Aggregator

சூரிய மின் சக்தி கட்டமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றில் மனு தாக்கல்

1 week 3 days ago

Published By: DIGITAL DESK 2

26 JUN, 2025 | 11:14 AM

image

சூரிய மின் சக்தி கட்டமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு செலுத்தப்படும் கட்டணத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்த்து, சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்கள் குழுவினால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மேல் நீதிமன்ற நீதிபதி கே. பிரியந்த பெர்னாண்டோ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றில் ஆஜரான மனுதாரர்கள் கூறியதாவது, 

ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை மின்சார சபை மற்றும்  இலங்கை மின்சார நிறுவனம் (LECO) ஆகியவை செலுத்தும் கட்டணத்தை அமைச்சரவை தன்னிச்சையாக குறைத்துள்ளது.

மின்சாரச் சட்டத்தின் கீழ், இவ்வாறான கட்டண மாற்றங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் (PUCSL) ஒப்புதல் அவசியம்.

ஆனால், மின்சார கட்டண மாற்றம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இருந்து எந்த ஒப்புதலும் பெறப்படவில்லை.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு  மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்த போதிலும், அரசாங்கம் அதைப் புறக்கணித்துள்ளது..

அமைச்சரவை தீர்மானத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு மின்சார கட்டண குறைப்பு நடைமுறைக்கு வருவது சட்டவிரோதமானது.

எனவே சூரிய மின் சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை திருத்தியமைக்க அமைச்சரவை எடுத்துள்ள முடிவை இரத்து செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான் இந்த மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/218484

இந்தியாவின் கேரள கடற்பரப்பில் ஏற்பட்ட கப்பல் விபத்து : பிளாஸ்ரிக் துகள்களின் மாசாக்கத்தால் இலங்கை கடற்பரப்பின் அழிவுக்கு பொறுப்புக்கூறுங்கள் - சிவில் சமூக அமைப்புகள்

1 week 3 days ago
26 JUN, 2025 | 07:13 AM அபிலாஷனி லெட்சுமன் இந்தியாவின் கேரள கடற்பரப்பில் இடம்பெற்ற MSC என்ற கப்பல் விபத்தினால் தொன் கணக்கான பிளாஸ்ரிக் துகள்கள் தென் ஆசிய கடற்பரப்பில் கலந்துள்ளளன. பிளாஸ்ரிக் துகள்களினாலான மாசாக்கத்தினால் இலங்கை பாதிக்கப்படுகின்றமையால் அதற்கான பொறுப்புக்கூறலை சிவில் சமூக அமைப்புக்கள் கப்பல் நிறுவனங்களிடம் கோருகின்றன. கொழும்பு 07 இல் அமைந்துள்ள தேசிய நூலகத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து தகவல் வெளியிடுகையிலேயே சிவில் அமைப்புக்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளன. “எக்ஸ்பிரஸ் பேரள் (X-Press Pearl) அனர்த்தம் இடம்பெற்று 4 ஆண்டுகளின் பின்னர் பிளாஸ்ரிக் துகள்கள் தெற்காசியா மற்றும் இலங்கைக் கரையோரங்களை அலைகளினூடு வந்தடைவதை கிறீன் பீஸ் தெற்காசியா வன்மையாக கண்டிக்கின்றது” என Centre for Environmental Justice இன் தலைவர் ஹேமந்த விதானகே தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும், தெரிவிக்கையில், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி எம். எஸ். சீ. எல்சா - 3 (MSC ELSA 3) எனும் கப்பல் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதே கடற்பரப்பில் ஜூன் 9 ஆம் திகதி முதல் தீப்பிடித்து எரிந்து வரும் மற்றொரு பாரிய சரக்குக் கப்பலான வான்ஹாய் 503 (WAN HAI 503) இலிருந்து மேலதிக கொள்கலன்கள் காணாமல் போனமையையும் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகினது. இதற்கு நாம் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். தெற்காசிய கடற்பரப்பில் சில வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க அளவு எரிபொருள், நச்சுப்பொருட்கள் மற்றும் பிளாஸ்ரிக் துகள்களைக் கொண்ட இரண்டு கொள்கலன் கப்பல் மூழ்கியிருப்பது அல்லது மூழ்கும் அபாயத்திற்கு உள்ளாகி இருப்பது என்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலமையாகும். பருவப்பெயர்ச்சிக் காலநிலை மற்றும் பருவகால நீரோட்டங்களால் ஆபத்தான பதார்த்தங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கையின் கடலோரப் பல்வகைமை மற்றும் உள்ளூர் சமூகங்களை நோக்கி நகர்ந்து வருகின்றது. இதனால் கடல்சார்குழல், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் பொருளாதாரங்களுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிறீன் பீஸ் (Greenpeace) மற்றும் பிற கூட்டணி அமைப்புக்கள் இந்தியாவின் இரண்டு மாநிலங்கள் மற்றும் இலங்கைக் கடற்கரையின் மாதிரிகளை பரிசோதனை செய்தபோது பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் MSC ELSA3 கப்பல் விபத்தினையே சுட்டிக் காட்டுகின்றன. "எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தத்திலிருந்தே இலங்கை இன்னும் மீளவில்லை. அவ்வாறிருக்க தற்போது இன்னொரு மாசாக்கத்தினை எதிர்கொள்கின்றோம். இது வெறும் விபத்து அல்ல. மாறாக இது ஒரு ஒழுங்குமுறையின் தோல்வி மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மையே ஆகும். எனவே மாசாக்கத்தை பொறுப்பேற்கச் செய்ய வலுவான பிராந்திய வழிமுறை எமக்கு தேவை என மேலும் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த உயிர்ப்பல்வகைமையியல் திட்டத்தின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியாளரும் வழிப்படுத்துனருமாகிய ககனி ரணசிங்க தெரிவிக்கையில், "ஏற்கனவே உள்ள பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன்மிக்க பிரதேசங்கள் மற்றும் கடலோர பிரதேசங்கள் எவ்வாறு இத்தகைய தவிர்க்கப்படக்கூடிய கப்பல் விபத்துக்களால் மோசமடைகின்றன என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது. பிளாஸ்ரிக்கின் துகள்கள் சிறியதாக இருந்தாலும் அவை எமது சுற்றாடல், சமூகம், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் அளவிடமுடியாதது. அவை நச்சுத் தன்மையை உறிஞ்சவும் வெளிவிடவும் கூடியவை, கடல்வாழ் உயிரினங்களின் சுவாசத்தை பாதிக்க கூடியவை, மற்றும் சூழலில் பல தசாப்த காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடியவை. பிளாஸ்ரிக் உற்பத்தியை நிறுத்த அல்லது ஒழுங்குமுறைப்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்காதுவிடின் நாம் எமது நீரை பிளாஸ்ரிக் கூழாக மாற்றிக்கொள்கின்றோம் என தெரிவித்தார். தெற்காசிய அமைப்பின் பிரசாரகர் அனிதா இதன்போது கருத்து தெரிவிக்கையில், "எக்ஸ்பிரஸ் பேர்ள்” இன் விபத்திற்கு நான்கு ஆண்டுகளின் பின்னர் இன்னொரு கப்பல் விபத்தினால் இலங்கையின் கரையோரம் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்குகின்றது. தன்னார்வலர்களினதும் பொது மக்கள் குழுவினதும் உதவியுடனும் அதனை மீட்டிருந்தோம். இலங்கை அரசாங்கம் தூய்மைப்படுத்தும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்த நிலையில் இத்தகைய அனர்த்தங்களுக்கு பொறுப்பான தனியார் நிறுவனங்கள் முழுமையாக பொறுப்பேற்காத போது தூய்மைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் செலவு வீணாக பொது மக்களின் மீதே சுமத்தப்படுகின்றது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். மேலும் "இந்த அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையின் தொடர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். கப்பலிற்குரிய தனியார் நிறுவனமே அதற்கான செலவை கொடுக்க வேண்டுமே தவிர மக்கள் அல்ல. இலங்கை அரசாங்கம் பொருளாதார நட்டத்திற்கும் உயிர்ப்பல்வகைமை இழப்பிற்கும் எம்.எஸ்.சி இனை பொறுப்பேற்க செய்ய வேண்டும்" என்றும் தெரிவித்தார். Climate Action Now அமைப்பின் சுற்றுச்சூழல்சார் செயற்பாட்டாளர் மெலனி குணதிலக தெரிவிக்கையில், எல்லைதாண்டிய பிளாஸ்ரிக் மாசுபாடு கடலினுள் சிந்தப்படும் பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் பிற அபாயகரமான பொருட்கள் ஆகியவை ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டும் இருப்பதில்லை. மாறாக அவை கடந்து பிராந்தியம் முழுவதும் எல்லைகளை உள்ள கடற்சூழலையும் கரையோரப் பிரதேசங்களையும் பாதிக்கின்றது. இந்த தொடர்ச்சியான சம்பவானது அபாயகரமான சரக்குகளின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பிளாஸ்ரிக் உற்பத்தியின் உலகளாவிய உற்பத்தியின் அதிகரிப்பையும் கட்டுப்படுத்துவதிலும் உள்ள அமைப்பு ரீதியான தோல்வியை வெளிப்படுத்துகின்றது. எனவே, அரசாங்கம் பிராந்தியங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மாசாக்கத்திற்கு காரணமான மாசாளர்களை பொறுப்பேற்கச் செய்யவும் சுகாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களை பாதுகாக்கவும் உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்புக்கள் மற்றும் கடல்வாழ் உயிரியல் பல்வகைமை ஆகியவற்றிற்கான அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கவும். தொடர்புடைய சர்வதேச விதிகளை ஆதரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார். எனவே, கிறீன்பீஸ் ஆனது மெடிரறேனியன் கப்பல் நிறுவனத்திடம் (MSC) இருந்து கப்பலிலிருந்த சரக்குப் பொருட்களின் முழுமையான வெளிப்படைத்தன்மையையும் விரைவான துப்பரவு நடவடிக்கையையும், விபத்தினால் ஏற்பட்ட தாக்கத்தின் சுதந்திரமான மதிப்பீட்டிற்கும் எம். எஸ். சீ எல்சா 3 கப்பல் விபத்தினால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு உயிர்ப்பல்வகைமை இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டு திட்டத்தை மேற்கொள்ளவும் வலியுறுத்துகின்றது. மேலும் எம். எஸ். சீ நிறுவனமானது அனர்த்தம் குறித்து இதுவரை எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளது. எனவே பொறுப்பு என்பது வெறும் வார்த்தை அல்ல என்பதும் எம். எஸ். சீ நிறுவனத்திற்கு நினைவூட்டுகின்றோம். https://www.virakesari.lk/article/218456

இந்தியாவின் கேரள கடற்பரப்பில் ஏற்பட்ட கப்பல் விபத்து : பிளாஸ்ரிக் துகள்களின் மாசாக்கத்தால் இலங்கை கடற்பரப்பின் அழிவுக்கு பொறுப்புக்கூறுங்கள் - சிவில் சமூக அமைப்புகள்

1 week 3 days ago

26 JUN, 2025 | 07:13 AM

image

அபிலாஷனி லெட்சுமன்

இந்தியாவின் கேரள கடற்பரப்பில் இடம்பெற்ற MSC என்ற கப்பல் விபத்தினால் தொன் கணக்கான பிளாஸ்ரிக்  துகள்கள் தென் ஆசிய கடற்பரப்பில் கலந்துள்ளளன. பிளாஸ்ரிக் துகள்களினாலான மாசாக்கத்தினால் இலங்கை பாதிக்கப்படுகின்றமையால் அதற்கான பொறுப்புக்கூறலை சிவில் சமூக அமைப்புக்கள் கப்பல் நிறுவனங்களிடம் கோருகின்றன.

WhatsApp_Image_2025-06-25_at_5.10.34_PM_

கொழும்பு 07 இல் அமைந்துள்ள தேசிய நூலகத்தில் புதன்கிழமை (25)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது  குறித்து தகவல் வெளியிடுகையிலேயே சிவில் அமைப்புக்கள்  மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளன.

“எக்ஸ்பிரஸ் பேரள்  (X-Press Pearl) அனர்த்தம் இடம்பெற்று 4 ஆண்டுகளின் பின்னர் பிளாஸ்ரிக் துகள்கள் தெற்காசியா மற்றும் இலங்கைக் கரையோரங்களை அலைகளினூடு வந்தடைவதை கிறீன் பீஸ் தெற்காசியா வன்மையாக கண்டிக்கின்றது”  என  Centre for Environmental Justice இன் தலைவர் ஹேமந்த விதானகே தெரிவித்தார். 

WhatsApp_Image_2025-06-25_at_5.10.22_PM_

இது குறித்து அவர் மேலும், தெரிவிக்கையில்,

2025 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி  எம். எஸ். சீ. எல்சா - 3 (MSC ELSA 3) எனும் கப்பல் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதே கடற்பரப்பில் ஜூன் 9 ஆம் திகதி முதல் தீப்பிடித்து எரிந்து வரும் மற்றொரு பாரிய சரக்குக் கப்பலான வான்ஹாய் 503 (WAN HAI 503) இலிருந்து மேலதிக கொள்கலன்கள் காணாமல் போனமையையும் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகினது. இதற்கு நாம் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

தெற்காசிய கடற்பரப்பில் சில வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க அளவு எரிபொருள், நச்சுப்பொருட்கள் மற்றும் பிளாஸ்ரிக் துகள்களைக் கொண்ட இரண்டு கொள்கலன் கப்பல் மூழ்கியிருப்பது அல்லது மூழ்கும் அபாயத்திற்கு உள்ளாகி இருப்பது என்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலமையாகும். 

பருவப்பெயர்ச்சிக் காலநிலை மற்றும் பருவகால நீரோட்டங்களால் ஆபத்தான பதார்த்தங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கையின் கடலோரப் பல்வகைமை மற்றும் உள்ளூர் சமூகங்களை நோக்கி நகர்ந்து வருகின்றது. இதனால் கடல்சார்குழல், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் பொருளாதாரங்களுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கிறீன் பீஸ் (Greenpeace) மற்றும் பிற கூட்டணி அமைப்புக்கள் இந்தியாவின் இரண்டு மாநிலங்கள் மற்றும் இலங்கைக் கடற்கரையின் மாதிரிகளை பரிசோதனை செய்தபோது பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் MSC ELSA3 கப்பல் விபத்தினையே சுட்டிக் காட்டுகின்றன.

"எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தத்திலிருந்தே இலங்கை இன்னும் மீளவில்லை. அவ்வாறிருக்க தற்போது இன்னொரு மாசாக்கத்தினை எதிர்கொள்கின்றோம். இது வெறும் விபத்து அல்ல. மாறாக இது ஒரு ஒழுங்குமுறையின் தோல்வி மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மையே ஆகும். எனவே மாசாக்கத்தை பொறுப்பேற்கச் செய்ய வலுவான பிராந்திய வழிமுறை எமக்கு தேவை என மேலும் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த உயிர்ப்பல்வகைமையியல் திட்டத்தின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியாளரும் வழிப்படுத்துனருமாகிய ககனி ரணசிங்க தெரிவிக்கையில்,

"ஏற்கனவே உள்ள பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன்மிக்க பிரதேசங்கள் மற்றும் கடலோர பிரதேசங்கள் எவ்வாறு இத்தகைய தவிர்க்கப்படக்கூடிய கப்பல் விபத்துக்களால் மோசமடைகின்றன என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது. 

பிளாஸ்ரிக்கின் துகள்கள் சிறியதாக இருந்தாலும் அவை எமது சுற்றாடல், சமூகம், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் அளவிடமுடியாதது. அவை நச்சுத் தன்மையை உறிஞ்சவும் வெளிவிடவும் கூடியவை, கடல்வாழ் உயிரினங்களின் சுவாசத்தை பாதிக்க கூடியவை, மற்றும் சூழலில் பல தசாப்த காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடியவை. 

பிளாஸ்ரிக் உற்பத்தியை நிறுத்த அல்லது ஒழுங்குமுறைப்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்காதுவிடின் நாம் எமது நீரை பிளாஸ்ரிக் கூழாக மாற்றிக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-06-25_at_5.10.23_PM.

தெற்காசிய அமைப்பின் பிரசாரகர் அனிதா இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

"எக்ஸ்பிரஸ் பேர்ள்”  இன் விபத்திற்கு நான்கு ஆண்டுகளின் பின்னர் இன்னொரு கப்பல் விபத்தினால் இலங்கையின் கரையோரம் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்குகின்றது. தன்னார்வலர்களினதும் பொது மக்கள் குழுவினதும் உதவியுடனும் அதனை மீட்டிருந்தோம். 

இலங்கை அரசாங்கம் தூய்மைப்படுத்தும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்த நிலையில் இத்தகைய அனர்த்தங்களுக்கு பொறுப்பான தனியார் நிறுவனங்கள் முழுமையாக பொறுப்பேற்காத போது தூய்மைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் செலவு வீணாக பொது மக்களின் மீதே சுமத்தப்படுகின்றது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

மேலும் "இந்த அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையின் தொடர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். கப்பலிற்குரிய தனியார் நிறுவனமே அதற்கான செலவை கொடுக்க வேண்டுமே தவிர மக்கள் அல்ல. இலங்கை அரசாங்கம் பொருளாதார நட்டத்திற்கும் உயிர்ப்பல்வகைமை இழப்பிற்கும் எம்.எஸ்.சி இனை பொறுப்பேற்க செய்ய வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

Climate Action Now அமைப்பின் சுற்றுச்சூழல்சார் செயற்பாட்டாளர் மெலனி குணதிலக தெரிவிக்கையில்,

எல்லைதாண்டிய பிளாஸ்ரிக் மாசுபாடு கடலினுள் சிந்தப்படும் பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் பிற அபாயகரமான பொருட்கள் ஆகியவை ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டும் இருப்பதில்லை. மாறாக அவை கடந்து பிராந்தியம் முழுவதும் எல்லைகளை உள்ள கடற்சூழலையும் கரையோரப் பிரதேசங்களையும் பாதிக்கின்றது.

இந்த தொடர்ச்சியான சம்பவானது அபாயகரமான சரக்குகளின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பிளாஸ்ரிக் உற்பத்தியின் உலகளாவிய உற்பத்தியின் அதிகரிப்பையும் கட்டுப்படுத்துவதிலும் உள்ள அமைப்பு ரீதியான தோல்வியை வெளிப்படுத்துகின்றது.

எனவே, அரசாங்கம் பிராந்தியங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மாசாக்கத்திற்கு காரணமான மாசாளர்களை பொறுப்பேற்கச் செய்யவும் சுகாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களை பாதுகாக்கவும் உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்புக்கள் மற்றும் கடல்வாழ் உயிரியல் பல்வகைமை ஆகியவற்றிற்கான அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கவும். தொடர்புடைய சர்வதேச விதிகளை ஆதரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

எனவே, கிறீன்பீஸ் ஆனது மெடிரறேனியன் கப்பல் நிறுவனத்திடம் (MSC) இருந்து கப்பலிலிருந்த சரக்குப் பொருட்களின் முழுமையான வெளிப்படைத்தன்மையையும் விரைவான துப்பரவு நடவடிக்கையையும், விபத்தினால் ஏற்பட்ட தாக்கத்தின் சுதந்திரமான மதிப்பீட்டிற்கும் எம். எஸ். சீ எல்சா 3 கப்பல் விபத்தினால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு உயிர்ப்பல்வகைமை இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டு திட்டத்தை மேற்கொள்ளவும் வலியுறுத்துகின்றது.

 மேலும் எம். எஸ். சீ நிறுவனமானது அனர்த்தம் குறித்து இதுவரை எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளது. எனவே பொறுப்பு என்பது வெறும் வார்த்தை அல்ல என்பதும் எம். எஸ். சீ நிறுவனத்திற்கு நினைவூட்டுகின்றோம்.

WhatsApp_Image_2025-06-25_at_5.10.25_PM.

WhatsApp_Image_2025-06-25_at_5.10.29_PM_

WhatsApp_Image_2025-06-25_at_5.10.29_PM.

WhatsApp_Image_2025-06-25_at_5.10.26_PM_

WhatsApp_Image_2025-06-25_at_5.10.34_PM.

WhatsApp_Image_2025-06-25_at_5.10.22_PM.

WhatsApp_Image_2025-06-25_at_5.10.18_PM.

WhatsApp_Image_2025-06-25_at_5.10.17_PM.

WhatsApp_Image_2025-06-25_at_5.10.19_PM.

WhatsApp_Image_2025-06-25_at_5.10.23_PM_

https://www.virakesari.lk/article/218456

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் யாழ்ப்பாணத்திற்கு வருகை

1 week 3 days ago
ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்ட செப்பேடு Published By: VISHNU 26 JUN, 2025 | 12:41 AM செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களால் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் 06 அம்ச கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட செப்பு தகட்டினை கையளித்துள்ளனர். செம்மணி படுகொலைக்கு நீதி கோரி, யாழ். வளைவுக்கு அண்மையில் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு , போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மூன்று நாட்களாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு புதன்கிழமை (25) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செம்மணி போராட்ட களத்திற்கு சென்ற வேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய் மார்களால் 06 அம்ச கோரிக்கைகள் அடங்கிய செப்பு தகடு கையளிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218472

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் யாழ்ப்பாணத்திற்கு வருகை

1 week 3 days ago
பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள செயன்முறை அவசியம்; உயர்ஸ்தானிகரிடம் வடக்கு சிவில் சமூகம் வலியுறுத்தல் Published By: VISHNU 26 JUN, 2025 | 12:36 AM (நா.தனுஜா) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்த வடக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள செயன்முறையொன்றின் தேவைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளனர். அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைத் தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் ஓரங்கமாக புதன்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினரை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் சந்தித்த உயர்ஸ்த்தானிகர், சுமார் ஒருமணிநேரம் வரை அவர்களுடன் பரந்துபட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வாழும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வந்து மீளக்குடியமர்த்தல், பட்டதாரிகள் முகங்கொடுத்து வரும் வேலையில்லா பிரச்சினை, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகங்கொடுத்துவரும் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகள் என்பன தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் உயர்ஸ்தானிகரிடம் விரிவாக எடுத்துரைத்தனர். அதேவேளை வடக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்தும் அதன் விளைவாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் முகங்கொடுத்து வரும் நெருக்கடிகள் குறித்தும் வோல்கர் டேர்க்கிடம் எடுத்துரைத்த மற்றொரு பிரதிநிதி, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதேபோன்று ஏனைய பிரதிநிதிகளில் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், புதிதாக கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகள், காணி சுவீகரிப்பு, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் நிலவும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு தெளிவுப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பி.ஐங்கரநேசன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் பிரதிநிதி பி.என்.சிங்கம், சிவகுரு ஆதினம் வேலன் சுவாமிகள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஏ.டி.தெலீசன், வட-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதி யோகதாஸா கனகரஞ்சனி, கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இன்பம், ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பிரதிச் செயலாளர் கருணாகரன் நாவலன் ஆகியோரின் கையெழுத்துடன் பொறுப்புக்கூறலுக்கான நியாயமான செயன்முறையொன்றின் தேவைப்பாட்டினை வலியுறுத்தி உயர்ஸ்தானிகரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/218471

அபிநந்தனை சிறை பிடித்த பாகிஸ்தான் ராணுவ மேஜர் மரணம் - என்ன நடந்தது?

1 week 3 days ago
பட மூலாதாரம்,ISPR படக்குறிப்பு,சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி உருது, இஸ்லமாபாத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவ மேஜர் சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா, ராணுவ நடவடிக்கை ஒன்றில் உயிரிழந்தார். பாகிஸ்தானின் தெற்கு வாஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சரரோகா பகுதியில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் போது அவர் உயிரிழந்தார். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலகோட் தாக்குதலின் போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை, ராணுவ அதிகாரி மோயிஸ் ஷா சிறைபிடித்தார். அவரின் இறுதி அஞ்சலி ராவல்பிண்டியில் நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர் துறையின்(ஐ.எஸ்.பி.ஆர்) தகவல்களின்படி, பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர், உள்துறை அமைச்சர் மோஹ்சின் நக்வி ஆகியோர் அந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர். 'பணியில் இருந்த மேஜர், வீரத்துடன் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற சண்டையின் போது தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார். வீரம், தியாகம் மற்றும் நாட்டுப்பற்றுக்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டாக அவர் மாறியுள்ளார்' என்று இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற முனீர் குறித்து பேசியதாக ஐ.எஸ்.பி.ஆர் கூறுகிறது. அஞ்சலிக்குப் பிறகு மேஜர் மோயிஸின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும். 'உளவு அமைப்புகள் வழங்கிய தகவல்களின்படி, பாதுகாப்புப் படையினர் தெற்கு வாஜிரிஸ்தானில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். இந்த தாக்குதல் நடவடிக்கையில் ரகசியமாக பதுங்கியிருந்த 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 7 பேர் காயம் அடைந்தனர். இரு தரப்பிலும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் காரணமாக மேஜர் மோயிஸ் ஷா மற்றும் லான்ஸ் நாய்க் ஜிப்ரனுல்லா ஆகியோர் கொல்லப்பட்டனர்' என்று ஐ.எஸ்.பி.ஆர் கூறியது. யார் இந்த மேஜர் மோயிஸ்? மேஜர் சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா (37), சக்வாலைச் சேர்ந்தவர். அவர் 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். அவர் அப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் என்.எல்.ஐ படைப்பிரிவில் சேர்ந்திருந்தார். பிறகு அவர் பாகிஸ்தானின் சிறப்பு சேவைக் குழுவில் இடம் பெற்றார். சமீபத்திய காலத்தில் அவர் வாஜிரிஸ்தானில் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். 6 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவும் பாகிஸ்தானும் போர் பதற்றத்தில் இருந்த காலத்தில் மேஜர் மோயஸின் பெயர் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றன. பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். பிப்ரவரி 27, 2019 அன்று மோயஸ் மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் எல்லை கோட்டை அடைந்து, விமானத்தில் இருந்து அங்கு விழுந்திருந்த அபிநந்தன் வர்தமானை கைது செய்தனர். இந்த வீடியோ பிறகு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பட மூலாதாரம்,HAMID MIR/X படக்குறிப்பு, மோயிஸ் மரணமடைந்த செய்தி வெளியான பிறகு, 2020-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஹமித் மிருக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அபிநந்தன் பயணித்த போர் விமானம் விபத்துக்குள்ளாகும் போது, பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே விழுந்ததைப் பார்த்தார் அந்த பகுதியில் வசிக்கும் முகமது ரசாக். ரசாக்கும் இதர உள்ளூர் வாசிகளும் அபிநந்தன் விழுந்த இடத்திற்கு சென்ற போது , ஏற்கனவே அங்கே கூடியிருந்த பொதுமக்கள் அபிநந்தன் மீது கல்லெறிந்து தாக்குதல்களை நடத்தினார்கள் என்றும், அங்கிருந்து அபிநந்தன் தப்பிக்க முயன்றார் என்றும் அப்போது பிபிசியிடம் பேசிய ரசாக் கூறினார். மக்கள் அவரை சூழ்ந்துவிட்டனர். ஒரு சிலர் அபிநந்தனை அடிக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் கேப்டன் சையத் மோயிஸ் தலைமையிலான ராணுவ வீரர்கள் அங்கே வந்தனர் என்றும் ரசாக் தெரிவித்தார். அப்போது வைரலான வீடியோவில் அபிநந்தனின் முகத்தில் காயம் ஏற்பட்டிருப்பதையும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரை அழைத்துச் செல்வதையும் பார்க்க இயலும். அபிநந்தனை கைது செய்த போது நடந்தது என்ன? இந்த விவகாரம் நடந்து முடிந்து ஓராண்டு நிறைவுற்ற நிலையில், அப்போது நடந்தது என்ன என்று, ஜியோ நியூஸின் ஹமித் மிர் என்ற பத்திரிக்கையாளருக்கு பேட்டி அளித்தார் மேஜர் மோயிஸ். இந்திய விமானியை பார்க்க சென்ற அந்த சமயத்தில் உள்ளூர் மக்கள் அவரை சூழ்ந்துவிட்டதாக தெரிவித்தார் மோயிஸ். "இது மிகவும் சிக்கலான பகுதி. இங்கே இது போன்ற நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக செயல்பட்டு அபிநந்தனை உயிரோடு அங்கிருந்து மீட்க வேண்டும் என்பதே எங்களுக்கு முதல் கடமையாக இருந்தது," என்று மோயிஸ் ஹமிதுக்கு தெரிவித்தார். மோயிஸ் மரணமடைந்த நிலையில், செவ்வாய் கிழமை மாலையில் இருந்து அவருடைய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "பொதுமக்கள் அவரை அடிப்பதை நான் கவனித்தேன்," என்று மோயிஸ் தெரிவித்தார். இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தார். "நான் அங்கே சென்றவுடன் அபிநந்தன் என்னுடைய 'ரேங்க்' என்னவென்று கவனித்தார். பிறகு, 'கேப்டன், நான் விங் கமாண்டர் அபிநந்தன். இந்திய விமானப்படையில் பணியாற்றுகின்றேன். நான் சரணடைகின்றேன். என்னை உயிருடன் காப்பாற்றுங்கள்' என்று கூறினார். அவரின் பாதுகாப்பு என்னுடைய பொறுப்பாக மாறிவிட்டது. ஏன் என்றால் அவர் சரணடைந்துவிட்டார்," என்று அந்த பேட்டியில் மோயிஸ் தெரிவித்தார். அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினர் விசாரணையில் இருந்த போது வெளியான வீடியோ ஒன்றில், அபிநந்தன் அவருடைய பெயர், ரேங்க் ஆகியவற்றை கூறினார். மேலும் அவர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நன்றாக நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். "பாகிஸ்தான் ராணுவம் என்னை பார்த்துக் கொள்கிறது. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களின் தாக்குதலில் இருந்து கேப்டன் ஒருவர் என்னை காப்பாற்றினார்," என்றும் அவர் தெரிவித்தார். அபிநந்தன் ஒரு நாள் கழித்து மார்ச் 2 அன்று இந்தியாவின் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz9kn45z7x0o

ஐ.நா ஆணையாளரின் இலங்கை விஜயத்துக்கான காரணம் - அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி

1 week 3 days ago
ஐ.நா ஆணையாளரின் இலங்கை விஜயத்துக்கான காரணம் - அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி Vhg ஜூன் 26, 2025 மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) நேற்று (25-06-2025) இரவு யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சந்திப்பு தொடர்பாக மேலும் குறிப்பிட்ட சாணக்கியன், “ ஈரான் - இஸ்ரேல், பாகிஸ்தான் - இந்தியா, ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பலஸ்தீனம் என சர்வதேச ரீதியில் நாடுகளிடையே பிரச்சினைகள் நிலவும் போது இலங்கை விவகாரம் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தில் காத்திரமாக பேசப்படுமா என நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிடம் கேட்ட போது, இலங்கை விவகாரம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக தெரிவித்தார் . அரசியல் கைதிகளின் விடுதலை மேலும் மனித புதைகுழிகள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்பட்டது என தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன், ”மிக மோசமாக அரசாங்கம் நடக்காமல் இருப்பதற்கு ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். அத்துடன், காணிப் பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை சிறைகளில் வாடுகின்றவர்களின் பிரச்சினைகளை நாம் சொல்லும் போது அவர் தமக்கு தெரியும் என்று சொன்னார் என தெரிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழி இந்த சந்திப்பு குறித்து சிறீதரன் தெரிவிக்கையில், ”செம்மணி, குருந்தூர் மலை வெடுக்குநாறி மலை, வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டினேன். இலங்கையிலே பொறுப்பு கூறல் என்பது நேர்மையான கண்ணியமான முறையில் முன்வைக்கப்படவில்லை. பொறுப்புக் கூறலை பரிகார நீதியுடன் கூடியதாக வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் தெளிவுடன் எடுத்து கூறியுள்ளோம்” என தெரிவித்தார். https://www.battinatham.com/2025/06/blog-post_993.html

ஐ.நா ஆணையாளரின் இலங்கை விஜயத்துக்கான காரணம் - அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி

1 week 3 days ago

ஐ.நா ஆணையாளரின் இலங்கை விஜயத்துக்கான காரணம் - அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி

Vhg ஜூன் 26, 2025

1000534434.jpg

மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) நேற்று (25-06-2025) இரவு யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பு தொடர்பாக மேலும் குறிப்பிட்ட சாணக்கியன், “ ஈரான் - இஸ்ரேல், பாகிஸ்தான் - இந்தியா, ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பலஸ்தீனம் என சர்வதேச ரீதியில் நாடுகளிடையே பிரச்சினைகள் நிலவும் போது இலங்கை விவகாரம் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தில் காத்திரமாக பேசப்படுமா என நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிடம் கேட்ட போது, இலங்கை விவகாரம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக தெரிவித்தார் .

அரசியல் கைதிகளின் விடுதலை

மேலும் மனித புதைகுழிகள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்பட்டது என தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன், ”மிக மோசமாக அரசாங்கம் நடக்காமல் இருப்பதற்கு ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

அத்துடன், காணிப் பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை சிறைகளில் வாடுகின்றவர்களின் பிரச்சினைகளை நாம் சொல்லும் போது அவர் தமக்கு தெரியும் என்று சொன்னார் என தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி

இந்த சந்திப்பு குறித்து சிறீதரன் தெரிவிக்கையில், ”செம்மணி, குருந்தூர் மலை வெடுக்குநாறி மலை, வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டினேன்.

இலங்கையிலே பொறுப்பு கூறல் என்பது நேர்மையான கண்ணியமான முறையில் முன்வைக்கப்படவில்லை. பொறுப்புக் கூறலை பரிகார நீதியுடன் கூடியதாக வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் தெளிவுடன் எடுத்து கூறியுள்ளோம்” என தெரிவித்தார்.

https://www.battinatham.com/2025/06/blog-post_993.html

இலங்கை சொற்களுக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி கொடுத்த அங்கீகாரம்!

1 week 3 days ago
இலங்கை சொற்களுக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி கொடுத்த அங்கீகாரம்! ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (OED) ஜூன் 2025 புதுப்பிப்பில் பல தனித்துவமான இலங்கைச் சொற்களைச் சேர்த்துள்ளது. குறிப்பாக கொத்து ரொட்டி, கிரிபாத் உள்ளிட்ட பல பிரபலமான இலங்கை வார்த்தைகள் ஆக்ஸ்போர்ட் அகராதியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இது தவிர, ‘பைலா’ மற்றும் ‘பப்பரே’ என்ற கலாச்சாரச் சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது உலகளாவிய ஆங்கில பயன்பாட்டில் இலங்கை உணவு வகைகள் மற்றும் மரபுகளுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைக் குறிக்கிறது. புதிய உள்ளீடுகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமகால பயன்பாட்டை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி ஆசிரியர் குழு ஏற்கனவே உள்ள பல இலங்கை ஆங்கில சொற்களையும் திருத்தியுள்ளது. அகராதியில் இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய இலங்கை சொற்கள் அஸ்வெத்துமைஸ், அவுருது, பைலா, கிரிபத், கொத்து ரொட்டி, மல்லுங், ஒசரி, பப்பரே, வளவ்வ, வட்டலப்பம். திருத்தப்பட்ட சொற்கள் : சிலோன் காபி, சிலோன் டீ, சிலோனீஸ், கொழும்பு, டகோபா, கங்கானி, சிங்களி, தமிழ், யுஎன்பி, வேத்தா, விஹாரா மற்றும் பிற. இந்த புதுப்பிப்பு உலகளாவிய மொழியியல் நிலப்பரப்புகளில் இலங்கை கலாச்சாரம் மற்றும் மொழியின் வளர்ந்து வரும் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது. https://athavannews.com/2025/1437181

இலங்கை சொற்களுக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி கொடுத்த அங்கீகாரம்!

1 week 3 days ago

New-Project-357.jpg?resize=750%2C375&ssl

இலங்கை சொற்களுக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி கொடுத்த அங்கீகாரம்!

ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (OED) ஜூன் 2025 புதுப்பிப்பில் பல தனித்துவமான இலங்கைச் சொற்களைச் சேர்த்துள்ளது.

குறிப்பாக கொத்து ரொட்டி, கிரிபாத் உள்ளிட்ட பல பிரபலமான இலங்கை வார்த்தைகள் ஆக்ஸ்போர்ட் அகராதியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இது தவிர, ‘பைலா’ மற்றும் ‘பப்பரே’ என்ற கலாச்சாரச் சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இது உலகளாவிய ஆங்கில பயன்பாட்டில் இலங்கை உணவு வகைகள் மற்றும் மரபுகளுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைக் குறிக்கிறது.

புதிய உள்ளீடுகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமகால பயன்பாட்டை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி ஆசிரியர் குழு ஏற்கனவே உள்ள பல இலங்கை ஆங்கில சொற்களையும் திருத்தியுள்ளது.

அகராதியில் இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய இலங்கை சொற்கள்

அஸ்வெத்துமைஸ், அவுருது, பைலா, கிரிபத், கொத்து ரொட்டி, மல்லுங், ஒசரி, பப்பரே, வளவ்வ, வட்டலப்பம்.

திருத்தப்பட்ட சொற்கள் :

சிலோன் காபி, சிலோன் டீ, சிலோனீஸ், கொழும்பு, டகோபா, கங்கானி, சிங்களி, தமிழ், யுஎன்பி, வேத்தா, விஹாரா மற்றும் பிற.

இந்த புதுப்பிப்பு உலகளாவிய மொழியியல் நிலப்பரப்புகளில் இலங்கை கலாச்சாரம் மற்றும் மொழியின் வளர்ந்து வரும் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.

https://athavannews.com/2025/1437181

ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல்

1 week 3 days ago
முக்கிய அணுசக்தி நிலையங்கள் சேதம் - ஒப்புக்கொண்ட ஈரான் General26 June 2025 அமெரிக்கா, சமீபத்தில் நடத்திய தாக்குதல்களால், தமது முக்கிய அணுசக்தி நிலையங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்ததாக ஈரான் முதல் தடவையாக ஒப்புக் கொண்டுள்ளது. ஈரானில் உள்ள ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Nadans) மற்றும் இஸ்பஹான் (Isfahan) ஆகிய இடங்களில் அமைந்துள்ள 3 முக்கிய அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து,அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல்களை நடத்தியது. 'ஒபரேஷன் மிட்நைட் ஹேமர்' (Operation Midnight Hammer) என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதல்களில், அமெரிக்கா B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்கள், சக்திவாய்ந்த பதுங்கு குழி பஸ்டர் குண்டுகள் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தின. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். எனினும் ஈரான் அதனை மறுத்திருந்தது. இந்நிலையில், முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் கடுமையான சேதத்தைச் சந்தித்ததாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. https://hirunews.lk/tm/408380/iran-admits-damage-to-key-nuclear-facilities#google_vignette

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் யாழ்ப்பாணத்திற்கு வருகை

1 week 3 days ago
வோல்கர் டர்க் - தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, முன்னாள் பாராநாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/வோல்கர்-டர்க்-தமிழ்-எம்-பிக்கள்-சந்திப்பு/175-359947

359 கடலட்டைப் பண்ணைக்கு யாழ். மாவட்டத்தில் அனுமதி!

1 week 3 days ago
359 கடலட்டைப் பண்ணைக்கு யாழ். மாவட்டத்தில் அனுமதி! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 359 கடலட்டைப் பண்ணைக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நெக்டா நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டக் கடற்றொழில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்கனவே 499 கடலட்டைப் பண்ணைகள் உள்ளன. இதேவேளை 359 கடலட்டைப் பண்ணைகள் புதுப்பண்ணைகளாக விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளன. மேலும் புதிதாக 5 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://newuthayan.com/article/359_கடலட்டைப்_பண்ணைக்கு_யாழ்._மாவட்டத்தில்_அனுமதி!

359 கடலட்டைப் பண்ணைக்கு யாழ். மாவட்டத்தில் அனுமதி!

1 week 3 days ago

359 கடலட்டைப் பண்ணைக்கு யாழ். மாவட்டத்தில் அனுமதி!

695540475.jpeg

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 359 கடலட்டைப் பண்ணைக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நெக்டா நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டக் கடற்றொழில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்கனவே 499 கடலட்டைப் பண்ணைகள் உள்ளன. இதேவேளை 359 கடலட்டைப் பண்ணைகள் புதுப்பண்ணைகளாக விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளன. மேலும் புதிதாக 5 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://newuthayan.com/article/359_கடலட்டைப்_பண்ணைக்கு_யாழ்._மாவட்டத்தில்_அனுமதி!

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 week 3 days ago
சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும்! adminJune 26, 2025 சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் கிடம் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் செம்மணி புதைகுழி காணப்படும் இடத்திற்கு நேரில் சென்று புதைகுழிகளை பார்வையிட்டார். அதன் பின்னர் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளிடம் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார். அதன் போதே சட்டத்தரணிகள் அவ்வாறு கோரியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் தாம் முன் வைத்த கோரிக்கைகள் தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கான நிதியினை அரசாங்கம் தங்கு தடையின்றி விடுவிக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தினை கொடுக்க வேண்டும். மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்களை சரியான முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தற்போது மீட்கப்பட்டவற்றை கொழும்புக்கு எடுத்து செல்ல வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில் யாழ்ப்பாணத்தில் அதற்கான வசதிகள் இல்லை. எனவே எச்சங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் , அதன் மீதான சோதனைகளை முன்னெடுக்க ஏதுவாக ஆய்வு கூட்டமொன்றினை யாழ்ப்பாணத்தில் நிறுவ வேண்டும் . அது பல விடயங்களில் பயனுள்ளதாக இருக்கும் அகழ்வாராய்ச்சிக்கான தொழிநுட்ப வசதிகள் தேவையாக உள்ளது. அதே நேரம் நிபுணத்துவ மிக்க நிபுணர்கள் வேண்டும். நிபுணர்களின் பங்கேற்புடன் சர்வதேச கண்காணிப்புடன் இதன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எடுத்து கூறியுள்ளோம் என தெரிவித்தனர். https://globaltamilnews.net/2025/217340/

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

1 week 3 days ago
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையருக்கு எடுத்து கூறிய வடக்கு ஆளுநர்! adminJune 26, 2025 காணி விடுவிப்புத் தொடர்பிலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது தொடர்பிலும் வடமாகாண ஆளூனரிடம் கேட்டறிந்து கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் கரிசனையை வெளிப்படுத்தியதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, மீள்குடியமர்வு – காணி விடுவிப்புத் தொடர்பில் தற்போதைய நிலைமைகளை ஆணையாளர் கேட்டார். மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்கு அமைவாக படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படுகின்றன. இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளன என்று சுட்டிக்காட்டினோம். மேலும், வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் என்பன இங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரியாமல் காணிகளை சுவீகரித்துள்ளன. இதனால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் விவசாயக் காணிகள் என்பன இழக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் மாவட்ட ரீதியிலான குழுக்களை அமைத்து இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை ஆணையாளருக்கு தெரியப்படுத்தினேன். காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பிலும் ஆணையாளரும், ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும் விடயங்களைக் கேட்டறிந்து கொண்டனர். அந்தப் பொறிமுறை சரியானது என்றும், ஆனால் மக்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் மாவட்டச் செயலர்கள் இதன்போது ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினர். மேலும், ஆணையாளர் இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார். முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அந்த நடவடிக்கைகள் குறைந்துள்ளன என்றும் இன்னமும் சில பிரச்சினைகள் அதில் உள்ளன எனவும் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினேன். காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் ஆணையாளர் கரிசனையை வெளிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்பதைக் குறிப்பிட்டேன். அத்துடன் கடந்த காலங்களிலிருந்த அரசாங்கங்கள் வெளிப்படுத்திய வேறுபாடுகள் இந்த அரசாங்கத்திடம் இல்லை என்பதையும், அது முற்போக்கானது என்பதையும் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தினேன். போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதற்குரிய புனர்வாழ்வு நிலையம் என்பன தொடர்பிலும் ஆணையாளர் கேள்வி எழுப்பினார். போதைப்பொருள் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் இன்னமும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவில்லை என்பதையும், விரைவில் அதை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்கின்ற விடயத்தையும் ஆணையாளருக்கு தெரியப்படுத்தினேன். அந்தப் புனர்வாழ்வு நிலையங்கள் யாரால் இயக்கப்படும் என்கின்ற விடயங்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்து கொண்டார். இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகள் தொடர்பாகவும் ஆணையாளர் தனது கவனத்தைச் செலுத்தியிருந்தார். இந்தியாவிலிருந்து திரும்பி வரும் மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும், அவ்வாறு செய்தால் மாத்திரமே அவர்களைத் தொடர்ச்சியாக இங்கே அழைக்க முடியும் என்ற விடயத்தையும் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினேன். மேலும், வடக்கில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும் என்னாலும், மாவட்டச் செயலர்களாலும் ஆணையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது, என ஆளுநர் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோரும், ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினரும் பங்குபற்றினர். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/217347/

ஐ.நா ஈழத்தமிழரை கைவிட்டது, மலையக தமிழரையும் கை விடாதீர்கள்

1 week 3 days ago
ஈழத் தமிழரை கைவிட்டது போன்று மலையகத் தமிழரையும் கை விட்டுவிடாதீர்கள்! -மனோ கணேசன். ”ஈழத்தமிழரைக் கைவிட்டது போன்று மலையகத் தமிழரையும் கைவிட்டு விடாதீர்கள்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிற்கும், எதிர் கட்சி தலைவர்களுக்கும் இடையில் நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐநா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க காரணமாக அமைந்து விட்டது. இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடை பெறவில்லை. அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐநா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் நீங்கள் கைவிட்டு விடாதீர்கள். இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் மிகவும் பின் தங்கிய பிரிவினராக வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம். தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐநா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார். அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐநா மனித உரிமை ஆணையகத்தின் 51வது அவைக்கு சமர்பித்தார். அதை கவனத்தில் கொள்ளுமாறு கோருகின்றேன். இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும் போது, தவறாமல் இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொட ர்பிலும் கவனம் செலுத்தும் படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன். இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழ வில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள். காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும். அதை ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1437173

மெக்சிகோ துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு!

1 week 3 days ago
மெக்சிகோ துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு! மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் புதன்கிழமை (25) இரவு நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, புனித யோவான் ஸ்நானகரை கொண்டாடும் விதமாக மக்கள் தெருவில் நடனமாடி மது அருந்திக் கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க, அவர்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகளை ஆன்லைனில் பரவிய காணொளிகள் காட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக இராபுவாடோ அதிகாரி ரோடால்போ கோம்ஸ் செர்வாண்டஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் சுமார் 20 பேர் காயமடைந்தனர். தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையல், ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார். மெக்ஸிகோ நகரத்தின் வடமேற்கே உள்ள குவானாஜுவாடோ, பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் கட்டுப்பாட்டிற்காகப் போராடுவதால், நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாநிலத்தில் 1,435 கொலைகள் நடந்துள்ளன. இது வேறு எந்த மாநிலத்தையும் விட இரண்டு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437154

மெக்சிகோ துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு!

1 week 3 days ago

New-Project-355.jpg?resize=750%2C375&ssl

மெக்சிகோ துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் புதன்கிழமை (25) இரவு நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, புனித யோவான் ஸ்நானகரை கொண்டாடும் விதமாக மக்கள் தெருவில் நடனமாடி மது அருந்திக் கொண்டிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க, அவர்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகளை ஆன்லைனில் பரவிய காணொளிகள் காட்டுகின்றன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக இராபுவாடோ அதிகாரி ரோடால்போ கோம்ஸ் செர்வாண்டஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையல், ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.

மெக்ஸிகோ நகரத்தின் வடமேற்கே உள்ள குவானாஜுவாடோ, பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் கட்டுப்பாட்டிற்காகப் போராடுவதால், நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாநிலத்தில் 1,435 கொலைகள் நடந்துள்ளன.

இது வேறு எந்த மாநிலத்தையும் விட இரண்டு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437154