தூயா இது நம்மக்கு தெரிந்த முறை
பச்சை அரிசி- 2 கப் (உங்க அளவுக்கு எடுங்க)
தேங்காய்,
உப்பு
(தேவைப்பட்டால் ரவை)
பச்சை அரிசியை ஊற வைத்து அரைத்து/இடித்து மா வை எடுங்கள். கொஞ்சம் பெரிய கண்ணுடைய அரிதட்டு பாவிப்பது நல்லது.
அதன் போது வரும் சிறிய குறுணலை புக்கை கஞ்சி காய்ச்ச பாவிக்கலாம். அது முடியா விட்டால்
ரவை ஒரு 100 கிராம் எடுத்து சிறிதளவு கொதிக்கும் நீரில் கலந்து தடிப்பான கூழ் மாதிர் காய்ச்சி கொள்ளுங்கள்.
அரித்து எடுத்த மாவையும், புக்கை கஞ்சிடையும் சேர்த்து தடிப்பாக குழைத்து 8 மணி நேரம் புளிக்க வையுங்கள்
மாவுக்கு போதுமான நீர், உப்பு , அப்ப சோடா சேர்த்து கரைத்துகொள்ளுங்கள். ( முதல் பழகும் போது -நீர் சேர்க்கும் அளவை கண்டு பிடிக்க, சிறிது நீர் சேர்த்து கலந்த பின் சூடான சட்டியில் மாவை வார்த்து பார்க்கலாம். அது சீராக இலகுவாக பரவும் நிலை வரும் வரை நீர் சேர்த்து கலக்குங்கள்.)
பால் அப்பம் தேவை என்றால்
தேங்காய் துருவி அதிகம் நீர்விடாது நல்ல தடிப்பான பாலாக பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.
பதமாக கரைத்த மாவை சூடானசட்டியில் வார்த்து , நடுவில் சிறிதளவு பாலை சேர்த்து மூடி வேக வைத்து இறக்கினால் அப்பம் தயார்.
குறிப்பு
பால் விட்டு அப்பம் சாப்பிட ஒத்து வராதவர்கள் நீருக்கு பதிலாக பாலை விட்டு மாவை கரைத்து பாலற்ற அப்பம் சுடலாம்.
பாலுக்கு பதிலாக முட்டை விட்டால் முட்டை அப்பம்
போதுமா தூயா.................. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>