Aggregator

பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார் - ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர்

3 months 2 weeks ago
ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிக முக்கிய தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார் - ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர் Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 01:29 PM ரஸ்யாவின் புலனாய்வு பிரிவான கேஜிபிக்குள் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிகமுக்கியமான புலனாய்வு தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய ஒலெக் கோர்வ்டிஸ்கி தனது 86 வயதில் காலமானார். 1985 இல் ரஸ்யாவிலிருந் தப்பிவந்து பிரிட்டனில் வாழ்ந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ள அவரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளனர். பனிப்போர் யுத்த காலத்தின் மிக முக்கியமான உளவாளிகளில் ஒருவர் இவர் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். 1980களில் சோவித் யூனியனிற்கும் மேற்குலகிற்கும் இடையில் அணுவாயுத போர் வெடிக்கும் ஆபத்தான நிலையை தணித்தவர் இவரே. மொஸ்கோவில் 1938 இல் பிறந்த ஒலெக் கோர்வ்டிஸ்கி சோவியத் யூனியனின் கேஜபியில் 1960களில் இணைந்து கொண்ட பின்னர் லண்டன் கொப்பன்ஹேகன் உட்பட பல நாடுகளில் பணியாற்றினார். லண்டனிற்கான கேஜிபியின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். 1968 இல் பிராக்கின் சுதந்திர இயக்கத்தை சோவியத்யூனியனின் டாங்கிகள் நசுக்கி அழித்தது குறித்து சோவியத்தின் பல உளவாளிகள் அதிருப்தியடைந்தனர், இவர்களை பிரிட்டன் 1970களில் தனது எம்16 புலனாய்வு பிரிவிற்குள் உள்வாங்கியது. 1990 இல் ஒலெக் கோர்வ்டிஸ்கியும், பிரிட்டனின் புலனாய்வு வரலாற்றிசிரியர் கிறிஸ்டொபெர் அன்ரூவும் இணைந்து எழுதிய கேஜிபி ஒரு உள்கதை என்ற புத்தகம் பல விபரங்களை வெளிப்படுத்தியது.'' ஒரு கம்யுனிஸ்ட் கட்சி அரசாங்கம், தவிர்க்க முடியாமல் சகிப்புத்தன்மை, மனிதாபிமானமற்ற தன்மை போன்றவற்றை உருவாக்குகின்றது, சுதந்திரங்களை அழிப்பதற்கு வழிவகுக்கின்றது என கோர்வ்டிஸ்கி கருதினார் என அன்ரூ தெரிவித்திருந்தார். பனிப்போரின் மிகவும் அச்சமூட்டும் காலப்பகுதிகளில் ஒலெக் கோர்வ்டிஸ்கி பிரிட்டனிற்காக பணிபுரிந்தார். 1983ம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டனின் அணுவாயுத தாக்குதல் குறித்து சோவியத்யூனியனின் அரசியல் தலைமை மிகுந்த அச்சம் கொண்டுள்ளது, முன்கூட்டியே தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடுகின்றது என கோர்வ்டிஸ்கி எச்சரித்தார். அவ்வேளை ஜேர்மனியில் இடம்பெற்ற நேட்டோவின் ஒத்திகையால் பதற்றநிலை உருவானது. எனினும் அது ஒரு அணுவாயுத தாக்குதலிற்கான ஒத்திகையல்ல என மொஸ்கோவின் அரசியல் தலைமைகளிற்கு தெளிவுபடுத்திய கோர்வ்டிஸ்கி பதற்ற நிலையை தணித்தார். அதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் சோவியத்யூனியனுடனான அணுவாயு பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1985 இல் கோர்வ்டிஸ்கியை மொஸ்கோ பிரிட்டனில் இருந்து கலந்தாலோசனைகளிற்காக அழைத்தது, தான் இரட்டை முகவர் என்பது தெரிந்துவிட்டது என்பதை அறிந்த அவர் அச்சத்துடன் ரஸயா சென்றார். அவர் விசாரிக்கப்பட்டார், ஆனால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை. இதன் பின்னர் இரகசிய நடவடிக்கையொன்றின் மூலம் அவரை பிரிட்டன் ரஸ்யாவிலிருந்து மீட்டுக்கொண்டுவந்தது. கெடுபிடி யுத்த காலத்தில் சோவியத்யூனியனில் இருந்து பிரிட்டனிற்கு தப்பிச்சென்ற சிரேஸ்ட உளவாளி இவர். பிரிட்டன் கோர்வ்டிஸ்கியை மிகவும் பெறுமதியானவராக கருதியது. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அவருடன் இணைவதற்கு அனுமதித்தால், அவர் அம்பலப்படுத்திய கேஜிபி உளவாளிகளை பிரிட்டன் நாடு கடத்தாது என மார்க்கிரட் தட்ச்சர் அறிவித்தார். எனினும் ரஸ்யா இந்த நிபந்தனையை ஏற்க மறுத்தது, இதன் காரணமாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரின் அதிருப்தியையும் மீறி பிரதமர் மார்க்கிரட் தட்;ச்சர் 25 கேஜிபி உளவாளிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தியது. மொஸ்கோ பதிலுக்கு 25 பிரிட்டிஸ் பிரஜைகளை நாடு கடத்தியது - இரண்டு நாடுளும் தொடர்ந்தும் பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டன, ஆனால் உறவுகள் பாதிக்கப்படவில்லை. ஆறுவருடங்கள் கோர்வ்டிஸ்கியின் குடும்பத்தை 24 மணிநேர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்த கேஜிபி 1991 இல் அவர்கள் அவருடன் இணைய அனுமதித்தது. https://www.virakesari.lk/article/209989

பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார் - ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர்

3 months 2 weeks ago

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிக முக்கிய தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார் - ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர்

Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 01:29 PM

image

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவான  கேஜிபிக்குள் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிகமுக்கியமான புலனாய்வு தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய  ஒலெக் கோர்வ்டிஸ்கி தனது 86 வயதில் காலமானார்.

1985 இல் ரஸ்யாவிலிருந் தப்பிவந்து பிரிட்டனில் வாழ்ந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ள அவரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

பனிப்போர் யுத்த காலத்தின் மிக முக்கியமான உளவாளிகளில் ஒருவர் இவர் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

1980களில் சோவித் யூனியனிற்கும் மேற்குலகிற்கும் இடையில் அணுவாயுத போர் வெடிக்கும் ஆபத்தான நிலையை தணித்தவர் இவரே.

மொஸ்கோவில் 1938 இல் பிறந்த ஒலெக் கோர்வ்டிஸ்கி சோவியத் யூனியனின் கேஜபியில் 1960களில் இணைந்து கொண்ட பின்னர் லண்டன் கொப்பன்ஹேகன் உட்பட பல நாடுகளில் பணியாற்றினார். லண்டனிற்கான கேஜிபியின்  தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.

1968 இல் பிராக்கின் சுதந்திர இயக்கத்தை சோவியத்யூனியனின் டாங்கிகள் நசுக்கி அழித்தது குறித்து சோவியத்தின் பல உளவாளிகள் அதிருப்தியடைந்தனர், இவர்களை பிரிட்டன் 1970களில் தனது எம்16 புலனாய்வு பிரிவிற்குள் உள்வாங்கியது.

1990 இல்  ஒலெக் கோர்வ்டிஸ்கியும், பிரிட்டனின் புலனாய்வு   வரலாற்றிசிரியர் கிறிஸ்டொபெர் அன்ரூவும் இணைந்து எழுதிய கேஜிபி ஒரு உள்கதை  என்ற புத்தகம் பல விபரங்களை வெளிப்படுத்தியது.''

oleg_1.jpg

ஒரு கம்யுனிஸ்ட் கட்சி அரசாங்கம், தவிர்க்க முடியாமல் சகிப்புத்தன்மை, மனிதாபிமானமற்ற தன்மை போன்றவற்றை உருவாக்குகின்றது, சுதந்திரங்களை அழிப்பதற்கு வழிவகுக்கின்றது என கோர்வ்டிஸ்கி கருதினார் என அன்ரூ தெரிவித்திருந்தார்.

பனிப்போரின் மிகவும் அச்சமூட்டும் காலப்பகுதிகளில் ஒலெக் கோர்வ்டிஸ்கி பிரிட்டனிற்காக பணிபுரிந்தார்.

1983ம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டனின் அணுவாயுத தாக்குதல் குறித்து சோவியத்யூனியனின் அரசியல் தலைமை மிகுந்த அச்சம் கொண்டுள்ளது, முன்கூட்டியே தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடுகின்றது என கோர்வ்டிஸ்கி எச்சரித்தார்.

அவ்வேளை ஜேர்மனியில் இடம்பெற்ற நேட்டோவின் ஒத்திகையால் பதற்றநிலை உருவானது.

எனினும் அது ஒரு அணுவாயுத தாக்குதலிற்கான  ஒத்திகையல்ல என மொஸ்கோவின் அரசியல் தலைமைகளிற்கு தெளிவுபடுத்திய கோர்வ்டிஸ்கி பதற்ற நிலையை தணித்தார்.

அதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் சோவியத்யூனியனுடனான அணுவாயு பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

1985 இல் கோர்வ்டிஸ்கியை மொஸ்கோ பிரிட்டனில் இருந்து கலந்தாலோசனைகளிற்காக அழைத்தது, தான் இரட்டை முகவர் என்பது தெரிந்துவிட்டது என்பதை அறிந்த அவர் அச்சத்துடன் ரஸயா சென்றார்.

அவர் விசாரிக்கப்பட்டார், ஆனால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.

இதன் பின்னர் இரகசிய நடவடிக்கையொன்றின் மூலம் அவரை பிரிட்டன் ரஸ்யாவிலிருந்து மீட்டுக்கொண்டுவந்தது.

கெடுபிடி யுத்த காலத்தில் சோவியத்யூனியனில் இருந்து பிரிட்டனிற்கு தப்பிச்சென்ற சிரேஸ்ட உளவாளி  இவர்.

பிரிட்டன் கோர்வ்டிஸ்கியை மிகவும் பெறுமதியானவராக கருதியது. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அவருடன் இணைவதற்கு அனுமதித்தால், அவர் அம்பலப்படுத்திய கேஜிபி உளவாளிகளை  பிரிட்டன் நாடு கடத்தாது என மார்க்கிரட் தட்ச்சர் அறிவித்தார்.

எனினும் ரஸ்யா இந்த நிபந்தனையை ஏற்க மறுத்தது,

oleg3.jpg

இதன் காரணமாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரின் அதிருப்தியையும் மீறி பிரதமர் மார்க்கிரட் தட்;ச்சர் 25 கேஜிபி உளவாளிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தியது.

மொஸ்கோ பதிலுக்கு 25 பிரிட்டிஸ் பிரஜைகளை நாடு கடத்தியது - இரண்டு நாடுளும் தொடர்ந்தும் பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டன, ஆனால் உறவுகள் பாதிக்கப்படவில்லை.

ஆறுவருடங்கள் கோர்வ்டிஸ்கியின் குடும்பத்தை 24 மணிநேர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்த கேஜிபி 1991 இல் அவர்கள் அவருடன் இணைய அனுமதித்தது.

https://www.virakesari.lk/article/209989

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஆஹா ஐந்தாவது விக்கெட்டும் போய்விட்டது! இந்த Sam Curran ஐ எதுக்குத்தான்விளையாட விடுறாங்களோ தெரியாது! ஒரே ஒரு ஓவர்தான் போட்டது. இதுக்கு Devon Convey ஐ விளையாடியிருக்கலாம்!

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago
இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸின் மூத்த அரசியல் தலைவர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸாவின் கான் யூனுஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் மூத்த அரசியல் தலைவர் சலா அல்-பர்தாவீல் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். ஹமாஸின் உயர்நிலை அரசியல் தலைவரான பர்தாவீல் மற்றும் அவரது மனைவி என இருவருமே கொல்லப்பட்டதாக உள்ளூர் நபர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய அதிகாரிகள் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கான் யூனிஸ் மற்றும் தெற்கு ரஃபாவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. காஸாவில் மீண்டும் தீவிர தாக்குதல்களை இந்த வாரத்தில் இஸ்ரேல் தொடங்கியது. சுமார் 2 மாதங்களாக நடைமுறையில் இருந்த முதல் கட்ட போர் நிறுத்தம் இதனால் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்கும் அமெரிக்காவின் முன்மொழிவை ஹமாஸ் ஏற்க மறுத்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. மற்றொருபுறம் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட உண்மையான உடன்படிக்கையை இஸ்ரேல் மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த உடன்படிக்கையின்படி, இஸ்ரேலிய படைகளை திரும்ப பெறுவது, இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலத்தீன சிறைக்கைதிகளை படிப்படியாக விடுவிப்பது, போரை முழுவதுமாக நிறுத்தி காஸாவை மறு கட்டமைப்பு செய்வது போன்றவை திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்க மக்களுக்கே சுமையாக மாறும் அபாயம் ஐரோப்பாவின் பரபரப்பான ஹீத்ரோ விமான நிலையத்தை ஒரே ஒரு தீ விபத்து முடக்கியது எப்படி? அகதிகள் முகாமில் பிறந்தவர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஞாயிற்றுக்கிழமையன்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் ஏவுகணை தாக்கிய போது பர்தாவீல் மற்றும் அவரது மனைவி தங்களின் கூடாரத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 8 குழந்தைகளின் தந்தையான பர்தாவீல் ஹமாஸின் பிரபலமான அரசியல் ஆளுமையாக உள்ளார். கான் யூனிஸின் அகதிகள் முகாமில் பிறந்த இவர், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். ஹமாஸ் அமைப்பை நிறுவியவர்களை அடுத்து இரண்டாம் தலைமுறை தலைவர்களில் ஒருவராகவும் இவர் கருதப்பட்டார். ஹமாஸின் அரசியல் பிரிவுக்கு 2021-ஆம் ஆண்டு இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் போரில் சின்வார் மற்றும் ராவி முஷ்டாஹா கொல்லப்பட்ட பின்னர், பர்தாவீல் ஹமாஸின் உயர்நிலை அரசியல் தலைவராக கருதப்பட்டார் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த செவ்வாய்க்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் தெற்கு காஸாவில் தொடர்ச்சியான தீவிர குண்டு வீச்சுக்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடந்த வான்வழித் தாக்குதலில்தான் பர்தாவீல் கொல்லப்பட்டுள்ளார். பிபிசியிடம் பேசிய பாலத்தீனிய செம்பிறை சங்க செய்தி தொடர்பாளர் ஒருவர், ரஃபாவில் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அணுக முயன்ற அந்த அமைப்பின் பல ஆம்புலன்ஸ்களை இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவித்தார். துணை மருத்துவப் பணியாளர்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும், காஸாவினுள் சிக்கியிருக்கும் மருத்துவக்குழு ஒன்றுடன் தொடர்பு பல மணி நேரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறினார். மேற்கு ரஃபாவில் உள்ள டெல் அல் சுல்தான் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?21 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?23 மார்ச் 2025 ஆதவி: பொம்மைகளுடன் விளையாடும் வயதில் 'கார்பன் நியூட்ரல்' அங்கீகாரம் பெற்ற குழந்தை18 மார்ச் 2025 தரைவழியாகவும் தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES எகிப்து எல்லையிலுள்ள ஃபிலாடெல்ஃபி பாதையில் நிலைத் நிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய படைகளால் கவசவாகன (Tank) தாக்குதல்கள், மற்றும் ஹெலிகாப்டர் தாக்குதலும் நடத்தப்படுகிறது. அப்பகுதியின் அருகே வசிக்கும் அலா அல்-தின் சபா பிபிசியிடம் குரல் பதிவு தகவல் மூலம் அளித்த தகவலின்படி,"மழை பொழிவது போன்று தோட்டாக்கள் பொழிகின்றன. ஒரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவரை ஆம்புலன்ஸ் அணுக முடியவில்லை" என்றார். "துணை மருத்துவப் பணியாளர் ஒருவர் தரையில் விழுந்து கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்" என்றும் அவர் கூறினார். 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் 1200 பேரைக் கொன்றனர், 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக தகர்க்கும் முனைப்புடன் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதுவரையிலான தாக்குதல்களில் 49,500 பாலத்தீனியர்கள் காஸாவில் கொல்லப்பட்டதாக ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c337k1p04d6o

இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள் - தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்திய ஜனாதிபதி

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,BBC SINHALA படக்குறிப்பு, இலங்கையின் பிரபல நிழலுலக நபராக விளங்கிய கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன, கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களினால் நடத்தப்படும் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை சமீபத்திய காலங்களில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இலங்கை தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (21) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மாத்தறை வரலாற்று சிறப்பு மிக்க தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. சிறிய ரக வேன் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ரி-56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகிய இரண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் கைத்துப்பாக்கியொன்றின் துப்பாக்கி ரவைகள் போலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா - பிள்ளையான் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தது ஏன்? இலங்கையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூராட்சி சபைத் தேர்தல் - எப்போது, எப்படி நடக்கும்? இலங்கையில் தலைமறைவாக இருந்தபோலீஸ் மாஅதிபர் சரண் - 'பிரபாகரனை தேடுவதை போன்று தேடினோம்' இந்திய மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம் தேவேந்திரமுனை - கப்புகம்புர பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இரண்டு நண்பர்களை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, துப்பாக்கி சூட்டை நடத்துவதற்காக சந்தேக நபர்கள் வருகை தந்த வேன், துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள குறுக்கு வீதியொன்றில் தீக்கிரையான நிலையில் போலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேக நபர்கள், வேனை தீக்கிரையாக்கி, அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். நூறாவது ஆண்டில் ஆர்எஸ்எஸ்: நிதி எங்கிருந்து வருகிறது? பாஜகவுடன் என்ன உறவு? முழு விவரம்23 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?23 மார்ச் 2025 துப்பாக்கி பிரயோகத்தில் தேவேந்திரமுனை பகுதியை சேர்ந்த 28 மற்றும் 29 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேக நபர்கள் மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை நடத்துவதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸார் குறிப்பிடுகின்றனர். இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்காக போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,BBC SINHALA 2025 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பான ஒரு பார்வை 2025ம் ஆண்டின் தொடக்கம் முதல் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை வரை பதிவான தகவல்களின் பிரகாரம், 27 துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், பிபிசி தமிழுக்கு தெரிவித்தது. இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு பதிவான துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 18 சம்பவங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என போலீஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய 9 துப்பாக்கி பிரயோகங்களும் தனிப்பட்ட காரணங்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்கள் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு நடத்தப்பட்ட அனைத்து துப்பாக்கி பிரயோகங்களிலும் இதுவரை 76 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களுடன் நேரடியாக மற்றும் மறைமுகமாக தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் குறிபபிடுகின்றனர். சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை23 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸுக்கு 5$ தானா? - ஓவர் டைம் தொகை குறித்து டிரம்ப் கூறியது என்ன?22 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் பிரபல நிழலுலக நபராக விளங்கிய கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன, கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார். கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்ற விசாரணை கூட்டில் விசாரணைக்காக நின்றுகொண்டிருந்த தருணத்தில், வழக்கறிஞர் வேடத்தில் வருகை தந்த துப்பாக்கிதாரியினால் நீதிமன்றத்தில் வைத்து இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத்துக்குள் வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமையானது, நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. இந்த நிலையில், இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேக நபர்கள், நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்ற போதிலும், 8 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டனர். தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட சென்னை கூட்டத்தில் தீர்மானம் ஏன்? - முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமா?22 மார்ச் 2025 மும்பை இந்தியன்சுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸின் துருப்புச்சீட்டு யார்?23 மார்ச் 2025 எனினும், இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக விளங்கிய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை கைது செய்வதற்கான விசாரணைகளை போலீஸார் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர். இஷாரா செவ்வந்தி, இந்தியா அல்லது மாலத்தீவுக்கு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அத்துடன், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு இடம்பெறுகின்ற திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் போலீஸ் அதிகாரிகள், ராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் தொடர்புப்பட்டுள்ளமையை போலீஸார் உறுதி செய்துள்ளதுடன், சிறைச்சாலை அதிகாரிகள் குறித்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி நடவடிக்கை கோவையில் அடுத்தடுத்து 2 சட்டவிரோத குழந்தை தத்து சம்பவங்கள் - 15 பேர் கைது; என்ன நடந்தது?22 மார்ச் 2025 மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?23 மார்ச் 2025 பட மூலாதாரம்,PMD MEDIA இலங்கையில் இடம்பெற்று வரும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த 18ம் தேதி விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகளவில் இடம்பெறும் மேல் மற்றும் தென் மாகாண போலீஸ் உயர் அதிகாரிகளையே ஜனாதிபதி இவ்வாறு சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமல்லாது, புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார். சட்ட ஆட்சியை பாதுகாக்கும் பொறுப்பு, போலீஸ் திணைக்களம் வசமானது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்குள் சட்ட ஆட்சியை பாதுகாக்காது, சிறந்த சமூகமொன்றை உருவாக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy05zn1vqyeo

இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள் - தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்திய ஜனாதிபதி

3 months 2 weeks ago

இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடுகள்

பட மூலாதாரம்,BBC SINHALA

படக்குறிப்பு, இலங்கையின் பிரபல நிழலுலக நபராக விளங்கிய கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன, கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களினால் நடத்தப்படும் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை சமீபத்திய காலங்களில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (21) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மாத்தறை வரலாற்று சிறப்பு மிக்க தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சிறிய ரக வேன் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரி-56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகிய இரண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் கைத்துப்பாக்கியொன்றின் துப்பாக்கி ரவைகள் போலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

தேவேந்திரமுனை - கப்புகம்புர பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இரண்டு நண்பர்களை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, துப்பாக்கி சூட்டை நடத்துவதற்காக சந்தேக நபர்கள் வருகை தந்த வேன், துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள குறுக்கு வீதியொன்றில் தீக்கிரையான நிலையில் போலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேக நபர்கள், வேனை தீக்கிரையாக்கி, அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் தேவேந்திரமுனை பகுதியை சேர்ந்த 28 மற்றும் 29 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேக நபர்கள் மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை நடத்துவதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்காக போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,BBC SINHALA

2025 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பான ஒரு பார்வை

2025ம் ஆண்டின் தொடக்கம் முதல் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை வரை பதிவான தகவல்களின் பிரகாரம், 27 துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், பிபிசி தமிழுக்கு தெரிவித்தது.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு பதிவான துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 18 சம்பவங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என போலீஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஏனைய 9 துப்பாக்கி பிரயோகங்களும் தனிப்பட்ட காரணங்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்கள் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இவ்வாறு நடத்தப்பட்ட அனைத்து துப்பாக்கி பிரயோகங்களிலும் இதுவரை 76 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களுடன் நேரடியாக மற்றும் மறைமுகமாக தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் குறிபபிடுகின்றனர்.

துப்பாக்கி சூடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் பிரபல நிழலுலக நபராக விளங்கிய கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன, கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார்.

கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்ற விசாரணை கூட்டில் விசாரணைக்காக நின்றுகொண்டிருந்த தருணத்தில், வழக்கறிஞர் வேடத்தில் வருகை தந்த துப்பாக்கிதாரியினால் நீதிமன்றத்தில் வைத்து இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தது.

நீதிமன்றத்துக்குள் வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமையானது, நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேக நபர்கள், நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்ற போதிலும், 8 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டனர்.

எனினும், இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக விளங்கிய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை கைது செய்வதற்கான விசாரணைகளை போலீஸார் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.

இஷாரா செவ்வந்தி, இந்தியா அல்லது மாலத்தீவுக்கு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அத்துடன், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு இடம்பெறுகின்ற திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் போலீஸ் அதிகாரிகள், ராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் தொடர்புப்பட்டுள்ளமையை போலீஸார் உறுதி செய்துள்ளதுடன், சிறைச்சாலை அதிகாரிகள் குறித்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி நடவடிக்கை

அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,PMD MEDIA

இலங்கையில் இடம்பெற்று வரும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த 18ம் தேதி விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகளவில் இடம்பெறும் மேல் மற்றும் தென் மாகாண போலீஸ் உயர் அதிகாரிகளையே ஜனாதிபதி இவ்வாறு சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமல்லாது, புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

சட்ட ஆட்சியை பாதுகாக்கும் பொறுப்பு, போலீஸ் திணைக்களம் வசமானது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குள் சட்ட ஆட்சியை பாதுகாக்காது, சிறந்த சமூகமொன்றை உருவாக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy05zn1vqyeo

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கும் இடையில் மோதல்

3 months 2 weeks ago
23 MAR, 2025 | 09:09 PM முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் மோதலில் ஈடுபடுவதை காண்பிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதல்கள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன. பவுன்சர் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோஷித ராஜபக்சவுடன் சென்றவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கும் இடையில் மோதல் இடம்பெற்றது சந்தேகநபர்கள் திம்பிரிகசாய, தெகிவள அத்திடியவை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/210023

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கும் இடையில் மோதல்

3 months 2 weeks ago

23 MAR, 2025 | 09:09 PM

image

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் மோதலில் ஈடுபடுவதை காண்பிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதல்கள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன. பவுன்சர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யோஷித ராஜபக்சவுடன் சென்றவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கும் இடையில் மோதல் இடம்பெற்றது சந்தேகநபர்கள் திம்பிரிகசாய, தெகிவள அத்திடியவை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/210023

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அட விக்கினேசு விளையாட்டு காட்டுறான் பையா ...டுபேக்கும்...அல்வா குடுத்திட்டான்.. ஒரே மாதிரி பந்து போட்டு ..கூடாவும் போச்சு...புதுப்பொடியன் பின்னுறான்...ஒரே மாதிரி கச்

தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற வளாகத்திற்குள் புதிய கட்டிடம்; - இன்று திறப்பதற்கு ஏற்பாடு

3 months 2 weeks ago
இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு அனுர தமிழர் பகுதிகளில் மேலும் மேலும் பௌத்தவிரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் - தையிட்டி விகாரைக்குள் புதிய கட்டிடம் குறித்து கஜேந்திரன் Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 12:38 PM கடந்த ஜனாதிபதி தேர்தலிலே நாடாளுமன்ற தேர்தலிலே அற்ப சலுகைகளிற்காக, இந்த இனவாத அரசாங்கத்திற்கு ,ஆதரவு வழங்கிய தமிழ் புத்திஜீவிகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள். அனுர ஒரு புறத்திலே தான் இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என சொல்லிக்கொண்டு, இங்கே மேலும் மேலும் இந்த பௌத்த விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. காணி உரிமையாளர்களும் இவ்வாறான தகவல் கிடைத்ததன் பேரில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இன்று இங்கே இராணுவத்தினரின் வாகனங்கள் அதிகளவில் வந்து ஏற்றி இறக்குகின்ற பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன, இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றநிலையிலே, இரண்டு நாட்களிற்கு முன்னர் கூட கொழும்பிலே காணி உரிமையாளர்களை அமைச்சர் சந்தித்து இது உங்களுடைய காணிகள் என சொன்னால் விடுவிப்போம் என ஒரு புறத்தில் கூறிக்கொண்டு, மறு புறத்திலே அதே அரச இயந்திரம், இந்த சட்டவிரோத விகாரைக்குள் அமைக்கப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்காக தங்களின் அரச வளங்களை பயன்படுத்திக்கொண்டிருப்பது என்பது, அனுர அரசின் இரட்டை முகத்தை காட்டுகின்றது. அனுர ஒரு புறத்திலே தான் இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என சொல்லிக்கொண்டு, இங்கே மேலும் மேலும் இந்த பௌத்த விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்,. அவருடைய தலைமையிலே முன்னெடுக்கின்றனர், பாதுகாப்பு அமைச்சரும் அவர்தான், பௌத்த விவகார அமைச்சரும் அவர்தான். எங்கள் மக்கள் இதனை புரிந்துகொள்ளவேண்டும், கடந்த ஜனாதிபதி தேர்தலிலே நாடாளுமன்ற தேர்தலிலே அற்ப சலுகைகளிற்காக, இந்த இனவாத அரசாங்கத்திற்கு ,ஆதரவு வழங்கிய தமிழ் புத்திஜீவிகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள். இதனுடைய விளைவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு வந்து முடியும் என்பதை காலம்தான் சொல்லவேண்டும். இந்த திறப்பு விழா நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்பது போராட்டக்காராகளின் காணி உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது. எந்த வகையிலும் இது நியாயப்படுத்த முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத, ஆக்கிரமிப்பு நடவடிக்கை. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்குடாநாட்டில் உள்ள மக்கள் பெருமளவிலே திரண்டு வரவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். https://www.virakesari.lk/article/209979

தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

3 months 2 weeks ago
யாழ்பாணத்தின் வரலாறு கூறும் நூலான “யாழ்பாண வைபவமாலை” என்னும் நூலில் புத்த கோவில்களை எல்லாம் இடித்து சிங்களவரை துரத்திய வரலாறு உள்ளது. மதம் மாறினார்கள் என்பதற்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது அனைவரையும் சங்கிலியன் வெட்டி கொலை செய்த வரலாறும் உள்ளது. ஆகவே இனவாத விடயத்தில் நாமும் சிங்களவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர். இற்றைக்கு 250 வருடங்களுக்கு முன்பு 1750 களில் இந்நூல் எழுதப்பட்டது.

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 2 weeks ago
18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான் முதல் சதம் குவித்து அசத்தல்; RRஐ வென்றது SHR Published By: VISHNU 23 MAR, 2025 | 09:38 PM (நெவில் அன்தனி) ஹைதராபாத், உப்பல் ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷான் இந்த வருடத்திற்கான முதலாவது சதத்தைக் குவிக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) 44 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களைக் குவித்தது. ட்ரவிஸ் ஹெட் குவித்த அதிரடி அரைச் சதம், இஷான் கிஷான் ஆக்ரோஷமாகக் குவித்த ஆட்டம் இழக்காத சதம் என்பன சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கணிசமான மொத்த எண்ணிக்கைக்கு பெரிதும் உதவின. மேலும், ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணிக்கான இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கையை இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் பதிவுசெய்தது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவித்த 287 ஓட்டங்களே ஐபிஎல் இல் ஓர் அணி பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். இன்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா (24), ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 19 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து அதிரடி ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், இஷான் கிஷான் ஆகிய இருவரும் 38 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 130 ஓட்டங்களாக உயர்த்தினர். ட்ரவிஸ் ஹெட் 31 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார். தொடர்ந்து மறுபக்கத்தில் அபார ஆற்றலை வெளிப்படுத்திய இஷான் கிஷான் 3ஆவது விக்கெட்டில் நிட்டிஷ் குமார் ரெட்டியுடன் 29 பந்துகளில் 72 ஓட்டங்களையும் 4ஆவது விக்கெட்டில் ஹென்ரிச் க்ளாசனுடன் 24 பந்துகளில் 56 ஓட்டங்களையும் பகிர்ந்தார். இஷான் கிஷான் 47 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 106 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். நிட்டிஷ் குமார் ரெட்டி 30 ஓட்டங்களையும் ஹென்றிச் க்ளாசன் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 287 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தான் றோயல்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. யஷஸ்வி ஜய்ஸ்வால் (1), அணித் தலைவர் ரெயான் பரக் (4) நிட்டிஷ் ராணா (11) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (50 - 3 விக்.) ஆனால், சஞ்சு செம்சன், த்ருவ் ஜுரெல் ஆகிய இருவரும் அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 59 பந்துகளில் 111 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். சஞ்ச செம்சன் 37 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களையும் த்ருவ் ஜுவெல் 35 பந்துகளில் 5 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களையும் குவித்தனர். அவர்கள் இருவரும் மொத்த எண்ணிக்கை 161 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர். மத்திய வரிசையில் ஷிம்ரன் ஹெட்மயர் 23 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களையும் ஷுபம் டுபே 11 பந்துகளில் ஒரு சிக்ஸ், 4 பவுண்டறிகள் உட்பட ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் ஹர்ஷால் பட்டேல் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சிமர்ஜீத் சிங் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: இஷான் கிஷான் https://www.virakesari.lk/article/210024

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அட இப்பிடியும் நடக்குதா. சொல்லவேயில்லை. உபிசி. SRH என்னா அடி. அவங்கட முதல் அஞ்சு பேரும் இம்மை மறுமை இல்லாமல் அடிக்கிற ஆக்கள். இது முழுத் தொடருக்கும் வேலை செய்யாது. இவர்கள் மிகக்குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கிற அணியாகவும் வர சந்தர்ப்பம் கூட. இவர்களின் போட்டிகள் நல்ல ஒரு கொண்டாட்டமான போட்டிகளாக இருக்கும். அந்த மாதிரி அடி விழும். எல்லாத்துக்கும் ஆசைப்பட்டா எப்பிடி. எங்களையும் கொஞ்சம் ஆட விடலாமே. 🤣

ஹிட்லர் படையின் ராக்கெட் தொழில்நுட்பம் மூலம் அமெரிக்கா நிலவில் கால் பதிக்க வித்திட்ட விஞ்ஞானி

3 months 2 weeks ago
இது சரியான தகவல் அல்ல. இரண்டாம் உலகப் போர் மே 8, 1945 இல் முடிவுக்கு வருகிறது. உலகப் போர் முடிந்ததும் அமெரிக்கா செய்த முதல் வேலை: ஏப்ரல் 1945 இல் மார்ஷல் திட்டம் என்ற ஐரோப்பாவை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தை அமெரிக்காவில் சட்டமாக இயற்றி, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மீள்கட்டுமானத்தை ஆரம்பித்து வைத்தது தான். இதன் பிறகு தான் எல்லாம். இதை செய்திருக்கா விட்டால், கிழக்கு ஜேர்மனி போல மேற்கு ஜேர்மனியும் தேங்கிப் போயிருக்கும். எனவே, அமெரிக்காவிற்கு நன்றியுடன் இன்றைய ஜேர்மனி நடந்து கொள்வது அதிசயமல்ல! சுவிஸ் மலைப்பகுதிகளில் போய் ஒளித்திருந்த von Braun உம் ஏனையோரும் செப்ரெம்பர் '45 வரை அமெரிக்காவின் கைகளில் கிடைக்கவில்லை.

தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

3 months 2 weeks ago
அரசியல் காரணங்களுக்காக உதாசீனம் செய்யப் படும் பல்வேறு தரவுகள், தகவல்கள் வெளியே பிரபலமாக்கப் படாமல் மூலையில் கிடக்கின்றன. உதாரணமாக வடக்கின் கந்தரோடையில் விகாரைகள் போன்ற சிறு அமைப்புகள் இருக்கின்றன. அந்தப் பகுதி வடக்கில் கிமு 600 அளவில் இருந்தே மக்கள் குடியேறி வாழ்ந்த பகுதி என்று கார்பன் 14 பரிசோதனையில் நிரூபித்திருக்கிறார்கள். பௌத்தம் தமிழரிடையே இருந்த காலமொன்று இருந்திருக்கிறது, இது அதிசயமல்ல. இனியும் அப்படியொரு காலம் உருவாகாது என்றும் உறுதி செய்ய முடியாது.