Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்ததில் பிடித்தவை
#41
[Image: productions]
<span style='font-size:25pt;line-height:100%'>சூர்ப்பனகை</span>

ஒரு
முத்தத்தை வரவழைக்க
முடியாமல் போனதால்
யுத்தத்தை வரவழைத்தவள்
-மு.மேத்தா
Reply
#42
[quote=Mullai][Image: productions]
<span style='font-size:25pt;line-height:100%'>சூர்ப்பனகை</span>

ஒரு
முத்தத்தை வரவழைக்க
முடியாமல் போனதால்
யுத்தத்தை வரவழைத்தவள்
-மு.மேத்தா

<img src='http://www.iconsoftec.com/gita/gita.gif' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>யுத்தம்</span>

அணைப்பால்
பெற முடியாததை - அவன்
கை பட்ட
அம்பால் (அம்பு)
பெறுவதற்காகத்தானா - இந்த
யுத்தம்

அஜீவன்
Reply
#43
<img src='http://www.synagoge.guxhagen.net/images/friedhof.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>கடைசி ஆசை!</span>
கண்களால்
என்னைக்
கைதியாக்கிய
கன்னியே!
கல்யாண வேள்வியில்
ஆயுள் தண்டனைக்காக
ஆசையோடு
காத்திருந்தேன்!
காதல் தோல்வியாக
மரணதண்டனை
விதித்துவிட்டாயே!
இந்தக்
காதல் கைதியின்
கடைசி ஆசையையாவது
நிறைவேற்றிவிடு....
என் கல்லறை மீதாவது
வந்து நீ முத்தமிடு....
- ராஜராஜன்
Reply
#44
[Image: sonnenuntergang.jpg]

[size=18]<b>மேற்கு செவ்வானம்</b>

கீழே இறங்கும்போது
வழுக்கி விழுந்து
மலைமீது
உடல் மோதிச்
சிதறியதால்
தெறித்த சூரியனின் ரத்தம்
-காவிரிராஜா
Reply
#45
முல்லை அவர்கள் தான் படித்துப் பிடித்ததை இங்கிணைத்து, எம்மையும் பிடித்துப் படிக்க வைக்கிறார். மிக்க மகிழ்ச்சி...

தொடர்க...


Reply
#46
முகங்கள்.
=======
அடிக்கடி அணிந்து கொண்டதால்
நைந்து கிழிந்த முகங்கள்-

அணியாமல் விடப்பட்டதால்
மக்கிக் கிழிந்த முகங்கள்-

உள்முகத்தை மறைத்து
எந்நேரமும் ஒரே பாவம் காட்டும்
முகமூடி முகங்கள்-

மூடிமறைத்தும்
பிதுங்கித் தெரியும்
உண்மை முகங்கள்-

கோபம் குரூரம் வக்கிரம்
இன்னும் பெயரற்ற ஆயுதங்களால்
குதறி ஓரமாய்க் கிடக்கும்
இரண முகங்கள்-

இன்றைய முகத்தடவலிலோ
திட்டுத் திட்டாய்
நேற்றைய முகங்கள்.

-ஜோதி ராமலிங்கம்-
nadpudan
alai
Reply
#47
[Image: alcohol-smok.gif]
<span style='font-size:25pt;line-height:100%'>அடக்கம்</span>
மகளே!
மாப்பிள்ளைப் பையன்
அடக்கமாய்
பெரியோரிடம்
வாய் பொத்திப்
பேசியதெல்லாம்.....
கை எடுத்ததும்தானே
தெரிந்தது-
போதையை
மறைப்பதற்கென்று
- சொக்கலிங்கம்
Reply
#48
[Image: Lotus.jpg]
<span style='font-size:25pt;line-height:100%'>வரவேற்பு</span>

விரிந்த மலர்கள் வரவேற்பு
இலை விரித்துப் பந்தி வைப்பு
யாருக்கு விருந்து தாமரைக்குளத்தில்?
-ரமாராமநாதன்
Reply
#49
நன்றி முல்லைப்பாட்டி
இதுவரை நான் காணதா கவிதைகளை எல்லாம் அள்ளி அள்ளி தந்து எமக்கு இன்பம் தருகின்றீர்கள்

வாழ்த்துக்கள்
தொடருங்கள் உங்கள் பணியை
[b] ?
Reply
#50
[Image: Kind-Mutter.GIF]
அம்மா அப்பா ஆனபின்தான்
அனுபவம் விளங்கும் - பெற்ற
அன்னை தந்தை செய்வதெல்லாம்
அறிவுக்குத் துலங்கும்!
சும்மா சொன்னாப் புரிவதில்லை
இந்தத் தத்துவம் - இதை
சொல்லாமலே புரிய வைக்கும்
வாழ்க்கைத் தத்துவம்.
அமரர் ஈழத்து ரத்தினம்.
Reply
#51
[Image: krieg.jpg]
ஏர் பிடித்த கைகளிலே
போர் கொடுத்த ஆயுதமோ
நேர் நிமிர்ந்த மார்பினிலே
யார் பதித்த குண்டுகளோ
சஞ்சீவ்காந்த்
Reply
#52
பாட்டி
எங்கிருந்து சுட்டுக்கொள்கின்றீர்கள். இந்த கவிகளை
சொல்லித்தாருங்கள் முழுமையாகவே படித்துக்கொள்கின்றேன். இப்படி துளித்துளியாய் தந்து அவாவை அதிகரிக்கின்றீர்களே

நன்றி பாட்டி
[b] ?
Reply
#53
[quote]Karavai Paranee[/color]
எங்கிருந்து சுட்டுக்கொள்கின்றீர்கள்.
பரணி, இவை எண்பதுகளில் வந்த கவிதைகள்.
வாசித்து பிடித்ததை குறித்து வைத்திருக்கின்றேன்.
அவ்வளவே.

கடைசியாகத்தந்த இரண்டு பாடல்களின் வரிகளை
பழைய யாழ் களத்தில் இருந்து அள்ளி வந்தேன்
http://www.yarl.com/kalam/viewtopic.php?t=522
Reply
#54
[Image: sonne.jpg]
முகில்கள் மீது
நெருப்பு, தனது சேதியை
எழுதியாயிற்று.
இனியும் யார் காத்துள்ளனர்?
சாம்பல் பூத்த
தெருக்களிலிருந்து
எழுந்து வருக!
-சேரன்
Reply
#55
[Image: BUTERFLY.jpg]
இந்த வண்ணத்துப் பூச்சி ஏன்
விசிறிக்கொண்டிருக்கிறது?
பூக்களுக்கு வியர்க்கிறதோ?
-வண்ணை வளவன்
Reply
#56
வாவ்
மிக மிக அழகானதொரு கவிதை

நன்றி நன்றி பாட்டி

[quote=Mullai][Image: BUTERFLY.jpg]
இந்த வண்ணத்துப் பூச்சி ஏன்
விசிறிக்கொண்டிருக்கிறது?
பூக்களுக்கு வியர்க்கிறதோ?
-வண்ணை வளவன்
[b] ?
Reply
#57
[Image: paint-l.gif]
பூமியே,
மென்மையாயிரு!
சில நேரங்களில்
அவள்
செருப்பில்லாமல் நடக்கிறாள்
செங்கோட்டை ரமாவாணன்
Reply
#58
[Image: island%2520dream%2520digital.jpg]

இரவு எனக்கு ரொம்பவே பிடிக்கின்றது
உனது நினைவுகள்
உனது கனவுகள்
உன்னைப்பற்றிய நிகழ்வுகள்
எல்லாமே அரங்கேறும் காலம் அல்லவா ?
ந.பரணீதரன்
Reply
#59
பாட்டி நன்றி நன்றி

கவிதைகளைவிட உங்கள் படங்கள் மிக மிக அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன.

[quote=Mullai][Image: island%2520dream%2520digital.jpg]

இரவு எனக்கு ரொம்பவே பிடிக்கின்றது
உனது நினைவுகள்
உனது கனவுகள்
உன்னைப்பற்றிய நிகழ்வுகள்
எல்லாமே அரங்கேறும் காலம் அல்லவா ?
ந.பரணீதரன்
[b] ?
Reply
#60
[quote=Mullai][Image: BUTERFLY.jpg]
இந்த வண்ணத்துப் பூச்சி ஏன்
விசிறிக்கொண்டிருக்கிறது?
பூக்களுக்கு வியர்க்கிறதோ?
-வண்ணை வளவன்

வியர்த்தது பூவுக்கல்ல
வானத்து முகில்களுக்கு
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)