07-31-2005, 03:03 PM
நீங்கா நினைவுகள்!
* நீ நடந்த பாதையில்
நித்தமும் நடந்தேன்
நிழலாய் தொடர்ந்தன...
உந்தன் நினைவுகள் – உன்
கால் பதிந்த சாலையை
கவனமாய் கடந்தேன்
கை சேர்த்து என்னோடு
வந்ததுன் நினைவுகள்!
* நீ சூடிய மலர்களை
சுகமாய் தொடுத்தேன்
கனவிலும் மணந்தது
காதல் நினைவுகள்... நீ
பாடிய வரிகளை நான்
பாடிக் களித்தேன்
கூடவே கேட்டது
குயிலாய் உன் குரல்!
* நீ நேசித்த கடிதங்களை
நிதமும் படித்தேன்
வாசிக்கும் போதெல்லாம்
வஞ்சியுன் நினைவுகள்... நீ
உரைத்த சொற்களை
உச்சரித்துப் பார்த்தேன்
ஒவ்வொரு கவிதையாய்
உன்னுடைய நினைவுகள்!
* நீ இருந்த இதயத்தில்
நினைவை சுமந்தேன்
இரும்பாய் கனத்தது
இளமை நினைவுகள்... நீ
மறுத்த காதலை
மறக்கப் பார்த்தேன்
முடியாத காரணத்தால்
மண்ணைப் பிரிகிறேன்!
— கு.மா.பா.கபிலன்
* நீ நடந்த பாதையில்
நித்தமும் நடந்தேன்
நிழலாய் தொடர்ந்தன...
உந்தன் நினைவுகள் – உன்
கால் பதிந்த சாலையை
கவனமாய் கடந்தேன்
கை சேர்த்து என்னோடு
வந்ததுன் நினைவுகள்!
* நீ சூடிய மலர்களை
சுகமாய் தொடுத்தேன்
கனவிலும் மணந்தது
காதல் நினைவுகள்... நீ
பாடிய வரிகளை நான்
பாடிக் களித்தேன்
கூடவே கேட்டது
குயிலாய் உன் குரல்!
* நீ நேசித்த கடிதங்களை
நிதமும் படித்தேன்
வாசிக்கும் போதெல்லாம்
வஞ்சியுன் நினைவுகள்... நீ
உரைத்த சொற்களை
உச்சரித்துப் பார்த்தேன்
ஒவ்வொரு கவிதையாய்
உன்னுடைய நினைவுகள்!
* நீ இருந்த இதயத்தில்
நினைவை சுமந்தேன்
இரும்பாய் கனத்தது
இளமை நினைவுகள்... நீ
மறுத்த காதலை
மறக்கப் பார்த்தேன்
முடியாத காரணத்தால்
மண்ணைப் பிரிகிறேன்!
— கு.மா.பா.கபிலன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->