![]() |
|
உரிமைக்கு ஒரு குரல் ! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உரிமைக்கு ஒரு குரல் ! (/showthread.php?tid=37) |
உரிமைக்கு ஒரு குரல் ! - valvaizagara - 04-27-2006 உரிமைக்கு ஒரு குரல் ஞாலத்தில் பரந்து நாற்றிசை வாழும் ஈழத்துத் தமிழா! நில்!! வாழத் துடிக்கின்ற ஈழத்தமிழினத்தின் காலச் சுவடுகளைச் சொல்! மத்துக்குள் சிக்கிய தயிரடா - இன்றெங்கள் தமிழரின் நிலையெங்கும் கடைபவர் கடைகிறார், காடையர் என்கிறார் தடைகளும் போடுறார் பார்! எத்தர்கள் சாட்சியும், ஏவலர் சூழ்ச்சியும் நித்தமும் சூழுது பார்! - இந்த நித்திலத்தில் வாழும் வித்தகத்தமிழரே! விரைந்து நீர் எழுந்து வாரீர்! மற்றவர் . தப்புக்கணக்கோடு எம் தாய்மண் மீட்பை தர்க்கித்துத் தாக்குகையில் உப்பரிகை சுகத்தோடு உல்லாசப் போக்கிருந்தால் உடனேயே செத்துவிடு! - இல்லை செப்புகிற நல்லுணர் நாவிருந்தால் அதை செகத்திற்கு உணர்த்திவிடு! கனடாவில் இருந்து வல்வை சகாறா. [size=6]தலைப்பை தமிழில் மாற்றியிருக்கிறேன் - யாழ்பிரியா - கந்தப்பு - 04-28-2006 வாழ்த்துக்கள் வல்வைசகாறா. கவிதை நன்றாக இருக்கிறது. - வர்ணன் - 04-28-2006 சகோதரா - அருமையான கவிதை - ! உணர்வுகள் வரியெங்கும்-! புலி -நீங்கள் - உணர்வில மட்டும் இல்ல - தமிழிலயும் ! தொடர்ந்து எழுதுங்கள் - உங்களிடமும் இருந்து - நிறைய அறிய இருக்கு! 8) - gowrybalan - 04-28-2006 உணர்வு பூர்வமான கவிதை வாழ்த்துக்கள்.... தொடர்ந்து எழுதுங்கள் - valvaizagara - 04-29-2006 கந்தப்பு, வர்ணன்,கௌரிபாலன் ஆகியோருக்கு வல்வை சகாறாவின் நன்றி. :? :? :? - RaMa - 04-29-2006 அழகான கவிதை வல்வை சகாறா... அது சரி செகத்திற்கு உணர்த்தி விடு என்றால் என்ன? மன்னிக்க வேண்டும் அர்த்தம் தெரியலை அது தான் கேட்டேன். - valvaizagara - 04-29-2006 ரமா நியாயமான கேள்விதான் ஏனெனில் வடஅமெரிக்காவில் 3லட்சம் பேர் இருந்தும் ஈழத்தமிழ்மக்கள் நலன் பேணாதிருக்கும் நிலையறியும்போது...... :oops: :oops: :oops: வல்வை சகாறா. |