தமிழினி நாங்கள் உங்களை தனிப்பட்ட ரீதியில் சொல்லவில்லை... உங்கள் சார்பு வாதத்தைக் குறிக்க உங்களைச் சுட்டுவது போல் சொன்னம்..தவறாக எண்ணாதீர்கள்...!
நீங்கள் தொடர்ந்தும் ஒன்றைத்தான் சொல்கிறீர்கள் கவர்ச்சி வேண்டாம் என்று...நாமும் அதைத்தான் சொல்கிறோம்...ஆனால் சினிமாவால்..ஒரு வர்த்தக் கலையால்...அதை இழக்க முடியாது எனும் போது அதற்காக சினிமா முற்று முழுதாகக் கூடாது கெட்டதையே தருகிறது என்பது போலான கருத்தையே மறுதலிக்கின்றோம்...!
இப்போ இராமயனத்திலும் சரி மகா பாரதத்திலும் சரி மணிமேகலையிலும் சரி... எமது பாரம்பரிய விழுமியங்களுக்கு... சமூகத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் இருக்கு...அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்கிறோமா...இல்லையே..அதை ஒரு உதாரணமாகக் கொண்டு இப்படி இப்படி செய்வது இன்ன இன்ன கேடுகளை விளைவிக்கும் என்று காட்டுவதற்கு பயன்படுத்தவில்லையா...! இப்போ இராமாயனத்தில் அப்படிச் சொல்லப்பட்டிருக்கே இப்படிச் சொல்லப்பட்டிருக்கே நானும் அப்படி இருந்தால் என்ன என்று மாற்றான் மனைவியைக் கடத்திப் போய் திருமணம் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்த முடியுமா...??! (சமூகத்தில் சில இடங்களில் இதை விடக் கேவலாமா எல்லாம் நடக்குது..அது வேற விசயம்...!)...! இல்லையல்லவா...அதுபோலத்தான் சினிமாவிலும் சென்சாருக்குப் பின்னரான காட்சிகள்தான் எமக்கு அளிக்கப்படுகிறது....அதற்குள்ளும் எமது அளவுகோலுக்கு ஏற்ப மிஞ்சிய கவர்ச்சியோ அருவருப்புக் காட்சியோ இருக்கலாம் (மற்றவர்களுக்கு அது அருவருப்பில்லாமலும் இருக்கலாம்) அதை நாம் தான் தவிர்க்க வேண்டுமே தவிர எமக்காக சினிமா செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது...அவர்களுக்கு அது முக்கியமாக இருக்கலாம்...!
அவர்கள் சமூகத்தில் அனைத்துத் தரப்பையும் திருப்திபடுத்தினால் தான் பிழைப்பு...! நீங்களே சொல்லிவிட்டீர்கள் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க மாட்டார்கள்..மட்டமாகச் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள்...அதிமட்டமாகவும் சிந்திக்க ஆட்கள் இருக்கிறார்கள்...மிக உயர்வாகவும் சிந்திக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்று...இப்படியான ஒரு சமூகத்தில் ஒரு சினிமாக்காரன் தனது இலாபம் கருதி எப்படி ஒரு படத்தை தயாரித்து இலாபம் ஈட்ட முடியும்...??! சினிமாவில் வியாபாரம் தான் முக்கியம்...அதற்குப் பிறகுதான் அதன் சமூகத்தாக்கம் பற்றிய சிந்தனைகள்... ஆய்வுகள்...!
அவன் என்ன செய்ய முனைவான் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் தனது படத்தின் மூலம் தீனி போட்டுத்தான் தனக்குத் தேவையான அளவு வருவாயை ஈட்டமுயல்வான்...அது வியாபார நோக்கம் கொண்ட சினிமாக் காரனின் தவறா....இல்ல சமூகத்தில் உள்ளவர்கள் வெளிப்படுத்தும் தங்கள் வேறுபட்ட பார்வைகளின் தவறா...???!
இப்படிச் சமூகத்தில் உள்ளவர்கள் மத்தியில் தோன்றும் வேறுபட்ட பார்வைகள்.. பழக்க வழக்கங்கள்... நடத்தைகள் வரக் காரணம் என்ன...??! அதை சினிமா மட்டும்தான் வழங்குகிறது என்பதைத் தான் நாம் நிராகரிக்ககின்றோம்... அதை நோக்கியதே எமது வாதமும்...! இது சினிமாவுக்கான வக்காளத்தல்ல...! அதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்...!
கலாசாரம் என்பது எல்லோருக்கும் பொதுவான விடயம்...இப்படியான மாறுப்பட்ட சிந்தனை உள்ள சமூகத்தில் எப்படி ஒரு பொதுவான விடயத்தில் எல்லோரும் ஒருமித்திருக்க முடியும்...??! சாதாரண கணவன் மனைவிக்குள்ளேயே இல்ல காதலன் காதலிக்குள்ளேயே...இல்ல நண்பர்களுக்கிடையேயே...ஒரு ஒருமித்த எண்ணப்பாடு வருமுடியாத சந்தர்ப்பங்கள் பல இடத்திலும் நடக்கிறது...இப்படியான ஒரு சமூகத்தில் திரைப்படம் மட்டும் இதுதான் சமூகத்தின் தேவை என்று எப்படி வரையறுப்பது...???!
இப்போ நாங்கள் சிகரட் குடிக்கவில்லை...மதுபானம் அருந்தவில்லை...அவை கலாசார சீர்கேடு மட்டுமன்றி...உடல்நலத்துக்கும் கேடானவை...என்று எண்ணும் போது அதையே மற்றவர்கள் என்ன என்று எண்ணி அவற்றிற்கு அடிமையாகிறார்கள்....! இதைப் பற்றி சினிமாவில் என்ன ஒவ்வொரு வீட்டுக்கு அறிவித்தும் ஒவ்வொரு சிகரட் பெட்டியில் அறிவித்தும் என்ன மாற்றம் ஏற்பட்டது....புகைப்பிடிப்போர் வீதம் அதிகரித்ததுதான் மிச்சம்....! இதே விளைவைத்தான் சமூகம் சினிமாவுக்குள்ளும் தேட சினிமாக்காரர்கள் அவர்களுக்கு தீனி போடுகிறார்கள்....! இப்போ சொல்லுங்கள் சினிமாக்காரன் தீனி போட யார் காரணம்...நீங்களா...அவர்களா...???! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சோஷல் என்றும் ராக்கிங் என்றும் நம்மவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அனுபவித்த பலர் இருப்பார்கள்...அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்...நாம் இந்த இரண்டையும் ஆரம்பம் முதலே எதிர்க்கின்றோம்...! அவை எம்மை அணுகவும் அனுமதிக்கவில்லை...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>