Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யுூலைகள் வந்தால் .....
#1
யுூலைகள் வந்தால்

யுூலைகள் வந்தால்
வார்த்தைகள் கூட
விழிகசியும் வரலாறுகள் அவை
எங்களது இதயங்களில்
ஆணியடிக்கப்பட்ட அகாலப்பொழுதுகள்
அரைகுறையுயிரில் அறுத்தெறியப்பட்ட
சந்ததியின் சோகம் சொல்லும் யுூலைகள்
எங்களுக்குச் சொந்தம்.
ஒன்றா இரண்டா ஓமென்றிருக்க ?
ஓராயிரம் வதை எங்கள்
உயிர் தின்றகதை...
மறக்க நினைத்தாலும்
மனசைப் பிடுங்கி நெஞ்சை
மறுபடி மறுபடி
நினைக்க வைக்கும்
நெருப்பு யுூலைகள்.
ஆறா ரணங்களவை - எம்மில்
அனலை மூட்டுவித்த
காட்டு மிராண்டிகளின்
கதைமுடித்த 'யுலை5"
கரும்புலிகள் கதையுரைக்கும்
மெய்சிலிர்க்க மில்லரது
மனவுறுதி கேட்டு
மேனியுதற ஓடிய பேய்களின்
கதையுரைத்த யுூலையும் எங்களதே.....
நாமழுத யுூலைகள்
நம்முள் ஆறாது - ஆனாலும்
நீயழுத யுூலை 5
பகையே .....!
தினமிங்கு பிறக்கிறது
குறித்துக் கொள்....!
இனி தினம் யுூலை 5
உன் நெஞ்சில்
நெருப்பு மூட்டும்.

(இன்னொரு காத்திருப்பு கவிதைத் தொகுதியிலிருந்து.....)
(யுூலை 2000)
Reply
#2
தமிழர் வாழ்வியலில் கண்ணீரும் வீரமும் தந்த யூலைக் கவிதை சிறப்பு..நன்றி அக்கா..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
நன்றி சாந்தியக்கா
----------
Reply
#4
சாந்தி அக்கா கன நாளைக்கு பிறகு கவிதையுடன் வந்திருக்கிறியள் நன்றி அக்கா கவிதைக்கு
. .
.
Reply
#5
சாந்தியக்கா முன்பு எழுதிய கவிதையை தொகுப்பிலிருந்து மறு பிரசுரம் செய்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
நன்றாக இருக்கு அக்கா
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)