11-02-2005, 03:47 AM
முதியோர்களை பாதுகாக்க வழிசெய்யும் சட்டம் ஜப்பானில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதியோர்கள் தங்கள் பிள்ளைகளாலும் மற்றவர்களாலும் கொடுமைக்குள்ளாவது ஜப்பானில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஜப்பானில் முதியோர்களுக்கெதிராக கொடுமை நடந்ததாக ஆயிரத்து 991 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஜப்பானை பொருத்த வரை பெற்றோர்களை மூத்த மகன் தான் கவனிக்க வேண்டும், என்ற வழக்கம் உள்ளது. பிள்ளைகளின் ஆதரவில் வாழ்க்கை நடத்தும் முதியோர்கள் மகனாலும், மருமகளாலும் பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த கொடுமைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக ஜப்பான் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல்முதல் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. முதியோர்களை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்துபவர்களை தண்டிக்க புதிய சட்டம் வழி செய்கிறது. முதியோர்களை பராமரிக்க மறுப்பவர்கள், அவர்களின் சொத்துக்களை தவறாக கையாள்பவர்களை தண்டிக்கவும் புதிய சட்டம் வழி வகுக்கிறது.
Thanks dinamalar..
முதியோர்கள் தங்கள் பிள்ளைகளாலும் மற்றவர்களாலும் கொடுமைக்குள்ளாவது ஜப்பானில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஜப்பானில் முதியோர்களுக்கெதிராக கொடுமை நடந்ததாக ஆயிரத்து 991 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஜப்பானை பொருத்த வரை பெற்றோர்களை மூத்த மகன் தான் கவனிக்க வேண்டும், என்ற வழக்கம் உள்ளது. பிள்ளைகளின் ஆதரவில் வாழ்க்கை நடத்தும் முதியோர்கள் மகனாலும், மருமகளாலும் பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த கொடுமைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக ஜப்பான் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல்முதல் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. முதியோர்களை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்துபவர்களை தண்டிக்க புதிய சட்டம் வழி செய்கிறது. முதியோர்களை பராமரிக்க மறுப்பவர்கள், அவர்களின் சொத்துக்களை தவறாக கையாள்பவர்களை தண்டிக்கவும் புதிய சட்டம் வழி வகுக்கிறது.
Thanks dinamalar..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

