03-09-2006, 12:43 AM
கவி எழுதும் ஆசை
பட்டப்பகல் அன்று மணியோ பன்னிரண்டு
கொட்டும் மழையில்லை கீழ்வானம் சிவக்கவில்லை
நட்டுவைத்த நடுவளவு உயர்வேம்பின் கீழ்நிழலில்
நாற்காலி ஒன்றுபோட்டு நானும் அமர்ந்திருந்தேன்
பொட்டுவைத்த பெண் பிரம்மாவின் நாயகியை
தொட்டு மனத்திலே தேவாரம் ஒன்றுசொல்லி
சொட்டச் சொட்டத்தமிழ் சுவையான கவிபடைக்க
எட்டாத கற்பனையை எட்டிவிட முயன்றிருந்தேன்
கட்டான என்மனையாள் கடைத்தெரு சென்றுவந்து
சுட்டிப்பயல் தன்னைத் து}க்கத்திற் கனுப்பிவிட்டு
வெட்டிக் கறிவைத்த விளைமீனின் வாசனையை
எட்டநின்றே நாமீது நீரூற நனைந்திருந்தேன்
கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்திடவா?
பட்டப்பகலில் அது பலிக்காது என்றெண்ணி
கொட்டாவியோடு கொடும் பசியும் குரல்வளையை
எட்டிப் பிடித்திடவே மொய்த்தபடி கண்ணயர்ந்தேன்
சொட்டக் கவியென்று சொல்லி அங்குவந்து
குட்டித் து}க்கமிடல் குற்றமே என்பதுபோல்
எட்டாத உயரத்தில் இருந்த கருங்காக்கை
கெட்டித்தனமாய் வந்து நேர்கிளையில் அமர்ந்தபடி
சுட்ட பழம்போல் சொரிந்த எச்சத்தை என்
மொட்டந்தலை ஏந்த மருண்டு கண்விழித்தேன்
பட்டால்தான் தெரியும் படுகவி பட்டதுன்பம்
கட்டாயம் கவியெழுத கதிரைகொண் டங்குசெல்லேன்
வீட்டுவேலை செய்யாமல் பாட்டெழுதச் சென்றகவி
புூட்டிவிட்டுக் குளியறையில் புகுந்துவிட்ட மாயமென்ன?
ஏட்டினிலும் ஏதுமில்லை எனஏங்கி என்மனையாள்
ஆட்டிவிட்ட பம்பரமாய் அடுக்களையில் நின்றிருந்தாள்
மூட்டிவைத்த அடுப்பினிலே மூக்கைத் துளைத்தகறி
நு}ர்த்துவைத்த நெருப்பினைப்போல் நொடிப்பொழுதில் ஆகிவிட
ஆட்டிநின்ற தொட்டிலிலே ஆண்மகவும் அலறியெழ
அடுக்களையும் தீப்பிடிக்க கனாக்கண்டு நான்விழித்தேன்
உறவுகளே இக்கவிதையைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்னவென்பதை எதிர்பார்க்கிறேன். கூடியளவு நகைச்சுவை கலந்து எழுதவே விருப்பம். இயன்றவரை முயன்றிருக்கிறேன். இக்கவிதை எழுதி சில வருடங்கள் கழிந்துவிட்டன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பட்டப்பகல் அன்று மணியோ பன்னிரண்டு
கொட்டும் மழையில்லை கீழ்வானம் சிவக்கவில்லை
நட்டுவைத்த நடுவளவு உயர்வேம்பின் கீழ்நிழலில்
நாற்காலி ஒன்றுபோட்டு நானும் அமர்ந்திருந்தேன்
பொட்டுவைத்த பெண் பிரம்மாவின் நாயகியை
தொட்டு மனத்திலே தேவாரம் ஒன்றுசொல்லி
சொட்டச் சொட்டத்தமிழ் சுவையான கவிபடைக்க
எட்டாத கற்பனையை எட்டிவிட முயன்றிருந்தேன்
கட்டான என்மனையாள் கடைத்தெரு சென்றுவந்து
சுட்டிப்பயல் தன்னைத் து}க்கத்திற் கனுப்பிவிட்டு
வெட்டிக் கறிவைத்த விளைமீனின் வாசனையை
எட்டநின்றே நாமீது நீரூற நனைந்திருந்தேன்
கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்திடவா?
பட்டப்பகலில் அது பலிக்காது என்றெண்ணி
கொட்டாவியோடு கொடும் பசியும் குரல்வளையை
எட்டிப் பிடித்திடவே மொய்த்தபடி கண்ணயர்ந்தேன்
சொட்டக் கவியென்று சொல்லி அங்குவந்து
குட்டித் து}க்கமிடல் குற்றமே என்பதுபோல்
எட்டாத உயரத்தில் இருந்த கருங்காக்கை
கெட்டித்தனமாய் வந்து நேர்கிளையில் அமர்ந்தபடி
சுட்ட பழம்போல் சொரிந்த எச்சத்தை என்
மொட்டந்தலை ஏந்த மருண்டு கண்விழித்தேன்
பட்டால்தான் தெரியும் படுகவி பட்டதுன்பம்
கட்டாயம் கவியெழுத கதிரைகொண் டங்குசெல்லேன்
வீட்டுவேலை செய்யாமல் பாட்டெழுதச் சென்றகவி
புூட்டிவிட்டுக் குளியறையில் புகுந்துவிட்ட மாயமென்ன?
ஏட்டினிலும் ஏதுமில்லை எனஏங்கி என்மனையாள்
ஆட்டிவிட்ட பம்பரமாய் அடுக்களையில் நின்றிருந்தாள்
மூட்டிவைத்த அடுப்பினிலே மூக்கைத் துளைத்தகறி
நு}ர்த்துவைத்த நெருப்பினைப்போல் நொடிப்பொழுதில் ஆகிவிட
ஆட்டிநின்ற தொட்டிலிலே ஆண்மகவும் அலறியெழ
அடுக்களையும் தீப்பிடிக்க கனாக்கண்டு நான்விழித்தேன்
உறவுகளே இக்கவிதையைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்னவென்பதை எதிர்பார்க்கிறேன். கூடியளவு நகைச்சுவை கலந்து எழுதவே விருப்பம். இயன்றவரை முயன்றிருக்கிறேன். இக்கவிதை எழுதி சில வருடங்கள் கழிந்துவிட்டன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->