Aggregator

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 week 4 days ago
காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளைத்தேடி, அவர்களுக்கு என்ன நடந்தது என அறிய பல வருடங்களாக அவரை இழந்தவர்கள் தெருக்களிலே போராடி வருகிறார்கள். அவர்களை ஏன் என்று கேட்க யாரும் முன்வரவில்லை, அவர்கள் தேடும் உறவுகளில் சிலரோ பலரோ இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கலாம். இந்தப்புதைகுழி விவகாரம் பலவருடங்களாக நிலுவையில், கிடப்பில் போடப்பட்டிருந்தது. இன்று ஓடி வரும் எந்த அரசியல்வாதியும் இந்த விவகாரம் வெளியில் வரும்வரை அதைப்பற்றி சிந்திக்கவோ, அழுத்தம் கொடுக்கவோ முன்வரவில்லை. மாறாக இனவழிப்பு நடந்ததென நிரூபிப்பதற்கு ஆதாரம் இல்லையென விவாதித்தனர். இப்போ எதற்கு அடித்து பிடித்து வருகிறார்கள், எதை சாதிக்கப்போகிறார்கள்? அதாவது ஐ .நா. மனித உரிமை ஆணையாளர் வரவிருக்கும் சந்தர்ப்பத்தில், தாம் தான் மக்களின் தலைவர்கள் என்று தம்மை முன்நிலைப்படுத்த முண்டியடிக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய துடிக்கிறார்கள். சுமந்திரன் தன வாலை அனுப்பி நோட்டம் விட்டிருக்கிறார், சேனையோடு வந்திறங்க. மக்கள் நிதானமாகவே இருக்கிறார்கள். இவர்கள் யாரையும் நம்ப இனிதயாராக இல்லை. ஆயுதப்போராட்டத்தை நான் வரவேற்கவில்லை என்று சொன்னவர்கள், தமிழரை அழித்தவர்களோடு, பொது மக்களை வகைதொகையின்றி கொலை செய்தவர்களோடு கிறிக்கற் விளையாடலாம், பொப்பிப்பூ குத்தி இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தலாம். இது முரண்பாடாக தெரியவில்லை சம்பந்தப்பட்டவர்களுக்கு. மக்களையும் அவர்களது இழப்புகளையும் துயரங்களையும் விற்று பிழைக்கும் பிழைப்புவாதிகள்.

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 week 4 days ago
ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்தியா வெல்லும் என தெண்டூல்கர் கணித்துள்ளதாக ஒரு தகவல் வாசித்தேன். முதலாவது இந்தியா தோல்வி. இவர் எதிர்வுகூறல் எப்படி என்று பார்ப்போம்.

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 week 4 days ago
புலி போட்ட சூட்டில் முன்னாள் தலையாட்டி களுக்கு இப்பவும் வலிக்குது போல் உள்ளது .

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
என்ர‌ வ‌ண்டி இன்னும் 5வ‌ருட‌ம் ஓடுமோ தெரியாது , நீங்க‌ள் 25வ‌ருட‌த்துக்கு போய் விட்டிங்க‌ள் அப்ப‌ உங்க‌ளுக்கு 81வ‌ய‌து ஆகி விடும் , புகை பிடிக்காம‌ ம‌து அருந்தாம‌ கிமிக்க‌ள் சாப்பாடுக‌ளை த‌விர்த்தால் உங்க‌ட‌ விருப்பம் நிறைவேறும்............................இன்னும் 25வ‌ருட‌ம் க‌ழித்து யாழ்க‌ள‌த்தில் யாரும் எழுதுவின‌மான்னா ச‌ந்தேக‌ம் தான் குரு , தின்ட‌ சோறு செமிக்க‌ இதுக்கை இருந்து குப்பைய‌ கொட்டுகிறோம் லொள்😁😛......................... புரியுது👍................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
பையன் சார், தமிழ்நாட்டை பற்றிய உங்களின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் நான் இங்கே சொல்ல விரும்பிய விடயம் இதுவல்ல. இன்று இணையத்தில் உலாவும் காணொளிகள் எவ்வளவு போலியானவை, திட்டமிட்டு சோடிக்கப்பட்டு தயாரிக்கப்படுபவை என்றே சொல்ல நினைத்தேன். அதனால் இவற்றை மட்டும் ஆதாரங்களாகக் கொண்டு எதையும் நிறுவ முயலாமல் அல்லது புரிந்து கொள்ள முயலாமல், பல்வேறு தரப்புகளையும் நிகழ்வுகளையும் ஒன்றாகத் தொகுத்து ஒரு முடிவுக்கு வருவதே ஓரளவாவது சரியாக இருக்கும் என்று சொல்லவே வந்தேன். தமிழ்நாட்டு டாஸ்மாஸ்க் விடயம் ஒரு உதாரணம் மட்டுமே...................🤝.

கட்சிப் பதவிகளைத் துறந்தார் ரவிகரன் எம்.பி.

1 week 4 days ago
கட்சிப் பதவிகளைத் துறந்தார் ரவிகரன் எம்.பி. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே பாராளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக அறியமுடிகின்றது. அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தாம் கட்சிப்பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு நேற்று (24) கடிதத்தின் மூலம் அறிவித்திருப்பதாகவும் மேலும் அறியக்கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.thamilan.lk/articles/u74RKtGpHlBqFIXlbMAK

கட்சிப் பதவிகளைத் துறந்தார் ரவிகரன் எம்.பி.

1 week 4 days ago

கட்சிப் பதவிகளைத் துறந்தார் ரவிகரன் எம்.பி.

image?url=https%3A%2F%2Ffirebasestorage.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக அறியமுடிகின்றது.

அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே பாராளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக அறியமுடிகின்றது.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தாம் கட்சிப்பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு நேற்று (24) கடிதத்தின் மூலம் அறிவித்திருப்பதாகவும் மேலும் அறியக்கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.thamilan.lk/articles/u74RKtGpHlBqFIXlbMAK

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
பெரும்த‌லைவ‌ர் த‌மிழ் நாட்டு முத‌ல‌மைச்ச‌ரா இருந்த‌ போது அங்கு எல்லாம் ந‌ல்ல‌ நிலையில் தான் இருந்த‌து அந்த‌ ம‌னுச‌ன் ஊழ‌ல் செய்ய‌ வில்லை , ப‌ல‌ ஆயிர‌ம் ப‌ள்ளிக‌ளை க‌ட்டி பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைச்சார் , திராவிட‌ம் பிள்ளைக‌ளை குடிக்க‌ வைச்ச‌து இது ம‌றுப்ப‌துக்கு இல்லை அண்ணா................... நான் த‌மிழ்சினிமா 18வ‌ய‌தோட‌ பார்க்காம‌ விட்டு விட்டேன் , X இன்று த‌ள‌த்தில் ஒரு காணொளி பார்த்தேன் யாரோ ந‌டிக‌ர் போதை பொருள் பாவித்த‌தாக‌ , ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளே டாஸ்மார்க்கில் வேண்டி குடிக்கின‌ம்😮👎....................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
முதலீடுகள் இரண்டு வழிகளில் மட்டுமே வரும். ஒன்று சேமிப்பு. இரண்டாவது, போதிய சேமிப்பு இல்லாவிட்டால், கடன். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மிகக் குறைவாக சேமிப்பவர்கள் அமெரிக்கர்கள். சேமிப்பே கிடையாது. பிறகு முதலீடுகளுக்கு எங்கே போவது............. ஆனால் உலகமே அமெரிக்காவில் முதலிடுகின்றது. அமெரிக்காவிற்கு ஒவ்வொரு நாட்டுடனும் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இலங்கையுடன் கூட. அது இலங்கை அமெரிக்காவில் இடும் முதலீடு. சீனா முதலிடுகின்றது, மெக்சிக்கோ முதலிடுகின்றது............. எல்லாமே கடன்களாக இந்த நாட்டுக்குள் வருகின்றன. அதுவே கட்டிடங்களாக, தொழில்நுட்பங்களாக, ஐபிஓக்களாக, எலான் மஸ்க்குகளாக மாறுகின்றன. இதை ஏன் வேறு ஒரு நாட்டில் உலகம் முதலிட முடியாதுள்ளது............ ரஷ்யாவில் முதலிட முடியாதா, சைனாவில் முதலிட முடியாதா.............. முடியாது என்பதே இன்றைய நிலவரம். இத்தனைக்கும் சைனாவிலோ அல்லது ரஷ்யாவிலோ அதன் தலைவர்கள் இறக்கும் வரை மாறுவதில்லை, அவர்களின் கொள்கைகளில் மாற்றம் இல்லை, அரச நிர்வாகத்தில் தனித்தனியான சுதந்திரம் உள்ள அமைப்புகளினால் ஏற்படும் கட்டுப்பாடுகள் அங்கு இல்லை. ஆனாலும் முதலிடுபவர்கள் எதிர்பார்க்கும் ஒரு நம்பகத்தன்மையும், வெளிப்படையும், சுதந்திரமான நிர்வாக அமைப்புகளும் அங்கு இல்லை. இந்த காரணங்களுக்காகவே டாலர் பெறுமதியாக இருக்கின்றது, அமெரிக்காவிற்கு கடன்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா எறியும் காசு அவர்களுடையது அல்ல. ஆனாலும் மற்றவர்களுக்கு அதை கொடுப்பதற்கு வேறு இடமும் இல்லை. அமெரிக்காவின் பிரச்சனை திருப்பிச் செலுத்தும் வட்டியின் அளவு. இது இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது என்று சிந்திக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். அதனால் அரசாங்கம் இனி சேமிக்கப் போகின்றார்களாம்.

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 week 4 days ago
தெரிந்து கொள்ள கேட்கிறேன்... செம்மணி படுகொலைகள், புதைகுழிகள் பொய்யானவை என்று இவரோ இவர் சார்ந்த கட்சியோ கூறிய கருத்தை எங்கே தேடலாம்?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
மற்றதுக்கு பின்பு. அனால், அமெரிக்காவின் இவ்வளவு 'வளத்தின்' காரணம் என்ன? மிக முக்கியமானது கடன் வாங்கும் தகமை. அதனால் தான் அமெரிக்கா எதுக்கும் காசை எறியக் கூடிய நிலையில் இருப்பது. (சீன கடன் வழங்குவது - அதனால் அதுக்கு ரேட்டிங் அவ்வளவு தாக்கம் இல்லை, ஆயினும் உயர்வதை விரும்பும். இதவும் ஒரு காரணம் அமெரிக்கா சீனாவின் சர்வதேச வர்த்தகத்தை குழப்ப எத்தனிப்பது வரியால் மற்ற நாடுகளுக்கும் சேர்த்து, வரி குறைப்பின் ஒரு பேரம் சீனவியுடன் வர்த்தகத்தை குறைப்பது. சீனாவை தனிமைப்படுத்துவது. ஏனெனில், சீனாவின் அமெரிக்காவுக்கான வர்த்தக தொகையான 500 பில்லியன் கொடுக்கும் 'முழு பொருளாதார' நன்மையையும் எடுத்தால், புறக்கணிக்க தக்க தொகை. அதாவது TRump இன் வரியின் நோக்கம் வேறு.) அத்துடன் போக்கையும் - அதாவது இது இன்னும் மோசமாகும் நிலைட்டே காணப்படுவதுஎன்பதை rating agencies சொல்வது. காரணம் உள்ளமைப்பு பிரச்சனைகளும். அமெரிக்காவின் ஒவ்வொரு தொழில்நுட்ப மேலாண்மையும் பார்த்தல் - எவ்வளவு காசு எறியப்பட்டு உள்ளதோ அவ்வளவு மேலாண்மை. அதுக்காக அமெரிக்காவிடம் தொழில்நுடப்பா திறமை இல்லை என்று சொல்லவில்லை, ஏனெனில் தொழில்ட்பம் முதலில் idea. ஆனால் ஐடியா வேறு, அதை யதார்த்தத்தில் கொண்டுவருவது வேறு. இதையும் உள்ளடக்கி பணம், கடன் வாங்கும் தகமை மிக முக்கியம். பொருளாதாரம் அப்படி இயங்குவத்தால், அதாவது வெளியார் கடனில். முதலில் வேறு திரியில் சொல்லி இருக்கிறேன் gdp - வெலிக்கடன் அமெரிக்கா 36 - 26 சீனா 19 - 2.5 (3) அமெரிக்கா பொருளாதார நிபுணர்கள் சொல்வது 26 ஐ வாங்கி , 36 ஐ உடற்பதி செய்து, 10 நிகர லாபம் எனது கடன் வாங்கும் தகைமையையில் மிக கூட தங்கி இருப்பது. சீனாவுக்கு சொல்ல தேவை இல்லை, ஏனெனில் அது வர்த்தகத்தில் பணம் பெறுவது,

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
நேற்று இரவு தமிழ்நாட்டு செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென்று ஒரு செய்தி பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் கேட்பது சரிதானா என்று மிகவும் உன்னிப்பாகக் கேட்டேன். என் காதில் செய்தி சரியாகவே விழுந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு ஊரில் அங்கிருக்கும் டாஸ்மாஸ்க் கடையை அகற்ற வேண்டாம் என்று சில பெண்கள் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்!! அதைத் தொடர்ந்து வந்த அடுத்த செய்தியில் இன்னொரு ஊரில் அங்கிருக்கும் டாஸ்மாஸ்க் கடையை அகற்றும் படி பெண்கள் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இதில் எது உண்மை, எது சோடிக்கப்பட்ட ஒரு நாடகம், களநிலை எது, தேவையானது எது என்பதை இந்த இரண்டு செய்தித் துண்டுகளில் இருந்தோ அல்லது இவற்றை துண்டு துண்டாக கொண்டு வரப் போகின்ற யூடியூப் காணொளிகளில் இருந்தோ மட்டும் சொல்லிவிடமுடியாது. தமிழ்நாட்டுக் கிராமங்களின் நிலை மற்றும் டாஸ்மாஸ்க் பற்றிய புரிதல் ஏற்கனவே இருந்தால் மட்டுமே இவற்றின் பின்புலங்கள் என்னவென்று தர்க்கரீதியாக சிந்திக்கமுடியும். அப்படியான புரிதல்கள் இல்லாவிட்டால், டாஸ்மாஸ்க் கடைகளுக்கு குடும்பப் பெண்களே ஆதரவு கொடுக்கின்றார்கள் என்ற செய்தியும் சரியென்றே தோன்றும்.

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 week 4 days ago
புலம்பெயர்ந்து இருப்பவர்களை விட தாயகத்தில் இருப்பவர்களுக்குத்தான் உள் விடயங்கள் பல தெரியும். அடித்து கலைத்ததில் நியாயம் இருப்பதாகவே எனக்கு தெரிகின்றது. அவனவன் வலி அவனவனுக்கு மட்டுமே தெரியும்.

இஸ்ரேல்- ஈரான்: எதைச் சொல்ல?

1 week 4 days ago
கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படம் மாதிரி "இந்தா வருகுது வருகுது" என்று எத்தனை வருடங்களாக இந்த பிரிக்ஸ் இன்னும் வந்து கொண்டிருக்குது😂? இந்த "பல்துருவ" உலகை நாடும் எழுத்தாளர்களும் அதை ஒரு காரணியாக எடுத்துக் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.