Yarl Forum
யுூலைகள் வந்தால் ..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: யுூலைகள் வந்தால் ..... (/showthread.php?tid=3841)



யுூலைகள் வந்தால் ..... - shanthy - 07-25-2005

யுூலைகள் வந்தால்

யுூலைகள் வந்தால்
வார்த்தைகள் கூட
விழிகசியும் வரலாறுகள் அவை
எங்களது இதயங்களில்
ஆணியடிக்கப்பட்ட அகாலப்பொழுதுகள்
அரைகுறையுயிரில் அறுத்தெறியப்பட்ட
சந்ததியின் சோகம் சொல்லும் யுூலைகள்
எங்களுக்குச் சொந்தம்.
ஒன்றா இரண்டா ஓமென்றிருக்க ?
ஓராயிரம் வதை எங்கள்
உயிர் தின்றகதை...
மறக்க நினைத்தாலும்
மனசைப் பிடுங்கி நெஞ்சை
மறுபடி மறுபடி
நினைக்க வைக்கும்
நெருப்பு யுூலைகள்.
ஆறா ரணங்களவை - எம்மில்
அனலை மூட்டுவித்த
காட்டு மிராண்டிகளின்
கதைமுடித்த 'யுலை5"
கரும்புலிகள் கதையுரைக்கும்
மெய்சிலிர்க்க மில்லரது
மனவுறுதி கேட்டு
மேனியுதற ஓடிய பேய்களின்
கதையுரைத்த யுூலையும் எங்களதே.....
நாமழுத யுூலைகள்
நம்முள் ஆறாது - ஆனாலும்
நீயழுத யுூலை 5
பகையே .....!
தினமிங்கு பிறக்கிறது
குறித்துக் கொள்....!
இனி தினம் யுூலை 5
உன் நெஞ்சில்
நெருப்பு மூட்டும்.

(இன்னொரு காத்திருப்பு கவிதைத் தொகுதியிலிருந்து.....)
(யுூலை 2000)


- kuruvikal - 07-25-2005

தமிழர் வாழ்வியலில் கண்ணீரும் வீரமும் தந்த யூலைக் கவிதை சிறப்பு..நன்றி அக்கா..!


- வெண்ணிலா - 07-25-2005

நன்றி சாந்தியக்கா


- Niththila - 07-25-2005

சாந்தி அக்கா கன நாளைக்கு பிறகு கவிதையுடன் வந்திருக்கிறியள் நன்றி அக்கா கவிதைக்கு


- Mathan - 07-25-2005

சாந்தியக்கா முன்பு எழுதிய கவிதையை தொகுப்பிலிருந்து மறு பிரசுரம் செய்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.


- kavithan - 07-27-2005

நன்றாக இருக்கு அக்கா