![]() |
|
இலங்கையில் சிறுவர் உரிமை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: இலங்கையில் சிறுவர் உரிமை (/showthread.php?tid=4897) |
இலங்கையில் சிறுவர் உரிமை - Mathan - 03-04-2005 சிறுவர்களா இவர்கள் இல்லை குழந்தைகள் இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையைஇழிநிலைக்கு கொண்டுவந்ததில் பெரும்பங்காற்றிய சிங்கள பௌத்த சித்தாந்தங்களையும் அதனை தொடர்ந்தும் நிலைநிறுத்த செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் கடும்போக்குகளையும் கருத்தில்கொண்டு சில விடயங்களை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாக இருந்தபோதும் நேற்றய தமிழ்நெற் செய்தியில் வெளிவந்த சில ஒளிப்படங்களே இப்பத்தியை எழுத தூண்டியது. <img src='http://www.geocities.com/selvazero/webpotoes/col_02_03_05_01_38283_200.jpg' border='0' alt='user posted image'> இளம் சிங்களசிறார்கள் மதம், போதனை என்றபெயரில் ஏன் இவ்வாறு இனவாத மதவாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றார்கள்? ஒரு சமூகத்துக்கு நெறியை போதிக்கவேண்டிய மதம் ஏனிந்த இழிநிலைக்கு சென்றது? வீடுகளில் தாய் தந்தை சகோதரர்களுடன் வாழவேண்டிய சிறுவர்கள் ஏன் இவ்வாறு மஞ்சள் காவியுடைகளுக்குள் உள் நுழைக்கப்பட்டார்கள்? 18 வயது அடைவதற்கு ஒருமாதம் இருந்தாலே சிறுவர் என்றும் சிறுவர் படையினர் என்றும் கூச்சலிடும் இந்த உலகம் இந்த பத்து வயதினரை பார்க்காமல் கண்ணை மூடுவதேன்? கடந்த இரண்டாம் திகதி சிறிலங்காவின் தேசாபிமான இயக்கம் என அழைக்கப்படும் அமைப்பால் நடாத்தப்பட்ட பெரியளவிலான பேரணியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் "எதிர்கால பெளத்தபோதகர்களையே" இங்கு காண்கிறீர்கள். <img src='http://www.geocities.com/selvazero/webpotoes/col_02_03_05_03_38291_435.jpg' border='0' alt='user posted image'> இவ்வாறு சிறுவர்களை மதம் என்ற பெயரில் சூனியமான வாழ்வியலுக்குள் இட்டுச்செல்வது குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சிப்போக்கற்ற நிலையையே எடுத்துக்காட்டுகின்றது. எந்த மதமானாலும் மதம் என்ற பெயரில் நடாத்தப்படும் சிறுவர் சிறை வாழ்க்கையை உடைப்பதற்கான குரல்கள் எழவேண்டும். இந்துமதத்தில் இவ்வாறான குறைபாடுகளை சிறுவர் மட்டத்தில் நான் இதுவரை அறியவில்லை. ஆனால் கிறிஸ்தவமதத்தில் குறிப்பிட்ட மார்க்கத்தை தழுவிய சிறுவர்களை பெரியவர்களாகும் வரை சாதாரண கல்விமுறைக்குள் உள்வாங்கி பின்னர்தான் மதபோதகர்களாக்கும் கல்விநெறிக்குள் உட்படுத்தப்படுவதாக எனது நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன். அனைத்து மதநடைமுறைகளை நான் அறிந்திராதபோதும் பௌத்தமதத்தில் இவ்வாறு சிறுவர்களை இவர்களை சிறுவர்கள் என சொல்லமுடியாது, குழந்தைகள் என்பதே பொருத்தம் - அவர்களது இளமை வாழ்க்கையை சிறைப்படுத்தும் இந்நடைமுறை சரியானதா? <img src='http://www.geocities.com/selvazero/webpotoes/monks-protest_1_231202.jpg' border='0' alt='user posted image'> இவ்வாறான நடைமுறைகளினுடாக வளர்த்தெடுக்கப்படும் மதபோதகர்கள் சமூகத்துக்கு என்ன வழிகாட்டலை செய்யப்போகின்றார்கள்? அறம் அன்பு போன்ற நல்ல சமூகப்பண்புகளை உருவாக்கவேண்டிய மதம் ன்னசெய்யப்போகின்றது. அதற்கான விடையை இப்படம் தெளிவாக எடுத்துக்காட்டும். நன்றி - தமிழ்ச்சங்கமம் - Mathuran - 03-04-2005 எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களை மந்தைகள் போலவே இந்த உலகம் பார்க்கின்றுது என்பதற்கு இதுவல்ல என்னும் பல சான்றுகளை எம்மால் உலகத்தின் முன் வைத்திட முடியும். ஆனால் வேண்டுமென்றே உலகம் கண்ணை மூடுகின்றமையானது வேதனை தருவனவாக இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சிங்கள சமூகத்துக்கு ஒரு சட்டமும் தமிழ் சமூகத்திற்கு வேறு ஒரு சட்டமும் வைத்துள்ளது என்பது வெளிப்படை. மதம் என்னும் பெயரில் சிறுவயதில் இருந்தே தமிழருக்கு எதிரான சிந்தனைகள் தூண்டப்பட்டு, பின்னாளில் அவர்கள் வளர்ந்து இன மத வெறியாளனாக மாறுவதை கண்டு கொள்ளாத ஐக்கிய நாடுகள் சபை. தமிழர் அளிப்பு என்கின்ற போர்வையில் சிறார்களை ஓட ஓட சுட்டு தீர்க்கின்ற வெறியர்களிடம் இருந்து தன்னை தற்காற்காத்துக்கொள்ள பாதுகாப்பினை நாடினால் அது குற்றம் எனவும் காணுகின்றமையே, இன்றய உலகின் நிஞாய நீதிக்கொடுகளாக கோடுகள் கொடிய அரசாங்கங்களுக்கு சார்பாக வரயப்பட்டுள்ளனவோ என எண்ண தோன்றுகின்றது. :evil: :evil: :evil: :roll: :roll: - வியாசன் - 03-04-2005 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களை விடுதலைப்பலிகள் படைக்கு சேர்த்தல் தவறு . ஆனால் இந்த 6 7 வயது சிறுவர்களை சாமியாராக மாற்றுதல் முறையா? மதுரன் கூறியவை சத்தியமான வார்த்தைகள். UNICEF அமைப்பில் பணியாற்றுகிறவர்கள் தங்கள் உடல்தேவைகளை பூர்த்திசெய்ய( அண்மையில் அந்த அமைப்பின் நிர்வாகி வேலைசெய்த பெண்களுடன் தகாதமுறையில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு பதவியிலிருந்து விலக்கப்பட்டடார்) முயல்வதால் பாசிச அரசுகள் தங்களுக்கு தேவையான அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக சில கொடுப்பனவுகளை கொடுத்து கச்சிதமாக காரியங்களை சாதித்துவிடுகின்றனர். நக்குண்டார் நாவிழந்தார் இவர்களும் கிடைத்த சுகத்துக்காக அவர்களுக்கு தேவையான அறிக்கைகளை விடுகின்றனர் :oops: :oops: :oops: :oops: - Magaathma - 03-05-2005 ´Õ ¸ñ½¢ø ¦Åñ¨½Ôõ ´Õ ¸ñ½¢ø Íñ½¡õÒõ ¨ÅòÐô À¡÷ìÌõ ¯Ä¸¢ø ¿£¾¢Â¡ÅÐ »¡ÂÁ¡ÅÐ. ±ýÉ ¦ºö¢ÈÐ ¾Á¢ÆüÈ ¾¨Ä¦ÂØòÐ þÐ ¾¡É¡? - hari - 03-05-2005 ஏன் எல்லோரும் தப்பாக பேசுகிறீர்கள், இந்த படத்தை பாருங்கள் எவ்வளவு அழகாக மரியாதையாக காவல்துறையினரிடம் பிக்கு ஒருவர் பேசுகிறார் என்று! இதற்கு காரணம் இவர் சின்ன வயதில் இருந்து புத்தரின் போதனைகளை படித்ததால் தான்! <img src='http://www.globaltamil.com/photoshow/albums/userpics/normal_harirajendran%7E5.jpg' border='0' alt='user posted image'> - Mathuran - 03-05-2005 hari Wrote:ஏன் எல்லோரும் தப்பாக பேசுகிறீர்கள், இந்த படத்தை பாருங்கள் எவ்வளவு அழகாக மரியாதையாக காவல்துறையினரிடம் பிக்கு ஒருவர் பேசுகிறார் என்று! இதற்கு காரணம் இவர் சின்ன வயதில் இருந்து புத்தரின் போதனைகளை படித்ததால் தான்! இவரை பார்க்கும்போது புத்தரின் அன்பு போதிக்கப்பட்டவர்போலா காட்சி அளிக்கின்றார்? பேயாண்டால் இப்படித்தான் சில பிணம் தின்னும் மனிடனும் அன்பை போதித்த புத்தனின் ஆடைக்குள் ஒளிந்துகொள்வான். ஆளை வெளியில் விட்டால் நாலுபேரை பிளிந்து தின்பான். - hari - 03-05-2005 காவல்துறைக்கே இப்படி என்றால் இவன்ட நம்மட ஆக்கள் மாட்டுப்பட்ட அதோகதிதான், ஆனால் இவனை என்னால் திருத்தமுடியும், மொட்டையில் 4 இன்யி கொங்கிரிட் ஆணி அறஞ்சால் எல்லாம் சரியாகிவிடும்! - shiyam - 03-05-2005 சிறுவர்களை படையில் சேர்ப்பதுதவறு என்று கூப்பாடு போடும் நிறுவனங்கள் சிறிய 3 4 வயது குழந்தைகளை மதத்தில் பிக்குகள் ஆக்கும் முறையையும் கண்டிப்பதில்லை. அவர்களிற்கு மதம் என்றால் என்ன புத்தர்என்றால் யார் துறவம் என்றால் என்கிற எந்த அடிப்படை அறிவும் இலாமலேயே விழையாடிதிரியும் வயதில் அவர்களின் அனுமதியின்றியே மொட்டையடித்து பிரித்தோத செல்லிகொடுத்து பிக்கு ஆக்குகின்றனர் இது மிகப்பெரிய சிறுவர் வதை ஆகும் சிறுவர்களின் தனிப்பட் ஆசைகளை கொன்று தாய்தந்தையின் அரவணைப்பில் இருக்கவேண்டிய பருவத்தை தெலைத்து அவர்களை மனநோயாளிகளாக்குவது தடுக்கப்படவேண்டும்.அவர்கள் வளர்ந்து வரும்போது மனநோயாளிகளாகி தங்களது சமுதாயத்தின் மீதான வெறுப்பை காட்ட தொடங்கும்போது அதற்கு வடிகாலாக தமிழ் சமூகம் மிது திருப்பி விடப்படுகிறதே தவிர அவர்கள் சிந்தனையில் புத்தனின் போதனைகளோ புத்ததனோ இல்லையென்பதே உண்மை |