'கடைக் கண்ணாலே இரசித்தேனே'
'கடைக் கண்ணாலே இரசித்தேனே'
கடைக் கண்ணாலே இரசித்தேனே அன்று
கடைத் தெருவிலே ஒன்றாய்ப் போனோமே!
இடைவெளி விட்டு நடந்து சென்றாலும்
இடையை வருட உன்கை மறக்கவில்லையே!
பொதுநூலகம் புத்தகம் மட்டுமா தந்தது
பொறுமையாக அழகைப் பார்க்கவும் விட்டதே!
பொறாமை கொண்டேன் உன்னைக் கண்டு
பொங்கி எழுந்ததே காதலும் காமமும்!
பொய்யிலே பிறந்த கவிதாயினி நானல்ல
மெய்யிலே கவர்ந்த காந்தை இவளே!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்