Aggregator

தையிட்டி போராட்டம்; இனவாதிகளுக்கு அரசு அடிபணிந்து செயற்படுகிறது என்கிறார் சரத் வீரசேகர

3 months 1 week ago
தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விகாரையில் நேற்று முன்தினம் புதிதாக ஒரு விகாரைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது 29 பௌத்த பிக்குகள் பூஜை வழிபாட்டில் கலந்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்கலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகிய நிலையில் காலை 07 மணியளவில் நேற்று முன்தினம் திஸ்ஸ விகாரையின் முன்பாக தமிழ் மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு கூடியிருந்த இராணுவத்தினர் உடனடியாக விகாரையின் வளாகத்தில் இருந்து வெளியேறினர். தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் அவ்விடயத்தை விட்டு வெளியேறுமாறு இராணுவத்துக்கு கட்டளை பிறப்பித்தது யார்?, ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு மாத்திரமே அதிகாரம் உண்டு. சிங்கள பௌத்த நாட்டில் பௌத்த விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது. ஆகவே இதன் உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://thinakkural.lk/article/316413

தையிட்டி போராட்டம்; இனவாதிகளுக்கு அரசு அடிபணிந்து செயற்படுகிறது என்கிறார் சரத் வீரசேகர

3 months 1 week ago

தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விகாரையில் நேற்று முன்தினம் புதிதாக ஒரு விகாரைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது 29 பௌத்த பிக்குகள் பூஜை வழிபாட்டில் கலந்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்கலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகிய நிலையில் காலை 07 மணியளவில் நேற்று முன்தினம் திஸ்ஸ விகாரையின் முன்பாக தமிழ் மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு கூடியிருந்த இராணுவத்தினர் உடனடியாக விகாரையின் வளாகத்தில் இருந்து வெளியேறினர்.

தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் அவ்விடயத்தை விட்டு வெளியேறுமாறு இராணுவத்துக்கு கட்டளை பிறப்பித்தது யார்?,

ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு மாத்திரமே அதிகாரம் உண்டு.

சிங்கள பௌத்த நாட்டில் பௌத்த விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது.

ஆகவே இதன் உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

https://thinakkural.lk/article/316413

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை : பிரிட்டனின் தடைகள் குறித்து கனடாவின் நீதியமைச்சர்

3 months 1 week ago
Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 09:29 AM இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன். இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது. 2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும். https://www.virakesari.lk/article/210109

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை : பிரிட்டனின் தடைகள் குறித்து கனடாவின் நீதியமைச்சர்

3 months 1 week ago

Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 09:29 AM

image

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன்.

இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது.

2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது.

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும்.

https://www.virakesari.lk/article/210109

கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி தாக்குதல்; யாழில் நடந்த கொடூரம்

3 months 1 week ago
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கடை ஒன்றில் ‘கண்டோஸ்’ திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது; தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாயார் கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ளார். இந்நிலையில் குறித்த சிறுமி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றினை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில், கடை உரிமையாளர் திருடப்பட்டதாக கருதி குறித்த 10 வயது சிறுமியை சிறுநீர் கழியும் வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளார்ர். இந்நிலையில் சிறுமி வேதனை மற்றும் அவமானம் தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/316415

கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி தாக்குதல்; யாழில் நடந்த கொடூரம்

3 months 1 week ago

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கடை ஒன்றில் ‘கண்டோஸ்’ திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது;

தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாயார் கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றினை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில், கடை உரிமையாளர் திருடப்பட்டதாக கருதி குறித்த 10 வயது சிறுமியை சிறுநீர் கழியும் வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளார்ர்.

இந்நிலையில் சிறுமி வேதனை மற்றும் அவமானம் தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://thinakkural.lk/article/316415

செவ்வந்தியில் செவ்வந்தி

3 months 1 week ago
வடிவேலு பேக்கறி வாங்கின கதை வெளியிலை போனது போலை, சில கதைகள் எப்பிடி போகுது யாராலை போகுது எண்டு தெரியாது, ஆனால் முதலுக்கு சேதம் தான் 😁. ஒண்டுமே இல்லாத விசயங்கள் எத்தினையோ பேரைப் பிரிப்பதில் நம் ஊரவர்களுக்கு ஒரு வாலாயம். கை எல்லாம் சரியாகிட்டுதோ அண்ணை?

புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்!

3 months 1 week ago
🎧 மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ விபுலானந்தன் பிறந்த வீடம்மா இது வீணை கொடிபோட்ட நாடம்மா ஊருராய் கூத்தாடும் ஊரம்மா இங்ககே உயிர்வாழும் கலைச்செல்வம் ஊரம்மா ஏலேலோ,ஏலேலோ,ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ ஓடிவரும் உப்பாற்று வெள்ளத்திலே பாடல் ஒன்றுவரும் தேன்சுமந்து வள்ளத்திலே பாடிப் பாடி கதிரறுப்பார் கவிகளிலே எங்கள் பைந்தமிழ் வந்து விழும் செவிகளிலே ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ அம்மானை மகனுடன் கேட்கலையா நீங்கள் அழகான மகுடி பார்கலையா தேன்மதுர தலாட்டில் உறங்கலையா எங்கள்தேவியரின் வாய்ப் பேச்சில் மயங்கலையா மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ ஓடிவரும் உப்பாற்று வெள்ளத்திலே பாடல் ஒன்றுவரும் தேன்சுமந்து வள்ளத்திலே பாடிப் பாடி கதிரறுப்பார் கவிகளிலே எங்கள் பைந்தமிழ் வந்து விழும் செவிகளிலே ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ 👍🔔

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
எனக்கும் இன்று காலைதான் தெரியும், ஆடுகளம் தொடர்பாக இணையத்தில் உள்ளது, இந்த மைதானத்தில் சிகப்பு மற்றும் கறுப்பு நிற ஆடுகளங்கள் உள்ளது அதில் சிகப்பில் ஆடப்போகிறார்கள் என கூறப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கலந்து கொள்வது, எனக்கு வேறு ஆர்வம் பெரிதாக இருப்பதில்லை ஆனால் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளது, எனது உறவினர்கள் கூட கூறுவார்கள் (எனது சகோதரர்களின் குடும்பத்தினர்) எமது குடும்பத்தில் ஒரு வித்தியாசமான மனிதர் என அது மட்டுமல்ல மற்றவர்களும் கூறுவதாக அறிந்துள்ளேன் (கிறுக்கு பிடித்தவன் எனும் அர்த்தத்தில்🤣). சிகப்பு நிற மண் வேக பந்து வீச்சிற்கு ஏற்றது பந்து உயர்ந்து வரும் அத்துடன் விரைவாக காய்ந்துவிடும்,ஆடுகளம் வேகமாக உடைந்து விடும் ,மறுவளமாக கறுப்பு நிற ஆடுகளம் ஈரலிப்பினை தேக்கி வைக்கும் இரட்டைத்தன்மை ஆடுகளம் சென்னை போன்ற ஆடுகளம், விளையாடுவது கடினம் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும், இரண்டும் கலந்த ஆடுகளங்கள் ஒரு சரியான சமச்சீரான ஆடுகளமாக காணப்படும்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
அங்கதான் இருக்கு விளையாட்டு, சும்மா சுவாரசியத்திற்காக பில் டப் செய்கிறேன் தேவையில்லாமல் யோசித்து கவலைப்படாதீர்கள், பிறகு ரசோதரன் முதலுதவிதான் தேவைப்படும்.🤣

கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? - நிலாந்தன்

3 months 1 week ago
பரவாயில்லை இப்போதாவது விளங்கியதே. எங்களுக்கு சிங்கள இனவெறியன் இனப்படுகொலையாளன் பொன்சேகாவிற்கு முள்ளிவாய்க்கால் முடிந்து ஆறுமாதத்தில் காவடி எடுத்து வாக்கு குத்தும்போதே விளங்கிவிட்டது

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
நான் டெல்லியைத் தெரிவு செய்ததற்கு காரணம், அவர்களின் பிரபல்யமான பந்து வீச்சாளர்கள். ஸ்டார்க் (Starc) , அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, நடராஜன். இவர்களுடன் ராகுல்,faf du Plessis. ஆனால் ராகுலும் நடராஜனும் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. லக்னோவில் சிறந்த துடுப்பாட்டாளர்கள் இருந்தாலும் அவர்களின் சிறந்த 4 வேகப்பந்து வீச்சாளர்கள் காயப்பட்டு இருக்கிறார்கள்.

Am an atheist - சோம.அழகு

3 months 1 week ago
இது நடந்தது தமிழ்நாட்டில் அல்ல; அமெரிக்காவில் வாரத்தில் சுமார் ஒரு மணி நேரம் இயங்கும் ஒரு தமிழ்ப் பள்ளியில். ஆசிரியர் நான் அல்லன்; என் மகள் சோம.அழகு.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
தவறு நடந்திச்சா...மன்னிச்சுக்கோங்க நயினா...வாழ்க நம்ம துணைமுதல்வர் ஈழப்பிரியன்....மீண்டும் முதல்வராக வாழ்த்துக்கள்...இதெல்லாம் கிருபன்சார்..தில்லாலங்கடியால் வந்த மாறாட்டம்..கிருபன்சார்.. விரைவாக வந்து ...தேர்தல் முடிவுகளை அறிவியுங்கள்