எங்கள் மண்

“My dear Tamil diaspora and their children and grandchildren…” / "எனது அன்பான தமிழ் புலம்பெயர்ந்த மக்களே, அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளே..."

6 hours 28 minutes ago

“My dear Tamil diaspora and their children and grandchildren…” / "எனது அன்பான தமிழ் புலம்பெயர்ந்த மக்களே, அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளே..."

“When I say Jaffna, Mullaitivu, Trincomalee, Batticaloa—your heart feels pain. You remember massacres, burnt homes, destroyed temples. Some of you think, ‘Why should we go back there?’ But I am here to tell you—that is exactly why you must go back. ”Visiting the North and East of Sri Lanka is not just tourism. It is a duty—cultural, political, economic, and spiritual. / "நான் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு என்று சொல்லும்போது - உங்கள் இதயம் வலிக்கிறது. படுகொலைகள், எரிக்கப்பட்ட வீடுகள், அழிக்கப்பட்ட கோயில்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது. உங்களில் சிலர், 'நாம் ஏன் அங்கு திரும்பிச் செல்ல வேண்டும்?' என்று நினைக்கிறீர்கள், ”இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வது வெறும் சுற்றுலா மட்டுமல்ல. அது ஒரு கடமை - கலாச்சார, அரசியல், பொருளாதார மற்றும் ஆன்மீகம் ஆகும், அதனை, ஏன் நீங்கள் பயணிக்க வேண்டும் என்பதை, நான் இங்கே கீழே விபரமாக ஆங்கிலத்தில், - காரணம் இது புலம்பெயர்ந்த மக்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கும் சேர்த்து என்பதால் - பதிவிடுகிறேன்

1. Cultural & Historical Continuity

The Tamil people have lived in the North and East of Sri Lanka for more than two millennia. Ancient travelers, inscriptions, and chronicles such as Dipavamsa and Mahavamsa record the existence of Tamil and Nāga kings who ruled these lands. Despite this deep history, post-independence Sri Lanka (1948 onwards) brought systematic discrimination, ethnic riots (1956, 1977, 1983), mass displacement, and finally the devastating war that ended in 2009.

Today, while many Tamils live abroad due to forced migration, their connection to the homeland must not fade. One powerful way to maintain this connection is regular visits to the North and East of Sri Lanka.

Visiting these lands keeps alive the visible presence of Tamils. If diaspora Tamils don’t go, the government and others may claim, “Tamils have abandoned it.”

Example: In Jaffna, many ancient temples (Nallur Kandaswamy, Ketheeswaram, Naguleswaram, Thirukoneswaram) are living testimonies of Tamil heritage. When diaspora families visit and worship there, they affirm that these are not “abandoned ruins” but part of a living culture.

2. Counteracting State Narratives

Successive governments have promoted “Sinhala-Buddhist heritage” in Tamil areas, often erasing or overshadowing Tamil symbols with new Buddhist statues or army-built structures.

Example: After 2009, many Buddhist shrines were erected in Mullaitivu, Kilinochchi, and Trincomalee where no Sinhala people live.

In brief, The Sri Lankan state has tried to erase Tamil heritage by replacing temples with Buddhist shrines and by changing place names.

Regular visits by diaspora Tamils challenge this narrative by showing the world community and local Sinhala authorities that Tamils abroad have not forgotten or surrendered these lands. In brief, When Tamils visit in large numbers, it challenges the narrative of abandonment and sends a message that the land is still ours.

3. Support for the Local Population. In other words , Strengthening the Local Economy

Tourism dollars spent in Jaffna, Trincomalee, Batticaloa, Mullaitivu, and Vavuniya directly support Tamil businesses, helping communities recover. This reduces dependency on state-driven projects that often marginalize locals.

For examples, Tamils who remain in the North and East still face:

Military occupation of land

Lack of job opportunities

Psychological trauma of war

Diaspora visits bring not only emotional strength but also economic support. Tourists spend money on hotels, guides, transport, small businesses — strengthening the Tamil economy rather than making it collapse. Example: In Jaffna, during Nallur festival, diaspora visitors boost the entire city’s economy, helping small traders, food stalls, transport workers, and local hotels. specially staying in Tamil-owned guesthouses, using local guides, and buying from small traders sustains the Tamil economy.

4. Global Awareness, Documentation & A Political and Cultural Statement

Every diaspora family that visits, takes photos, writes blogs, or shares experiences on social media. This creates a counter-narrative to government propaganda. Example: If Tamil Canadians, British Tamils, and French Tamils post about their visits to Mullaitivu massacre sites, Thileepan memorials, or burned Jaffna library grounds, the international audience sees the truth. This keeps Tamil suffering and history alive beyond Sri Lanka’s borders.

Every diaspora visit is a subtle reminder to the government and the world that Tamils have not forgotten their homeland. It is similar to how Palestinians, even if exiled, insist on returning to their villages to show ownership. That is, Diaspora visits remind the world that Tamils are alive and present, not forgotten.

5. Generational Identity & Education

Children born abroad may grow up knowing only Canada, UK, Switzerland, Australia, etc. Without seeing Jaffna or Batticaloa, they may believe “we are outsiders.” Many second-generation diaspora youth have never seen their ancestral villages. So Visiting allows them to connect emotionally, bridging the gap between exile and homeland.

For Example, Visiting the homeland allows them to: See their ancestral temples, schools, and villages. Hear Tamil spoken in its natural setting. Feel the soil of their forefathers. Example: Many Tamil families take children to the Jaffna Public Library site to teach them about its 1981 burning. This ensures that Tamil memory continues beyond one or two generations.

6. Diplomatic & Political Message and World Historical Examples

When diaspora Tamils travel back in large numbers, it sends a message to: Sri Lankan government: “We still care for this land.”

International observers: “Tamils are not a disappearing minority; they are a global people tied to their homeland.”

Example: During Nallur festival, thousands of diaspora Tamils return. Even Colombo newspapers report: “Diaspora floods Jaffna.” This cannot be ignored by authorities—it proves Tamil homeland identity is alive.

Jewish diaspora: For centuries, Jews visited Jerusalem despite displacement, keeping their bond alive until Israel was established.

Armenian diaspora: Armenians dispersed after the genocide still regularly visit Armenia to strengthen ties.

African diaspora: Many African Americans visit Ghana and other African countries as “homecoming” journeys to reclaim identity.

Similarly, Tamil diaspora visits maintain ownership and memory.

7. Preventing or Protecting Land Grabs & Countering State Narratives of Development

Government often justifies army occupation by saying, “No Tamils live here anymore, so we will develop it.”

If diaspora visits increase, they strengthen claims of ancestral ownership.

Example: In Mullaitivu, army-run tourist resorts have been built on seized Tamil lands. If diaspora visitors insist on staying in Tamil-owned guesthouses and demand access to Tamil lands, it resists this land-grab silently but effectively. The Sri Lankan government promotes "development tourism" in the North and East to justify Sinhalization. Diaspora visits counter this narrative by prioritizing Tamil spaces, schools, temples, and villages.

8. Healing and Remembrance

Many Tamils lost loved ones (1956, 1977, 1983 pogroms, and the 2009 Mullivaikkal massacre). Visiting those lands is a pilgrimage of memory. Example: Visiting Mullivaikkal on May 18th, lighting candles, and praying together sends a message: “We have not forgotten our dead.” It also heals families abroad who carry grief and trauma.

9. Religious & Spiritual Duty

For Hindus, Saivaite temples of the North-East (Thirukoneswaram, Naguleswaram, Ketheeswaram, Nallur) are among the oldest shrines of Tamil Saivism. For Christians, churches like Madhu shrine hold deep meaning.

Visiting is a spiritual reaffirmation—keeping the faith alive in Tamil soil. that is, Visiting preserves faith and spirituality on Tamil soil.

10. Examples or Lessons from Other Nations

Jewish diaspora: Even after 2000 years of dispersion, Jews regularly visited and prayed towards Jerusalem until they regained Israel.

Armenians: Spread worldwide but maintain pilgrimages to Armenia, keeping alive their claim to history.

Kurdish diaspora: Visits Kurdistan regularly to strengthen its recognition.

Similarly, Tamil diaspora must visit Sri Lanka’s North-East to ensure homeland identity is not erased.

Conclusion

Yes—diaspora Tamils must regularly tour the North and East of Sri Lanka.

It is not just tourism; it is:

A political act of resistance

A cultural duty of remembrance

An educational investment for future generations

An economic lifeline for local Tamils

A global declaration that the Tamil homeland is alive

Without diaspora visits, silence and absence will allow governments and international allies to say: “Tamils don’t care anymore.”

With regular visits, the truth remains visible—both to Sri Lanka and to the world

In brief , For Tamils abroad, visiting the North and East of Sri Lanka is more than a holiday. It is an act of cultural preservation, political resistance, and emotional healing. Each step taken in Jaffna, each prayer at Trincomalee, each embrace with local relatives echoes across history, reminding both the Sri Lankan state and the world that this land is still Tamil land.

If we do not visit, silence may slowly erase us from memory. If we do visit, we prove—like other displaced peoples throughout history—that our roots cannot be cut. The North and East are not just geography; they are identity, memory, and future.

Before I conclude, let me share a few key historical facts, briefly but meaningfully, for you to remember. / Historical Context (Brief but Essential)

1. Ancient Tamil Presence

Archaeological and literary evidence confirms that Tamils and Nagas (Saivite-related communities) lived in Sri Lanka long before Vijaya’s arrival (around 500 BCE). Stone inscriptions, Brahmi scripts, and Sangam literature refer to Tamil-speaking peoples in the island. Ancient texts like Mahavamsa and Dipavamsa—though written with Sinhala-Buddhist bias—acknowledge the existence of Tamil kings and Naga chieftains. Major Saivite temples—Ketheeswaram (Mannar), Naguleswaram (Keerimalai, Jaffna), Thirukoneswaram (Trincomalee), Munneswaram (Chilaw)—all existed from early centuries and prove the depth of Tamil religious civilization. Thus, Tamils are not “immigrants” but one of the founding civilizations of the island.

2. Medieval Tamil Kingdoms

From 10th century onwards, the Chola influence spread into the island. By the 13th century, the Jaffna Kingdom (Arya Chakravarthi dynasty) was firmly established, ruling from Jaffna over much of the North and parts of the East. The Jaffna Kingdom maintained Tamil literature, culture, and trade until its fall to the Portuguese in 1619. This period solidified the North-East as a Tamil homeland, with its own rulers, coinage, temples, and laws.

3. Colonial Period (1505–1948)

Portuguese, Dutch, and British successively colonized Sri Lanka. British rule brought the North-East Tamil regions and Kandyan Sinhalese regions into one administrative unit in 1833 (Colebrooke-Cameron reforms). This was the first artificial unification of the island. Tamil Saivite revival movements flourished (e.g., Arumuga Navalar in Jaffna). Tamils gained prominence in education and administration due to missionary schools and British appointments.

4. Post-Independence Betrayals (1948 onwards)

When Sri Lanka gained independence (1948), the Sinhala political elite began to sideline Tamils systematically: 1948–49: Citizenship Act disenfranchised nearly 1 million Indian Tamils (plantation workers). 1956: Sinhala Only Act imposed Sinhala as the sole official language, sparking anti-Tamil riots. 1958, 1977, 1981, 1983: Large-scale anti-Tamil pogroms killed thousands and destroyed properties—especially the burning of the Jaffna Public Library (1981) and Black July (1983). 1972 & 1978 Constitutions: Elevated Buddhism and Sinhala primacy, sidelining Tamil rights. Standardization (1970s): Denied Tamil students equal university access. Thus, Tamils realized they could not secure justice within a Sinhala-majority framework.

5. Civil War (1983–2009)

The Tamil struggle turned into an armed conflict, led by the Tamil youth groups. Tamils sought to protect their homeland in the North - East from state oppression and colonization. For 26 years, the North - East experienced war, displacement, and destruction. 2009 Mullivaikkal massacre: Tens of thousands of Tamils were killed in the final months. Even after the war ended, justice was denied, and militarization continued.

6. Post-War Situation (2009–Present)

High militarization: The Northern Province has the highest soldier-to-civilian ratio in the world. Land grabs: Army and state acquire fertile Tamil lands for military camps, Buddhist shrines, and Sinhala settlements.

Demographic changes: Sinhala colonization schemes continue, particularly in Trincomalee, Mullaitivu, and Batticaloa. Cultural erasure: Ancient Saivite temples are replaced or overshadowed by new Buddhist constructions. Economic suppression: The North-East lags in investment and jobs, forcing youth to migrate. Psychological trauma: War survivors live with grief, disappearances, and unhealed wounds.

7. New Rulers & Political Climate

Different governments (Rajapaksas, Sirisena, Gotabaya, Wickremesinghe) promised reconciliation but failed to deliver justice or political rights. International pressure (UNHRC reports) highlights human rights violations, but Sri Lanka resists accountability. Current rulers speak of “development,” but often it masks Sinhala-Buddhist expansion in Tamil areas. Without diaspora presence, the North-East risks becoming a “museum piece,” where Tamil culture exists only in books, not in living communities.

8. Why Diaspora Must Visit North & East

Now connecting history to present: To show unbroken connection. Tamils have lived there for 2300 years. Visits prove this continuity to the Sri Lankan state and to the world. To prevent erasure. If diaspora Tamils stop visiting, the government may argue: “They left permanently; this is now Sinhala land.” To educate the next generation. Children abroad must see Nallur, Jaffna Library site, Mullivaikkal beach, Trincomalee temples—otherwise, they risk losing homeland identity. To support local Tamils. Tourism brings money to Tamil-owned businesses, strengthening local survival instead of depending on state or army establishments. To preserve memory & justice. Visiting massacre sites, memorials, and destroyed villages keeps international awareness alive. Silence benefits only the state. To mirror global examples. Jews, Armenians, Kurds—all maintain ties to their homeland through visits, even when they lived in diaspora for centuries. Tamils must do the same.

9. Practical Outcomes of Regular Visits

Each diaspora visit is not just a holiday but an act of political resistance and cultural reaffirmation. It sends a strong message to: Sri Lankan rulers: “This land still belongs to Tamils.” World community: “Tamils are not erased; we are alive.” & Future Tamil generations: “This is your motherland, never forget it.”

— Kandiah Thillaivinayagalingam, following my last visit to Sri Lanka in August 2025 --

“My dear Tamil diaspora and their children and grandchildren…” / "எனது அன்பான தமிழ் புலம்பெயர்ந்த மக்களே, அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளே..."

https://www.facebook.com/groups/978753388866632/posts/31322667227381849/?

செம்மணியும் ஆன்மீகவாதி

1 week 1 day ago

செம்மணியும் ஆன்மீகவாதி

--------- ------------------

*அரசியல் சாராத செல்வாக்குள்ள ஒருவரை முன்நிறுத்தி பின்னால் நகர்த்தப்படும் கொழும்பின் சதி அரசியல்

*சித்துப்பாத்தி மனித புதைக்குழி மூடி மறைக்கப்படலாம்!

*வலிகிழக்கு பிரதேச எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை...

*கூட்டுரிமை விவகாரங்களில், செல்வாக்கு மிக்கவர் - கல்வியாளர் என்பது தவிர்க்கப்படல் வேண்டும்...

*நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் அமைதிப்பது ஏன்?

---------- ----- ------ --------

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசம் தற்போது தமிழ் இன அழிப்பின் பிரதான அடையாளமாக விளங்குகிறது. இப்பின்னணியில், முடிந்தவரை இலங்கை அரசாங்கம் 1996 ஆம் ஆண்டு செம்மணியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் பற்றிய அடையாளங்களை மூடி மறைக்கும் முயற்சிகளை திரைமறைவில் அரங்கேற்றுகிறது.

ஆனாலும், ஈழத்தமிழ் தரப்பில் உள்ள சட்டத்தரணிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் செய்தியாளர்கள், செம்மணி விவகாரத்தை திசை திரும்ப விடாமல் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.

2009 மே மாதம் போரின் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டில் இருந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் கூடுதலாக வடக்கு மாகாணத்தில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஏறத்தாள முன்னூறுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இதுவரை உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை.

மன்னார் திருக்கேதீஸ்வரம் வளாகத்தில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியது என்பதை கண்டறிவதற்கான காபன் பரிசோதனை மேற்கொள்வதற்கான (கதிரியக்க கார்பன் காலக்கணிப்பு -C-14 Carbon Dating Test) மாதிரிகள் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

அதற்கான நிதியை கோரி, ஓஎம்பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விவரங்கள் கண்டறியும் அலுவலகத்திடம் விலை மனு கோரப்பட்டு இருந்தது.

ஆனால், அதற்கான பதில் வழங்கப்படாமல் கால தாமதம் ஏற்படுகிறது.

அதேநேரம் ---

மன்னார் சதொச கட்டிடத்தின் கீழ் பகுதியில் 2018 ஆம் ஆண்டு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டிருத்தன.

ஒரு பகுதியை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவிற்கு அனுப்ப ஓகஸ்ட் மாதம் 2022 ஆம் ஆண்டு மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டது.

எனினும், அமெரிக்காவின் மியாமி பீட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனம், (Beta Analytic Inc.) அவை கி.பி.1404 -1635ற்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளை சேர்ந்தது என ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆனால், அந்த எலும்புகள் போர்க்காலத்துக்குரியவை என அகழ்வில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் ஏற்கனவே சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட சில மனித எச்சங்கள் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவிடம் சமீபத்தில் தான் ஆய்வுக்காக கை யளிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, இன அழிப்பு என்பதை மூடி மறைக்கும் முயற்சிகள் 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட நாளில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக உணர முடிகிறது.

இவ்வாறான பின்னணியில் செம்மணி மனித புதைகுழி விவகாரமும் மூடி மறைக்கப்படக் கூடிய ஆபத்துகள் இல்லாமலில்லை.

இப் பின்புலத்தில்தான் செம்மணியில் உள்ள அரசாங்க காணி என கருதப்படும் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான அதுவும் செல்வாக்குப் பெற்ற ஒரு ஆன்மீகவாதி ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இவர் ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர்.மத அறக்கட்டளை நிறுவனங்களையும் நடத்தி வருபவர்.

இதற்கு ------

1) காரண - காரியத்தோடு கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு செலுத்தியுள்ளது...

2) காணியில் சங்கிலியன் சிலை ஒன்றும் ஆன்மிகத் தலம் ஒன்றும் அமைக்கப்படுவதற்கான யோசனைகள் இருப்பதாகவும் அறிய முடிகிறது.

ஆனால் -----

குறித்த மூன்று ஏக்கர் காணி 1996 ஆம் ஆண்டு கிரிசாந்தி குமாரசுவாமி இராணுவத்தினர் ஒன்பது பேரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடமாகும்.

அத்துடன் கிரிசாந்தியை தேடிச் சென்ற தாயாரும் அயல் வீட்டாரும் அந்த இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு அப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கின்றனர்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று, 1999 ஆம் ஆண்டு வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், முதலாம் எதிரியான சோமரட்ன ராஜபக்ச தனது இறுதி விருப்பத்தை நீதிபதியிடம் வெளிப்படுத்தினார்.

அப்போது செம்மணியில் சுமார் 600 இற்கும் அதிகமான இளைஞர்கள் - யுவதிகள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை தன்னால் அடையாளம் காண்பிக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு விசாரணைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டன. இந்த சாட்சியத்தின் பிரகாரம், சோமரட்ணவுடன் செம்மணிக்கு சென்றிருந்த மன்னார் மாவட்ட அப்போதைய நீதிபதி இளஞ்செழியன், மனிதப் புதைகுழிகள் இருப்பதாக காண்பித்த இடங்களை அடையாளப்படுத்தினார்.

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டிருந்த காணியின் ஒரு பகுதியைத் தான் ஆன்மீகவாதி ஒருவருக்கு கொழும்பு அரச அதிகாரிகள் வழங்கியிருக்கின்றனர்.

நகர்த்தல் பிரேரணை ----

கிரிசாந்தி உள்ளிட்ட 600 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் குறித்த மூன்று ஏக்கர் காணிக்குள் விசாரணை முடிவடையும் வரை கட்டிடங்களை கட்ட வேண்டாம் என கோரி சட்டத்தரணி சண்முகநாதன் வைஷ்ணவி யாழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நகர்த்தல் பிரேரணை ஒன்றை கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டும் இப் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது.

ஆன்மீகவாதி பெற்றுள்ள காணியில் கட்டடங்கள் கட்டப்படும் போது, அதனால் எழும் விளைவுகள் அங்குள்ள மனித புதைகுழி பற்றிய விசாரணைக்குத் தடையாக இருக்கும் எனவும் நகர்த்தல் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதேநேரம், காணிக்கு 500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்க்கால மனிதபுதை குழி அகழ்வு நடவடிக்கைகளிலும் இடையூறு ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நகர்த்தல் பிரேரணையை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் (Jurisdiction) மஜிஸ்ரேட் நீதிமன்றத்துக்கு இல்லை என்பதால், இதனை யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

இது பற்றி சட்டத்தரணி வைஷ்ணவியிடம் நான் வினவியபோது, நகர்த்தல் பிரேரணையை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முறைப்பாட்டாளர்கள் எவரும் முன்வர தயங்குவதாக கவலை வெளியிட்டார்.

நகர்த்தல் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு என்பது செம்மணியை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படவுள்ள வெள்ள அபாயம் பற்றியது.

அதாவது ----

இருபாலை, கல்வியங்காடு வலிகாமம் கிழக்கின் ஒரு பகுதி, நல்லூர் பிரேத சபையின் ஒரு பகுதி, அரியாலை போன்ற மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மழை காலத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உண்டு.

இது வலி கிழக்கு பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளதால், கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் நான் வினவினேன்.

முதலில் வெள்ள அபாயம் ஏற்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

அத்துடன் ஆன்மீகவாதி அரசாங்கத்திடமிருந்து பெற்ற காணியில் கட்டிடங்களை கட்டுவதற்குரிய அனுமதிக்கு கோப்பாய் பிரதேச சபையிடம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

சித்துப்பாத்தி மயானத்தில் போர்க்கால மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கிரிசாந்தி உள்ளிட்ட 600 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக அடையாளம் இடப்பட்டுள்ள செம்மணி காணிக்குள் கட்டிடங்கள் அமைப்பதை தற்காலிகமாக பிற்போடுங்கள் என தொலைபேசியில் தாழ்மையாக தான் கேட்டுக் கொண்டதாகவும் என்னிடம் எடுத்துச் சொன்னார்.

இந்த விவகாரத்தில் குறித்த ஆன்மீகவாதியிடம் இருந்து மாற்றம் வரும் என தான் நம்புவதாகவும் நிரோஷ் என்னிடம் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை ----

யாழ்ப்பாணத்தில் மழையினால் பெறப்படும் வெள்ள நீரை கடலுக்குச் செல்ல விடாமல் தொண்டமானாறு, செம்மணி போன்ற இரண்டு பிரதேசங்களை தெரிவு செய்து பாரிய அபிவிருத்தி திட்டம் ஒன்றை வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம் செயல்படுத்தி வருகிறது.

உலக வங்கியின் 400 மில்லியன் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தொண்டமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்துள்ளது.

ஆனால், செம்மணி திட்டம் இன்னும் செய்யப்படவில்லை.

விளக்க குறிப்புகள் ---

A) இவ்வாறான ஒரு நிலையில் குறித்த ஆன்மீகவாதி, செம்மணியில் தான் பெற்றுக் கொண்ட காணியில் எந்தவொரு கட்டிடத்தையும் அமைக்கும் விடயத்தில் பொருத்தமான ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.

B) இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சைவ மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் பொருத்தமான முறையில் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

C) குறித்த ஆன்மீகத் தலைவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அமைதி காப்பது ஆரோக்கியமானதல்ல.

அதேவேளை, தமிழர்களின் கூட்டுரிமை சார்ந்த விவகாரங்களில் ---

1) செல்வாக்கு மிக்கவர்

2) கல்வியாளர்

3) புத்திஜீவி

என்ற நோக்கு நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

ஏனெனில் -----

13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்ற காரண - காரியத்தோடு மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் ஒரு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இலங்கை ஒற்றையாட்சி அரசு மீளவும் பெறுகிறது.

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்ற வினா தொடர்ந்து தொக்கி நிற்கிறது.

இப்பின்னணியில், கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு என்ற அடிப்படையில் அரச காணிகளை பெற, தமிழ் தரப்பில் யார் ஈடுபட்டாலும் அது கூட்டுரிமை மீறலாகும்.

இவ்வாறான செல்வாக்குடன் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதையும் மறுக்க முடியாது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் கொழும்பை மையமாகக் கொண்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆகவே --

இந்த ஆபத்துகள் பற்றி கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு உள்ள தமிழர்கள் உணர தலைப்பட வேண்டும்.

அதேநேரம் --

செம்மணியில் மாத்திரமல்ல, வேறெந்த இடங்களிலும் காணிகளை பெறும் முறைமை அல்லது காணிகளை இழப்பது போன்ற விவகாரங்களுக்கு இலங்கை ஒற்றையாட்சி நீதிமன்றங்களில் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்கவும் முடியாது.

ஏனெனில், அது அரசியல் பிரச்சினை. அதை சட்டங்களினால் தீர்க்க முடியாது. உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதாலேயே இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரப்படுகின்றது.

ஜெனீவா ஆணையாளர் கூட தனது அறிக்கையில் இலங்கை நீதித்துறையின் நம்பகத்தன்மை அற்ற பின்னணியை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆகவே, சிங்கள உறுப்பினர்கள் பெரும்பான்மையாக அங்கம் வகிக்கும் இலங்கை நாடாளுமன்றத்தின் ஊடாகவோ, ஒற்றையாட்சி நீதிமன்றத்தின் மூலமாகவோ தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பது பட்டறிவு.

இந்த அடிப்படையில் எழுந்ததுதான் ”தமிழ்த் தேசியம்” என்ற கோட்பாடு.

இதை புரிந்து கொண்டு 2009 இற்கு பின்னரான தமிழர் அரசியல் விவகாரத்தை மேலும் சிக்கலாக்க கூடிய பிரித்தாளும் தந்திரங்களுக்கு இடமளிக்க கூடாது.

மக்களிடம் செல்வாக்கு பெற்ற அரசியல் சாராத ஒருவரை முன்நிறுத்தி பின்னால் நகர்த்தப்படும் கொழும்பின் சதி அரசியலுக்குள் (Conspiracy Politics) பலியாகாமல், ஈழத்தமிழர்களின் கூட்டுரிமை என்ற வியூகத்தில் உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இலங்கை நீதிமன்றங்களுக்கு சென்று, தமிழர்கள் தமக்குள் வாக்குவாதப்படும் அவலங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டும்.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி மற்றும் சிவபூமி அருங்காட்சியகம் ஆகியவை மரபுரிமை - பண்பாட்டு அடையாளங்களை பேணும் முறை.

இவ்வாறு தமிழர்களின் மரபுரிமை மற்றும் சைவ சமய மாண்புகளை, இன ஒதுக்கல் சவால்களுக்கு மத்தியில் பேணி வரும் ஒரு ஆன்மிகவாதி, சமூகப் பொறுப்புடன் செயற்படுவதற்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஆரோக்கியமான புரிதல் உருவாக வேண்டும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0RRkj82ywfozotwZ3NMazQang75E19TBfQDyRvDHTqYkmwhTdnjJJzvGtpZdd4NFyl&id=1457391262

தமிழீழத்தில் பாவிக்கப்பட்ட கொடிகளும் அவற்றின் வரலாறுகளும் | ஆவணம்

1 week 5 days ago

"தோற்றிடேல், மீறித்

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

இந்த ஆவணத்தில் எமது தமிழீழ நடைமுறையரசின் காலப்பகுதியில் அவர்தம் படைத்துறை இயந்திரத்தாலும் நடைமுறையரச இயந்திரத்தாலும் பாவிக்கப்பட்ட பல்வேறு வகையான கொடிகள் பற்றி பட்டியலிட்டு அவைதொடர்பான சில விடையங்களையும் ஆவணப்படுத்தியுள்ளேன். இக்கொடிகளில் தேசியக்கொடியும் விடுதலைப்புலிகளின் கொடியும் பயன்பாட்டிற்கு வந்த சரியான ஆண்டுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையவை எப்போதிலிருந்து பயன்பாட்டிற்கு வந்தது என்பது தொடர்பில் சரியான தகவல்கள் என்னிடத்தில் இல்லை.

  • விடுதலைப்புலிகளின் கொடி:

தவிபு அமைப்பின் கொடிதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற்கொடியாகும். இது தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணக்கருவிற்கேற்ப 1977 அம் ஆண்டு வரையப்பட்டது. இது முதன் முதலில் 1978ம் ஆண்டு அவர்களின் கடிதத்தில் பாவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் இவ் இலச்சினையோடு கூடிய உரிமைகோரல் கடிதம் 'சிறில் மத்தியூவின் அரசபணியில்' என்ற கடித உறைக்குள் வைக்கப்பட்டு இலங்கை பூராவுமே ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டது (ஆதாரம்: மூத்த உறுப்பினர் தேவர்).

large.firstletterofltte.jpg.fb83ef3b1c36

விடுதலைப்புலிகளின் முதல் உரிமைகோரல் கடிதம்

இக்கொடி உருவான கதை தொடர்பில் 1991ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இல் அவர்களால் வரலாறு வெளியிடப்பட்டது. இருந்தபோதிலும் 2015ம் ஆண்டிலும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர் 'வர்ணகுலத்தான்' அவர்களாலும் எழுத்தாளரும் கேலிச்சித்திர ஓவியருமானன 'மூனா' அவர்களால் 2016ம் ஆண்டிலும் அதனோடு முரணாகும் வகையில் வேறொரு தோற்றக்கதை கூறப்பட்டுள்ளது.

எவ்வாறெயினும் கால வரிசையின் படி இரண்டு வகையான தோற்றக்கதைகளும் இங்கு தரப்படுகின்றன. 

முதலில் புலிகளால் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இல் 1991ம் ஆண்டு மாசி-பங்குனி இதழின் மூன்றாம் பக்கத்தில் வெளியிடப்பட்ட தோற்றக்கதையினை காண்போம்:

"...இன்று எமது தேசியக்கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் புலிச்சின்னத்தின் உருவப்படம் பிரபாகரனின் கருத்திற்கு அமையவே வரையப்பட்டது. பிரபாகரனின் நண்பரும் மதுரையைச் சேர்ந்த பிரபல ஓவியருமான 'நடராஜன்' என்பவர் 1977ம் ஆண்டு புலிச்சின்னத்தின் உருவப்படத்தை வரைந்தார். பிரபாகரனின் யோசனைக்கமைய பல தடவைகள் வரைந்து, இறுதியில் எமது தலைவரின் எண்ணப்படம் புலிச்சின்னமாக உருவகம் பெற்றது. இந்த புலிச்சின்னம் இன்று எமது தேசியக்கொடியை அலங்கரிக்கின்றது.... ”

இரண்டாவதாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளரான 'வர்ணகுலத்தான்' அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள தோற்றக்கதையினை இங்கு காண்போம்:

"இதேபோல் விடுதலைப் புலிகளின் இலச்சினையும் ஒரேஎத்தனத்தில் இன்றுள்ள வடிவத்தை எடுக்கவில்லை.

"1916இல்அமெரிக்காவின் கலிபோணியாவில் உருவாகிய GOLDWIN PICTURES நிறுவனமே பின்னாட்களில் METRO GOLDWIN MAYER எனும் பிரமாண்டமான MEDIA COMPANY யாக உருவாயிற்று. MGM எனும் இந்நிறுவனத்தின் TRAD MARK ஆக காணப்படுவது திரைப் பட சுருள்களுக்கிடையில் இருந்து கர்ஜிக்கும் சிங்கம் ஆகும். இதனை மூலமாகவைத்து 1975 இல் ‘வாசு சிகார்’ அட்டைப் பெட்டிக்காக மோகண்ணா ஆரம்பத்தில் உருவாக்கிய சித்திரமே ‘வாசு சிகார்’ அட்டைப்பெட்டியில் காணப்பட்ட ‘சுவரை உடைத்துக் கொண்டு பாயும் சிங்கமாகும். இச்சிங்கத்தின் மாதிரியே தலைவர் பிரபாகரன் அவர்களின் விருப்பத்திற்கமைய 1976இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுதிகொண்ட உத்தியோக பூர்வமான இலச்சினை வடிவத்தில் காணப்பட்ட புலியாக ஆரம்பத்தில் மாற்றப் பட்டது. குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் சின்னத்திற்காக பின்னர் பண்டாரவன்னியனின் ஓவியத்தில் கேடயத்தின் குறுக்காக காணப்படும் வாள்கள் துப்பாக்கிகளாகவும் சோவியத் நாடு சஞ்சிகையில் வளைந்து ஓவல்வடிவத்தில் காணப்பட்ட நெற்கதிர்களின் நெல்மணிகளை துப்பாக்கியின் ரவைகள்(குண்டுகள் ) ஆகவும் மாதிரியாக கொண்டு இறுதியாக 1977ன் இறுதியில் மோகண்ணா உருவாக்கிய அவ் அடையாளச் சின்னமே விடுதலைப்புலிகளின் முதலாவது அடையாளச் சின்னமாகும்......"

இதில் கூறப்படும் அமரர் மோகன் (ராமதாஸ் மோகனதாஸ்) என்பார் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் ஆவார். முன்னாளில் அவர்களின் ஆதரவாளராக விளங்கியதோடு பின்னர் விடுதலைப்புலிகளின் முதல் கப்பலான 'சோழன்' என்பதின் கலக்குழுவினருள் ஒருவராக பணியாற்றியும் இருந்தார். இவரது இந்த இலச்சினை வடிவமைப்பு தொடர்பில் எழுத்தாளர் மூனா அவர்கள் மோகனின் அமரத்துவத்திற்குப் பின்னர் அவர் பற்றி எழுதிய 'மோகன் ஆர்ட்ஸ்' என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதியிருந்தார்:

"ஒரு தடவை ஒரு தேயிலை பெட்டியில் இருந்த ஒரு புலியின் படத்தைக் காட்டி, 'தங்களுக்கு ஒரு புலிச் சின்னம் கீறித் தரச் சொல்லி கேக்கிறாங்கள். இதை கீறலாம் எண்டு பாக்கிறன்' என்று என்னிடம் சொன்னார். அதையே அவர் வடிவமைத்துக் கொடுத்திருந்தார் என்பதை பின்னாட்களில் வந்த விடுதலை இயக்கத்தின் துண்டுப் பிரசுரங்களில் கண்டு கொண்டேன். அவர் எழுபதுகளில் வடிவமைத்த அந்தச் சின்னத்தின் சொந்தக்காரராக பின்னாளில் தமிழ்நாட்டில் ஒருவர் பாராட்டப்பட்டது வேதனையானது. ஆனாலும் 'நான்தான் அந்த சின்னத்தை வடிவமைத்தேன்' என்று இவர் சண்டைக்கு வரவும் இல்லை, குரல் எழுப்பி உரிமை கேட்கவும் இல்லை. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதே இவரது பாணி. தன்னால் முடிந்த உதவிகளை இவர் அந்த விடுதலைக் குழுவிற்கு செய்து கொடுத்துக் கொண்டிருந்தார் என்பது மோகனுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். "

அடுத்து இந்தப் பாயும் புலி என்னும் எண்ணக்கரு எவ்வாறு தனக்கு எழுந்தது என்பது குறித்து தேசியத் தலைவர் 'விடுதலைத் தீப்பொறி' என்னும் ஆவணப்படத்தில் விரிவாக கூறியிருந்தார். எனினும் அதில் இதனை யார் வரைந்து தந்தது என்பது குறித்து அவர் கூறவில்லை. 

அவ் ஆவணப்படத்தில் இனி உருவாகின்ற நாட்டிலும் கடைசியாக இருந்த ஆட்சியின் சின்னமே வரவேண்டும் என்பதே தனது நோக்கமாகயிருந்ததாக தெரிவித்துள்ளார். அதாவது மீண்டும் எமது பழைய வரலாறு [அப்படியே] புதுப்பிக்கப்படும் படியாக சின்னம் இருத்தல் வேண்டுமாம்; கடைசியாக இருந்தது புலிச் சின்னமே, ஆகவே அதையே மீளவும் கொண்டு வந்தாராம். அதே நேரம் ஈழத்தின் பண்டாரவன்னியனின் கொடியின் சின்னமாக தமிழர்கள் நாம் வரைவது தறியப்போடப்பட்ட இரு வாள்களும் அதன் பின்புலத்தில் ஒரு வட்டக் கேடயமும் ஆகும். எனவே இதையும் சோழர்களின் புலியையும் அடிப்படை கருத்துருவாகக்கொண்டு தான் எமது கொடியினை தான் உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

பண்டாரவன்னியனின் வட்டக் கேடயத்திற்குப் பதிலாக இரு வட்டங்களைப் பாவித்தாராம். அந்த வட்டத்திற்குள் வரும்படியாகவும் அதற்கேற்பவும் சோழர்களின் புலியும் கொணரப்பட்டது. அதற்காக அந்த வட்டத்திற்குள்ளால் நவீன வெடிபொருள் உகத்திற்குள் புலி பாய்வது போன்ற வடிவத்தை தெரிவு செய்தார். 

பாயும் புலியிற்கு சோழர்களின் புலி பாவிக்கப்பட்டது. பழைய சோழர்களின் புலியென்பது முழு உடலுடன் பாய்வது போல வருவதாகும். எனவே அந்தப் பழைய புலியின் பாயும் வடிவினையும் மாற்றினார்; அதாவது அழிந்துபோன எமது சின்னம் (புலி) திரும்பவும் ஒரு புத்துயிர் பெற்று எழுச்சியுடனும் கடுஞ்சினத்துடனும் வட்டத்திற்கு வெளியே தலையை நீட்டி முன்னங்கால்களை எடுத்துப் பாய்ந்து கிளம்புவது போல மாற்றி வடிவமைக்கப்பட்டது என்றுள்ளார்.

மொத்தத்தில் இந்த நவீன உகத்திற்குள் தமிழர்களின் தேசிய எழுச்சியை உருவாக்குகின்றோம் என்பதே அவரின் சின்னத்தின் நோக்கமாக இருந்தது. இவ்வடிவிலான சின்னத்தைப் பெற அவர்கள் மிகவும் மினக்கெட்டு கன படங்கள் எல்லாம் தேடித் திரிந்தார். அவ்வாறு தேடித் திரிந்தது புலி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காகவே என்று முடிவடைகிறது அவ் ஆவணப்படத்தில் கொடி தொடர்பான வரலாறு.

அந்தப் பண்டாரவன்னியனின் வாள்களிற்குப் பகரமாக புலிகள் இயக்கத்தில் முதன்முதல் பாவனைக்கு வந்த .303 துமுக்கியின் துவக்குச்சொண்டும் அதில் பொருத்தப்பட்ட சனியன்களும் (குத்துக்கத்தி) வரையப்பட்டன. அடியில் அத்துமுக்கியின் பிடங்கு (butt) புலியின் கால்களுக்கு பின்புலத்தில் இருக்கத்தக்கனையாக வரையப்பட்டன. சன்னங்களும் .303 இயின் சன்னங்களே ஆகும்.

large.firstsymbol.jpg.27fc8beb01bef019ac

முதல் சின்னம். இதில் "ThAMIL EALAM" என்று எழுதப்பட்டுள்ளது. இப்பெயரானது பின்னாளில் 1985 சனவரிக்கு அண்மையாக "TAMIL EELAM" என்று மாற்றப்பட்டது. | படிமப்புரவு (Img. courtesy): விடுதலைத் தீப்பொறி, பாகம் - 1

large.liberationtigersoftamileelamsymbol

முதல் நிறச் சின்னம். இதில் "THAMIL EALAM" என்று எமது நாட்டின் பெயர் எழுதப்பட்டுள்ளது. இப்பெயரானது பின்னாளில் "TAMIL EELAM" என்று 1985 சனவரிக்கு அண்மையாக மாற்றப்பட்டது. | படிமப்புரவு: விடுதலைத் தீப்பொறி, பாகம் - 1

large.tamileelam.jpg.371b08f2abf8a5e3315

01/11/1994 அன்று பாவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கொடியும் சின்னமும். இதில் "TAMIL EELAM" என்று மாறியுள்ளதைக் காண்க. அதே நேரம் லையன்னாவின் வடிவமும் மாறியுள்ளதை நோக்குக. மேலும் ஆங்கில எழுத்துக்களின் எழுத்துருவும் மாறியுள்ளது.

large.lastflagofliberationtigersofTamilE

விடுதலைப்புலிகள் கொடியின் இறுதி விருத்து. இதனையே புலிகள் இறுதிவரை பாவித்தனர். இதில் லையன்னாவின் வடிவம் மீண்டும் பழைய நிலைக்கே மாறியுள்ளதை நோக்குக. | படிமப்புரவு: meethaku.com

  • தமிழீழத் தேசியக் கொடி:

இக்கொடியானது தவிபு இன் கொடியிலுள்ள எழுத்துக்களை நீக்குவதால் உருவாகிய கொடியாகும். இக்கொடியினை 1990ம் ஆண்டு மாவீரர் கிழமையின் முதல் நாளன்று தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியாக சாற்றாணைப்படுத்தியதோடு அதனைத் தானே ஏற்றி வைத்து எமது நாட்டின் முதல் கொடியினை அறிமுகமும் செய்து வைத்தார். இவ்வாறாக தமிழீழம் என்ற நாடு முற்றாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னரே எமக்கு எமது கொடி பிறந்திருந்தது.

இக்கொடியில் புலியே முதன்மைச் சின்னமாக உள்ளதாலும் புலிகள் அமைப்பின் கொடியிலிருந்து பிறப்பிக்கப்பட்டதாலும் இது 'புலிக்கொடி' என்றும் அழைக்கப்பட்டது. 

புலிக்கொடியானது தமிழீழத் தமிழர்கள் வாழ்ந்த அனைத்து நாடுகளிலும் நடைபெற்ற நிகழ்வுகளின் போது எமது நாட்டின் கொடியாக ஏற்றிவைக்கப்பட்டது.

இப்புலிக்கொடியானது  ஒரு மாவீரரின் (நிரந்தரப்படை மற்றும் மக்கள்படை) வித்துடல் மீது போர்த்தப்பட்ட பின்னர் திரும்ப எடுக்கப்பட்டு அன்னாரின் குடும்பத்தினரிடத்தில் மிகுந்த மரியாதையுடன் கையளிக்கப்படும். இது தொடர்பில் இக்கொழுவியினை சொடுக்கி வாசிக்கவும்.

முதலில் சின்னத்தைப் பற்றி தவிபு இன் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இல் 1991ம் ஆண்டு மாசி-பங்குனி இதழின் மூன்றாம் பக்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் பற்றி காண்போம்: 

“தேசியக்கொடியின் மையத்தில் புலிச்சின்னம் அமையப் பெற்றிருக்கின்றது. ஆவேசத்துடன் பாயும் புலியைக் குறிப்பதாக புலியின் தலையும், முன்னங் கால்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.…. 

"தமிழீழ தேசத்தின் தனித்துவத்தையும் தமிழீழ விடுதலை இலட்சித்தையும் சித்தரிக்கும் சின்னமாக புலிச் சின்னம் விளங்குகின்றது. புலிச் சின்னத்தை தமிழீழத்தின் தேசிய சின்னமாக பிரபாகரன் தேர்ந்தெடுத்தற்கு காரணமுண்டு. புலிச் சின்னம் திராவிடர் நாகரிகத்தில் வேருன்றி நிற்கும் ஒரு படிமம். தமிழரின் வீர வரலாற்றையும், தேசிய எழுச்சியையும் சித்தரித்துக்காட்டும் ஒரு குறியீடு. வீரத்தையும் தன்னம்பிக்கையையும் குறித்துக்காட்டும் சின்னம். அன்று வீரவரலாறு படைத்த சோழ மன்னர்களும் புலிக்கொடியின் கீழ் தமிழனை எழுச்சிகொள்ளச் செய்தனர். இன உணர்வை, தேசியப்பற்றுணர்வை, பிரதி பலிக்கும் ஆழமான, அற்புதமான குறியீட்டாகத் திகழ்கிறது புலிச்சின்னம். அது தமிழ்த் தேசாபிமான எழுச்சியை மட்டுமன்றி வலிமையையும், வீராவேசத்தையும் புலிச்சின்னம் குறித்து நிற்கின்றது. பாயும் புலியை ஒத்த எமது விடுதலைப் போரையும் அது சித்தரிக்கிறது. 

“புலித்தலையைச் சுற்றி வட்டமாக ரவைகளும், இரு புறத்திலும் கத்திமுனையுடைய துப்பாக்கிகளும் எமது ஆயுதம் தரித்த விடுதலைப் போரட்டத்தைக் குறியீடு செய்கின்றன.” 

“ஒட்டு மொத்தத்தில், எமது தேசியக்கொடி, சுதந்திரத்தையும் சமதர்மத்தையும் வேண்டி நாம் நடத்தும் வீர விடுதலைப் போரை அற்புதமாகச் சித்தரிக்கிறது. தமிழரின் வீர மரபில் வேரூன்றி நின்று பிறப்பிக்கப்போகும் தமிழீழத் தனியரசின் குறியீட்டு வடிவமாகவும் எமது தேசியக்கொடி திகழ்கிறது.”

தேசியக்கொடியில் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, மற்றும் கறுப்பு ஆகிய நிறங்கள் உள்ளன. இவற்றின் குறித்து நிற்பவையாக நான்காம் ஈழப்போரில் வெளியிடப்பட்ட 'தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை' இல் உள்ள குறிக்கோள்கள்:

“எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.”

“தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.”

“விடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.”

“விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.”

புலிக்கொடியானது தொடர்ந்து ஒரே சீராக இருக்கவில்லை. அதன் சின்னத்தில் மாற்றங்கள் ஏற்படவிட்டாலும் ஒவ்வொரு காலத்திலும் புலிக்கொடியின் நிறங்களில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

large.tamileelamflag.jpg.d96364ce128c7e3

1988ம் ஆண்டு புலிகளால் பாவிக்கப்பட்ட அலுவல்சாரில்லா தமிழீழத் தேசியக் கொடி | படிமப்புரவு: சோசலிசத் தமிழீழம்: விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டம், 1988

large.TamilEelamflag1994.jpg.075eca5409e

அலுவல்சார் தமிழீழத் தேசியக் கொடி | படிமப்புரவு: தமிழீழத் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை, 1994

large.LastversionoftheTamilEelamFlagofLT

அலுவல்சார் தமிழீழத் தேசியக் கொடியின் இறுதி விருத்து (version)

  • வெற்றிக்கொடி:

இது ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடியாகும். இது நீள்சதுர வடிவிலே கிடைமட்டமாக நிறங்கள் இணைக்கப்படுவதால் வந்த கொடியாகும். இதுவே இதன் செந்தரமான வடிவமுமாகயிருந்தது. ஆயினும் மாவீரர் துயிலுமில்லங்களில் இதனோடு சேர்த்து மேலும் சிலதைக் காணக்கூடியதாகயிருக்கும். இவற்றிற்கு பெயருண்டோ என்பது குறித்து தெரியவில்லை. இவை யாவும் நீள்சதுர வடிவிலே காணப்பட்டன. இவ்வாறாக மாவீரர் துயிலுமில்லங்களில் பறக்கவிடப்பட்ட செந்தரமான வடிவம் தவிர்ந்த ஏனைய 4 வடிவமைப்புகளையும் கீழே பட்டியல்படுத்தப்பட்டுள்ளன:

  1. செங்குத்தான (^|^) மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இணைக்கப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடி

  2. இரு முக்கோணங்கள் (^\^) மேலும் கீழுமாக பொருத்தப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடி

  3. இரண்டு செந்தரமான வெற்றிக்கொடிகள் இணைக்கப்பட்டது போன்ற தோற்றத்திலான கொடி

  4. ஒரு நிறம் சூழ உள்ளே இன்னொரு நிறம் (இந்நிறம் சிறிய சதுர வடிவில் இருக்கும்) இருப்பதான கொடி.

large.main-qimg-83e19e1905c98a690b967d11

செந்தரமான வெற்றிக்கொடி

large.maaveerarthuyilumillam(4).jpg.3e22

புனிதபூமி மாவீரர் துயிலுமில்லத்தில் செங்குத்தான (^|^) மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இணைக்கப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடிகளும் செந்தரமான வெற்றிக்கொடிகளும் பறப்பதைக் காண்க

large_2004.jpg.2d167f93f08df0a80771efc62

நான்காம் ஈழப்போரின் போது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இரு முக்கோணங்கள் (^\^) மேலும் கீழுமாக பொருத்தப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடி பறப்பதைக் காண்க

large.126853053_KanagapuramMartyrsgravey

நான்காம் ஈழப்போரின் போது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இரண்டு செந்தரமான வெற்றிக்கொடிகள் இணைக்கப்பட்டது போன்ற தோற்றத்திலான கொடிகள் பறப்பதைக் காண்க

large.Flags_Kopai_Heroes_Graveyard_Jaffn

2002ம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு நிறம் சூழ உள்ளே இன்னொரு நிறம் (இந்நிறம் சிறிய சதுர வடிவில் இருக்கும்) இருப்பதான கொடிகள் பறப்பதைக் காண்க

செந்தரமான கொடியின் வடிவமானது சமர்க்களங்களிலும் புலிகளால் பாவிக்கப்பட்டது. சிங்களப் படையினரின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளுக்குள் ஊடறுத்து செல்லும் போதும் படைத்தளங்களின் படைவேலிகள் உடைக்கப்பட்டு நுழையும் போதும் எம்மவரின் முன்னணி அணிகள் இதனை தடியில் கட்டி தலைக்கு மேலே பிடித்தபடி ஓடிப்போவர். 

large.main-qimg-e6f7714942415c9f96abdfb5

சமர்க்களத்தில் நடந்து செல்லும் இப் புலிவீரனின் நெஞ்சில் இருப்பதே செந்தரமான வெற்றிக்கொடியாகும்

  • எழுச்சிக்கொடி:

இவைதான் எழுச்சி நாட்களின் போதும் வீரச்சாவு வீடுகளிலும் ஊர்வழிய சோடினைகளுக்குப் பாவிக்கப்படும் கொடியாகும். இது சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு நிறங்களும் தனித்தனியாக முக்கோண வடிவில் ஓர் நூலில் கட்டப்பட்டிருக்கும். முக்கோணத்தின் அகண்ட பரப்பே நூலில் கட்டப்பட்டு கூரானது கீழே தொங்கும் படியாக விடப்பட்டிருக்கும்.

இதனை உணர்ச்சிப் பெருக்கில் சிலர் உடலிலும் ஊசிகொண்டு குத்திருப்பர். 

large.1641582942_102002...jpg.ea3e5a32dc

ஒக் 10, 2002 அன்று 2ம் லெப். மாலதியின் நினைவு நாளில் நடந்த பெண்கள் எழுச்சி மாநாட்டின் போது இந்த ஐயா சிவப்பு மஞ்சள் முக்கோண நிறங்களை (எழுச்சிக்கொடி) ஊசியால் தன் உடலில் குத்தியுள்ளார். அணிநடை போடுபவர்கள் சோதியா படையணியினர் ஆவர். | படிமப்புரவு: Associated Press

large.puthukudiyiruppu27-005.jpg.5fac69e

27/1//2005 அன்று வீட்டிற்கு முன்னுள்ள தெருவின் ஒரு மருங்கில் எழுச்சிக்கொடியால் சோடினை செய்து வாழைத்தண்டில் ஈகைச்சுடரேற்ற காத்திருக்கும் ஓர் தமிழீழக் குடும்பம்

large.ltteimages(19).jpeg.f39ab656c3ae34

வன்னியிலிருந்த துயிலுமில்லமொன்று மாவீரர் நாளன்று எழுச்சிக்கொடிகளால் சோடிக்கப்பட்டுள்ளதைக் காண்க

  • மாவீரர்கொடி:

இது செங்குத்தான நீள்சதுர வடிவுடையதாகும். இதில் சின்னமாக கறுப்பு நிறத்தில் மாவீரர் பொதுத் திருவுருவப்படம் இருக்கும். பின்புலத்தில் தேசிய நிறங்களான சிவப்பு அல்லது மஞ்சள் இருக்கும்.

(படிமம் கிடைக்கப்பெறவில்லை)

  • வீரவணக்கக்கொடி:

இது செங்குத்தான நீள்சதுர வடிவுடையதாகும். இவற்றை மாவீரர் துயிலுமில்லங்களில் காணலாம். இவை தேசிய நிறங்களான மஞ்சள் அல்லது சிவப்பை கொண்டிருக்கும். ஒவ்வொரு கொடியிலும் இரு சின்னங்கள் காணப்படும்:

1) இரு நிறக் கொடிகளிலும் வெளுறிய சிவப்பு நிறத்தில் தான் தாயகத்தின் தேசப்படம் பின்புலத்தில் காணப்படும்.

2) இரு நிறக் கொடிகளிலும் கறுப்பு நிறத்தில் மாவீரர் வீரவணக்கச் சின்னமான 'உறுதியின் உறைவிடம்' உம் அதன் அடியில் சுடர்கொண்ட சிட்டிகளும் முன்புலத்தில் காணப்படும்

large.265705864_image(20).png.dc77afb000

மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் வெற்றிக்கொடிகளுடன் இக்கொடிகளும் பறப்பதைக் காண்க

large.1680868837_.jpg.66a1c9f57b49c4f5a1

அண்மையாக்கப்பட்ட படிமம்

large.32119434892_ba1f214986_o.jpg.eb4a1

மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் தேசியக்கொடிகளுடன் இக்கொடிகளும் பறப்பதைக் காண்க

  • நிறக்கொடிகள்:

இவை முழுமையாக ஒன்றில் சிவப்பையோ அ மஞ்சளையோ நிறமாக கொண்டு நீளசதுர வடிவில் இருக்கும்.

large.46173037_112505023092162_543267405

2002ம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் நிறக்கொடிகள் பறப்பதைக் காண்க

  • படையணிக்கொடிகள்:

இவை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படைத்துறைக் கட்டுமானத்திற்குமென அவர்களின் சண்டை உருவாக்கத்தின் சின்னத்துடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டது. இதை அவர்கள் பொதுநிகழ்வுகள், அணிநடை போன்றவற்றில் அணிநடை சீருடையுடன் சேர்த்து தாங்கிச் செல்வர். அப்போது தமிழீழத் தேசியக் கொடியினையும் தேவைப்படின் பாவிப்பர்.

large.52169709_onmalathy15.png.ab58cfe8e

2002-10-10 ஆம் ஆண்டு 'மாலதி' அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளில் நிகராளிகள் (Representatives) வலமிருந்து: அன்பரசி படையணி, மாலதி படையணி, திலகா படையணி, சோதியா படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி, சிறுத்தைப்படை, விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி, பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு, நளாயினி சிறப்பு கடல் தாக்குதலணி

  • கரும்புலிகள் வீரவணக்கக்கொடி

இது கரும்புலிகள் நாளில் ஏற்றப்படும். இது மஞ்சள் நிறத்திலும் உண்டு. இதிலுள்ள இலச்சினையானது மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை ஆகும். எனினும் இது அனைத்து கரும்புலிகளையும் ஒருங்குசேரவும் குறிக்கிறது.

large.BlackTigersRememeranceflag.png.3be

இவ்வாறாக தமிழீழத்தில் கொடிகள் பாவிக்கப்பட்டன.

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

புலிகளின் யாழ்ப்பாணம் மீதான படையெடுப்பு - ஓகஸ்ட், 2006

2 weeks 4 days ago

கனத்த நெஞ்சோடு வட போர்முனையின் ஒரு கீற்றின் குரல்..!

https://www.errimalai.com/?p=53311

2006.08.11 அன்று போர் நிறுத்தம் என்கின்ற பொறிக்குள் இருந்து தமிழீழம் என்கின்ற உன்னத இலட்சியத்திற்காக நான்காம் கட்ட ஈழப்போரை தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்தனர். சண்டை வடபோர்முனையின் நான்கு முனைகளூடாக சமநேரத்தில் ஆரம்பித்தது.

சண்டை ஆரம்பித்த [கண்டல் பகுதி, முகமாலை மத்திய பகுதி,இந்திராபுரம் பகுதி , கிளாலி பகுதி] ஒரு மனிநேரத்திற்குள்ளாக எதிரியின் முன்னரங்க பகுதிகளை கடந்து வேகமாக முன்னேறினர் புலிகள். இதில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி, மாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, ராதா வான்காப்பு விசேட அணிகள் மற்றும் அரசியல் துறையின் சண்டையணி என முன்னரங்குகளிலும் குட்டிசிறி மோட்டார் படையணி, கிட்டுப்பீரங்கிப் படையணி , சண்டைவாகன அணி, வழங்கல் அணி, மருத்துவ அணி பின்னனியிலும் என சண்டை நகர்தப்பட்டுக் கொண்டிருந்தது.

இவ்வேளைகளில் வடபோர்முனையின் வலது பக்கமாக இம்ரான் பாண்டியன்படையணி, சோதியா படையணி மற்றும் ராதா படையணியின் விசேட அணியும் [கனரக ஆயுத அணி], இடது பக்கமாக சாள்ஸ் அன்ரனி படையணியும் மாலதி படையணியும் கிளாலி கரையோரமாக அரசியல் துறையினரும் ராதாபடையணியின் ஓர் அணியினரும் களம் இறக்கப்பட்டனர். இதில் கிளாலி கடல் நீரேரி ஊடாக லெப் கேணல் ராணி மைந்தன் கடற்புலிகளின் வீரம் சொறிந்த தாக்குதல் பலவற்றில் லெப்.கேணல் இரும்பொறையுடன் செயற்பட்ட நல்ல போர்வீரன் தலைமையில் அரசியல் துறை போராளிகள் தரையிறக்கம் நடைபெற்ற போது அந்த தரையிறக்கம் சாதகமற்றதாகிப் போனதால் லெப்கேணல் ராணிமைந்தன் தானே முன்வந்து கிளாலி முன்னரங்கினை நோக்கி முன்னேற முயன்ற வேளை வீரச்சாவை தழுவிக்கொண்டான்.

இப்போது சண்டை மாற ஆரம்பித்தது. கிளாலி பகுதியில் இருந்தும் யாழில் இருந்து பிராதான வீதீயூடாகவும் நாகர் கோயில் பகுதியில் இருந்தும் இராணுவம் ஊடறுப்பு சண்டையினை சமநேரத்தில் ஆரம்பித்தது. இதன்போது பலத்த எறிகணைைத் தாக்குதல், விமானத் தாக்குதல் என்பன ஒருபுறமும் எழுதுமட்டுவாழில் இரகசிய மண்ணரண் அமைத்து இராணுவம் தாக்க ஆரம்பி்க்கவும் சண்டையின் போக்கு தலைகீழாகிப் போனது.

14 ஆம் திகதி மதியத்தின் பின் எதிரி தனது மூன்றாவது மண்ணரணை மீளவும் கைப்பற்றி கொள்ளவும் பக்கவாட்டாக நகர்ந்த இராணுவ அணியை புலிகள் துவம்சம் செய்ய சண்டையின் போக்கு எமக்கு சாதமாக மாறத் தொடங்கியது. மீண்டும் புலிகளின் கை ஓங்க ஆரம்பித்தது.

இதில் சண்டையின் போக்கினை மாற்றியது சோதியா படையணியின் லெப்.கேணல் செல்வி தலைமையிலான போராளிகளும் ராதா படையணியின் சினைப்பர் அணி, உந்துகணை அணியும் ஆவர். இதில் மோட்டார் மற்றும் ஆட்லறி அணியினரின் சூட்டாதரவு முக்கிய பங்காற்றியது முக்கியமாகும்.

இவ்வாறு சண்டை மாற இரண்டு காரணங்கள்: ஒன்று தளபதி தீபன் அண்ணருடன் தளபதி பால்ராஜ் அண்ணா கைகோர்த்தமை போராளிகளின் உக்கிரமான தாக்குதலாகும். எதிரியின் மொனிற்றரிங் அணி இரானுவ தளபதிக்கு பால்ராஜ் அண்ணரின் வருகை பற்றியும் சண்டையில் போராளிகள் உக்கிர தாக்குல் பற்றியும் தெரிவிக்க வெலவெலத்துப்போன இராணுவத் தலைமை கேழைத்தனமான தாக்குதலை ஆரம்பித்தது. அதுதான் முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் செஞ்சோலை வளாகம் மீதான விமானத் தாக்குதலாகும். இதன் காரணமாக சண்டை மீதான கவனத்தை விடவும் புலிகளின் முழுக்கவனமும் செஞ்சோலை மீது திரும்பியது. மருத்துவ வழங்கல் உட்படஇதனால் தலைவர் சண்டை நிறுத்தி தற்காப்பு போர்முறைக்கு மாறுமாறு தளபதி தீபனுக்குக் கூற களமுனையிலிருந்து பின்வாங்க ஆரம்பித்த புலிகளின் அணிகளால் எதிரியின் பகுதிகளில் ஊடுருவி நின்ற போராளிகளால் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடலைக் கொண்டுவர முடியவில்லை. காரணம் தொடர் சண்டையின் தாக்கம் ,காயமடைந்த போராளிகள், ஆயுதங்கள் என பெரும்சுமையின் காரணமாக வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடலை எதிரியின் பதுங்குகுழிகளிலேயே அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வேளைகளில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களே இவைகளாகும்.

FB_IMG_1590509979178-1.jpg

அந்த யுத்தத்தில் எமது தரப்பில் 372 போராளிகள் வீரச்சாவடைந்தனர் இதில் 30 க்குட்பட்ட போராளிகளின் வித்துடல்கள் கிடைக்கப் பெறவில்லை. அதில் எம்மால் தவறவிடப்பட்ட போராளிகளது வி்த்துடல்களாகவே இவை இருக்கும்…!

கனத்த நெஞ்சோடு
வட போர்முனையின்
ஒரு கீற்றின் குரல்

அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்!

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

3 weeks 1 day ago

large.uthikkumthisainookkiunnathapayanam

இந்நெடுந்தொடரானது ஈழநாதம் நாளேட்டில் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த தொடராகும். இது தென் தமிழீழத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினர், முஸ்லிம் காடையர்கள் மற்றும் சிங்கள படைத்துறை இயந்திரத்தால் அம்மாவட்ட மக்கள் கண்ட அவலங்களை எடுத்துரைக்கிறது.

இதனை மூத்த விடுதலைப் போராளி பசீர் காக்கா அவர்கள் எழுதியுள்ளார். இக்கட்டுரையானது 1993இற்கு முன்னர் நூல் வடிவம் பெற்று தமிழீழத்தில் வெளியிடப்பட்டது. எனினும் இதில் தேசத்துரோகி மாத்தையா தொடர்பிலும் வருவதால், அவனது வஞ்சகத்தால், அவன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் புலிகளால் பொது வெளிப்பரப்பிலிருந்து நீக்கப்பட்ட போது இந்நூலும் மெள்ள மறைந்து போனது.

தற்போது காலத்தின் தேவை கருதி, குறிப்பாக முஸ்லிம்கள் தனியினமாக தம்மைக் கருதி எம்மினத்திற்கு இழைத்த கொடூரங்களை வெளிக்காட்டும் முகமாக இந்நூல் மீளவும் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஆயினும் இக்கட்டுரையின் இரு பத்திகள் கிடைக்கப்பெறவில்லை.

கிடைக்கப்பெற்ற யாவற்றையும் எனது வேண்டுகோளின் பேரில் திரு. தா. இளங்குமரன் அவர்கள் எழுத்துணரியாக்கம் செய்து தந்தார். அதனை நான் இங்கு வெளியிட்டு வைக்கிறேன். அத்துடன் இதனை மீளவும் நூலாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

கடற்புலிகளின் தொலையியக்கி கட்டுப்படுத்தி கடற்கலம்

3 weeks 1 day ago

இது 2022ம் ஆண்டு நான் எழுதிய பதிவின் மீள் வெளியீடு:



இது ஒரு உண்மைச் சம்பவம்... சிங்களப் படைகளிடத்தில் உயிருடன் பிடிபட்டு சித்திரவதையால் எம்மை விட்டுப் பிரிந்துவிட்ட எனது கடற்புலி உறவினர் ஒருவர் இறுதிப் போர்க்காலத்தில் தெரிவித்த பற்றியம் இதுவாகும். 

எனது உறவினர் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவுகள் ஒன்றினது கட்டளையாளர் ஆவார். சமாதான காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு எல்லாம் சென்று அந்தப் பிரிவிற்கான சிறப்புப் பயிற்சிகள் எல்லாம் எடுத்து நாடு திரும்பியவர் ஆவர். (எனது பாதுகாப்பிற்காக அவருடைய பெயரை எழுதவில்லை. அவருடைய நிழற்படம் கூட என்னிடம் இல்லை😢)

இவர் இதை கரையா முள்ளிவாய்க்காலிலிருந்த எங்கள் உறவினரின் வீடொன்றில் கடற்புலிகள் தம் படைக்கலன்களை கொண்டுவந்து வைத்த போது தெரிவித்தார். அப்போது அங்கு என்னைத் தவிர எங்கள் பிற உறவினர்களும் அங்கிருந்தனர்.

அன்றொரு நாள் நண்பகல் போல் அவ்வீட்டின் பதுங்ககழிக்குள் நாங்கள் எல்லோருமிருந்து கதைத்துக்கொண்டிருக்கும் போது அவர் தெரிவித்தார், புலிகளின் புலனாய்வுத்துறையினர் சில நாட்களுக்கு முன்னர் நீர் மட்டத்திற்கு கொஞ்சம் மேலால் பயணிக்கிற தொலையியக்கியால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஆளில்லாத படகு ஒன்றின் மூலம் படைக்கலன்களை வெளியில் இருந்து தருவித்தனர் என்று. அதில் சில ஏகே துமுக்கிகள் மற்றும் அவற்றிகான சன்னங்கள் போன்ற மிகக் குறைந்த அளவிலான வலுவற்ற ஆயுதங்களே தருவிக்கப்பட்டது என்றும் ஆனால் அவை அப்போதைய நிலைமைக்கு போதாது என்றும் கூறி அலுத்துக்கொண்டார்.

இதைப் அப்போது பகிரக் காரணம், புலிகளிடம் ஏதோ ஒரு புதுவித தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்திருந்தது என்பதை வெளிக்காட்டிடவே.

ஆயினும் அது தொடர்பில் அவர் கூறிய ஏனைய விடையங்கள் என்னினைவில் இப்போது இல்லை.

இதே போன்று வெளியிலிருந்து தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் வெடிக்க வைக்கக்கூடிய கலமொன்று 9/03/2000 அன்று திருமலைத் துறைமுகத்தினுள் வைத்து சிங்களக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர் : தலைவரை வெளியேற்ற எடுத்த கடைசி முயற்சி

3 weeks 2 days ago

  • முகவுரை:

தமிழர் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட கடைசி வலிதாக்குதல் (offensive) நடவடிக்கையான "கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர்" இற்காக எழுதப்படும் கட்டுரை இதுவாகும். இவ்வூடறுப்புச் சமரானது தரையிறங்கி செய்யப்பட்டதால் ஈழப்போர் வரலாற்றில் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட கடைசி தரையிறக்கமாகவும் பதியப்படுகிறது.

வீரச்சாவடைந்துவிட்ட தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார் என்று கூறி நம்பவைக்கும் கபட நாடகத்திற்கு பாவிக்கும் முக்கிய கதையும் இதுதான். எனவே அன்று நடந்த அத்தரையிறக்கம் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டுவதற்காக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இக்கட்டுரையினை எழுதுவதற்கு இச்சமர்க்களத்தில் நேரடியாக களம்கண்ட கட்டளையாளர்களான திரு வீரமணி, திரு ஜெயாத்தன் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பா சில போராளிகள், மற்றும் நேரில்லாமல் பங்கெடுத்த திரு சங்கீதன் எ தயாபரன் போன்றவர்களிடமிருந்து பல்வேறு மூலங்கள்கொண்டு பெறப்பட்ட தகவலானது பாவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் திரு வீரமணி மற்றும் திரு ஜெயாத்தன் ஆகியோரின் தகவலாக பதியப்பட்டுள்ளது அவ்விருவரும் ஊடகவியலாளர் திரு. நிராஜ் டேவிட் அவர்கட்கு 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் வழங்கிய நேர்காணலிலிருந்து பெறப்பட்ட தகவலாகும். மேலும் வேறு விடயங்களை எழுதுகையில் இச்சமர் தொடர்பில் தொட்டுச்சென்ற தொடர் கட்டுரையான போராளி அபிராம் அவர்களால் எழுதப்பட்ட “ஒரு போராளியின் அம்மா” உம் கட்டுரையாக்கத்திற்கு பாவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக மே 15ம் திகதி நடைபெற்ற மக்கள் சரணடைதலின் சில நிகழ்வுகளும் தரைத்தோற்றமும் தேவை கருதி இதனுள் சேர்க்கப்பட்டுள்ளது. அவை கட்டுரையாசிரியரான நன்னிச் சோழனின் தனிப்பட்ட அனுபவங்களாகும்.

மொத்தத்தில், இக்கட்டுரையானது இச்சமர் தொடர்பிலான ஆவணங்களில் ஒன்றாக எதிர்கால தலைமுறைகளுக்கு விளங்கும் என்று கட்டுரையாசிரியர் எதிர்பார்க்கிறார்.

  • முன்னுரை:

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை எப்படியேனும் பாதுகாப்பாக வெளியேற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளும் முதன்மை நோக்கத்துடன் ஒரு முற்றுகை உடைப்புச் சமர் மேற்கொள்ளப்பட்டது. அது இறுதித் தருவாயில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சியாகும். இவ்விறுதி முயற்சியே இவ்வெஞ்சமர் ஆகும்.

இச்சமரானது எவ்வடிவிலான வழங்கலுமில்லாமல் புலிகளின் மனத்திடத்தையும் நம்பிக்கையையும் பெரும் வலுவாகக்கொண்டு சூட்டாதரவுகூடயின்றி மேற்கொள்ளப்பட்டது. இதில் கரும்புலிகள் கூட முன்னின்று தரைப்புலிகளாக பொருதி வெடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இம்முயற்சி இரண்டு தடவைகள் முயலப்பட்டு இரு தடவையும் தோல்வியிலேயே முடிந்தது. இவ்விரு முயற்சியிலுமாக சில மூத்த கட்டளையாளர்களுட்பட மொத்தமாக நூற்றிற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

  • சமர்க்களச் சூழ்நிலை:

நான்காம் ஈழப்போரின் இறுதி நாட்களில் கணைகள், ஆளணி, மருத்துகள் என்பன முற்றிலும் வரத்தின்றி அனைத்திலும் வறிய நிலையிலேயே தமிழர் சேனை பொருதிக்கொண்டிருந்தது.

இறுதியாக நிலைகொண்டிருந்த ஆட்புலமான வெள்ளா முள்ளிவாய்க்காலின் ("முள்ளிவாய்க்கால் ஆ பகுதி" என்று இதற்கு அக்காலத்தில் புலிகள் பெயர்சூட்டியிருந்தனர்) புவியியலும் பெரும் படையொன்று நிலைகொண்டிருந்து பொருதுவதற்கான தரைத்தோற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. அத்துடன் காப்புமறைப்புகளுக்கு ஏதுவான இயற்கை தரைத்தோற்றம் அங்கு காணப்படவில்லை. பரந்தன்-முல்லை வீதியின் கோவில் பக்கத்திய ஆகக்கூடிய இயற்கை மறைப்பாக வடலிக்காடுகள், பனைகள், பற்றைகள் மற்றும் இன்னபிற மரங்கள் போன்றனவே இருந்தன. நந்திக்கடலையொட்டிய பக்கம் காய்ந்த பற்றைகளும் பெரும்பாலும் தரவை வெளியுமாக இருந்தது. மேலும் எல்லா இடத்திலும் மக்களின் தரப்பாள் கொட்டில்களும் சிங்கள எறிகணை வீச்சிலிருந்து தம்முயிர் காக்க பதுங்ககழிகளும் அமைக்கப்பட்டிருந்தன. விரல் விட்டு எண்ணக்கூடியளவில் கல் வீடுகள் காணப்பட்டன.

large.terrainmap.jpg.8e551615c83d766050a

2025ம் ஆண்டு கால வெள்ளா முள்ளிவாய்க்கால் பரப்பின் தரைத்தோற்றத்தைக் காட்டும் படிமம். விடத்தலடி பிள்ளையார் கோவிலுக்கு கீழுள்ள பரப்பிற்குள்தான் கடைசி சமர் நடைபெற்றதாக சிங்களம் கூறுகிறது | படிமப்புரவு: கூகிள் மப்

மொத்தமாக அந்த சின்னஞ்சிறு பரப்பே சமர்க்களமாக விளங்கியது.

மேற்கூறிய காரணங்களுடன் சிங்களச் சேனையும் தமிழரின் ஆளுகைக்குட்பட்டிருந்த இறுதி ஆட்புலம் மீதான தனது முற்றுகையினை இறுக்கிவிட்டிருந்தது. அதிலும் மே மாதத்தின் இரண்டாவது கிழமையிலிருந்து சிங்கள முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையின் (FDL/ Forward Defence Lines) முதல் படைவேலியானது நெருக்கமாக காவலரண்கள் அமைக்கப்பட்டு ஆளிடப்பட்டிருந்தது. அத்துடன் நெருக்கமாக கனவகை படைக்கலன்களாலும் வலுப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக, மே மாதம் 15ம் திகதி வட்டுவாகல் பாலத்திற்கு செல்லும் வீதியின் இரு மருங்கிலும் சிற்சில அடி இடைவெளியில் சீனத் தயாரிப்பு விஃவ்ரி கலிபர் சுடுகலன்கள் நிறுத்தப்பட்டு அந்த முன்னரங்க நிலை வலுப்பட்டிருந்ததை தனது கண்களால் கட்டுரையாசிரியரான நன்னிச் சோழன் கண்டார். இவற்றிற்குப் பின்னால் தகரிகள் கொண்டு அமைக்கப்பட்ட இரும்புச்சுவர் போன்ற இரண்டாவது படைவேலி அமையப்பெற்றிருந்தது. அதற்குப் பின்னால் மற்றொரு படைவேலியும் அமைத்திருந்தார்கள்.

  • திட்டம் (மேலோட்டமானது):

மேலே சுருங்க கூறியுள்ள சிங்களத்தின் வலுவுடன் புலிகளின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு பெரும் படையொன்று உடைத்து ஊடறுத்து வெளியேற முடியாத நிலையிருந்தது. ஏனெனில் பெரும் படையொன்று வெளியேறும் சமயத்தில் அவர்களில் ஏற்படும் காயக்காரர்களிற்கு மருந்திடவும் வெளியேறும் ஆளணியை பராமரிக்கவும் (உணவுகள் மற்றும் ஏனைய பராமரிப்புகள்) இயலாத நெருக்கடியான சூழ்நிலை அங்குநிலவியது. மேலும் பெரும் படை வெளியேறும் போது நகர்வுப் பாதைகளிலுள்ள தடயங்களைக்கொண்டும் இலகுவாக பகைவரால் பாதைகளை கண்டறிய முடியும்.

அதுவே சிறிய படையெனில் அதற்கேற்படும் மேற்கூறிய நெருக்கடிகள் யாவற்றையும் தணிக்கமுடியும்.

எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே உடைத்து ஊடறுக்கும் பொழுதில் எத்தனை பேர் அந்த ஊடறுப்புக்குள்ளால் வெளியேறுவது என்பது தொடர்பிலான திட்டம் தீட்டப்பட்டது. அதாவது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான போராளிகளே வெளியேறுவது திட்டமாகயிருந்தது.

திட்டத்தின் படி புலிகளின் பல்வேறு சண்டை உருவாக்கங்களிருந்து (combat formations) களமுனை பட்டறிவு கொண்ட தலைமைக்கு விசுவாசமிக்கவரென்ற 450 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

→ எ.கா. ராதா வான்காப்புப் படையணியின் படைக்கலன் பாதுகாப்பு அணியிலிருந்து மொத்தம் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் யாவரும் 18 பேர்கொண்ட 25 அணிகளாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு மூத்த கட்டளையாளர் தலைமை தாங்கினார். அவரின் வழிநடத்தலிலேயே இவர்கள் இயங்குவர், உடைத்து வெளியேறிய பின்னராயினும்.

தரையிறக்கமானது பகைவரின் கரையிலிருந்து 1200 மீட்டர் தொலைவில் நடத்தப்படும். பின்னர் அங்கிருந்து இவர்கள் நீருக்குள்ளால் ஓசையின்றி விரைவாக நடந்து சென்று பகைவர் மீது தாக்குதல் தொடங்க வேண்டும்.

சமரைத் தொடங்குகையில் நீர்ப்பரப்புக்குள் நின்று சுட்டபடி தான் தொடங்க வேண்டும். அவ்வாறு சுட்டு முன்னேறி தடைகளை உடைத்தபடி தான் நிலப்பரப்பினை அடையவேண்டும். இதில் கடினமான விடையம் என்னவென்றால் நீர்ப்பரப்பிற்குள்ளும் சிங்களவர் கொட்டன் ஊன்றி இரண்டு அ மூன்று அடுக்கிற்கு சுருட்கம்பி வேலி அடித்திருந்தனர். இவற்றை தடைவெடிகள் (torpedo) கொண்டு தகர்த்தபின்னரே கரையேற முடியும்.

large.endofthe2ndattempt1.jpg.cc4f4d5e4b

கேப்பாப்பிலவு நீர்ப்பரப்பு பக்கமிருந்த பகைவரின் முட்கம்பிகள் கொண்ட படைவேலி | படிமப்புரவு: ரூபபாகினி

களமுனையில் ஊடறுத்து உடைத்த பின்னர் ஒவ்வொரு அணியும் உட்சென்று நகரவேண்டிய பாதை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அவ்வழியில் குறித்த சில இடங்களில் புவிநிலைகாண் தொகுதி (GPS) மூலம் குறிக்கப்பட்ட இடங்களில் புலிகளால் உணவுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வுணவுப்பொருட்கள் மிகக் குறைந்தளவிலான போராளிகளுக்கே போதுமாகயிருந்தது. இப்பணியினை தமிழீழப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த கட்டளையாளர்களான பேரின்பம் (மாவீரர்) மற்றும் ஜூட் எ முகுந்தன் (மாவீரர்) ஆகியோரின் கட்டளைபெறும் அணிகள் முன்கூட்டியே உட்சென்று செவ்வன செய்துமுடித்திருந்தன.

உடைப்பு சரிப்பட்டு வருமாயின் தேசியத் தலைவருடன் நிற்கும் அணியும் வெளியேறும் என்பது திட்டமாகயிருந்தது. தலைவருடன் வெளியேறிச் செல்வோரை பெற்றுக்கொள்ள விடுதலைப் புலிகளின் வான்புலிகளைச் சேர்ந்த "நீலப்புலி" வானோடி தெய்வீகன் (பின்னாளில் புலம்பெயர் தமிழ் வஞ்சகர்களின் நயவஞ்சகத்தால் சிங்களப்படையிடம் அகப்பட்டு சாக்கொல்லப்பட்டார்.) அவர்கள் தலைமையிலான அணியொன்று கேப்பாப்பிலவு பகுதிக்குள் ஊடுருவி நின்றனர்.

  • பகைவரின் விழிப்பும் எம்மவரின் நம்பிக்கையும்:

இந்த திட்டமானது மிகவும் தீர்க்கமாக புலிகளின் கட்டளையாளர்களால் வகுக்கப்பட்டிருந்தது. இந்நகர்வு மூலம் மிகக் குறைந்த அளவிலான போராளிகளே வெளியேற முடியும் என்பதால்தான் ஏனையை போராளிகளுக்கு தத்தமது சொந்த முடிவுகளை எடுக்குமாறு பணிப்புரையிட்டனர்.

கட்டளையாளர்கள் யாவரும் பகைவரின் கரையோர படைவேலியின் வலுவினை நன்றாக அறிந்திருந்தும் இம்முயற்சியில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்தனர். கடைசி வரையும் தமக்கேயுரித்தான மனத்திடத்தோடு புலிகள் இருந்தனர். அதுமட்டுமின்றி புலிகள் தாம் உடைத்து ஊடறுக்கப்போகும் இடத்தினை பகைவர் அறிந்திருந்ததையும் நன்கறிந்திருந்தனர்.

பகைவரும் அதற்கேற்ப நந்திக்கடலை முழுக் கண்காணிப்புக்குள் வைத்திருந்தனர். நீர்ப்பரப்பில் தமிழர் சேனையின் நடமாட்டத்தை நோக்க கதுவீ (RADAR) முதற்கொண்டு பூட்டி ஆயத்தமாக கரையிலிருந்தான்.

ஆகவே கெடுவேளையாக முயற்சி தோல்வியில் முடியுமட்டில் இறுதிவரை சிங்களப்படையுடன் பொருதி அதால் வரும் விளைவுகளை ஏற்பது, அது வீரச்சாவாக இருந்தாலும், என்பதில் உறுதியாக இருந்தனர்.

தமிழீழத்தின் கடைசி சொட்டு ஆட்புலத்தையும் சிங்களப்படை குருதி சிந்தியே தமிழரிடத்திலிருந்து வன்வளைக்கவேண்டும் என்று புலிவீரர்களும் அவர்தம் கட்டளையாளர்களும் ஒடுவிலில் (கடைசியின் இறுதி) உறுதிபூண்டிருந்தனர்.

  • பயணத் திசை:

இத்தாக்குதலிற்காக புலிவீரர்கள் வெள்ளா முள்ளிவாய்க்கால் கரையிலிருந்து (விடத்தலடிப் பரப்பு) வெளிக்கிட்டு நந்திக்கடல் களப்பூடாக பயணித்து கேப்பாப்பிலவு பரப்பை அடைய வேண்டும். அடைந்து தரையிறங்கிய பின்னர் சிங்களப் படையினரின் கரையோரக் காவலரண்களையும் சிறு முகாம்களையும் தாக்கியழித்து அவற்றிற்கு பின்னாலுள்ள கவச வேலியை ஊடறுத்துத்தான் கேப்பாப்பிலவு காட்டுக்குள் ஊடுருவ வேண்டும்.

  • பாவிக்கப்பட்ட கடற்கல வகை:

முதலாம் முயற்சியில் தரையிறக்கத்திற்கு வகுப்புப் பெயர் அறியில்லா ஓரிரு கட்டைப்படகுகள் (fishing boats) பாவிக்கப்பட்டன.

முதல் முயற்சியிலிருந்து கிட்டிய பட்டறிவின் மூலம் இரண்டாம் முயற்சியிற்கு மேலதிக கடற்கலங்கள் தேவையென அறிந்துகொண்டனர். அதற்காக வகுப்புப் பெயர் அறியில்லா 3 கட்டைப் படகுகளும் (சிறிய வகை மீன்பிடிப்படகு) அவற்றோடு இணைக்க 2 தெப்பங்களும் ஒரு பாதைப்படகும் பாவிக்கப்பட்டிருந்தன. அதாவது ஒரு படகிற்கு ஒரு இணைப்பு வீதம் மொத்தம் 3 இணைப்புகள் இணைக்கப்பட்டிருந்தன. ஒரு கட்டைப்படகும் ஒரு தெப்பத்தில்/ஒரு பாதையில் உம் ஒரே நேரத்தில் 30 (15+15) பேரை ஏற்றிப்பறிக்க இயலும். இந்த மிதவையானது ஒரே நாளில் உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • பயிற்சி:

பயிற்சி மே மதம் 3ம் திகதி மட்டில் தொடங்கி பத்து நாட்கள் நடந்தது. பயிற்சிகளை அன்பு மாஸ்டர் அவர்கள் வழங்கினார்.

உடைத்து வெளியேறும் போதில் ஏறத்தாழ 60 கிமீ தொலைவு நடந்து கடக்கவேண்டி வரும் என்று கணிப்பிடப்பட்டிருந்ததால் அதற்கேற்பவே பயிற்சிகளும் வடிவமைக்கப்பட்டன. அதற்கான நடை பயிற்சியை முள்ளிவாய்க்கால் கடற்கரையில் போராளிகள் மேற்கொண்டனர். இறுதியாக புலிகளின் ஆட்புலத்திலிருந்த 6 கிலோமீட்டர் நீளமான கடற்கரையில் குறிப்பிட்ட 3 கிலோமீட்டர் நீளத்திற்கு 20 தடவைகள் இவர்கள் நடந்தனர். அதாவது 60 கிலோமீட்டர் தொலைவு நடைபயிற்சி செய்தனர்.

நடப்பதற்கு இலகுவற்ற மணல் பாங்கான தரையில் 50 கிலோ எடையுள்ள படையப்பொருட்களையும் சுமந்தபடியேதான் 450 போராளிகளும் பயிற்சி செய்தனர். இடையிடையே சூட்டுப்பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.

பயிற்சியின் போது இவர்கள் உட்கொள்வதற்கு தேவையான சத்தான உணவுகள் கூட இல்லாமல் தான் பயிற்சிகள் செய்தனர். முதல் இரு நாட்களும் எவ்வித உணவுமின்றி பயிற்சிகள் போய்க்கொண்டிருந்தன. இதில் நடைபயிற்சியின் போது நீர் அருந்தக் கூட தடை விதிக்கப்பட்டது. காட்டிலே நீர் கிடைக்காது என்பதால் ஒரு கலன் நீருடன் மட்டுமே இவ்வளவு பயிற்சியையும் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மூன்றாம் நாள் பின்னேரம் மூவருக்கு ஒரு பொதியென்று உணவு வந்திருந்தது. அதை அவர்கள் பகிர்ந்துண்டனர். இவ்வாறாக சில நாட்களில் உணவுகள் இன்றியும் சில வேளைகளில் அரிதாக கிடைத்தும் பத்து நாட்கள் பயிற்சிகள் நடந்தன.

  • இறுதித் திட்டம்:

13ம் திகதி பொட்டம்மான் அவர்களின் பதுங்ககழிக்குள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்பதுங்ககழியானது முள்ளிவாய்க்கால் துயிலுமில்லத்திற்கு அருகிலிருந்த பிட்டியிலிருந்தது (வீதிக்கு பெருங்கடல் பக்கம்). அது தேக்கங்குத்திகளால் ஆனதாகும். அக்கூட்டதிற்கு பிரிகேடியர் ஜெயம், பிரிகேடியர் சொர்ணம், கேணல் தரநிலை கொண்ட வேலவன் (போர்க்கைதியாகி தடுப்பில் படுகொலையானார்), ரட்ணம் மாஸ்டர் (மாவீரர்), சாள்ஸ் (மாவீரர்), திரு வீரமணி உள்ளிட்ட பல கட்டளையாளர்கள் கலந்துகொண்டனர்.

அக்கூட்டத்தில் தான் தலைவரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான திட்டமிடலும் முடிவும் எடுக்கப்பட்டது. இம்முடிவானது கட்டளையாளர்களால் எடுக்கப்பட்டதாகும். தலைவரை எவ்வாறு ஆனந்தபுரம் முற்றுகைச் சமரில் வெளியேற்றினரோ அதையொத்த நடவடிக்கை மூலம் இங்கிருந்தும் தலைவரை வெளியேற்ற முடிவெடுக்கப்பட்டது.

வெளியேற்ற நடவடிக்கைக்கான வலிதாக்குதல் மே மாதம் 15ம் திகதி இரவு நடத்துவதாக அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேற்கொண்டு ஏனைய நகர்வுத் திட்டங்களும் தீட்டப்பட்டன. திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளபடியான சமர் தொடங்குகையில் அதற்கேற்ப சிங்களப் படையினை திசைதிருப்ப ஓர் போலி சமர் இரட்டைவாய்க்கால் பரப்பில் செய்வதென்றும் முடிவானது.

திட்டமிடல் முடிந்த பின்னர் வீரமணி அவர்கள் ரட்ணம் மாஸ்டருடன் உரையாடுகையில் தலைவரை கொண்டு செல்லும் படகில் தலைவரின் முன்னை நாள் மெய்க்காவல் அணி பொறுப்பாளர் திரு வீரமணி அவர்களையும் செல்லும்படி ரட்ணம் மாஸ்டர் கேட்டுக்கொண்டார். அப்போது வீரமணி அவர்கள் தன்னுடன் நிற்கும் போராளிகளை என்ன செய்ய என்று ரட்ணம் மாஸ்டரிடம் கேட்டதிற்கு அவர்களை கரைக்கு வரச்சொல்லுமாறு பணித்தார்.

அதே நாள் அரசியல்துறையினர் செஞ்சிலுவைச்சங்கத்தோடு மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக மே 15ம் திகதி நண்பகல் 2 மணிக்கு பொதுமக்களை சிங்களக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டது. அரசியல்துறைப் போராளிகள் முதற்கட்டமாகவும், அவர்களுக்குப் பின்னால் காயப்பட்டவர்களும் அதன் பின்னால் பொதுமக்களும் வெளியேறுவர். அவர்களைத் தொடர்ந்து ஏனைய போராளிகள் வெளியேறுவர். மக்கள் சென்ற பின்னர் - மக்கள் தொகை குறைவாக இருப்பதை பாவித்து - மக்களின் இழப்புகளை குறைத்து தாக்குதல் செய்ய தலைமை முடிவு செய்தது.

  • முன்னேற்பாடுகள்:

சமர் தொடங்கும் தகவலானது சிறப்புப் பயிற்சியிலிருந்த 450 போராளிகளுக்கும் மே தாம் 14ம் திகதி அறிவிக்கப்படுகிறது. எனவே அடுத்த நாள் இரவில் களப்பைக் கடந்து மேற்கொள்ளப்போகும் தாக்குதலிற்கான ஆயத்தப்பணிகளில் புலிகளின் போராளிகள் ஈடுபட்டனர்.

உலர் உணவுகள், பழக்கலன்கள் மற்றும் இறைச்சி துண்டு கலன்களை போராளிகள் பொதி செய்தார்கள். மூன்று மாதத்திற்கு தேவையான பொதி செய்யவேண்டிய உணவுகள் என்று கொடுக்கப்பட்டிருந்த உணவுகள் கூட சொற்ப உணவுகளாகவே இருந்தன.

large.endofthe2ndattemptfoodspackedbythe

போராளிகள் பொதிசெய்த உணவுகளின் ஒரு பகுதி | படிமப்புரவு: ரூபபாகினி

போராளிகள் ஆயுதங்களையும் நன்றாக தூய்மைப்படுத்தி நீர்க்காப்பிட்டனர்.

அதே நேரம் ஏனைய போராளிகளை தத்தமது உற்றார் உறவினர்களின் வீடுகளிற்குச் செல்லுமாறும் அவரசரத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம் என்றும் சுற்றறிவிப்பு முறைப்படியாக அனுப்பப்பட்டது. இதனை கட்டுரையாசிரியரின் குடும்பத்தினரிருந்த பதுங்ககழிக்குள் அவரின் சுற்றத்தினராக இருந்த மகளிர் போராளியொருவர் நேரில் வந்து தெரிவித்துவிட்டு தனது பெற்றாரின் இருப்பிடத்தையும் அறிந்துகொண்டு சென்றார்.

(அன்று சாமம் முள்ளிவாய்க்கால் கிழக்கின் மேற்குப் பரப்பில் நிலமே அதிர வெடித்து வானில் பெரும் தீப்பிழம்பொன்று எழும்பியதை கட்டுரையாசிரியர் கண்டுள்ளார். அவர் அப்போது வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையாக வீதியில் நின்றுகொண்டிருந்தார்.)

  • சமர் தொடங்குதல்:

மே மாதம் 15ம் திகதி விடிந்தது. அன்று இரவு ஓர் நகர்விற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன.

நண்பகல் ஒரு மணியளவில் வெள்ளா முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் கோவிலின் கருவறைக்கு அருகில் புலிகளின் மூத்த கட்டளையாளர் ஒருவர் தலைமையில் சந்திப்பு ஒன்று நடந்தது. இக்கோவிலானது முள்ளி. உண்டியல் சந்திக்கு அருகாமையில் அமைந்திருந்தது.

சந்திப்பின் போது போராளிகளுக்கு கட்டளையாளர் அறிவுரையினை வழங்கினார். அவர் வழங்கிய அறிவுரை கீழ்க்கண்டவாறு இருந்ததாக யாழ் கள எழுத்தாளர் @அபிராம் அவர்கள் தனது தொடர் கட்டுரையான "ஒரு போராளியின் அம்மா" என்பதின் பாகம்- 17 இல் எழுதியுள்ளார்:

"நாங்கள் நாளை இரவு ஒரு பாரிய தாக்குதலை தொடங்க போகிறோம். அந்த வேளையில் இங்கே எந்த மக்களும் இருக்க மாட்டார்கள். எல்லாருமே செஞ்சிலுவைச்சங்க பாதுகாப்பில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு போயிருப்பார்கள். இந்த இடத்தை சூசை அண்ணை தலைமையிலான போராளிகள் தக்க வைக்க போராடி கொண்டிருப்பார்கள். அவர்கள் இராணுவத்துக்கு இறுதிநேர இழப்பை கொடுத்து கொண்டு எங்கள் ஊடறுப்பு தாக்குதலுக்கு அவனது முழு பலத்தையும் ஒருங்கிணைக்க விடாமல் பார்ப்பார்கள்."

"நீங்கள் எல்லாரும் பதினெட்டு பேர் கொண்ட இருபத்தைந்து அணிகளாக பிரிக்கபட்டு இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொரு அணிக்கும் ஒரு மூத்த தளபதி தலைமை தாங்குவார். தொடர்பாடல் பிரச்சனை காரணமாக இந்த சண்டை முடியும் மட்டும் அவரது கட்டளை தான் உங்களுக்கான இறுதிக்கட்டளை."

"உங்களின் பிரதான இலக்கு, எவ்வளவு கெதியாக முன்னணி நிலைகளை உடைத்து, உங்களை நிலைநிறுத்தி, ஒரு மனித பாதுகாப்பு அரணாக தலைவர் வெளியேறுவதற்கான ஒரு பாதுகாப்பான பாதையை ஏற்படுத்தி கொடுப்பது தான்".

"உங்கள் எல்லாருக்கும் தெரியும், எங்கள் விடுதலை போராட்டத்தின் உயிர் மூச்சு தலைவர் தான், அவரை நாங்கள் பாதுகாப்பாக நகர்த்தினால் தான் எங்கள் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரும், மக்களுக்கு ஒரு விடிவை நாங்கள் பெற்று கொடுக்கலாம்"

"எனவே உங்களின் கைகளில் தான் தங்கியுள்ளது, எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டம், அதற்காக தான் விசுவாசமான உங்களை தெரிவு செய்து இந்த தாக்குதலுக்கு தயார்படுத்தி இருக்கிறோம்"

"இந்த சண்டை எங்கள் வழக்கமான சண்டைகள் போல இருக்காது. உங்களுக்கான பின்கள வழங்கல்களோ, சூட்டாதரவோ கிடைக்காது. உங்களின் வீரமும் தியாகமும் தான் காவலரண்களை உடைத்து வழி ஏற்படுத்தும். எதிரி எங்களின் வருவுக்காக அங்கே காத்துகொண்டிருப்பான். தடங்கல் ஏற்படும் இடங்களில் கரும்புலிகள் அதை உடைத்து கொடுப்பார்கள்"

"இன்னொரு முக்கியமான விடயம், இந்த தாக்குதலில் எதிரியிடம் நாங்கள் எக்காரணம் கொண்டும் பிடிபடக்கூடாது, உங்களுக்கு வெடிகுண்டு அங்கிகள் (ஜாக்கெட்) வழங்கப்படும், உங்கள் ஆயுதங்கள் தீர்ந்தாலோ, எதிரியிடம் அகப்படும் நிலை தோன்றினாலோ அதை பாவியுங்கள்"

"இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களை அண்ணை சந்திப்பார்.."

இவர் இவ்வாறு கதைத்துக்கொண்டிருக்க இவர்களுக்கு அருகிலிருந்த கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் சேர்த்திருந்த புதிய போராளிகளால் காக்கப்பட்ட இரட்டைவாய்க்கால் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையானது சிங்களப் படைகளால் உடைக்கப்பட்டது. இவர்கள் இருந்த இடத்திற்கு மிக நெருக்கமாக பகைவர் நெருங்குகிவருவதை நடைபேசி மூலம் இளநிலை கட்டளையாளரொருவர் அறியத்தந்தார். மேலும் பகைவர் மக்களுடன் மக்களாக மக்களை மனிதக் கேடயமாக பாவித்தபடி வரிப்புலியில் வருவதாகவும் தகவல் வந்தது.

அத்துடன் அவர் இந்த முற்றுகை உடைப்பிற்கு தயாராகிவரும் போராளிகளை பின்னகருமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு மறுப்புத் தெரிவித்த மூத்த கட்டளையாளர் தனக்கு அறிவிக்கப்பட்ட நிலைமையை அங்கிருந்த போராளிகளுக்கு விளக்கிக் கூறினார். அதை செவிமடுத்த அகிலன் என்ற இளநிலை கட்டளையாளர் தன்னுடைய 18 போராளிகளையும் அழைத்துக்கொண்டு மூத்த கட்டளையாளரிடம் இசைவுபெற்ற பின்னர் பகைவர் உடைத்த முன்னரங்க நிலை நோக்கி வேகமாக ஓடினான். அவர்களிற்கான சண்டை பொறுப்பை அன்பு மாஸ்ரர் நெறிப்படுத்தினார்.

அங்கு சென்ற அகிலனின் அணியினர் தம்மால் இயலுமட்டும் பகைவருடன் பொருதினர். தம்மால் நெடிய நேரம் தாக்குப்பிடிக்க இயலாது என்பதை அன்பு மாஸ்டரிற்கு நடைபேசியில் அகிலன் அவர்கள் அறிவித்தார். மேலும் தமக்கு கரும்புலி ஒன்று வேண்டும் என்றும் கிடைத்தால் கொஞ்ச நேரம் தாக்குப்பிடிக்கலாம் என்றார்.

அவ்விக்கட்டான சூழ்நிலையில் பின்னகர்த்தப்பட்ட கரும்புலிகளை முன்னகர்த்துவது கூட்ட நெரிசலில் கடினம் என்று அம்மூத்த கட்டளையாளர் அன்பு மாஸ்டரிற்கு எடுத்துரைத்தார்.

அப்போது ஊடறுப்புத் தாக்குதலிற்கு ஆயத்தமாகயிருந்த போராளிகளிலிருந்து ஒரு போராளி கரும்புலியாக செல்ல முன்வந்தார். அவரை இரட்டைவாய்க்கால் சிங்களத் தரைப்படையின் 58 வது படைப்பிரிவின் முன்னரங்க முன்னணி கட்டளை மையத்தின் 30 மீட்டருக்குள் கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ள கட்டளை பிறப்பித்தனர். இதற்காக வெடிமருந்து கட்டிய உந்துருளியில் கரும்புலியை தயார்படுத்தினர்.

கரும்புலி தாக்குதலிற்கு செல்கையில் அவருக்கு காப்புச் சூடு வழங்க இன்னும் இரு போராளிகள் அனுப்பப்பட்டனர்; எழில்வண்ணன் என்பான் கரும்புலியுடன் உந்துருளியில் பின்னிற்கு எழும்பி நின்று காப்புச் சூடு கொடுக்க வேண்டும், கனிவாளன் என்பான் வீடொன்றின் மேலிருந்து காப்புச் சூடு வழங்க வேண்டும்.

இவர்கள் புறப்பட்டுச் செல்ல எல்லையில் நின்ற அகிலனின் அணியினர் வெடிப்பிலிருந்து ஏற்படப் போகும் பாதிப்பிலிருந்து தம்மை காக்க பின்னுக்கு நகர்ந்தனர். சம நேரத்தில் உந்துருளியை முல்லை-பரந்தன் வீதி வழியே ஓட்டிச் சென்ற கரும்புலி வீரன், இலக்கை நெருங்கியதும், எழில்வண்ணன் கீழே குதித்திட்டான். தொடர்ந்து சென்ற கரும்புலி இலக்கை அடைந்து வெடித்தார். இதனால் அங்கிருந்தான பகைவரின் முன்னகர்வு தடைப்பட்டது.

மேற்கூறிய கரும்புலித்தாக்குதலுட்பட மொத்தம் மூன்று சக்கை தாக்குதல்கள் அற்றை நாளில் மேற்கொள்ளப்பட்டன. சக்கை உந்துருளி தாக்குதலிற்கு முன்னர் நண்பகல் வேளையில் ஒரு கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அது வெள்ளாமுள்ளிவாய்க்காலின் இரட்டைவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த 58வது படைப்பிரிவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலை சக்கை நிரப்பிய சிவப்பு நிற சாகாடு (Double cab/ Pickup) ஒன்றில் சென்ற இரு கரும்புலி மறவர்கள் மேற்கொண்டனர். இலக்கை நெருங்குகையில் பகைவரின் ஆர்.பி.ஜி உந்துகணை தாக்குதலிற்கு சாகாடு இலக்காகி வெடித்துச் சிதறியதால் அத்தாக்குதல் கைகூடவில்லை.

மூன்றாவதாக 58வது படைப்பிரிவினர் மீது மீளவும் ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எம்மவர் முன்னரங்க நிலை மீது தாக்க ஆயத்தமாகிகொண்டிருந்த படையினர் மீது சக்கை நிரப்பிய உழுபொறி ஒன்றில் சென்ற கரும்புலிகள் இடித்து வெடித்தனர். எனினும் இத்தாக்குதலின் பெறுபேறுகள் தெரியவில்லை.

  • பங்கெடுத்த போராளிகளோடான தனிப்பட்ட தொடர்பாடல்:

சமரில் பங்கெடுக்கப் போகும் முன்னர் கட்டளையாளரான கடற்புலி லெப். கேணல் சிறிராம் அவர்கள் தன் உற்ற நண்பனான திரைப்பட இயக்குநரும் ஊடகவியலாளருமான திரு. அன்பரசனை கண்டு கதைத்தார். அப்போது அன்பரசனிடம்,

“நாளை இரவுக்கு இறங்கப்போறம். நான் தான் கொமாண்டர் மச்சான். ஒரு கை பாப்பம். இரும்புக் கோட்டைக்குள்ள போகப்போறம். வெற்றியெண்டா சந்திப்பம். இல்லாட்டி அலுவல் முடிந்தது மச்சான்”.

“நீ, இசைப்பிரியாவை கூட்டிக்கொண்டு போ,”

என்றார் லெப். கேணல் சிறிராம். பின்னர் மேலும் சில கதைத்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றார். எனினும் இசைப்பிரியாவை தம்முடன் வர அழைத்த போது,

“அண்ணை, உங்களோட இன்னொரு போராளியும் வாறா, நானும் வந்தால் உங்களையும் பிடிப்பான். வந்தால் சிறிராமுடன் தான் வருவன். இல்லாட்டில் வரமாட்டன்.”

என்று கூறி மறுத்தாக திரு அன்பரசன் அவர்கள் கூறியுள்ளார் (ஆதாரம்: இயக்குநரும் ஊடகவியலாளருமான அன்பரசனின் கடைசி நேர அனுபவங்கள்).

  • மக்கள் சரணடைதல்:

பொதுமக்களின் சரணடைவானது வட்டுவாய்க்கால் பக்கமாக நடந்தது.

இரண்டு மணிக்கு சரணடைய வேண்டிய மக்களை உள்ளெடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தியது சிங்களப் படைத்துறை. ஏறத்தாழ 3:15 மணியளவில் மக்கள் மேல் சிங்களப் படையினர் சுடுகலன்களால் சுட்டனர். அப்போது நன்னிச் சோழன் கிரவில் வீதிக்கு அண்மையில் நின்றிருந்தார். சிங்களப் படைத்துறையிடம் செல்ல கிரவல் வீதிக்கு ஏறிய அவரது சுற்றத்தினன் ஒருவர் தனது ஓர் கைக்குழந்தியினை கையில் ஏந்தியபடி அவரின் கண்முன்னே நிலத்தில் வீழ்ந்திறந்தார். பின்னர் மீளவும் மாலை 4 மணிக்கு முயற்சித்து சிங்களத்திடம் சரணடைந்தனர் மக்கள். சரணடையும் போதிலும் சிறு சண்டை வெடித்து இரு மூதாளர்கள் படையினரால் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டதை கட்டுரையாசிரியர் தன் கண்களால் கண்ணுற்றார். (இது தொடர்பான வரலாற்றை பின்னாளில் எழுதுகிறேன்)

large.lttesinhalafdlvellamullivaikkaal.j

வெள்ளா முள்ளிவாய்க்காலின் சர்வாறுத்தோட்டப் பரப்பையும் வட்டுவாகல் பரப்பையும் காட்டும் வரைப்படம். மேலும் சிறிலங்காப் படையினரின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் (Forward Defense Lines) 12ம் திகதி மட்டில் எங்கிருந்தது என்பதையும் இவ்வரைப்படம் காட்டுகிறது. இதில் தெரியும் முல்லை-பரந்த வீதியூடாகவே கட்டுரையாசிரியரும் குடும்பத்தினரும் சிங்களப் படையினரிடத்தில் 15ம் திகதி பின்னேரம் சரணடைந்தனர் | வரைபட விளைவிப்பு மற்றும் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலை குறியிட்டது: சிறிலங்கா படைத்துறை | படிமப்புரவு: அமல் சமந்த, ரூபபாகினி | படிம விளக்கம்: நன்னிச் சோழன்

large.finalbund2.jpg.00160f1b57623196a98

வெள்ளா முள்ளிவாய்க்காலின் வட்டுவாய்க்கால் எ வெட்டுவாய்க்கால் கரையோரமாக புலிகள் அமைத்துள்ள 5 அடி உயர மண்ணரண் | படிமப்புரவு: அமல் சமந்த, ரூபபாகினி

large.finalbund.jpg.5947cae0ce4a39d6a97f

வெள்ளா முள்ளிவாய்க்காலின் வட்டுவாய்க்கால் எ வெட்டுவாய்க்கால் முகத்துவாரப் பக்கம் புலிகள் அமைத்துள்ள 5 அடி உயர மண்ணரண் | படிமப்புரவு: அமல் சமந்த, ரூபபாகினி

  • முதல் முயற்சி:

சாமம் நெருங்கிய வேளை நந்திக்கடலின் களப்பு ஊடாக முதல் முயற்சி புலிகளால் எடுக்கப்பட்டது. அப்போது முதல் உடைப்பு அணி ஆயத்தமாகி நின்றது. இரண்டாவது அணி கேணல் ரமேஸ் அவர்கள் தலைமையிலும் மூன்றாவது அணி ஜெயாத்தன் அவர்களைக் கொண்ட அணியாகவும் நின்றது. இவர்களிற்குப் பின்னால் ஏனைய அணியினர் ஆயத்தமாக நின்றனர்.

அப்போராளிகள் களப்பை நோக்கி மக்கள் பார்த்திருக்க நகர்கையில் இறுக்கமான முகத்துடன் யாருடனும் எதுவும் பேசாமல் நகர்ந்தனர். நகர்ந்து சென்றவர்கள் நீரினுள் இறங்கி அங்கால் நின்ற படகுகளில் ஏறினர்.

அங்கால் (கேப்பாப்பிலவு) பகைவர் தம் முன்னரங்க நிலைகளில் மின்வெளிச்சம் பாச்சி திருவிழா போல வைத்திருந்தான்.

ஊடறுப்புக்கு தயாரான கரும்புலிகள் உள்ளிட்ட போராளிகள் கடற்புலிகளின் படகுகள் துணைகொண்டு தரையிறங்கித் தாக்க முயற்சித்தனர். இவர்களின் நகர்வை கண்ட சிங்களப் படையினர் இவர்கள் மேல் கடும் தாக்குதல் தொடுத்தனர்.

எவ்வித சூட்டாதரவுமின்று தமிழர் சேனை பொருதியது. மே மாதம் 16ம் திகதி விடியப்புறம் 5 மணிவரை மேற்கொண்ட ஊடறுப்பு முயற்சி சிறிய இழப்புகளுடன் தோல்வியில் முடிந்தது. முன்சென்றவர்களின் தொடர்புகள் இல்லாமல் போகின.

அற்றை நாள் திரும்பி வந்தோரை ஓம்பமாக (safe) வேறு இடங்களில் இருக்குமாறு பணிக்கப்பட்டது.

→ எ.கா: அதன் படியே படைக்கலப் பாதுகாப்பு அணியில் இருந்தோரை வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையில் வீதியோரமாக பாதுகாப்பாக இருக்கும்படி கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்கள் வெளியேற்றத்தின் போது மக்களை கேடயமாக பாவித்தனர் படையினர். மக்களோடு மக்களாக புலிகளின் முன்னரங்க வலுவெதிர்ப்பை உடைத்துகொண்டு இவர்கள் இருந்த இடத்தை நெருங்கிவந்தனர். எனவே படையினரை தடுக்கும் நோக்கோடு இவ் அணி கடும் எதிர்தாக்குதலை மேற்கொண்டனர். அம்முயற்சியில் இப்படைக்கலப் பாதுகாப்பு அணியின் கணக்காளரான சுகுமார் என்ற போராளி 16/05/2009 அன்று மாலைப்பொழுதில் சிங்களப்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தார் (ஆதாரம்: படைக்கல பாதுகாப்பு அணியின் கணக்காளர் சுகுமார்).

  • இரண்டாம் முயற்சி:

முதல் முயற்சி தோல்வியில் முடிந்த பின்னர் மே மாதம் 16ம் திகதி இரவில் மற்றொரு முயற்சி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அன்று அதிகாலையே தொடங்கின.

அந்நடவடிக்கையில் தலைவரை மறுகரைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான லெப். கேணல் சிறிராம் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நந்திக்கடல் கரையிலிருந்த ஓர் மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த பதுங்ககழிக்குள் லெப். கேணல் சிறிராம், பொட்டம்மான் (மாவீரர்) மற்றும் ரட்ணம் மாஸ்டர் ஆகியோர் இருந்த படி திரு வீரமணி அவர்களை அவ்விடத்திற்கு வருமாறு அழைத்தனர். முதல்நாள் தாக்குதலிற்கு சென்றோரின் தொடர்புகள் இல்லாமல் போனதால் இம்முறை தாக்குதலிற்கு இவரை தலைமை தாங்கும்படி பணித்தார், ரட்ணம் மாஸ்டர்.

தாக்குதலிற்கான ஆயத்தங்களை உடனே தொடங்கினார் திரு வீரமணி அவர்கள். அவ்விடத்திலிருந்த இரு கட்டைப்படகுகளையும் எடுத்துக்கொண்டனர்.

நடவடிக்கைக்கு மேலும் படகுகள் தேவைப்பட்டதால் கடற்புலிகளின் தர்மேந்திரா படைத்தளத்திற்கு அருகிலிருந்த கடற்புலிகளால் பாவிக்கப்பட்ட செம்மைப்படுத்தப்பட்ட ஓர் புளு ஸ்ரார் வகுப்பைச் சேர்ந்த கட்டைப்படகொன்றையும் எடுத்துக்கொண்டனர். அது பரந்தன் - முல்லை வீதிக்கு அந்தப் பக்கம் இருந்ததால் அப்படகினை எடுத்துத் தருமாறு ஜெயந்தன் படையணியின் கட்டளையாளர் திரு. ஜெயாத்தன் அவர்களிடத்தில் லெப். கேணல் சிறிராம் அவர்கள் கோரினார். அவரும் தன்னிடத்திலிருந்த 10 போராளிகளை அனுப்பி அப்படகினை தூக்க உதவி செய்தார். படகினை தோளில் தூக்கி நந்திக்கடலின் கரை வரை கொண்டுவந்து வைத்தனர்.

பின்னர் பன்னிரண்டு (2x6) மண்ணெண்ணை உருள்கலன்களை ஒன்றாக்க கட்டி ஓர் தெப்பம் போல உருவாக்கி அதை படகுடன் இணைத்தனர். இவ்வாறு இரண்டு படகில் இணைத்தனர். இதன் மூலம் படகு பயணிக்கும் போது அதனுடன் சேர்ந்து இச்செம்மைப்படுத்தப்பட்ட தெப்பமும் இழுவிண்டுகொண்டு செல்லும் வகையில் உருவாக்கினர். படகில் 15 பேரும் தெப்பத்தில் 15 பேருமாக மொத்தம் 30 பேர் ஒரே நேரத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

மூன்றாவது படகுடன் இணைப்பதற்கு அங்கிருந்த ஒரு பாதை வகை படகு பாவிக்கப்பட்டது. (இப்பாதை வகைப் படகுகளை 'ஆஞ்செல்கை' என்றும் பண்டைய தமிழில் அழைப்பர். இவை இத்தீவிற்கே உரித்தான படகுகளாகும். பண்டைய காலங்களில் களப்புகளையும் ஆறுகளையும் கடக்க பாவிக்கப்பட்டன.)

large.kullaa-usedfortrooptransportationd

புலிகளால் பாவிக்கப்பட்ட 'பாதை' வகை படகு சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்ட பின்னர் | படிமப்புரவு: ரூபபாகினி

முதல் அலையில் கரும்புலிகள் மற்றும் தடையுடைப்பு அணிகளை இறக்கியபின்னர் ஒரு 300 முதல் 400 போராளிகள் வரை கொண்டு சென்று இறக்கி நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததென்றால் தேசியத் தலைவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்பது இதில் திட்டமாகயிருந்தது.

17 ம் திகதி விடிசாமம் 12 மணி சொச்சத்திற்கு புலிகளின் இறுதி வலிதாக்குதலிற்காக அணிகள் மெல்லப் புறப்பட்டன.

ஓர் படகில் வீரமணியுடன் 30 போராளிகளும் மற்றொரு படகில் அவருடனிருந்த பங்கையனுடன் 30 போராளிகளும் மூன்றாவது படகில் தூயமணி எ அற்புதன் மற்றும் கணனிப் பிரிவைச் சேர்ந்த நரேஸ் ஆகியோருடன் 30 போராளிகள் என ஒட்டு மொத்தமாக 90 பேர் முதலில் புறப்பட்டுச் சென்றனர்.

இவர்களை சிங்களப் படையினரின் கண்ணில் படாதவாறு கொண்டு சென்று கேப்பாப்பிலவு நோக்கியவாறு தரையிறக்க வேண்டும். தரையிறக்கமானது சிங்களக் கரையிலிருந்து 1200 மீட்டர்கள் தொலைவில், சிங்களவர் நோக்காதவாறு நிகழ்த்தல் வேண்டும். அதன்படியே கடற்புலிகளும் தம் பணியினை செவ்வனே முடித்திருந்தனர். கழுத்தளவு நீர் நிரம்பிய நீர்ப்பரப்புக்குள் ஓசைபடாதவாறு போராளிகள் தரையிறக்கப்பட்டனர். தரையிறங்கியோர் தத்தம் இலக்குகள் நோக்கி மெள்ளமாக நகரத் தொடங்கினர்.

சம நேரத்தில் புலிகளின் ஆட்புல நந்திக்கடல் கரையோரமாக நந்திக்கடல் நீரிற்குள் செயலாற்றக்கூடியளவு ஆழம்வரை போராளிகள் இறங்கி நின்றனர். அவர்கள் மீது வெள்ளா முள்ளிவாய்க்காலின் இரு பக்கத்தின் கரையிலுமிருந்து தெறுவேயங்கள் (Cannon) கொண்டு சிங்களப் படையினர் சுட்டபடியே இருந்தனர் (வாக்குமூலம்: புலனாவுத்துறைப் போராளி அரவிந்தன், 2018, Tiktok காணொளி)

அதே நேரம் முதல் அலை தரையிறக்கப்பட்ட பின்னர் இரண்டாவது அலையை ஏற்ற படகுகள் தளம் திரும்பின. அவையும் 90 போராளிகளை ஏற்றியபடி இறக்கியயிடத்திற்கு சென்று காத்திருந்தனர்.

நேரம் அதிகாலை 2.40 ஐ கடந்துகொண்டிருந்தது. முதலில் இறக்கிய 90 பேரும் இன்னும் சண்டையைத் தொடங்காததால் என்ன செய்யவென்று வீரமணி அவர்கள் லெப். கேணல் சிறிராம் அவர்களிடத்தில் வினவினார். சிறிராம் அவர்களும் வீரமணியிடம் உள்ள 90 பேரையும் நேரே கொண்டு சென்று இடித்திறக்குமாறு கட்டளையிட்டார். அதன் படி வீரமணி அவர்களும் ஒழுகினார்.

ஏறத்தாழ கரையிலிருந்து 400- 500 மீட்டர் தொலைவில் கொண்டு செல்ல புலிகளை கண்ட சிங்களவர் தாக்குதலை தொடங்கினர். 50 கலிபர் சுடுகலன் சன்னங்கள் மழைபோல வரத் தொடங்கின. இருப்பினும் இயலுமட்டும் படகுகளை முன்கொண்டு சென்ற கடற்புலிகள் கரையிலிருந்து 200 - 300 மீட்டர் தொலைவில் போராளிகளை தரையிறக்கினர். அப்போது எதிர்ப்பட்ட சன்னங்களால் வீரமணி அவர்களின் படகிலிருந்த போராளி ஒருவர் வீரச்சாவடைய இன்னும் இருவர் காயமடைந்தனர்.

புலிகளும் படகுகளிலிருந்து குதித்திறங்கி சுடத் தொடங்கினர். சமரும் வெடித்தது.

அதே சமயம் இவர்களுக்கு முன்னர் மெள்ளமாக நகர்ந்து சென்று கரையை அண்மித்த முதல் அலையினரும் சண்டையைத் தொடங்கினர்.

சமரெனில் பெருஞ்சமராகும். கரும்புலிகளும் தடையுடைப்பு அணிகளுமாக மாறி மாறி வெடித்துக்கொண்டிருந்தனர்.

large.endofthe2ndattempt4-destroyedbarbe

புலிகளால் அறுக்கப்பட்ட கம்பிவேலிகளும் அதில் சிதறிக்கிடக்கும் முதுகுப்பைகளும் | படிமப்புரவு: ரூபபாகினி

போதாக்குறைக்கு சிங்களப் படைகளும் எறிகணை மழை பொழிந்துகொண்டிருந்தனர். சிங்கள முப்படைகளும் நாலா புறமுமிருந்து புலிகளை நோக்கி சரமாரியாக சுட்டுக்கொண்டிருந்தனர். வானே வெளிச்சாமகுமளவிற்கு சிங்களவர் வெளிச்சக்குண்டுகளை ஏவியபடியிருந்தனர். அதில் தெரியும் தலைகளை நோக்கி சன்னங்கள் கூவியபடி வந்துகொண்டிருந்தன. களப்பினுள் காப்பு மறைப்புகள் ஏதுமின்றி அந்த இறுதி ஊடறுப்பு முயற்சிக்கான போராளிகள் அடிபட்டுக்கொண்டிருந்தனர் (ஆதாரம்: ‘நந்திக்கடலில் மரணத்தை கடந்த நிமிடங்கள்.......’, த .கதிரவன்).

சமர் இவ்வாறு அங்கே களப்புக்குள் நடந்துகொண்டிருக்க மீண்டும் மூன்றாவது அலையினை ஏற்ற புலிகளின் படகுகள் திரும்பின. அப்போது நேரம் ஏற்கனவே அதிகாலை 5 மணியைத் நெருங்குவதால் நிலமும் வெளிக்கத்தொடங்கியது. அதே நேரம் பங்கயன் அவர்கள் சென்ற படகும் சிங்களவரின் நேரடி தகரிச் சூட்டிற்கு இலக்காகி மூழக்கத் தொடங்கியது. ஆகவே மேற்கொண்டு கொண்டு செல்லவேண்டாம் என்று கட்டளைப்பீடம் கட்டளை பிறப்பித்தது. சண்டையையும் நிறுத்த பணித்தனர்.

இயன்றவரை முயன்ற புலிகளின் அணிகள் முற்றாக ஏலாத கட்டத்தில் பலர் வீரச்சாவடைந்தனர். எஞ்சியவர்கள் நீரினுள் மூச்சை அமுக்கிப் பிடித்தவாறு தாழ்வதும் பின்னர் மூச்சுவிட மெள்ள தலையைத் தூக்குவதுமாக கரை நோக்கி நடந்தனர். கையில் பட்ட காயக்காரர்களையும் வீரச்சாவுகளையும் இறுகப்பற்றி இழுத்துக்கொண்டு ஏனைய போராளிகள் புலிகளின் கட்டுப்பாட்டு நந்திக்கடல் கரையை (வெள்ளா முள்ளிவாய்க்கால் விடத்தலடி) அடைந்தனர்.

large.endofthe2ndattempt.jpg.511d9903bc5

களப்பின் கேப்பாப்பிலவு பக்க கரையிலிருந்து பார்க்கும் போது மறுகரையிலிருந்து பெரும் புகை எழுவதை காணலாம் | படிமப்புரவு: ரூபபாகினி

large.endofthe2ndattempt3.jpg.3095e9724d

சமர் முடிந்த கையோடு சிங்களப் படையினர் கரையில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர் | படிமப்புரவு: ரூபபாகினி

large.endofthe2ndattemptothersidesinhala

புலிகளின் தாக்குதலிற்குள்ளான கரையோரக் காவலரண்களிலொன்றில் நின்று சிங்கள அதிகாரிகள் கதைவளிப்படும் காட்சி | படிமப்புரவு: ரூபபாகினி

இச்சமரில் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த கட்டளையாளர்களான முகுந்தன் எ ஜூட், முத்தப்பன், ஆதித்தன் எ பிரதீப் மாஸ்டர், பாலகுமார் உள்ளிட்ட தரநிலை அறியில்லாத 80இற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்தனர். இவர்களில் 9 மகளிர் போராளிகள் உட்பட 70இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் சிங்களவரால் கைப்பற்றப்பட்டன. இத்தகவலானது சமர் முடிந்த பின்னர் சிங்களப் படைகளால் களப்பிலிருந்து எடுக்கப்பட்ட போராளிகளின் வித்துடல் எண்ணிக்கையினைக் கொண்டு அறியப்பட்டுள்ளது. புலிகளின் நீல நிற செம்மைப்படுத்தப்பட்ட படகொன்று உட்பட பல படைக்கலன்களும் சிங்களவரால் கைப்பற்றப்பட்டன.

  • முடிவுரை:

இவ்வாறாக தலைவரை வெளியேற்ற புலிகள் எடுத்த இறுதி முயற்சி வெஞ்சமரிற்கிப் பின்னர் தோல்வியில் முடிந்து போனது. இவ்விரண்டாவது முயற்சிதான் தமிழீழ வரலாற்றில் தமிழர் சேனையால் மேற்கொள்ளப்பட்ட கடைசி தரையிறக்கமாகும்.

“உங்கள் கனவே

எங்கள் நினைவாய்

எழுந்து நிற்கின்றோம்!”

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

போர்க்காலச் செய்தியாளர்களில் ஒருவரான சகிலா

3 weeks 3 days ago

"யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா”

----செய்தியாளர் சகிலா

போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறார்கள்.

இறுதியுத்தகாலப்பகுதியில் செய்தியாளராக கடமையாற்றியவர் சகிலா. செய்தியாளராக பணியாற்றியவர்களில் ஒரே பெண் செய்தியாளரும் இவரே. குடும்பத்தில் இருவர் மாவீரர்கள். யுத்தத்தின் பின் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை. சிறையில் இருந்து விடுதலையாகியதும் அவளுக்கு கிடைத்த சமூகப்புறக்கணிப்பு. பல துயரங்களை சுமந்த ஒரு பெண்ணாகி என்னுடன் பேசும் போது “ ஒருதரும் என்னோடு பேசுவதில்லை, எனக்கு காசு ஒன்றும் வேண்டாம். நீ அடிக்கடி பேசிறியடா” என்று அப்பாவிதனமாக கேட்கும் சகிலாவின் துணிச்சல் மிக்க ஊடகப்பணிக்காகவே அவர் மதிக்கப்படவேண்டியவர்.

அதிகாலை நேரம், அனேகமான மக்கள் நித்திரையில் இருக்க, அனேகமான மக்கள் அங்கயும் இங்கயும் என்று மாறி மாறி ஓடிக்கொண்டிருந்த நேரமது. எறிகணைகள் வீழ்ந்து படுகாயமடைந்துகொண்டிருப்பார்கள். குண்டுசத்தங்கள் கேட்கும் திசையை நோக்கி சகிலாவின் கமரா விரைந்து செல்லும்.

24.03.2009 அன்று காலை 5 மணி புதுமாத்தளன் நீர்ப்பரப்பினை தாண்டி படையினரின் நிலைகளில் இருந்து ஏவப்பட்ட ஆர்.பி.ஜி உந்துகணை ஒன்று வைத்தியசாலையின் பின்புறத்தில் வசித்த பெண் ஒருவரின் கால்கள் துளைத்துக்கொண்டு வெடிக்காத நிலையில் இருந்துள்ளது. யுத்த காலத்தில் வெளியான நிழற்படங்களில் இதைப் பார்த்திருப்பீர்கள். சத்தம் கேட்கும் திசையை நோக்கி ஓடிச்சென்ற உறவினர்கள் வெடிக்காத நிலையில் இருந்த உந்துகணையோடு காயமடைந்த பெண்ணை வைத்தியசாலைக்குக் கொண்டு வந்திருந்தனர். அங்கு கடமையிலிருந்த மருத்துவர்கள் உடனடியாக செயற்பட்டு அப்பெண்ணைக் காப்பாற்றியிருந்தனர். இது எவ்வளவு பெரிய சவால் நிறைந்தது என்று அனைவருக்கும் தெரியும். அன்று அந்த உந்துகணை வெடித்திருந்தால் வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட

பலர் இறந்திருப்பார்கள்.

“அக்கா நீங்கள் எப்படி பயமில்லாமல் அதில நிண்டீங்கள்? “ என்று கேட்க!

“உனக்கு தெரியாதடா, நான் விடியப்பறமே எழும்பிடுவன், பகலில் சனம் என்று, அதில ஒரு கிணற்றடியில குளிக்கபோறனான். வழமையாக வெள்ளனவே நான் வைத்தியசாலைக்கு போடுவன். அன்றும் அப்படிதான் போனன். நான் பயப்பிடேல. எப்படியாவது அந்தப்பிள்ளையை தூக்கிகொண்டு வரவேணும் என்று அதில் கிடந்த துணியில கிடத்தி தான் தூக்கிகொண்டு வந்தது. வைத்தியசாலைக்கு கொண்டுவந்தவுடன்; அதில் இருந்த எல்லாரும் ஓடிட்டினம். யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா” இன்றும் அதே வழமையான பாணியில் எல்லாரையும் அன்பாக கேட்டார்.

சகிலா அக்கா ஊடகத்துறையினை விட்டு விலகியிருந்தாலும் அவர் நிச்சயம் மதிக்கப்படவேண்டிய ஒருவர். இணையங்களில் நீங்கள் பார்க்கின்ற இறுதியுத்தகால புகைப்படங்களை பலவற்றினை சகிலாவே எடுத்திருந்தார்.

நான், ஏன் சகிலா அக்காவை மதிப்புகுரியவராக பார்க்கிறேன். என்பதையும் சொல்கிறேன்.

பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை(பொக்கணை என்று அழைப்பது வழமை), வலைஞர்மடம், களுவாவாடி, இரட்டைவாய்க்கால், தனிப்பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு,வட்டுவாகல் மேற்கு ஆகிய பிரதேசங்களே இறுதி யுத்தகாலப்பிரதேசங்களாகும். இதில் வட்டுவாகல் மேற்கு மட்டும் இறுதி நாட்களிலேயே மக்கள் அதிகளவு ஒதுங்கிகொண்ட பிரதேசமாகும்.

இப்பிரதேசங்களை நான்; நான்காக பிரிக்கின்றேன்.

01)பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கனை

02)வலைஞர்மடம்,களுவாவாடி,இரட்டைவாய்கால்

03)தனிப்பனையடி,முள்ளிவாய்க்கால் மேற்கு,முள்ளிவாய்க்கால் கிழக்கு

04)வட்டுவாகல் மேற்கு

இப்பிரதேசங்களில் முதல் பிரிவில் உள்ள பிரதேசங்கள் 2009 ஏப்பிரல் 20,21 ஆகிய நாட்களில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. அத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் படையினரின் பகுதிக்கு சென்று விட்டார்கள்.

இதில் அம்பலவன்பொக்கணைப்பிரதேசத்திலேயே சகிலா அக்காவும் அவரது தாயாரும் வசித்து வந்திருந்தனர்.

சிறிலங்கா படையினர் அம்பலவன்பொக்கணையை அண்மித்துக்கொண்டு இருக்கும் பொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் காவலரண்கள் வலைஞர்மடம் பகுதியினை அண்மித்து அமைக்கப்பட்டிருந்தது. வலைஞர்மடத்தினை தாண்டி முள்ளிவாய்க்காலுக்கு எவரும் அன்றையநாளில் வரமுடியாதநிலை, அம்பலவண்பொக்கணையில் இருந்த பெரும்பாலானவர்கள் படையினரின் பக்கமும் முள்ளிவாய்க்கால் பக்கமும் முதல்நாள் சென்று விட்டனர். அதற்குள் அகப்பட்டிருந்த சகிலா அக்காவும் தாயாரும் உண்மையிலே படையினரின் பக்கமே செல்லவேண்டும். முள்ளிவாய்க்கால் வருவதற்கு வழியேதும் இல்லை. வருவதென்றால் விடுதலைப்புலிகளின் காவலரண்களைத்தாண்டித்தான் வரவேண்டும். அது கடினமான காரியம். இந்த நேரத்தில் தான் தற்துணிவோடு வலைஞர்மடம் கடற்பகுதிக்கு சென்று கடலுக்குள் இறங்கி கழுத்தளவு தண்ணியால் தனது தயாரையும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச்சென்றமையானது. சகிலா அக்கா ஊடகப்பணி மீது வைத்த அதீத அக்கறை தான் காரணம்.

இறுக்கமான சூழல், சாப்பாடு பிரச்சினை, வயதான பெற்றோர்களை பராமரிப்பதில் சிரமம். குழந்தைப்பிள்ளைகளுக்கான உணவுப்பொருட்கள் இல்லை. காயமடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் காயமடைகிறார்கள். இந்த நெருக்கடி நிலையில் தான் அப்பகுதியில் வசித்த பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் படையினர் பக்கம் சென்றிருந்தனர். படையினரின் பக்கம் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தும் அங்கே செல்லாமல் இறுதிநாள் வரைக்கும் அந்தப்பணியை செய்திருந்தார். இன்றுவரைக்கும் அனைவரும் இறுதியுத்தகால படங்களை பார்க்கின்றீர்கள் என்றால் அதற்கு சகிலா அக்காவின் உழைப்பும் அதில் நிறையவே இருக்கின்றது.

(சகிலா அக்கா பற்றிய விரிவான பகுதி நூலில் வெளிவரும்)

-->சுரேன் கார்திகேசு

மே 16 2009. ஓமந்தையில் விசாரிக்கப்பட போது

3 weeks 3 days ago

large.doctors.jpg.199b15e6b0a7d5bdba499b

முதல்நாள் மாலை முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை பகுதியை ராணுவத்தினர் கைப்பற்ற அங்கிருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ள இரட்டைவாய்க்கால் ராணுவ சோதனை நிலையத்தை நடந்து வந்தடைந்தோம்.

அங்கு விசேடமாக விசாரிக்கப்பட்டு பின்னர் ராணுவ பஸ் வண்டியின் ஊடாக ஓமந்தை நோக்கி வந்தோம். வரும் வழி எங்கும் புதுக்குடியிருப்பு விசுவமடு தர்மபுரம் பரந்தன் கிளிநொச்சி போன்ற நகரங்கள் போரினால் சின்னாபின்னப்பட்டு கிடந்ததை காணக்கூடியதாக இருந்தது.

நூற்றுக்கணக்கானவர்கள் மிக நெரிசலாக ஏற்றப்பட்டு பயணிக்கும்போது ஒரு சிலரை தவிர அனைவரும் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய தாயிற்று.

பஸ் கனகராயன்குளம் பகுதியை அண்மித்த போது சிறுபிள்ளைகள் தண்ணீர் வேண்டும் என அழுதார்கள்.

காலை 4 மணியளவில் பஸ் வண்டி ஓமந்தை சோதனை சாவடி வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான மக்களினால் அப்பகுதி நிரம்பி காணப்பட்டது.

ராணுவ அதிகாரி ஒருவரிடம் நாங்கள் வைத்தியர்கள் எனக் கூறினோம். நித்திரை இன்றி உங்கள் வரவுக்காக காத்திருக்கிறேன் என கூறினார். எங்களை ஒரு மரத்தடியில் இருக்கும்படி கூறினார். அங்கே சிதறிக்கிடந்த பிஸ்கட் பெட்டிகளை எடுத்து விரித்து படுத்து உறங்கினோம்.

அன்று பகல் முழுவதும் பலர் எங்களை விசாரித்தார்கள் மிரட்டினார்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டார்கள். அங்கு செய்தவற்றை கூற முயற்சித்தோம். அப்படி கூறும் போது அவர்கள் கடுமையாக கோபப்பட்டார்கள். உங்கள் கதையை முடித்து விடுவோம் என சிலர் கூறினார்கள். என்ன கூற வேண்டும் எனக்கு தெரியவில்லை. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சில பதிலைக் கூறினேன். சந்தோசப்பட்டார்கள்.

விசாரணை செய்பவர் ஒரு கதிரையை தூக்கிக்கொண்டு ஒரு பகுதிக்கு செல்லுவர். அவர் கதிரையில் இருக்கும் போது அவரின் முன்னால் சிறு பிள்ளை போன்று கைகளை கட்டிய வண்ணம் இருந்து பதில் அளிக்க வேண்டி இருந்தது.

மாலை வரை பல தடவைகள் விசாரிக்கப்பட்டு பின்னர் போலீஸ் வாகனம் ஒன்றில் வவுனியா நோக்கி அனுப்பி வைக்கப்பட்டோம்...

--> Thangamuthu Sathiyamoorthy

கொத்துக் குண்டு பொதுமக்கள் மீது வீசப்பட்டது; ஒரு செய்தியாளரின் நேரடிச் சாட்சி!

3 weeks 6 days ago

31488941_194739114656715_916341822573982402_n.jpg

30171380_194739167990043_342980125483635843_o.jpg

மூலம்:- சுரேன் கார்த்திகேசு.

இதுதான் 'க்ளஸ்டர்' குண்டு எண்டாங்கள்.

நான் செய்தி சேகரிக்கச் செல்லும்போதெல்லாம் பயந்து பயந்து தான் போவன். சாவது என்பது எனக்குச் சாதாரணம். ஆனால்,

காயமடையக்கூடாது, வலி தெரியாமல் குண்டுபட்ட உடனேயே செத்திடனும். காயப்பட்டா உயிரோட இருக்கக்கூடாது. அந்த வலியைத் தாங்கமுடியாது. ஏற்கெனவே காயமடைந்தவர்களோடு கதைக்கும் போது ஏற்பட்ட இந்த மனநிலையோடுதான் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வது உண்டு.

கிளிநொச்சியை அண்டிய பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய அனைத்துத் தாக்குதல் செய்திகளையும் நான் சேகரித்திருந்தேன். விமானங்கள், முதல் குண்டு போட்ட பின்னரே அவ்விடத்தினை நோக்கி உடனடியாகச் செல்வோம். தாக்குதல் இடம்பெறும் இடத்திற்குச் சுமார் மிகக் கிட்டிய தூரத்தில் இருந்துவிட்டே விமானங்கள் சென்ற மறுகணமே அந்த இடத்திற்குள் செல்வது வழமை.

இந்தப் பதிவும் அப்படித்தான். நானும், சக ஊடகவியலாளர்களும் நேரில் பார்த்த கொத்துக்குண்டு தாக்குதல் பற்றிய பதிவு.

இறுதி யுத்தக் காலப்பகுதியில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தவில்லை எனத் தொடர்ச்சியாக நிராகரித்து வரும் அரசாங்கத்தின் பார்வைக்கு இவ் ஆதாரங்களை மீண்டும் கொண்டுவருவதோடு, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றேன். சுண்டிக்குளம் – கல்லாறு கிராமத்தை அண்டிய பிரதேசம். சுமார் 30 குடியிருப்புக்களை தொண்டு நிறுவனம் ஒன்று இடம்பெயர்ந்தோருக்காக அமைத்துக் கொடுத்திருந்தது. பெரு மழையினை சந்தித்திருந்த அன்றைய நாட்களில் அந்த முகாமைச் சுற்றி வெள்ளக்காடாகி காட்சியளித்தது.

31670914_194739211323372_542055274881301265_n.jpg

“அன்றைக்கு 29 ஆம் திகதி நவம்பர் மாதம் 2008 ஆம் ஆண்டு. விடியவெள்ளன 1.35 மணியிருக்கும். சனங்கள் அந்த நேரத்திலயும் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருக்குதுகள். எங்கட வீடு விசுவமடுவில இருந்தது. நான் வீட்ட படுத்திருந்தனான்.

அந்த நேரம் திடீர் எண்டு வந்த மிக் விமானங்கள் எனக்கு நேர முன்னுக்கு சில மைல்கள் தூரத்தில் குண்டு போட்ட சத்தம் கேட்டது. திடீரெண்டு பெரிய குண்டுச்சத்தங்கள் கேட்க வீட்டில் எல்லாரும் எழும்பிற்றினம். மிக் விமானங்களின் சத்தம் அப்பிடி. வெளிச்சக்குண்டுகளை வீசினதால தருமபுரம், விசுமவடு எல்லாம் பகல் போல இருந்தது. அவ்வளவு வெளிச்சம். விமானங்கள் மிக கிட்டத்தில எங்கயோதான் குண்டுகள் போடுது எண்டத என்னால் ஊகிக்க முடிஞ்சது. அந்தளவுக்கு விமானங்களின் இரைச்சல் ஒருவித பயத்தை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. பயம் இருந்தாலும் என்ர வேலையச் செய்யவேணும் எண்டு நினைச்சுக்கொண்டு, மோட்டர் சயிக்கிளில விசுவமடுவில் இருந்து சுண்டுக்குளம் சந்தி நோக்கிப் போனன்.

நான் போற திசையிலயே விமானங்கள் தாக்குதல்கள் நடத்துவது எனக்குத் தெரிஞ்சது. அதுமட்டுமல்லாம, தாக்குதல் நடக்கிற இடம், இடம்பெயர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்துவாற முகாம். இந்தத் தாக்குதலில சனங்களுக்குத்தான் அதிக பாதிப்புக்கள் வந்திருக்கும் என்றே என்ர மனம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், அந்த இருட்டு நேரத்தில எவ்வளவு தூரத்தில் தாக்குதல் நடக்குது எண்டு எனக்குத் தெரியேல்ல. இரெண்டாவது முறை குண்டுத் தாக்குதல் நடக்கேக்க நான் சுண்டிக்குளம் சந்திக்குப் போயிற்றன். 'றோட்டில' ஒரு சனம் கூட இல்லை. இந்தத் தாக்குதலில யாரும் காயப்பட்டிருந்தால் கிளிநொச்சி – தருமபுரம் ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு வரவேணும். எனவே நான் தருமபுரம் ஆஸ்பத்திரிக்குப் போனன்.

ஆனால் அங்க காயப்பட்டவங்கள் யாரும் வரேல்ல எண்டு ஆஸ்பத்திரில வேலை செய்த ஆக்கள் எனக்கு சொல்லிச்சினம். அவையளும் ஆஸ்பத்திரி வாசலிலதான் நிற்கினம். நான் திரும்பி சுண்டிக்குளம் சந்தியால் கல்லாறு பக்கமா என்ர மோட்டர் சயிக்கிள்ல போய்க்கொண்டிருந்தன்.

அந்த நேரம் பார்த்து மோட்டர் சயிக்கிளுக்கு மண்ணெண்ணெய் முடிஞ்சுது. அப்பிடியே நிண்டிட்டுது. அந்த நேரத்தில யாரிட்ட உதவி கேட்கிறது..? உதவி செய்யிற மனமிருந்தாலும், மருந்துக்கு கூட மண்ணெண்ணெய் யாரிட்டயும் இருக்கேல்ல. மோட்டார் சயிக்கிள சரிச்சா கொஞ்சத்தூரம் ஓடலாம். நான் யோசிச்சிக்கொண்டு நிற்க, இன்னொரு மோட்டர் சயிக்கிள் தாக்குதல் நடந்த பக்கமிருந்து வேகமாக வந்தது.

அந்த மோட்டார் சயிக்கிளில பின்னுக்கு இருந்தவர் கத்தி அழுதுகொண்டு போனார். நான் உடன அவயள பின்தொடர்ந்து போய், ”அண்ணை எங்க கிபிர் அடிச்சது? காயப்பட்ட ஆக்கள் இருக்கினமோ” என்று கேட்டன். ” எனக்கு தெரியேல்லை. ஆனா நிறைய சனம் கத்துற சத்தம் மட்டும் கேட்குது”. அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சது காயப்பட்டு, 'றோட்டால' ஓடிவந்த ஒராளைத்தான் அந்த மோட்டர் சயிக்கிளில ஏத்திக்கொண்டு வாறார் எண்டு. உடன ஆஸ்பத்திரிக்குப் போனால் காயமடைஞ்ச ஆக்களின்ர முழுவிபரத்தையும் எடுக்கலாம் எண்டு யோசிச்சு, அங்க போனன். 

“எனக்குப் பெரிய காயம் இல்லை. ஆனால் முகாமுக்குள்ள தான் குண்டுகள் விழுந்தது. அதில் நிறைய பேர் எங்க ஓடினாங்கள் எண்டும் தெரியாது. முகாமை சுற்றி வாய்க்கால் இருக்கு. கழுத்தளவு தண்ணிக்குள்ளால வரமுடியாமல் காயமடைஞ்ச ஆக்கள் அங்க இருக்கினம். நான் ஒருமாதிரி தப்பியோடி 'றோட்டுக்கு' வந்தே இந்த மோட்டார் சயிக்கிளில ஆஸ்பத்திரிக்கு வந்தன்,” என்றார் கத்திக்கொண்டு வந்தவர்.

நான் நினைக்கிறன், இந்தளவு நிகழ்வும் விமானங்கள் சென்று 15 நிமிடங்களுக்குள் நடந்திருக்கும். அதுக்குப் பிறகுதான் ரெண்டு அம்புலன்ஸ் அனுப்பி காயப்பட்ட ஆக்கள ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தது. இரவு எங்களால மிக் அடிச்ச இடத்துக்குப் போக முடியேல்ல. நானும் லோகீசனும் ( இறுதிப் போர் வேளையில் பணியாற்றிய இன்னொரு பத்திரிகையாளர்) காலமதான் கல்லாறு பகுதிக்கு போனம்.

அது உழவனூர் எண்டுற கிராமத்தின்ர பின்பகுதி. அதுக்கு அடுத்த கல்லாறு கிராமம். இடம்பெயர்ந்த ஆக்களுக்கு அப்பத்தான் வீடுகள் கட்டிக் குடுத்திருக்கினம். சில ஆக்கள் கட்டிக்கொண்டிருக்கினம். அதுக்குள்ள தான் மிக் குண்டு போட்டது. சில குண்டுகள் வெடிச்சாலும் அதின்ர பகுதிகள் சிதறிப் போய் கிடந்தது. அதில ஒரு குண்டு கொட்டிலுக்கு முன்னால நிலத்துக்குள்ள அரைவாசி இறங்கியிருந்தது. மற்றது சிதறியிருந்தது. அதை நாங்கள் போட்டோ எடுக்கேக்கத்தான். அந்த இடத்தில் நிண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்களைச் சேர்ந்த போராளிகள், “இதுதான் 'க்ளஸ்டர்' குண்டு (cluster bomb) எண்டாங்கள். இது சண்டைகளில பயன்படுத்த தடை” எண்டும் சொல்லிக் கொண்டிருந்தாங்கள்.

கிளிநொச்சி ஜெயந்திநகர் அருகாமையில் அமைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் முக்கிய முகாம் மீதான தாக்குதலின்போது விமானப்படையினரின் தளபதியாக இருந்த றொசான் குணதிலகவே, சுண்டிக்குளம் – கல்லாறு பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கும் பொறுப்பு வகிந்திருந்தார் என்று பின்னர் அறிந்துகொண்டேன். இவர் ஏற்கனவே பிரித்தானிய விமானி ஒருவருடன் சேர்ந்து பிரமந்தனாறு கிராமப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும் அறியக்கிடைத்தது.

கொத்துக்குண்டுகள் பல நாடுகளிலும் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. 2008 ஆம் ஆண்டு மே மாதம் 30 திகதி டப்ளின் தீர்ப்பாயத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி (Convention on Cluster Munitions ) இரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கவோ, விற்பனைசெய்யவோ, களஞ்சியப்படுத்தவோ, பயன்படுத்தவோ தடையுத்தரவு அறிவிக்கப்பட்டது. அதனையும் மீறி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், விநியோகம் செய்தால் மனித குலத்துக்கு எதிரான குற்றமாக அது கருதப்படும். இவ்வுடன்படிக்கையை ஏற்று உலகின் 108 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த சர்வதேச சட்டங்களையெல்லாம் மீறித்தான் இலங்கை இராணுவம் இறுதிப் போரின்போது பொதுமக்கள் மீது கொத்துக் குண்டுகளைப் பொழிந்தது.

மிதிவெடி அகற்றும் பிரிவினர் மீட்ட கொத்துக்குண்டின் பாகங்களை 'கார்டியன்' வெளியிட்ட ஆதாரம் இதுதான்: 

https://www.theguardian.com/…/cluster-bombs-used-sri-lanka-… ).

இவ்வாதாரங்களை கடந்த காலங்களில் பல சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்தபோதும், “யுத்தத்தின் போது அரச படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை. கொத்துக்குண்டுகளை பாவித்தமைக்கான சர்வதேச குற்றச்சாட்டுக்களை நாம் நிராகரித்திருந்தோம். கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியமைக்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை. கொத்துக்குண்டுகளை நாம் இனிவரும் காலங்களிலும் பயன்படுத்தப் போவதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்," என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன ஊடகங்களிற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இவ்வளவு ஆதாரங்களை நாம் முன்வைத்தும், உலகிற்கு ஈழத்தில் இடம்பெற்றது சாட்சியமற்ற போர். இதுவே சிரியாவாக இருந்திருந்தால்…! சிரியா போல எங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேசமயப்படவில்லை என்ற கவலையோடு அடுத்த பகுதியை எழுதத் தொடங்குகின்றேன். 

***

மூலம்:- சுரேன் கார்த்திகேசு.


https://www.samaraivu.com/2018/05/blog-post_68.html

மாத்தளன் மருத்துவமனை விடுபட்டது குறித்து மருத்துவர் வரதராசா!

3 weeks 6 days ago

எழுத்து மூலம்:- செய்தியாளர், சுரேன் கார்த்திகேசு.

(ஏப்பிரல்-20-2018 இல் எழுதப்பட்டது)

வைத்தியர் வரதராசா துரைராசா அவர்களின் அர்ப்பணிப்புமிக்க அன்றையநாள்!(ஏப்பிரல்-20-2009)

“மாத்தளனில் ஆமியாம்.” “ஆஸ்பத்திரியடியில நிக்கிறானாம்” “நிறைய சனம் செத்தும் போச்சாம், சனம் நிறைய உள்ளே (சிங்களப் படையினரிடம்) போயிட்டுதாம்,” என்று எம் செவிகளுக்குக் கிடைத்த அந்தச் செய்தியோடு 2009,ஏப்பிரல் 20 ஆம் திகதி விடிந்தது. 

30743295_1651884518236646_399176515348070400_o.jpg


முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு நானும் மதியும் ஓடிப்போனோம். காயப்பட்டவர்களை கடலால் இறக்கி, அங்கிருந்து வாகனங்களில் கொண்டு வந்திருந்தார்கள். காயமடைந்தவர்களை இறக்கி இறக்கி என்னால ஏலாது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் இடம்போதாமையால் முன்பக்க காணியில் உள்ள மரங்களுக்குக் கீழே 'தறப்பாள்' விரிக்கப்பட்டு, அதில் காயமடைந்தவர்களைக் கிடத்தினோம். அன்று காலையில் எம்மால் எந்த விபரங்களையும் எடுக்கக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. அன்று மாலையில் எம்மால் முடிந்த வரையில் காயமடைந்தவர்களின் விபரங்கள் மற்றும் இறந்தவர்களின் விபரங்களைச் சேகரித்தோம். முழுமையாக விபரங்களை பத்திரிகையில் வெளியிடமுடியவில்லை.

முல்லைத்தீவு நகரப் பகுதிக்கு அருகருகே அமைந்துள்ள முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன் ஆகிய கடற்கரைக் கிராமங்களே 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்த காலப்பகுதியில் பெருமளவு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட பிரதேசங்களாகும். இன்றைய நாளில் , ஏப்பிரல்-20,2009 அன்று 1983 இற்கு பின்னர் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்திருந்தனர். எறிகணைத் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீண்டும் சுட்டும், பதுங்கு குழிகளில் இருந்த மக்கள் மீது கைக்குண்டுகளை வீசியும் படுகொலை செய்த இன்றைய நாளில் நான் சந்தித்த முதலாவது மிகப்பெரிய அவலம் இதுவேயாகும்.

இன்று ஏப்பிரல்-20. அதன் நினைவுகளோடு தான் இன்று நான் வேலைக்குப் போனேன். ஏதாவது எழுதுவம் என்று நினைக்கும் பொழுது தான் “வைத்தியர் வரதராஜா துரைராசா அவர்களின் நினைவு வந்தது”. “படையினர் புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு மிகக்கிட்டிய தூரத்தில் நிற்கும் போது அவரும் இன்னொரு மருத்துவ பணியாளரும் வலைஞர்மடம் பகுதியில் இருந்து கடற்கரை வழியாக புதுமாத்தளன் வைத்தியசாலைக்குச் சென்று அங்கிருந்தவர்களையும் முக்கியமான மருந்துப்பொருட்களையும் மீட்டு வந்தவர்.

அவரிடம் இன்று பேசியபொழுது மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பான பணிகளையும் அவர்கள் தங்கள் குடும்பங்களைப் பற்றி நினைக்காமல் காயமடைந்துவரும் மக்களுக்குச் சிகிச்சை அளித்த அத்தனை பேரும் மதிப்புக்குரியவர்கள் என்று சக மருத்துவப் பணியாளர்களின் பெயர்களைச் சொல்லி பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவருடைய முழுமையான பகிர்வு பிறிதொரு சமயத்தில் வெளிவரும்.

அன்றைய நாளில் நடந்தது என்ன? வைத்தியர் வரதாராசா பின்வருமாறு கூறுகின்றார்:

“படையினர் எங்களைக் கண்டுவிட்டனர். எங்களை நோக்கி சுட்டுக்கொண்டிருந்தனர். நான் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடி, பனைமரங்களுக்குள் ஒளித்து ஒளித்தே புதுமாத்தளன் வைத்தியசாலைக்குள் ஓடினேன்.” 

இவ்வாறு இறுதி யுத்தகாலப்பகுதியில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்ட வைத்தியர் வரதராசா துரைராசா இன்று தெரிவித்துள்ளார். இவரே முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளராக அந்நேரத்தில் கடமையாற்றியவர். தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் இவர் எம்முடன் அன்றைய நாட்களில் நடந்த கொடூர நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

வலைஞர்மடம் பகுதியில் தான் நாங்கள் தங்கியிருந்தோம். எங்களுக்கு அன்று காலை, "மாத்தளனில் ஆமி வந்திட்டான் என்றும் நடக்கக்கூடிய நோயாளர்கள் மற்றும் பல மருத்துவ பணியாளர்களும் ஆமிக்குள்ள போயிட்டினமாம்” என்று தகவல் வந்தது. 

"நான் வெளிக்கிட்டன். அங்க ஒருக்கா போவம் என்று. என்னை ஒருத்தரும் விடவில்லை. காலை 9.30 மணிக்குத் தான் எப்படியாவது போய்ப்பார்ப்பம் என்று நானும் இன்னொரு மருத்துவ பணியாளரும் கடற்கரை வழியாகப் புதுமாத்தளன் பகுதிக்குச் சென்றோம். வைத்தியசாலைக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும் பொழுது திடீரென்று படையினர் எம்மை நோக்கிச் சரமாரியாகச் சுட்டனர்.” 

“நாங்கள் வாகனத்தை விட்டு இறங்கி அருகில் உள்ள பனைமரங்களுக்குள் ஒளித்து ஒளித்து வைத்தியசாலைக்குள்ளே ஓடிட்டம். அங்கே பலரது உயிரற்ற உடல்களுக்கு மத்தியில் காயப்பட்டவர்களின் முனகல் சத்தங்கள் ஒருபுறம், மறுபுறத்தே இடையிடையே சண்டையும் நடைபெறுகிறது. வைத்திசாலை சன்னலால் எட்டிப்பார்த்தால் நூறு மீற்றரில் ஆமி நிக்கிறான். வைத்தியசாலையில் இருந்த காயமடைந்தவர்களுக்குச் சரியாகச் சிகிச்சை அவ்விடத்தில் வழங்க முடியவில்லை. அவர்களை எம்முடன் வரவிரும்பியவர்களையும் முக்கியமான மருந்துப் பொருட்களையும் வைத்தியசாலையில் இருந்த பிறிதொரு வாகனத்தில் ஏற்றினோம். வாகனம் வெளியே எடுத்தால் ஆமி தாக்குதல் நடத்துவானோ அல்லது இல்லையோ எங்களுக்குத் தெரியாது. ஏதோ! கண் இமைக்கும் நேரத்தில் வாகனத்தை வைத்தியசாலை முன்புறமாக செலுத்தி அருகில் உள்ள ஒழுங்கை ஊடாக கடற்கரைக்குச் சென்று முள்ளிவாய்க்கால் சென்றடைந்தோம். அன்றைய நாளில் மக்களுடைய இழப்புத்தொகையை என்னால் சரியாகச் சொல்லமுடியாமல் இருக்கிறது. எல்லா இடமும் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள். அன்று எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலையிலும் மிகுந்த சிரமப்பட்டு பலரது உயிர்களைக் காப்பாற்றியிருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது." இவ்வாறு மருத்துவர் பதிவுசெய்தார்.

https://www.samaraivu.com/2018/05/blog-post_4.html

இந்தக் காணொளிச் சான்று எடுக்கும்போது ஏற்பட்ட அழிவுகளின் சாட்சி!

3 weeks 6 days ago

இந்தக் கானொளியை 02.02.2009அன்று புதுக்குடியிருப்பு வைத்திய சாலை முன்பாக காலை 10.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எனது Sony170 Camera மூலம் ஒளிப்பதிவு செய்தேன். எனது ஊடக வாழ்க்கையில் மிகவும் ஆபத்தானதும் எனது வாழ் நாளில் மறக்க முடியாததும் தெய்வாதீனமாக நான் உயிர் தப்பியதுமான இந்தக் காணொளியை இன்றைய நாளில் நினைத்துப் பார்க்கிறேன்.

Puthukkudiyiruppu+hospital2.jpg


ஏற்கெனவே உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுக்கொண்டிருந்தனர். 

06.02.2007 அன்று நள்ளிரவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை நோக்கி சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதன்போது வைத்திய சாலையின் நோயாளர் விடுதிகளில் வீழ்ந்து வெடித்த எறிகணைகளால் ஏற்கனவே காயமடைந்திருந்த பொதுமக்கள் 9 பேர் வைத்திய சாலைக்குள்ளேயே கொல்லப்பட்டதுடன், பலர் மீண்டும் பாரிய காயங்களுக்கு உள்ளாகினர். 

இந்தக் காலப்பகுதியில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஒன்று மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு தரைவழிப்பாதை நோயாளர் காவுவண்டிகளுக்காகத் திறந்து விட்டிருந்தது. பின்னர் அது ஓரிரு நாட்களில் மூடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் எனது ஊடகப்பணி தொடர்கிறது. 6 ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களையும் காயமடைந்தவர்களையும், சேதமடைந்த வைத்தியசாலையையும் 7ஆம் திகதி காலை ஒளிப்பதிவு செய்து, அங்கே காயமடைந்த மக்களிடம் சில செவ்விகளையும் எடுத்துக்கொண்டு, வைத்தியசாலைக்கு வெளியில் வைத்தியசாலை நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தேன். 

புதுக்குடியிருப்பு - முல்லை வீதி வெறிச்சோடி காணப்படுகிறது. வைத்தியசாலைக்கு அருகிருந்த வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டிருக்கின்றன. வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக்குறைவாக இருக்கிறது. தொடர் எறிகணைத் தாக்குதல்களால் வேறு இடங்களில் காயமடையும் பொது மக்களை மீட்டு வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களும் ICRC தொண்டு நிறுவனப் பணியாளர்களும் வீதிகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். 

இரவு மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலால் வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிட ICRC தொண்டு நிறுவன பிரதிநிதிகள் வைத்தியசாலைக்குள் நின்றுகொண்டிருக்கின்றனர். அந்த வேளை எனது நண்பன் அலைமகன் என்னிடம் ஒரு ஆவணத்தை தருவதற்காக வைத்தியசாலை நோக்கி என்னைத்தேடி வந்து என்னைச் சந்தித்து இருவரும் வைத்தியசாலை நுழைவாயிலில் கதைத்துக்கொண்டிருக்கிறோம். 

நீண்ட நாடகள் நாம் இருவரும் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அன்று இருவரும் சந்தித்தவுடன் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டு, அவர் நின்ற இடங்கள் பற்றி அவரிடம் விசாரிக்கிறேன். அவரும் அதற்கான விளக்கத்தைச் சொல்லிக்கொண்டு என்னுடைய பக்கம் எப்படி என விசாரித்தவர்களாக இருவரும் கதைத்துக் கொண்டிருக்கிறோம். 

அப்போது வைத்தியசாலைக்கு எதிராக இருந்த தீபன் மருந்தகத்திலிருந்து என்னுடன் கதைத்துக்கொண்டிருக்கும் எனது நண்பனை இன்னொருவர் அழைக்கிறார். அப்போது அலைமகன் என்னிடத்தில், "அண்ண இவன் தீபன், என்னைக் கூப்பிடுறான். நாங்கள் இரண்டு பேரும் வித்தியானந்தா கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தோம், கண்டு கனகாலம். கூப்பிடுறான் நான் ஒருக்கால் கதைச்சுப்போட்டு வாறன்," என்ற படி வைத்தியசலை நுழைவாயிலில் இருந்து வீதியைக் கடக்கிறான். 

நானும் சரி நீங்கள் கதைச்சுப்போட்டு வாங்கோ நான் உள்ளுக்குத்தான் நிற்பேன் என்றவாறு என்னுடைய ஒளிப்பதிவு கருவியை எடுத்து வெறிச்சோடிக்கிடக்கும் முல்லை - புதுக்குடியிருப்பு வீதியை Zoom செய்து படமெடுத்துக் கொண்டிருக்கிறேன். வைத்தியசலை நுழைவயிலில் இருக்கின்ற மதவு மேலே ஏறி நின்று ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பளீர் என்ற சத்தம் வீதியின் மதவில் நின்ற என்னை தூக்கி எறிந்ததைப்போன்ற உணர்வு. என்ன நடந்தது என ஊகிக்க முன்னர் அடுத்த எறிகணையும் அதே இடத்தில் வீழ்ந்து வெடிக்கிறது. எங்கும் புகை மூட்டம். நான் வீதியின் அருகிருந்த கழிவு வாய்க்காலுக்குள் குந்திக்கொண்டிருக்கிறேன். வீழ்ந்து வெடித்த எறிகணை சிதறல்கள் அருகிலிருந்த மதில் சுவர்களிலும் மரங்களிலும் பட்டு என்மீது விழுகின்றன. 

ஒரு கணப்பொழுது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இரண்டு செல்களும் வீழ்ந்து வெடித்து மூன்று நிமிடங்கள் கழித்து எழுந்து பார்க்கிறேன். நான் நின்ற வீதியின் மறுபக்கத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் பல வர்த்தகநிலையங்கள் புகை மூட்டத்துக்குள் எரிந்து கொண்டிருக்கின்றன. எறிகணை வீழ்ந்து வெடித்த இடத்திற்கும் நான் நின்றதற்குமான தூரம் 10 மீற்றருக்கும் குறைவு. எந்தச் சத்தமும் இல்லை எனது ஒளிப்பதிவுக்கருவி ஒளிப்பதிவு செய்தபடியே இருக்கிறது. கழிவுவாய்க்காலிற்குள் இருந்து எழுந்து வைத்தியசாலைக்குள் ஓடுகிறேன். வைத்தியசலைக்குள் நின்றவர்கள் எல்லோரும் தரையில் படுத்துக்கிடக்கின்றனர். அதையும் ஒளிப்படம் எடுக்கிறேன். 

அப்போது வைத்தியசாலைக்குள் தரைகளில் படுத்து பாதுகாப்புத் தேடிக்கொண்ட தொண்டு நிறுவனப் பணியாளர்கள் எழுந்து எறிகணை வீழ்ந்த திசை நோக்கி ஓடுகின்றனர். வைத்தியசாலை பரபரப்பாகிறது. சம்பவங்களைத் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்துகொண்டே இருக்கிறேன். 

ஒளிப்பதிவு செய்தபடி எறிகணை வீழ்ந்த இடத்துக்கு ஓடுகிறேன். தீபன் மருந்தகத்தில் இருந்த தீபனின் தாயார் படுகாயத்துடன் பாய் ஒன்றில் வைத்து தூக்கிவரப்படுகிறார். தீபனின் தந்தை கால் முறிந்தபடி கிடக்க அவரையும் தூக்கிவருகின்றனர். மருந்தகத்திற்கு அருகிலிருந்த சிகை அலங்கரிப்பு நிலையத்தில் சிகை அலங்கரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரும் சிகை அலங்கரிக்க வந்த ஒருவரும் இறந்து கிடக்கின்றனர். 

காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குள் எடுத்து வந்து வைத்தியசாலையின் வாயிலில் வைத்து மருத்துவம் நடக்கிறது. இறந்தவர்களின் உடல்களையும் அடையாளம் காட்டி சிலர் கதைக்கின்றனர். இறந்த உடல்களை வைத்தியசாலைக்குள் எடுத்து வந்ததன் பின்னர் ஒருவர் எறிகணை வீழ்ந்து வெடித்த இடதிலிருந்து, "அண்ணை, இன்னொன்றும் கிடக்கு," என்றவாறு கட்டிட இடிபாடுகளை நீக்குகிறார். 

யாருடைய உடல் உன்று ஊகிக்க முடியாத அளவுக்கு அந்த உடல் சிதைந்து போயிருக்கிறது. அப்போது எல்லோரும் இது யார் என வினவுகின்றனர். நானும் எனது ஒளிப்பதிவு கருவியை நிறுத்திவிட்டு உடலின் அருகில் சென்று பார்க்கிறேன். அது நீண்ட நாட்களின் பின்னர் என்னை சந்திக்க வந்த எனது நண்பன் அலைமகன்.

அவன் இறுதியாக அணிந்திருந்த பச்சை நிற சேட் அவனை அடையாளப்படுத்தியது. அதன் பின்னர் அவனது உடலை வீட்டாருக்கு அனுப்பிவிட்டு நண்பனை பிரிந்த சோகத்தோடும் எனது வாழ் நாளில் மறக்கமுடியாத அனுபவத்தோடும் அலுவலகம் திரும்பினேன்.

நாங்கள் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டபோது எந்த வெளிநாட்டு ஊடகங்களும் முள்ளிவாய்க்காலை எட்டிப்பார்க்கக் கூட இல்லை.

***

குறிப்பு:- சிவகரன் (Siva Karan) என்னும் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

மூலப்பதிவு:- திரு.சிவகரன். 

https://www.samaraivu.com/2018/05/blog-post_41.html

வாழ்க்கையில் மறக்கமுடியாத மனிதர்களை 2009 இதே நாளில்...

3 weeks 6 days ago

வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களை 2009 இதே நாளில் தான் இறுதியாக சந்தித்தேன்.

மூலம்:- புவியரசன்.


2009 மே 14 மதியம் ஒரு மணிக்குப்பின்னர் இறுதியாக எனது போர்க்கால ஊடகப்பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம். வழமை போலவே மக்கள் மீதான தாக்குதல்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் வீடியோ எடுத்துவிட்டு, அதனை வெளியில் அனுப்புவதற்காக முகாமுக்குச் செல்கிறேன்.

மக்கள் மணித்தியாலயத்திற்கு மணித்தியாலம் எவ்வாறு தமது பதுங்கு குழிகளை எப்படி இடம் மாற்றினார்களோ அதே போலத்தான் விடுதலைப்புலிகளும் தமது இடங்களை மாற்ற வேண்டிய நிலை.


ஒவ்வொரு நாளும் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 13ஆம் திகதி இடம்பெற்ற எறிகணைக் களஞ்சிய வெடி விபத்தில் என்னுடைய வீடும் அதில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்களும் எரிந்துபோயின. அதை இந்த இடதில் சொல்வது விடயத்தை நீட்டிச்செல்லும் என்பதால் அதனை இதில் சொல்லவில்லை.

எனது வீடு எரிந்ததால் எனக்கு மாற்றி உடுத்துவதற்கு எந்த உடையும் இல்லை. ஒரு சறம் மட்டுமே மிச்சம். அந்த சாறத்துடன் முகாமுக்கு செல்கிறேன். முகாமில் (புலிகளின் குரல் பொறுப்பாளர்) யவான் அண்ணர் என்னைப் பார்த்ததும், "என்னடா காயப்பட்டிட்டியோ?.. என்ன?.." என்றார். 

நான், "இல்லை அண்ணை, என்ர வீடு நேற்று எரிஞ்சு போச்சு," என்றேன். 

"அப்ப வீட்ட யாருக்கும் பிரச்சினையோ? அம்மா எப்படி இருக்கிறா?" 

"இல்லை அண்ணை, ஆட்களுக்கு ஒண்டும் பிரச்சினை இல்லை. வீடு தான் எரிஞ்சுபோச்சு..." 

என்றவாறு நான் வேலையை கவனிக்கத் தொடங்கினேன். அப்போது யவான் அண்ணர் அருகிலிருந்த புலித்தேவன் அண்ணர் அவர்களைப்பார்த்து, 

"புலித்தேவன், புவியரசனுக்கு ஏதாவது ஒழுங்கு செய்து கொடுங்கோ," என்கிறார். 

அவரும் அதற்கு, "சரி, பார்ப்போம்," 

என்று தலை அசைக்க... என்னுடைய இறுதி நாள் வேலையை தொடங்குகிறேன்...

***

குறிப்பு:- திரு.சிவகரனின் (Siva Karan) முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

சமராய்வு
No image previewவாழ்க்கையில் மறக்கமுடியாத மனிதர்களை 2009 இதே நாளில்...
வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களை 2009 இதே நாளில் தான் இறுதியாக சந்தித்தேன். மூலம்:- புவியரசன். 2009 மே 14 மதியம் ஒரு மணிக்குப்...

அவள் எனது செஞ்சோலைச் சகோதரி: முள்ளிவாய்க்கால் நினைவுப் பகிர்வு!

3 weeks 6 days ago

வருடங்கள் கடந்தாலும் குத்திக்கிழிக்கும் ரணங்களாக ஈழத்தின் இறுதிப்போர் அமைந்து விட்டது. வன்முறையால் பறிக்கப்பட்ட உயிர்களுக்கான நிரந்தரத் தீர்வுக்காய் இரவும் பகலும் தனிமையில் விம்மும் எங்கள் கண்ணீரின் நிறுவைகள் இன்னும்? போதவில்லையா?

எப்படிக் கடந்து போகமுடியும்? இழந்துபோனவை இரத்தமும் சதையுமாய் உயிரோடு உயிரூட்டிய உயிர்களல்லவா? எத்தனை விதமான சாவுகள் கண்டோம். பதுங்குகுழியை மூடியது குண்டுகள்.

குற்றிகள் பாறிண்டு பிரண்டன. பாதுகாப்பு வலையங்கள் என அறிவித்த இடங்களில் தானே பதுங்குகுழிகளை அமைத்தோம். பிறகெப்படி குண்டுகளை கிபீர் விமானங்கள் கொட்டின? பாதுகாப்பு இடங்களை நோக்கி ஏன் ஆட்டிலெறித் தாக்குதல்கள்?

பதுங்குகுழிகளுக்குள் சமாதியாகியோர் ஆயிரமாயிரம். மூடிய குழிகளைக் கிண்டிக்கிளறி எடுத்து மீட்கப்பட்ட, மூச்சுத் திணறியோரில் நானும் ஒருத்தி.

எந்த ஒரு காயமும் இல்லாமல் மயக்கத்தில் கிடந்த என் மகன் மயக்கம் தெளிந்து எழுந்தபோது மகிழ்ச்சி மேலீட்டால் “அப்பா ” என்ற ஒற்றைச் சொல்லுடன் ஏன் உயிர் விட்டான்? தீராத வேதனையை ஏன் எனக்குள் தந்தான்?

நடமாடும் பிணமானதே என் வாழ்வு.

அக்கினிக் குஞ்சுகளில் சிறிது பெரிது உண்டோ? உயிரிலும் சின்ன உயிர் பெரிய உயிருண்டோ? காலங்கள் ஓடினாலும் வளராத தளிர்முகத்தின் கெஞ்சல்களும் குறும்புகளும் இரத்தத்தை சாகடிக்குதே.

பதுங்குகுழி அமைக்க முன்னரே வெறும் பதுங்குகுழிக்குள் இறந்தவர் தொகை மடங்கு. மரங்களில் பறவைகள் தொங்குவது போல மனித அங்கங்கள் தசைத் துண்டங்கள் தொங்கியதை எப்படி மறப்பது. பாதுகாப்புக்காய் எழுந்து ஓடும்போது “சலுக் சலுக்” என கால்களைப் புதைத்த தசைத் துண்டங்கள் யாருடையவை? 

சாணியை மிதித்தது போல் தசைத்துண்டங்களை மிதித்து ஓடினோம். உடலில் உயிர் சுமந்த பிணங்களாய் ஆயிரம் ஆயிரம் அவலங்களை மன மயானத்தில் திரும்பத் திரும்ப தகனம் செய்யும் நடமாடும் சுடலையர் ஆனோம்.

இறந்தவரோடு இறக்காமல் எஞ்சிய எச்சங்களாய் நடந்தவற்றை சொல்லி இறந்தவரிற்கு நீதிகோரி நீதியை நிலைநாட்ட எஞ்சினோமா? தலைபாறி விழுந்த தென்னைகளும் வேரோடு சாய்ந்த விருட்சங்களும் கணப்பொழுதில் உருக்குலைந்த காட்சிகளும் கண்ட சாட்சியர் நாங்கள்.

முள்ளிவாய்க்கால் கரையோர வீதியால் இறப்பர் சிலிப்பருடன் கொதிகொதிக்கும் வெயிலில் நடந்தொருநாள் வந்தேன். என்னுடன் முன்னும் பின்னும் பலர் வந்தனர். சிலர் தெரிந்தவர்கள். எங்களைக் கடந்து ஒரு உழவு இயந்திரத்தில் காயப்பட்ட பலரை ஏற்றியபடி சென்று கொண்டிருந்தது.

பின்னால் காயப்பட்ட சிலர் விழுவதுபோல் தொங்கிக் கொண்டிருந்தார்கள். கைக்குழந்தையையும் அணைத்தபடி “அண்ணோய்…. அண்ணோய்…." எனக் கத்திக்கொண்டு என்னை மறந்து ஓடினேன். என்னுடன் இன்னொரு பெண்ணும் கத்தியபடி என்னருகில் ஓடி வந்தாள். எறிகணைகள் தலையை உரசுவது போல் கூவிக்கொண்டு கடற்கரைகளில் வெடித்தன.

பிரக்ஞை அற்று ஓடினோம், கத்தியபடி.

எங்கள் கூவல்கள் கதறல்கள் ஓட்டுநருக்குக் கேட்க வாய்ப்பில்லை. அவன் ஓட்டுநர் அவதானிப்புக் கண்ணாடியில் பார்த்துவிட்டு உழவியந்திரத்தை நிறுத்தினான். ”அண்ணா, இஞ்ச பின்னுக்கு ஆட்கள் கீழ விழப்போகினம்,” எனக் கத்தினேன். என்னோடு வந்த பெண்ணும் கத்தினாள்.

“நீங்களும் சாகப் போறியளோ? நானும் எத்தினை பேரைத்தான் செத்தபின் தூக்குவது? இதெல்லாம் செத்த பிணங்கள். ஓடிப்போய் உயிர் தப்புங்கோ,” எனக்கத்திப் பேசிவிட்டு உழவியந்திரத்தை நகர்த்தினான்.

'ஆமி' சரமாரியாகப் பொதுமக்கள் நடமாடும் இடங்கள் மீது எறிகணைகளை ஏவத் தொடங்கினான். "அக்கா இஞ்ச வா…,” எனக் கையில் பிடித்திழுத்து பதுங்குகுழிக்குள் இறக்கினாள் ஆரணி. அவள் எனது செஞ்சோலைச் சகோதரி. முழக்கங்கள் குறைந்ததும் தேனீரூற்றித் தந்தாள். "வேண்டாமடா, இப்ப தான் குடிச்சனான்," எனப் பொய் உரைத்தேன்.

"என்ர அக்காவுக்குப் பொய் சொல்லத் தெரியாது," எனச் சொல்லி, தேனீருடன் ரொட்டியும் தந்தாள். அமிர்தமாய் இருந்தது. எனது பையில் இருந்து எனக்கு சலுகை அடிப்படையில் கிடைத்த திரிபோசா பைகளில் ஒன்றை அவள், "வேண்டாம், வேண்டாம்," என்று மறுத்தபோதும் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். 

சாப்பிட்டது உற்சாகமாக இருந்தது. என் வரவுக்காய் காத்திருக்கும் எனக்காக எஞ்சியிருந்த இரண்டு உயிர்களின் முகங்களைக் காண ஓட்டமும் நடையுமாக இருப்பிடம் நோக்கி நகர்ந்தேன்.

- வன்னிமகள், எஸ்.கே.சஞ்சிகா. -

குறிப்பு:- முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

https://www.samaraivu.com/2018/05/blog-post_26.html

வலிகளைச் சுமந்த அந்த நாட்கள்: நினைவுப் பகிர்வு!

3 weeks 6 days ago

வீரம் விளைந்த வன்னி மண்ணில் வலிகள் சுமந்த அந்த நாட்களை, அந்த ஒவ்வொரு மணித் துளிகளையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

வெள்ளையரிடம் அடிபணிய மறுத்த பண்டாரவன்னியன் காக்கை வன்னியனின் காட்டிக் கொடுப்பினால் வெள்ளையரால் தோற்கடிக்கப்பட்டதுதான் வன்னிராச்சியம் என்கின்றது வரலாறு.

தங்களிடம் அடிபணிய மறுத்த தமிழர் சேனையை உலக நாடுகளின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களின் துணையோடும் வெற்றிகொண்டதாக சிங்களம் மமதையில் துள்ளுகின்றது.

இந்த வெற்றியைப் பெறுவதற்காக சிங்களம் அரங்கேற்றிய கொடூரம், மனித இனம் என்றுமே சந்தித்திருக்காதது.

அந்த அவலங்களின் கதையினை உங்களிடம் சொல்லவும் என்னிடம் சொற்கள் இல்லை. அந்த நாட்களை நினைவு மீட்கையில் நெஞ்சம் உறைகிறது.

தமிழன் குருதி உறைந்த அந்த மண்ணில் எத்தனை தமிழர்களின் உயிர்கள் உறைந்து போயின. வன்னியெங்கும் இப்போது தமிழர்களின் உடலங்கள் விதைக்கப்பட்ட பூமியாக மாறியிருக்கின்றது. எங்களின் குருதி தோய்ந்த அந்த மண்ணில் இன்று சப்பாத்துக் கால்கள் சுதந்திரமாக நடமாடித் திரிகையில் நெஞ்சு இன்னும் வெடிக்கிறது.

மன்னாரில் தொடங்கிய தமிழர்களின் ஓட்டம் கிளிநொச்சியையும் தாண்டித் தொடரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கிளிநொச்சியுடன் முடிந்ததடா தமிழன் கதை என்று பரந்தன், தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, தேவிபுரம், புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, மாத்தளன் முள்ளிவாய்க்கால் வரை நடந்தன தமிழரின் கால்கள். இந்த அழிவிற்குத்தான் இவ்வளவுதூரம் நடந்து வந்தோமா? என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அளவில் கிளிநொச்சியினை விட்டு நடக்க வெளிக்கிட்டோம். 2009 மே-17 முள்ளிவாய்க்கால் வரை நடந்துகொண்டே இருந்தோம். இந்த நெடும் பயணத்தில் எத்தனை எத்தனை அழிவுகளை நாம் சந்தித்தோம்!

கிளிநொச்சியில் இருந்து எனது குடும்பமும் இடப்பெயர்வினைத் தொடங்கியது. கிளிநொச்சி நகரின் ஒரு பகுதியில் ஓலைக் குடிசையில் வசித்துவந்தது என் குடும்பம். நாளாந்தம் கூலி வேலையினைச் செய்து எனது குடும்பத்தினை பார்க்கவேண்டிய கட்டாயத்தில் நான். போர் தொடங்கியதன் பின்னர் கூலிவேலை கிடைப்பது கூட மிகக் கடினமாக மாறியிருந்தது. குடும்பத்தை நான்தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் ஆபத்தான கூலிவேலைகளை நான் செய்யமுற்பட்டேன்.

அதாவது, அன்று அக்கராயன் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி பகுதிகளுக்குள் தங்கியுள்ள மக்கள் சூனியப்பிரதேசமாகக் காணப்படும் அவர்களின் வாழ்விடங்களுக்கு உழவு இயந்திரங்கள், இருசக்கர உழுபொறிகள் (லான்ட்மாஸ்ரர்) பேன்றவற்றில் சென்று அவர்களின் வீட்டுக்கூரை, யன்னல்கள், ஓடுகள், 'சீற்' போன்றவற்றை கழட்டி ஏற்றுவதற்காக நானும் செல்கின்றேன். 

நாள் ஒன்றிற்கு 150 ரூபா அல்லது 200 ரூபாதான் தருவார்கள். இவ்வாறு இருக்கும்போதுதான் எனது குடும்பம் கிளிநொச்சியினை விட்டு இடம்பெயரவேண்டிவந்தது. கிளிநொச்சியும் அரச படையினரின் எறிகணைத் தாக்குதலின் நகரமாக மாறுகின்றது. ஒரு மாட்டுவண்டிலில் ஏற்றும் பொருட்களை மிதிவண்டியில் முன்னும் பின்னுமாக கட்டிக்கொண்டு நானும் எனது குடும்பமும் தருமபுரம் பகுதி நோக்கி நகர்கின்றோம். அங்கு இருப்பதற்கு இடம் இல்லை. இரவிரவாக எறிகணைகள் வீழ்ந்துவெடிக்கும்சத்தங்கள் காதைப்பிளக்கின்றன.

இந்நிலையில் எனது குடும்பத்திற்காக நான்கு தடிகள், ஒரு யு.என்.எச்.சி.ஆர் வழங்கிய 'தறப்பாள்' ஒன்றினையும் எடுத்துச் சென்றிருந்தேன். ஒரு வீதியின் ஓரத்தில் தடிகளை நட்டு 'தறப்பாளினை' இழுத்துக்கட்டினேன். எங்களிடம் கிடந்த அரிசியை, அன்று காலை அம்மா கஞ்சி காச்ச அதுதான் அன்றைய உணவானது. 

ஓரிரு வாரங்கள் நகர்ந்தன. அடுத்தகட்ட உணவிற்கு கையில் பணம் இல்லை. அப்போது தருமபுரம் - பரந்தன் வீதியால் 'கன்டர்', உழவு இயந்திரங்கள் சென்று வந்தன. கிளிநொச்சி மக்களின் வீடுகளைக் கழட்டுவதற்காக அந்த வீட்டு உரிமையாளர்கள் கூலிக்கு ஆட்களைக் கேட்கின்றார்கள் என்று அறிந்தேன். 

அந்த வேலையைச் செய்வதற்காகச் சென்றேன். அப்போதுதான் நான் கிளிநொச்சியைப் பார்க்கமுடிந்ததது. எப்படி இருந்த கிளிநொச்சி இப்படியாகிக் கிடக்கின்றதே என்று வியப்பில் விழுந்தேன். கிளிநொச்சி நகரில் வாழ்ந்த ஒரு முதலாளியின் வீடு அது. அந்த வீட்டின் 'சீற்' மற்றும் வீட்டுப் பொருட்களை ஏற்றுவதற்காத்தான் நான்வந்தேன். அவரின் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களையும் பத்திரமாகக் கழற்றி, ஏற்றிவிட்டு கிளிநொச்சியின் நகர்ப்பகுதி ஏ.9 வீதிக்கு ஊர்தி ஏறுகின்றது. 

அப்போது, அது சிங்கள மகாவித்தியாலயம் அமைந்த பகுதி. அதில் நின்று பார்க்கும் போது இரண்டாம் உலக யுத்தத்தின் காட்சிப் படங்கள்தான் என் நினைவிற்கு வந்தன. நகரின் பெரு விளையாட்டுத் திடல்வரை மயானம் போல் காட்சி அளிக்கின்றது. 

மக்கள் நடமாட்டங்கள் இல்லை. எறிகணைத் தாக்குதலில் மரங்கள் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றன. வீதியின் ஓரங்களில் உள்ள வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களால் சிதறிக்கிடக்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு விழுந்துகிடந்த தென்னைமரம் ஒன்றில் நான்கு தேங்காயினை எனது வீட்டுத் தேவைக்காகப் பிடிங்கிகொண்டு ஊர்தியில் ஏறினேன். 

இதுதான் நான்கண்ட இறுதிக் கிளிநொச்சி நகரம். நகரமாக இருந்தது அப்போது நரகமாக மாறியிருந்தது. பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியின் கரை ஓரங்கள் எங்கும் மக்களின் குடில்களும், 'தறப்பாள்' கொட்டில்களும் நிறைந்து கிடந்தன. தண்ணிக்காகவும் உணவுக்காகவும் காத்திருக்கும் மக்களை வீதிகளில் பாக்கக்கூடியதாக இருந்தது. 

வீதிகள், மரங்களின் கீழ் எல்லாம் மக்கள் வெள்ளம். மக்கள் செல்லும் இடங்களில், முதலில் செய்வது பதுங்ககழி வெட்டுவதுதான். அதன்பின்னர், அதற்கு மேல் கொட்டில்போட்டு அதற்குள் இருப்பதுதான். இவ்வாறுதான் எனது குடும்பத்தை நான் மண் அணைசெய்து, குண்டு விழுந்தாலும் சிதறுதுண்டுகள் அடிக்காத வண்ணம் பாதுகாக்க முயற்சிக்கின்றேன். 

ஆனால், மண்வெட்டி இல்லை. மண்ணைப் பக்கத்தில் இருந்து வெட்டிப்போட முடியாது. அருகில் எல்லாம் குடும்பங்கள் குடியேறிவிட்டன. இவ்வாறு மக்களின் செறிவு அதிகரிக்கத் தொடங்குகின்றது. ஆங்காங்கே எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. தொலைதூர எறிகணைகள் கூவி வரும்போது மக்கள் அலறியடித்து ஓடிப்பதுங்கும் காட்சிகள் என் கண்முன்னே நிழலாடுகின்றது. அதைவிடக் கொடுமை, மிகை ஒலி விமானங்கள் தாழப்பறந்து வீசும் குண்டுகள். அதன் சிதறு துண்டுகள் ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை பாதிப்பினை உண்டுபண்ணும்.

தருமபுரம் பகுதி எதிரியின் எறிகணைத் தாக்குதலின் முழுமையான பகுதியாக மாறுகின்றது. நாங்கள் விசுவமடு நோக்கி நகரலாம் என்று எண்ணி வெளிக்கிட்டோம். ஒருநாள் இரவு நகரவெளிக்கிட்டால் எங்கு செல்வது? வீதியால் விலத்தமுடியாத மக்கள் நெரிசல். அந்தவேளையில் எனக்கு நினைவிற்கு வந்தது, யாழ்ப்பாண இடப்பெயர்வை முன்னிட்டு புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய அந்தப் பொன்னான பாடல் வரிதான். "பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் தெரியாமல்..." என்ற வரி என்னை நினைக்க வைத்தது. 

சிறியவர்கள், பெரியவர்கள், வயது முதிர்ந்தவர்கள் எல்லாம் தங்களால் இயன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டும், எடுத்துக்கொண்டும் எங்குபோவது என்று தெரியாமல் இப்போதும் நகர்ந்துகொண்டிருந்தார்கள். எறிகணைகள் விழும் சத்தம் தொலைவில் கேட்பதாக இருந்தால் அந்த இடத்தில் தங்குவதாக எனது நிலைப்பாடு இருந்தது. இவ்வாறு நகர்ந்து வந்த மக்கள் விசுவமடு, தொட்டியடிப் பகுதியின் விளையாட்டுத் திடலில் மக்கள் குடியேறுகின்றார்கள். அவர்களுடன் நானும் எனது குடும்பமும் அன்று இரவு 'தறப்பாளை' விரித்துவிட்டுப் படுத்து உறங்கினோம்.

அவசரத்திற்கு செல்வதற்கு அருகில் பற்றைக்காடுகள் உள்ள இடமும் தண்ணீர் வசதிகள் கொண்ட இடத்தினையும் தான் பார்த்துப் பார்த்து மக்கள் தங்கிக்கொள்கின்றார்கள். இந்த நிலையில் மழையும் பெய்யத் தொடங்குகின்றது. இழுத்துக் கட்டின தறப்பாள் கொட்டிலுக்குள் வெள்ளம் வருகின்றது.

மண்ணைவெட்டி அணையாகக் கட்டி அதற்குள்தான் எனது குடும்பம் உறங்கிக்கொண்டிருக்கிறது. எங்களிடம் ஒருதொகை நெல் கிடந்தபடியால் அதனைக் குற்றி அரிசியாக்கி கஞ்சியும் சோறுமாகச் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சாவுகளும் மலிந்துகொண்டிருந்தன.

ஒவ்வொரு வீடும் இழப்புக்களைச் சந்தித்துக்கொண்டே இருந்தது. கொட்டும் மழையில் மக்கள் ஒருபுறம், விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் போராளிகள் மறுபுறம் என்று இழப்புக்கள் அதிகரித்துக்கொண்டு இருந்ததேதவிர குறையவில்லை.

மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச செயலகங்கள் அனைத்தும் இடம்பெயர்ந்து, இடந்தெரியாத இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நிவாரணம் கொடுப்பதாக ஒர் இடத்தில் வானொலி ஊடாக அறிவித்தால், அந்த இடம் தேடிப்பிடிக்கப் போகும்போது எறிகணை வீழ்ந்து அதில் மடிந்த மக்கள்தான் இருப்பார்கள். இவ்வாறுதான் அன்றும் பல நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கையில், படையினரின் நகர்வும் வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

மக்கள் நெரிசலாகிக் கொண்டிருந்தார்கள். இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருந்தன. தற்போது விசுவமடுவினை விட்டும் வெளியேறவேண்டிய நிலை. அடுத்து எங்கு செல்வது என்று தெரியாது. ஆனாலும் நடந்துகொண்டே இருக்கின்றோம். அங்கங்கே வீதிகளிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருக்கின்றன. 

நீண்டதூர எறிகணைகள் மக்கள் வாழ்விடங்களில் வீழ்கின்றன. குறிப்பாக அன்று அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் வாழ்கின்றார்கள். காடுகள், புற்தரைகள், சுடலைகள், வீதி ஓரங்கள் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் 'தறப்பாள்' கொட்டில்கள் காணப்படுகின்றன. இதற்கிடையில் அரசவானொலியில் வெள்ளைக்கொடி கட்டி இருங்கள் என்று அறிவித்ததாகச் சொன்னார்கள். அதனையடுத்து 'தறப்பாள்' கொட்டில்களின் மேல் வெள்ளைக்கொடிகளைக் கட்டிப் பாத்தோம். ஆனால், அதன் மீதும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன.


மழை பெய்துகொண்டிருக்கின்றது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் இடப்பெயர்வு நடந்துகொண்டிருக்கின்றது. எங்காவது சென்று இருந்தால் போதும் என்ற நிலையில் மக்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள். நகர்கின்றோம், நகர்கின்றோம் நகர்ந்துகொண்டே இருந்தோம். தேராவில் குளம் நிரம்பிவிட்டது. அதனால் அதன் குளக்கட்டால் செல்லமுடியாது. மாற்றுவழிப் பாதை அமைத்து அதன் ஊடாகத்தான் மக்களும் ஊர்திகளும் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறு நகர்ந்து சென்றால் மறுபக்கத்தால், அதாவது ஒட்டுசுட்டானில் இருந்து முன்னேறும் படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேவிபுரப் பகுதியில் இருப்பதாக இருந்தால் அங்கும் இடம்இல்லை. தேவிபுரம் ஊடாக இரணைப்பபாலை பகுதி நோக்கி நகர்ந்து அங்கு ஒரு தென்னந்தோப்பில் எனது குடும்பம் இடம்பிடித்துக்கொண்டது. 

ஆனாலும், இடங்கள் சுருங்கச் சுருங்க வாழ்வதற்கு இடமில்லை. மலம் கழிக்க இடமில்லை. குடிக்க நீர் இல்லை. ஒழுங்கான குளிப்பில்லை. இரவில் இருக்கும் இடத்திற்கு அருகில் கிடங்குகிண்டித்தான் மலம் கழித்துவிட்டுப் புதைப்பது. இது ஒருபுறம், மறுபுறம் உணவுப்பொருட்களுக்குப் பெருந் தட்டுப்பாடு. அதற்காக அலைந்துதிரிவது என்றால் அதனைவிடத் துன்பம் வேறெதுவும் இல்லை. கடைகளில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாவிற்கு மேல் வந்துவிட்டது.

ஒரு கிலோ சீனி 500 ரூபாவைக் கடந்துவிட்டிருந்தது. குழந்தைகளுக்கான பால்மா இல்லை. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் பெற்றோர்கள். பணம் இருப்பவர்கள் பணத்தைக் கொடுத்து வாங்குகின்றார்கள். மற்றவர்களின் நிலை? 

வன்னியைப் பொறுத்தமட்டில், மூன்று இலட்சம் மக்களில் குறைந்தது ஒரு இலட்சம் மக்கள்தான் இவ்வாறான நிலையை ஈடுசெய்யக் கூடியவகையில் இருப்பார்கள். விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்களிடம் நெல்லைத் தவிர வேறு எதுவும் இல்லை. இப்போது அதுவும் இல்லாத நிலையில்தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது வாழ்வு. 

கப்பலில் சாமான் வருகிறதாம் என்று அரசாங்க அதிபர்கள் கதைக்கின்றார்கள். இரண்டாம் மாதம் அளவில் மாத்தளன் பகுதியில் சாமான்களுடன், அதுவும் குறைந்த அளவு உணவுப் பொருட்களுடன் கப்பல் வந்தது. ஆனால், யானைப் பசிக்கு அது சோளப்பொரிதான் வந்தது. உணவுப்பொருட்கள் கொண்டுவந்த கப்பல் காயமடைந்த மக்களை ஏற்றிக்கொண்டு சென்றதுதான் ஒரு ஆறுதல்.

இப்போது இரணைப்பாலையில் இருந்தது எனது குடும்பம். அங்கும் இடம் இல்லாத நிலையில் சுழன்று சுழன்று ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தேன். இன்று ஓர் இடத்தில் இருந்தால் அதற்குப் பக்கத்தில் 'கிபீர்' விமானங்கள் தொடராகத் தாக்குகின்றன என்று மாற்று இடத்தில் இருந்தால், அங்கு தொடராக எறிகணைகள் வந்து வீழ்கின்றன. இவ்வாறான நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் வீதியின் வாய்க்கால் பகுதி பள்ளமாகக் காணப்படுகின்றது. செல்வீழ்ந்து வெடித்தால் சிதறுதுண்டுகள் பறக்காதுதான். ஆனால், தலைக்குமேல் விழுந்தால் அது காலம் என்று என் உறவுகளுக்குச் சொல்லிக்கொண்டு, அந்த வாய்க்காலில் தறப்பாளினை இழுத்துக் கட்டியபடி அதற்குள் இரவுப் பொழுதினைக் கழித்தோம்.

மக்கள் எல்லாம் பொக்கணை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். பொக்கணைப் பகுதியில் இருந்துவரும் மக்களைக் கேட்டேன், "அங்கு இடம் இருக்கிறதா," என்று. ஒருவர் சென்னார் “இவ்வளவு நாளும் இடம்பார்த்தா வந்தனாங்கள். போறபோற இடங்களிலை இருக்கத்தான் வேண்டும். போ, நீ அங்க போ! இங்க இருக்காத. செல் வந்தோண்டு இருக்கு,” என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு அவர் தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு செல்லப்போனார். 

அவர் சென்று ஐந்து நிமிடங்கள் கழியவில்லை, இரணைப்பாலைச் சந்திக்கு அருகில் தொடராக எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. என்னுடன் இவ்வாறு கதைத்துவிட்டுச் சென்றவர் செல்லில் காயம் அடைந்துவிட்டார்.

யாரையும் யாரும் காப்பாற்ற முடியாத ஒரு நிலை. காயம் அடைந்தாலும் அவனை வந்து தூக்குபவன் அடுத்த எறிகணையில் இறந்துவிடுவான். இதுதான் அன்று மக்களின் கண்முன் நடக்கும் நிகழ்வு. இதனைவிடக் காயம் அடைந்தவர்களுக்கு மருந்து இல்லை. மருத்துவமனைகள் காயமடைந்த மக்களால் நிரப்பிவழிகின்றன.

இவ்வாறான நிலையில் மக்கள் எல்லாம் அந்த குடாப்பகுதியான பழைய மாத்தளன், புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், ஒற்றைப்பனையடி, சாளம்பன், கரையாம்முள்ளிவாய்க்கால், வெள்ளாம் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை நோக்கிச் செறிவாக நகர்ந்துவிட்டார்கள். 05.04.2009 அன்று புதுக்குடியிருப்புப் பகுதி முழுவதும் படையினர் தங்கள் வசப்படுத்திவிட்டார்கள்.

மக்கள் அனைவரும் அந்த முள்ளிவாய்க்கால் குடாவிற்குள் அடைக்கப்பட்டு விட்டார்கள் என்பது தெட்டத்தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. நான் எனது குடும்பத்துடன் கடற்கரையை அண்டிய இடத்தைத் தெரிவு செய்தேன். அங்கெல்லாம் எறிகணை வீழ்ந்துவெடிக்காது என்ற நினைப்பு எனக்கு. ஆனால், அதற்குமாறாக கடலில் இருந்து கப்பல்கள் பீரங்கித் தாக்குதல்களைத் தொடுத்தன. அதிலும் 'கிளஸ்ரர்' எனப்படும் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை நான் கண்ணூடாக அப்போதுதான் கண்டேன்.

இதற்குள்தான் ஒரு கிலோ அரிசியின் விலை ஆயிரம் ரூபாயினைத் தாண்டிவிட்டது. ஒரு கிலோ சீனியின் விலை 1500 ரூபாவினைத் தாண்டிக்கொண்டிருக்கின்றது. சமைப்பதற்கு உரிய உணவுப் பொருட்கள் இல்லை. ஒரு தேங்காயைக் காணமுடியாது. என்னசெய்வது என்று தெரியாத நிலையில் மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 

சில கடைகளின் உரிமையாளர்கள் அந்தக் கொட்டில்களில் வைத்துக்கொண்டு மிகமிக உயர்ந்த விலைக்குப் பொருட்களை விற்பனை செய்துவருகின்றார்கள். கடலில் தொழில்செய்ய முடியாது. ஆனால், வலையினை வீசி மீன் பிடிக்கின்றார்கள். எதிரியின் குண்டுகள் கடலிலும் வீழ்ந்துவெடிக்கின்றன. அதற்கும் அஞ்சாமல் ஒருநேரமாவது சாப்பிடவேண்டும், தங்களின் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் நந்திக்கடல் பகுதியிலும் பெருங்கடல் பகுதியிலும் மீன்பிடிக்கின்றார்கள். 

அதனை விற்பனை செய்கின்றார்கள். அதனைவைத்து உணவுத் தேவையைப் பூர்திசெய்கின்றார்கள். வெற்றிலை சாப்பிடுபவர்கள் ஆலம்விழுதினைச் சாப்பிடுகின்றார்கள், தேனீர் குடிப்பவர்கள் சுடுதண்ணீர் குடிக்கின்றார்கள். மில்லில் இருந்து வெளிவரும் உமியைப் புடைத்து, அதன் குறுநலை எடுத்துக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கின்றார்கள். ஏன், அங்கு பற்றைகளில் காணப்படும் அடம்பன் கொடியின் கிழங்கினை அவித்து சாப்பிட்டுக் கூட மக்கள் இருக்கின்றார்கள். 

இவற்றுக்கு மத்தியில் எறிகணைத் தாக்குதல்கள், நாள் ஒன்றிற்கு இருபதிற்கு மேற்பட்டதடவை மிகையொலி விமானங்கள் நடத்தும் தாக்குதல்கள், இதனைவிட கடலில் இருந்து நடத்தப்படும் தாக்குதல்கள் என முழுமையான கொலை வலயத்திற்குள் மக்கள் இருந்தார்கள். 

எறிகணைகளில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள கைவசம் எஞ்சியிருந்த சாறிகள், சாறங்களை எல்லாம் சிறுசிறு பைபோல் தைத்துவிட்டு அதற்குள் மண்ணைப்போட்டுச் சுற்றிவர அடுக்கிவிட்டுத்தான் படுத்துறங்க வேண்டியிருந்தது. விழுந்து வெடித்துக்கொண்டிருக்கும் எறிகணைகளுக்கு மத்தியில் விடியுமுன்னரே கடற்கரைக்குச் சென்று மலம் கழித்துவிடவேண்டும். விடிந்துவிட்டால் அதற்கு வழியில்லை. இதனால், ஆண், பெண் அடையாளம் தெரியாத அந்த அதிகாலைப் பொழுதில் எல்லோரும் கடற்கரையை முற்றுகையிட்டார்கள்.

எனது கொட்டிலுக்கு முன்னால் ஐம்பது மீற்றர் தூரத்தில் நின்ற நாவல்மரத்தின் கீழ் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நடக்கப்போகும் விபரீதத்தை அறியாத அந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த இடத்தில் திடீரென எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. அந்தச் சிறுவர்கள் பதுங்குகுழிகளுக்குள் செல்வதற்கு முன் கண்முன்னாலேயே வீழ்ந்து மடிந்தார்கள். 

என் கண்முன்னாலேயே மூன்று சிறுமிகள் துடிதுடித்து மடிந்ததை இன்னும் கண்கள் மறக்கவில்லை. இறந்தவர்களைப் புதைப்பதற்குக் கூட இடமில்லாது மக்கள் செறிந்திருந்தார்கள். தங்கள் தறப்பாளுக்கு அருகிலேயே அவர்களைப் புதைத்துவிட்டு அதற்கு அருகிலேயே அவர்களும் படுத்திருந்தார்கள்.

சில இடங்களில் மக்கள் இராணுவத்தின் பிடிக்குள் அகப்பட்டிருந்தார்கள். எஞ்சியிருந்த மக்கள் சிலரும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் போவோமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில்தான், 20.04.2009 அன்று புதுமாத்தளன் பகுதியில் ஊடறுத்து வந்தேறிய படையினர் ஒரு இலட்சம் வரையான மக்களைச் சிறைப் பிடிக்கின்றார்கள். இதன்போது பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள்.

இவ்வாறு இருக்க மக்கள் பண்டமாற்று செய்யும் காலகட்டமாக அந்தக்காலகட்டம் மாற்றமடைந்திருந்தது. ஒரு 'பொயின்ட்' இரத்தம் கொடுத்துவிட்டு ஒரு பால்மா பை வாங்கியது, ஒரு கிலோ அரிசி கொடுத்துவிட்டு அரைக் கிலோ மீன் வாங்கியது, ஒரு கிலோ செத்தல்மிளகாய் கொடுத்து, ஒரு கிலோ சீனி வாங்கியது, ஒரு மூட்டை சீனி கொடுத்து ஒரு உழவு இயந்திரம் மற்றும் உந்துருளி வாங்கியவர்களும், ஒருபவுண் நகைகொடுத்துவிட்டு நெல் மற்றும் பணம் வாங்கியவர்களுமாக அன்று பண்டமாற்று முறைக்கு மக்கள் மாற்றமடைந்திருந்தார்கள். 

இடையிடை மக்களுக்குக் கஞ்சிகொடுக்கும் கொட்டில்களில் மக்கள் எறிகணைகள் விழுமோ என்ற அச்சத்துடன் குவிந்திருந்தார்கள். கரையாம்முள்ளிவாய்கால் பகுதியில் நான் எனது குடும்பத்துடன் கஞ்சி எடுத்துவிட்டு வந்துகொண்டிருக்கின்றேன். அப்போது அந்தக் கொட்டிலின் அருகில் எறிகணை வீழ்ந்து வெடிக்கின்றது. அதில் இருபதிற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்படுகின்றார்கள். அவர்கள் அனைவரும் கஞ்சிக்காக காத்துநின்றவர்கள். உயிரிழக்கும் மக்களைப் புதைப்பதற்குக் கூட வழியில்லாமல் போனது நிலைமை!

நாள் 03.05.2009 வலைஞர்மடம் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த முல்லைத்தீவு மருத்துவமனை மீதும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மக்கள் உயிரிழக்கின்றார்கள். அடுத்த சில நாட்களில் உயிரிழந்தவர்கள் போக எஞ்சியவர்கள் இராணுவத்தின் முழுமையான ஆக்கிரமிப்பிற்குள் செல்லவேண்டிய நிலை. 

முள்ளிவாய்க்கால் பக்கமான இரட்டைவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகள் ஊடாக நகர முற்படுகின்றார்கள். நந்திக்கடல் பகுதியில் ஏரியால் கடந்து சென்று வற்றாப்பளை பகுதியிலும் கரை ஏறுகின்றார்கள். போகும் வழியெங்கும் மனித உடலங்கள். வழியில் கிடந்த உடலங்கள் எண்ணில் அடங்காதவை. நாங்கள் வட்டுவாகல் பாலத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். அந்தப் பகுதியால் வந்த படையினரின் 'ராங்கிகள்' பல அடுக்கடுக்காக நகர்ந்துகொண்டிருக்கின்றன. 

அந்த 'ராங்கிகள்' பார்ப்பதற்குப் புதிதாக இருந்தன. சீனாவின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்ததை அந்த உயிர் போகும் நேரத்திலும் காணமுடிந்தது. கண்முன்னே செத்துக்கிடக்கும் உடலங்கள் மீது அந்த டாங்கிகள் ஏறி செல்கையில் மனம் விம்மி வெடிக்கின்றது. இவற்றை எல்லாம் தாண்டித்தான் எங்கள் உயிர்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்கின்றது.


படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நாங்கள் படையினரின் சப்பாத்துக் கால்களால் உதைவாங்கிக்கொண்டு நகர்கின்றோம். பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை போடுவதுபோல அவர்கள் எங்களின் பசிக்கு உணவுகளை வீசி எறிந்தார்கள். அதிலும் `போலி’ 'போலி' என்று சிங்களத்தால் சொல்லும் வார்த்தைகள் எங்களை நிலைகுலையவைத்தன. இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு நகர்ந்துகொண்டிருந்தன, வலுவிழந்த எங்களின் கால்கள்.

இத்தனை அவலங்களைக் கடந்துவந்தபின்பும் மீண்டும் மக்களைச் சோதனைகளுக்கு உள்ளாக்கியது சிங்களத்தின் வதைமுகாம் வாழ்க்கை. உயிர்தப்பிய பலரின் உயிர்கள் இங்குவைத்தும் பிடுங்கப்பட்டன. முகாங்களுக்குள் இருந்தும் காணாமல் போகத் தொடங்கினார்கள் தமிழர்கள். இளைஞர்களும், யுவதிகளும் கைதுசெய்து, கொண்டு செல்லப்பட்டார்கள். 

இவ்வாறு வதைமுகாம் வாழ்கை பற்றி இதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை. மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மித்த கதைதான் அதுவென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த வாழ்வு வாழ்வதற்காகவா அன்று உயிர் தப்பினோம் என்று இன்று தங்களுக்குள் வெந்துகொண்டிருக்கின்றார்கள் அந்த மக்கள்.

- எல்லாளன் -

குறிப்பு:- முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.

https://www.samaraivu.com/2018/05/blog-post_61.html

போரின் இறுதி நாட்களில் நடந்தவற்றை விவரிக்கும் ஒரு மதகுருவின் வாக்குமூலம்!

3 weeks 6 days ago

முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். 

அவ்வாறு வெளியிடப்பட்டிருக்கின்ற 09 உண்மைக்கதைகளில் ஒரு கதையின் மொழியாக்கம் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.[சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார்.

அவர் கூறுகிறார்,


நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு பதுங்குகுழிகளை அமைத்திருந்தேன். இதேபோல் வன்னி முழுவதிலும் பல பதுங்குகுழிகளை நாங்கள் அமைத்திருந்தோம். ஒவ்வொரு தடவையும் நாங்கள் இடம்பெயர்த்தப்படும் போதும் முதலில் பதுங்குகுழிகளை அமைப்பதே எமது பிரதான பணியாக இருந்தது.

கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த வேளையில், அங்கே நான் நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தேன். மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடாத்துவதானது யுத்த தந்திரோபாயமாகும். வன்னியில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றபோதெல்லாம், சிறிலங்கா இராணுவத்தினர் முதலில் வைத்தியசாலைகளைக் குறிவைத்தே தாக்குதல் நடாத்தினர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பல ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். ஆனால் அவர்களுக்கு கொடுப்பதற்குத் தேவையான மயக்க மருந்து இல்லாததால் அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் மயக்க மருந்து வழங்காமலேயே காயமடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை வெட்டி அகற்ற வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

உண்மையில் இங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் ‘இயந்திரங்கள்’ போலவே செயற்பட்டனர். காயமடைந்த மக்கள் ஆகக் கூடியது ஒரு சில நிமிடங்களே சத்திரசிகிச்சை அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் காயமடைந்த பிற நோயாளிகளுக்கு தொடர்ந்து சத்திரசிகிச்சை வழங்கப்பட்டது.

உடையார்கட்டு என்ற இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது ‘பொசுபரசுக் குண்டுகள்’ வீசப்பட்டன. இந்த வகைக் குண்டுகள் வீசப்பட்டதும் கறுப்பு நிறப் புகை வெளியேறும். அத்துடன் இந்தக் குண்டு எங்கு வீசப்படுகின்றதோ அங்கே உள்ள அனைத்தும் எரிந்து கருகிவிடும். இந்த வகைக் குண்டு வீசப்பட்டவுடன் அதன் சுவாலை ‘தறப்பாலில்’ பற்றி அதன் பகுதிகள் மக்கள் மீது விழுந்தவுடன் மக்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகினர்.

பொசுபரசுக் குண்டொன்று வீசப்பட்ட போது அதன் சுவாலைகள் வாழை இலைகள் மீது படர்ந்து பின் அங்கிருந்த மனிதர் ஒருவரின் உடலிலும் பற்றிக் கொண்டது. இதனால் மிக மோசமான முறையில் குறிப்பிட்ட மனிதர் எரிகாயங்களுக்கு உள்ளாகினார். இதனை நான் நேரில் பார்த்தேன். பொசுபரசுக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி மிக மோசமான எரிகாயங்களுக்கு உள்ளான பலர் யுத்த வலயத்திலிருந்து அகற்றப்பட்டு, கப்பல் மூலம் மேலதிக மருத்துவத்திற்காக கொண்டு செல்லப்பட்டனர்.

கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டன. பல வகையான கொத்துக் குண்டுகளை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். கொத்துக் குண்டொன்றின் பிரதான குண்டு வானில் வெடித்துச் சிதறி பல சிறிய துண்டுகளாக உடைகின்றது. இரணைப்பாலை என்ற பிரதேசத்தில் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்று பல வர்ண நாடாக்களைக் கொண்டிருந்தது. இதனால் இவ்வகைக் குண்டானது சிறுவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக் கொண்டது. சிறுவர்கள் பல வர்ண நிறங்களால் கவர்ச்சிமிக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்த இக் கொத்துக் குண்டின் பகுதிகளை தொட்ட போது அவை வெடித்துச் சிதறிய சம்பவங்களும் உண்டு.

ஜனவரி 25, 2009 அன்று ஒரு நிமிடத்தில் வெடித்த எறிகணைகள் எத்தனை என்பதை நாம் எண்ணிக்கொண்டோம். நாங்கள் ஐந்து மதகுருமார்கள், அருட்சகோதரிகளைக் கொண்ட ஒரு குழு, பெற்றோரை இழந்த பிள்ளைகள் ஆகியோர் ஒன்றாக பதுங்குகுழிக்குள் இருந்தோம். அந்த வேளையில் நாம் இருந்த பகுதியை நோக்கி பல் குழல் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஒரு நிமிடத்தில் 60 குண்டுகள் வெடித்ததை நாம் அவதானித்தோம்.

நான் உண்மையில் மிகப் பயங்கரமான, கோரமான நாட்கள் சிலவற்றைப் பற்றி எடுத்துக் கூறவேண்டும். மே 17,2009 அன்று யுத்தம் முடிவுற்றதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் வானொலிச் செய்திகள் மூலம் அறிவித்துக் கொண்டிருந்தனர். அத்துடன் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு அறிவித்துக் கொண்டிருந்தது.

மிகக் கோரமான அந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழியில் எம்மில் ஐந்து மதகுருமார்கள், பெற்றோரை இழந்த 40 சிறார்கள் மற்றும் அருட்சகோதரிகள் சிலரும் தஞ்சம் புகுந்திருந்தோம். எம்மிடம் CDMA தொலைபேசி ஒன்றும், சற்றலைற் தொலைபேசி ஒன்றும் இருந்தன.

நாம் முதலில் எமது ஆயர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோம். பின்னர் இறுதி யுத்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் சவீந்திர டீ சில்வாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோம். சவீந்திர டீ சில்வா தற்போது ஐ.நாவுக்கான சிறிலங்காத் தூதராகக் கடமையாற்றுகிறார். வெள்ளைக் கொடிகளை உயர்த்திப் பிடித்தவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறுமாறு பிரிகேடியர் எம்மைக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் 2009 மே 17 பிற்பகல் வேளையில் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு நாம் எமது பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம். ஆனால் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

யுத்த வலயத்தை விட்டு நாம் வெளியேறுவதற்கு முன்னர் இறுதி நான்கு நாட்களாக நாம் எதையும் சாப்பிடவுமில்லை. அத்துடன் நீர் கூட அருந்தவில்லை. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு பிஸ்கட்டைப் பெற்றுக் கொள்வதே மிகவும் கடினமாக இருந்தது. கைவிடப்பட்ட பதுங்குகுழி ஒன்றில் விடுதலைப் புலிகளின் மிகவும் சக்தியை வழங்கவல்ல 10 உணவுப் பொதிகளை நாம் பெரும் போராட்டத்தின் பின் பெற்றுக் கொண்டோம். அப் பொதிகளை நாம் அறுபது பேரும் பகிர்ந்து உண்டோம்.

மே 17 இரவு, நான் கிட்டத்தட்ட 50 தடவைகள் வரை ஜெபமாலை செபம் செய்திருப்பேன். நாங்கள் கடற்கரைக்கு மிக அருகில் இருந்ததால் எமது பதுங்குகுழிகள் ஆழமற்றதாக காணப்பட்டன. இந்த இரவு முழுவதும் இராணுவச் சிப்பாய்கள் பதுங்குகுழிகளுக்குள் கைக்குண்டுகளை வீசி மக்களைக் கொலை செய்தனர். அந்த இரவு என்னுடன் இருந்த பெற்றோரை இழந்த சிறார்கள் “பாதிரியாரே, நாம் இங்கே சாகப் போகின்றோம்” எனக் கூறினார்கள்.

அடுத்த நாட் காலை அதாவது மே 18, இராணுவ வீரர்கள் எம்மை நெருங்கி வந்துகொண்டிருந்த போது, நாம் இரண்டாவது தடவையாகவும் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம். நாம் எம்மை அருட்சகோதரர்கள் என இனங் காண்பிப்பதற்காக அருட் சகோதர, சகோதரிகளின் அடையாளம் காட்டும் எமது வெள்ளைச் சீருடைகளை அணிந்திருந்தோம். மூன்று தடவைகள் நாம் வெளியேற முயற்சித்தோம். ஆனால் இந்த மூன்று தடவைகளும் சிறிலங்கா இராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அவர்கள் கிட்டத்தட்ட 115 மீற்றர் தூரத்தில் நின்றவாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இராணுவச் சிப்பாய்கள் எம்மை நோக்கி பெரிய குரலில் கத்தினார்கள், “நீங்கள் விடுதலைப் புலிகள், நாங்கள் உங்களைச் சுடப்போகிறோம்” என்றார்கள். அதன்பின்னர் அவர்கள் எம்மை வெளியே வருமாறு கட்டளையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து அருட்சகோதரிகள் மற்றும் பெற்றோரை இழந்த 40 சிறார்கள் ஆகியோருடன் நாம் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறினோம். வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு முழங்கால்களில் இருக்குமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர்.

அதில் நின்ற சிறிலங்கா இராணுவ வீரன் ஒருவன் சிங்கள மொழியில், “ஒவ்வொருவரையும் கொலை செய்யுமாறு எமது கட்டளைத் தளபதி எமக்கு கட்டளையிட்டுள்ளார்” எனக் கூறினான்.

எமது மேலாடைகளைக் களையுமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர். அதன் பின்னர் “நாம் அருட்சகோதரர்கள் எனவும் இவர்கள் சிறார்கள்” எனவும் வாதிட்டோம். அத்துடன் நாம் ஏற்கனவே பிரிகேடியருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் குறிப்பிட்டோம். அதன் பின்னர் நாம் பிரிகேடியரிடம் தொடர்பு கொண்ட CDMA தொலைபேசி இலக்கத்தை அந்த இராணுவ வீரர்களிடம் கொடுத்தோம். உடனே அவர்கள் தொடர்பு கொண்டு நாம் ஏற்கனவே தொடர்பு கொண்ட விடயத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

நாம் கிட்டத்தட்ட ஓரிரு மணித்தியாலங்கள் வரை இராணுவத்திடம் வாதாட்டம் மேற்கொண்டோம். எமக்கு முன் நின்ற அந்த இராணுவத்தினர் தமது முகத்தைச் சுற்றி கறுப்பு நிறத் துணியால் இறுகக் கட்டியிருந்தனர். கொலை செய்வதற்கு தருணம் பார்த்துக் காத்திருக்கும் மிருகங்கள் போல அவர்கள் காணப்பட்டனர். CDMA தொலைபேசியில் பிரிகேடியருடன் தொடர்பு கொண்ட பின்னரே எம்முடன் வாதாடிய குறித்த வீரனின் கோபம் தணிந்திருந்தது.

இது ஒருபுறமிருக்க, எம்மிலிருந்து சற்று தூரம் தள்ளி இராணுவ வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் மக்கள் சிலர் நிற்பதை நாம் கண்ணுற்றோம். இவர்கள் எம்மைப் போன்று இறுதி வரை பதுங்குகுழிகளுள் ஒழிந்திருந்தவர்கள் ஆவர். அந்த மக்களில் பலர் காயமடைந்திருந்தனர்.

இறுதியில், எம்மை அவ் இராணுவத்தினர் துருவித் துருவி சோதனை செய்தனர். எங்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பையை மட்டுமே எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதில் நின்ற இராணுவ வீரன் ஒருவர் எமது அருட்சகோதரர்களில் ஒருவரை காலால் உதைத்தான். உடனே அவர் கீழே விழுந்துவிட்டார்.

அவர்கள் எம்மை இரு பிரிவுகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு குழுவிலும் 30 பேர் இருந்தோம். இதனால் நாம் கொஞ்சம் வேகமாக நகர முடிந்தது. வீதியோரங்களில் எரிந்து கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் அந்த வாகனங்களின் கீழ் இறந்தபடி கிடந்த மக்களின் உடலங்களைக் கடந்தவாறு நாம் சென்றுகொண்டிருந்தோம். நரகத்தைப் போன்று அந்த இடம் காட்சி தந்தது.

“நாங்கள் பிரபாகரனை, பொட்டு அம்மானை, ஏனைய எல்லாத் தலைவர்களையும் கொலை செய்துவிட்டோம். இப்போது நீங்கள் எமது அடிமைகள்” என சிரித்தவாறு கூறினார்கள்.

காயமடைந்த மக்களுக்கு உதவுமாறு நாம் சிறிலங்கா இராணுவத்திடம் கேட்டுக்கொண்டோம். அத்துடன் காலால் உதைக்கப்பட்ட குறித்த அருட்சகோதரருக்கும் உதவுமாறு கேட்டுக்கொண்டோம். அவர்கள் காயப்பட்ட மக்களை சாலம்பன் என்ற இடத்துக்கு கூட்டிச் சென்றார்கள். ஆனால் அவர்கள் இதய வருத்தமுடைய அந்த அருட்சகோதரனைத் தம்முடன் கூட்டிச் செல்லவில்லை. இதய வருத்தத்தால் அவதிப்பட்ட அந்த அருட்சகோதரனுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படவில்லை. அவருக்கு அப்போது 38 வயதாகவே இருந்தது. அவரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு இராணுவத்தினர் வெளியேறினர்.

நாம் பின்னர் பேருந்து ஒன்றில் சாலம்பன் என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டோம். அவர்கள் எமது ஆடைகளைக் களைந்து எம்மை நிர்வாணப்படுத்திய பின்னரே சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் அவர்கள் எம்மை மண்டபம் ஒன்றுக்குள் கொண்டு சென்றனர். அங்கே “நாங்கள் உங்களது தலைவர்களைக் கொன்றுவிட்டோம். ஆனால் அவர்களில் சிலர் தற்போதும் உயிருடன் உள்ளனர். உங்ளுக்குள்ளேயே அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே விடுதலைப் புலிகள் யாராவது இருந்தால் உடனடியாக எம்மிடம் வந்து உங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்” என இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்தனர்.

ஆனால் தமது பெயரைப் பதிவதற்கு எவரும் முன்வரவில்லை. அதன் பின்னர் அருட்சகோதரர்கள் எல்லோரையும் விடுதலைப் புலிகள் என முத்திரை குத்திய அவர்கள் எமது பெயர்களைப் பலாத்காரமாக பதிவு செய்து கொண்டனர். இந்த நேரத்தில், “நாங்கள் மதகுருமார்கள்” என உறுதியாகக் கூறியதுடன் எமது அடையாள அட்டைகளையும் அவர்களிடம் காண்பித்தோம்.

கருணா குழுவைச் சேர்ந்த பலர் யுத்தத்தின் இறுதியில் எமது மக்களுடன் கலந்திருந்தனர். அவ்வாறு அங்கு இருந்தவர்களுள் ஒருவரை நான் முதலில் வன்னியில் சந்தித்திருந்தேன். இவர் என்னை மதகுரு என அடையாளப்படுத்திக் கொண்டார். நாம் நான்கு அருட்சகோதரர்களும் பிரிகேடியரைச் சந்திப்பதற்காக முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எம்முடன் சேர்ந்து பயணித்த அந்தச் சிறார்களை அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி தெரியவில்லை.

நாம் அதே இடத்துக்கு திரும்பி வந்தபோது, எம்முடன் வந்த அந்தச் சிறார்கள் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்தனர். அத்துடன் புலிகள் உறுப்பினர்கள் என அவர்களின் பெயர்கள் பலாத்காரமாக பதியப்பட்டன. இதன் பின்னர், நாம் செட்டிக்குளம் என்ற இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டோம். அந்த இடத்தை அடைவதற்காக நாம் இரு நாட்கள் வரை உணவின்றி பேருந்திலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது.

நாங்கள் பேருந்தில் புதுக்குடியிருப்பு வீதியால் கூட்டிச் செல்லப்பட்ட போது, மணி பிற்பகல் 6.30 ஆக இருந்தது. புதுக்குடியிருப்புக்கு அருகிலுள்ள மந்துவில் என்ற இடத்தை நாம் கடந்து சென்ற போது மிகப் பயங்கரமான காட்சியைக் காணவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 300 வரையான இறந்த நிர்வாணமாக்கப்பட்ட உடலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் ஒன்றுகுவித்துக் கொண்டிருந்தனர்.

இதனை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த உடலங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் ‘ரியூப் லைற்றுக்கள்’ பொருத்தப்பட்டிருந்தன. அத்துடன் இதனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் அந்த உடலங்களை படம் பிடித்தனர். பார்ப்பதற்கு அது ஒரு கொண்டாட்டம் போல் காணப்பட்டது. அங்கே குவிக்கப்பட்ட்டிருந்த அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தில் கொல்லப்பட்டிருப்பார்கள் என நான் கருதுகிறேன்.

நாம் மெனிக்பாம் முகாமில் குடியேற்றப்பட்டு முதல் ஒரு வாரமும் குடிப்பதற்கான நீரைப் பெற முடியவில்லை. பசி போக்க உணவு கிடைக்கவில்லை. மலசலகூடவசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எமது முகாமுக்குள் வெளி ஆட்கள் வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனை ‘விடுதலைப் புலிகளின் முகாம்’ எனவும் ‘வலயம் 04′ எனவும் அழைத்தனர்.

எமது முகாமிலிருந்த மக்கள் கொலை செய்யப்படுவார்கள் என கருதப்பட்டது. எமது வாழ்வு ஆபத்தில் உள்ளதாக நாம் கருதினோம். எமது முகாமில் கிட்டத்தட்ட 40,000 பேர்வரை தங்கவைக்கப்பட்டனர். 16 பேர் படுத்து உறங்குவதற்காக சீனாத் தயாரிப்பான நீல நிறத் தறப்பாள் ஒன்று வழங்கப்பட்டது. இதனால் பெண்கள் கூடாரத்திற்குள்ளும், ஆண்கள் அதற்கு வெளியேயும் படுத்து உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் எம்மை மிருகங்கள் போல் நடாத்தினர்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் சிறிலங்கா அரசாங்கமும், இராணுவப் புலனாய்வுத் துறையும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாண வீதிகளில் உள்ள விளம்பரப் பலகைகளில் ‘ஒரு நாடு ஒரு மக்கள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இத மக்களைப் பெரிதும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கப் படையினர் அக்கராயன், முருகண்டி, வற்றாப்பளை ஆகிய மூன்று இடங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவ்விடங்களில் சிங்கள மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன. வடக்கு மாகாணத்தின் மையமாக மாங்குளம் அமைக்கப்படவுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 300,000 மக்களைக் குடியேற்ற சிங்கள அரசாங்கம் திட்டமிடுகிறது.

ஒவ்வொரு பட்டினத்திலும் இன விகிதாசாரத்தை பேண அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனால் வடக்கில் உள்ள குடிசன பரம்பலில் மாற்றத்தைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிடுகிறது. ஏற்கனவே நாவற்குழியில் சிங்களவர்கள் குடியேறுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழில் மொழியாக்கம் – நித்தியபாரதி

https://www.samaraivu.com/2018/05/blog-post_85.html

மே-16: பிணக்கிடங்கில் இருந்து மீண்டவரின் நினைவுப் பகிர்வு!

3 weeks 6 days ago

நான்கு பக்கமும் இராணுவம் முன்னேறி வந்துகொண்டிருந்தான். சிறிய நிலப்பரப்பில் பல்லாயிரக் கணக்காக மக்கள் நிரம் பிவழிந்தார்கள். நடப்பதற்குக் கூட முடியாது தள்ளுப்பட்டு ஒருவர்பின் ஒருவர் சென்றுகொண்டிருந்தோம்.

முள்ளிவாய்க்கால்போல் வட்டுவாகல் எமக்கு சாதகமாய் அமைந்திருக்கவில்லை. காடும் சேறும் சகதியுமாகவே இருந்தது. ஈரநிலத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் என படுத்திருந்தார்கள்.

இராணுவம் முன்னேறிவர எமது பொருட்களையும் முன்னகர்த்திக் கொண்டே சென்று கொண்டிருந்தோம். விடுபட்ட பொருட்கள் எடுப்பதற்கென்று மீண்டும் திரும்பிச் சென்று எடுத்துவருவதும், மீண்டும் போவதுமாக இருந்தோம்.

இரண்டு கால்களிலும் காயப்பட்டு நடக்கமாட்டாத எம் உறவொருவரை தூக்கிச் சென்றுகொண்டிருந்தோம். ஆனால், எம்மால் அவரைத் தூக்கிச்செல்ல முடியாமலே இருந்தது. ஏனென்றால், எமது உடல்நிலை திடமாக இல்லை. காய்ஞ்ச மாடு கம்பில பட்டு விழுந்த நிலைதான் எமது நிலையும்.

அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சனநெரிசலில் பல மணிநேரப் போராட்டத்தோடு கொண்டுவந்து சேர்த்துவிட்டு, மீண்டும் செல்ல ஆயத்தமானோம்,

எறிகணைகள் விழ ஆரம்பித்திருந்தது. எப்படியாவது திரும்பிச்சென்று பொருட்கள் எடுத்துவரப் புறப்பட்டோம். எமக்கருகில் பல எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கத்தொடங்கியன. ஓடிச்சென்று பதுங்ககழிக்குள் குதிப்பதும் ஓடுவதுமாக இருந்தோம். அவ்வாறு ஓடிச்சென்று கொண்டிருக்கும்போது எறிகணை ஒன்று எம் அருகில் விழுவதுபோல் உணர்ந்தோம்.

பெரிய ஆலமரம் ஒன்றின்கீழே 'வக்கோ' எனப்படும் இயந்திரத்தால் வெட்டப்பட்ட பெரிய கிடங்கு ஒன்று இருந்தது. சரி, அதற்குள் குதிப்போம் என்று ஓடினோம். மரத்தில் கொழுவியபடி 'சேலன்' ஏறிக்கொண்டிருந்த நிலையில் போராளி ஒருவர் படுத்திருப்பதைக் கண்டேன்.

ஓடிச்சென்று, "அண்ணா, எறிகணை வருகுது. பங்கருக்க போவம், வாங்கோ," என்று கையைப்பிடித்து இழுத்து எழுப்பினேன். அவர் எழும்பமுடியாது கிடந்தார். என்னாலும் தூக்கமுடியாமல் இருந்தது.

அதன்பின்னர்தான் பார்த்தேன், அவர் காயத்தால் 'சேலன்' ஏறிக்கொண்டிருந்த நிலையில் இறந்துகிடப்பதை. எமக்கு அருகில் எறிகணைச் சிதறுதுண்டுகள் பறந்தடித்தன. எறிகணைகளுக்குப் பயத்தில அகழிக்குள்ள குதிச்சிட்டம். குதிச்ச பிறகுதான் தெரிஞ்சது, அது பிணக்கிடங்கென்று.

போராளிகளின் உடல்கள், பொதுமக்களின் உடல்கள் என்று 15 உடல்கள் அளவில் அந்தக் கிடங்கில் இருந்தன. இலையான்கள் மொய்த்தபடி காணப்பட்டன. பாரிய காயப்பட்ட உடல்களின் இரத்தவாடை குமட்டலை ஏற்படுத்தியது.

கிடங்கிலும் இருக்கமுடியாது. வெளியிலும் வரமுடியாது. எறிகணைகள் நின்றால்மட்டுமே வரமுடியும் என்ற நிலை. எனினும் நான் கிடங்கைவிட்டு மேலே ஏறிவிட்டேன்.

மனமெல்லாம் வேதனையில் துடித்தது. இப்படியே விட்டுட்டு, இந்தக் கிடங்கைக் கூட மூடாமல் உடல்களை போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களே என்று மனம் எண்ணியது. 

இராணுவம் நெருங்கி வந்துகொண்டிருந்ததால் நாம் பொருட்கள் எடுக்கச் செல்வதைக் கைவிட்டு, திரும்பிவந்துவிட்டோம். நாம் திரும்பி வரும்போது எறிகணைகள் வெடித்து இறந்த உடல்கள் அப்படியே ஆங்காங்கே பரவிக் கிடந்தன. காயத்திற்கு மருந்துகட்டுவதற்கே ஒருவரும் இல்லை என்ற நிலை.

இது நடந்தது இறுதி நாளான மே-16 என்பதால் பாரிய காயக்காரர்கள் முறையான சிகிச்சைகள் இன்றி, இரத்தம்போயே இறந்துகொண்டிருந்தார்கள்.

எம்மவர்களைப் புதைப்பதற்குக் கூட முடியாமல் அப்படியே விட்டுட்டு வந்தோம் என்று நினைக்கும்போது மனம் வேதனையில் துடிக்கிறது.

***

குறிப்பு: முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.

https://www.samaraivu.com/2018/05/16.html

மே-12, பெருங்கடல் கரையை அண்டிய மறிப்புவரிசை: ஒரு நினைவுப் பகிர்வு!

3 weeks 6 days ago

இறுதி நாட்களில்...2009:மே:12


Screen-Shot-2012-09-12-at-8.09.24-PM.jpg

கப்பல் ரோட்டு எனப்படும் ஜோர்தான் கப்பல் கரையொதுங்கிய இடத்திற்குச் செல்லும் வீதியை அண்மித்தே எமது நிலைகள் அன்று பின்னகர்த்தப்பட்டிருந்தன.

இரவுபகல் பாராது சண்டை நடந்தவண்ணமிருந்தது. அன்று மாலைதான் தெரிந்தது காலையில் நாம் இருந்த இடத்தையும் இராணுவம் கைப்பற்றிவிட்டதென்று.

பரந்தன் முல்லை பிரதான வீதியில் நந்திக்கடலை அண்மித்த பகுதியை ஒட்டியிருந்த மக்களும் கடுமையான ஷெல்வீச்சின் காரணமாகவும் ரவைகளின் சூடுகள் அதிகமாக இருந்ததாலும் வட்டுவாகல் நோக்கி நகர்ந்து செல்வது ஓய்ந்துகொண்டிருந்தது.

நாம் இருந்த இடத்தின் தரையமைப்பு மேட்டுப்பகுதி என்பதனால் எவரும் வெளியே நடமாடக்கூடாது என்று பொறுப்பாளர் சொன்னதால் எங்கும் போகாது பதுங்ககழிக்கு உள்ளேயே முடங்கினோம்.

சண்டை நடந்துகொண்டிருந்த முன்னரங்கு சில மீற்றர் தொலைவில் தான் இருந்தது. நாம் இருந்த பகுதிக்கு கிழக்குப் பக்கமாக நூறு நூற்றைம்பது மீற்றர் தள்ளி சில கல்வீடுகள் இருந்தன.

இரண்டு நாட்கள் குளிப்பு இல்லாததால் பகுதிப் பொறுப்பாளரிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த கிணற்றடியில் குளிக்கச் சென்று இரண்டு மூன்று வாளிகள் வார்த்திருப்பேன், பகல் சாப்பிட்ட புழுங்கல் அரிசி சோறும் அரைவேகல் பருப்பும் தன்வேலையைக் காட்டியது... சடுதியான வயிற்றுழைவு!

அந்த நாட்களில் மலம்கழிப்பது என்பது ஓர் மரணப்போராட்டம். ஏப்பிரல் மாதம் நின்ற இடத்தில் இருந்து கூப்பிடு தூரம்தான் கடற்கரை. அதிகாலையில் சென்றால் கடற்கரை மணலில் ஓர் குழியைத் தோண்டி காலைக் கடனை முடித்துவிடுவோம்.

சில நாட்கள் போக அங்கும் மக்களின் பெருக்கம் அதிகரித்தது. சிலவேளைகளில் எதிரியின் பராவெளிச்சம் எங்களை எழுந்து ஓடவைத்துவிடும்.

ஆனால், அந்த இடத்தில கடற்கரையும் இல்லை மலசலகூடங்களும் இல்லை. எங்கட போராளிகள் பி.வி.சி குழாயை சூடுகாட்டி விரித்து மலசலகூட கோப்பை போல் செய்துவைத்திருந்தனர். சுவருக்குப் பதிலாய் தறப்பாள் நான்கு பக்கமும் மறைத்திருந்தது.

கிணறு இருந்த இடம் அந்த தற்காலிக மலசலகூடத்தில இருந்து ஒரு பத்துமீற்றர் தான் இருக்கும். ஒருமாதிரி வயிற்றோட்டத்தோடு போராடிமுடிந்தது. வெளியே வந்து கிணறு நோக்கி நடந்துபோனபோது ஷெல் கூவிற சத்தம் வரவர அண்மித்தது. என்னையறியாமலே நிலத்தில் வீழ்ந்து படுத்துவிட்டேன்.

சத்தத்தோடு அதிர்வு ஒருமுறை என்னை உலுப்பியது. மணலைத் தட்டிவிட்டு எழுந்து பார்த்தால் கிணறு இருந்த இடத்தில் எவ்வித தடயமும் இல்லை. ஆட்டிலெறி எறிகணை என்பதால் உயிர்பிழைத்தேன். வயிற்றோட்டம் என்னைக் காப்பாற்றிவிட்டது என்று நண்பர்களுக்கு கூறி சிரித்தது தான் மிச்சம். இது நான் உயிர்தப்பிய இரண்டாவது தருணம்.

இரவானது. எமது பதுங்ககழிக்குள் வெளிச்சம் இல்லை. அருகே எறிகணை விழுத்து வெடித்து வெளிச்சம் ஏற்படுத்தும் போதுதான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடிந்தது. மூன்றுபேர் இருந்தோம். மெல்லிய குரலில் பேசியபடி, இரவில் வேவுக்காரன் வருவான், இருக்கிறதை காட்டிக்கொள்ளக்கூடாது என்று பேசிக்கொண்டோம்.

இடைவிடாத ஷெல்லடியால் அன்று வழங்கல் எடுக்க எவரும் போகவில்லை. பக்கத்து பதுங்ககழிக்குள் இருந்த சக பெண் போராளிகள் மாவில் சுட்ட ரொட்டியோடு தேநீரும் தந்துவிட்டு, "அண்ணையாக்கள், இனி எப்ப தேநீர் கிடைக்குமோ தெரியாது," என்றுவிட்டு தமது பதுங்ககழிக்குள் சென்றுவிட்டனர்.


***

-வன்னியூரான்-

குறிப்பு:- முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.


https://www.samaraivu.com/2018/05/12.html

இயக்குநரும் ஊடகவியலாளருமான அன்பரசனின் கடைசி நேர அனுபவங்கள்

3 weeks 6 days ago

Sriram+the+husband+of+Isaipriya.jpg

ஆண்டு 2009 இன் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்காப் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை (வீடியோ) ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளர்களில் அன்பரசனும் முக்கியமானவர். "சனல்-4" தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “எறிகணைத்தாக்குதல் இடம்பெறும் சமயத்தில் நீங்கள் 'வீடியோ' எடுக்கவேண்டாம், படுங்கோ” என்று சொல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த ஒளிப்பதிவுக் காட்சியை அன்பரசனே எடுத்திருந்தார். அன்பரசனின் அனுபவங்களை இங்கே பதிவுசெய்கின்றேன்.

அன்றைய நாட்களில் ஒரு வீடியோவை தரவேற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. உழவு இயந்திரத்தின் மேல் மண் மூட்டைகள் அடுக்கி, அதற்கு கீழே படுத்துக்கொண்டு ஒரு மடிக்கணனியில் தான் எல்லா ஒளிப்பதிவுக் காட்சிகளையும் நான் வெளிநாடுகளுக்கு அனுப்பினேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு எங்களால் ஒளிப்பதிவு எடுக்கமுடியாமல் போய்விட்டது.

எடுத்த ஒளிப்பதிவுகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாதென்றாகிவிட்டது. இரத்தமும் சதையுமாக அழுகுரல்களோடு சேர்ந்த குண்டுச்சத்தங்களையும் காட்சிப்படுத்திய என் ஒளிப்படக் கருவியும் (கமரா) ஓய்ந்து போனது. இனி என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இனியாவது குடும்பத்திற்கு சாப்பாடு ஏதும் கிடைக்குமோ என்று தேடி அலைவோம் என முடிவெடுத்தேன். 

எனது நண்பன், "ஒரு களஞ்சியத்துக்குள் அரிசி கிடக்காம், போய் எடுப்பமா?" என்றவுடன் நானும் அவனும் அவ்விடத்திற்குப் புறப்பட்டுப் போனம். சரியான எறிகணை வீச்சு. அங்கயும் இங்கயும் ஒரே பிணங்கள். எல்லாவற்றையும் கடந்து, சாப்பாட்டுக்காக அங்கே போய்ப் பார்த்தபோது மூன்று பேர் இறந்து கிடந்தார்கள்.

அவர்களைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு நெல்லு மூட்டை ஒன்றைத் தோளில் போட்டுக்கொண்டு வேகமாகத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். மிக அருகில் ஆமி நிக்கிறான். இருந்தாலும் பசி எங்களுக்கு ஒரு துணிவைத் தந்திருந்தது. 

நானும் நண்பனும் நெல்லைத் தூக்கிவருவதைப் பார்த்த சனங்களும் அந்த களஞ்சியத்துக்கு ஓடிப்போனார்கள். திடீர் என எறிகணைகள் தொடர்ச்சியாக வீழ்ந்து வெடித்து அந்த உணவுக் களஞ்சியம் ஒரே புகைமண்டலமாக மாறியது. அவ்விடத்துக்குப் போனவர்கள் ஒருவரும் தப்பவில்லை. 

என்னுடன் வந்த நண்பன், “இன்னும் கொஞ்சம் நல்லகாலம் (அதிர்ஸ்ரம்) இருக்கு” என்று சொல்லிக்கொண்டே எமது வீட்டுக்காரர் இருந்த இடத்திற்கு ஓடினோம். பசிக்கொடுமை, தண்ணீர் பற்றாக்குறை இவற்றைத் தேடிப் போயே பலர் எறிகணைத் தாக்குதலில் மாண்டிருக்கிறார்கள். 

மரணகளத்தில் நின்று மனிதத்தைக் காக்கத் துடித்தோம். அன்றைய நாட்களின் மீள்நினைவுகள் வரும் போது மனம் பதறுகிறது. எல்லாம் கைமீறிப்போய்விட்டதே…! இனி என்ன நடக்கப்போகிறது என்றே விளங்வில்லை. எனது கையில் இருந்தபடியே சிறுவன் ஒருவனின் உயிர் பிரிந்தது. 

என்னால் அந்தப் (யதுசன்) 13 வயதுப் பாலகனை மறக்கமுடியாமல் இருக்கின்றது. இறுதியாக இயங்கிய வைத்தியசாலை ஒன்றில் இறந்து கிடந்தவர்களை ஒளிப்பதிவாக்கி விட்டு திரும்பும்போது இறந்த உடல் ஒன்றில் என் கால் இடறிவிழப்பார்த்தேன். நிதானித்து நின்று யாரோ தெரிந்தவர் போல என்று உற்றுப்பார்த்த்தேன். 

அது “கணேசு மாமா”. “என்ர முகத்தை கடைசியாகப் பார்த்திட்டு போ,” என்று சொல்வதைப் போலக் கிடந்தார். அப்பொழுது இறந்தவர்களின் உடலங்களை ஓரமாக அடுக்கிக்கொண்டிருந்த காவல்துறை உறுப்பினர் ஒருவர், “இவர்தான் கணேசு மாமா, தெரியுமா,” எனக் கேட்டார். அவருக்கு அந்த நேரம் சொல்வதற்கு வார்த்தைகள் ஒன்றும் என்னிடம் இருக்கவில்லை.

கணேசு மாமா வன்னியின் சிறந்த நகைச்சுவை நடிகர். இவரைத் தெரியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். 

எனது உற்ற நண்பன் சிறிராமுடன் (இசைப்பிரியாவின் கணவர்) 15 ஆம் திகதி இரவு கதைத்தேன். “நாளை இரவுக்கு இறங்கப்போறம். நான் தான் கொமாண்டர் மச்சான். ஒரு கை பாப்பம். இரும்புக் கோட்டைக்குள்ள போகப்போறம். வெற்றியெண்டா சந்திப்பம். இல்லாட்டி அலுவல் முடிந்தது மச்சான்”. “நீ, இசைப்பிரியாவை கூட்டிக்கொண்டு போ,” என்று சொன்னது காதுக்குள் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. 

சிறீராம் என்னிடம் சொன்னவற்றை எப்படி மறப்பது? இசைப்பிரியாவின் இறுதிச்சந்திப்பும் இறுதி வார்த்தைகளும் இப்போதும் நினைத்தால் மனதை வாட்டுகின்றது. மே-14ஆம் நாள் எமது பதுங்ககழிக்குள் விழுந்த எறிகணை வெடித்திருந்தால் இத்தனை துயரங்களையும் பார்த்திருக்கமாட்டேன். 

ஆனால், நான்கு குடும்பங்கள் இன்று இல்லாமல் போயிருக்கும். 16 ஆம் நாள் மாலை 6 மணியளவில் தளபதி பானு அண்ணனின் இறுதி வார்தைகள் இன்னமும் கேட்கின்றன. 

“இன்னும் ஏன்ரா நிக்கிறாய்? கூட்டிக்கொண்டு போகக் கூடியவர்கள் கூட்டிக்கொண்டு போங்கோ. எல்லாம் முடிஞ்சிது”. 

ஆனால், அந்த மாலைப் பொழுதில் அவரும் இன்னும் மூன்று போராளிகளும் எதிர்த் திசையாக நடந்தார்கள். 'நாங்களும் படையினர் பக்கம் போகப்போறம்,' என்ற பயத்துடன் அன்றைய இரவினை வெடிச்சத்தங்களுடன் நகர்த்தினோம்.

நள்ளிரவினைத் தாண்டி, அதாவது நாள்-17 அதிகாலை பாரிய குண்டுச்சத்தங்கள் நந்திக்கடல் பக்கமாகக் கேட்டது. கேப்பாப்புலவுப் பக்கமாக முல்லைத்தீவில் இருந்து பல்குழல் எறிகணைகள் தொடச்சியாக விழுந்து வெடிப்பதில் தூரத்தை கணிக்கமுடிந்தது. 

நான் மனைவிக்கு, “சிறிராமாக்கள் அங்கால போய்ற்றாங்கள் போல, தூரத்தில சத்தங்கள் கேட்குது," என்று சொன்னவாறே அன்றைய இரவுப் பொழுதினைக் கழித்தேன். எனக்கு ஒரே யோசினையாக இருந்தது. 

“டேய், நீ இசைப்பிரியாவைக் கூட்டிக்கொண்டு போ,” என்று சிறிராம் சொன்னவன். 

நான் எவ்வளவு கேட்டும் அவா வருவதாக இல்லை.

“அண்ணை, உங்களோட இன்னொரு போராளியும் வாறா, நானும் வந்தால் உங்களையும் பிடிப்பான். வந்தால் சிறிராமுடன் தான் வருவன். இல்லாட்டில் வரமாட்டன்,” 

என்று கூறிய அவளின் வார்த்தைகளின் கனதி அப்போது அந்தச் சூழலில் எனக்குத் தெரியவில்லை. இப்போது வலிக்கிறது.

***

குறிப்பு:- 'பதிவு' இணையத்தில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.

https://www.samaraivu.com/2018/05/16.html

"எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்!" முள்ளிவாய்க்காலில் கரும்புலி

3 weeks 6 days ago

அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்தியில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுது. எங்கும் பிணக்குவியல் பிணங்களைப் பார்ப்பதற்கு கூட வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளின் கந்தகத்தீயின் வெளிச்சத்தில் பிணங்களை மக்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். எனது குடும்பமும், இன்னும் மூன்று குடும்பங்களையும் நான் ஓரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

மக்கள் கூட்டமாக எங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். புதுக்குடியிருப்பு முல்லை வீதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அடிக்கு மேல் அடி வைத்து நகரும் மக்கள் கூட்டத்தின் நடுவே எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. எங்கும் கூக்குரல். வெடிச்சத்தம் மிக அண்மையில் கேட்கத்தொடங்குகிறது. இராணுவம் எமக்கு அருகில் வந்துவிட்டான் என்பதை துப்பாக்கி வெடிகளின் சத்தம் உறுதிப்படுத்துகிறது. இந்த நிலையில் தொடர்ந்தும் அந்த இடத்தில் இருக்க முடியாது என உணர்கிறேன். ஆனாலும் மக்கள் செல்லும் வீதி இராணுவத்தின் எறிகணைத்தாக்குதலால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. வீதிக்கும் இறங்க முடியாது தொடர்ந்து அந்த இடத்தில் இருக்கவும் முடியாது விரைவாக நான் முடிவெடுக்க வேண்டிய நேரம்.

இராணுவத்தால் சுடப்படும் துப்பாக்கி ரவைகள் எனது குடும்பம் மறைந்திருக்கின்ற இருசக்கர உழவு இயந்திரப்பெட்டியில் பட்டுத் துழைக்கின்றன. இனி வேறு வழியில்லை அந்த இடத்திலிருந்து வெளியேறியே தீரவேண்டும். எனது குடும்ப அங்கத்தவர்களையும் எனது பாதுகாப்பிலிருந்தவர்களையும் வெளியேறுமாறு உத்தரவிடுகிறேன்.

அப்போது ஒரு கரும்புலி வீரன், இராணுவம் தாக்குதல் நடாத்திக்கொண்டிருக்கும் பக்கமாக நான் இருக்கும் இடத்திற்கு எதிர்ப்பக்கமாக புழுதி படிந்த சேட்டுடன் - ஒரு மெல்லிய உருவம், போராளிகள் வழமையாக நீழக்காற்சட்டைக்கு மேலாக இடுப்பில் மடித்துக்கட்டியிருக்கும் சறம், கையில் PK L.M.G., தன்னால் எவ்வளவுக்கு சுமக்க முடியுமோ அவ்வளவு LMG ரவைகளுடன் - நாங்கள் பதுங்கியிருப்பதை உணர்ந்த அந்தக் கரும்புலி வீரன் கட்டளை இடுகிறான்.

"எல்லோரும் போங்கோ!... இங்கை இருக்காதிங்கோ!... இனி ஒருவரும் இங்க இருக்க வேண்டாம். பாதை திறந்தாச்சு, எல்லோரும் போங்கோ! தயவு செய்து இருக்காதையுங்கோ...."

அந்த கரும்புலி வீரனின் கையில் இருக்கும் PK L.M.G இராணுவத்தை நோக்கி தீச்சுவாலையை ஊமிழ்கிறது. அதன் மங்கலான ஒளியில் அந்த வீரனின் முகம் என் கண்ணுக்கு புலப்படவில்லை. அவன் உருவம் மட்டுமே தெரிகிறது. மீண்டும் கரும்புலி வீரன் "எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம், நாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், எல்லோரும் போங்கோ...," என்கிறான்.

இராணுவத்தின் துப்பாக்கிச்சூடு எமக்குப்படாதவாறு பாதுகாப்புக்கொடுத்து எதிரிக்குத் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறான் அந்த கரும்புலி வீரன். எனது குடும்பமும் ஏனையவர்களும் பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து வெளியேறுகிறோம். நாங்கள் நான்கு குடும்பங்கள் தான் அந்த இடத்திலிருந்து இறுதியாக வெளியேறியிருக்க வேண்டும். அந்தப்பகுதியில் பொது மக்கள் இல்லை என்பதை ஊகித்த அந்தக் கரும்புலி வீரன் தனது கடமையை அந்த இடத்திலிருந்து முடித்துக்கொண்டு இராணுவம் முன்னேறிக்கொண்டிருக்கும் திசை நோக்கித் தனது துப்பாக்கியால் சுட்டபடி நகர்கிறான். 

அந்த வீரனை நான் திரும்பித்திரும்பிப் பார்த்தவாறு நடக்கிறேன். என் கண்ணுக்கு எட்டியவரை அவனது துப்பாக்கி ஓயவில்லை.

முள்ளிவாய்க்கால் மண் வெறுமனே சோகத்தை மட்டும் சுமக்க வில்லை. உலகில் எந்த இனத்திற்கும் கிடைக்காத உன்னத புருசர்களையும் எமது மக்களுக்கு அடையாளமிட்டது.

***

குறிப்பு:- சிவகரன் (Siva Karan) என்னும் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

https://www.samaraivu.com/2018/05/blog-post_14.html

Checked
Mon, 09/15/2025 - 19:37
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed