"ஒரு சிறிய கற்றல் ஆபத்தானது [குறைவான அறிவு ஆபத்தானது / A little learning is a dangerous thing]"
அத்தியடி, யாழ்ப்பாணம்]
Athiady, Jaffna]
"எங்கு சென்றாய்?" [கசல் கவிதை]
"காதல் தந்தாய்
காத்திருந்தேன் நாள் முழுவதும்!
வேதனை படுத்தி
சோதனை செய்யவா
எங்கு சென்றாய்?"
"அழகிய உடல்
ஆனந்தம் தந்தது!
அருகில் இல்லாமல்
தூர விலகினாயே
எங்கு சென்றாய்?"
"கொஞ்சும் பேச்சில்
நெஞ்சைப் பறித்தவளே!
வஞ்சக மனத்துடன்
கஞ்சத்தனம் வேண்டாம்
எங்கு சென்றாய்?"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"எனது மே தின முழக்கங்கள்!' / "MY MAY DAY SLOGANS!"
"கொடூரமாக இருக்காதே
திமிர் பிடிக்காதே
உரிமைகளை மதி
குரல்களை மதி"
"இங்கு வேலையாட்கள் இல்லை
இங்கு முதலாளிகள் இல்லை
இங்கு குடும்பமே உண்டு
இனி நட்பாகக் கவனி"
"கஷ்டங்களைக் கேளு
துயரங்களைக் கேளு
கடவுள் சிவாவாக இரு
இயேசு கிறிஸ்துவாக இரு"
"ஆதாயத்தைப் பகிரு
லாபத்தைப் பகிரு
ஒரு தந்தையைப் போல
ஒரு தாயைப் போல"
"அடிமை ஆக்காதே
ஏழைகளை உருவாக்காதே
ரோமாக இருக்காதே
நீரோவாக இருக்காதே"
"எல்லோரையும் இணை
தொழிலாளர்கள் பங்கேற்கட்டும்
அனைவரையும் உள்ளடக்கு
முடிவெடுப்பதில் கலந்தாலோசி"
"ஆர்வத்தைக் கொடு
நம்பகத்தன்மை வளரட்டும்
ஒரு கணவனைப் போல
ஒரு மனைவியைப் போல"
"ஒழுக்கத்தைக் கடைப்பிடி
நீதியைக் கடைப்பிடி
நல்ல குருவாக
நல்ல அரசனாக "
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"MY MAY DAY SLOGANS!"
"DON'T BE CRUEL
DON'T BE ARROGANT
RESPECT THE RIGHTS
RESPECT THE VOICES"
"NO MORE WORKERS
NO MORE BOSSES
CARE AS FAMILY
CARE AS FRIENDS"
"LISTEN THEIR PLIGHTS
LISTEN THEIR SORROWS
BE A GOD SIVA
BE A JESUS CHRIST"
"SHARE THE BENIFIT
SHARE THE PROFIT
LIKE A FATHER
LIKE A MOTHER"
"MAKE NO SLAVE
MAKE NO POOR
DON'T BE ROME
DON'T BE NERO"
"KEEP QUALITY CIRCLE IN MANAGEMENT
KEEP WORKERS PARTICIPATION IN MANAGEMENT
INCLUDE EVERYONE IN MANAGEMENT
INCLUDE EVERYONE IN DECISION MAKING"
"CULTIVATE INTEREST IN WORK
MOTIVATE DEPENDABLE BEHAVIORS
LIKE A HUSBAND
LIKE A WIFE"
"KEEP THE DISCIPLINE
KEEP THE JUSTICE
BE A GOOD GURU
BE A GOOD KING"
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
நம் வாழ்வில் நாம்
மறக்க முடியாத பலநாட்களை
பலமுறை நாம் கடக்கின்றோம்
சில நாட்கள்
நம் வாழ்வில் - நாம்
மறக்கவே முடியாமல்
சிதளூரும் காயங்கள் போல்
நித வருத்தம் தருவன
2009, சித்திரை 27
கடற்கரை மணலில்
குளிரூட்டப்பட்ட திடலில்
காலைச் சிற்றுண்டிக்கும்
மதிய உணவுக்கும்
இடைப்பட்ட விடுமுறையில்
மூன்று மணி நேரம்
கலைஞரின் நாடகம்
அரங்கேறிய நாள்
தியா காண்டீபன்
கலைஞரின் உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றப்பட்ட பின்னரே ஐம்பதாயிரம் வரையான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்
https://www.vinavu.com/2009/05/11/congress-dmk-drama/
https://www.keetru.com/.../10-sp.../8834-2010-05-22-01-32-26
"எந்தன் உயிரே"
"அள்ளி அரவணைத்து அன்பு பொழிந்து
ஆரத் தழுவி ஆசை தூண்டி
இதயம் மகிழ்ந்து இதழைப் பதித்து
ஈரமான நெஞ்சம் ஈர்த்துப் பிணைத்து
எழுச்சி கொள்ளும் எந்தன் உயிரே!"
"அக்கறையாய் பேசி அன்பு ஊட்டி
ஆதரவு கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி
இடுப்பு வளைவு இன்பம் சொரிய
ஈவு இரக்கத்துடன் ஈருடல் ஓருயிராக
உரிமை நாட்டும் உத்தம உயிரே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"தேடும் கண்களே"
"தேடும் கண்களே
ஓடும் உலகில் நீயோ
நாடும் நங்கையின் அழகை அனுபவிக்கிறாயே!
காடும் மலையும் பெரிதல்ல
வாடும் கொக்காய் இரவும் பகலும்
ஆடும் நெஞ்சே பெரிது!
சிறுத்த இடையும் செவ்விதழும்
உறுத்தும் பார்வையும்
அறுத்து எடுக்குதே என் இதயத்தை!
கருத்த கூந்தல் காற்றில் ஆட
ஒருத்தி அருகில் வந்தால்
குருத்து ஆசை விழிகளில் மலருதே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு
கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது. உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.
"போனால் போகட்டும் போடா"
"போனால் போகட்டும் போடா மனிதா
போதை போனதும் தெரியுது உலகமடா
ஆசை கொண்டு துள்ளித் திரிந்தேனே
ஆரவாரம் செய்யாமல் அடங்கிப் போனேனே!"
"ஈன இரக்கமின்றி அகந்தை கொண்டேனே
ஈரக்கண் பலருக்கு என்னால் நனைந்ததே
ஈன்ற பிள்ளைகளையும் மறந்து வாழ்ந்தேனே
இன்று பாடை தூக்கவும் யாருமில்லையே!"
"ஊடல் கொண்டு சென்ற மனைவியை
கூடல் கொண்டு அள்ளி அணைக்காமல்
தேடி ஒருவளுடன் துய்த்து மகிழ்ந்தேனே
ஊமையாய் இன்று உறங்கிக் கிடக்கிறேனே!"
"உண்மை இல்லா பற்றில் பாசத்தில்
உணர்ச்சி மட்டும் வாழ்வென நம்பி
உள்ளதையும் இழந்து நோயையும் பிடித்து
ஒதுங்கி தனித்து சுடுகாட்டில் படுக்கிறேனே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து திருந்த ஒரு நையாண்டி பாடல்]
காலை:
"கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான்
முந்தைய கடனை பேசி வாங்கிறான்
சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான்
சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான்
செந்தணல் சூரியன் மேலே எழுகிறான்
பந்தி பந்தியாய் பறவை பறக்குது
மந்த வெயில் மெல்ல சுடுகுது
எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!"
நண்பகல் [மத்தியானம்]:
"சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான்
கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள்
சந்தனப் பொட்டு பள பளக்குது
சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான்
செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள்
வெந்திய குளம்பு அடுப்பில் கொதிக்குது
சிந்திய முத்துகள் பொறுக்கி எடுத்து
எந்தன் ஊர்வசி அரட்டை அடிக்கிறாள்!!"
மாலை:
"தொந்தி பிள்ளையாரை விழுந்து கும்பிட்டு
வந்தனம் கூறி வசந்தி போறாள்
பிந்திய பகலில் சூரியன் மறைகிறான்
சுந்தரி பிள்ளைக்கு நிலவு காட்டுறாள்
பந்து பிடித்து செந்தாமரை துள்ளுறாள்
சந்து பொந்துக்குள் குஞ்சுகள் போகினம்
உந்தி ஊஞ்சலை விரைவா ஆட்டி
எந்தன் சிந்து, பைரவி பாடுறாள்!!!"
இரவு:
"சுந்தரி பிள்ளையை தொட்டிலில் ஆட்டுறாள்
கந்தப்பு விராந்தையில் பாய் விரிக்கிறான்
வந்தோரை வசந்தி அன்பாய் கவனிக்கிறாள்
சந்தானம் அவளுக்கு ஒத்தாசை புரிகிறான்
செந்தாமரை மாடியில் சரித்திரம் படிக்கிறாள்
அந்தபுரத்து ரகசியங்கள் அலசி பார்க்கிறாள்
தந்தன தந்தன தாளம் போட்டு
எந்தன் மாதவி அபிநயம் பிடிக்கிறாள்!!!!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
குறிப்பு: நான் விளங்கிக்கொண்ட நையாண்டி இதுதான்!!