Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்ததும் பிடித்தது
#1
காதல் ஒரு ஆச்சரியம்!

* அஞ்சல் அட்டை மாதிரி

திறந்தே இருக்கிறேன்

நீ படிக்கும்படியாக...

தபால் உறையாக

நீ

மூடியே இருக்கிறாய்

நான் தவிக்கும்படியாக!

* காதல் ஒரு ஆச்சரியம்...

அறுபத்திரெண்டு கிலோ எடையை

அந்தரத்தில்

மிதக்க விட்டிருக்கிறது!

* கூட்டமாய் இரை தேடுகிற

கோவில் புறாக்களின்

குணம் இல்லை உனக்கு...

பட்டாம்பூச்சியாக

நீ

தனித்தே பறப்பது

பிடித்திருக்கிறது எனக்கு!

* வானம் பார்த்திருக்கும்

ஏழை விவசாயி போல

எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறேன்;

பருவ மழையே

எப்போது பெய்வாய் நீ?

* கல்கி அவதாரத்தில்

கடவுள் வைத்த

காலடி போல

கவனமாகத்தான் நடக்கிறாய்...

அது சரி –

எல்லா அடியையும்

ஏன்

என் தலையில் வைக்கிறாய்!

* உண்ட மயக்கத்து

உறக்கமாக இருந்தாலும்

ஒவ்வொரு தடவையும்

உன் முகத்தை

மனக்கண்ணில்

பார்த்து விட்டுத்தான் படுக்கிறேன்;

அதுவே

நீண்ட உறக்கமாகிப் போனாலும்

கடைசியாய் கண்டது

உன் முகமாக இருக்கட்டும்!

க.சந்திரகலா, அதங்கோடு
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
நன்றாய் இருக்கிறது சுட்ட கவிதை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
நன்று <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#4
நன்றாக இருக்கின்றது. அறிய தந்தமைக்கு நன்றி சுண்டல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
சுட்டாலும் சுண்டல் தான்.. நன்றி சுண்டல்
[b][size=18]
Reply
#6
நன்றி சுண்டல்
. .
.
Reply
#7
சுண்டல் சுற்றிய தாளில் வந்த கவிதை அருமை

நன்றி சுண்டல் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#8
<b>ஓசையின்றி</b>

* ஓசையின்றி

வழிந்தோடிய

நீரோடை கண்டேன்

வாடிய உன் முகமதில்

கரு விழியாளே...

ஒரு சொல் கேளாய்...

* நம்மில்

ஏற்பட்ட காதல்

கால் சட்டையில் ஒட்டும்

கடற்கரை மணலல்ல

தட்டி விட்டுச் செல்ல...

* உச்சியில்

நிற்கும் சூரியன்

சுடத்தான் செய்யும்

தலை சாயத் தொடங்கினால்

சுட்ட சூரியனும் சுகமாகுமே...

சுற்றங்களும் அப்படித்தான்!

* காதலர்கள்

கட்டுண்டிருப்பது

நேற்றல்ல இன்றல்ல

என்றும் நிகழும்

நிகழ்வுதானே...

* உறவுகள் நம்மை

ஒருநாளும்

உதறித் தள்ளாது

நாம் திசை மாறி

தீயவற்றை நாடாது வரை!

* ஒருவரை ஒருவர்

நினைந்து

வெம்பி இருப்பதை விட

நம்பி இருப்போம்

நல்வழி பிறக்குமென்று!

* காலம் கனியும் வரை

நாம் சந்தித்தாலும்

நீ யாரோ

நான் யாரோ

என ஒதுங்கியே செல்வோம்!

* தனியாக இருந்தாலும்

நீயும், நானுமாய்

கனவுலகில் சஞ்சரிக்க

தடையேதுமில்லையே!

* நினைவு தானே

கனவாகிறது

கனவை நிஜமாக்க

ஆசையாய் காத்திருப்போம்

ஓசையின்றி!

ஏ.பி.முருகேசன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#9
சுண்டல் சுப்பர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#10
நன்றி சுண்டல்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#11
போய் வா காதலனே!
*
உன்னையா

என்

உள்ளத்தில் எழுதினேன்...

* கை வளையல் கேட்டதற்கு

குரல்வளை தரவா என்றாய்...

கண்ணாடி வளையலுக்கே

கணக்கு பார்க்கிறவன்

என்பது தெரியாமல்

உன்னையா

என்

உயிரென்று கருதினேன்!

* புளியை விட

புளிப்புதான் என்றாலும்

என்

உதட்டின் நிறம் என்பதால்

ஜாம்பக்கா பிடிக்கும் என்றாய்...

* நான் குளிக்கும்

தண்ணீரை

வேருக்குத் திருப்பி விட்டதால்

என் வீட்டு

வேப்பங்காய் கூட

விதையில்லாத திராட்சையாக

இனிக்கிறதென்று

சொல்லிச் சொல்லியே

என்னைக் கொன்றாய்...

* கழுத்து வரையிலும்

காசு, நகை

ஆசைகளை வைத்துக் கொண்டு

வாய் வழியே

காதல் பொங்கி

வழிந்தவனே...

* நான்

உடுத்தியிருக்கும்

ஒற்றைப் புடவையைத் தவிர

மாற்றுத் துணி கூட

மறுப்பவன் நீ என்றால்

சரியான

ஆண்மகன் நீ

ஒத்துக் கொள்கிறேன்...

* என் வீட்டு

உத்திரத்தைப் பிடுங்கித்தான்

உன்

உடைந்த முதுகுக்கு

முட்டுக் கொடுக்க வேண்டுமென்றால்

போய் வா காதலனே...

உன்னை, என்

பழைய தோழிகளின் பட்டியலில்

சேர்த்துக் கொள்கிறேன்!

க.சந்திரகலா,
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#12
Quote:நான் குளிக்கும்
தண்ணீரை
வேருக்குத் திருப்பி விட்டதால்
என் வீட்டு
வேப்பங்காய் கூட
விதையில்லாத திராட்சையாக
இனிக்கிறதென்று
சொல்லிச் சொல்லியே
என்னைக் கொன்றாய்...


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#13
நல்ல கவிதைகள் சுண்டல் அண்ணா..வாசிக்க நல்லா அருமையாக இருக்கு..

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நான் குளிக்கும்

தண்ணீரை

வேருக்குத் திருப்பி விட்டதால்

என் வீட்டு

வேப்பங்காய் கூட

விதையில்லாத திராட்சையாக

இனிக்கிறதென்று

சொல்லிச் சொல்லியே

என்னைக் கொன்றாய்...

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)