02-05-2006, 04:58 AM
உன் நினைவுகள்
* உன் பெயர் எழுத
என் பேனா ஓடும் போதெல்லாம்
கேலிச் சிரிப்போடு வந்து
பிள்ளைக் குறும்பாய்
பிடுங்கி எரிந்தாய்!
* உன் மெல்லிய உதடுகளால்
புன்னகையிட்டு மேனியெங்கும்
மின்சாரம் பாய்ச்சி
என் போர்வைக்குள் புகுந்து
நித்திரை கலைத்தாய்!
* என் ஜன்னல் வழி நழுவி வந்து
சில்மிஷக் கணங்களில்
என் பெண்மை பூக்கச் செய்து
உயிரை உருக்கி உலையிலிட்டு
ஜீவன் பருகி தாகம் தீர்த்தாய்!
* உன் முத்தங்களை
பொக்கிஷமாய்
மார்புக்குள் பொத்தி வைத்தேன்
பிரிவின் துயரில் அவை
கரைந்து போயின!
* ஞாபகச் சின்னமான
நம் நிழல்படம்
சிதிலமாகி
சிதைந்து கிடக்கிறது!
* வீதியில் நிராயுதபாணியாய்...
காகித ஓடமாய்
காதல் கடிதம்
கண்ணீரில் நனைந்தபடி!
* கடற்கரை மணலில்
இருவர் பெயரெழுதி ரசித்தபோது
அலை அழித்ததில்
கண்ணீர் வடித்தாய்
நீ இன்று புன்னகைக்கிறாய்!
* புன்னகையால்
உன்னை நேசித்தேன் ஏன்
கண்ணீரால்
காயப்படுத்தினாய்!
* மவுனச் சிறையில்
அடைத்து நீயேன்
மரணத்தை தருகிறாய்!
* மரணத்தின் வாசலை
அடைந்தேன்
உயிருக்குள் நீயிருப்பதால்
மரணம் பற்றிய நினைவே
மறந்து போகிறது!
* வாழ்வின் மிச்சமாய்
நம் காதல் பயணம் இதில்
உன் நினைவுகளும்,
கண்ணீரும் எனக்கு
புன்னகை மட்டும் உனக்கு!
—க.மோகன்,
* உன் பெயர் எழுத
என் பேனா ஓடும் போதெல்லாம்
கேலிச் சிரிப்போடு வந்து
பிள்ளைக் குறும்பாய்
பிடுங்கி எரிந்தாய்!
* உன் மெல்லிய உதடுகளால்
புன்னகையிட்டு மேனியெங்கும்
மின்சாரம் பாய்ச்சி
என் போர்வைக்குள் புகுந்து
நித்திரை கலைத்தாய்!
* என் ஜன்னல் வழி நழுவி வந்து
சில்மிஷக் கணங்களில்
என் பெண்மை பூக்கச் செய்து
உயிரை உருக்கி உலையிலிட்டு
ஜீவன் பருகி தாகம் தீர்த்தாய்!
* உன் முத்தங்களை
பொக்கிஷமாய்
மார்புக்குள் பொத்தி வைத்தேன்
பிரிவின் துயரில் அவை
கரைந்து போயின!
* ஞாபகச் சின்னமான
நம் நிழல்படம்
சிதிலமாகி
சிதைந்து கிடக்கிறது!
* வீதியில் நிராயுதபாணியாய்...
காகித ஓடமாய்
காதல் கடிதம்
கண்ணீரில் நனைந்தபடி!
* கடற்கரை மணலில்
இருவர் பெயரெழுதி ரசித்தபோது
அலை அழித்ததில்
கண்ணீர் வடித்தாய்
நீ இன்று புன்னகைக்கிறாய்!
* புன்னகையால்
உன்னை நேசித்தேன் ஏன்
கண்ணீரால்
காயப்படுத்தினாய்!
* மவுனச் சிறையில்
அடைத்து நீயேன்
மரணத்தை தருகிறாய்!
* மரணத்தின் வாசலை
அடைந்தேன்
உயிருக்குள் நீயிருப்பதால்
மரணம் பற்றிய நினைவே
மறந்து போகிறது!
* வாழ்வின் மிச்சமாய்
நம் காதல் பயணம் இதில்
உன் நினைவுகளும்,
கண்ணீரும் எனக்கு
புன்னகை மட்டும் உனக்கு!
—க.மோகன்,
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

