Aggregator

தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

3 months 2 weeks ago
குமாரசாமி, நீங்கள் குறிப்பிட்ட அவர்கள் வசம் இருந்த கோண்டாவில, கொக்குவில, இணுவில, யாப்பன, கொடிகாம, மிருசுவில எல்லாம் இப்பொழுது தமிழர்கள் வாழும் இடங்களாகத்தானே இருக்கின்றன. அது போல் நாங்கள் வாழும் பகுதிகள் அவர்கள் வசம் போயும் இருக்கின்றன. இன்று சிவனொளி பாதம் நான்கு மதங்களாலும் உரிமை கொண்டாடப்படுகின்றது. கதிர்காமக் கந்தனும் ஓரளவு அந்தவகைக்குள் அடங்குகிறார். தமிழர், சிங்களவர், வேடுவர் என பலரும் வழிபடும் தளமாக அது இருக்கிறது. சிங்களவர்கள் எப்படி அழைத்தாலும் தமிழர்களுக்கு அது கதிர்காமம்தான். அத்தோடு கந்தன் தமிழர்களின் முப்பாட்டன் அல்லவா? பல காரணங்களுக்காக குடியேற்றங்கள் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவை அவரவர்கள் தேவைகளுக்காக நடக்கின்றன. இதில் சில அரசின் திட்டமிடல்களூடாகவும் நடந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால் முன்னைய அரசாங்கங்களைப் போல் இந்த அரசாங்கம் தீவிரம் காட்டவில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். நியாயம், அப்போ கைகலப்பில் ஈடுபடலாம் என்கிறீர்களா? பேசிப் பார்த்தோம் பலனில்லை. போராடிப் பார்த்தோம், பரம்பதம் விளையாட்டு மாதிரி இன்னும் கீழே போய் இருக்கின்றோம். சரி,மறக்கவும் வேண்டாம். மன்னிக்கவும் வேண்டாம். அடுத்து என்ன செய்யலாம் என்று நியாயமாக நீங்களே சொல்லிவிடுங்களேன்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
4வ‌து விக்கேட் போய் விட்ட‌து மைதான‌த்தில் விளையாடும் இர‌ண்டு தென் ஆபிரிக்கா வீர‌ர்க‌ளை அவுட் செய்தால் ல‌க்னோ வெற்றிய‌ உறுதி செய்து விடும்......................... இது என்ன‌ ச‌த்திய‌ சோத‌னை ஒரே நேர‌ம் மூன்று வீர‌ர்க‌ள் நொட் அவுட் மூன்று வீர‌ர்க‌ள் ம‌ட்டைய‌டியில் ஹா ஹா.........................

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம் 6 வாரங்களாக சுங்க பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது ; கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம்

3 months 2 weeks ago
24 MAR, 2025 | 08:19 PM (செ.சுபதர்ஷனி) களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த 6 வாரங்களாக சுங்க பிரிவில் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் திங்கட்கிழமை (24) அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுமார் 1500 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. எனினும் தற்போது 6 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இவ்வியந்திரம் சுங்கப் பிரிவிலிருந்து விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. bகுறித்த இயந்திரத்தை விடுவிக்க ஒரு மில்லியன் ரூபா சுங்கப்பிரிவுக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு இயந்திரத்தை கொள்வனவுக்கான விலைமனுக் கோரல் தொடர்பான ஆவணங்கள் உரிய நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட போதும், பிற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. எவ்வாறெனினும் நீண்ட காலத்திற்குப் பின்னர் அவ்வியந்திரம் நாட்டை வந்தடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த சிரி ஸ்கேன் இயந்திரம் செயலிழந்தது. இன்றுவரை அவசர பரிசோதனைக்காக நோயாளர்கள் அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், ஏனைய நோயாளர்கள் ஹோமாகம, களுபோவில, ஹொரன உள்ளிட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனால் நோயாளர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதுடன். தனியார் மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பெருமளவான தொகையை செலவிட வேண்டியுள்ளது. அத்தோடு இது போன்ற உயர் தொழில்நுட்ப இயந்திரங்களை நீண்ட நாட்களுக்கு சுங்கப்பிரிவில் தடுத்து வைத்திருப்பதால் இயந்திரத்தின் பாகங்கள் சேதமடையக்கூடும். ஆகையால் இயந்திரத்தை உடனடியாக சுங்கப் பிரிவிலிருந்து விடுவித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/210086

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம் 6 வாரங்களாக சுங்க பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது ; கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம்

3 months 2 weeks ago

24 MAR, 2025 | 08:19 PM

image

(செ.சுபதர்ஷனி)

களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த 6 வாரங்களாக சுங்க பிரிவில் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில்  திங்கட்கிழமை (24) அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுமார் 1500 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது.

எனினும் தற்போது 6 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இவ்வியந்திரம் சுங்கப் பிரிவிலிருந்து விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. bகுறித்த இயந்திரத்தை விடுவிக்க ஒரு மில்லியன் ரூபா சுங்கப்பிரிவுக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. 

2021 ஆம் ஆண்டு இயந்திரத்தை கொள்வனவுக்கான விலைமனுக் கோரல் தொடர்பான ஆவணங்கள் உரிய நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட போதும், பிற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. 

எவ்வாறெனினும் நீண்ட காலத்திற்குப் பின்னர் அவ்வியந்திரம் நாட்டை வந்தடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த சிரி ஸ்கேன் இயந்திரம் செயலிழந்தது.

இன்றுவரை அவசர பரிசோதனைக்காக நோயாளர்கள் அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், ஏனைய நோயாளர்கள் ஹோமாகம, களுபோவில, ஹொரன உள்ளிட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

இதனால் நோயாளர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதுடன். தனியார் மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பெருமளவான தொகையை செலவிட வேண்டியுள்ளது.

அத்தோடு இது போன்ற உயர் தொழில்நுட்ப இயந்திரங்களை நீண்ட நாட்களுக்கு சுங்கப்பிரிவில் தடுத்து வைத்திருப்பதால் இயந்திரத்தின் பாகங்கள் சேதமடையக்கூடும். 

ஆகையால் இயந்திரத்தை உடனடியாக சுங்கப் பிரிவிலிருந்து விடுவித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/210086

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?

3 months 2 weeks ago

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அம்ரிதா பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 24 மார்ச் 2025, 05:44 GMT

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 19 ஆம் தேதி பூமிக்கு திரும்பினார். அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது, விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்.

'பிளான்ட் ஹேபிடட் -07' என்ற திட்டத்தின் கீழ், புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் அவர் 'ரோமெயின் லெட்யூஸ்' எனப்படும் ஒரு வகை கீரைச் செடியை வளர்த்தார்.

விண்வெளியில் தங்கும் வீரர்கள், தங்களுக்கான உணவை பூமியில் இருந்து எடுத்துச் செல்லும் போதிலும், விண்வெளியில் தாவரங்களை வளர்க்க ஏன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன? விண்வெளியில் தாவரங்கள் வளருமா?

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் ஆய்வு ஏன்?

விண்வெளியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களில் விண்வெளி விவசாயமும் ஒன்று. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) விவசாயம் குறித்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விண்வெளி வீரர்களுக்காக, பூமியில் இருந்து வரும்போதே அவர்களுக்கு தேவையான உணவுகள் முன்கூட்டியே பதப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தீர்ந்துவிடும்.

பிற கோள்கள் மற்றும் பூமியில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள விண்வெளிப் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வாரங்கள், மாதங்கள் மற்றும் பல வருடங்கள் கூட ஆகலாம். அது போன்ற சூழலில்தான் இந்த விண்வெளி விவசாயம் கைகொடுக்கும்.

நாசாவின் கூற்றுப்படி, நீண்ட கால விண்வெளிப் பயணங்கள் மற்றும் பிற கோள்களில் மனிதர்கள் குடியேறுவதற்கு தேவையான தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பது ஒரு நிலையான உணவு ஆதாரமாக இருக்கும்.

விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் ஆக்ஸிஜன் மற்றும் நீரை மறுசுழற்சி செய்வதற்காகவும் அங்கே தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

தாவரங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன?

ஒரு தாவரம் வளர, சூரிய ஒளி, நீர், ஆக்ஸிஜன், மண் ஆகியன தேவைப்படுகின்றன. அதை விட முக்கியமாக புவியீர்ப்பு விசை தேவைப்படும். இந்த புவியீர்ப்பு விசைதான் வேர்களை கீழ்நோக்கி வளரச் செய்கிறது. இது தாவரங்கள் மண்ணில் உறுதியாக நிற்க உதவுகிறது. நிலத்திற்கு அடியில் இருந்து உறிஞ்சப்படும் நீர் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில், தாவரங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன?

நாசாவின் முயற்சிகள்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதில் முன்னோடியாக உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பல்வேறு பிரத்யேக ஆய்வுகளை நாசா செய்துள்ளது. அதன் மூலம், விண்வெளியில் பல்வேறு வகையான தாவரங்களை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முதல்படியாக, நாசா 2015 ஆம் ஆண்டு விண்வெளியில் எந்தெந்த மாதிரியான தாவரங்களை வளர்க்க முடியும் என்று சோதனை செய்ய தொடங்கியது. அமெரிக்காவின் ஃபேர்சைல்ட் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து 'கிரோயிங்க் பியாண்ட் எர்த்' என்ற திட்டத்தை நாசா தொடங்கியது.

இந்த திட்டத்தின் கீழ், விண்வெளி நிலையத்தில் உள்ளதைப் போன்ற ஒரு சூழலில் வெவ்வேறு தாவரங்களின் விதைகளை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

புவி ஈர்ப்பு இல்லாத சூழலில் தோட்டங்களை அமைக்கவும் நாசா சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 'வெஜ்ஜி' என்று அழைக்கப்படும் காய்கறி உற்பத்தி அமைப்பு, விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் ஓர் அறையாகும்.

பூமியில் ஒரு தோட்டத்தைப் போலவே இங்கும் தாவரங்கள் விதையில் இருந்து தலையணை போன்ற ஒரு சிறிய அமைப்பில் வளர்க்கப்படுகின்றன. இந்த அமைப்பில் தாவரங்கள் வளர தேவையான மண் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கும். இதற்கு தேவையான தண்ணீர் மட்டும் பரமரிப்பாளர்களால் ஊற்றப்படும். இந்த அமைப்பின் மூலம் , கீரை, தக்காளி உள்ளிட்ட பல வகை பயிர்களை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

வெஜ்ஜி திட்டத்துடன் இணைந்த எக்ஸ்-ரூட்ஸ் என்ற திட்டத்தின் மூலம் தாவரங்கள் வளர தேவையான மண் மற்றும் பிற காரணிகள் இல்லாமல் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) அல்லது ஏரோபோனிக்ஸ் (Aeroponics) முறைப்படி விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.

ஹைட்ரோபோனிக்ஸ் முறைப்படி, தாவரங்கள் மண்ணில் இல்லாமல், நீர் மற்றும் ஊட்டச்சத்து கரைசலில் வளர்க்கப்படுகின்றன. ஏரோபோனிக்ஸ் முறையில், தாவரங்களின் வேர்கள் காற்றில் தொங்கவிடப்பட்டு, நீர் மற்றும் ஊட்டச்சத்துகள் தெளிக்கப்படுகின்றன.

மேம்பட்ட தாவர வாழ்விடம் எனப்படும் Advanced Plant Habitat என்ற மற்றொரு திட்டத்தின் மூலமாகவும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தாவரங்களை நாசா வளர்த்து வருகிறது. இந்த அமைப்பில், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சூழல்களும் சென்சார் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.

வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி, கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற தாவர வளர்ச்சிக்கு தேவையான உகந்த சூழல் இந்த அமைப்பில் உருவாக்கப்படுகிறது. LED விளக்குகள், நீர்ப்பாசன அமைப்பு போன்ற வசதிகள் கொண்ட இந்த அமைப்பில் குறைந்த அளவிலான பராமரிப்பே தேவைப்படும். விண்வெளி வீரர்கள் இதற்கென அதிக உழைப்பையும், நேரத்தையும் செலவிட வேண்டியதில்லை. இந்த அமைப்பின் மூலம் சிலி பெப்பர்ஸ் எனப்படும் குடை மிளகாயையும், முள்ளங்கியையும், சில பூக்களையும் நாசா விளைவித்துள்ளது.

இந்தியாவின் பங்கு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) இந்த ஆண்டின் தொடக்கத்தில் PSLV-C60 POEM-4 என்ற ராக்கெட்டில் "CROPS" எனப்படும் Compact Research Module for Orbital Plant Studies எனப்படும் விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த சோதனைக்காக, தாவரங்கள் வளர உகந்த சூழலில் 8 காராமணி விதைகள் முளைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. நான்காவது நாளில், இந்த விதைகள் முளைப்பது காணப்பட்டது. ஐந்தாவது நாளில், முளைத்த விதைகளில் இரண்டு இலைகள் தெரிந்தது. இதுவே இஸ்ரோவின் வெற்றியாக கருதப்பட்டது.

விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும், புதிய பயிர் வகைகளை உருவாக்குவதிலும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ESA) மற்றும் மற்ற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும் முயற்சி செய்து வருவதாக இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் பாண்டியன் கூறுகிறார்.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,ISRO

படக்குறிப்பு,இஸ்ரோவின் CROPS திட்டத்தில் விண்வெளியில் முளைத்த காராமணி பயிர்கள்

பூமியை விட விண்வெளியில் தாவரங்கள் வேகமாக வளர்வது ஏன்?

"விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க ஃபிரெஷ் உணவுகளை இதன் மூலம் வழங்க முடியும். விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய இந்த தாவரங்கள் உதவும். இவை குறைவான அளவே இருந்தாலும் இயற்கையான முறையில் இருப்பதால் அவர்களின் உடல்நலனுக்கு நன்மை மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கும்", என்கிறார் பாண்டியன்.

விண்வெளியில் தாவரங்களை விரைவாக விளைவிக்க முடியும் என்று தெரிவிக்கிறார் அவர்.

"உதாரணமாக பூமியில் பயிரிடும் போது, தாவரங்களுக்கு வைக்கப்படும் உரம் மழை போன்ற காரணிகளால் அடித்து செல்லப்படலாம் அல்லது தாவரங்கள் அதனை உறிஞ்ச நீண்ட நேரம் எடுக்கலாம். ஆனால் விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் திட்டங்களின் மூலம், தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதனால் தாவரங்கள் அவற்றை வேகமாக உறிஞ்சி இயல்பைவிட விரைவாகவே அவை வளர்கின்றன", என்று விளக்கினார் பாண்டியன்.

இந்த திட்டங்கள் மூலம் பூமியில் உள்ள விவசாய முறைகளை மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். Spin-off technology முறையில் விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் புதுவித முயற்சிகளை பூமியில் செய்யப்படும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்தலாம் மற்றும் விளைச்சலை பெருக்கலாம் என்றும் பாண்டியன் கூறினார்.

Spin-off technology என்பது குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக வகுக்கப்பட்ட ஒரு திட்டம், பின்னர் மற்ற துறைகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். உதாரணமாக நாசாவால் விண்வெளி வீரர்களின் இருக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட "மெமரி ஃபோம்" (Memory Foam) தொழில்நுட்பம், இன்று மெத்தைகள் மற்றும் தலையணை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

"எப்போதும் இயந்திரங்களைச் சுற்றியே இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு, ஆராய்ச்சி செய்வதைத் தவிர இந்த தாவரங்களை பராமரிப்பது மனதை அமைதிப்படுத்த உதவும். விண்வெளி வீரர்களின் பணிச் சுமை, மற்றும் தனிமை உணர்வை குறைத்து அவர்கள் மகிழ்ச்சியடைய இது ஒரு காரணியாக இருக்கும்" என்று உளவியல் ரீதியாகவும் விண்வெளி வீரர்களுக்கு இது பலன் தருவதாக கூறுகிறார் பாண்டியன்.

தற்போது வெறும் சோதனைக்காக சிறிய அளவிலே விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

"இந்த திட்டங்கள் இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தப்படவில்லை. அவ்வாறு முழு வீச்சில் இது நடந்தால் விண்வெளிக்கு செல்லும் போது, அதிக அளவிலான உணவு பொருட்களை எடுத்துச் செல்வதை குறைக்க முடியும். மனிதர்கள் விண்வெளியிலும், மற்ற கோள்களிலும் வாழ்வதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை முழுமையாக சோதனை செய்து செயல்படுத்த முடியும்", என்று பாண்டியன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c0jg3zl6zx6o

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 24 மார்ச் 2025, 05:44 GMT சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 19 ஆம் தேதி பூமிக்கு திரும்பினார். அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது, விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். 'பிளான்ட் ஹேபிடட் -07' என்ற திட்டத்தின் கீழ், புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் அவர் 'ரோமெயின் லெட்யூஸ்' எனப்படும் ஒரு வகை கீரைச் செடியை வளர்த்தார். விண்வெளியில் தங்கும் வீரர்கள், தங்களுக்கான உணவை பூமியில் இருந்து எடுத்துச் செல்லும் போதிலும், விண்வெளியில் தாவரங்களை வளர்க்க ஏன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன? விண்வெளியில் தாவரங்கள் வளருமா? பட மூலாதாரம்,NASA விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் ஆய்வு ஏன்? விண்வெளியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களில் விண்வெளி விவசாயமும் ஒன்று. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) விவசாயம் குறித்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விண்வெளி வீரர்களுக்காக, பூமியில் இருந்து வரும்போதே அவர்களுக்கு தேவையான உணவுகள் முன்கூட்டியே பதப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தீர்ந்துவிடும். பிற கோள்கள் மற்றும் பூமியில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள விண்வெளிப் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வாரங்கள், மாதங்கள் மற்றும் பல வருடங்கள் கூட ஆகலாம். அது போன்ற சூழலில்தான் இந்த விண்வெளி விவசாயம் கைகொடுக்கும். நாசாவின் கூற்றுப்படி, நீண்ட கால விண்வெளிப் பயணங்கள் மற்றும் பிற கோள்களில் மனிதர்கள் குடியேறுவதற்கு தேவையான தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பது ஒரு நிலையான உணவு ஆதாரமாக இருக்கும். விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் ஆக்ஸிஜன் மற்றும் நீரை மறுசுழற்சி செய்வதற்காகவும் அங்கே தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு - சிபிஐ முடிவறிக்கை குறித்து ரியா சக்ரபர்த்தியின் வழக்கறிஞர் கூறுவது என்ன?23 மார்ச் 2025 கோவையில் இயங்காத என்டிசி மில்கள் - வேலை, ஊதியமின்றி பல ஆயிரம் தொழிலாளர்கள் தவிப்பு23 மார்ச் 2025 பட மூலாதாரம்,NASA தாவரங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன? ஒரு தாவரம் வளர, சூரிய ஒளி, நீர், ஆக்ஸிஜன், மண் ஆகியன தேவைப்படுகின்றன. அதை விட முக்கியமாக புவியீர்ப்பு விசை தேவைப்படும். இந்த புவியீர்ப்பு விசைதான் வேர்களை கீழ்நோக்கி வளரச் செய்கிறது. இது தாவரங்கள் மண்ணில் உறுதியாக நிற்க உதவுகிறது. நிலத்திற்கு அடியில் இருந்து உறிஞ்சப்படும் நீர் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில், தாவரங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன? நாசாவின் முயற்சிகள் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதில் முன்னோடியாக உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பல்வேறு பிரத்யேக ஆய்வுகளை நாசா செய்துள்ளது. அதன் மூலம், விண்வெளியில் பல்வேறு வகையான தாவரங்களை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் முதல்படியாக, நாசா 2015 ஆம் ஆண்டு விண்வெளியில் எந்தெந்த மாதிரியான தாவரங்களை வளர்க்க முடியும் என்று சோதனை செய்ய தொடங்கியது. அமெரிக்காவின் ஃபேர்சைல்ட் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து 'கிரோயிங்க் பியாண்ட் எர்த்' என்ற திட்டத்தை நாசா தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், விண்வெளி நிலையத்தில் உள்ளதைப் போன்ற ஒரு சூழலில் வெவ்வேறு தாவரங்களின் விதைகளை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. புவி ஈர்ப்பு இல்லாத சூழலில் தோட்டங்களை அமைக்கவும் நாசா சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 'வெஜ்ஜி' என்று அழைக்கப்படும் காய்கறி உற்பத்தி அமைப்பு, விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் ஓர் அறையாகும். பூமியில் ஒரு தோட்டத்தைப் போலவே இங்கும் தாவரங்கள் விதையில் இருந்து தலையணை போன்ற ஒரு சிறிய அமைப்பில் வளர்க்கப்படுகின்றன. இந்த அமைப்பில் தாவரங்கள் வளர தேவையான மண் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கும். இதற்கு தேவையான தண்ணீர் மட்டும் பரமரிப்பாளர்களால் ஊற்றப்படும். இந்த அமைப்பின் மூலம் , கீரை, தக்காளி உள்ளிட்ட பல வகை பயிர்களை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது. இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள் - தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்திய ஜனாதிபதி23 மார்ச் 2025 சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்?23 மார்ச் 2025 பட மூலாதாரம்,NASA வெஜ்ஜி திட்டத்துடன் இணைந்த எக்ஸ்-ரூட்ஸ் என்ற திட்டத்தின் மூலம் தாவரங்கள் வளர தேவையான மண் மற்றும் பிற காரணிகள் இல்லாமல் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) அல்லது ஏரோபோனிக்ஸ் (Aeroponics) முறைப்படி விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஹைட்ரோபோனிக்ஸ் முறைப்படி, தாவரங்கள் மண்ணில் இல்லாமல், நீர் மற்றும் ஊட்டச்சத்து கரைசலில் வளர்க்கப்படுகின்றன. ஏரோபோனிக்ஸ் முறையில், தாவரங்களின் வேர்கள் காற்றில் தொங்கவிடப்பட்டு, நீர் மற்றும் ஊட்டச்சத்துகள் தெளிக்கப்படுகின்றன. மேம்பட்ட தாவர வாழ்விடம் எனப்படும் Advanced Plant Habitat என்ற மற்றொரு திட்டத்தின் மூலமாகவும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தாவரங்களை நாசா வளர்த்து வருகிறது. இந்த அமைப்பில், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சூழல்களும் சென்சார் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி, கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற தாவர வளர்ச்சிக்கு தேவையான உகந்த சூழல் இந்த அமைப்பில் உருவாக்கப்படுகிறது. LED விளக்குகள், நீர்ப்பாசன அமைப்பு போன்ற வசதிகள் கொண்ட இந்த அமைப்பில் குறைந்த அளவிலான பராமரிப்பே தேவைப்படும். விண்வெளி வீரர்கள் இதற்கென அதிக உழைப்பையும், நேரத்தையும் செலவிட வேண்டியதில்லை. இந்த அமைப்பின் மூலம் சிலி பெப்பர்ஸ் எனப்படும் குடை மிளகாயையும், முள்ளங்கியையும், சில பூக்களையும் நாசா விளைவித்துள்ளது. இந்தியாவின் பங்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) இந்த ஆண்டின் தொடக்கத்தில் PSLV-C60 POEM-4 என்ற ராக்கெட்டில் "CROPS" எனப்படும் Compact Research Module for Orbital Plant Studies எனப்படும் விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த சோதனைக்காக, தாவரங்கள் வளர உகந்த சூழலில் 8 காராமணி விதைகள் முளைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. நான்காவது நாளில், இந்த விதைகள் முளைப்பது காணப்பட்டது. ஐந்தாவது நாளில், முளைத்த விதைகளில் இரண்டு இலைகள் தெரிந்தது. இதுவே இஸ்ரோவின் வெற்றியாக கருதப்பட்டது. விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும், புதிய பயிர் வகைகளை உருவாக்குவதிலும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ESA) மற்றும் மற்ற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும் முயற்சி செய்து வருவதாக இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் பாண்டியன் கூறுகிறார். '4-5 சாக்கு மூட்டைகளில் பணம்': டெல்லி ஐகோர்ட் நீதிபதி சர்ச்சை பற்றி உச்ச நீதிமன்றம் அறிக்கை23 மார்ச் 2025 அக்பரை பின்பற்றுமாறு ஔரங்கசீப்பை அறிவுறுத்திய சிவாஜி - ஒரு வரலாற்றுப் பார்வை23 மார்ச் 2025 பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,இஸ்ரோவின் CROPS திட்டத்தில் விண்வெளியில் முளைத்த காராமணி பயிர்கள் பூமியை விட விண்வெளியில் தாவரங்கள் வேகமாக வளர்வது ஏன்? "விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க ஃபிரெஷ் உணவுகளை இதன் மூலம் வழங்க முடியும். விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய இந்த தாவரங்கள் உதவும். இவை குறைவான அளவே இருந்தாலும் இயற்கையான முறையில் இருப்பதால் அவர்களின் உடல்நலனுக்கு நன்மை மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கும்", என்கிறார் பாண்டியன். விண்வெளியில் தாவரங்களை விரைவாக விளைவிக்க முடியும் என்று தெரிவிக்கிறார் அவர். "உதாரணமாக பூமியில் பயிரிடும் போது, தாவரங்களுக்கு வைக்கப்படும் உரம் மழை போன்ற காரணிகளால் அடித்து செல்லப்படலாம் அல்லது தாவரங்கள் அதனை உறிஞ்ச நீண்ட நேரம் எடுக்கலாம். ஆனால் விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் திட்டங்களின் மூலம், தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதனால் தாவரங்கள் அவற்றை வேகமாக உறிஞ்சி இயல்பைவிட விரைவாகவே அவை வளர்கின்றன", என்று விளக்கினார் பாண்டியன். இந்த திட்டங்கள் மூலம் பூமியில் உள்ள விவசாய முறைகளை மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். Spin-off technology முறையில் விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் புதுவித முயற்சிகளை பூமியில் செய்யப்படும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்தலாம் மற்றும் விளைச்சலை பெருக்கலாம் என்றும் பாண்டியன் கூறினார். Spin-off technology என்பது குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக வகுக்கப்பட்ட ஒரு திட்டம், பின்னர் மற்ற துறைகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். உதாரணமாக நாசாவால் விண்வெளி வீரர்களின் இருக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட "மெமரி ஃபோம்" (Memory Foam) தொழில்நுட்பம், இன்று மெத்தைகள் மற்றும் தலையணை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. சுனிதா வில்லியம்ஸ்: 'விண்வெளியில் எப்போதும் பதற்றம், குறைவான தூக்கம்' - 12 ஆண்டுகளுக்கு முன் என்ன கூறினார்?20 மார்ச் 2025 சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?21 மார்ச் 2025 பட மூலாதாரம்,NASA "எப்போதும் இயந்திரங்களைச் சுற்றியே இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு, ஆராய்ச்சி செய்வதைத் தவிர இந்த தாவரங்களை பராமரிப்பது மனதை அமைதிப்படுத்த உதவும். விண்வெளி வீரர்களின் பணிச் சுமை, மற்றும் தனிமை உணர்வை குறைத்து அவர்கள் மகிழ்ச்சியடைய இது ஒரு காரணியாக இருக்கும்" என்று உளவியல் ரீதியாகவும் விண்வெளி வீரர்களுக்கு இது பலன் தருவதாக கூறுகிறார் பாண்டியன். தற்போது வெறும் சோதனைக்காக சிறிய அளவிலே விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. "இந்த திட்டங்கள் இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தப்படவில்லை. அவ்வாறு முழு வீச்சில் இது நடந்தால் விண்வெளிக்கு செல்லும் போது, அதிக அளவிலான உணவு பொருட்களை எடுத்துச் செல்வதை குறைக்க முடியும். மனிதர்கள் விண்வெளியிலும், மற்ற கோள்களிலும் வாழ்வதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை முழுமையாக சோதனை செய்து செயல்படுத்த முடியும்", என்று பாண்டியன் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0jg3zl6zx6o

கணித வினாத்தாள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட 80 வயது முதியவரான பரீட்சார்த்தி

3 months 2 weeks ago
24 MAR, 2025 | 07:10 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதும் 80 வயது முதியவர் ஒருவர், கணிதத் தேர்வுத் தாள் குறித்து அதிருப்தி தெரிவித்த பின்னர், கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்திக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த முதியவர், பொறியாளர்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கணிதப் பாடத்திற்கான வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறினார். முன்னர், கலை, வணிகம் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனித்தனி கணிதத் தேர்வுத் தாள்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், இப்போது அனைத்து மாணவர்களுக்கும் பொறியாளர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வினாத்தாள்கள் வழங்கப்படுகின்றன. இது நியாயமற்றது மற்றும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். பொதுவான வினாத்தாளுக்குப் பதிலாக, பாடப் பிரிவுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கணித வினாத்தாள்களை வழங்கும் முறையை மீண்டும் தொடங்குமாறு அந்த முதியவர் வலியுறுத்தினார். மேலும், கல்விக் கட்டண முறையை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/210104

கணித வினாத்தாள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட 80 வயது முதியவரான பரீட்சார்த்தி

3 months 2 weeks ago

24 MAR, 2025 | 07:10 PM

image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதும் 80 வயது முதியவர் ஒருவர், கணிதத் தேர்வுத் தாள் குறித்து அதிருப்தி தெரிவித்த பின்னர், கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்திக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த முதியவர், பொறியாளர்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கணிதப் பாடத்திற்கான வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறினார்.

முன்னர், கலை, வணிகம் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனித்தனி கணிதத் தேர்வுத் தாள்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், இப்போது அனைத்து மாணவர்களுக்கும் பொறியாளர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வினாத்தாள்கள் வழங்கப்படுகின்றன. இது நியாயமற்றது மற்றும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுவான வினாத்தாளுக்குப் பதிலாக, பாடப் பிரிவுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கணித வினாத்தாள்களை வழங்கும் முறையை மீண்டும் தொடங்குமாறு அந்த முதியவர் வலியுறுத்தினார். மேலும், கல்விக் கட்டண முறையை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/210104

தனியார், அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட வேண்டிய 36 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதியை பெற புதிய தொழில் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுப்பார் - மஹிந்த ஜயசிங்க

3 months 2 weeks ago

24 MAR, 2025 | 07:08 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட வேண்டிய 36 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதி இருந்து வருகிறது. அதனை பெற்றுக்கொள்ள புதிய தொழில் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுப்பார் எனற் நம்பிக்கை இருக்கிறது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

தொழில் திணைக்களத்தின் புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள எச்.எம்.டி.என்.கே. வட்டலியத்த திங்கட்கிழமை (24)  தொழில் அமைச்சில் கடமைகளை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

தொழில் அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் தொழில் திணைக்களத்திற்கு பாரியதொரு பொறுப்பு இருந்து வருகிறது. வேலை செய்யும் மக்களுக்காக அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக புதிய தொழில் ஆணையாளர் உள்ளிட்ட பாரியாலய ஊழியர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.

ஆளும் அரசாங்கம் தொழிலாளர்களின் நலனோம்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக தொழில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் வேலைத்தலங்களில் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சிறுவர் தொழிலாளர்களை அகற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

இதற்கு மேலதிகமாக 22ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட வேண்டிய ஊழியர் சேமலாப நிதி பாரியதொரு தொகை இருக்கிறது. அது 36 பில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டிருக்கிறது. 

அந்த பணத்தை அறிவிட்டுக்கொள்ள தொழில் திணைக்களத்துக்கு பாரியதொரு பொறுப்பு இருக்கிறது. அரசாங்கம் என்றவகையில் இந்த பணத்தை பெற்றுக்கொள்ள பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்போம். புதிய தொழில் ஆணையாளர் நாயகம் இந்த அனைத்து பொறுப்புக்களையும் முன்னெடுப்பார் என நாங்கள் நம்புகிறோம்.

https://www.virakesari.lk/article/210105

தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது!

3 months 2 weeks ago
யாழில் மின்கலங்களை திருடிய குற்றத்தில் கைதான கடற்படை முன்னாள் சிப்பாய் உட்பட ஐவருக்கும் விளக்கமறியல் 24 MAR, 2025 | 05:59 PM யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின்கலங்களை தொடர்ச்சியாக திருடிவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் சிப்பாய் உட்பட ஐந்து பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்புக்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் கலங்கள் தொடர்ச்சியாக களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குரிய பொலிஸ் நிலையங்களில் இந்த நிறுவனங்கள் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தன. முறைப்பாடுகளின் பிரகாரம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளின் தர்சனா தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், மின்கலன்களை திருடியவர்கள் அம்பாறை பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற விசேட பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை அம்பாறையில் இருந்து கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்று, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தவேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படை முன்னாள் சிப்பாய் என்பதும், மற்றுமொருவர் களவாடப்பட்ட மின்கலங்களை கொள்வனவு செய்தவர் என்பதும் ஏனைய மூவரும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளன. சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 192 மின்கலங்களை திருடியுள்ளனர் எனவும் திருடப்பட்ட மின்கலம் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபாவுக்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசாரணைகளின் பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், ஐவரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளை திருடப்பட்ட மின்கலங்களை பொலிஸார் கைப்பற்றியதோடு, அவற்றை நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/210088

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு

3 months 2 weeks ago
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு Published By: Rajeeban 24 Mar, 2025 | 09:05 PM இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரிட்டன் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரிட்டன் இன்று இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. வெளிநாடுகளில் ஸ்திரதன்மையை ஊக்குவிப்பது எங்களின் தேசிய பாதுகாப்பிற்குஉகந்த விடயம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து இலங்கையில் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் பிரிட்டன் எப்போதும் ஈடுபட்டுவந்துள்ளது. பிரிட்டனால் தடைவிதிக்கப்பட்டவர்கள் முன்னாள் இராணுவதளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட, முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜெயசூரிய.பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் கருணா அம்மான்.இவர் பின்னர் அதிலிருந்து பிரிந்து, துணை இராணுவக்குழுவை உருவாக்கினார் அந்த அமைப்பு இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டது. https://www.virakesari.lk/article/210107 UK sanctions for human rights violations and abuses during the Sri Lankan civil war The UK has today sanctioned figures responsible for serious human rights violations and abuses during the civil war in Sri Lanka. Foreign, Commonwealth & Development Office the UK sanctions former Sri Lankan commanders and an ex–Liberation Tigers of Tamil Eelam (LTTE) commander responsible for serious human rights violations and abuses during the civil war sanctions aim to seek accountability for serious human rights violations and abuses, committed during the civil war, and to prevent a culture of impunity UK is committed to working with new Sri Lankan government on human rights, welcoming their commitments to national unity The UK government has imposed sanctions on 4 individuals responsible for serious human rights abuses and violations during the Sri Lanka civil war, including extrajudicial killings, torture and/or perpetration of sexual violence. The individuals sanctioned by the UK today include former senior Sri Lankan military commanders, and a former LTTE military commander who later led the paramilitary Karuna Group, operating on behalf of the Sri Lankan military against the LTTE. The measures, which include UK travel bans and asset freezes, target individuals responsible for a range of violations and abuses, such as extrajudicial killings, during the civil war. Secretary of State for Foreign, Commonwealth and Development Affairs, David Lammy, said: During her January visit to Sri Lanka, Minister for the Indo-Pacific, Catherine West MP, held constructive discussions on human rights with the Prime Minister, Foreign Minister, civil society organisations, as well as political leaders in the north of Sri Lanka. For communities to move forward together, there must be acknowledgement, and accountability for past wrongdoing, which the sanctions listings introduced today will support. We want all Sri Lanka communities to be able to grow and prosper. The UK remains committed to working constructively with the Sri Lankan Government on human rights improvements as well as their broader reform agenda including economic growth and stability. As part of our Plan for Change, the UK recognises that promoting stability overseas is good for our national security. The UK has long led international efforts to promote accountability in Sri Lanka alongside partners in the Core Group on Sri Lanka at the UN Human Rights Council, which includes Canada, Malawi, Montenegro, and North Macedonia. Background Those sanctioned are: former Head of the Sri Lankan Armed Forces, Shavendra Silva former Navy Commander, Wasantha Karannagoda former Commander of the Sri Lankan Army, Jagath Jayasuriya former military commander of the terrorist group, the Liberation Tigers of Tamil Eelam, Vinayagamoorthy Muralitharan. Also known as Karuna Amman, he subsequently created and led the paramilitary Karuna Group, which worked on behalf of the Sri Lankan Army The UK has supported Sri Lanka’s economic reform through the International Monetary Fund (IMF) programme, supporting debt restructuring as a member of Sri Lanka’s Official Creditor Committee and providing technical assistance to Sri Lanka’s Inland Revenue Department. The UK and Sri Lanka share strong cultural, economic and people to people ties, including through our educational systems. The UK has widened educational access in Sri Lanka through the British Council on English language training and work on transnational education to offer internationally accredited qualifications. View the full UK Sanctions List. https://www.gov.uk/government/news/uk-sanctions-for-human-rights-violations-and-abuses-during-the-sri-lankan-civil-war

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு

3 months 2 weeks ago

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு

Published By: Rajeeban

24 Mar, 2025 | 09:05 PM

image

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரிட்டன் மேலும் தெரிவித்துள்ளதாவது

பிரிட்டன் இன்று இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

வெளிநாடுகளில் ஸ்திரதன்மையை ஊக்குவிப்பது எங்களின் தேசிய  பாதுகாப்பிற்குஉகந்த விடயம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து இலங்கையில் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் பிரிட்டன் எப்போதும் ஈடுபட்டுவந்துள்ளது.

பிரிட்டனால் தடைவிதிக்கப்பட்டவர்கள்

முன்னாள் இராணுவதளபதி சவேந்திர சில்வா,

முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட, முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜெயசூரிய.பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் கருணா அம்மான்.இவர் பின்னர் அதிலிருந்து பிரிந்து, துணை இராணுவக்குழுவை உருவாக்கினார் அந்த அமைப்பு இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டது.

https://www.virakesari.lk/article/210107

UK sanctions for human rights violations and abuses during the Sri Lankan civil war

The UK has today sanctioned figures responsible for serious human rights violations and abuses during the civil war in Sri Lanka.

Foreign, Commonwealth & Development Office

  • the UK sanctions former Sri Lankan commanders and an ex–Liberation Tigers of Tamil Eelam (LTTE) commander responsible for serious human rights violations and abuses during the civil war

  • sanctions aim to seek accountability for serious human rights violations and abuses, committed during the civil war, and to prevent a culture of impunity

  • UK is committed to working with new Sri Lankan government on human rights, welcoming their commitments to national unity

The UK government has imposed sanctions on 4 individuals responsible for serious human rights abuses and violations during the Sri Lanka civil war, including extrajudicial killings, torture and/or perpetration of sexual violence. 

The individuals sanctioned by the UK today include former senior Sri Lankan military commanders, and a former LTTE military commander who later led the paramilitary Karuna Group, operating on behalf of the Sri Lankan military against the LTTE. 

The measures, which include UK travel bans and asset freezes, target individuals responsible for a range of violations and abuses, such as extrajudicial killings, during the civil war.

Secretary of State for Foreign, Commonwealth and Development Affairs, David Lammy, said: 

The UK government is committed to human rights in Sri Lanka, including seeking accountability for human rights violations and abuses which took place during the civil war, and which continue to have an impact on communities today.

I made a commitment during the election campaign to ensure those responsible are not allowed impunity. This decision ensures that those responsible for past human rights violations and abuses are held accountable.

The UK government looks forward to working with the new Sri Lankan government to improve human rights in Sri Lanka, and welcomes their commitments on national unity.

During her January visit to Sri Lanka, Minister for the Indo-Pacific, Catherine West MP, held constructive discussions on human rights with the Prime Minister, Foreign Minister, civil society organisations, as well as political leaders in the north of Sri Lanka.   

For communities to move forward together, there must be acknowledgement, and accountability for past wrongdoing, which the sanctions listings introduced today will support. We want all Sri Lanka communities to be able to grow and prosper. 

The UK remains committed to working constructively with the Sri Lankan Government on human rights improvements as well as their broader reform agenda including economic growth and stability. As part of our Plan for Change, the UK recognises that promoting stability overseas is good for our national security. 

The UK has long led international efforts to promote accountability in Sri Lanka alongside partners in the Core Group on Sri Lanka at the UN Human Rights Council, which includes Canada, Malawi, Montenegro, and North Macedonia.  

Background

Those sanctioned are:  

  • former Head of the Sri Lankan Armed Forces, Shavendra Silva

  • former Navy Commander, Wasantha Karannagoda

  • former Commander of the Sri Lankan Army, Jagath Jayasuriya 

  • former military commander of the terrorist group, the Liberation Tigers of Tamil Eelam, Vinayagamoorthy Muralitharan. Also known as Karuna Amman, he subsequently created and led the paramilitary Karuna Group, which worked on behalf of the Sri Lankan Army

The UK has supported Sri Lanka’s economic reform through the International Monetary Fund (IMF) programme, supporting debt restructuring as a member of Sri Lanka’s Official Creditor Committee and providing technical assistance to Sri Lanka’s Inland Revenue Department. 

The UK and Sri Lanka share strong cultural, economic and people to people ties, including through our educational systems. The UK has widened educational access in Sri Lanka through the British Council on English language training and work on transnational education to offer internationally accredited qualifications.

View the full UK Sanctions List.

https://www.gov.uk/government/news/uk-sanctions-for-human-rights-violations-and-abuses-during-the-sri-lankan-civil-war

பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார் - ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர்

3 months 2 weeks ago
உலகம் அணுவாயுதப் போருக்கு மிக நெருங்கி வந்த ஒரு தருணம் இக்கட்டுரை குறிப்பிடும் 1983 காலப் பகுதி. Able Archer என்று பெயரிடப் பட்ட இந்த நேட்டோ ஒத்திகை ஒரு உண்மையான நேட்டோ தாக்குதல் என்ற நம்பிக்கையை அப்போது சோவியத் தலைவராக இருந்த யூரி அந்த்ரபோவ் தானும் நம்பி, தன்னைச் சுற்றியிருப்போரையும் நம்ப வைத்தார். இப்படி ஒத்திகைக்கும், தாக்குதலுக்கும் வித்தியாசம் காண இயலாத அந்த்ரபோவ் ஒரு முன்னாள் கேஜிபி தலைவர் என்பது ஆச்சரியமான விடயம். இந்த இரட்டை உளவாளி இல்லாதிருந்திருந்தால், ஐரோப்பா மீது அணுவாயுத ஏவுகணைத் தாக்குதல் போலந்தினுள் இருந்து வந்திருக்கும். இந்த விளிம்பு நிலைக்கு பனிப்போர் சென்ற பின்னர் தான், றேகனும் தன் அணுகுமுறையை மாற்றிக் கொண்டார். சோவியத்தை "evil empire" என்று அழைப்பதை நிறுத்தி, அணுவாயுதப் போட்டியையும் குறைக்கும் முயற்சிகளை ஆரம்பித்தார். "பரஸ்பர அழிவு-Mutually Assured Destruction (MAD) பற்றிய அச்சம் அணுவாயுதப் போரைத் தவிர்க்கும் வழி" என்பதையும் றேகன், இந்த அரும்பொட்டில் தவிர்த்த அழிவின் பின்னர் நிராகரிக்க ஆரம்பித்தார்.

வவுனியாவில் காசநோயால் கடந்த வருடம் மூன்று பேர் இறப்பு; 58 பேர் பாதிப்பு - காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி

3 months 2 weeks ago
வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் 24 MAR, 2025 | 01:22 PM காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (24) வவுனியாவில் நடத்தப்பட்டது. வவுனியா, வைத்தியசாலை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பமான இந்த விழிப்புணர்வு ஊர்வலம் யாழ். வீதி, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி, கண்டி வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, பசார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக சென்று வைத்தியசாலையை அடைந்தது. இதன்போது காச நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டதோடு, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் தாதியர்கள், நூற்றுக்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210055

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
209 ந‌ல்ல‌ ஸ்கோர் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் கையில் தான் வெற்றி தோல்வி...................... ர‌ன்ஸ் அடிச்ச‌தெல்லாம் வெளி நாட்டு வீர‌ர்க‌ள் இந்திய‌ன் வீர‌ர்க‌ள் சுத‌ப்பி விட்டின‌ம்☹️..............................

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இன்று ல‌க்னோ அணி தோத்தா க‌ப்ட‌னும் ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ளும் தான் கார‌ண‌ம் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் குறைந்த‌ ஓவ‌ரில் கூடின‌ ர‌ன்ஸ் அடித்து இருந்தவை.............................