Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்கா நினைவுகள்!
#1
நீங்கா நினைவுகள்!


* நீ நடந்த பாதையில்

நித்தமும் நடந்தேன்

நிழலாய் தொடர்ந்தன...

உந்தன் நினைவுகள் – உன்

கால் பதிந்த சாலையை

கவனமாய் கடந்தேன்

கை சேர்த்து என்னோடு

வந்ததுன் நினைவுகள்!

* நீ சூடிய மலர்களை

சுகமாய் தொடுத்தேன்

கனவிலும் மணந்தது

காதல் நினைவுகள்... நீ

பாடிய வரிகளை நான்

பாடிக் களித்தேன்

கூடவே கேட்டது

குயிலாய் உன் குரல்!

* நீ நேசித்த கடிதங்களை

நிதமும் படித்தேன்

வாசிக்கும் போதெல்லாம்

வஞ்சியுன் நினைவுகள்... நீ

உரைத்த சொற்களை

உச்சரித்துப் பார்த்தேன்

ஒவ்வொரு கவிதையாய்

உன்னுடைய நினைவுகள்!

* நீ இருந்த இதயத்தில்

நினைவை சுமந்தேன்

இரும்பாய் கனத்தது

இளமை நினைவுகள்... நீ

மறுத்த காதலை

மறக்கப் பார்த்தேன்

முடியாத காரணத்தால்

மண்ணைப் பிரிகிறேன்!

— கு.மா.பா.கபிலன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


அன்புடன்
jothika
Reply
#3
http://www.yarl.com/forum/viewtopic.php?t=1201

சுட்ட கவிதை என்று ஒரு தலைப்பு இருக்கு அதில போடலாமே அண்ணா :wink:

கவிதை நல்லாருக்கு நன்றி அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#4
நல்ல கவிதை சுண்டல் அண்ணா..





Quote:சுட்ட கவிதை என்று ஒரு தலைப்பு இருக்கு அதில போடலாமே அண்ணா

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#5
Quote:நீ நடந்த பாதையில்
நித்தமும் நடந்தேன்
நிழலாய் தொடர்ந்தன...
உந்தன் நினைவுகள் - உன்
கால் பதிந்த சாலையை
கவனமாய் கடந்தேன்
கை சேர்த்து என்னோடு
வந்ததுன் நினைவுகள்!

சுடச் சுட சுண்டல் தந்த சுட்ட கவிதை என் மனதை சுடுகிறது. நன்றி சுண்டல்
----------
Reply
#6
நன்றி சுண்டல்..
[b][size=18]
Reply
#7
கவிதன் அண்னா இதை சுட்ட கவிதைகள் பகுதிக்கு மாத்தி விடுங்கோஇ அனித்தாக்கா கோவிச்சுக்க போறா
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)