Aggregator
இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு
இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு
இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு
June 27, 2025
இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) தனது முழு ஆதரவையும் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றம் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடிந்ததாகத் தெரிவித்த வோல்கர் டர்க், இன்று நாட்டின் அனைத்து மக்களும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்று தான் நம்புவதாகவும் கூறினார். காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் வேதனைகள் ஒரேமாதிரியானவை என்றும் அவர்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் நிறைவேறும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எதிர்பார்க்கிறது என்று உயர்ஸ்தானிகர் மேலும் கூறினார்.
தற்போதைய அரசியல் கலாச்சாரம் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயல்படத் தவறியுள்ளதால், காணாமல் போனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தி மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட ஒரு அரசியல் இயக்கமாக தனக்கு அது தொடர்பான புரிதல் இருப்பதாக தெரிவித்தார்.
நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சவால்களை நன்கு புரிந்துகொண்டு, அந்த நோக்கத்திற்காக உறுதிபூண்டுள்ளதாகவும், சர்வதேச அளவில் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இலங்கையின் இந்த உண்மையான நிலைமையை உலகிற்கு கொண்டு செல்வதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆதரவு அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche), மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரிவு பிரதானி ரோரி மங்கோவன் (Rory Mungoven), மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அதிகாரி எலேன் சேன் (Elaine Chan), ஐ.நா அலுவலக சிரேஷ்ட மனித உரிமைகள் ஆலோசகர் லைலா நசராலி (Laila Nazarali), அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகாரி அஸாம் பாக்கீர் மார்கர் (Azam Bakeer Markar), மற்றும் ஊடக மற்றும் தகவல் அதிகாரி அந்தணி ஹெட்லி (Anthony Headley)ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
27 JUN, 2025 | 10:42 AM
(எம்.நியூட்டன்)
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன். அதுபோன்று சம்பந்தமான விடயங்களை நீதி செய்ய வேண்டிய பொறுப்பை மக்களிடம் கையளிக்கிறேன் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து நெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூக ஊடகங்கள் நீதியுடன் நியாயமாக நடக்க வேண்டும் அவர்கள் இடுகின்ற தலைப்புகள் சொந்த வாழ்க்கையில் ஒருவரின் கௌரவத்தையும் பாதிப்பதாக இருக்கக்கூடாது என்பதால் நியாயமாக தலைப்பிட்டு செய்தியை வெளியிடுங்கள். எனக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் இது பொதுவானது.
செம்மணி அணையா விளக்கு போராட்டம் தொடர்பில் இளைஞர்கள் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது என்ற அடிப்படையில் முதன் முதலில் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களை பங்கேற்க அழைத்தது நான். அதன் அடிப்படையில் போராட்டத்திலும் பங்கேற்றோம். அதன்போது வேலன் சுவாமி விமர்சித்தார். அதில் என்னை பேச அழைத்தார்கள். நான் திருப்பி ஏதாவது பேசி இருந்தால் அந்த போராட்டத்தின் நோக்கம் குழம்பிவிடும் என்பதால் அதனை நான் செய்யவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவாக தீப்பந்த போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதனை யாழ்ப்பாண மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் செம்மணி அணையா விளக்கு போராட்டத்துக்கு சென்றபோது அஞ்சலி செலுத்தி மக்களோடு மக்களாக நாங்கள் நின்று இருந்தோம். 15 நிமிடங்களுக்குப் பிறகு அமைதியாக நாங்கள் வெளியேறினோம்.
நான் வெளியேறி வீதியில் சென்று வாகனத்தில் ஏற முற்பட்டபோது சில குரல்கள் எனக்கு எதிராக எழுந்தது. அதனை நான் அசட்டை செய்யவில்லை. பின்னால் சில பேர் சத்தமிட்டனர்.
அந்த காணொளியை நான் அவதானித்த பொழுது என்னை குறி வைத்து திட்டமிட்டு பேசியதை அவதானிக்க முடிந்தது. எமது கட்சிக்கு எதிராக கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்காக ஒருவரை கட்சியிலிருந்து நீக்கி இருந்தோம்.
அந்த பழைய குழப்பங்களையே அவர்கள் பேசியிருக்கிறார்கள். காணொளியை பார்த்தால் தெரியும். நான் சலனம் இல்லாமல் நடந்து சென்றேன். நான் ஓடவில்லை.
தமிழ் அரசுக் கட்சித் தலைவர் விரட்டியடிக்கப்பட்டதாக செய்தி வந்தது. என்னை யாரும் விரட்டியடிக்கவில்லை. அகற்றப்பட்டார் என்ற செய்தி வந்தது. நான் அகற்றப்படவில்லை. எதுவுமே இல்லை.
ஏன் இவ்வாறு செய்தியை போட்டார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. உண்மையை எழுத வேண்டும். எனது பாட்டில் நான் வெளியேறி சென்றேன்.
இவ்வாறான செய்திகள் எழுதும் பொழுது அது எம்மை பாதிக்கிறது. உண்மையில் அவ்வாறு நடந்தால் பரவாயில்லை. நாங்கள் இருந்த இடத்தில் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் இருந்தார்கள். ஒருவர் கூட எமக்கு எதிராக குரல் எழுப்பவில்லை.
நல்ல ஒரு விடயமொன்றிற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அங்கு பங்கேற்று இருந்தோம்.
உள்ளூராட்சி தேர்தலில் நிமிர்ந்து நிற்கின்ற கட்சி என்ற வகையில் தமிழ் அரசுக் கட்சிக்கு பொறுப்பு இருக்கிறது. அந்த கடமையை செய்வதற்காக நாம் போய் இருந்தோம். வீதியில் சென்றால் நாய்கள் குலைப்பது வழமை. நான் அவ்வாறு சென்றேன் அவ்வாறே அதுவும் நடந்தது. அது பரவாயில்லை.
ஏற்பாட்டாளர்கள் பல முயற்சிகளை எடுத்தார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். மக்கள் இதனை கண்டிக்க வேண்டும். மக்களுக்கு பொறுப்பு இருக்கிறது.
காணாமல் போன விடயம் தொடர்பாக நான் பல விடயங்களை செய்திருக்கிறேன். அதை நான் ஒன்றும் சொன்னதில்லை. 1996 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த விடயங்களை நான் கையாண்டு இருக்கிறேன்.
கிரிசாந்தியின் கொலை நடந்த சமயத்தில் ரஜிணி என்ற பெண் பிள்ளையை ராணுவம் கொலை செய்து மலக்குளியில் போட்ட விடயத்தை மிகவும் கடுமையான ராணுவ தளபதி என்று சொல்லக்கூடிய ஜானக பெரேராவோடு முரண்பட்டு நின்று சடலத்தை மலக்குழியில் இருந்து எடுத்து இரண்டு ராணுவத்தினரை சேவை இடைநிறுத்தம் செய்து வைத்தேன்.
தயவுசெய்து அந்த காலத்தில் பத்திரிகைகளை பார்த்தால் தெரியும். அவ்வாறு பல விடயங்களை செய்து இருக்கிறேன் இதனை பிதற்றிக் கொண்டு நான் திரிவதில்லை.
அந்த இடத்தில் நிற்பதற்கு எனக்கும் கட்சிக்கும் உரிமை இருக்கிறது. அதை தடுப்பதற்கு கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் குழுவாக வந்து அந்த இடத்தில் புனித தன்மையும் புனித நோக்கத்தை சிதைக்கிற காழ்ப்புணர்ச்சியான செயல் கண்டிக்கத்தக்கது.
மக்களுக்கு ஒரு பங்கு உண்டு. இவர்கள் இவ்வாறு அசிங்கமாக அவமானமாக செயல்பட்டால் இனிமேல் இவ்வாறான போராட்டங்களில் மக்களை பங்கு வைக்காமல் வைப்பதற்கான நோக்கம் உண்டா என்ற சந்தேகம் உண்டு.
எனக்கும் பொதுச்செயலாளருக்கும் கட்சிக்கும் அவர்களுடன் முரண்பாடு உண்டு. அதை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன். அதுபோன்று சம்பந்தமான விடயங்களை நீதி செய்ய வேண்டிய பொறுப்பை மக்களிடம் கையளிக்கிறேன் என்றார்.
கருத்து படங்கள்
எதிராக செயற்பட்ட ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன்! செம்மணியில் சுற்றிவளைக்கப்பட்ட இளங்குமரன் எம்.பி பகிரங்க எச்சரிக்கை
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’
நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’
நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’
முருகானந்தன் தவம்
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் முழு ஆட்சி அதிகாரத்தை தாங்களே கைப்பற்றுவோம், ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்த இலங்கை தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டத்தில் உள்ள முக்கிய சில சபைகளைப் பறிகொடுத்துள்ள நிலையில், தமிழினத் துரோகி என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி. (வீணை) டக்ளஸ் தேவானந்தாவின் காலடி சென்று மண்டியிட்டதன் மூலம் அவரின் கட்சி ஆதரவுடனேயே சில யாழ். மாநகரசபை உள்ளிட்ட சில சபைகளைக் கைப்பற்றியுள்ளது.
‘நாடு அனுரவோடு ஊர் எங்களோடு’ என்றார் தமிழரசின் தலைவர் ஒருவர். ஆனால், இன்று ‘நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’ என்றவாறாக வடக்கின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளைத் தமிழரசு கைப்பற்றியுள்ளது.
தமிழ் தேசியக் கட்சிகளின் தாய் கட்சி என போற்றப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியே வடக்கின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் ஆட்சியை, மேயர், பிரதி மேயர், தவிசாளர், பிரதி தவிசாளர் பதவிகளை தாங்களே கைப்பற்ற வேண்டுமென்ற அதிகார ஆசையினால் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவைப் புறக்கணித்து,அவர்களின் சில நிபந்தனைகளை நிராகரித்து விட்டு பேரினவாதிகளினதும் துரோகிகளினதும் ஆதரவோடு சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றது.
பேரினவாதக் கட்சிகளான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்கன் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழினத் துரோகி என இவர்களினாலேயே குற்றம் சாட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றே வடக்கின் சபைகளைக் கைப்பற்றி தமிழரசுக் கட்சி கட்சி மிகப்பெரும் காட்டிக்கொடுப்பையும் துரோகத் தனத்தையும் தமிழ்த் தேசியத்திற்கும் தமிழினத்திற்கும் செய்துள்ளது.
வடக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்றவர்கள் ஆட்சியமைக்க நாம் ஆதரவளிப்போம். அதேவேளை, இரண்டாவது இடத்தில் நாம் இருந்தால் எமக்குப் பிரதி மேயர், அல்லது பிரதி தவிசாளர் பதவி தரவேண்டும் என்ற நிபந்தனையை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவை- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வைத்திருந்தது. அத்துடன், ஒரு சில சபைகளில் தமக்கு பிரதி தவிசாளர் பதவி வேண்டுமென ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் (சங்கு) கோரியிருந்தது.
ஆனால், யாழ். மாநகரசபையை ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளின் எந்தவொரு ஆதரவுமின்றி, முழுமையாகக் கைப்பற்றத் தமிழரசு திட்டமிட்டது. அதனால் அவர்களை நிராகரித்து விட்டு ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழரசு சரணாகதி அடைந்தது. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றினுடனும் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டு ஆதரவு கோரியது.
யாழ். மாநகரசபையில் மொத்தமாக 45 ஆசனங்கள் உள்ளன. இந்நிலையில், 2025 மே 6இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, 1,0370, வாக்குகள் பெற்று 13, ஆசனங்களையும் தமிழ்த் தேசிய பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 9,124 வாக்குகள் பெற்று, 12, ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி, 7,702, வாக்குகள் பெற்று 10 ஆசனங்களையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, 3,567 வாக்குகள் பெற்று 4, ஆசனங்களையும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, 3,076, வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி, 587 வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி, 464, வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன.
யாழ். மாநகரசபையில் ஆட்சியமைக்கும் கட்சி 23 ஆசனங்களை பெறவேண்டும்.
தமிழரசுக் கட்சி மேயர் வேட்பாளராக நிறுத்திய மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளைப் பெற்று யாழ். மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில், ஈ.பி.டி.பியின் 4 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 1 ஆசனம், ஐக்கிய தேசியக் கட்சியின் 1 ஆசனம் என்பவற்றை பெற்றே 19 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 23 ஆசனங்கள் தேவையென்பதனால், யாழ். மாநகரசபையில் சிறுபான்மை ஆதரவுடனேயே தமிழரசு ஆட்சியமைத்துள்ளது.
அதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிறுத்திய மேயர் வேட்பாளர் -தமிழ் மக்கள் பேரவை-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 12 ஆசனங்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 4 ஆசனங்களுடன் 16 ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களுடன் நடு நிலை வகித்தது.
தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு மேயர் பதவியைப் பெற கஜேந்திரகுமார் விரும்பியிருந்தால் தேசிய மக்கள் சக்தியின் 10 ஆசனங்கள் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 4 ஆசனங்களைப் பெற்று 26 ஆசனங்களுடன் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனால், அவர் தமிழ்த் தேசியக் கொள்கைக்காக அதனைச் செய்யவில்லை.
ஆனால், ஈ.பி.டி.பி., ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்க மறுத்திருந்தால் தமிழரசு நிச்சயம் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவைக் கோரியிருக்கும். ஏனெனில், தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எதிரிகளே தவிர, பேரினவாதக் கட்சிகளோ துரோகிக் கட்சிகளோ எதிரிகள் கிடையாது.
தமிழரசின் தலைமைகள் எப்போதும் பேரினவாத கட்சிகளின் தலைவர்கள், எஜமானர்களின் விசுவாசிகளாக, அடிமைகளாகவே இருந்து வந்துள்ளனர். அதன் இறுதி உதாரணமாக, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராகத் தமிழ் தேசியக் கட்சிகள் அரியநேத்திரனை நிறுத்தியபோது, அவரை தோற்கடிக்க முழு மூச்சாக இந்த தலைவர்கள் சிலர் செயற்பட்டதுடன், அவருக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாதெனவும் கூறியதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவையே பகிரங்கமாகவே ஆதரித்திருந்தார்கள்.
இவ்வாறாக யாழ். மாநகரசபையை எதிரிகளோடும் துரோகிகளோடும் சேர்ந்து கைப்பற்றிய தமிழரசு இங்கு தமக்குப் போட்டியாக வேட்பாளரை நிறுத்திய தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சாவகச்சேரி நகரசபையிலும் ஆட்சியைக் கைப்பற்ற சகுனித்தனமாக அக்கட்சியின் இரு வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து அவர்களுக்கு எதிராக இடைக்காலத்தடை உத்தரவைப் பெற்று வாக்களிப்பில் பங்கேற்க விடாது செய்து அதிகாரத்தைக் கைப்பற்றச் சதி செய்தது.
சாவகச்சேரி நகர சபையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும் பெற்றிருந்தன. வாக்குகள் அடிப்படையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2,959 வாக்குகளையும் தமிழரசுத் தரப்பு 2,594 வாக்குகளையும் பெற்றன. இதன்படியே தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னிலை வகித்தது. இச்சபையில், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (சங்கு) இரு ஆசனங்களையும் ஈ.பி.டி.பி. ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.
இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியுடன் கொள்கை ரீதியில் ஒப்பந்தம் செய்து ஓரணியாகி தமது ஆசனங்களின் எண்ணிக்கையை 8 ஆக அதிகரித்தது. இதேவேளை, தமிழரசுக் கட்சி ஈ.பி.டி.பியிடம் ஆட்சியைக் கைப்பற்ற ஆதரவைக் கோரியிருந்தது.
இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வசம் 8 ஆசனங்களும் தமிழரசு, ஈ.பி.டி.பி. வசம் 7 ஆசனங்களும் இருந்தன. தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களுடன் நடு நிலை வகித்தது.
தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஓர் ஆசனத்தால் முன்னிலை வகித்த நிலையில்தான் இவர்களை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றவேண்டுமென்ற அதிகார ஆசை மற்றும் பழிவாங்கும் வெறியில் அவசர அவசரமாக 11ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் வழக்குப் போடப்பட்டது.
13ஆம் திகதி மாலை சபை கூடவிருந்த நிலையில், அன்று காலை அந்த உறுப்பினருக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது. இதனால், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆகக் குறைந்தது.தமிழரசு - ஈ.பி.டி.பி தரப்புக்கும் ஆசனங்கள் 7ஆக இருந்தன. இதற்கிடையில் ஏற்கனவே, தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தரப்பின் மற்றொரு பெண் உறுப்பினரை சபைக்குப் போகக்கூடாது என்று தமிழரசின் எடுபிடிகள் தொலைபேசி மூலம் பலதடவைகள் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தகவல்கள் உண்டு.
அவரையும் சபைக்கு வரவிடாமல் தடுத்து தமிழரசு - ஈ.பி.டி.பி. தரப்பு 7:6 என்ற ஆசனங்கள் அடிப்படையில் சபையைக் கைப்பற்றுவதே சதித் திட்டமாகவிருந்தது.
ஆனாலும், அந்த பெண் உறுப்பினர் சபைக்கு வந்து விட்டார். இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை -தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்புக்கும் தமிழரசு - ஈ.பி.டி.பி. தரப்புக்குமிடையில் தவிசாளர் - உப தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பு நடைபெற்ற போது, இரு தரப்புகளும் தலா 7 வாக்குகளைப் பெற்று சமனிலை பெற்றன.
இதனால் திருவுளச்சீட்டு (குலுக்கல் முறை) முறை மூலம் இரு பதவிகளுக்கும் தெரிவு இடம்பெற்றது. இரு தடவைகளும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வெற்றி கிடைத்தது. இதற்கமைய தமிழரசின் சதியை, சகுனித்தனத்தை அதிர்ஷ்டத்தின் மூலம் முறியடித்து சாவகச்சேரி நகர சபையைத் தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியது.
https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாடு-அனுரவோடு-வீடு-வீணையோடு/91-359994
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்!
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்!
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்!
பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில் நேற்று மாலை ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் குறித்து விரைவாக மதிப்பாய்வு செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அமெரிக்கா செல்ல வேண்டாம் : கொழும்பு தூதரகம் அறிவித்தல்!
குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அமெரிக்கா செல்ல வேண்டாம் : கொழும்பு தூதரகம் அறிவித்தல்!
குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அமெரிக்கா செல்ல வேண்டாம் : கொழும்பு தூதரகம் அறிவித்தல்!
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக, குழந்தை பிரசவிக்கும் நோக்கத்துடன் சுற்றுலா விசாக்களில் அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் விசாக்கள் மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நோக்கத்துக்காக அமெரிக்கா செல்லும் பயணிகள் பெரும்பாலும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் மருத்துவ உதவியை நம்பியிருப்பதாகவும், இது அமெரிக்க வரி செலுத்துவோர் மீது நிதிச் சுமையை சுமத்துவதாகவும் தூதரகம் கூறியுள்ளது.
எனவே, விண்ணப்பதார் ஒருவரின் முதன்மை நோக்கம் குடியுரிமை சலுகைகளுக்காக பிரசவம் என்று நம்பினால், சுற்றுலா விசாக்களை நிராகரிக்குமாறு, தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
எதிராக செயற்பட்ட ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன்! செம்மணியில் சுற்றிவளைக்கப்பட்ட இளங்குமரன் எம்.பி பகிரங்க எச்சரிக்கை
கெஹெலியவின் குடும்பத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படுமா?
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படுமா?
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படுமா?
adminJune 26, 2025
யாழ்.மாவட்ட சுயேச்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட குவோ வாரண்டோ ரிட் மனு மீதான விசாரணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (26) தொடங்கியது.
அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் அரசாங்க மருத்துவ அதிகாரியாக பணியாற்றும் போது சமீபத்திய பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை சமர்ப்பித்ததாகக் கூறுகிறார். அரசுப் பணியில் இருந்து முதலில் பதவி விலகாமல் வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் விதிகளை மீறுவதாக ஹேரத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதியரசர்களான மாயாதுன்னே கொரியா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் என்.கே. அசோக்பரன், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் ஒரு பொது அதிகாரியாக இருப்பதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவர். அவர் ஒரு பொது அதிகாரியாக இருப்பதால், நாடாளுமன்றத்தில் அமர அல்லது வாக்களிக்க தகுதியற்றவர். அரசியலமைப்பின் 66(இ) பிரிவின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினரின் இருக்கை காலியாகிவிட்டதாக வாதிட்டார். நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை பாராளுமன்ற உறுப்பினர் செயல்படுவதைத் தடுக்க இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
அரசு தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன , எம்.பி. ராமநாதன் இன்னும் ஒரு பொது அதிகாரியாகக் கருதப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்தினார்.
அரசியலமைப்பின் பிரகாரம், பொது அதிகாரிகள் மீதான ஒழுங்கு அதிகாரம் பொது சேவை ஆணையத்திடம் உள்ளது என்பதை எடுத்துக்காட்டினார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மீது மேற்பார்வை செய்யும் அதிகாரம் பொது சேவை ஆணையம் உள்ளது. இது ஒரு தெளிவான மோதலுக்கு வழிவகுக்கிறதுஇ ஏனெனில் இடைநீக்கத்திற்கு உள்ளான எம்.பி. ராமநாதன் இப்போது தனது சொந்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைப்பின் மேற்பார்வையில் உள்ளார்.
எம்.பி. ராமநாதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களின் சமர்ப்பிப்புகளுக்காக 2025 ஜூலை 2, வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மனுதாரருக்காக வழக்கறிஞர் என்.கே. அசோக்பரன், ஷெனல் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையானார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சார்பாக சேனானி தயாரத்ன, நிஷாதி விக்ரமசிங்க ஆகியோர் ஆஜரானார்கள்.