து நொடிக்கு 80 மீட்டர் என்று குறையும். கடைசியாக நான்காவது பாராசூட் விரியும். இது மூன்றாவது பாராசூட்டைவிட 40 மடங்கு பெரியது. விண்கலன் நேராகத் தரையிறங்கும் வகையில் அதன் சாய்வு சரி செய்யப்படும். மேலும் விண்கலனின் வேகம் நொடிக்கு 7.3 மீட்டராகக் குறைக்கப்படும். இருப்பினும், இதுவும் தரையிறங்கப் பாதுகாப்பற்ற அதிக வேகம்தான். அதைக் குறைப்பதற்காக, தரையிறங்குவதற்கு ஒரு நொடி முன்பாக, விண்கலனின் அடிப்பகுதியில் இரண்டு இயந்திரங்கள் எரியத் தொடங்கும். இவை விண்கலனின் வேகத்தை மேலும் குறைக்கும். சோயுஸ் விண்கலன் தரையிறங்கும்போது என்ன ஆகும்? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலன் கடலில் இறங்கிய காட்சி சோயுஸ் தனது இயந்திரங்களை எரியூட்டி வேகத்தைக் குறைத்து, பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகுகிறது. பிறகு பூமியின் வளிமண்டலத்துக்குள் செங்குத்தான கோணத்தில் நுழையும். செங்குத்தாக உள்ளே நுழையும்போது, காற்றின் எதிர்ப்புவிசை காரணமாக அதிவேகமாக வந்து கொண்டிருக்கும் விண்கலனின் வேகம் குறைக்கப்படும். இந்தச் செயல் அதிக வெப்பம் மற்றும் விசைகளை விண்கலத்தின் மீது உருவாக்கும். இந்த வெப்பத்திலிருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாக்க வெப்பப் பாதுகாப்பான் உதவும். ஆனால் அந்தப் பாதுகாப்பான்கள் ஈர்ப்பு விசையைவிடப் பல மடங்கு வலுவான சக்தியை எதிர்கொள்ளும். வளிமண்டலம், விண்கலனின் வேகத்தைக் குறைத்த பிறகு, சோயுஸ் தனது பாராசூட்களை விரிக்கத் தொடங்கும். இது விண்கலனின் வேகத்தை மேலும் குறைக்கும். சோயுஸ் விண்கலனைப் பொறுத்தவரை, அதன் சாதகமான அம்சம் அதன் வேகம். விண்வெளி கதிர்வீச்சு மற்றும் குறைந்த ஈர்ப்பு விசையின் தாக்கத்தை விண்வெளி வீரர்கள் குறைவான நேரமே அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால், அதன் தரையிறக்கம் மிகக் கடுமையாக இருக்கும். பட மூலாதாரம்,EUROPEAN SPACE AGENCY படக்குறிப்பு, சோயுஸ் விண்கலன் தரையிறங்கும் நிகழ்வு டிராகன் விண்கலன் எந்தக் கோணத்தில் பூமிக்கு திரும்பும்? ஏழு பேரை ஏற்றிச் செல்லும் வகையிலான டிராகன் விண்கலம் தரையிறங்குவதில் வேறு மாதிரியான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. பூமிக்குத் திரும்பும்போது வேகமான, செங்குத்தான பயணத்திற்குப் பதிலாக, மெதுவாக, படிப்படியான பயணத்தை அது மேற்கொள்கிறது. பாதுகாப்பு மற்றும் வசதியை முன்னிலைப்படுத்தி, பூமிக்குத் திரும்பும் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிராகன் விண்கலன் தனது சுற்றுவட்டப் பாதையைச் சரி செய்ய மட்டுமே பல மணிநேரம் எடுத்துக் கொள்ளும். டிராகன் விண்கலனில் உள்ள 16 டிராகோ த்ரஸ்டர்கள் எனும் இயந்திரங்கள் இதைச் செய்யும். இதனால் திட்டத்தைக் கட்டுப்படுத்துவோர் தரையிறங்குதலின்போது சீரான நிலைமைகள் இருப்பதை உறுதிசெய்ய உதவுகிறது. சோயுஸ் விண்கலன் போலன்றி, டிராகன் விண்கலன் பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும்போது சாய்வான கோணத்தில் இருக்கும். இதனால், வளிமண்டலத்தை எதிர்கொள்ளும்போது உருவாகும் வெப்பம் பரவலாகவும், நீண்ட நேரமும் கிடைக்கும். இதன் மூலம் விண்வெளி வீரர்கள் மீதான தாக்கம் குறைவாக இருக்கும். அதோடு, விண்கலன் தனது வேகத்தை மெதுவாகக் குறைத்துக் கொள்ளும். வளிமண்டலத்திற்குள் நுழைந்த பிறகு விண்கலனை நிலையாக வைத்துக் கொள்ள இரண்டு பெரிய பாராசூட்கள் உள்ளன. இது தவிர, தரையிறங்குவதற்கு முன்பாக விண்கலனின் வேகத்தைக் குறைக்க நான்கு பாராசூட்கள் உள்ளன. தரையிறங்குதல் உத்தியில் உள்ள வேறுபாடுகள் என்ன? பட மூலாதாரம்,NASA சோயுஸ் விண்கலன் நிலபரப்பில் தரையிறங்கும், ஆனால் ட்ராகன் கடல் மீது தரையிறங்கும். சோயுஸ் வழக்கமாக ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள கஜகஸ்தான் நாட்டின் பரந்த புல்வெளிகளில் தரையிறங்கும். டிராகன், கடலின் நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திற்கு அருகிலுள்ள கடல் பரப்பில் தரையிறங்கும். நிலத்தில் அல்லாமல் நீரில் தரையிறங்குவதற்கு அதிக ஏற்பாடுகள் தேவைப்படும். கடலில் இருந்து விண்கலனையும் விண்வெளி வீரர்களையும் மீட்பதற்கு நிறைய ஏற்பாடுகள் தேவை. தண்ணீரில் விண்கலன் எங்கு தரையிறங்கும் என்று கணிக்கப்படுகிறதோ அதற்கு அருகில் படகுகளில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவர்கள் விண்கலனுக்கு அருகில் வந்து, விண்கலன் மீது ஏதேனும் நச்சுக் கதிர்கள் இருக்கின்றனவா என்று சோதனை செய்ய வேண்டும். பிறகு விண்கலனை அருகிலுள்ள மீட்புத் தளத்திற்குக் கொண்டு சென்று, அங்கு வைத்து விண்வெளி வீரர்களை வெளியே கொண்டுவர வேண்டும். தரையிறங்கும் இடத்தின் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முடியும் என்பதே இதன் சாதகமான அம்சம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cedl4635d19o

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்

3 months 2 weeks ago
கிளிநொச்சியில் ஒரேயொரு வேட்புமனு 25 மாவட்டங்களிலும் 107 கட்சிகள்,49 சுயேச்சை குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு கட்சியும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. அங்கு சுயேச்சை குழுவொன்று மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. https://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%A9/72-354140

“சுய இன்பத்தில் பெண்கள் ஈடுபடுவது குற்றம் அல்ல”

3 months 2 weeks ago
60 களின் கடைசியிலேயே வேம்படி விடுதியில் இதுகள் நடந்தாக பேசுவார்கள். அண்டவெயரே போடாத அந்தக் காலத்தில் விபரங்கள் புரியவில்லை.

மனம்பேரி, இசைப்பிரியா படுகொலைகள் தொடர்பில் சபையில் கொதித்தெழுந்த சிறீதரன் எம்.பி.

3 months 2 weeks ago
இலங்கை இராணுவத்தினரால் பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரேமாவதி மனம்பேரி மற்றும் இசைப்பிரியா உள்ளிட்டவர்களுக்கான நீதி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போது மேற்கண்ட விடயம் தொடர்பில் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் “பட்டலந்த என்பது, 1988 – 1989 காலப்பகுதியில் நாட்டில் இருந்த ஜேவிபி போராளிகளை கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இடம். அது தொடர்பிலான ஆணைக்குழு அறிக்கை இவ்வளவு காலம் கிடப்பில் இருந்து தற்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச நேர்காணலினால் பேசுபொருளாகியுள்ளது. இந்த படுகொலைகள் தொடர்பாக, அக்காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வரை சமர்ப்பித்திருந்தார். ஆனால், அப்போதும் இதற்கான தீர்வுகள் எட்டப்படவில்லை. சந்திரிக்கா காலத்திலும் கண்டுகொள்ளப்படாத இவ்விடயம் தற்போது, கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருப்பது நியாய பூர்வமானது. அந்தவகையில், கதிர்காமத்து அழகி மனம்பேரி, சொந்த சகோதரர்களான இராணுவத்தினரால் ஆடைகள் களைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது உலக வரலாற்றிலேயே மிக கேவலமான ஒரு பதிவு. அவ்வாறான நிலையில் அதற்கு நீதி பல காலமாக கோரப்பட்டு வருகின்றது. அதேபோல தமிழ் தேசிய இனம் சார்ந்த இசைப்பிரியா மற்றும் கிருஷாந்தி போன்றவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு பின்பால் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கான நீதி விசாரணைகளை நாங்கள் பல இடங்களில் கோருகின்றோம். தமிழர்களுக்கு நடந்தது மிகப்பெரிய இனப்படுகொலை. ஆனால், சிங்கள மக்களின் எழுச்சி, கிளர்ச்சிகளுக்கு எதிராக இந்த வதைமுகாம்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன” என தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/316239

மனம்பேரி, இசைப்பிரியா படுகொலைகள் தொடர்பில் சபையில் கொதித்தெழுந்த சிறீதரன் எம்.பி.

3 months 2 weeks ago

இலங்கை இராணுவத்தினரால் பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரேமாவதி மனம்பேரி மற்றும் இசைப்பிரியா உள்ளிட்டவர்களுக்கான நீதி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போது மேற்கண்ட விடயம் தொடர்பில் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

“பட்டலந்த என்பது, 1988 – 1989 காலப்பகுதியில் நாட்டில் இருந்த ஜேவிபி போராளிகளை கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இடம்.

அது தொடர்பிலான ஆணைக்குழு அறிக்கை இவ்வளவு காலம் கிடப்பில் இருந்து தற்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச நேர்காணலினால் பேசுபொருளாகியுள்ளது.

இந்த படுகொலைகள் தொடர்பாக, அக்காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வரை சமர்ப்பித்திருந்தார். ஆனால், அப்போதும் இதற்கான தீர்வுகள் எட்டப்படவில்லை.

சந்திரிக்கா காலத்திலும் கண்டுகொள்ளப்படாத இவ்விடயம் தற்போது, கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருப்பது நியாய பூர்வமானது.

அந்தவகையில், கதிர்காமத்து அழகி மனம்பேரி, சொந்த சகோதரர்களான இராணுவத்தினரால் ஆடைகள் களைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது உலக வரலாற்றிலேயே மிக கேவலமான ஒரு பதிவு.

அவ்வாறான நிலையில் அதற்கு நீதி பல காலமாக கோரப்பட்டு வருகின்றது. அதேபோல தமிழ் தேசிய இனம் சார்ந்த இசைப்பிரியா மற்றும் கிருஷாந்தி போன்றவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு பின்பால் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அவர்களுக்கான நீதி விசாரணைகளை நாங்கள் பல இடங்களில் கோருகின்றோம். தமிழர்களுக்கு நடந்தது மிகப்பெரிய இனப்படுகொலை. ஆனால், சிங்கள மக்களின் எழுச்சி, கிளர்ச்சிகளுக்கு எதிராக இந்த வதைமுகாம்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/316239

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

3 months 2 weeks ago
Sunita Williams History: பகவத் கீதை, சமோசாவுடன் விண்வெளிக்குச் சென்றவரின் முழு கதை விண்வெளியில் வெறும் 8 நாட்கள் மட்டுமே தங்கும் திட்டத்துடன் புறப்பட்டுச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு 9 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பும் பயணம் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். விண்வெளி வீரர்களில் ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையில் அதிக அனுபவம் கொண்டவராக சுனிதா வில்லியம்ஸ் இருக்கிறார். யார் இவர்? இவர் முழு பின்னணி என்ன? திக் திக் என நகர்ந்த 7 Minutes; NASA Live-ல் அந்த ஏழு நிமிடம் தொடர்பு அறுந்ததை கவனித்தீர்களா? சுனிதா வில்லியம்ஸ் பயணித்த டிராகன் விண்கலம் திடீரென 7 நிமிடங்கள் பூமியுடன் தொடர்பை இழந்தது ஏன்?

அப்பா......

3 months 2 weeks ago
தான் பட்ட கஷ்டங்கள் பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாது என நினைப்பவர் அப்பா. வலி மிகுந்த பாதைகள்.... நன்றி விசுகர்🙏

இலங்கை மின் திட்டம்; வதந்திகளுக்கு அதானி நிறுவனம் முற்றுப்புள்ளி!

3 months 2 weeks ago
பூநகரியின் டச்சு பெயர் பூனரின். அங்கே ஒரு சிதிலமான டச் கோட்டையும் உண்டு. இடம்பெயர்வில் ஒரு இரவில் அதன் உள்ள மரத்தின் கீழ் இருந்து சோறும் சோயா மீட்டும் சாப்பிட்டோம்.

நானும் ஊர்க் காணியும்

3 months 2 weeks ago
இரத்த உறவு சொந்தங்களினால்த்தான் எப்பவும் பிரச்சனை. எனக்கு சொந்தமாக இருக்கும் வீடு காணிகளைக்கூட நாங்கள் உனக்கு சொந்தக்காரர் எல்லோ. அந்த வீடு காணிகளை எங்களுக்கு எழுதி தாருங்கோவன். நீங்கள் வெளிநாட்டிலைதானே இருக்கிறியள். திரும்பி வரப்போறியளே இல்லைத்தானே எண்டு அவையளே கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லீனம். இவ்வளவத்துக்கும் அவை தூரத்து சொந்தம் மட்டுமில்லை நான் அவையள இன்னும் சந்திக்கவே இல்லை. உப்புடியான சனத்துக்கு மத்தியிலை திருப்பி போய் குடியிருக்கவும் பயமாய் கிடக்கு... ஆனால் நான் பெஞ்சன் எடுத்ததும் ஊரில் போய் இருக்கிற பிளான் போட்டாச்சு.இன்னும் இரண்டு வருசம் பல்லை கடிச்சுக்கொண்டு இஞ்சை இருப்பம். 🙂

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்

3 months 2 weeks ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி வெளியானது 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் இன்று 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று பிற்பகல் 1.30 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/316313