Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உரிமைக்கு ஒரு குரல் !
#1
உரிமைக்கு ஒரு குரல்

ஞாலத்தில் பரந்து நாற்றிசை வாழும்
ஈழத்துத் தமிழா! நில்!!
வாழத் துடிக்கின்ற ஈழத்தமிழினத்தின்
காலச் சுவடுகளைச் சொல்!

மத்துக்குள் சிக்கிய தயிரடா - இன்றெங்கள்
தமிழரின் நிலையெங்கும்
கடைபவர் கடைகிறார், காடையர் என்கிறார்
தடைகளும் போடுறார் பார்!

எத்தர்கள் சாட்சியும், ஏவலர் சூழ்ச்சியும்
நித்தமும் சூழுது பார்! - இந்த
நித்திலத்தில் வாழும் வித்தகத்தமிழரே!
விரைந்து நீர் எழுந்து வாரீர்!

மற்றவர் .
தப்புக்கணக்கோடு எம் தாய்மண் மீட்பை
தர்க்கித்துத் தாக்குகையில்
உப்பரிகை சுகத்தோடு உல்லாசப் போக்கிருந்தால்
உடனேயே செத்துவிடு! - இல்லை
செப்புகிற நல்லுணர் நாவிருந்தால்
அதை செகத்திற்கு உணர்த்திவிடு!




கனடாவில் இருந்து
வல்வை சகாறா.

[size=6]தலைப்பை தமிழில் மாற்றியிருக்கிறேன் - யாழ்பிரியா
Reply
#2
வாழ்த்துக்கள் வல்வைசகாறா. கவிதை நன்றாக இருக்கிறது.
! ?
'' .. ?
! ?.
Reply
#3
சகோதரா - அருமையான கவிதை - !
உணர்வுகள் வரியெங்கும்-!

புலி -நீங்கள் - உணர்வில மட்டும் இல்ல - தமிழிலயும் !
தொடர்ந்து எழுதுங்கள் - உங்களிடமும் இருந்து - நிறைய அறிய இருக்கு! 8)
-!
!
Reply
#4
உணர்வு பூர்வமான கவிதை வாழ்த்துக்கள்.... தொடர்ந்து எழுதுங்கள்
Reply
#5
கந்தப்பு, வர்ணன்,கௌரிபாலன் ஆகியோருக்கு வல்வை சகாறாவின் நன்றி.
:? :? :?
Reply
#6
அழகான கவிதை வல்வை சகாறா...
அது சரி செகத்திற்கு உணர்த்தி விடு என்றால் என்ன? மன்னிக்க வேண்டும் அர்த்தம் தெரியலை அது தான் கேட்டேன்.

Reply
#7
ரமா நியாயமான கேள்விதான் ஏனெனில் வடஅமெரிக்காவில் 3லட்சம் பேர் இருந்தும் ஈழத்தமிழ்மக்கள் நலன் பேணாதிருக்கும்
நிலையறியும்போது...... :oops: :oops: :oops:


வல்வை சகாறா.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)