Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனங்களில் நிலையான தமிழ் வீரரே!
#1
மனங்களில் நிலையான தமிழ் வீரரே - எங்கள்
மண்ணினில் விதையான மாவீரரே
மனங்களில்....

விலங்கினை உடைத்திடச் சென்றீர்களே - எங்கள்
விடுதலை மூச்சினில் நின்றீர்களே
மனங்களில்....


தலைவனின் பாதையில் சென்றீர்களே - துட்ட
பகைவனை விரட்டவே வந்தீர்களே
மனங்களில்....

ஊரோடு உலகோடு இணைந்தீர்களே - எங்கள்
வேராகி விழுதாகிப் பரந்தீர்களே
மனங்களில்....

இன்றுங்கள் கல்லறையில் ஒளியேறுமே - என்றும்
எம் இதயத்தில் நினைவூறுமே!
மனங்களில்....
.
Reply
#2
<img src='http://www.tamilmaravan.com/Backround/Animation/fire.gif' border='0' alt='user posted image'><img src='http://www.tamilmaravan.com/heros/Heros_Page_Pic/MAAVITAR.gif' border='0' alt='user posted image'><img src='http://www.tamilmaravan.com/Backround/Animation/fire.gif' border='0' alt='user posted image'>

[b][size=18]மரணத்துகஞ்சும் மனிதரல்ல நீவீர்
மரணத்துள்ளும் இலட்சியம் தேடும்
அற்புதங்கள் நீவீர்...!
மரணத்தால் உம் சரீரம் அழித்தீர்
மண்மட்டுமல்ல
தமிழன் மானம் காக்கவுமே..!
இல்லையில்லை
[size=18][b]மண்ணில் புதிய சரித்திரம் படைக்கவே....!
உமக்காய் நாம் செய்வது
எம்மரணம் வரை
உம் சாதனை காப்பதுவும் -அதை
சந்ததிகள் கொண்டு
மண்ணில் என்றும்
நிலைப்படுத்துவதுமே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
<b>நிஜத்தில் படைத்த சாதனைகளின் பின்னால்
நிழல்களாய் தூங்கும் சரித்திர நாயகர்களே
உதிர்வின் உயிர்ப்பில் உதிந்திட்ட ஓர்நாள்
கார்த்திகை இருபத்தி ஏழில் கைகளில் விளக்குடன்
நெஞ்சத்து சோகங்கள் விம்மியழ....
நாம் செலுத்துகின்ற அஞ்சலிக் கோலங்கள்
உங்கள் கல்லைறையை புூஜீக்கின்றன</b>
Reply
#4
மனங்களில் நிலையான மாவீர்களை நினைவுகூரும் அதே வேளை இவர்களும் நம் மனதில் என்றென்றும் நிலை நிறுத்தப்பட வேண்டியவர்கள். இந்த யுத்தத்தில் உடல் ஊனமுற்ற அந்த போராளிகள். இந்த வீரர்களின் கட்டுரை ஒன்று பீபீசியில் வந்துள்ளது, வாசிக்கையில் கண்கள் கலங்குகிறது!!

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/3343287.stm
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)