Aggregator

இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா!

1 day 14 hours ago
இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா! இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவது குறித்து மலேசியா தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், இருதரப்பு சுற்றுலா மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கான சக்திவாய்ந்த ஊக்கியாக இந்த திட்டம் செயல்படும். மலேசியாவின் சுறுசுறப்பான நகரங்கள், பசுமையான மழைக்காடுகள் மற்றும் வளமான கலாச்சார சலுகைகள் ஆகியவற்றின் வசீகரம் பல இலங்கையர்களுக்கு மறுக்க முடியாதது. இதையொட்டி, மலேசிய சுற்றுலா அதிகாரிகள் இலங்கையிலிருந்து அதிகமான பயணிகளை வரவேற்க ஆர்வமாக உள்ளனர். மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்பு மூத்த பணிப்பாளர் நுவால் ஃபாதிலா கு அஸ்மி, இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ஆதரிக்கும் விரிவான திட்டங்கள் ஏற்கனவே மலேசிய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொழும்பில் உள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயமும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதாகவும், இது ஒரு சரியான நேரத்தில் மற்றும் மூலோபாய முன்னேற்ற நடவடிக்கை என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த முயற்சி நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் அதிகரிக்க இலங்கை அரசாங்கத்திடமிருந்து முறையான இராஜதந்திர கோரிக்கையை அஸ்மி ஊக்குவித்தார். தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மீட்சிக்கு சேவை செய்யும் வகையில் பயணக் கொள்கையை மறுவடிவமைப்பதற்கான பரந்த மலேசிய உத்தியை அவரது கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இதேவேளை, மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்புப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுல்ஹெல்மி மொஹமட், 2024 ஆம் ஆண்டில் 58,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மலேசியாவிற்கு வருகை தந்ததாகவும், இது 2019 உடன் ஒப்பிடும்போது 122% அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் எடுத்துரைத்தார். https://athavannews.com/2025/1437880

இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா!

1 day 14 hours ago

New-Project-37.jpg?resize=750%2C375&ssl=

இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா!

இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவது குறித்து மலேசியா தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், இருதரப்பு சுற்றுலா மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கான சக்திவாய்ந்த ஊக்கியாக இந்த திட்டம் செயல்படும்.

மலேசியாவின் சுறுசுறப்பான நகரங்கள், பசுமையான மழைக்காடுகள் மற்றும் வளமான கலாச்சார சலுகைகள் ஆகியவற்றின் வசீகரம் பல இலங்கையர்களுக்கு மறுக்க முடியாதது.

இதையொட்டி, மலேசிய சுற்றுலா அதிகாரிகள் இலங்கையிலிருந்து அதிகமான பயணிகளை வரவேற்க ஆர்வமாக உள்ளனர்.

மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்பு மூத்த பணிப்பாளர் நுவால் ஃபாதிலா கு அஸ்மி, இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ஆதரிக்கும் விரிவான திட்டங்கள் ஏற்கனவே மலேசிய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயமும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதாகவும், இது ஒரு சரியான நேரத்தில் மற்றும் மூலோபாய முன்னேற்ற நடவடிக்கை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த முயற்சி நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் அதிகரிக்க இலங்கை அரசாங்கத்திடமிருந்து முறையான இராஜதந்திர கோரிக்கையை அஸ்மி ஊக்குவித்தார்.

தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மீட்சிக்கு சேவை செய்யும் வகையில் பயணக் கொள்கையை மறுவடிவமைப்பதற்கான பரந்த மலேசிய உத்தியை அவரது கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இதேவேளை, மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்புப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுல்ஹெல்மி மொஹமட், 2024 ஆம் ஆண்டில் 58,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மலேசியாவிற்கு வருகை தந்ததாகவும், இது 2019 உடன் ஒப்பிடும்போது 122% அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.

https://athavannews.com/2025/1437880

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

1 day 14 hours ago
எலோன் மஸ்க்கிற்கு நன்றி; இலங்கையில் ஸ்டார்லிங்க் அறிமுகத்திற்கு ரணில் பாராட்டு! இலங்கையில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார். இது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு முக்கிய படியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்டார்லிங்க் அணுகலை அனுமதித்ததற்காக பில்லியனர் எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தார். ஸ்டார்லிங்க் அறிமுகம் குறித்த செய்தியை புதன்கிழமை (02) அதிகாலை எலோன் மஸ்க் உறுதிப்படுத்தினார். இந்த சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளது என்று அவர் அறிவித்தார். https://athavannews.com/2025/1437906

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்!

1 day 14 hours ago
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்! இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் காணாமல் போன 43 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். கிழக்கு ஜாவாவின் கெட்டாபாங் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (02) இரவு புறப்பட்ட ‘The KMP Tunu Pratama Jaya’ என்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக இந்தோனேஷியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லொறிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை இரவு முதல் இருளில் இரண்டு மீட்டர் (6.5 அடி) உயர அலைகளுடன் போராட்டத்துக்கு மத்தியில் தேடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகு துயரங்கள் பொதுவானவை. அங்கு போக்குவரத்துக்காக படகுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. https://athavannews.com/2025/1437903

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்!

1 day 14 hours ago

New-Project-41.jpg?resize=750%2C375&ssl=

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்!

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் காணாமல் போன 43 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

கிழக்கு ஜாவாவின் கெட்டாபாங் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (02) இரவு புறப்பட்ட ‘The KMP Tunu Pratama Jaya’ என்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக இந்தோனேஷியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லொறிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை இரவு முதல் இருளில் இரண்டு மீட்டர் (6.5 அடி) உயர அலைகளுடன் போராட்டத்துக்கு மத்தியில் தேடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகு துயரங்கள் பொதுவானவை.

அங்கு போக்குவரத்துக்காக படகுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

https://athavannews.com/2025/1437903

வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு

1 day 14 hours ago
வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு July 3, 2025 8:30 am வவுனியாவில் புதிதாக உடற்பிடிப்பு நிலையம்(ஸ்பா) ஒன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் குறித்த உடற்பிடிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு கலாச்சார சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர். எனவே வவுனியா மாகநகரசபை தலையிட்டு உடனடியாக இந்த நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை குறித்த நிலையத்திற்கு வவுனியா மாநகரசபை எந்தவிதமான அனுமதியினையும் வழங்கவில்லை என மாநகர முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். எனவே, குறித்த நிலையத்தை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். https://oruvan.com/public-protests-over-newly-established-spa-center-in-vavuniya/

வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு

1 day 14 hours ago

வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு

July 3, 2025 8:30 am

வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு

வவுனியாவில் புதிதாக உடற்பிடிப்பு நிலையம்(ஸ்பா) ஒன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் குறித்த உடற்பிடிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இது பல்வேறு கலாச்சார சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே வவுனியா மாகநகரசபை தலையிட்டு உடனடியாக இந்த நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த நிலையத்திற்கு வவுனியா மாநகரசபை எந்தவிதமான அனுமதியினையும் வழங்கவில்லை என மாநகர முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த நிலையத்தை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

https://oruvan.com/public-protests-over-newly-established-spa-center-in-vavuniya/

சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

1 day 14 hours ago
18, 19 வயதுகளில் உள்ளவர்களுக்கு.... அதிவேக மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்த பெற்றோரை என்னவென்று சொல்வது.

வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்

1 day 14 hours ago
வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன் Published By: DIGITAL DESK 3 03 JUL, 2025 | 10:15 AM தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள மாகாண ஆணையாளர், உதவிப் பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தில் புதிய பதவிநிலை ஆளணி உருவாக்கம், வெற்றிடமாகவுள்ள பதவிநிலைகள் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அத்துடன் சிற்றூழியர்களுக்கான பதவி உயர்வுகள், சிற்றூழியர் வெற்றிடங்களை நிரப்புமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை என்ற விடயம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இடமாற்றங்கள் தொடர்பிலும், நியமனம் பெறுகின்ற வைத்தியர்களுக்கான நிலையங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் கீழ் மாகாண மட்டத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்வதில்லை எனவும் ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்யவேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாகவும் சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது. இவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினார். https://www.virakesari.lk/article/219063

வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்

1 day 14 hours ago

வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்

Published By: DIGITAL DESK 3

03 JUL, 2025 | 10:15 AM

image

தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள மாகாண ஆணையாளர், உதவிப் பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தில் புதிய பதவிநிலை ஆளணி உருவாக்கம், வெற்றிடமாகவுள்ள பதவிநிலைகள் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்துடன் சிற்றூழியர்களுக்கான பதவி உயர்வுகள், சிற்றூழியர் வெற்றிடங்களை நிரப்புமாறு கேட்டுக்கொண்டனர்.

மேலும், வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை என்ற விடயம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இடமாற்றங்கள் தொடர்பிலும், நியமனம் பெறுகின்ற வைத்தியர்களுக்கான நிலையங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் கீழ் மாகாண மட்டத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்வதில்லை எனவும் ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்யவேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாகவும் சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.

இவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினார். 

https://www.virakesari.lk/article/219063

சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

1 day 15 hours ago
சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம் புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரக்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. து.திசாளன் (வயது-19), க.பிரவீன் (வயது-18) என்ற இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். விபத்துத் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்து வருகின்றனர். அதிவேக மோட்டார் சைக்கிளொன்றை நேற்றுமுன்தினம் கொள்வனவு செய்து விட்டு, அதில் நேற்றுப் பயணித்த நிலையிலேயே இந்தக் கோரவிபத்து சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/சுன்னாகத்தில்_கோர_விபத்து;_இரண்டு_இளைஞர்கள்_பலி!_முதல்நாள்_வாங்கிய_மோட்டார்_சைக்கிளில்_சென்றபோது_விபரீதம்

சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

1 day 15 hours ago

சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

349944414.jpg

புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரக்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

து.திசாளன் (வயது-19), க.பிரவீன் (வயது-18) என்ற இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். விபத்துத் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதிவேக மோட்டார் சைக்கிளொன்றை நேற்றுமுன்தினம் கொள்வனவு செய்து விட்டு, அதில் நேற்றுப் பயணித்த நிலையிலேயே இந்தக் கோரவிபத்து சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/article/சுன்னாகத்தில்_கோர_விபத்து;_இரண்டு_இளைஞர்கள்_பலி!_முதல்நாள்_வாங்கிய_மோட்டார்_சைக்கிளில்_சென்றபோது_விபரீதம்

துணுக்காயில் இருந்தது இந்திய இலங்கை படைமுகாமே! மக்களின் வாக்குமூலம்

1 day 16 hours ago
செம்மணி அகழ்வை திசைதிருப்பி, அங்கே இராணுவ உடல்கள் என ஆதாரப்படுத்த சில அடையாளங்களை புதைப்பதற்கும் அகழ்வை நிறுத்துவதற்கும் செய்யப்படும் தந்திரோபாயமாக இருக்கலாம். அங்கே ஒரு மர்மம் வாகனம் நோட்டமிடுவதாக செய்தி வருகிறது. துணுக்காயில் சடலங்கள் புதைக்கப்படிருந்தால் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் இலங்கை, இந்திய, மற்றும் துணை ஆயுதக்குழுக்களே பொறுப்பு. அவர்களை விசாரியுங்கள். தனது தந்தை என்ன தொழில் செய்து தன்னை படிக்க வைத்தார் என்று சொல்லும் அருண் சித்தார்த், தான் படித்தாரா என்று சொல்லவில்லை. பாவம் அந்த தந்தை! தன்னைப்போல் கஷ்ரப்படாமல் மகன் படித்து முன்னேற வேண்டுமென்று நினைத்திருப்பார், ஆனால் நடந்தது, தனது சமூகத்தாலேயே வெறுத்தொதுக்கும் வேலையை செய்து அந்த தந்தையின் கனவை சிதறடித்துள்ளார். தனது தந்தையையும் சமூகத்தையும் கேவலப்படுத்துகிறார்.

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!

1 day 19 hours ago
இதை எல்லாம் நாங்கள் நம்ப வேணும் என்றால்….. பாஸ் போர்ட்டை அனுப்பி வைக்கவும். அதில் குத்தியுள்ள சீல்களை பார்த்துத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். 😂