03-04-2005, 05:47 PM
சிறுவர்களா இவர்கள் இல்லை குழந்தைகள்
இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையைஇழிநிலைக்கு கொண்டுவந்ததில் பெரும்பங்காற்றிய சிங்கள பௌத்த சித்தாந்தங்களையும் அதனை தொடர்ந்தும் நிலைநிறுத்த செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் கடும்போக்குகளையும் கருத்தில்கொண்டு சில விடயங்களை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாக இருந்தபோதும் நேற்றய தமிழ்நெற் செய்தியில் வெளிவந்த சில ஒளிப்படங்களே இப்பத்தியை எழுத தூண்டியது.
<img src='http://www.geocities.com/selvazero/webpotoes/col_02_03_05_01_38283_200.jpg' border='0' alt='user posted image'>
இளம் சிங்களசிறார்கள் மதம், போதனை என்றபெயரில் ஏன் இவ்வாறு இனவாத மதவாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றார்கள்? ஒரு சமூகத்துக்கு நெறியை போதிக்கவேண்டிய மதம் ஏனிந்த இழிநிலைக்கு சென்றது? வீடுகளில் தாய் தந்தை சகோதரர்களுடன் வாழவேண்டிய சிறுவர்கள் ஏன் இவ்வாறு மஞ்சள் காவியுடைகளுக்குள் உள் நுழைக்கப்பட்டார்கள்? 18 வயது அடைவதற்கு ஒருமாதம் இருந்தாலே சிறுவர் என்றும் சிறுவர் படையினர் என்றும் கூச்சலிடும் இந்த உலகம் இந்த பத்து வயதினரை பார்க்காமல் கண்ணை மூடுவதேன்?
கடந்த இரண்டாம் திகதி சிறிலங்காவின் தேசாபிமான இயக்கம் என அழைக்கப்படும் அமைப்பால் நடாத்தப்பட்ட பெரியளவிலான பேரணியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் "எதிர்கால பெளத்தபோதகர்களையே" இங்கு காண்கிறீர்கள்.
<img src='http://www.geocities.com/selvazero/webpotoes/col_02_03_05_03_38291_435.jpg' border='0' alt='user posted image'>
இவ்வாறு சிறுவர்களை மதம் என்ற பெயரில் சூனியமான வாழ்வியலுக்குள் இட்டுச்செல்வது குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சிப்போக்கற்ற நிலையையே எடுத்துக்காட்டுகின்றது. எந்த மதமானாலும் மதம் என்ற பெயரில் நடாத்தப்படும் சிறுவர் சிறை வாழ்க்கையை உடைப்பதற்கான குரல்கள் எழவேண்டும். இந்துமதத்தில் இவ்வாறான குறைபாடுகளை சிறுவர் மட்டத்தில் நான் இதுவரை அறியவில்லை. ஆனால் கிறிஸ்தவமதத்தில் குறிப்பிட்ட மார்க்கத்தை தழுவிய சிறுவர்களை பெரியவர்களாகும் வரை சாதாரண கல்விமுறைக்குள் உள்வாங்கி பின்னர்தான் மதபோதகர்களாக்கும் கல்விநெறிக்குள் உட்படுத்தப்படுவதாக எனது நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன். அனைத்து மதநடைமுறைகளை நான் அறிந்திராதபோதும் பௌத்தமதத்தில் இவ்வாறு சிறுவர்களை இவர்களை சிறுவர்கள் என சொல்லமுடியாது, குழந்தைகள் என்பதே பொருத்தம் - அவர்களது இளமை வாழ்க்கையை சிறைப்படுத்தும் இந்நடைமுறை சரியானதா?
<img src='http://www.geocities.com/selvazero/webpotoes/monks-protest_1_231202.jpg' border='0' alt='user posted image'>
இவ்வாறான நடைமுறைகளினுடாக வளர்த்தெடுக்கப்படும் மதபோதகர்கள் சமூகத்துக்கு என்ன வழிகாட்டலை செய்யப்போகின்றார்கள்? அறம் அன்பு போன்ற நல்ல சமூகப்பண்புகளை உருவாக்கவேண்டிய மதம் ன்னசெய்யப்போகின்றது. அதற்கான விடையை இப்படம் தெளிவாக எடுத்துக்காட்டும்.
நன்றி - தமிழ்ச்சங்கமம்
இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையைஇழிநிலைக்கு கொண்டுவந்ததில் பெரும்பங்காற்றிய சிங்கள பௌத்த சித்தாந்தங்களையும் அதனை தொடர்ந்தும் நிலைநிறுத்த செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் கடும்போக்குகளையும் கருத்தில்கொண்டு சில விடயங்களை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாக இருந்தபோதும் நேற்றய தமிழ்நெற் செய்தியில் வெளிவந்த சில ஒளிப்படங்களே இப்பத்தியை எழுத தூண்டியது.
<img src='http://www.geocities.com/selvazero/webpotoes/col_02_03_05_01_38283_200.jpg' border='0' alt='user posted image'>
இளம் சிங்களசிறார்கள் மதம், போதனை என்றபெயரில் ஏன் இவ்வாறு இனவாத மதவாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றார்கள்? ஒரு சமூகத்துக்கு நெறியை போதிக்கவேண்டிய மதம் ஏனிந்த இழிநிலைக்கு சென்றது? வீடுகளில் தாய் தந்தை சகோதரர்களுடன் வாழவேண்டிய சிறுவர்கள் ஏன் இவ்வாறு மஞ்சள் காவியுடைகளுக்குள் உள் நுழைக்கப்பட்டார்கள்? 18 வயது அடைவதற்கு ஒருமாதம் இருந்தாலே சிறுவர் என்றும் சிறுவர் படையினர் என்றும் கூச்சலிடும் இந்த உலகம் இந்த பத்து வயதினரை பார்க்காமல் கண்ணை மூடுவதேன்?
கடந்த இரண்டாம் திகதி சிறிலங்காவின் தேசாபிமான இயக்கம் என அழைக்கப்படும் அமைப்பால் நடாத்தப்பட்ட பெரியளவிலான பேரணியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் "எதிர்கால பெளத்தபோதகர்களையே" இங்கு காண்கிறீர்கள்.
<img src='http://www.geocities.com/selvazero/webpotoes/col_02_03_05_03_38291_435.jpg' border='0' alt='user posted image'>
இவ்வாறு சிறுவர்களை மதம் என்ற பெயரில் சூனியமான வாழ்வியலுக்குள் இட்டுச்செல்வது குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சிப்போக்கற்ற நிலையையே எடுத்துக்காட்டுகின்றது. எந்த மதமானாலும் மதம் என்ற பெயரில் நடாத்தப்படும் சிறுவர் சிறை வாழ்க்கையை உடைப்பதற்கான குரல்கள் எழவேண்டும். இந்துமதத்தில் இவ்வாறான குறைபாடுகளை சிறுவர் மட்டத்தில் நான் இதுவரை அறியவில்லை. ஆனால் கிறிஸ்தவமதத்தில் குறிப்பிட்ட மார்க்கத்தை தழுவிய சிறுவர்களை பெரியவர்களாகும் வரை சாதாரண கல்விமுறைக்குள் உள்வாங்கி பின்னர்தான் மதபோதகர்களாக்கும் கல்விநெறிக்குள் உட்படுத்தப்படுவதாக எனது நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன். அனைத்து மதநடைமுறைகளை நான் அறிந்திராதபோதும் பௌத்தமதத்தில் இவ்வாறு சிறுவர்களை இவர்களை சிறுவர்கள் என சொல்லமுடியாது, குழந்தைகள் என்பதே பொருத்தம் - அவர்களது இளமை வாழ்க்கையை சிறைப்படுத்தும் இந்நடைமுறை சரியானதா?
<img src='http://www.geocities.com/selvazero/webpotoes/monks-protest_1_231202.jpg' border='0' alt='user posted image'>
இவ்வாறான நடைமுறைகளினுடாக வளர்த்தெடுக்கப்படும் மதபோதகர்கள் சமூகத்துக்கு என்ன வழிகாட்டலை செய்யப்போகின்றார்கள்? அறம் அன்பு போன்ற நல்ல சமூகப்பண்புகளை உருவாக்கவேண்டிய மதம் ன்னசெய்யப்போகின்றது. அதற்கான விடையை இப்படம் தெளிவாக எடுத்துக்காட்டும்.
நன்றி - தமிழ்ச்சங்கமம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

