Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்?????
ஏன் யூட் இதுகளுக்கு அப்பால் தியானம் மன அடக்கம் என்று உள்ள ஆன்மீக வழிகளையும் கொஞ்சம் இனங்காட்டினால் நல்லா இருக்குமே...! குறிப்பா மனதை உடலை அடக்கக்கூடிய யோகப்பயிற்சிகள் இருக்கின்றன...அவை பெரிதும் உதவுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஆமாம். அதுவும் நல்ல விடயம்தான். அப்போதுதான் பாபா போன்றவர்களும் எண்ணெய் வைத்தியம் செய்ய வசதியாக இருக்கும்.

இளமையில் கணவனை இழந்தவள் சந்நியாசியாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், விதவைகளுக்கு மொட்டை அடித்து வெள்ளை உடுப்பு அணிவித்தனர் அந்தக்காலத்தில். தற்போது இந்த முறைகளை கணவனை வெளிநாட்டில் விட்டுவாழும் பெண்களைப் பின்பற்றச் சொல்லலாம். Idea

பி.கு. யூட், பேசாமல் தமிழருக்குப் பாலியலின் பிறழ்வுகளை ஒரு புத்தகமாக அடித்து விற்பனை செய்யுங்கள். கொஞ்சம் காசாவது பார்க்கலாம்.
<b> . .</b>
Reply
யோகத்தை பாபாவிடம் கற்க வேண்டிய அவசியமில்லை...வீட்டில் இருந்தே கற்கலாம்...!

ஆண்கள் அடக்கமா இருந்தா பெண்களும் இருப்பார்கள்...! பெண்கள் கேற்றுக்க நிக்கினம் என்றால்... பெண்கள் அரைகுறையா உடுக்கினம் என்றால்...ஆண்கள் பார்க்கட்டும் என்றுதானாம்... சோ ஆண்கள் அந்த நாய்களை (Bitch - ஆங்கிலத்தில் இப்படித்தான் அழைப்பார்கள் தறிகெட்ட பெண்களை) ஏறெடுத்தும் பார்க்கல்லை என்றால்... அதுகள் காலப்போக்கில மாறிடுங்கள்...நல்வழிக்குத் திரும்பிடுங்கள்.... இல்ல ஆண்களுக்கு பார்க்காம இருக்க ஏலாதோ.... இருக்கு ஒரே வழி... ஆண் நாய்களுக்குச் செய்யுறது போல.... பிடுங்க வேண்டியதை பிடிக்கி விட வேண்டியான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:ஏன் யூட் இதுகளுக்கு அப்பால் தியானம் மன அடக்கம் என்று உள்ள ஆன்மீக வழிகளையும் கொஞ்சம் இனங்காட்டினால் நல்லா இருக்குமே...! குறிப்பா மனதை உடலை அடக்கக்கூடிய யோகப்பயிற்சிகள் இருக்கின்றன...அவை பெரிதும் உதவுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

குருவிகள்,


அடக்கி ஒடுக்கி வாழ விரும்புபவர்கள் துறவிகளாகி யோகமும் தியானமும் செய்யலாம். அவர்களை திருமணம் செய்து பெண்களை படலை வாயிலில் நிற்கும் நிலைக்கு கொண்டுவர வேண்டாம் என்று தான் நான் சொல்கிறேன். வெளிநாட்டில் தான் உழைப்பு, வாழ்வு என்றிருப்பவர்கள் வெளிநாட்டில் கலியாணம் செய்து வாழலாம், செய்யாமலும் வாழலாம், அடக்கி ஒடுக்கி துறவியாகவும் வாழலாம்.

ஆனால் அவர்கள் அங்கே போய், குடும்பம் நடத்தப்போகிறேன் பெண் வேண்டும் என்று கேட்டு, பாலியல் அனுபவமற்ற இளம் பெண்ணுக்கு உணர்வேற்றி, உருவேற்றி, விடடு வந்து பிறகு அவள் படலையில் நின்றால், வேலி பாய்ந்தால், அல்லது கமபி நீட்டினால் அவளை குற்றம் சொல்வது தான் ஏமாற்றல், பித்தலாற்றம், சிறை வைப்பதற்குரிய குற்றம்.
Reply
குருவிகாள் திருமணம் செய்துகொண்டபின் யோகமும் தியானமும் செய்து உலக ஆசைகளைத் துறப்பதற்குப் பதில் ஆண் பெண் இருவரும் திருமணம் செய்யாமலேயே அதனைக் கைக்கொள்ளலாமே.

யூட் உங்கள் வாதம் நன்று தொடருங்கள்.எமது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள இந்தச் சிந்தனைகள் வேரறுக்கப்படும்வரையில் வேலிபாய்தல் கம்பிநீட்டுதல் நடந்துகொண்டிருக்கும்.நடக்காவிட்டாலும் அற்ப சுகத்துக்காக அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்
\" \"
Reply
எமக்கென்று ஒரு நாடு வரும் வரை இப்படியானவற்றை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது. :roll:
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
eelapirean Wrote:எமக்கென்று ஒரு நாடு வரும் வரை இப்படியானவற்றை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது. :roll:

எந்த நாட்டை என்றாலும் எங்கள் கையில் தாருங்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்...! ஒன்றும் புதிசாச் செய்யத் தேவையில்லை உள்ள சட்டத்தை அமுலாக்கிற விதத்தில அமுலாக்க எல்லாம் அடங்கி நிற்கும்..ஐம்புலனும் அடங்கி நிற்கும்...அப்ப தெரியும் யோகம் துறவுக்குப் பின்னா இல்ல வீட்டில இருக்கவே சாத்தியமா என்று....!

புலிகளின் கையில் நிர்வாகம் இருந்த போது இப்படியான செயல்கள் வெகுவாகக் குறைந்திருந்தன....ஒழுக்கம் தவறியவர்கள் மொட்டையும் தலையுமாய் சந்தியில் நிற்க வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Tamil Nation இல் படித்தது.


பெண் உடல் மீதான சமூக வன்முறை
- அஜிதா, 30 May 2005,
[Courtesy Dinamalar, contributed by A.Thangavelu]


--------------------------------------------------------------------------------

பெண் உடல் மீதான சமூக வன்முறை என்றதும் எல்லோருக்கும் பெண் சீண்டல், பாலியல் வன்முறை, வரதட்சனைக் கொடுமை, பெண் சிசுக் கொலை, கணவன் வீட்டில் கொடுமை போன்றஉடல் ரீதியான வன்முறைகள் சமூகம் முழுவதும் வியாபித்திருப்பது தான் நினைவுக்கு வரும் ஆனால் இந்த வன்முறைகள் சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல சட்டங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையும் அல்ல.

மாறாக சட்டங்கள் கடுமையானதாகவும், ஒட்டுமொத்தக் குற்றவியல் சட்டத்தின் அடிப்பட்டைச் சட்ட தத்துவத்திலிருந்து மாறி வரதட்சனை சாவு, காவல் நிலையப் பாலியல் வன்முறை போன்ற வன்முறைகளுக்கு, மிகக் கடுமையான குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான நிலையை குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பே நீதி நிறுவனங்களால் கைக் கொள்ளப்படுகின்றன.

அப்படியிருந்தும், ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகி வருகிறதே என்ற கவலையும் நமக்கு தோன்றுகிறது சட்டம் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் பெண் உடல் மீதான வன்முறையை இச்சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதே இந்த வன்முறைகள் அதிகமாகிக் கொண்டு போவதற்கு காரணமாகும்.

இச்சமூகம் திடீரென்று பெண்களுக்கு எதிரான, அவள் உடல் மீதான வன்முறையை ஆமோதிக்கும் நிலைப்பாட்டை எடுத்து விட்டதா என்ற கேள்விக்கு நாம் இல்லை என்றே பதில் சொல்லியாக வேண்டும் பெண் உடல் மீதான வன்முறை காலங்காலமாக சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்க நெறியின் பாற்பட்டதாகவே கருதப்பட்டு வந்தது என்பதை நாம் வரலாற்றிலிருந்து பார்க்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

எல்லா மதங்களும் தங்களது அடிப்படைக் கருத்தாக்கங்களில் பெண்களைப் பற்றிய நிலைப்பாட்டை மிகவும் குறிப்பான நெறிகளை முன்வைத்தும் கட்டுப்பாடுகளை விதித்தும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கான வழிகளை ஏற்படுத்தியுள்ளன

நம் சமூகச் சூழலில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த மதங்கள் தத்தம் வழிகளில் பெண் ஆணுக்கு கீழாவாள் ஆணின் அடிமையாகத்தான் பெண் வாழ வேண்டும் பயந்து அடங்கி அவனுக்கான பணி விடைகளைச் செய்வதே பெண்ணின் வாழ்க்கை என்பதற்குப் பொருள் என்று தெரிவிப்பதன் மூலம் இவன் தன்னை மனிதப் பிறவியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் போதெல்லாம் அது மதத்திற்கு எதிரானதாகக் காட்டப்பட்டு, அதை மறுப்பதை நியாயப்படுத்துகிறது.

அவ்வாறு வைக்கப்படும், வைக்கப்படப் போகும் எவ்வித கோரிக்கையும் இழிவாகவும், கொச்சையாகவும், பெண் விடுதலை என்பதே பாலியல் ரீதியான விடுதலை என்பதாகக் குறைத்து எவ்வித நியாயமான கோரிக்கையும் வேரோடு கிள்ளி எறிய முயற்சிகள் இச்சமூகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்தகைய ஆணாதிக்கத்தைக் காப்பாற்றும் வேலை, பல வடிவங்களில் பல விஞ்ஞானப்ப+ர்வமான விளக்கங்களுடனும், இன்றைய முன்னேறிய, தொழில்நுட்ப உலகிலும், இன்றும் பசியால்வாடும், வறுமையில் உழலும் மக்கள் ஏழ்மை உலகிலும் பரவலாக செய்யப்படுகின்றன இச்சமூகத்தின் கருத்துக்கள் அவரவர் சார்ந்த, பிறந்த, வளர்ந்த சமூகத்தின் கலாச்சாரப் படிவுகளாகத்தான் வெளிப்படுகின்றன அல்லது சில நேரங்களில் தாங்கள் ஏற்படுத்த விழையும் மாற்றத்தைக் கொண்ட சமூகத்தின் விழுமியங்களாகவும் உள்ளன.

இச்சமூகத்தில் பெண் உடல் மீதான வன்முறை காலங்காலமாக மத ரீதியான கருத்துருவாக்கங்களில் வேர் கொண்டுள்ளது அவற்றை சில உதாரணங்களில் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

கிறித்தவமும் பெண்ணும்

கிறிஸ்துவத்தின் பழைய மற்றும் புதிய பைபிளில் எ.பே 5.2 இல் மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல உங்கள் சொந்தப் புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள்® எ.பே.5.23இல் கிறிஸ்து, சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும், மனைவிக்குத் தலையாயிருக்கிறான் அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார் எ.பே 5.2 இல், ®ஆகையால் சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்படிகிறது போல மனைவிகளும் தங்களது சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.

எ.பே 5.33இல் மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக் கடவது என்று கிறிஸ்துவம் பெண்ணைப் பக்தியின் பின்னால், கிறிஸ்துவின் வசனங்கள் ஊடாகக் கோருவதன் மூலம் தனது சுதந்திரம் தனது உரிமையை ஆணுக்காக இழக்கக் கோருகிறது ஏன்? ஆணுக்குக் கீழ்ப்படிந்து, மதித்து, பயபக்தியாகப் பெண் நடந்து கொள்ள வேண்டும்? இதைப் பெண்ணுக்கு ஆண் ஏன் செய்யக் கூடாது? ஆணாதிக்கத்தைப் பிரதிபலித்தே கிறிஸ்துவ மதம் உருவாகியதை இது காட்டுகிறது.

தனிச் சொத்துடமையைப் பாதுகாப்பதற்காக பெண்ணின் பாலியல் உறவை ஒழுங்க செய்த பைபிள் இங்ஏனம் கூறுகிறது நீ உன் கணவனோடேயன்றி வேறு ஆடவனோடு படுத்து தீட்டுப் பட்டிருந்தாயின் இந்த சாபமெல்லாம் என் மேல் வரும் சபையிலுள்ள அனைவரும் கண்டு அஞ்சும்படி ஆண்டவர் உன்னை எல்லோருடைய சாபங்களுக்கும் உள்ளாகச் செய்வாராக.

அவர் உன் கால்கள் அழுகிப் போகவும், உன் வயிறு வீங்கி வெடித்துப் போகவும் செய்வாராக சபிக்கப்பட்ட தண்ணீர் உன் வயிற்றில் விழவே உன் கருப்பை வீங்கவும் உன் தொடைகள் அழுகவும் கடவன். (இலக்கம் 165) பைபிள் பக்கம் 145-இல், 20, 21-ஆம் வரிகள் இப்படிக் கூறுகிறது.

1860இல் இயற்றப்பட்ட இந்திய விவாகரத்துச் சட்டம், கணவன் தன்னைக் கொடுமை, சித்ரவதை, வன்முறை புரிந்தால் பெண் விவகாரத்து பெறலாம் என்பதை 2001ம் ஆண்டில் தான் ஏற்றுக் கொண்டது வன்முறை இருந்தால் தான் என்ன? அதைத்தானே இயேசு உன்னை அனுபவிக்கும்படி கூறினார் என்பதற்கு இதுவே சான்று.

ஆணாதிக்கமும் இசுலாமிய மதமும்

இதை நாம் திருக்குர் ஆன் மூலம் ஆராய்வோம் அத் 2.222.223-இல், 'அது ஒரு தூய்மையற்ற நிலை ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகியிருங்கள் தூய்மை அடைந்து விட்டால் அல்லா உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள் உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலங்களாவர் எனவே, நீங்கள் விரும்பும் முறையில் உங்களுக்குரிய விளை நிலங்களுக்குச் செல்லுங்கள் மேலும் உங்களுடைய வருங்காலத்துக்காக, முன் கூட்டியே ஏதாவது செய்து கொள்வதில் அக்கறை காட்டுங்கள்.'

இந்து மதம் மாதவிடாயை தூய்மையற்றதாகக் கருதி, பெண்ணை விலக்கியது போலவே இஸ்லாம் மதமும் விலக்கியது மசூதிக்கு ஆண்கள் செல்வது போல் பெண்கள் ஒட்டுமொத்தமாகவே செல்ல முடியாத இரண்டாம் பிரஜையாக வாழ்வதும், இந்து மதத்தில் பார்ப்பணப் பெண்களும், கோயில் உட்பகுதிக்குச் செல்ல முடியாத நிலைமையையும் இங்கு கவனத்தில் எடுப்பின் பெண்ணின் உரிமையில் மதங்கள் தமது பிற்போக்கைக் காட்டுவதைக் காண முடியும்.

பெண்கள் ப+சாரியாக முடியாத ஆணாதிக்கத்தை கிறிஸ்துவம் பின்பற்றியதைப் போன்றே எல்லா மதங்களும் பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துள்ளது இதிலிருந்தே மாதவிடாய் போன்றவற்றால் பெண் இழிவாக்கப்பட்டு , அசுத்தமானதாகப் புனைந்து அதை ஆணுக்குப் போதிப்பதும் பெண்ணை ஒதுக்குவதும் அரங்கேறுகிறது.

அத்தி 4.34.35-இல், ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர் இதற்குக் காரணம் அல்லா அவர்களில் சிலருக்குச் சிலரை விட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும் எனவே, ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள்

மேலும் ஆண்கள், இல்லாதபோது (அப்பெண்கள்) அல்லாவின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள் மேலும் எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவர்கள்) மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்ள், படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள், மேலும் அவர்களை அடியுங்கள்.

சமூகம் முழுவதற்கும் பெண்களை நோக்கி வன்முறை புரிய மதம் அறிவுரை தருவதைப் பார்க்கலாம்.

பவுத்தமும், பெண்ணும்

புத்தர் பெண்களை வெறுத்தும், மறுத்தும் இருந்தார் அவரின் துறவு கூட பெண் வெறுப்பில் ஏற்பட்டதே பாலியல் இயற்கையான உணர்வு என்பதை மறுத்து, துறவைப் புத்த நெறியாக்கிய போது, பெண்ணை இழிவுபடுத்துவது அதன் அடிப்படையாகிறது ஆதிவேத சங்கங்களின் ஸ்தாபன உரையில், ஆண் மெய் என்பது சகலரையும் ஆண்டு இரட்சிக்கப்படும் புருஷர் எனப்படுவான் பெண் மெய் என்பது சகலரையும் இச்சிக்கக் கூடிய ஸ்த்ரீ எனப்படுவாள். என்றும் கூறுகிறது.

அந்நிய ஆடவர் முகம் பார்க்காமல் இருப்பது குறித்தும், கணவனுடைய இன்பத்திற்காக மட்டும் எல்லாவிதமான உணவு படைத்தல், நித்திரைப் படுத்துதல் இன்ன பிற பணிகளையும் செய்யக் கடமைப்பட்டவள் பெண் என்று புத்த மதம் பணிக்கிறது.

பேதையான்ம தோற்றமுள்ள நீங்கள் சகலராலும் இச்சிக்கக் கூடிய வடிவுள்ளவர்களாதலின் நீங்கள் ஒவ்வொருவரும் நாணம், அச்சம், மடம், பயிர்ப்பென்னும் நான்கு கற்பின் தன்மையில் நிலைக்க வேண்டும் ..

1 அந்நிய புருஷர் யாரைக் கண்டபோதிலும் நாணமுற்று தலை கவிழ்தலும், தனது முகத்தையும், தேகத்தையும் அன்னியப் புருஷர்கள் கண்டார்களேயென்று வெட்கமடைதல் வேண்டும்.

2 தனது கணவனும், மைந்தர்களும் இல்லத்தில் இல்லாதபோது, அச்ச வாழ்க்கையில், இல்லறம் நடத்துதலும், தனியே வெளியிற் போகுங்கால் ஒரு சிறுவனையேனும் கையால் தாவுகொண்டு செல்லுதல், அன்னியப் புருஷர் முகங்களை நோக்குதற்குப் பயப்படுதலும், தன் கணவனே தன்னையாண்டு ரட்சிக்கும் ஆண்டவனாதலால் அவனுக்கு வேண்டிய பதார்த்தத்தை வட்டித்தலும், வேணப்புசிப்பையளித்தலும், நித்திரைப்படுத்தலுமாகிய செயல்களில் அவன் மனங்கோணாது திருப்தியுறுமளவும் அச்சத்தில் நின்று ஆனந்திக்க வேண்டும்.

3 அன்னியப் புருஷரைக் காணுமிடத்து வெறுப்படைதலும், தனக்குக் கிடைத்துள்ள ஆடைகளில் திருப்தியுற்று அன்னியர் சிரேஷ்ட வாடைகளில் வெறுப்படைதலும், தனக்குள்ள ஆபரணங்களில் வெறுப்படைதலும், தன் கணவனால் கிடைத்து வரும் புசிப்பில் போதுமான திருப்தியுற்று அன்னியர் சிரேஷ்ட புசிப்பில் வெறுப்படைதலுமாகிய செயலுற்று, தனக்குக் கிடைத்த வரையில், திருப்தியடைதல் வேண்டும்.

4 தனது கணவன் வாக்குக்கு மீறாது நடத்தல் முதல் ஒடுக்கம் பெரியோர்களிடம் அடங்கி வார்த்தை பேசுதல் இரண்டாம் ஒடுக்கம் கணவனுக்கு எதிர்மொழி பேசாதிருத்தல் மூன்றாம் ஒடுக்கம் கணவனிடம் எக்காலும் மிருதுவான வார்த்தை பேசுதல் நான்காம் ஒடுக்கம் அன்னிய புருஷர்கள் தன்னைப் பார்க்காமலொடுக்கிக் கொள்ளுதல் ஐந்தாம் ஒடுக்கம் அன்னியர் மெச்சும் ஆடையாபரணங்களையகற்றி, தன் கணவன் மனங்குளிர அலங்கரித்து நிற்றல் ஆறாம் ஒடுக்கம்

தன் கணவன் தேகமும், தன் தேகம் வேறாகத் தோன்றினும் அன்பும் மனமும் ஒன்றாய் ஒத்து வாழ்தல் ஏழாம் ஒடுக்கம் கணவனுக்குப் பின் புசித்தலும், கணவனுடன் புசித்தலும் எட்டாம் ஒடுக்கம் கணவனுக்குப் பின் சயனித்தலும், கணவனோடு சயனித்தலும் ஒன்பதாவது ஒடுக்கம் பஞ்ச சீலத்தின் ஒழுக்க விரதங் காத்தல் பத்தாமொடுக்கம்.

பெண்கள் மனுவின் காலத்திற்கு முன்னர் சில உரிமைகளை குறிப்பாக மறுமணம், சொத்துரிமை போன்றவற்றை பெற்றிருந்தார்கள் ஆனால், பெண்களை ஆண்களுக்குத் தீங்கு செய்யும், மயக்கும் பாலியல் பண்டமாக நோக்கியதற்கான ஆதாரங்களை மனுவில் காணலாம்.

மனு 2.213ல் இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு எனவே தான் பெண்களிடம் பழகும் போது விவேகிகள் எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள் எனவே ஆணின் பாலியல் தேவையை, பெண்ணுடைய பாலியல் தேவையை மறுதலிப்பதிலிருந்தே பார்க்கிறது.

எனவே அவளை பண்டமாக பார்க்கும் பார்வை, அவளை அதற்காக கட்டாயப்படுத்துவதையும் ஏற்கவே செய்கிறது.

மனு 9.15ல் ஆடவருடன் உறவு கொள்ளத்துடிக்கும் மோகத்தால், சலன புத்தியால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகி விடுவர் என்று பாலியல் மோகம் கொண்டு பெண் அலைவதாகக் காட்டுகிறது.

மனு 9.3ல் பெண்ணினம் இறக்கும் வரை பாதுகாக்கும்படி கூறுகிறது ரிக் வேதங்களில் சில பகுதிகள் இதேபோன்ற கருத்துகளை கூறுவதை பார்க்கலாம்.

ரிக் வேதம் 8.3.17ல் பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள், அவர்கள் நம்பத்தகாதவர்கள் என்ற கூற்றின் பின் பெண்கள் பற்றிய ஆணாதிக்கத்தின் நிலை இன்று வரை மாறிவிடவில்லை.

அர்த்த சாத்திரம் 3.3.59ல் பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ, பெண்களின் வாயின் உதட்டின் மீது அடிகள் கொடுக்கலாம் இதை இராமாயணம் 25-17ல், ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினாலோ, மூங்கில் பிளப்பினாலோ அடிக்கலாம்.

சமுதாயத்திற்கு அவர்கள் (பெண்கள்) கேடானவர்கள், அபாயமானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களை கொன்று விடலாம் உலகத்தையே விழுங்க எண்ணிய மந்தாரா என்ற பெண்ணை சக்ரா கொன்றிருக்கிறார் ஆஸ்ரமங்களில் செய்யப்பட்ட யாகங்களை, சடங்குகளை தடுத்ததற்காகத் தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றிருக்கிறான்.

இந்த ஆணாதிக்கச் சமூக மதிப்பீடுகள் பெண்களை எங்ஏனம் பார்த்தன என்பதற்கு சான்று.

மனுதர்மம் என்பது வாழ்க்கைக்குப் பிணியும் மருந்துமாகும் என்கின்றனர் இந்துக்கள் மனு ஒருவர் அல்லர் நால்வர் என்கின்றன ரிக்வேதமும், கீதையும் இதைப்பற்றி பல கருத்துக்கள் நிலவியபோதும் மனுதரும சாத்திரமாக வடிவெடுத்த போது அது 263 எனவும் தமிழில் மனுதர்மம் என்ற நூலில் அதனினும் சுருங்கி 192 தருமங்களைத் தொகுத்தளித்துள்ளார் தமிழ்நாடன்.

அந்த நூலிலிருந்து பல பகுதிகளை நம்மால் சுட்டிக்காட்ட முடிந்தாலும் பெண்களைப் பற்றிக்கூறிய கருத்துக்களில் பெண்கள் மீதான அடக்குமுறை, வன்முறைகளை தருமமாக வழங்கப்பட்டவை பற்றி மட்டும் இங்கு காணலாம்.

'மகளிர் கடன் என்னும் தலைப்பில்

35 பெண்கள் பருவத்தினராயினும் தம்மிச்சைப்படி எப்போதும் எச்செயலையும் தன் வீட்டிலும் கூட இயற்றும் உரிமையற்றவரே.

41 கற்புடைய பெண்ணுக்கு கணவனே கண் கண்ட கடவுள் நற்குணம் அற்றவனெனினும், இழிந்த நடத்தையுடையவனெனினும் பரத்தையோடு ஒழுகினவனெனினும் அவளுக்கு அவன் தான் கடவுள் எல்லாமுமாகும்.

45 கணவன் இறந்த பின் காய், கனி, கிழங்காகிய புல்லுணவு உண்டு காலம் கழிக்க வேண்டும் மற்றொருவரின் பெயரை நாவாலும் சொல்லக்கூடாது.

54 தன்குல நன்மனைவியெனினும் கணவனுக்கு முன்னதாக இறந்தால் விதிப்படி தென்புலக் கடன் யாவும் புரிக யாவும் செய்து முடித்த பின் மற்றொரு பெண்ணை மணக்கலாம் தீ வளர்த்தலாகிய நற்கருமங்கள் இயற்றும் பொருட்டு, வாழ்வின் மீதி நாட்களை நல்லறமாக்கி நடத்துக.

இன்னும் பல அத்தியாயங்களில் பெண்களின் மீதான பாலியல் வன்முறை போன்றவற்றிற்கு சாதிவாரியாக தண்டனைகள் கூடவும், குறையவும் இருப்பதை காணலாம்.

இவையெல்லாவற்றையும் எடுத்துக் கூறுவதன் மூலம், மதங்கள் பெண்ணுக்கு எதிராக உள்ளன என்ற கருத்துக்களை முன் வைக்கும் நிறுவனம் என்பதற்கு மேலாக, ஏறக்குறைய குறைந்தது 160 ஆண்டுகள் அல்லது 4000-500 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள் அந்த காலகட்டத்தில் இவ்வாறு தான் பெண்களை பார்த்தன எனவே தான் அப்படிப்பட்ட கருத்தாக்கங்கள் எழுந்தன என்பதே உண்மை.

ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் மதம் தான் பெண்ணை உயர்த்தின தெய்வீகமாக கருதின அல்லது அதிக மதிப்பு அளிப்பது என்று பொய்யுரைப்பது அர்த்தமற்ற செயல்

இன்றைய சூழலில் பெண் விடுதலை, பெண் சுதந்திரம் போன்றவற்றின் பொருளில் அக்கால மதங்களில் விளக்கம் தேட முற்படுவதோ, ஒன்றைக்காட்டினும் மற்றது சிறப்பானது என்கிற ஆராய்ச்சி செய்வதோ அறிவிலித்தனம்.

எனவே மதம் என்கிற விஷயம் உலகம் முழுவதும் பெண்களைப் பற்றி கொண்டிருந்த பார்வை அன்றைய உற்பத்தி - உறவு, அரசியல் கட்டுமானம், கலாச்சாரம் போன்றவற்றை பிரதிபலிப்பது தான்.

எனவே இந்துமதக் கருத்துக்களே பிற மதத்திலும் வியாபித்து கலாச்சார தளத்ததில் சற்றேறக்குறைய ஒரே மாதிரியாக கருத்தோட்டங்களை கொடுத்திருப்பதால் இந்துத்வா பெயரில் இந்து மதத்தின் பிற்போக்குத்தனத்தைத தூசி தட்டி, விஞ்ஞான முலாமிட்டு, புதிய நடையில், புதிய பாணிகளில், எப்படி கொடுத்தாலும் 'புதிய மொந்தையில் பழைய கள்' என்னும் சொலவடையைப் போல் அவற்றின் சாரம் ஒன்று தான்.

எனவே, இன்று சமூகத்தின் எல்லா துறைகளிலும் தங்கள் கால் பதிக்கவும், சாதிக்கவும் வந்துவிட்ட பெண்களுக்கு எதிராகவும், சாமானியப் பெண்ணுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கருத்து ரீதியான, கலாச்சார ரீதியான,

உடல் ரீதியான வன்முறை நாம் பார்த்த வகையில் வரலாற்று மொழி வந்ததால் இந்த மதத்தை அதன் வேரை அசைக்காமல், இதற்கெதிரான வலுவான மாற்றுக் கலாச்சார கருத்துத் தளத்தை, ஜனநாயக பண்பாட்டை வளர்க்காமல் தனித்தனி நபர்களை சாடுவதும் சாத்தியமற்ற ஒன்று.

எனவே, பெண் உடல் மீதான சமூக வன்முறையை மதத்துடனும் மதவாத கருத்துக்களுடனும் புரிந்து கொண்டால் மட்டுமே நம் எதிர்ப்பை சரியாக பதிவு செய்யமுடியும்.

நன்றி அணங்கு
<b> . .</b>
Reply
Eelavan Wrote:குருவிகாள் திருமணம் செய்துகொண்டபின் யோகமும் தியானமும் செய்து உலக ஆசைகளைத் துறப்பதற்குப் பதில் ஆண் பெண் இருவரும் திருமணம் செய்யாமலேயே அதனைக் கைக்கொள்ளலாமே.

யூட் உங்கள் வாதம் நன்று தொடருங்கள்.எமது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள இந்தச் சிந்தனைகள் வேரறுக்கப்படும்வரையில் வேலிபாய்தல் கம்பிநீட்டுதல் நடந்துகொண்டிருக்கும்.நடக்காவிட்டாலும் அற்ப சுகத்துக்காக அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்

யார் சொன்னா யோகமும் தியானமும் செய்தால் உலக ஆசைகள் போயிடும் என்று...! யோகமும் தியானமும் மனதால் உடலையும் உடலால் மனதையும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளையே சொல்லுகின்றன...! தறிகெட்டுப் போகாமல் தேவைக்கு ஏற்ப கட்டுப்பாட்டை விலக்கவும் ஏற்கவும் அவை வழிகாட்டுகின்றன...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:இவற்றை எல்லாம் செய்ய, "ஆ ஊ எங்கள் கலாச்சாரம் என்னாவது?" என்று ஊளையிடுவோர் தடையாக இருந்தால், அங்கே "கம்பி நீட்டுவது", "வேலி பாய்வது" எல்லாம் கடைசியாக கலாச்சாரமாக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சூ.... என்ன கலாச்சாரம் அது இதுவென்று கதைக்கிறீங்க... தமிழ் பெண்களின் சுதந்திரத்துக்கு தடை தமிழர் கலாச்சாரம்... பிறகு அதுக்க எங்க தமிழ் கலாச்சாரத்தை பெண்கள் மதிக்கிறது....வேலி பாயவேணும்....கம்பி நீட்டலாம்.... கணவனிருக்கு மற்றவர்களுடன்*********** இருக்கலாம்.....இதெல்லாத்தையும் தமிழர் கலாச்சாரம் தடுக்கிறது. ஆத மட்டுமில்ல ....ஆண்கள் பலருக்கும் எங்களது கலாச்சாரம் பிடிக்காது காரணம் ஏக பத்தினி விரதன் என்ற உன்னதம் எங்கட கலாச்சாரத்தில தானே இருக்கு.. அப்படி இருக்கிறதால தான் எயிற்ஸ் போன்ற நொய்கள் கூட வரவில்லை.......

_______________________________________________________
தனி ஒருவனின் அல்லது ஒருத்தியின் காம ஆசைக்காக கலாச்சாரம் சீரழிக்கப்படுமாயின் அதற்க்கு பெயர் வேறு********* உண்மைப்பிரச்சினைகளை ஆரயாமல் விபச்சாரிகளுக்கும்..... விலை மாதர்களுக்கும் வக்கலாத்துக்கு வந்திருக்கும் உங்கள் அறியமைக்காக வருந்த கிறேன்.. கணவன் வெளிநாட்டில் இருக்கும் போது மனைவி வேறொருவனுடன் போகலாம் என்று வாதாடும் உங்களிடம் ஒரு கேள்வி!... உங்கள் மனைவி தாயகத்தில் இருக்கும் போது நீங்கள் புலத்தில் வெறொரு பெண்ணுடன் உறவு கொள்வதை அனுமதிப்பாரா? அல்லது நீங்கள் சொன்னது போன்று அங்கே அவர் தனியக் காய்கிறார் இங்கே நான் தனியக் காய்கிறேன் எனக்கு பணம் அனுப்புகிறார் என் கணவர் ஏன் நான் காய வேண்டும்... அதே போல அவரிடமும் பணமிருக்கே அவரும் காயத்தேவையில்லை என்று முடிவெடுப்பாரா? நீங்கள் ஆபாசப்படம் பார்க்கிறீர்கள் என்றால் எல்லோரும் அப்படியா?

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=kirubans]Tamil Nation இல் படித்தது.


பெண் உடல் மீதான சமூக வன்முறை
- அஜிதா, 30 May 2005,
[Courtesy Dinamalar, contributed by A.Thangavelu]
[b]நீண்ட கட்டுரை என்பதால் முழுமையாக மேற்கோள் இடவில்லை நி+ன்

இந்தியாவில் பெண்ணடிமை தனம் இல்லை என்று நான் ஒருபோதும் வாதாட மாட்டேன். ஆனால் நாங்கள் வாதாடிக் கொண்டிருப்பது நமது பெண்களைப்பற்றி அதாவது ஈழத்துப் பெண்களையும் புகலிடப் பெண்கள் பற்றியும்...
எப்படியோ உங்கள் தேடல் மிகு கட்டுரைக்கு நன்றி

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
ஒன்றைக் கவனியுங்கள்...மதம் அது இதென்று இவ்வளவு சொல்லியும் அடங்கியா இருக்குதுகள்...உலகில் எயிட்ஸ் உட்பட பாலியல் நோய்த்தாக்கத்துக்கு அதிகம் உள்ளான தனி ஒரு நாடு பாரத தேசம்...! அதிக சனத்தொகைப் பெருக்கம் உள்ள நாடு அது,,,,! அதுக்க...இதைவிட நாயாய்த்தான் வாழப் போறன் என்றதுகள சுதந்திரமா விடுங்க....அதுகள் தாங்களா அழியுங்கள்....! கவலைப்பட ஏதும் இல்லை...! ஈழமும் அதுக்கு அண்டைதானே... புலிகள் இருந்த போது 5 ஆக இருந்த யாழ் குடாநாட்டு எயிட்ஸ் நோயாளிகள் (அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்தோர்) எண்ணிக்கை இன்று இலங்கையில் முன்னணிக்கு வந்திருக்கு...!

இவர்களாக் கட்டுப்படேல்லையோ...கட்டுப்படுத்த இயற்கைக் காரணிகள் பலதிருக்கு...கவலையை விடுங்க....! அதுகள் ஏன் என்று கட்டுப்பாடுகளைப் போட்டா...அது தடைகளா உரிமை பறிப்புக்களாத் தெரியுது.... ஒன்றும் மட்டும் உண்மை...உரிமைகள் அதிகமானா உங்களை மரணம் உரித்தாக்க அதிக காலம் எடுக்காது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:மனைவியோடு வாழ சந்தர்ப்பம் இல்லாதவர்கள் கலியாணம் முடிக்கக்கூடாது. அதற்கு தடைவிதிக்க வேண்டும்.


அதே சட்டத்தை மற்றப்பக்கமும் சோர்ததே கொண்டு வாங்கோ ஏனென்றால் கலியாணம் செய்தும் பல ஆண்கள் அதே நிலையிலும் கேவலமாய் இருக்கினம்

Quote:'வெளிநாட்டுக்கு கூப்பிடுகிறேன் ஸ்பொன்சர் பண்ணுகிறேன்' என்பவர்கள் பற்றி அரசு தெளிவாக ஆராய்ந்து தான் திருமணங்களை அனுமதிக்க வேண்டும். அப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் கூப்பிடாவிட்டால், மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து அவரை சட்டப்படி நாடுகடத்தி மனைவியுடன் வாழ நிர்ப்பந்திக்க வேண்டும்.

அத விட முக்கிய விடையம் காசுக்காக தாய் நாட்டிலிருந்து ஆண்களை வெளிநாடு கூப்பிடுவதற்காய் தாயகத்தில் பதிவுத்திருமணம் செய்யும் பெண்களையும்..புகலிடத்தில் நிரந்ரவதிவுரிமை பெறுவதற்காய் செய்யப்படும் திருமணங்களுக்கு காரணமான பெண்களை விசாரனைகள் இன்றி நாடு கடத்த வேண்டும்


Quote:வயது வந்தவர்களுக்கு பாலியல் கல்வி, சுயஇன்பம் அனுபவிப்பது உட்பட, கட்டாய கல்வியாக கற்று கொடுக்கப்பட வேண்டும்.
பாலியல் படங்கள், திரைப்படங்கள், சஞ்சிகைகள், வயது வந்தவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பெண்களே நடத்தும் நிறுவனங்கள் மூலம், அந்தரங்கமாக விற்பனை செய்ய வசதிகள் இருக்க வேண்டும்.


ஏன் அத விட எல்லாத்தையும் செய்தும் காட்டலாமே!............
(இதற்க்கு பதிலளிக்க முற்பட்டவேளை என்னையறியமலே பல சபையில் சேர்க்கப்பட முடியாத வார்த்தைகள் வந்ததால் முழுமையாக பதிலளிக்கவில்லை)

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
நிதர்சன் யூட்டும் சரி கிருபன்ஸும் சரி...மேற்குலக பாலியல் சித்தாந்தங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு அவைதான் பாலியல் சுதந்திரம் அதுதான் பெண்கள் தேடும் முக்கிய சமூக விடுதலை என்பது போல கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...!
அதைத்தடுப்பது அல்லது நாகரிக வாழ்வை வலியுறுத்திறது அடிமைத்தனம் என்பதாகவே காட்ட முயல்கிறார்கள்...! அவர்களுக்குத் தேவை அது போல...! ஆனால் மனிதனுக்கு அவை அவசியம் என்றில்லை...!

அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் மேற்குலகம் சமூகச்சீரழிவுகளால் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கு என்பதை..மேற்குலகில் இன்று உழைக்கும் மக்களாய் இருப்பவர்கள்...ஆசியர்கள்...! காரணம் அவர்களின் ஒழுக்கம் கட்டுப்பாடு நிறைந்த வாழ்வியல் முறைகள் அவர்களின் உழைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதால்...! அமெரிக்கா சரி ஐரோப்பா சரி கனடா சரி அவுஸ்திரேலியா சரி...குடியேற்றக்காரர்களின் உழைப்பில் அதிகம் தங்கி இருக்கின்றன...! இந்த நிலை எங்கள் தேசத்தில் இல்லை....! உண்மையில் அது அவர்களின் பலவீனமான நிலை...அதையே பலமாக்கி அவர்கள் எங்களை எங்கள் தாயகங்களில் ஏழைகளால வைத்திருந்து தங்களை உயர்வாகக் காட்டி ஆசை காட்டி தங்கள் அடிமைகளாக்கி வைத்து தங்கள் அநாகரிகங்களை சுதந்திரமாகக் காட்டி மயங்க வைத்திருக்கிறார்கள்... கூலிக்காக...தங்கள் தேவைக்காக...அவர்களுக்குத் தெரியும் மனிதனை எப்படி மிருக்கமாக்குவதென்று...அதற்கு இவர்கள் துணை போகின்றார்கள்...எங்களை நிரந்தர வாழ்வியல் அடிமைகளாக்க....! :oops: :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Nitharsan Wrote:[quote=குருவிகள்]
நிதர்சன் யூட்டும் சரி கிருபன்ஸும் சரி...மேற்குலக பாலியல் சித்தாந்தங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு

அது போக இராஜ இராஜன் கட்டிய தஞ்சை பெரியகோவிலின் கோபுரங்களில் இல்லாததையா பாலியல் படங்களில் காட்டுகிறார்கள்? கோவில் கோபுரங்கள், பட்டினத்தார் பாடல்கள், திருக்குறள் எல்லாம் மேலைத்தேய நாகரிகத்தால் இராஜஇராஜனுக்கும், பட்டினத்தாருக்கும், திருவள்ளுவருக்கும் உண்டான தாக்கத்தின் விளைவு என்று குருவியும் நிதர்சனும் சொல்லப்போகிறீர்களா?? எமது பண்பாடும் அறிவும் நீங்கள் நினைப்பதிலும் பார்க்க எவ்வளவோ முற்போக்கானது.


மேலைத்தேயத்தின், தொழில்நுட்பமும், மருத்துவமும், முகாமைத்துவமும் வாழ்க்கைத்தரமும் உயர்வானது என்று கண்டு ஓடிவருகின்றோம். பிறகு பாலியல் சம்பந்தப்பட்ட விஞ்ஞான அறிவை தட்டி கழிக்கின்றோம். மேலைத்தேயங்களிலும் பார்க்க ஜப்பானில் பாலியல் சுதந்திரமும் அறிவும் அதிகம். ஏன்? தமிழர் திருக்குறளின் காமத்தப்பாலையே ஆராயந்து பார்க்கிறோம் இல்லையே ? மேலை நாட்டவர் கீழைத்தேய காமசூத்திராவையும் தஞ்சைப் பெரியகோவில் கோபுரங்களையும் பார்த்து பாலியலை ஆராய்கிறார்கள். ஆனால் நம்மவர்களோ அவை மேலைத்தேய நாகரிகம் என்கிறார்கள்.
Reply
யூட் உங்களுக்கு என்ன நடந்தது அறிவு கூட்டிட்டுப் போல... கோயில்கள் பார்பர்ணியம் என்கிறீர்கள்..பிறகு அவையே உங்கள் பாலியலையும் கலையாகக் காட்டுகின்றன எங்கிறீர்கள்... எது எப்படியோ வள்ளுவன் ஆகட்டும் சூத்திரமாகட்டும் கணவன் மனைவிக்கான பாலியல் ஒழுக்கம் பற்றியே சொல்கின்றன... கள்ளக் கலவி பற்றிச் சொல்லேல்ல.....! காமத்துப் பாலுக்கு வரமுதல் அறத்துப்பாலில் இல்லறம் என்றால் என்ன என்று சொல்லிவிட்டுத்தான் அப்புறம் காமத்துப்பாலில் வள்ளுவர் கணவன் மனைவி...தலைவன் தலைவிக்கு...காமத்துப்பால் போதிக்கிறார்கள்..! கணவன் இருக்க இன்னொருத்தனையோ அல்லது மனைவி இருக்க இன்னொருத்தியையோ கண்டு கூடச் சொல்லவில்லை...! சரியா..அந்த அடிப்படை ஒழுக்கத்தைத்தான் நாங்கள் இங்கே வலியுறுத்துகிறோமே..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:ஒன்றைக் கவனியுங்கள்...மதம் அது இதென்று இவ்வளவு சொல்லியும் அடங்கியா இருக்குதுகள்...உலகில் எயிட்ஸ் உட்பட பாலியல் நோய்த்தாக்கத்துக்கு அதிகம் உள்ளான தனி ஒரு நாடு பாரத தேசம்...! அதிக சனத்தொகைப் பெருக்கம் உள்ள நாடு அது,,,,! அதுக்க...இதைவிட நாயாய்த்தான் வாழப் போறன் என்றதுகள சுதந்திரமா விடுங்க....அதுகள் தாங்களா அழியுங்கள்....! கவலைப்பட ஏதும் இல்லை...! ஈழமும் அதுக்கு அண்டைதானே... புலிகள் இருந்த போது 5 ஆக இருந்த யாழ் குடாநாட்டு எயிட்ஸ் நோயாளிகள் (அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்தோர்) எண்ணிக்கை இன்று இலங்கையில் முன்னணிக்கு வந்திருக்கு...!

இவர்களாக் கட்டுப்படேல்லையோ...கட்டுப்படுத்த இயற்கைக் காரணிகள் பலதிருக்கு...கவலையை விடுங்க....! அதுகள் ஏன் என்று கட்டுப்பாடுகளைப் போட்டா...அது தடைகளா உரிமை பறிப்புக்களாத் தெரியுது.... ஒன்றும் மட்டும் உண்மை...உரிமைகள் அதிகமானா உங்களை மரணம் உரித்தாக்க அதிக காலம் எடுக்காது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
அப்ப பெண்கள்தான் எயிட்ஸ்காவிகள் என்று சொல்லுகிறீர்கள். நல்லது, யாழ்ப்பாணத்தில் எயிட்ஸ் பெருக பெண்கள்தான் காரணம். ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.
<b> . .</b>
Reply
kuruvikal Wrote:நிதர்சன் யூட்டும் சரி கிருபன்ஸும் சரி...மேற்குலக பாலியல் சித்தாந்தங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு அவைதான் பாலியல் சுதந்திரம் அதுதான் பெண்கள் தேடும் முக்கிய சமூக விடுதலை என்பது போல கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...!
அதைத்தடுப்பது அல்லது நாகரிக வாழ்வை வலியுறுத்திறது அடிமைத்தனம் என்பதாகவே காட்ட முயல்கிறார்கள்...! அவர்களுக்குத் தேவை அது போல...! ஆனால் மனிதனுக்கு அவை அவசியம் என்றில்லை...!
எனக்காக நீங்கள் சிந்திக்கவேண்டாம், பரமார்த்த குருவியே. நீர் முதலில் நான் இணைத்த கட்டுரையை தெளிவாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்.

நான் ஒன்றும் நாய்கள் போல மனிதரும் புணர்ந்துகொண்டு திரியவேண்டும் என்றும் சொல்லவில்லை. அதுதான் பெண்விடுதலை என்றும் சொல்லவில்லை. அரைகுறையாக விளங்கி மற்றவர்களின் கருத்தை திரிபுபடுத்துவது குருவிக்கு கைவந்த கலை.

பாலியல் ரீதியாக பெண்ணை ஒடுக்கக்கூட்டது என்று சொல்லுவதை, பெண் எல்லோருடனும் புணரவேண்டும் என்று அர்த்தம் செய்து உமக்கு இருக்கும் கொஞ்ச அறிவையும் நீரே இழிவுசெய்யாமல் இருந்தால் நல்லது.
<b> . .</b>
Reply
நான் இணைத்துள்ள கட்டுரையில் உள்ள பின்வரும் பந்திகள் குருவி போன்றோர் யார் என்பதைத் தோலுரித்துக் காட்டுகின்றன.

நம் சமூகச் சூழலில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த மதங்கள் தத்தம் வழிகளில் பெண் ஆணுக்கு கீழாவாள் ஆணின் அடிமையாகத்தான் பெண் வாழ வேண்டும் பயந்து அடங்கி அவனுக்கான பணி விடைகளைச் செய்வதே பெண்ணின் வாழ்க்கை என்பதற்குப் பொருள் என்று தெரிவிப்பதன் மூலம் இவன் தன்னை மனிதப் பிறவியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் போதெல்லாம் அது மதத்திற்கு எதிரானதாகக் காட்டப்பட்டு, அதை மறுப்பதை நியாயப்படுத்துகிறது.

<b>அவ்வாறு வைக்கப்படும், வைக்கப்படப் போகும் எவ்வித கோரிக்கையும் இழிவாகவும், கொச்சையாகவும், பெண் விடுதலை என்பதே பாலியல் ரீதியான விடுதலை என்பதாகக் குறைத்து எவ்வித நியாயமான கோரிக்கையும் வேரோடு கிள்ளி எறிய முயற்சிகள் இச்சமூகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.</b>

இத்தகைய ஆணாதிக்கத்தைக் காப்பாற்றும் வேலை, பல வடிவங்களில் பல விஞ்ஞானபூர்வமான விளக்கங்களுடனும், இன்றைய முன்னேறிய, தொழில்நுட்ப உலகிலும், இன்றும் பசியால்வாடும், வறுமையில் உழலும் மக்கள் ஏழ்மை உலகிலும் பரவலாக செய்யப்படுகின்றன இச்சமூகத்தின் கருத்துக்கள் அவரவர் சார்ந்த, பிறந்த, வளர்ந்த சமூகத்தின் கலாச்சாரப் படிவுகளாகத்தான் வெளிப்படுகின்றன அல்லது சில நேரங்களில் தாங்கள் ஏற்படுத்த விழையும் மாற்றத்தைக் கொண்ட சமூகத்தின் விழுமியங்களாகவும் உள்ளன.
<b> . .</b>
Reply
எயிட்ஸ் தொற்றுக்கு அதிகம் காரணம் பெண்கள் தான்...குறிப்பாக நெறி தவறும் பெண்கள்... ஆண்கள் விபச்சாரம் செய்வதில்லை...பாலியலைத் தொழிலாக்கிப் பிழைப்பதில்லை....! விபச்சாரம் செய்யும் பெண்களே காவிகளாக இருந்து அறியாமையால் அவர்களை நாடும் ஆண்களுக்கு எயிட்சை அதிகம் பரப்பி வருகின்றனர்...! கணவன் இருக்க இன்னொருத்தனோடு கூடுபவளும் விபச்சாரிதான்...! Confusedhock: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)