Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தீபாவளி திருநாள்
#1
<b>தீபாவளி திருநாள்</b>

அன்று,
சீயக்காயிலும், எண்ணையிலும்
தொடங்கிய தீபாவளி !
வாழ்த்து அட்டைகளில்
வழிபடும் கடவுள் படங்கள் !
தாயார் கையால் சுடச்சுட செய்த
நெய்மணக்கும் அதிரசம் !
புத்தாடை அணிந்து,
கூதுகுலத்துடன் கோவில்களையும்
அடையும் தீபாவளி !
வீடுகளிளும், வீதிகளிலும்
விளக்குகளால் ஒளிர்ந்த தீபாவளி என
பண்டிகைகள் பண்பாட்டுச்
சின்னங்களாக ஒளிர்ந்தது !

இன்று,
சின்னத்திரையிலும், வண்ணத்திரையுலும்
அடங்கிய தீபாவளி !
வாழ்த்து அட்டையில்
கவர்ச்சி நாயகிகளும்,
அடிதடி நாயகர்களும் !
தயாராய் அங்காடியில் என்றோ செய்த
இனிப்பு பலகாரங்கள் !
பத்தாடையுடன், விசில் ஒலியுடன்
திரையரங்கின் இருளில்
மறையும் தீபாவளி !
வீதியைத்தாண்டி,
திரை அரங்குகளுக்கு
இடம்பெயர்ந்த தீபாவளி என
பண்டிகைகள் கடமைச்
சடங்குகளாக சிதைந்து !

சிரிக்கும் மத்தாப்புகளில்
சிவகாசி சிறுவர்களின் சிரிப்பும்,
வெடிக்காத ஊசி வெடிகளில்
கடற்கோளால் அமிழ்ந்த
சோக முகங்கள் தெரிய,
இன்னும் அடங்காத துக்கத்தால்,
தீபாவளியின் மங்களமான ஒளிவிளக்கும்
மங்கலாகத்தான் தெரிகிறது !

<b>கோவி.கண்ணன், சிங்கப்பூர்-
</b>
Reply
#2
அன்றுஇ
சீயக்காயிலும்இ எண்ணையிலும்
தொடங்கிய தீபாவளி !
வாழ்த்து அட்டைகளில்
வழிபடும் கடவுள் படங்கள் !
தாயார் கையால் சுடச்சுட செய்த
நெய்மணக்கும் அதிரசம் !
புத்தாடை அணிந்துஇ
கூதுகுலத்துடன் கோவில்களையும்
அடையும் தீபாவளி !


பழைய நினைவுகளை மீட்டு தந்திருக்கின்றீர்கள்... நன்றி இங்கு இனைத்தமைக்கு..

Reply
#3
அன்றைய தீபாவளியும் இன்றைய தீபாவளியும் பற்றிய கவி நன்று. நன்றி மன்னா
----------
Reply
#4
Quote:அன்றுஇ
சீயக்காயிலும்இ எண்ணையிலும்
தொடங்கிய தீபாவளி !
வாழ்த்து அட்டைகளில்
வழிபடும் கடவுள் படங்கள் !
தாயார் கையால் சுடச்சுட செய்த
நெய்மணக்கும் அதிரசம் !
புத்தாடை அணிந்துஇ
கூதுகுலத்துடன் கோவில்களையும்
அடையும் தீபாவளி !

ஐயோ...ஆசையா இருக்கு...ம்ம்..எப்ப பழைய படி அப்படி ஒரு தீபாவளி வருமோ.. Cry Cry Cry Cry
நன்றி ஹரி அண்ணா
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)