11-11-2005, 08:42 PM
<b>விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய சிறிலங்கா இராணுவம்! ஒப்புக்கொள்கிறார் சரத் முனசிங்க
இராணுவத்தின் முன்னாள் மூத்த அதிகாரியான ஜெனரல் ஒருவர், சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் 1990 களின் பிற்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கெதிராக மேற்கொண்ட பாரிய இராணுவநடவடிக்கையின்போது, புலிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதலுக்கு முகங்கொடுக்கமுடியாது தப்பி ஓடியதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சிறிலங்கா இராணுவ சேவையிலிருந்து இளைப்பாறி ஓய்விலிருக்கும் இந்த முன்னாள் இராணுவப் பேச்சாளர் தற்போது ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவராக உள்ளார்.
கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க, '1999 ஆம் ஆண்டு நவம்பர் முதலாந்திகதி தமது பெறுமதிமிக்க பொருட்கள் அனைத்தையும் போட்டுவிட்டு யுத்தமுனையிலிருந்து இராணுவத்தினர் ஓடிவந்தது எனக்கு நினைவில் நிற்கிறது" என்று குறிப்பிட்டார்.
'வெற்றி நிச்சயம்' ('Jayasikurui' operation) இராணுவநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர், அதற்கெதிராக விடுதலைப்புலிகள் தொடங்கிய ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் முதல் மூன்று தினங்களிற்கிடையிலேயே விடுதலைப் புலிகளது தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாது மாங்குளம், ஒட்டுசுட்டான் ஆகிய யுத்தகளங்களிலிருந்து பின்வாங்கி ஓடியது பற்றிக் கூறும்போதே அவர் மேற்படி சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
ஏறத்தாள 45000 படைவீர்கள் இதுவரை சிறிலங்கா இராணுவத்தை விட்டுத் தப்பியோடியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
[b]நன்றி</b><b>:</b>பி.பி.சியின் சிங்கள சேவை
<b>தமிழில்:</b> திருமகள் (ரஷ்யா)
இராணுவத்தின் முன்னாள் மூத்த அதிகாரியான ஜெனரல் ஒருவர், சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் 1990 களின் பிற்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கெதிராக மேற்கொண்ட பாரிய இராணுவநடவடிக்கையின்போது, புலிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதலுக்கு முகங்கொடுக்கமுடியாது தப்பி ஓடியதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சிறிலங்கா இராணுவ சேவையிலிருந்து இளைப்பாறி ஓய்விலிருக்கும் இந்த முன்னாள் இராணுவப் பேச்சாளர் தற்போது ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவராக உள்ளார்.
கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க, '1999 ஆம் ஆண்டு நவம்பர் முதலாந்திகதி தமது பெறுமதிமிக்க பொருட்கள் அனைத்தையும் போட்டுவிட்டு யுத்தமுனையிலிருந்து இராணுவத்தினர் ஓடிவந்தது எனக்கு நினைவில் நிற்கிறது" என்று குறிப்பிட்டார்.
'வெற்றி நிச்சயம்' ('Jayasikurui' operation) இராணுவநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர், அதற்கெதிராக விடுதலைப்புலிகள் தொடங்கிய ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் முதல் மூன்று தினங்களிற்கிடையிலேயே விடுதலைப் புலிகளது தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாது மாங்குளம், ஒட்டுசுட்டான் ஆகிய யுத்தகளங்களிலிருந்து பின்வாங்கி ஓடியது பற்றிக் கூறும்போதே அவர் மேற்படி சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
ஏறத்தாள 45000 படைவீர்கள் இதுவரை சிறிலங்கா இராணுவத்தை விட்டுத் தப்பியோடியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
[b]நன்றி</b><b>:</b>பி.பி.சியின் சிங்கள சேவை
<b>தமிழில்:</b> திருமகள் (ரஷ்யா)


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&